Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருமலை 5 மாணவர் கொலை, மூதூர் 17 தொண்டர்கள் கொலை விசாரணைகள் மீள ஆரம்பமாகும்

Featured Replies

திருமலை 5 மாணவர் கொலை, மூதூர் 17 தொண்டர்கள் கொலை விசாரணைகள் மீள ஆரம்பமாகும்

2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம், மூதூரில் தொண்டு நிறுவனமொன்றின் 17 ஊழியர்கள் கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் குறித்து மீள் விசாரணை நடத்துவதாக சர்வதேச சமூகத்திற்கு கடந்த வாரம் ஜெனீவாவில் வைத்து இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இலங்கை விவகாரத்தில் ஆர்வம் கொண்ட தரப்பினரின் பிரதிநிதிகளுக்கும் ஜெனீவாவுக்குச்சென்ற இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் இவ்வுறுதிமொழியை வழங்கினார்.

2006 ஜனவரி 2 ஆம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்களுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர். இச்சம்பவம் நடந்து ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கத்தை குற்றம் சுமத்த அப்பிரதிநிகள் முற்பட்டனர்.

அவ்வேளையில் மொஹான் பீரிஸ், பதிலளிக்கையில் அரசாங்கம் அனைத்து விடயங்களையும் மூடி மறைக்கவில்லை எனக் கூறினார். விசாரணைகள் நடைபெற்றதாகவும் இவ்விடயத்தில் கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் அவற்றை மீள ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, திருகோணமலை சம்பவம் உட்பட இத்தகைய 16 சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவொன்றின் அறிக்கை வெளியிடப்படாதது ஏன் என சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி எழுப்பியது.

அவ்வறிக்கை பகிரங்கப்படுத்துவதற்கானது அல்ல எனவும் அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகவும் மொஹான் பீரிஸ் தெரிவித்தார்.

எனினும் 2006 ஓகஸ்ட் மாதம் மூதூரில் தொண்டு ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கை பிரெஞ்சு தூதரகத்திடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சை கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன பதிலளிக்கையில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொன்றவர்களை அடையாளம் காண அரசாங்கத்தினால் முடியாதிருந்ததாக கூறினார்.

'இக்கொலை விசாரணையை தொடர்வதில் அரசாங்கத்திற்கு ஆர்வமில்லை என அர்த்தமாகுமா? பயங்கரவாத குண்டுத்தாக்குதலொன்றில் ஏனைய பலருடன் எனது தாயின் சகோதரர் ஒருவரும் பலியானார். விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நாம் இன்னும் அடையாளம் காணவில்லை' என அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/37077--5----17------.html

  • தொடங்கியவர்

முன்னைய இணைப்புக்கள்

1. தொண்டு நிறுவனப் பணியாளர்களின் உடல்களை எரிக்க எடுத்த முயற்சி தோல்வி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12606

2. பிரஞ்சு மொழியில் உள்ள இந்த பத்திரிகை கட்டுரையை பிரச்சாரத்துக்கு பாவிக்கலாமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=56260

3. மூதூர் தமிழர் படுகொலை: மகிந்தவுக்கு இரா.சம்பந்தன் கடிதம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12728

4. http://www.actionagainsthunger.org/blog/muttur-massacre-acf-denounces-ineffective-legal-procedures-sri-lanka

5. ரகிதார் மனோகரன்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=96366

http://www.yarl.com/forum3/index.php?showtopic=98875&view=findpost&p=735050

மகிந்தா மீதான வழக்குகளை விசாரிக்க என்ன பொறிமுறை? அறிவித்தவுடனேயே அந்த வழக்கு அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு மாற்றப்படும்

இவர் தான் தப்ப முயலப் போகிறார் என்பதால்த்தான் அப்படி எழுதியிருந்தேன்.

மகிந்தா மீது போடப்பட்ட வழக்குகளை இலங்கையில் விசாரிக்க ஒத்துக்கொள்ள முடியாது. குற்றப்பிரிவையும், நட்ட ஈட்டுப் பிரிவையும் சர்வதேசக் கோடுகளிலும் வெளிநாடுகளிலுமே விசாரிக்க வேண்டும். ஒருவரும் இதற்கு ஒத்து போகமுடியாது. விசாணை தமிழர்களால் மட்டுமே நடாத்தப்பட வேண்டும். இந்த நிபந்தனை இறந்த 146,000 மக்களுக்கும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

<span style="font-family: georgia,serif"><span style='font-size: 14px;'>வெளிவிவகார அமைச்சை கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்தன பதிலளிக்கையில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொன்றவர்களை அடையாளம் காண அரசாங்கத்தினால் முடியாதிருந்ததாக கூறினார்.

கதிர்காமரைக் கொலை செய்தவர்கள் யார் என்று தெரியாமல் ஏன் விடுதலைப்புலிகள் தான் கதிர்காமரைக் கொன்றது என்று உங்கட அரசாங்கம் சொல்லித் திரிகிறது.

  • 7 months later...
  • தொடங்கியவர்

cb13dbfa7c076eb80aaeb5dce2327e55.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.