Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம். நெல்லையச் சார்ந்த சங்கர நாராயணன்,அனுபாரதி என்ற புதுமண தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில் திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். . . அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்... தகவல் மற்றும் புகைப்படம். ONEINDIATAMIL

  2. பிரிட்டனின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்பால்டிங் நகரை சேர்ந்த ஒருவர் வழக்கமாக தனது நாய்களுடன் காலையில் நடைபயணம் மேற்கொண்டு வருவது வழக்கம். அவர், சமீபத்தில் அப்பகுதி ஆற்றின் கரை வழியாக நடந்து சென்றபோது நதிக்கரையின் ஓரமாக நதியில் பிரிட்டன் பணமான பவுண்டு நோட்டுகள் நிறைய மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார். உடனே அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள், மிதந்து வந்து கொண்டிருந்த அந்த பவுண்டுகளை எல்லாம் சேகரித்தனர். இவை 60 ஆயிரம் பவுண்டுகள் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நீரில் மிதந்து வந்ததால் அந்த நோட்டுகள் சேதமடைந்துள்ளன. ஆனால், இவை அனைத்தும் வங்கியின் பவுண்டுகள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரிதாக …

  3. கனடா- ரொறொன்ரோ டவுன்ரவுனில் வியாழக்கிழமை 100ற்கும் மேற்பட்ட வென்ரநில் திட்டுக்கள் திருடப்பட்டுள்ளன [fentanyl]. இதில் ஹெரோயினை விட 40 மடங்கு அதிக அளவிலான போதை மருந்து அடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சேர்ச் மற்றும் குயின் வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 6-மணிக்கும் வியாழக்கிழமை காலை 7-மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக Det. Sgt.மைக் றிச்மன்ட் தெரிவித்துள்ளார்.மருந்தகத்தில் இருந்து வேறு பொருட்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. பல்வேறு வலிமைகள் கொண்ட 14ற்கும் 20ற்கும் இடைப்பட்ட வென்ரநில் திட்டுக்கள் திருடப்பட்டுள்ளன.அதிகாரிகள் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.இது ஒருவகை வேகமாக செயல் படக்கூடிய போதை நிரம்பிய வலி நிவ…

  4. மனிதனின் முக அமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி Posted by தமிழன் at 6:28 pm on May 15, 2014 turkiதுருக்கியில் உள்ள ஒரு கிராமத்தில் மனிதனின் முகத்தை போன்ற அமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியின் இச்மிர் நகரத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கால்நடை மருத்துவரால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்றிற்கு தலை மட்டும் மனிதனின் முகத்தை போன்ற அமைப்புடனும், காது மற்றும் உடல் ஆடின் உடல் போலவும் இருந்தது. இந்த ஆட்டுக்குட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மனித முக அமைப்புடன் இருந்த ஆட்டுக்குட்டியின் முகம் எதனால் மாற்றத்துக்கு உள்ளானது என்பதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், …

  5. 100 பேரை கொன்று குவித்த ரவுடி சுட்டுக்கொலை உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான். கூலிப்படையாக செயல்பட்டு சுமார் 100 பேரை கொன்ற ஜோகிந்தர் என்ற ஜக்கு பகல்வன், இன்று காலை ஒருகாரில் சென்றான். டிலா மோர் என்ற இடத்தில் சென்றபோது மற்றொரு காரில் வந்த 3 பேர் வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஜோகிந்தரும் திருப்பி சுட்டார். பின்னர் தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த ஜோகிந்தர் மற்றும் டிரைவர் சந்தீப் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜோகிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெ…

  6. -எம்.எஸ்.முஸப்பிர் புத்தளம் - கொழும்பு வீதியில் தினமும் சில கோவேறு கழுதைகள் நின்றுகொண்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. எவ்வளவு சத்தமிட்டாலும் இந்தக் கோவேறு கழுதைகள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    • 1 reply
    • 474 views
  7. ஒரு மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் அதிகாரி ஆந்திரப் பிரதேசத்தில் பணி புரியும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிறந்த ஒரு மாத கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பியுள்ளார். நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் என அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர். இந்தக் காலகட்டத்தில் அரசு மிகத் தீவிரமாகத் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையுடன் தனது பணிக்குத் திரும்பியுள்ளார். விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மாளா, 2013 இல் ஐஏஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றவர். இவர் தற்போது கைக்குழந்தையுடன் அந்த …

    • 3 replies
    • 474 views
  8. ஒட்டகக்குட்டியை மனைவி முத்தமிட்டதால் விவகாரத்து செய்த கணவர் சவூதி அரே­பி­யாவில் புதி­தாக திரு­மணம் செய்த பெண்­ணொ­ருவர், ஒட்­டகக் குட்­டி­யொன்றை முத்­த­மிட்­டதால் விவா­க­ரத்து செய்­யப்­பட்­டுள்ளார். இப்பெண் தனது மாமி­யா­ருக்கு முன்னால் வைத்து ஒட்­ட­கத்தை முத்­த­மிட்­ட­தா­கவும் அதை­ய­டுத்து அவரை விவாக­ரத்து செய்­யு­மாறு அப்­பெண்ணின் கண­வரை மாமியார் வற்­பு­றுத்­தி­ய­தா­கவும் சவூதி அரே­பிய பத்­தி­ரி­கை­யொன்று தெரி­வித்­துள்­ளது. இதனால், அன்­றைய தினமே அக்­க­ணவர் விவா­க­ரத்து செய்­துள்ளார். இது தொடர்­பாக மேற்­படி கணவர் தெரி­விக்­கையில், “விவாக­ரத்து செய்­யு­மாறு எனது தாயார் வலி­யு­றுத்­தினார். விவா­க­ரத்து செ…

  9. தென்கிழக்கு ஆசியக் கண்டத்தில் இருக்கும் வியட்நாம் சோஷலிச ஆட்சி நடக்கும் நாடுகளுள் ஒன்று. அந்த நாட்டின் க்யோன் தி ப்யோங் தாவ் என்ற பெண்மணிதான் இப்போது உலகின் கவனத்தை வேறு மாதிரி ஈர்த்துள்ளார். அந்நாட்டின் முதல் கோடீஸ்வரி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார் இவர். ஆம், ‘வியட்ஜெட்’ என்ற விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. ஆனால், சமீபத்தில் அவர் செய்த வினோத வியாபார தந்திரத்தால் உலகின் கவனத்தைக் கவர்ந்திருப்பதோடு பலத்த விவாதத்தையும் கிளப்பி உள்ளார். உலகின் முதல் ‘பிகினி கேர்ள்ஸ் ஏர்லைன்ஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விமானப் பணிப்பெண்களுக்கு டூ பீஸ் பிகினி உடைகளை அதிகாரப்பூர்வ ஆடையாக்கி வ…

  10. கோஸ்டிச் சண்டை குழுச் சண்டை என்று சினிமாவில் நிறையப் பார்த்திருக்கிறோம். கதாநாயகன் எதிராளியையும் அவனது அடியாட்களையும் அடித்து துவம்சம் செய்யும் வரை சினிமாவில் போலீஸ் வரவே வராது. ஆனால் நிஜத்தில் அது வேறு விதமாக இருக்கிறது. யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள Lidl என்கிற சூப்பர்மார்க்கெட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன. எதற்காக மோதிக் கொண்டார்கள் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. Baseball bat, கோடாரி என்று பல ஆயுதங்களுடன் மோதல் நடந்திருக்கிறது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். பலருக்கு சில வீரவடுக்கள் மட்டுமே. சினிமாபோல் அல்லாமல் சண்டை நடக்கும் போதே போலீஸ் வந்துவிட சண்டையை அப்படியே விட்டு வி…

  11. தனக்குப் பதி­லாக ரோபோவை பாட­சா­லைக்கு அனுப்பி கல்வி கற்கும் 10 வயது சிறுமி அரி­தாக ஏற்­படும் ஈரல் புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்டு பாட­சாலை செல்ல முடி­யாது மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 10 வயது சிறுமி ஒருவர், ஐபாட் கணினி மூலம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் ரோபோ­வொன்றை பாட­சா­லைக்கு அனுப்பி வகுப்­ப­றையில் நாளாந்த பாடங்­களை கற்கும் சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. அமெ­ரிக்க மேரி­லாண்ட்டைச் சேர்ந்த பைதன் வால்டன் என்ற சிறு­மியே இவ்­வாறு மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்­த­வாறு ரோபோ மூலம் நாளாந்த பாடங்­களைக் கற்று வரு­கிறார்.. பைதன் மருத்­து­வ­ம­னையில் இருந்­த­வாறு பேப்ஸ் என்ற மேற்­படி ரோபோ­வி­லுள்ள ஐபாட் கணி­னியை தன்­னி­ட­மு…

  12. மற்றுமொரு அதிர்ச்சி..! கிளிநொச்சியில் மாணவி மாயம்…? May 30, 201511:11 pm கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். சவம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வியாழக்கிழமை ஊற்றுப்புலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தாயாரின் வேலையிடமான கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது தாயாரைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளில் அங்கிருந்து வீடு செல்வதாக கூறி வெளியேறிய சிறுமி இதுவரை வீடு திர…

    • 1 reply
    • 473 views
  13. கோவையில் 3 பெண்களை திருமணம் செய்த புகாரில் செல்வபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செந்தில் குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். தம்மை ஏமாற்றி மேலும் 2 பெண்களை திருமணம் செய்ததாக முதல் மனைவி கமிஷனரிடம் புகார் கூறியிருந்தார். விசாரணையில் திருமண மோசடி உறுதியானதால் கமிஷனர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். http://tamil.allnews.in/news/state-news/3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%A…

  14. யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக, இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தியோகஸ்தர் வழமை போன்று இன்றைய தினம் (08) காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிள் வந்த நால்வர், மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் …

  15. செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் கன்னியம்மன் நகர் விரிவாக்கம் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் மறு சுழற்சி தொழிற்சாலைகள் உள்ளன.அதில் ஒரு தொழிற்சாலையில் 2 நாய்கள் தலா 5 குட்டி என பத்து குட்டிகள் போட்டன. கடந்த ஜூலை13ந்தேதி ஞாயிற்று கிழமை என்பதால் தொழிற்சாலை விடுமுறை. இதை அடுத்த அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநிலமான பீகாரை சேர்ந்த இளைஞர்கள் மது போதையில் இருந்தனர். அதில் ஒருவர் குட்டி நாய்களை தொட முயன்றபோது, அருகில் இருந்த குட்டிகளின் தாய் இளைஞரை கடித்தது. இந்த சம்பவத்தால் பயந்து போன நாய்கடி வாங்கிய சஞ்சய்(25) மற்றும் அவனது நண்பன் சைலேந்தர்(30) ஆகிய இருவரும் நாய்களை செங்கல்களால் அடிக்க முயன்றனர். ஆனாலும் அந்த நாய்கள் தப்பி ஓடின. இருப்பினும் போதையில் இருந்த ஆ…

  16. ஒலிப்பதிவு கூடத்தை மூடுமாறு கோரி ரகளை செய்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் [saturday, 2014-02-08 09:53:47] இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (6-ம் தேதி) தனது 'ஃபேஸ் புக்' பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது: புதிய இசை ஆல்பம் தயாரிக்க வழக்கம் போல் எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான். நேராக என்னுடைய சவுண்ட் என்ஜினியரிடம் சென்று 'எல்லாவற்றையும் இழுத்து மூடுங்கள்' என்று கம்பீரமாக உத்தரவிட்ட அவனது குரலை கேட…

  17. ஜேர்மனிய ரயிலில் நிர்வாண கோலத்தில் கத்தியுடன் காணப்பட்ட இளைஞன் ஜேர்­ம­னிய ரயி­லொன்றின் கழி­வறைத் தொகு­தியில் இளைஞன் ஒருவன் நிர்­வாண கோலத்தில் கத்­தி­யுடன் காணப்­பட்­டதால் பொலிஸார் அழைக்­கப்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. இந்த இளைஞன் நிர்­வா­ண­மாக கத்­தி­யுடன் திரி­வதை ரயில் அதி­காரி ஒருவர் கண்­ட­தை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுத்தார். டுவெ­செல்டோர்வ் ரயில் நிலை­யத்தில் மேற்­படி ரயில் நின்­ற­போது, பொலிஸார் ரயி­லுக்குள் புகுந்­தனர். அப்­போது மேற்­படி இளைஞன் தனது அந்­த­ரங்கப் பகு­தியை “ஷேவ்” செய்­து­கொண்­டி­ருந்தான் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்…

  18. மன அழுத்­தத்தை கண்­டு­பி­டித்து எச்­ச­ரிக்­கக்­கூ­டிய மார்புக்கச்­சை­யொன்றை அமெ­ரிக்க வாஷிங்டன் நகரை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் பல்­தே­சிய தொழில்நுட்பக் கம்­ப­னி­யான மைக்ரோ சொஃப்டைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் வடி­வ­மைத்­துள்­ளனர். இரு­தய மற்றும் தோல் செயற்­பா­டு­களை கண்­கா­ணிக்கும் அகற்­றக்­கூ­டிய உணர்கரு­வி­களைக் கொண்ட இந்த மார்­புக்­கச்சை பயன்­பாட்­டா­ள­ரது மன நிலையில் ஏற்­படும் மாற்­றங்­களை சுட்டிக் காட்­டு­கி­றது. மன அழுத்­தத்­துடன் தொடர்­பு­டைய அள­வுக்­க­தி­க­மாக உண்ணும் பழக்­கத்தை குணப்படுத்துவதை இலக்­காகக் கொண்டே இந்த அணி­யக்­கூ­டிய தொழில்நுட்பம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. உணர்­க­ரு­விகள் இரு­த­யத்­துக்கு நெருக்­க­மாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­…

  19. புதிய காதலனுடன் முன்னாள் காதலி... கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை பட்டாக்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பதிவு: ஜூன் 20, 2020 13:00 PM பங்காக் தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத் துறவி உம் தீரென்ராம் (57) துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் காதலியை பிரிந்து விட்டார். இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக் காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில் அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார்.ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாய் புதிய காதலன் அங்கிர…

  20. யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அடிக்கடி சைக்கிள்கள் திருடிச் செல்லப்படுகின்றன. எனினும் அவை மீட்கப்பட்டதாகவோ திருடர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை என மக்கள் பெரும் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, யாழ்.கந்தர்மடம் பகுதியில் அண்மையில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றது. இளைஞரொருவர் திருநெல்வேலிச் சந்தியிலிருந்து வந்துக் கொண்டிருந்த சமயம் நபரொருவர் கொச்சைத் தமிழில், தான் அவசரமாக கொழும்புக்கு செல்ல வேண்டுமெனவும், தயவு கூர்ந்து தன்னை யாழ்ப்பாணம் பஸ் நிலையமருகில் கொண்டு சென்று இறக்குமாறும் மன்றாடியுள்ளார். முதலில் மறுத்த குறித்த இளைஞன், பின்னர் பாவம் எனக் கருதி அந்த நபரை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பஸ் நிலையத்தை அடைந்ததும் அப்…

  21. குடிவாடா நாகரத்தினம் நாயுடு, அமெரிக்க ஜனாதிபதியை ஈர்த்த இந்திய விவசாயி!!! ஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்..! ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருக்கும் போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்..! பள்ளிப் பாடமாக நாகரத்தினம் நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் பணமும் ரொக்கமாக அளிக்…

    • 1 reply
    • 472 views
  22. மாரடைப்பு ஏற்பட்டதாக நடித்து, பல உணவகங்களில் பில் கட்டாமல் ஏமாற்றியுள்ளார் 50 வயது நபர் ஒருவர். ஸ்பெயின் நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், பெரிய உணவகங்களை குறிவைத்து, அங்கு சென்று சாப்பிடுவார். உணவருந்திவிட்டு பில் கட்டவேண்டிய சமயம் வரும் போது மாரடைப்பு ஏற்பட்டது போல நெஞ்சில் கைவைத்து கொண்டு சரிந்து விடுவார், அல்லது மயங்கி கீழே விழுந்துவிடுவார். இவரது நிலையை பார்த்து பயந்து, உணவகத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து இவரை அனுப்பி வைப்பார்கள். இந்த கதை சுமார் 20 உணவகங்களில் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு உணவகத்தில் இருந்து அவர் தப்பி ஓட நினைத்த போது இந்த நாடகம், அம்பலமாகியுள்ளது. அவர் சாப்பிட்ட உணவி…

  23. பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவு 250,வது பர்த்டே கொண்டாடி இருக்கிறது. லண்டனில் இது கோலாகல விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமான உணவு சாண்ட்விச். அவசரத்துக்கு கைகொடுப்பது மட்டுமின்றி எளிதில் தயார் செய்யலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் வகை உணவான இதை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் 250,வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் சாண்ட்விச் அசோசியேஷன், பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதுபற்றி அமைப்பின் அதிகாரி மான்டி வில்கின்ஸ் கூறியதாவது: சாண்ட்விச் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிக கொழுப்பு சத்து இல்லாதது, எளிதில் தயாரிக்க கூடியது, பக்கவிளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.