செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7130 topics in this forum
-
தனது பிள்ளை விளையாடுவதற்காக, கடற்கரையில் ஊர்ந்து சென்ற சிறிய ஆமையைப் பிடித்துக் கொடுத்த தந்தைக்கு, 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அத்துடன், ஆமையைக் கடலில் விடுமாறும் பருத்தித்துறை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த மேற்படி நபர், கடற்கரையில் சென்ற ஆமையைப் பிடித்து தனது பிள்ளைக்கு விளையாடக் கொடுத்துள்ளார். இது தொடர்பில் தகவல் அறிந்த பருத்தித்துறை பொலிஸார், குறித்த குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, குறித்த குடும்பஸ்தர…
-
- 0 replies
- 252 views
-
-
மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார். பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இறுதிசடங்கு நடைபெற்ற போது, உறவினர்கள், பாண்டித்துரையின் மார்பில் பலமாக அடித்து அழுதுள்ளனர். அப்போது, பெரு மூச்சு விட்ட பாண்டித்துரை உயிருடன் எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிச்சைக்கு அனுமதித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=154351&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 299 views
-
-
மாத்தறை மிரிஸ்ஸ கடலில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக படகில் சென்ற இளைஞர் குழுவொன்று வலையில் சிக்குண்டிருந்த திமிங்கிலமொன்றினை காப்பாற்றும் துணிகர செயலில் ஈடுபட்டு இறுதியில் ஆபத்துக்கு முகம் கொடுத்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் சிலர் படகில் கடலுக்குள் சென்றிருந்த போது இவ்வாறு திமிங்கிலமொன்று வலையில் சிக்கியிருந்ததாகவும் அவ்விடத்துக்கு வருகை தந்த மற்றைய படகுகள் ஆபத்திலிருந்த திமிங்கிலத்தை கண்டும் காணாதவாறு சென்றதாகவும் தெரிவித்த இந்த இளைஞர்கள் தங்களோடு படகில் வந்திருந்த அனைவரும் திமிங்கிலத்தை காப்பாற்றுவதற்கு சம்மதம் தெரிவிக்கவே திமிங்கிலத்தை காப்பாற்றும் நோக்கில் அனைவரும…
-
- 0 replies
- 276 views
-
-
அந்தரங்க உறுப்பை கடித்த இருவர் கைது கொஸ்கொட துவேமோதர எனுமிடத்தில் உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவும், பொது இடத்தில் இவ்விருவரும் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். அதனை, அந்த உப-பொலிஸ் பரிசோகர் கண்டித்துள்ளார். இதனையடுத்தே இவ்விருவரும் சேர்ந்து, உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான அவர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/168930/%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0%E…
-
- 0 replies
- 310 views
-
-
நமக்கு தேவையான பொருட்களெல்லாம் ஆட்டோல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க, இல்ல கொரியர்ல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க. வானம் வழியா டெலிவரி ஆகறதப் பாத்துருக்கீங்களா? இனிமேல் பார்ப்பீங்க. ஆம். அமெரிக்காவின் நெவாடாவில் ஆகாய வழியாக நீர், உணவு மற்றும் முதலுதவிப் பொருட்களை டெலிவரி செய்துள்ளது டுரோன் எனப்படும் பறக்கும் ரோபாட். டுரோன் என்பது வேறொன்றுமல்ல. நண்பன் திரைப்படத்தில் விஜய், ஒரு கருவியை பறக்கவிட்டு சத்யனின் அறையை கேமரா மூலம் பார்ப்பார் அல்லவா, அதுதான் டுரோன். முதலில் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டுரோன்களை, பொருட்களை டெலிவரி செய்யப் பயன்படுத்த நினைத்தார்கள். அதன் வடிவமைப்பை சற்று மாற்றி, பொருட்களை கவனமாக தாங்கிச் செல்லும் வகைய…
-
- 0 replies
- 273 views
-
-
தரையை காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர். தலபுராணம்: பகவான் ராமன், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் வனவாசத்திற்காக வந்தபோது, இலங்கை அரசன் ராவணன், சீதையை சிறைபிடித்து கடத்தி சென்றான். அப்போது, இந்த பகுதியை கடக்கும்போது, பறவையினத்தைச் சேர்ந்த, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு காயமடைந்து கீழே விழுந்தது. சீதையை கடத்தி செல்லும் ராவணன் குறித்த தகவலை கூறிய ஜடாயு, ராமனுக்கு வழிகாட்டியது. பின்னர் இலங்கையில் சிறை வைக்…
-
- 0 replies
- 406 views
-
-
நூலகத்தில் பெற்ற புத்தகத்தை 49 வருடங்களின் பின் ஒப்படைத்த நபர் 2016-03-24 12:11:22 அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் நூலகமொன்றில் இரவல் வாங்கிய புத்தகமொன்றை 49 வருடங்களின் பின்னர் திருப்பிக் கொடுத்துள்ளார். ஜேம்ஸ் பிலிப்ஸ் எனும் இவர், ஒஹையோ மாநிலத்திலுள்ள டேய்ட்டன் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு இப் புத்தகத்தை இரவல் வாங்கியிருந்தார். அப்போது மேற்படி பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவராக அவர் இருந்தார். இப் புத்தகம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய நாள் கடந்து, வருடங்களும் கடந்து கொண்டிருந்தபோதிலும் அதை ஜேம்ஸ் பிலிப்ஸ…
-
- 4 replies
- 430 views
-
-
நாய் நன்றியுள்ளது என்பார்கள் - ஆனால் அந்த நன்றி அதனை வசனமாகவே மட்டும் கூறும் மனிதர்களிடம் அறவே இல்லாமல் போனது வருத்தற்குரிய விஷயமாகியுள்ளது. பெங்களூருவில் கிருஷ்ணா நகரில் வசிக்கும் பொன்னம்மா என்ற பெண் எட்டு நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்றுள்ளார். அம்மு என்ற நாய் பொன்னம்மா வீட்டின் கதவருகே 8 குட்டிகளை ஈன்றது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்மா அந்த நாய்க்கு தக்க பாடம் கற்பிப்பதாக எண்ணி அம்மு ஈன்ற 8 நாய்க்குட்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் பாறாங்கற்கள் மீது தூக்கி போட்டு கொன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், பொன்னம்மா மீது போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும். இ…
-
- 15 replies
- 892 views
-
-
இறந்தோர் பட்டியலில் மஹிந்தவை இணைத்து பரீட்சை வினாத் தாள் தாயரித்த வடமேல் மாகாண கல்வி திணைக்களம் இறந்தவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடைகளில் உள்ளடக்கி பரீட்சை வினாத் தாள் தயாரிக்கப்பட்ட சம்பவமொன்று வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தில் பதிவாகியுள்ளது. வட மேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வரும் முதலாம் தவணைப் பரீட்சையில் தரம் 10க்கான பரீட்சை வினாத்தாளில் இவ்வாறான ஓர் கேள்வி உள்ளடக்கப்பட்டுள்ளது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நல்ல காரியங்களையும் தனது புண்ணிய புத்தகத்தில் குறித்து தான் மரணிக்கும் தருவாயில் அதனை வாசித்து, தன்னால் நிர்மானிக்கப்பட்ட விஹாரை ஒன்றை பார்த்துக் கொண்டே இறுதி மூச்சைத் த…
-
- 0 replies
- 223 views
-
-
சிறையிலிருந்து விடுதலையான 80 வயதான பெண்ணுடன் காதல் கொண்டு மோசடிக்குள்ளாக வேண்டாமென கனேடிய பொலிஸார் ஆண்களுக்கு எச்சரிக்கை 2016-03-22 16:23:30 கனடாவில் எண்பது வயதான பெண்ணொருவர் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முற்படும் ஆண்களுக்கு கனேடிய பொலிஸாரும் முன்னாள் காதலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப் பெண் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதே இதற்குக் காரணம். மெலிஸா ஆன் ஷெப்பர்ட் எனும் இப் பெண், 1992 ஆம் ஆண்டு தனது இரண்டாவது கணவரான கோர்டன் ஸ்டுவர்ட்டுக்கு போதைமருந்து கொடுத்து அவர்மீது காரை ஏற்றி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்…
-
- 8 replies
- 651 views
- 1 follower
-
-
'மீன்களை பாதுகாப்போம்' : மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்கள் கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர். அதாவது மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே எம்மா தோம்சன் மற்றும் அவரின் கணவர் கிரெக் வைஸ் ஆகியோர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து இவ்வாறு ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/4480
-
- 0 replies
- 402 views
-
-
'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' : ஆனந்த் அம்பானியின் புதிய தோற்றம் ஆனந்த் அம்பானி பெயர் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவரது முகமும், உருவமும் பலரது மனதில் பதிந்து போன ஒன்று. ஆம், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் பருமனான உடல்வாகு கொண்ட மூத்த மகன் தான் இவர். ஐபிஎல் போட்டிகளில் இவர் உட்கார்ந்திருப்பதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வந்தனர். ஆனால் இன்று பலரும் வியக்கும் வண்ணம் தனது உடல் எடையில் 70 கிலோவைக் குறைத்து அழகாக தோற்றமளிக்கின்றார். ஆனந்த் அம்பானியா இவர்? என்று ஆச்சரியப்படும் வகையில் தோற்றத்தில் மாற்றமடைந்துள்ளார். அவரது உடல் மெலிந்த புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங…
-
- 0 replies
- 348 views
-
-
ஆண்களின் உள்ளாடைகளை குறிவைக்கும் பெண் (வீடியோ இணைப்பு) நியூஸிலாந்தில் ஹமில்டன் நகரைச் சேர்ந்த சாராஹ் நாதன் என்ற பெண்ணுக்குச் சொந்தமான பூனை நள்ளிரவு வேளைகளில் அயல் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகள் என்பவற்றை திருடும் விநோத பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெ ளியிட்டுள்ளன. 6 வயதான பிறைட் என்றழைக்கப்படும் இந்தப் பெண் பூனையால் கடந்த இரு மாத காலப் பகுதியில் 11 ஜோடி ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் 50 க்கு மேற்பட்ட ஆண்களின் காலுறைகள் என்பன களவாடப்பட்டுள்ளதாக சாராஹ் தெரிவிக்கிறார். அந்தப் பூனை தன்னால் களவாடப்பட்டவற்றை சாராஹின் வீட்டின் பின்பத்திலிருந்த மறைவான ப…
-
- 1 reply
- 487 views
-
-
கடல் சிங்க குட்டி ஒன்று இறந்தே பிறந்த நிலையில் அந்த குட்டியின் தாய் சோகத்தில் கண்ணீர் விட்டு சத்தமிடும் உணர்வுபூர்வமான காணொளியை வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த காணொளியை பார்க்கும் எவராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். காரணம் பெற்ற குழந்தையை தூக்கி குப்பை தொட்டியில் எறிந்து விடும் இந்த காலக்கட்டத்தில் ஒரு கடல் சிங்கம் தன் குட்டியை இழந்து கண்ணீர் விடும் காட்சி அனைவர் மனதையும் நெகிழச் செய்கின்றது. குறித்த கடல் சிங்கம், தனது குட்டி இறந்த சோகத்தில் கண்ணீர் விடும் காட்சியையும் இந்த காணொளியில் காண முடிகிறது. http://www.tamilwin.com/show-RUmuyDRVSXms0F.html
-
- 0 replies
- 478 views
-
-
கன்றுக்குட்டியுடன் காதல்? கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவர், பெண் கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாகக் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவரின் வீட்டில் வளர்க்கப்படும் பெண் கன்றுக்குட்டிக்கு அருகிலேயே அவர், கடந்த சனிக்கிழமை இவ்வாறு நிர்வாணமாக படுத்திருந்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்றுக்குட்டி, கயிற்றினால் கட்டியிருக்கின்றதா என்பதனை அறிவதற்காக அவ்வதிகாரி, அன்றிரவு 10 மணியளில் டோர்ச்சை அடித்துள்ளதார். இதன்போதே, கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாக கூறப்படும் கொண்டையா, அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். …
-
- 3 replies
- 726 views
-
-
டெல்லியில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவர் தன்னுடைய குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரத்தில் குழந்தையை சப்பாத்தி உருட்டும் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். டெல்லி சாஸ்திரி நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி நரிஸ் ஷேக். இவருக்கு ராகுல் என்ற 9 வயது சிறுவனும், சவுரயா என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை 11 மணியளவில் அவரது மனைவி வீட்டில் இல்லாத போது 2 வயது குழந்தை சவுரயா விடாமல் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்த நரிஸ் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால ஆத்திரமடைந்த நரிஸ் முதலில் குழந்தையை கையால் அடித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாத குழந்தை மேலும் …
-
- 0 replies
- 325 views
-
-
ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி? புலம்பும் நடிகை (வீடியோ) பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். முன்னர், ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார். இந்த மாதிரி பைத்தியத்தை தலைவராக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத…
-
- 7 replies
- 723 views
- 1 follower
-
-
பிரபல இந்திய மொடல் அழகி அர்ஷி கான் அப்ரிடியினால் 3 மாத கர்ப்பமாம் பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர் சஹீட் அப்ரிடி மூலம் தாற் கர்ப்பம் தரித்துள்ளதாக இந்திய நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷிகான் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்ரிடியின் குழந்தையை தான் வயிற்றில் சுமப்பதாகவும் இதனால் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷஹித் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறி அர்ஷி கான் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தான் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் இந்தியாவில் நடை…
-
- 1 reply
- 334 views
-
-
டி20 கிண்ணத்திற்காக நிர்வாணமாகும் நடிகை ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. இதனிடையே ரசிகர்கள் தமது அணிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் அதிர்ச்சி தரும் காணொளி ஒன்றை வௌியிட்டுள்ளார். இம்முறை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுகின்றது. இந்நிலையில் உலகக் கிண்ண டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றால், பாகிஸ்தான் வீரர்கள் முன் தான் நிர்வாணமாக நிற்பதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அணித் தலைவர் அப்ரிடி தன்னிடம் எது கேட்டால…
-
- 22 replies
- 1.5k views
-
-
அதிர்ச்சி சம்பவம் : தேநீர்க்கடை சமோசாவில் ஓணான் விருதுநகரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்காயத்துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோசாவை விற்பனை செய்துள்ளார் கடைக்காரர். இதனை வாங்கி சாப்பிட்டவர் அதிர்ச்சியில் மயங்கியே விழுந்துவிட்டார். விருதுநகரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலர், அங்குள்ள ஒரு கடையில் சாப்பிட்டுள்ளனர். அப்போது ஓணானுடன் இருந்த சமோசாவை சாப்பிட்ட பணியாளர் ஜெயக்கனி என்பவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் ஸ்தலத்துக்கு விரைந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சமோசாக்களை பறிமுதல் செய்து அழித…
-
- 0 replies
- 446 views
-
-
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த எலி இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் கியாஸ் நிறுவன என்ஜினீயரான டோனி சுமித் அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தவேளை அங்கிருந்த ஒரு எலி வளைக்குள் இருந்து ராட்சத எலி ஒன்று வெளியே வந்தது. அதை கண்ட டோனி சுமித் அதை விரட்டி பிடித்துக் கொண்டார். அந்த எலியின் வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளமும் 11½ கிலோ எடையையும் இருந்தது. பூனையை விட அது பெரிதாக இருந்தது. ‘‘எங்கள் வீட்டில் வளர்க்கும் நாயின் அளவுக்கு எலி பெரிதாக இருக்கிறது’’ என்று டோனி சுமித் கூறினார். இதுவரை உலகிலே பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது. எனவே இது கின்னஸ் புத்தகத்திலும் இ…
-
- 1 reply
- 281 views
-
-
உலகில் அதிக வேறுபாடுகள் இல்லாத ஒரே மாதிரியான உருவம் உள்ள இரட்டையர்களில் முதல் இடம் பிடிப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லூசி மற்றும் அண்ணா சினிகியூ ஆகும். இவர்கள் ஏற்கனவே தங்கள் மார்பகத்தை பெரிதாக்குதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமானார்கள் ஸாஈஈஆஈள் இருவரும் ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இவர்கள் தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். காரணம், இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள், இரட்டை சகோதரிகளுக்கு 99.9…
-
- 0 replies
- 251 views
-
-
காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. செகந்திராபாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா, நேற்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. View Photos இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில், பத்த…
-
- 1 reply
- 271 views
-
-
6 அடி நீளமான முதலையை தொடர்ந்தும் வீட்டில் வைத்து வளர்ப்பதற்குப் போராடும் பெண் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது செல்லப்பிராணியாக வளர்த்து வரும் முதலையொன்றை தொடர்ந்தும் தனது வீட்டில் வைத்துக்கொள்வதற்காக போராடி வருகிறார். புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த மேரி தோர்ன் எனும் இப்பெண், இம் முதலையை 11 வருடங்களுக்குமுன் வளர்க்க ஆரம்பித்தார். ரம்போ என அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஏனைய செல்லப்பிராணிகளைப் போல் அந்த முதலையுடனும் மேரி தோர்ன் கொஞ்சிக் குலாவி வந்தார். தற்போது 15 வருட வயதான இந்த முதலை 6 அடி நீளமானதாக வளர்ந்துள்ளது. இதனால், இம் முதலையை மேரி தோர்னின் வீட்டில் வளர்ப்பதற்க…
-
- 6 replies
- 284 views
-
-
வீட்டு வேலைகளில் உதவ மறுத்த கணவரின் பிறப்புறுப்பை வெட்டித் துண்டித்த மனைவி சர்வதேச பெண்கள் தினத்தில் தனக்கு மலர்களை வழங்கி வாழ்த்துத் தெரிவிக்க தவறியதுடன் வீட்டு வேலைகளிலும் தனக்கு உதவ மறுத்தமைக்காக தனது கணவரின் பிறப்புறுப்பை மனைவியொருவர் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் வட கிழக்கு ரோமானியாவில் இடம்பெற்றுள்ளது. வஸ்லுயி பிராந்தியத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்ப வம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மரினெலா பெனீ என்ற 40 வயது மனைவியே இவ்வாறு தனது கணவரை மோசமான முறையில் தாக்கியுள்ளார். இதனால் பிறப்புறுப்பில் படுகாயத்துக்குள்ளான அய…
-
- 8 replies
- 663 views
-