Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த லக்ஷ்மன் கதிர்காமர் உருவாகி விட்டார்! – இளந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kathir-sumanthiran.jpg

அழுகிய காளான் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு புதிய நச்சுக் காளான் உருவாகித் துர்நாற்றம் வீசுகிறது. எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்து விட்டான் என்று ஒரு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் எழுதினார்.

வீரன் முளைக்கும் போதே துரோகியும் பிறந்து விடுகிறான். ஆனால் வீரனின் வெற்றிக்கு முன்பே துரோகியின் தோல்வி அறிவிக்கப்படுகிறது. இது வரலாற்றுச் செய்தி. தமிழீழ விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்த விடுதலை இயக்கம் இன்று துரோகிகளின் வரவால் மந்தநிலை அடைந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி வாக்குச் சேகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடம் பிரண்டு தமிழினத்திற்குத் துரோகம் செய்கின்றனர். இருக்கையில் அமர மறுத்தபடி ஒரு தேர்தல் தொகுதி ஆசனத்திற்காக மன்றாடிய இரா.சம்பந்தனை வரலாறு மறக்கவில்லை.

தேசியத் தலைவரிடம் மன்றாடிப் பெற்ற பதவியை இன்று பேரம் பேசும் கருவியாக சம்பந்தன் பயன்படுத்துகிறார். தமிழர்களுடைய இழந்த உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாவிட்டால் பதவியைத் துறந்திருக்கலாம். அதைச் செய்யாமல் பதவியில் தொங்கிக் கொண்டு இருப்பவர்களை மன்னிக்க முடியவில்லை.

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் என்ற 48 வயது கொழும்பு வழக்கறிஞரைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது விருப்பு வாக்குப் பலத்தின் மூலம் ஏப்ரல் 2010ல் பாராளுமன்ற உறுப்பினராக்கியது. மக்களால் தெரிவு செய்யப்படாத சுமந்திரன் இப்போது கூட்டமைப்பின வழிகாட்டியும் பேச்சாளனுமாகி விட்டார்.

எம்.ஏ.சுமந்திரனுக்கும் லக்ஷமன் கதிர்காமருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் கொழும்பைத் தளமாகக் கொண்டவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள், நெருக்கமான சிங்களத் தொடர்பு உடையவர்கள். ஈழத் தமிழர்களை விற்பதற்குத் தயாரானவர்கள். சுமந்திரனும் அமைச்சராக வரலாம் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேற்கு நாட்டு படிப்பும் பணியும் முடிந்த பிறகு நாடு திரும்பிய லக்ஷமன் கதிர்காமர் அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டார். ஒரே கொழும்புச் சுற்றாடலில் வாழ்ந்த தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ் ஜே.வி. செல்வநாயகத்தை அணுகினார்.

கதிர்காமருக்கு ஒரு தேர்தல் தொகுதியை வழங்கச் செல்வா மறுத்து விட்டார். காரணம் கதிர்காமருக்கு தமிழ் தெரியாது. ஆனால் கதிர்காமரின் அரசியல் ஆசைகளை நிரந்தரமாகத் தடுக்க முடியவில்லை. அவர் சந்திரிக்கா மீது கொண்ட ஒரு தலைக் காதலால் சிறிமாவோ பண்டாரநாயக்காவுடன் நெருக்க உறவை திட்டமிட்டு வளர்த்தார்.

சந்திரிக்கா அரசியல் தலைமை பூண்டவுடன் முன்னாள் தமிழரசுக் கட்சிப் பிரமுகர் திருச்செல்வத்தின் மகன் நீலன் திருச்செல்வத்தை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க விரும்பினார். அவர் அதை ஏற்க மறுத்ததோடு லக்ஷ்மன் கதிர்காமர் பெயரைச் சிபாரி செய்தார்.

தமிழனைக் கொண்டே தமிழன் வாயில் மண் போடும் இராசதந்திரத்தை சிங்களவர்கள் கடைபிடிக்கின்றனர். சிங்களவர்களிலும் பார்க்கக் கூடுதலான சிங்களத் தன்மையை வெளிப்படுத்திய கதிர்காமர் தமிழத் தேசியத்திற்குச் செய்த கொடுந் தீமைகள் ஏராளம். தமிழினத் துரோகிகள் வரிசையில் அவருக்கு முதலிடம் உண்டு.

சுமந்திரன் கடந்த இரு வருடமாக கதிர்காமரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி கூட்டமைப்பை ஈழத் தமிழினத்தின் விடுதலை அபிலாசைகளுக்கு முரணான வழிகளில் அழைத்துச் செல்கிறார். இவரைப் பற்றிய பலமான சந்தேகங்கள் தமிழர் மனதில் எழுந்துள்ளன.

சென்ற வருடம் இலண்டனில் பேசும் போது சிங்கள அரசு தரக் கூடியதை மாத்திரம் கேட்க வேண்டும் என்று சொன்னார். போராடிய இனம் யாசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை இந்தப் பேச்சில் இருந்து உணரலாம். இந்த வருடம் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.

கொழும்பு அரசு சென்ற மாதத்திற்கு முன்பே மகிந்த சமரசிங்க தலைமையில் ஒரு குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பிப் பிரசாரம் செய்கிறது. தமிழர்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அர்த்தமற்ற புறக்கணிப்பை மேற் கொள்கிறது.

இதற்காகவா வடக்கு கிழக்கு மக்கள் உங்களைத் தெரிவு செய்தார்கள்.? ஈழத் தமிழர்களின் உள்ளக் குமுறலை வெளிப் படுத்த வேண்டிய நீங்கள் அரசுக்குச் சாதகமான மவுனம் கார்க்கிறீர்கள். வல்லரசுகளின் ஆலோசனைப்படி தான் நாம் போகாமல் விட்டுள்ளோம் என்ற விளக்கம் வேறு.

எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் கூட்டமைப்பு அரசின் கண்துடைப்பு நல்லிணக்கக் குழு அறிக்கையை ஏற்கத் தயாராகி விட்டது. இந்த அறிக்கையின் முக்கிய பரிந்துரை என்ன தெரியுமா.? இலங்கையில் எந்த இனத்திற்காவது அதன் எந்தப் பகுதியாவது உரிமையாவதை அனுமதிக்கப் படமாட்டாது.

அதாவது வடக்கு கிழக்கு தமிழர் வாழ்விடமாகவும் தாயகமாகவும் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது. விடுதலைப் புலிகளின் தாயகக் கோட்பாடு ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்படுகிறது. இப்போது அரசு மேற்கொள்ளும் துரித கதி சிங்களக் குடியேற்றத்தின் அர்த்தம் இது மாத்திரமே.

தமிழர்கள் வடக்கு கிழக்கில் ஏதிலிகளாக மாற்றப்படுவதோடு அரசியல் உரிமைகள் இழந்த நடைப் பிணமாக அலைவார்கள். 2020க்கு முன்பு நல்லிணிக்க ஆணைக் குழு அறிக்கைப் பரிந்துரையை செயற்படுத்துவேன் என்ற மகிந்த ராஜபக்சவின் வாக்குறுதியில் உள்ள பயங்கரத்தை விளங்காதவன் தலை இல்லாத தமிழனாகக் கருதப் படுவான்.

http://www.pathivu.c...ticle_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லச்மரை பாவித்துவிட்டு எப்படி ஸ்ரீ லங்கா ஜெனோசைட் கூட்டம் அவனுக்கு பொட்டு வைத்தது போல் இவர்களுக்கும் நடக்கும். 

தன் இனத்தையே விற்பவனை நம்ப சிங்களவன் என்ன மொக்கா? 

கதிரகாமரைக் கொன்றொழித்த சிங்கள - இந்தியப் பயங்கரவாதிகள் இவனையும் கொல்லுவார்கள்.

கதிரகாமரைக் கொன்றொழித்த சிங்கள - இந்தியப் பயங்கரவாதிகள் இவனையும் கொல்லுவார்கள்.

கதிர்காமரைக் கொலை செய்தவர்கள் யார் என்று தெரியாமல் ஏன் விடுதலைப்புலிகள் தான் கதிர்காமரைக் கொன்றது என்று உங்கட அரசாங்கம் சொல்லித் திரிகிறது.

திருமலை 5 மாணவர் கொலை, மூதூர் 17 தொண்டர்கள் கொலை விசாரணைகள் மீள ஆரம்பமாகும்

வெளிவிவகார அமைச்சை கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன பதிலளிக்கையில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொன்றவர்களை அடையாளம் காண அரசாங்கத்தினால் முடியாதிருந்ததாக கூறினார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98930

தான் முக்கி முக்கி தாயரித்த அரைவேக்காட்டு தீர்வுத் திட்டத்துக்கு சிங்கள அரச பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அமெரிக்கா செல்ல எத்தனித்த நீலன் திருச்செல்வன் சிங்களப் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார்.

இவ்வளவு காலமும் மேற்குலகை ஏமாற்றியாகிவிட்டது, இனி தொடர்ந்து சர்வதேசத்தை சமாளிக்க ஒரு அரசியல் தீர்வை தயாரிக்க வேண்டும் என்று வெளிக்கிட்ட கதிர்காமர், சந்திரிக்காவின் நயவஞ்சக ஆலோசனைப்படி மங்கள சமரவீர உட்பட்ட சிங்கள பயங்கரவாத அரச மற்றும் ஜே. வி.பி., சிஹல உறுமைய போன்ற கட்சிப் பிரதிநிதிகளிடம் தமிழர் பிரச்சினைக்குரிய அதிர்காரப் பகிர்வு குறித்து இரகசியமாக தொடர்ச்சியாக கலந்துரையாட ஆரம்பித்த சில தினங்களில், நிருபமா ராவுடன் இரவுணவு அருந்தியபின் அன்றிரவு சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளின் கூடுச் சதித் திட்டத்தால் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழர் பிரச்சினைக்கு ஏதாவது அரைகுறை தீர்வைக் காணவேண்டும் என்று வெளிக்கிட்ட இரண்டு அடிவருடித் தமிழரும் சிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர். இரண்டு கொலைகளையும் விடுதலைப் புலிகளின் தலையில் கட்டசிங்கள - இந்திய அரச பயங்கரவாதிகள் கடும் முயற்சி எடுத்திருந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.