Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆச்சியம்மா கிழவி, எனது அம்மாச்சியின் அம்மா பலமுறை இதைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கும், பேசாமல் ஆடு மாடு மேய்க்க போடா என, இத்தனைக்கும் நான் பள்ளியில் நன்றாகவே படித்துக் கொண்டிருப்பேன், ஏன் என்னைப் பார்த்து அப்படிச் சொல்லித் தொலைத்தது என அப்போது புரியவில்லை, இப்போது நன்றாகவே விளங்குகின்றது. சொற்ப வருமானத்துக்காக மாடாய் உழைக்கும் அற்ப மானிடருள் நானும் ஒருவன். இதற்கு மாடே மேய்த்துவிட்டு போயிருக்கலாமோ. ஆச்சியம்மா என்றதும், அவர்கள் எங்களை எல்லாம் கூட்டி வைத்து கூறும் அமானிசிய கதைகள், பேய்க் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என்பவை தான் இன்றும் ஞாபகத்துக்கு வரும் எனலாம். அதிலும் பேய்க் கதைகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். என்றாவது ஒரு நாள் ஒரு பேயைப் பிடித்துக் குடுவைக்க…

    • 1 reply
    • 10.8k views
  2. கண்டடைந்த கடவுள் துகள் ப.ரகுமான் “மனித குலத்தின் கடந்த கால அனுபவத்தை அவசியம் நம்ப வேண்டும் என்பதல்லாமல், புதிய நேரடி அனுபவத்தின் மூலம் மீண்டும் சோதித்துப் பார்ப்பது பயனுள்ளது என்ற கண்டுபிடிப்பின் விளைவுதான் அறிவியல்.” ஃபெய்ன்மேன் (1966ம் ஆண்டில் நியூயார்க் நகரில் தேசிய அறிவியல் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இருந்து...) அறிவியல் என்றால் என்ன? உண்மையில் இதற்கு விளக்கம் தேவையில்லை. அறிவியல் என்ற சொல் அதனளவிலேயே (அறிவு+இயல்) விளக்கத்தைக் கொண்டது. அறிவு என்பது வேறு; அறிவியல் என்பது வேறு. குழந்தை ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடைபோடுகிறது, ஓடுகிறது. ஒவ்வொரு குழந்தையும் ஊர்ந்து, தவழ்ந்து அதன் பிறகுதான் நடக்கவும், ஓடவும் மு…

  3. நமக்கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம் உலகம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த உலகத்திலேயே மிகப் பெரிய 3 சக்திகள் - சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதி. இந்த மூன்றுமே ஒரே சமயத்தில் வேகவேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. உலகமயம் காரணமாகச் சந்தையானது முன்னெப்போதையும்விட, எல்லா நாட்டுப் பொருளாதாரங்களையும் நெருக்கமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறது. இதனால், நம்முடைய தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், சந்தைகள் ஆகிய மூன்று தரப்புமே தங்களைப் பாதுகாக்கும் சுவர்கள் ஏதுமின்றி, ஒன்றையொன்று சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மைக்ரோ சிப்புகளின் வேகமும் ஆற்றலும் 2 ஆண்டுகளுக்கொரு முறை இரட்டிப்பாகிறது என்பதே மூரின் அடிப்படை விதி. இதனால் மென்பொருள…

  4. ‘முடியாததை செய்து முடி!’ ஞா.சுதாகர் தனி ஒரு மனிதன் நினைத்தால் உலகை, உலக அரசியலை, சுற்றுச்சூழலை மாற்ற முடியுமா? நிச்சயம் முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணம்... எலன் மஸ்க். ஒப்பீட்டுக்குச் சொல்வது என்றால் எலன் மஸ்க்கை அமெரிக்காவின் இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ் என அழைக்கலாம். புகழ்மிக்க ஆன்லைன் ஷாப்பிங் தளமான 'பேபால்’ நிறுவனத் தலைவர். பொருட்களை 'பேபால்’ வெப்சைட் மூலம் விற்றுக்கொண்டிருந்தவர், சக்ஸஸ் ரேட்டைத் தொட்டதும், அப்படியே 'பேபால்’ நிறுவனத்தையும் விற்றுவிட்டார். அடுத்ததாக விண்வெளிக்கு மக்களை அழைத்துச்செல்லும் 'ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கிவிட்டு, சில பல திட்டங்கள் அறிவித்தார். அப்படியே எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கும் தனது நண்பர் மார்ட்டின் தொடங்கிய 'டெஸ்லா’ நிறுவனத்த…

  5. பூச்சிநாசினிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மூளைக்கட்டி ஏற்படும் அபாயம் அதிகம் பிரான்சு நாட்டு ஆய்வில் கண்டுபிடிப்பு விவசாய பூச்சிநாசினிகள் காரணமாக மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டுத் தோட்ட செய்கைக்காக பூச்சி நாசினிகளை பயன்படுத்துபவர்களிடையே மூளை கட்டி தோன்றும் அபாயம் அதிகமாகவுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. பூச்சி நாசினிகளைப் பயன்படுத்தும் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் மூளையில் கட்டி ஏற்படும் அபாயம் உள்ள அதே சமயம் உயர் மட்டத்தில் பூச்சி நாசினிகளை பயன்படுத்துபவர்களிடையே இந்த அபாயம் இரு மடங்காகவுள்ளதாக தொழில் மற்றும் சுற்றுச் சூழல் மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிற…

  6. அப்பிள் சாதனங்களுக்கென சந்தையில் தனி இடம் உண்டு. குறிப்பாக அப்பிளின் ஐ போன், சந்தையில் உள்ள மற்றைய போட்டி உற்பத்தியாளர்களின் கையடக்கத்தொலைபேசிகளை விட இவற்றின் விலை அதிகம். ஆனாலும் இவற்றுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வருடத்தின் 2 ஆவது காலாண்டில் மாத்திரம் சுமார் 20.34 மில்லியன் ஐ போன்கள் விற்பனையாகியுள்ளமை இதற்கான ஓர் எடுத்துக்காட்டு. அப்பிள் இறுதியாக ஐ போன் 4 ஐ வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் கையடக்கத்தொலைபேசியாக விளங்குவது ஐ போன் 5 ஆகும். அடுத்த மாதமளவில் இது வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் விலை குறைந்த ஐ போன் 4 இனை அப்பிள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியு…

    • 3 replies
    • 1.9k views
  7. பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கும் நூடுல்ஸில் குறிப்பிட்ட வேதிப் பொருள் அதிக அளவில் இருந்ததுடன் அதில் காரீயமும் (lead) கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்ப்ட சில மாநிலங்களில் அதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது மேலும் பல மாநிலங்களில் அந்த நூடுல்ஸ் சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட சில தமிழ் டிவி சேனல்கள் காரீயம் வேறு, ஈயம் வேறு என்பது தெரியாமல் நூடுல்ஸ் சாம்பிள்களில் ஈயம் இருந்ததாகத் தெரிவித்தன. ஒரு பத்திரிகை lead என்பதை அலுமினியம் என்று மொழி பெயர்த்தது. நூடுல்ஸ். படம்:விக்கிபிடியா இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ உடலில் ஈயம் கலந்தால் ஆபத்து என்பதாக செய்தி வெளி…

  8. எழுதியது : சிறி சரவணா இயற்க்கை மிகவும் விந்தையானது. ஒரு கல அங்கியாக இந்த பூமியில் தோன்றிய உயிர் இன்று சூரியத் தொகுதியையும் தாண்டி விண்கலங்களை அனுப்பக் கூடிய அறிவாற்றல் கொண்ட மனித இனமாக வளர்ந்துள்ளது. பிரபஞ்சத்தின் 13.8 பில்லியன் வருட வயதோடு ஒப்பிட்டால், ஒரு கல அங்கியில் இருந்து மனிதன் உருவகியவரை பல மில்லியன் வருடங்கள் எடுத்திருப்பினும், மனிதன் என்று உருவாகிய உயிரினம், இன்று நவீன மனிதனாக உருவாகியதற்கு சில பல ஆயிரம் வருடங்களே எடுத்தது. ஆயினும் கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதன் தொழில்நுட்பத்தில் புரிந்த சாதனைகள் சிறிதல்ல. இந்த கடந்த சில நூற்றாண்டுகளே, நாம், மனிதர்கள், இயற்கையின் விந்தை அறிய தொடங்கிய காலமாகும். பிரபஞ்ச காலக்கடிகாரத்தில் இது வெறும் ஒரு புள்ளியே. சிந்திக்கத…

  9. உலகின் மிகப் பெரிய விமானத்தின் முதல் பயணம் ஆரம்பம் April 14, 2019 இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த போல் அலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ட்ராடோலான்ச் நிறுவனத்தினால் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை சுமார் 10 கிலோ மீற்றர் உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பின்னர் அதிலிருந்து விண்கலத்தை ஏவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும். இந்த திட்டம் வெற்…

  10. ஒரு உயிரினம் படிப்படியாக காலப்போக்கில் இன்னொரு உயிரினமாக மாறுகின்றது (gradualism) என்ற கோட்பாட்டை டார்வின் முன்வைத்தார். அதாவது, '1' என்ற உயிரினம் '2' என்ற உயிரினமாக மாறுகின்றது என்றால் அது 1.1, 1.2, 1.3, 1.4 etc போன்ற நிலைகளுக்கு காலப்போக்கில் மாறி பின்னர் தான் '2' என்ற உயிரினமாக மாறும். மற்றுமொரு எளிய உதாரணம் மூலம் மேலே கூறிய கருத்தை பார்ப்போம். ஒரு எலி, புலியாக மாறுகின்றது என்று வைத்துக்கொள்வோம். முதலில் அந்த எலி கொஞ்ச கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். காலப்போக்கில் 'பாதி எலி பாதி புலி' போன்ற உயிரினமாக மாறும். பின்னர் கடைசியாக புலியாக மாறிவிடும். இப்போது டார்வினின் கோட்பாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயிரினப்படிமங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் தகவலின்ப…

  11. பூமியில் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனாசார்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் sauropods வகைகளில் அடங்கும் தாவர உண்ணி Brontosaurus டைனாசார்கள் தாவர உண்ணிகளாக காணப்பட்டுள்ளன.இவை Mesozoic யுகக் காலத்தில் வாழ்ந்துள்ளன. இவற்றின் குடலில் பலவகை நுண்ணங்கிகள் (பக்ரீரியாக்கள் உட்பட) வாழ்ந்து வந்துள்ளன. அவை இந்த வகை டைனாசார்கள் உண்ணும் தாவரப் உணவை சமிபாடடையைச் செய்வதில் உதவியுள்ளதுடன்.. அந்த செயற்பாட்டின் பக்க விளைவாக மிதேன் வாயுவையும் உருவாக்கியுள்ளன. இவையே தொன் கணக்கான "காஸா"க ரைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆண்டுக்கு..520 மில்லியன் தொன் மிதேன் (CH4) வாயு டைனாசார்களால் வெளியிடப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.…

    • 11 replies
    • 2.7k views
  12. [size=4]பொதுவில் கூறுவதானால் அப்படி ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடத்தில் நிலத்தடி நீர் அளவுக்கு மீறி எடுக்கப்படுமானால் பூகம்பம் ஏற்படலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஐரோப்பாவில் தென் பகுதியில் அமைந்த ஸ்பெயின் நாட்டில் லார்கா (Lorca) என்னுடத்தில் 2011 மே மாதம் 12 ஆம் தேதி பூகம்பம் ஏற்பட்டு 9 பேர் உயிரிழந்தனர்.130 பேர் காயமடைந்தனர்.20 ஆயிரம் கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த பூக்மபம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து நிபுணர்கள் விரிவாக ஆராய்ந்தனர் நிலத்துக்கு அடியிலிருந்து அளவுக்கு மீறி தண்ணீர் எடுத்ததே அந்த பூகம்பத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன்ர். அந்த இடம் ஏற்கெனவே பூகம்ப வாய்ப்பு உள்ள இடம். விஞ்ஞானி…

    • 7 replies
    • 791 views
  13. இணையத்தில் எழுத்துவடிவிலான தகவலை விளம்பரத்தி அறிவிக்கும் RSS முறைபோல் ஒலிவடிவில் தகவல்களை விளம்பரப்படுத்தி அறிவிக்கும் முறை pocast. http://en.wikipedia.org/wiki/Podcast www.Podcast.net www.ipodder.org

  14. வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் ரவி நடராஜன் எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், தன் மகன் மூலம், நான் அனிமேஷன் கட்டுரைகள் எழுதியதை அறிந்து, சில ஆண்டுகள் முன்பு, இப்படி அலுத்துக் கொண்டார்: “பொம்மை படம் பற்றி எல்லாம் கட்டுரை எழுதறயாமே!” (இவருக்கு, மனிதர்கள் நடிக்காத படங்கள் எல்லாமே பொம்மைப் படங்கள்) “ஆமாம்” “இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலப்பா. எப்பப் பாரு வீடியோ விளையாட்டு என்று எதையாவது திருகிகிட்டே இருக்காங்க” ”அவங்க சுறுசுறுப்புக்கு அது ஒரு நல்ல வடிகால் தானே. உங்க பேரங்க எல்லாம் நல்லாத்தானே படிக்கிறாங்க” “அதெல்லாம் சரிதான். அதென்ன 4,500 டாலருக்கு கம்ப்யூட்டர்? 600 டாலருக்கு பிரமாதமான கம்ப்யூட்டர் கிடைக்கறப்ப எதுக்கு இந்த வீண் செலவு?” …

  15. பெங்களூரு: விண்வெளியில் இருந்தவாறு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கான கவுன்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது. நாளை (செப். 2-ம் தேதி) விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1, சனிக்கிழமை (செப்.2) 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் நாடு முழுவதும் எழுந்திருக்கிறது. நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்றதும், நெருப்புக் கோளமாக இருக்கும் சூரியனில் விண்கலம் எப்ப…

  16. பெற்றோரின் புகை பிடிக்கும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹூஸ்டன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இது குறித்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெர்ட் ஆரெட்ஸ் என்ற மாணவர் கூறியது: புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட பெற்றோரின் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். மூச்சுத் திணறல், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும் என்று தெரிந்த அளவுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட…

  17. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கும் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஆர்டர் மூலமாக 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருதி, இந்த புதிய போர் விமானங்களை உடனடியாக வாங்குவதற்கு முடிவு செய்ததாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. ரபேல் விமானத்தை வாங்கும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஆர்டரை பல எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், மத்திய அரசு முழு முனைப்புடன் ரபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த போர் விமானத்தை பற்றிய 30 முக்கிய விஷயங்களை ஸ்லைடரில் காணலாம்.பிரான்ஸ் நாட்டின் ட…

    • 0 replies
    • 1.8k views
  18. சீனாவின் Chinese space research teams அண்மையில் ஒரு புரட்சிகரமான ஒளிப்பட தொழில்நுட்ப சாதனையை அறிவித்துள்ளன… இக்கேமரா, விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி இயங்குவதால், பூமியில் உள்ள எந்த நபரின் முகம்மும் மிகத் தெளிவாகப் பதிவு செய்யக்கூடியது என்று கூறப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு அற்புத முன்னேற்றமாகும் என்பதுடன், அதன் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் பல துறைகளில் புரட்சியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது… தொழில்நுட்ப முன்னேற்றம்! இந்த புதிய கேமராவை வடிவமைப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் மிகவும் முன்னேற்றமடைந்தது… High Resolution: அதிநவீன ஒப்ரிக்கல் சென்சார்களைப் பயன்படுத்துதல், நுணுக்கமான மிரர் அமைப்பு மற்றும் கணினி ஆட்டிபிச…

  19. ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள் "நீ அந்த நடிகையின் படத்தத்தானே பார்த்திருக்கே, நான் தொட்டே பார்த்திருக்கேன் தெரியுமா''. அதெப்படி, கும்பகோணத்தில இருக்கிற கோபால், பாவுலிட் நடிகையைத் தொட்டிருக்க முடியும். அதற்குத்தான் வந்திருக்கிறது ஹேப்டோ கிராஃபி. லாஸேஞ்சலிஸில் இருக்கும் பேரக்குழந்தையின் விரலை லால்குடியிலிருந்தபடியே தாத்தா தொட்டுப் பார்த்து ஆசையைத் தீர்த்துக்கலாம். நீங்கள் பார்த்ததை இன்னொருவரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள், பிரச்சனையில்லை மோபைல் கேமராவே போதும். படம் எடுத்து காட்டிவிடலாம். நீங்கள் தொட்டு அனுபவித்ததை இன்னொருவரிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள், இப்போது போட்டோ கிராஃபி போல ஹேப்டோகிராஃபி வந்திருக்கிறது. (படம். குச்சன்பெக்கர்.ஹேப்டோகிராஃ…

  20. இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல.. ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது. இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர் காலநிலையால்.. பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து போயுள்ள கவலை ஒரு புறம் இருக்க.. இந்தக் குளவிகளின் வாழ்க்கை வட்டத்தில்.. இராணி குளவிகள் வேறு சமூக ஆண் குளவிகளுடன் இனக் கலப்புச் செய்த பின் குளிர் காலநிலை வந்ததும் ஆண் குளவிகள் செத்துமடிய இடமளிக்கின்ற நடத்தையியல் என்பது.. ஆச்சரியமடையவும் வைக்கிறது. ஆண்கள் குளிருக்கு இறந்து போக..பெண் இராணிக்கள் மட்டும்.. தாம்..கூடி கட்டி அதற்குள் ஒளித்துக் கொள்கின்றன.. அடுத்த தவணைக்கு குளவிகளை உருவாக்க..! இதில் ஆண்களின் இந்த இறப்பை.. தியாகம் என்பதா.. சாபம் எ…

  21. image: bbc.co.uk கடந்த அக்டோபர் திங்களில் (அக்டோபர் 2008) பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் சந்திரனை ஆராய என்று அனுப்பப்பட்ட இந்திய விண்கலமான சந்திரயான் -1 விண்கலத்தில் உள்ள முக்கிய உணரியில் (sensor) பழுது ஏற்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புக் கூறியுள்ளது. சந்திரயானின் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் இருந்தே குழப்பங்கள் நிலவினாலும் தற்போதே அது பழுதடைந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் பழுதைச் சரிபார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று கொண்டிருப்பதாகவும் மேற்படி செய்திக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது. மேற்படி பழுது காரணமாக சந்திரயான் - 1 இன் ஆயுட்காலம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அமையும் என்று கூறியுள்ளனர் இஸ்ரோ…

    • 8 replies
    • 1.5k views
  22. வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்! வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று. வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களுக்கு அவ்வப்போது புதிதுபுதிதாக அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் சாட் செய்துக்கொண்டிருக்கும் போது தவறுதலாக வேறொரு நபருக்கு செய்தியை அனுப்பி விட்டால் அதை திரும்ப பெற முடியாது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படும். தற்போது வாட்ஸ்அப் அதன் புதிய அப்டேட்டில் இதற்கு தீர்வு அளித்துள்ளது. தவ…

  23. ஸ்நாப்சொட் நிறுவன உரிமம் கூகுளுக்குக் கிடைக்கவில்லை கூகுள் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் ஸ்நாப்சொட் நிறுவனத்தை 3,000 கோடி அமெரிக்க டொலர்களுக்கு வாங்க திட்டமிட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. எனினும் ஸ்நாப்சொட் தலைமை செயல் அதிகாரியான எவான் ஸ்பெய்கெல் திட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில், ஸ்நாப்சொட் நிறுவனத்தை 3,000 கோடி அமெரிக்க டொலர்களுக்கு கைப்பற்றுவது தொடர்பாக கூகுள் மற்றும் ஸ்நாப்சசொட் நிறுவனங்களிடையே கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஸ்நாப்சொட் நிறுவனத்தின் இறுதி நிதிநிலை பேச்சுவார்த்தைகளின் போது இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. நிறுவனத்தைக் கைப்பற்றும் போது எவான் ஸ்பெய்கெலிற்கும் அதிகப்படியான சலுகைகளை வழங…

  24. ஸ்மார்ட்போன்கள் அதன் பன்முக வசதிகளுக்காகவும், இணைய இணைப்பு வசதிக்காகவும், கம்ப்யூட்டர் போல செயல்படும் தன்மைக்காகவும், ஸ்டேட்டஸ் அடையாளமாகவும் இன்று உல்கம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.அதிலும் விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன் செய்து விடுவதால் இதன் விற்பனை தினந்தோறும் எகிறிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இப்போது வாசனையை பரப்புகிற ஸ்மார்ட் போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மு…

  25. புவி வெப்பமயமாதல், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். அப்படி இருக்கையில், நம் காலடியில் நடமாடும் எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எறும்புகள், மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் சார்ந்த மணற்சத்துகளை சிதைக்கின்றன. இதனால், காற்றில் கலந்துள்ள கார்பன் டைஆக்சைடு படிப்படியாக குறைகிறது. இதன்மூலம், புவி வெப்பமயமாதல் குறைந்து, புவி குளிரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=114064&category=WorldNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.