செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பணமோசடி! யாழ் செல்வந்தர்களே உஷார்! யாழில். செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ”உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்களுக்கு செய்வினை செய்து சூனியம் வைத்துள்ளார்கள். அந்த செய்வினையை உடனே அகற்ற வேண்டும். இதனை எனது ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டேன். நான் ஒரு மாந்திரீகவாதி என்னால் மட்டுமே அதனை அகற்ற முடியும்” எனக் கூறி அவர்களுக்கு நம்பிக்கை வரவைத்து பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. …
-
- 4 replies
- 366 views
-
-
கர்நாடக மாநிலத்தில் திருமணமான 3வது நாளில் ஆசிர்வாதம் வாங்க வந்த பெண்ணை, மடாதிபதி ஒருவர் பாலாத்காரம் செய்துள்ளார். கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரா கிராமத்தை சேர்ந்த லதா (25) என்பவருக்கு, கொப்பல் அருகே ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 3–வது நாளில் லதா, தனது கணவருடன், குலதெய்வமான ராவணகி கரிபசப்பா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் இருந்த மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர். அப்போது, லதாவின் அழகில் மயங்கிய மடாதிபதி, அவரை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், லதாவின் கணவரை, கடைக்கு சென்று பூஜைப் …
-
- 10 replies
- 884 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 FEB, 2024 | 10:44 AM யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம், அயலவரான யுவதி ஒருவர் கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது, தாலிக்கொடியை இரவலாக பெற்று அணிந்து சென்ற பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாக கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வழமை போன்று, தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி, தாலிக்கொடியை திருப்பி கொடுத்த போது, கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர…
-
- 1 reply
- 435 views
- 1 follower
-
-
300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர். இந்த உல்லாச மாளிகை 150 வருடங்களுக்குப் பின்னர் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 50வருடகால ஆய்வுக்குப் பின்னர் மீட்கப்படடது. இதனை மீண்டும் புணருத்தாபனம் செய்ய தமக்கு 1250 மணிநேரம் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது 2.2மீற்றர் நீளமும், 1.2மீற்றர் அகலமும் கொண்டது. கவர்ச்சியான வண்ணப் பலகைகளாலும், நுண்ணிய அலங்காரங்களால் மெருகூட்டப்பட்ட பளிங்கு, பிலாஸ்டிக…
-
- 0 replies
- 600 views
-
-
ஒருமுறையாவது கைதாக வேண்டும்'- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம் Published : 26 Mar 2019 16:59 IST Updated : 26 Mar 2019 16:59 IST 1 197 - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் பிரிஸ்டல். அங்குள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஏராளமான முதியவர்கள் வசித்து வருகின்றனர். தவறவிடாதீர் கவுண்டர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்க…
-
- 1 reply
- 852 views
- 1 follower
-
-
“வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என்று பரவலாக அறியப்படும் 36 வயதான பிரேசிலைச் சேர்ந்த சித்த மருத்துவரான அதோஸ் சலாமி, எதிர்காலத்தில் உலகளவில் நடைபெறப்போகிற நெருக்கடிகள் குறித்த தனது முன்கணிப்புகளால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், வரவிருக்கும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார் சலோமி. ஆனால் இது பாரம்பரிய போர் போன்று அல்லாமல், தொழில்நுட்ப ரீதியாக இருக்கும் என்றும் கூறி பீதியை கிளப்பியுள்ளார். இதற்கு முன் கோவிட்-19 தொற்றுநோய், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது (இப்போது X என மறுபெயரிடப்பட்டுள்ளது) மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னரே கணித்த சலோமி, இனி நடக்கப் போகும் நவீன போ…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.00 மணிவரை கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவா் ஆலய முன்றலில் இடம்பெற்றது. சாமியன் அரசடி சந்தியில் கூடிய மக்கள் அங்கிருந்து ஞானவைரவா் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் ஞானவைரவா் ஆலய முன்றலில் சென்றடைந்தது. அங்கு ஓய்வுபெற்ற காணிப்பதிவாளா் செல்வரட்ணம் தலைமையில் மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனா். அங்கு நெல்லியடி விவசாய அமைப்புக்களின் தலைவா் தம்பையா கனகராஐா, இளம் சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா…
-
- 0 replies
- 415 views
-
-
ராமேசுவரத்தில் இன்று அதிகாலை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு ராமேசுவரத்தில் அடிக்கடி கடல் உள் வாங்குவது, கடல் கொந்தளிப்பு என கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தில் திடீரென சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள் வாங்கியது. அக்னி தீர்த்த கடற்கரை, துறைமுக கடற்கரை, சங்கு மால் கடற்கரை ஆகிய இடங்களில் கடல் உள்வாங்கியதால் 500 மீட்டர் தூரத்திற்கு பாறைகளாக காட்சியளித்தது. இன்று காலை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வந்து பார்த்தபோது நாட்டு படகுகள் தரை தட்டி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீன்பிடிக்க செல்லு…
-
- 0 replies
- 651 views
-
-
டேவிற் கமரனின் பாதுகாவலர் விமானக் கழிப்பறையில் துப்பாக்கியைத் தவறவிட்டார் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிற் கமரனின் பாதுகாவலர் ஒருவர் தனது துப்பாக்கியை ஜெட் விமானத்தின் கழிப்பறையில் தவறவிட்டதாகக் கூறப்படுகிறது. நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்ரிஷ் எயார்வேய்ஸ் விமானத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விமானத்தின் கழிப்பறைக்குச் சென்ற பயணி ஒருவர் அங்கிருந்த துப்பாக்கியைக் கண்டெடுத்து விமான ஊழியர்களிடம் கொடுத்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் டேவிற் கமரனுக்கு மெற்றோ பொலிற்ரன் பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். துப்பாக்கியைத் தவறவிட்ட அதிகாரி உடனடியாகக் …
-
- 0 replies
- 232 views
-
-
இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரகசிய கதவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை குறித்து ஆராய்ச்சியாளர்களை ஆய்வு செய்தபோது, சுமார் மூன்றரை மீட்டர் உயரமுள்ள இரண்டு ரகசிய கதவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மரத்திலால் ஆன கதவை திறந்து பார்த்த போது மன்னரும் ராணியும் அமரும் மேல் அவைக்கு செல்லும் ரகசிய பாதையும் பென்சிலால் எழுதப்பட்ட சிறுசிறு குறிப்புகளும் அங்கு இருப்பது தெரிய வந்தது. இந்த பாதையானது 1661-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை சீரமைப்புக்கு பின்னர், இந்த பாதை சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 287 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவில் எஸ்சிஓ கூட்டத்திற்கு முன்பு வட கொரியாவின் உயர் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சந்திப்பு கட்டுரை தகவல் பாரத் ஷர்மா பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிக அளவு விவாதிக்கப்படும் ஒரு உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது. அது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஆகும். இந்த இரு தலைவர்களின் சந்திப்பில் நடந்த உரையாடல்கள் விவாதிக்கப்படுகிறது, ஆனால் அதைவிட அதிக கவனம் ஈர்த்திருப்பது இந்த சந்திப்பு முடிந்த பிறகு நடந்த ஒரு நிகழ்வு. சந்திப்பு முடிந்து இரு தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டதும், வட கொரியாவின்…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர், அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து போனாராம். சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தன. இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்ப…
-
- 0 replies
- 378 views
-
-
[size=5]2 மகள்கள் இருக்கிறார்கள் கௌரவமாக நடந்துகொள் என கூறிய கணவன் கொலை: மனைவி கைது [/size] [size=4]நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சந்திரா காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). டைல்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அஜந்தா (35). மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மகள்களின் படிப்புக்காகவே ரமேஷ் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். முன்னதாக மேட்டுப்பாளையத்தில் வசித்து வந்தார்.[/size] [size=4]அப்போது அஜந்தாவுக்கும் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகேயுள்ள ஆலாங்கொம்பு பகுதியை சேர்ந்த முத்துசாமி (34) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. முத்துசாமியும்…
-
- 7 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 669 views
-
-
நியூயார்க்:எப்போதும் கம்ப்யூட்டர் கேம், இன்டர்நெட் என்று கம்ப்யூட்டரே கதியா?சாப்பாட்டை மறந்து விட்டு கம்ப்யூட்டரில் மூழ்கி விடுகினரா எப்போதும்?கம்ப்யூட்டரில் விளையாடி விட்டு அடிக்கடி கோபப்படுகின்றனரா? இப்படியெல்லாம் உங்கள் குழந்தைகள் செய்தால், மனோதத்துவ டாக்டரை பார்க்க இது சரியான தருணம்; இனியும் தாமதிக்கக்கூடாது! இது குறித்து, அமெரிக்க மனோதத்துவ ஆய்வு இதழில் நிபுணர்கள் கூறியிருப்பதாவது: மது குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவதை விட, இன்டர்நெட், கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது மோசமானது; கம்ப்யூட்டரே கதி என்று இருப்போர் அதற்கு அடிமைப்பட்டு விடுகின்றனர்.இப்படி இருப்பதால் அவர்களால் சரிவர சிந்திக்க முடிவதில்லை; சரியான நேரத்துக்கு சாப்பிட முடிவதில்லை; சரியான தூக்கம் …
-
- 1 reply
- 1.1k views
-
-
வங்கதேசத்தில், காதலனிடமிருந்து பிரிக்கப்பட்ட கிளி, ஒரு வாரமாக பட்டினி கிடந்ததால், கோர்ட் மூலம், மீண்டும் காதலனுடன் இணைந்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்தவர் இக்ரம் சலீம். இவர் பிரேசில் நாட்டை சேர்ந்த பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வந்தார். வாடகை வீட்டில் இந்த கிளிகளை, வளர்க்க போதிய இடவசதி இல்லாததால், சிறிது காலத்துக்கு, தாகா நகரில் உள்ள, தனியார் உயிரியல் பூங்காவில் விட்டிருந்தார்.உயிரியல் பூங்கா வில், ஆண் பஞ்ச வர்ணகிளியுடன், இந்த ராணி கிளிக்கு தொடர்பு ஏற்பட்டு, மூன்று குஞ்சுகள் உருவாயின. ஒரு கிளியை, உயிரியல் பூங்கா உரிமையாளர் விலை கொடுத்து வாங்கி கொண்டார். இதற்கிடையே, வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்த சலீம், தனது செல்ல பெண் கிளி ராணியை, உயிரியல் பூங்காவிலிருந்து அழைத்து வ…
-
- 1 reply
- 564 views
-
-
எங்கள் அன்புக்குரிய ஆண்டான 2020 * இன் மரண அறிவித்தல் ஒன்றை இத்தால் சகலருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், மற்றும் அவர் பிரிவால் துயரடைந்தது மட்டுமல்லாது அவருடன் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரையும் மாய்ப்பதற்கு தயாராக நிற்கும் அவருடைய 12 மனைவிகள், 52 பிள்ளைகள் மற்றும் 365 குழந்தைகளும் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டிப் பிராத்திக்கின்றேன். இவர்களது இறுதிச் சடங்குகள் பூமியின் மரவுப்படி, டிசம்பர் 31 வியாழக்கிழமை 23:59 மணிக்கு நடைபெறும், மேலும் தகவலுக்கு திரு. சனவரி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். தொலைபேசி எண் 01 01 2021. அவருடைய வாரிசான திரு 2021 அவர்கள் 2020 உங்களுக்குச் செய்த அநியாயங்கள் அக்கிரமங்களை எல்லாம் அகற்றி அனைவரையும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஒன்றுபடுத்த…
-
- 5 replies
- 760 views
-
-
ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால் தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை! பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை பைசர் – பயோஎன்ரெக் தடுப்பூசியை முதல் முறை ஏற்றிக்கொண்ட ஒருவர் அடுத்த மூன்று வார காலப்பகுதியில்- 21நாள்களுக்குள் – இரண்டாவது ஊசியையும் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம். அப்போதுதான் அதன் நோய் எதிர்ப்புச் சக்தி முழுமையாகப் பலன் அளிக்கும். அவ்வாறு அன்றி இரண்டாவது ஊசியை ஏற்றவேண்டிய காலத்தை மூன்று வாரங்களுக்கு மேல் இழுத்தடித்தால் முதலாவது தடுப்பூசியின் முழுமையான பலன் கிட்டாது போகலாம். தங்களது தடுப்பூசி இரண்டாவது முறை ஏற்றாமல் ஒரே தடவையில் மட்டும் பலனளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று ‘பைசர் – பயோஎன்ரெக்’ நிறுவனங்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை ஒன்றில் த…
-
- 0 replies
- 368 views
-
-
முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு 'கிச்சுகிச்சுமூட்டி' அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது. மீன்பிடிப்பதற்காக சென்ற 65 வயதான மீனவர் ஒருவரே முதலையின் வாயில் சிக்கிக்கொண்டுள்ளார். அவருடைய கால்களை முதலை கௌவிக்கொண்டது. உடனடியாக கைகளை முதலையின் வயிற்றுக்கு கீழே கொண்டுபோன அவர் முதலையின் வயிற்றில் கிச்சுகிச்சுமூட்டியுள்ளார். கூச்சமடைந்த முதலை வாயை திறந்தவுடன் அதன்பிடியிலிருந்து தான் தப்பித்து கொண்டதாகவும் இந்த முறைமை தொடர்பில் தான் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததாகவும் அந்த மீனவர் தெரிவித்துள்ளார். முதலையிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மந்திரம் செய்யப்பட்ட கற்களை அந்த களப்பிற்குள் போட்டுள்ளதாகவும் அந்த கற்கள…
-
- 13 replies
- 1.9k views
-
-
நவாலியில்... வீட்டு வேலிக்கு, தீ வைத்த இருவர் கைது! யாழ்.நவாலியில் உள்ள வீடொன்றின் வேலிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நவாலி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் வேலி நேற்று முன்தினம் இரவு தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தது. குறித்த வேலி சில நாட்களுக்கு முன்பே கட்டப்பட்டதாகும். இந்நிலையில் வேலிக்கு தீ வைத்த விசம செயல் தொடர்பாக வீட்டு உரிமையாளரினால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் 19வயது, மற்றும் 21 வயதான இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். https://athavannews.com/2021/1245351
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையின் மூத்த படைப்பாளியும் மலையக எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப், இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதினைப்பெறுகிறார். இத்தகவலை விஷ்ணுபுரம் விருதுவழங்கும் தமிழகத்தின் பிரபல படைப்பாளி ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி தமிழ்நாடு கோவையில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழா இந்திராபார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ளது. மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வாழ்த்துரை வழங்கி தெளிவத்தை ஜோசப் பற்றிய நூலை வெளியிடுவார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் விருது வழங்கும் விழாவில் உரையாற்றுவார்கள். இந்நிகழ்வில் தெளிவத்தை ஜோசப் கலந்துகொள்ளுவார். இலங்கையில் ஏற்கனவே இரண்ட…
-
- 3 replies
- 571 views
-
-
பிரிட்டனில் செர்வின் என்ற 4 வயது சிறுவன் வியக்கும் வகையில் நவீன நுண்ணறிவை பெற்று சிறு வயதிலேயே சாதனையாளராக உருவெடுத்துள்ளான். இச்சிறுவன் 10 மாதத்திலேயே பல வார்த்தைகளை பேச கற்றுக்கொண்டதுடன், இரண்டு வயது முதல் உலகிலுள்ள நாடுகளின் பெயர்களை கற்றுக்கொண்டான். பின்பு உடலில் எல்லா பாகங்களும் அவற்றின் வேலைபாடுகளையும் மிகச் சரியாக கூற தொடங்கினான். இதனை தொடர்ந்து எரிமலையையும், எரியும் நட்சத்திரங்களை பற்றிய தகவல்களையும் நன்கு விளக்குகிறான் மற்றும் கணிதத்தில் வெகு விரைவாக செயல்படுகிறான். இச்சிறுவன் தன் 3 வயதில் தன் திறமைகளை வெளிப்படுத்தி பள்ளியில் சிறந்த மாணவன் திகழ்வதுடன், 4 வயதில் IQ தேர்வில் 160 மதிபெண்களை பெற்று சாதனைப் படைத்துள்ளான். இதுகுறித்து இவன் தாயார் கூறுகைய…
-
- 2 replies
- 916 views
-
-
24 மணித்தியாலம் பட்டினியில் இருந்த பொன்சேகா திகதி: 11.02.2010 // தமிழீழம் இராணுவ காவல்துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் வழங்கப்பட்ட நீரையோ, ஆகாரத்தையோ எடுக்காமல் 24 மணித்தியாலம் பட்டினியில் இருந்துள்ளார். ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் உட்கொள்ளாத அவர் தனது மனைவி அனோமா கொண்டுவந்திருந்த உணவு மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு அவருடன் மூன்று மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார். நன்றி..........சங்கதி
-
- 0 replies
- 602 views
-
-
தாம்பத்ய உறவில் ஈடுபட கைதிக்கு அனுமதி தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்க…
-
- 0 replies
- 302 views
-
-
கண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்! டெல்லியைச் சேர்ந்த கரண் என்ற நபர், தன்னுடைய கண்களுக்குள் பச்சைக் குத்தி கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. 28 வயது நிரம்பிய இவர் தேர்ந்த பச்சைக் குத்தும் நபர் ஆவார். உடல் நிறைய பச்சைக் குத்தியிருக்கும் இவர் தற்போது கண்களுக்குள்ளும் பச்சைக் குத்தி இருக்கிறார். இவர் கண்களில் பச்சைக் குத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகியுள்ளது. ஒரே நாளில் ட்ரெண்ட் ஆகியுள்ளார் இந்த நபர்.டெல்லியச் சேர்ந்த கரண் என்ற 28 வயது நிரம்பிய நபர் தேர்ந்த தொழில் முறை பச்சைக் குத்தும் நபர் ஆவார். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு இவர் பச்சைக் குத்தியுள்ளார் . இதன் மூலம் …
-
- 8 replies
- 2k views
-