Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நேற்று சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிளின் மென்பொருள் வடிவமைப்பவர்களின் கூட்டத்தில் அதன் முதன்மை இயக்குனர் ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஐ கிளவுட்' தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஐ கிளவுட் - பல கருவிகளின் தேவையான மென்பொருளை பகிரக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும். இன்னும் சில மாதங்களில் இந்த தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். http://www.apple.com/icloud/what-is.html'>http://www.apple.com/icloud/what-is.html http://www.apple.com/icloud/ OXS Lion - http://www.apple.com/macosx/

    • 0 replies
    • 1k views
  2. 1-1-11, 11-1-11, 1-11-11, 11-11-11 இந்த நான்கு வித்தியாசமான நாட்கள் இந்த வருடத்தின் சிறப்பு. இன்னொரு சிறப்பு, நீங்கள் பிறந்த வருடத்தின் கடைசி இரண்டு இலக்கங்களோடு தற்போது உங்களின் வயதைக் கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 111 ஆக இருக்கும்! இந்த வருடத்தின் அக்டோபர் மாத்தில்தான் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட்கிழமைகள் வருகின்றன. இப்படி 823 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும்! எல்லாரிடமும் இந்தாண்டு பணப்புழக்கமும் அதிகம் இருக்கும். நீங்கள் படிக்கும் இந்த எஸ்.எம்.எஸ்.ஐ உங்களுக்கு நெருங்கிய 11 நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியது மிக மிக முக்கியம்'' என்று உலா வருகிறது ஒரு எஸ்.எம்.எஸ்.!

    • 1 reply
    • 1.1k views
  3. Posted by சோபிதா on 02/06/2011 in தொழில்நுட்பம். கணணியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் போது சில பாதுகாப்பு குறைபாடுகள் வரலாம். நீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்று எண்ணலாம். சிலர் உங்கள் மென்பொருளில் நுழைந்து எதாவது மாற்றம் செய்துவிடலாம். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், கல்லூரிகளில், பள்ளிகளில் போன்ற பொது இடங்களில் பணிபுரியும் சூழ்நிலையில் இந்த மாதிரி கட்டுப்படுத்தும் செயல் அவசியமானது. இதனை நீங்கள் Group Policy Editor மூலமாகவும் செய்யலாம். ஆனால் எளிமையாக கையாள இலவச மென்பொருள் Appadmin உள்ளது. முக்கியமான மென்பொருள்களை எவரும் பயன்படுத்த முடியாதபடி இந்த மென்பொருள் மூலம் எளிமையாக செய்யலாம். இது மென்பொருள்களுக்கு கடவ…

  4. Posted by சோபிதா on 03/06/2011 in தொழில்நுட்பம் (ஆக்கம் – ஈழம் பிரஸ் -03/06/2011) கைபேசிகள் இன்று பல புரட்சிகர மாற்றங்களையும் வடிவமைப்புக்களையும் பெற்றுள்ளன. கைபேசித் தொழில்நுட்பத்தில் அப்படியான தொரு அசுர வேகப் புரட்சி ஏற்பட்டுள்ளது. குவீன்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பிரிவு காகித வடிவத்தில் கைபேசியைத் தயாரித்துள்ளது. இது எதிர்காலத் தொழில் நுட்பங்கள் அடங்கிய கைபேசி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தொகுதி ஆவணங்களை இந்தக் கைபேசியில் சேமித்து வைக்கலாம். அடிப்படைத் தொலைபேசியாகவும் பயன் படுத்தலாம். குறுந் தகவல் அனுப்பலாம், இசை கேட்கலாம், படம் பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. காகிதக் கைபேசி விற்பனைக்கு வர இன்னும் ஐந்து வருடம் பிடிக்கும் என்று விளம்பரச் செய்திகள் …

  5. கூகுள், ஆப்பிளுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா செல்போன் உற்பத்தியில் பெரிய நிறுவனமான நோக்கியா, தனது மென்பொருள் சேவைகளுக்கு மைக்ரோசாப்டுடன் கூட்டுச் சேர்கிறது. இதன் மூலம் கூகுள், ஆப்பிள் நிறுவனங்களின் கூட்டிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட், நோக்கியா இருக்கப் போகிறது. ஆப்பிளி ன் ஆப்ரேடிங் சிஸ்டத்துடன் வரும் கூகுளின் ஆண்ட்ராய்டிற்குப் போட்டியாக நோக்கியா மைக்ரோசப்டுடன் இணைவதாக தெரிந்ததும் கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவில் நோக்கியாவின் பங்குகள் 12 % சரிந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த பென் வுட் கூறுகையில், நோக்கியாவின் சொந்த தொழில்நுட்பங்கள் நிலையற்ற தன்மையால், மைக்ரோசப்டுடன் இணைகிறது. இதில் மைக்ரோசப்டே பெரும் பலனை அனுபவிக்கப் போகிறது. மரத்தூள் நிற…

  6. பெரிய கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கான வழி _ மின்னஞ்சல் சேவையானது எமது நாளாந்த தொடர்பாடலில் மறுக்கமுடியாத ஓர் அம்சம். மேலும் மின்னஞ்சல் மூலமாக நாம் கோப்புகளை(files) அனுப்புவது வழக்கம் எனினும் அவை ஊடாக 20 முதல் 25 எம்.பி அளவான கோப்புகள் மட்டுமே அனுப்ப முடியும். இதற்கு மேற்பட்ட கோப்புகளை எம்மால் அனுப்ப முடிவதில்லை. இவ்வாறு பெரிய கோப்புகளை அனுப்புவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. எனினும் சுமார் 2 ஜி.பி வரையான அளவுகொண்ட கோப்புகளை மிக இலகுவாக அனுப்புவதற்கான இரு இணையத்தளங்களே இவை. www.wetransfer.com www.fileflyer.com http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31760

    • 0 replies
    • 1.1k views
  7. கையசைத்தால் பேசலாம்: புதிய ராடார் தொழில்நுட்பம் அறிமுகம் [ வியாழக்கிழமை, 19 மே 2011, இனி வரும் காலங்களில் மருத்துவர்கள் எலும்பு முறிவினை குறுந்தூர அலைவாங்கி மூலம் பரிசோதிக்க முடியும். இக்கருவி குளிரூட்டி மூலம் வெளியிடப்பட்டும் கதிர்வீச்சின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும் ஆபத்தற்றதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்புதிய தொழிநுட்பம் செலவு குறைந்ததாகவும், உபகரணமானது ஐபோனை ஒத்ததாக இருக்கும் என நுண் இலத்திரனியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆய்வாளர்களின் கருத்துப்படி குறுகிய தூரத்திலிருந்து அலைகளை உள்வாங்கும் கருவியானது மிகக் குறுகிய தூரத்திலிருக்கும் அலைகளை உள்வாங்குதால் இதனை எதிர்காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக…

  8. கடதாசி கையடக்கத் தொலைபேசி அறிமுகம்! கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார். இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது. மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே இக் கையடக்கத்தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது. கடதாசி போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது 'பேப்பர் போன்' என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திர…

    • 0 replies
    • 1.3k views
  9. ஒசாமாவைத் தாக்க அமெரிக்கா பயன்படுத்திய 'ஸ்டெல்த்' ஹெலிகாப்டர்கள் வாஷிங்டன்: ஒசாமா பின்லேடனைத் தாக்க அமெரிக்கா தனது அதிநவீன எப்-117 ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை ('stealth' technology) ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ரேடார்களில் இருந்து தப்புவதற்காக விஷேச வடிவமும், சிறப்பு முலாமும் பூசப்பட்ட பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் வடிவத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளனர். இதுவரை இந்த மாற்றம் செய்யப்பட்ட ஹெலிகாப்டரை அமெரிக்கா வெளியுலகுக்குக் காட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடனை தாக்க வந்தபோது ஒரு ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாரால் பாதிக்கப்படவே, அதை அங்கேயே விட்…

  10. இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட். பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம். சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன? அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா? பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்…

    • 0 replies
    • 2.7k views
  11. Started by nunavilan,

    Marble Machine This is a wooden marble machine. It is 6 feet tall, and is powered only by potential energy, a little kinetic energy and gravity. there are no motors, batteries or cranks. It uses a 3/8 inch diameter steel marble, which starts at the bottom, and goes to the top, and then returns to the bottom,making this trip about 1,300 times in 24 hours.

    • 0 replies
    • 880 views
  12. ஒரு நாட்டின் கடல் வளம் பவளப்பாறைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. உலகம் முழுவதும் பவளப்பாறைகள் அழிவின் விளம்பில் உள்ளதை சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன. உலக மீன் நல வாரியம் மற்றும் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 25 இயற்கை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து கடல் வளம் மற்றும் பவளப் பாறைகள் குறித்த ஆய்வை நடத்தின. இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்துகள்: வானிலை மாறுபாடு பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், மனித இடர்பாடுகளும் காரணியாக இருப்பதை மறுக்க முடியாது. கடலோர பகுதிகள் விரிவாக்கம், அதிக அளவில் நடக்கும் மீன் பிடி தொழில், கடல் மாசுபாடு, கடல் நீர் வெப்பமடைதல், கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவ…

  13. (CNN) -- News that iPhones and iPad 3Gs apparently collect continuous information about the whereabouts of their users and store that data in a secret file has lots of Apple fans worried about their privacy. Two researchers on Wednesday unveiled the details of this secret file, called "consolidated.db," which stores location info going back to June 2010. That's when Apple updated its mobile operating system, called iOS, to version 4.0. Apple hasn't commented on these allegations, and it appears the company does not have continuous access to this location data, according to the researchers, one of whom says he is a former Apple employee. All of this may be c…

  14. ஹம்ப்பெக் எனப்படும் திமிங்கில வகைகள் கடலில் இடம்பெயர்வதற்காக சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை வழி தவறாமல் நேர்கோட்டு வழியில் பயணிக்கின்றன. அதற்குக் காரணம் அவை சூரிய, சந்திர மற்றும் நட்சத்திரங்களின் நிலைகளைப் பின்பற்றுவதே என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளுக்கு பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகளின் கருத்தின் படி, இவ்வகைத் திமிங்கிலங்கள் சூரியனின் நிலை, புவியின் ஈர்ப்புச் சக்தி மற்றும் நட்சத்திரங்களின் உதவியுடனேயே சுமார் 10 ஆயிரம் மைல்கள் வரை மிகத்துள்ளியமாக பயணித்து இடம்பெயர்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் இவை தமது நேர்கோட்டுப் பாதையில் இருந்து 5 பாகைக்கும் குறைவாகவே வளைவதாகவும் சீரற்றகாலை நிலை மற்றும் கடலில் ஏற…

  15. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. அந்தவகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்ட் நிதித் துறையை இலகுபடுத்துவதில் அடுத்த புரட்சியொன்றை ஏற்படுத்தவுள்ளது என்றால் மிகையாகாது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்டில் அப்படி என்னதான் விசேடம் என அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?இந்த புதிய வகை கிரடிட் கார்டில் ஒரு திரை உண்டு.அதில் எமது கணக்கு மிகுதியை காட்டும்.மிக மெல்லிய நுண்செயலியுடன் கூடிய இந்த கிரடிட் அட்டை மின்கலம் மூலம் இயங்குகிறது.இந்த மின்கலம் 3 வருடம் வரை நீடித்த பாவணை கொண்டதாம்.இந்த புதியவகை கிரடிட் கார்டை அதன் சொந்தக்காரருக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.புதிய கிரடிட் கார்டின் வருகைக்க…

  16. பிரேசிலில் தாவர எண்ணெய் மூலம் ஓடும் உலகின் மிக நீளமான பேருந்து தனது பயணத்தை தொடங்கியது. பிரேசிலில் பிரபல நிறுவனம் பி.ஆர்.டி என்ற உலகின் நீளமான பேருந்து ஒன்றை தயாரித்துள்ளது. 28 மீற்றர் நீளமுள்ள அந்த பேருந்தில் 250 பேர் பயணிக்கலாம். இயற்கை எரிபொருளான தாவர எண்ணெயில் இயங்குகிறது என்பது தான் அதன் தனிச் சிறப்பு. தற்போது இந்த பேருந்தின் சேவை குருடிபா நகரில் தொடங்கப்பட்டு உள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 25,000 பயணிகள் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு பயணம் செய்யும் வகையில் மொத்தம் 24 பேருந்துகளை இந்நிறுவனம் இயக்க உள்ளது. மேலும் மணிக்கு 28 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த பேருந்துகள் தயாரிக்கப்படுவதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

  17. தாவரங்கள் தற்கொலை செய்து கொள்ளும்: ஆய்வுத் தகவல் தேவைக்காக கொலைகூடச் செய்யத் தயங்காத மனிதன் சோதனையை தாங்க முடியாத காலத்தில் தானே சாவைத் தேடி தற்கொலையும் செய்து கொள்கிறான். இந்த தற்கொலை செய்யும் செயல் மனிதனோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல என்கிறது புதிய ஆய்வு ஒன்று. தாவரங்களும் தற்கொலை செய்து கொள்வது அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியா நாட்டின் உயிர் வேதியியல் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் இதைக் கண்டுபிடித்து உள்ளனர். தாவரங்கள் தங்களின் ஆபத்தான காலங்களில் விரும்பியே தற்கொலை செய்து கொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது விலங்குகள், பூச்சிகளால் தாக்கப்பட்டாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டாலோ தற்கொலை நடவடிக்கையாக அந்த பாகங்களுக்கான வளர்ச்சியை நிறுத்த…

    • 0 replies
    • 1.1k views
  18. அணு ஆட்டம்!-2 அது என்ன மக்கள் விஞ்ஞானம்? மூட நம்பிக்கைக்கான விஷ முறி மருந்து அறிவியல்! - ஆடம் ஸ்மித் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும்இ அவரது துணை​வியார் டி.ஏ.மதுரமும் பாடிய பாடல்களில் அற்புதமான தத்துவங்களும்இ அரசியல் தர்க்கங்களும்இ யதார்த்த அலசல்களும் நிறையவே இருக்கும். ஒரு பாடலில் கலைவாணர் பாடுவார்... ''கோழியில்லாமல் தன்னால முட்டை​களில் குஞ்சுகளைப் பொரிக்கவெச்சான்இ உங்கொப்பன்இ பாட்டன் காலத்தில் யாரிந்த கோளாறைக் கண்டுபிடிச்சா யாரிந்தக் கோளாறைக் கண்டுபிடிச்சா?'' விஞ்ஞானபூர்வஇ தர்க்க ரீதியானஇ அதிகார​வர்க்கஇ ஆணாதிக்கப் பார்வைகளைஇ சிந்தனை​களைஇ வாதங்களை அவர் முன்வைக்கஇ மதுரம் அம்மையார் அவற்றை லாகவமாகஇ நறுக்கென எடுத்த…

  19. கடலில் வேகமாக நீந்தும் மீன்கள் பல இருந்தாலும் மின்னல் வேகத்தில் நீந்தி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் சென்றுவிடும் மீனே மின்னல் வேக மீன் எனப்படுகிறது. இம்மீன்களின் நீந்தும் வேகம், சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில் குமார் கூறியதாவது."Sailfish"சைபியஸ் கிளாடிஸ் என்ற விலங்கியல் பெயரும், கத்தி மீன், வாள் மீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது மின்னல் வேக மீன். கிளாடியஸ் என்றால் லத்தீன் மொழியில் வாள் என்று பொருளாகும். இம்மீனின் தாடை நீண்டு வாள் போலவே இருப்பதால் இதற்கு வாள் மீன் என்றும் கத்தி போன்று இருப்பதால் சிலர் கத்தி மீன் என்றும் சொல்வதுண்டு. பிற மீன்களைத் தனது வாள் போன்று இருக்கும் தாடையால் காயமடையச் செய்து தின்று விடும் குணம…

  20. அமெரிக்க கடற்படை லேசர் துப்பாக்கி ஒன்றைப் பரிசோதித்துள்ளது. ஒரு மைல் தொலைவில் உள்ள படகொன்றின் வெளி இணைப்பு இயந்திரத்தை கடற்படைக் கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட‌ லேசர் துப்பாக்கி மூலம் எரித்து சேதமாக்கியுள்ளார்கள். லேசர் ஆயுதம் பாவனைக்குகந்த அளவிற்கு வருவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும். லேசர், சாதாரண ஒளி அலைகளில் சக்தி கூடிய அலைகளை செறிவாக ஒரு சிறிய பொட்டாக அனுப்புவதன் மூலம் உருவாக்கப் படுகின்றது. அந்தப் பொட்டு உஷ்ணமாகத்தான் இருக்கும். இந்தச் சோதனையில் அந்த லேசர் பொட்டை சிறிது நேரம் ஒரு இடத்தில் இருக்குமாறு பிடித்து வைத்திருக்கிறார்கள்.(சூடாக்குவதற்கு)

  21. ஆய்வுக் கூடத்தில் வளர்கிறது சிறுநீரகம்! -ஆச்சர்ய மருத்துவம் சிறுநீரகக் கோளாறுகளில் தவிப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. 'மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லை வைத்துஇ செயற்கை முறையில் சிறுநீரகத்தை வளர்த்தெடுக்க முடியும்’ என்று இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் கண்டறிந்து உள்ளனர். இப்போதுஇ தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பதுபோன்று அரை செ.மீ. நீளத்துக்கு சிறுநீரகத்தை வளர்த்து உள்ளனர். இதை உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அளவுக்கு வளர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 'இந்தியாவில் ஆண்டுதோறும் 90இ000 பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதில் அதிகபட்ச…

  22. Started by புலவர்,

    அணு ஆட்டம்! அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் - திருக்குறள். 'எந்த அளவுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகேஇ ஒரு செயலைத் தொடங்க வேண்டும்’ - நவீன இந்தியாவில் வளர்ச்சிக்கான மூல மந்திரம் இதுதான்! ஆனால்இ 'இன்றைய வளர்ச்சி’ என்ற சொல்லாடல்இ எந்த அளவுக்கு இந்தக் குறளுடன் பொருந்திப்போகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தது உண்டா? ஒரு முறை ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள்: ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும்?'' ஐன்ஸ்டீன் சொன்னார்இ ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால்இ நான்காம் உலகப் போரைப்பற்றி எனக்குத் தெரியும். அங்கு மக்கள் கல்இ வில்கொண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.