செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்று அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பின்னர், மோடியின் குழுவில் தோனி இணைவார் என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த சஞ்சய் பஸ்வான் தனது நண்பரான தோனியை கட்சியில் இணைப்பது குறித்து பல நாட்களாக பேசி வருவதாக கூறியுள்ளார். தோனியின் சொந்த மாநிலமான ராஞ்சியில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது முதல்வர் வேட்பாளராக தோனியை பாஜக முன்னிறுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தோனி கட்சியில் இணைவதன் மூலம் இளைஞர்களின் வாக்குகள் கிடைக்கும் என்பது பாஜகவின் எதிர்பார்ப்பு…
-
- 0 replies
- 312 views
-
-
பணத் தேவை இருக்கும் அனைத்து மக்களும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த வார்த்தையை உச்சரித்திருப்பார்கள். `ச்சே... இப்போ பண மழை பெய்தால் எப்படி இருக்கும்’ என்று. வெறும் வார்த்தையாக மட்டுமே நாம் அறிந்த இந்த ‘பண மழை’ அட்லான்டா மக்களுக்கு நிஜமாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லான்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் பண மழை பொழிந்துள்ளது. எங்கும் கொட்டிக் கிடந்த பணத்தைப் பார்த்ததும் அந்த வழியாகச் சென்றவர்கள் தங்கள் கார்களை அப்படியே நடுரோட்டில் நிறுத்திவிட்டு, சிதறிக் கிடந்த பணத்தை அள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறைக்குச் செ…
-
- 5 replies
- 1.7k views
-
-
ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக முக்கிய நதியான திக்ரிஸ் நதி வறண்டு போயுள்ளது. இதனால் அந்த நதியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான மொசூல் அணை வறண்டு போயுள்ளது.அணை வறண்டு போனதை தொடர்ந்து இதுவரை நீருக்குள் மூழ்கியிருந்த அரண்மணை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது.இந்த அரண்மனை 3,400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இந்த அரண்மனையின் தொன்மை மற்றும் வரலாறு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக குர்திஷ் மற்றும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர். http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=14925&page=3
-
- 0 replies
- 507 views
-
-
இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும்.காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள் சென்றவேளை மலையில் விபத்துக்குள்ளாகி காலில் காயமடைந்து கால்கள் வீங்கியநிலையில் நோய்வாய்ப்பட்டு கொலம்பியாவுக்கும் பனாமாவுக்கும் இடைப்பட்ட சதுப்பு நில காட்டுப்பகுதியில் சக பயணிகளாலும் பயணமுகவராலும் கைவிடப்பட்டு இறந்துவிட்டார் என சமூக வலைத்தள பதிவுகளில் செய்தி பகிரப்பட்டுள்ளது.அன்பார்ந்த தமிழ் உறவுகளே இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாக அறியப்படுகிறது. இத்தகவலை யாழ் நகரை சார்ந்தவர்கள் பகிருங்கள். இவரது உறவுகள் அடையாளம் காண அறியும்வகை செய்யுங்கள். இவரத…
-
- 0 replies
- 978 views
-
-
இந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்குள் பதட்டம், பரபரப்புடன் நுழைந்த அந்த பெண்ணை பார்த்ததும் நோயாளிகள் உட்பட எல்லாருமே தெறித்து ஓடினார்கள். மும்பையில் கொஞ்ச நாளாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரைக்கும் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ பேர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு அவதிக்குள்ளாகி ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்போது மழை விடுமோ, எப்போது இயல்பு நிலை வருமோ என்றும் மும்பை மக்கள் காத்துள்ளனர்.இந்நிலையில் தாராவியில் உள்ள பால்கிபூர் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வசித்து வரும் பெண்மணி சுல்தான்கான். வயசு 32. இவர் தனது வீட்டின்…
-
- 0 replies
- 572 views
-
-
பாகிஸ்தானின் மிகவும் பருமனான மனிதர் மருத்துவமனை குழப்ப நிலையால் உயிரிழப்பு! பாகிஸ்தானில் 330 கிலோ உடல் எடையை குறைப்பதற்காக சத்திரசிகிச்சை செய்துகொண்ட ஒருவர் மருத்துவமனையில் இடம்பெற்ற குழப்ப நிலை காரணமாக கவனிப்பாரின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்தார். லாகூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாதிக்காபாத் பகுதியை சேர்ந்த நூருல் ஹசன் சிறு வயதில் இருந்தே உடல் பருமன் அதிகரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது எடை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், 55-வது வயதில் சுமார் 330 கிலோ எடையுள்ள மனிதராக மாறிப் போனார். அவருக்கு எடை குறைப்புக்கான சந்திர சிகிச்சையை மேற்கொள்ள குடும்பத்தார் முயற்சித்து வந்தனர். இந்த தருணத்தில், பாகிஸ்தானின…
-
- 0 replies
- 805 views
-
-
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே குலை வெளியே வந்துள்ளது. வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது. இந்த அதிய வாழையை பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். https://newuthayan.com/story/16/வவுனியாவில்-அதிசயம்-வாழை.html
-
- 0 replies
- 432 views
-
-
லண்டன் நீதிமன்றில் விநோத வழக்கு: மனைவியை நீதிமன்றுக்கு அழைத்தார் கணவன்! கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடுநரினால் தன்னுடைய மகன் என்ற நம்பிக்கையில் கடந்த 8 வருடங்களாக பராமரிக்கப்பட்ட சிறுவன், தன்னுடைய மனைவிக்கும் பிறிதொரு ஆணுக்கும் இடையிலான உறவின் காரணமாக பிறந்தவர் என்ற உண்மை தெரியவந்ததை அடுத்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த உண்மை தெரியவந்தமையினால் தனக்கு ஏற்பட்ட மனவுளைச்சலுக்கும், செலவீனங்களுக்…
-
- 0 replies
- 363 views
-
-
விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட இளம் பெண்! விமானத்திலிருந்து விமானப் பணிப்பெண்ணொருவரால் இளம் பெண்ணொருவர் இறங்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஹாரியட் ஒஸ்போர்ன் (31) என்ற ஒப்பனை கலைஞர் தன்னுடைய நண்பருடன் ஸ்பெயினிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஹாரியட், ஈஸிஜெட் விமானத்தின் பணிப்பெண்கள் தன்னை மற்ற பயணிகள் அனைவரின் முன் அவமதித்ததாக முறைப்பாடு செய்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘விமானத்தில் நுழைய முயன்ற போது, அனைவரின் முன்பாக வைத்தும் என்னுடைய ஆடை, குழந்தைகள் பார்க்கும் விதத்தில் இல்லை என்று கூறி வெளியேற்றிவிட்டனர். எனக்கு அழுகை வந்துவிட்டது. என்னுடைய தோழியுட…
-
- 5 replies
- 971 views
-
-
பாக்தாத் பாதுஷா சதாம் ஹுசைனின் கதை..! (வினோத வீடியோ)
-
- 1 reply
- 577 views
-
-
அ.பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் மாணவ பாராளுமன்ற தேர்தல் Wednesday, June 26, 2019 - 5:59pm கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு அமைய பாடசாலை மண்டத்தில் இடம்பெறும் மாணவ பாராளுமன்ற தேர்தல் சகல பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றன. இதற்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் 90 உறுப்பினர்களை தெரிவு செய்யும் மாணவ பாராளுமன்ற தேர்தல் இன்று (26) இடம்பெற்றது. …
-
- 3 replies
- 1.2k views
-
-
எனக்கு ஏர் கனடா பிடிப்பதில்லை.... கிழவிகள் தான் சேவையில் இருப்பார்கள். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்துக்கு உரிய, customer service என்னும் ஒரு ஐடியாவே அவர்களுக்கு இல்லை என்று தோன்றும். இது பல வருடங்களுக்கு முன்னர் போன கசப்பான அனுபவத்தால் உண்டானது. இப்போது BA மட்டும் தான் பாவிப்பது. சரி விசயத்துக்கு வருவோம் மக்களே. பயணி Tiffani Adams என்பவர் கியூபெக் இல் இருந்து, கடந்த 9ம் திகதி டொரோண்டோ பறக்கிறார். வைன் வாங்கி அடிச்சிருப்பா போல கிடக்குது. மனிசி நித்திரையைப்போட்டுது. முழிச்சுப் பார்த்தால், ஒரே இருட்டாக்கிடக்குது. குளிர் வேற போட்டு தாக்குது. முதலில் குழம்பி விட்டார். பிளேன் ஏறினோம், இதென்ன இருடாக்கிடக்குது.... எங்கையாவது விழுந்துட்டுதோ... எழும்புவம்…
-
- 14 replies
- 1.9k views
-
-
வெங்காய வெடி வைத்து, மனைவியைக் கொலைசெய்த கணவன் வவுனியாவில் கைது! வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வெங்காய வெடியை வெடிக்க வைத்து மனைவியை கொலை செய்த நிலையில் தலைமறைவாக இருந்த கணவன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய து.ரவிச்சந்திரன் என்பரே செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிகுளம், துடரிக்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 4 பிள்ளைகளின் தாயார் ஒருவர் வெங்காய வெடியை முகத்தில் வெடிக்க வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த கொலைச் சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். கொலைசெய்யப்பட்ட குறித்த பெண்ணின் கணவன் தலைமைவாகியிருந்த நில…
-
- 7 replies
- 1.5k views
-
-
இசுரேல் பாலஸ்தீன பிரச்னையை தீர்க்க ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் முயன்று வந்தனர். ஆனால், இன்றைய அதிபரும் அவரது மத்திய கிழக்கு ஆலோசகரான அவரது மருமகனும் ஒரு பண - பொருளாதார உதவி ஊடாக சமாதானத்தை கொண்டுவர ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளனர். பத்து வருடத்திற்கு ஐம்பது பில்லியன்கள் அமரிக்க டாலர்கள் முதலீடாகவும், உதவியாகவும் மற்றும் குறைந்த வட்டியும் கொண்டதாகவும், இது அண்டை நாடுகளான எகிப்து ,ஜோர்தான் மற்றும் லெபனானுக்கும் சேர்த்தே உதவும். ஆனால், பாஸ்தீன ஆலோசகர்கள் முதலில் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டல் வேண்டும் என கூறி உள்ளனர், White House proposing $50 billion package to boost Palestinian economy -- if there is peace The White House is proposing a $50 bi…
-
- 0 replies
- 728 views
-
-
அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் ஒன்றி கொலராடோ. இது ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கோடையின் முதல் நாள் நேற்று. அதாவது ஆணி பாதம் முதலாம் திகதி. ,ஆனால் கொலராடோ மாநிலத்ததில் கொட்டியதோ பனி. ட்ரம்ப் போன்றோர் உலகம் வெப்பமடைதலை மறுத்து வருகின்ற வேளையில் உலக சுற்ற சூழல் வேகமாகமாறி வருகின்றது.
-
- 1 reply
- 576 views
-
-
வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெங்களூரு நகரத்தின் சர்ச் தெருவில் உள்ள மதுபான விடுதியில் குடித்து விட்டு 2ம் மாடியிலிருந்து கீழே விழுந்த 2 ஐடி நிறுவன ஊழியர்கள் பலியானதாக போலீஸார் சனிக்கிழமையன்று தெரிவித்தனர். பலியான் இருவர் பவன் அத்தாவர், வேதா ஆர்.யாதவ் ஆகிய இருவர் என்று போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். சர்ச்தெரு ‘பப்’ ஒன்றில் நன்றாக மது அருந்திய இந்த 2 நபர்களும் 2ம் மாடியிலிருந்து இறங்கிய போது தடுக்கி விழ படிக்கட்டின் முடிவில் இருக்கும் ஜன்னல் வழியாக கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 30 வயதுப் பக்கம் இருக்கும் இருவரையும் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கு மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 909 views
-
-
100 வயதிலும் யோகா செய்து வரும் நானம்மாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்தவர். தனது சிறுவயதிலிருந்து யோகா செய்து வரும் இவருக்கு 50 விதமான ஆசனங்கள் தெரியும். கடந்த 2018ஆம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. யோகா குறித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பல இடங்களுக்கு பயணிக்கும் இவரை, கோவை நகர மக்கள் 'யோகா பாட்டி' என்று அழைக்கின்றனர். https://www.bbc.com/tamil/arts-and-culture-48716596 கோயம்புத்தூரின் கணபதி பகுதியில் வசிக்கும் நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ஆம் ஆண்டில் வேளாண்மைக் குடியில் பிறந்தவர். தனது தாத்தா மன்னார்சாமியிடமிருந்து யோகாசனப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த நானம்மாள், அந்தப் பயிற்சியை 90 ஆண்டுகளுக்கு…
-
- 4 replies
- 1.3k views
-
-
வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை. "வயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு" சொல்லிட்டு போன கல்யாண மாப்பிள்ளையை காணோமாம்! நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் என்ஜினீயராக இருக்கிறார். சென்னையில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலையும் பார்த்து வருகிறார். இவருக்கு கல்யாணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, அதே நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்தனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளையை பிடித்திருந்தது.இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நேற்றுமுன்தினம், அதாவது ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் நடக்க முடிவானது. கல்யாணத்துக்கு முந்தைய நாள் இரவு மணப்பெண்ணுக்கு மருதாணி வைக்கும் சடங்கு கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. இதில் இரு குடும்பத்தின…
-
- 0 replies
- 479 views
-
-
‘ஒரு நாள் திருமணத் திட்டம்’ நெதர்லாந்தில் அறிமுகம்! சுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடித் திட்டம் ஒன்றை நெதர்லாந்து அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தைச் சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நாள் திருமணம் செய்து வைக்கும் திட்டம் ஒன்றே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எவ்வித சட்டப்பூர்வமான அம்சங்களும் உள்ளடக்கப்படாமல் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்தத் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அங்கு செல்லும் சுற்றுலாப…
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
பிரசவம் இடம்பெற்று 30 நிமிடங்களில் மருத்துவமனையில் பரீட்சை எழுதிய பெண்! எத்தியோப்பியாவில் பெண்ணொருவர் ஓர் ஆண் குழந்தையை பிரசவித்த அரை மணி நேரத்துக்கு பின் மருத்துவமனை படுக்கையிலேயே தனது பரீட்சை வினாத்தாள்களுக்கு பதில் எழுதியுள்ளார். 21 வயதான அல்மாஸ் டெரீஸ் என்ற பெண் மேற்கு எத்தியோப்பியாவில் வசித்து வசிகின்றார். கர்ப்பிணியாக இருந்த போது பிரசவம் நடப்பதற்கு முன்னரே பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ழான் பண்டிகை காரணமாக அவரது உயர்நிலைப் பாடசாலைப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன கடந்த திங்கட்கிழமை அவருக்கு பரீட்சைகள் இடம்பெறுவதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது பரீட்சைகளை எழுதினார். ”கர்ப்பிணியாக இருக்…
-
- 0 replies
- 283 views
-
-
படத்தின் காப்புரிமை GURUCHARAN KURDIKAR இப்போது இந்த கிராமம் சிலரின் நினைவில் மட்டுமே வாழ்கிறது. இந்த கிராமம் குறித்து பசுமையான நினைவுகள் அந்த மக்களின் மனதில் இப்போதும் இருக்கிறது. அதனால்தான், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உயிர்பெறும் இந்த கிராமத்தை காண, முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் திரள்கிறார்கள். அது எந்த கிராமம்? அந்த கிராமத்திற்கு என்ன ஆனது? - விரிவான தகவல்களை வழங்குகிறார் பிபிசிக்காக செய்தி வழங்கும் கோவாவை சேர்ந்த பத்திரிகையாளர் சுப்ரியா வோரா. ஒரு நதி, இரு குன்றுகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் …
-
- 2 replies
- 895 views
-
-
லவ் மேரேஜ்.. மகளுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய அப்பா! தன் பேச்சையும் மீறி, மகள் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டதால், ஆத்திரம் அடைந்த அப்பா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி விட்டார். ஆம்பூர் அடுத்துள்ள பகுதி குப்பராஜபாளையம். இங்கு வசித்து வருபவர் சரவணன். இவருக்கு 21 வயதில் அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார். மகள் மீது சரவணனுக்கு கொள்ளை ஆசை.கடந்த சில வருடங்களாகவே மகள், சுப்பிரமணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு வேறு சமூகம் என்று சொல்லப்படுகிறது. காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததும், கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணி வேறு சாதி என்பதால் மேலும் எதிர்ப்பு கூடியது. எப்படியும் இவர்கள் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள்…
-
- 8 replies
- 1.6k views
-
-
மதுபோதையில் வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்யும் கணவனை, உறக்கத்தில் வைத்து தலையில் இரும்பால் தாக்கி மனைவி படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் இன்று (9) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆறுமுகன் ஜெயராமன் (44) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் முரண்பட்டுள்ளார். இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவரை இரும்புக்கம்பியால் தாக்கி மனைவி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவர் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலபிட்டி மா…
-
- 3 replies
- 840 views
- 1 follower
-
-
கத்தாரில் பாஸ்போர்ட் இல்லாமல், சிக்கிய வங்கதேச பிரதமரின் விமானி: விசாரணைக்கு உத்தரவு! வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் விமானி பாஸ்போர்ட் இல்லாமல் தோஹா விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஜப்பான், சவூதி அரேபியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்தார். அவர் பின்லாந்து நாட்டிலிருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.அவரை அழைத்து வருவதற்காக வங்கதேச அரசுக்கு சொந்தமான பிமான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தனி விமானம் நேற்றுமுன்தினம் இரவு பின்லாந்து சென்றது. அந்த விமானம் கத்தாரிலுள்ள தோஹா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் விமானிகளின் பாஸ்போர்ட்…
-
- 0 replies
- 520 views
-
-
நோர்வேயில் கடலுக்கடியில் உணவகம் முதன் முறையாக ஐரோப்பாவில் கடலுக்கடியில் உணவகம் திறந்து அமைக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் தென்பகுதியில் இந்த உணவகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 40 பேர் அமர்ந்து இங்கு உணவு உட்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடலுக்கடியில் 5 மீட்டர் ஆழம் வரை கட்டப்பட்டுள்ள குறித்த உணவகத்தின் பெயர் ‘Under’ என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நோர்வேயில்-கடலுக்கடியில/
-
- 3 replies
- 769 views
-