Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சிங்ககுட்டியை “பெரிய சைஸ்” பூனைக்குட்டி என்று கூறி கடத்திய கில்லாடி பெண்மணி. எகாடெரின்பர்க்: ரஷ்யாவில் பூனைக் குட்டி என்று கூறி சிங்கக்குட்டியைக் கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். ரஷ்யாவில் எகாடெரின்பர்க் என்ற இடத்துக்கு ஒரு ரெயில் சென்று கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு கூண்டில் வைத்து 9 மாத சிங்கக்குட்டியை கொண்டு சென்றார். அவர் அதிகாரிகளிடம் அதை பெரிய அளவிலான பூனை என்று பொய் சொல்லி அழைத்துச் சென்றார். ஆனால் ரெயில் பயணத்தின் போது அந்த சிங்கக்குட்டி கூண்டை விட்டு வெளியேறி அங்கும். இங்குமாக ஓடியது. இதனால் மற்ற பயணிகள் பயத்தில் அலறினார்கள். அப்போதுதான் அது பூனை அல்ல சிங்கக்குட்டி என்பது தெரியவந்தது. அதிகாரிகள் வந்து அந்த சிங்கக்குட்டியை கூ…

  2. பொலிஸாாின் கண்ணில் மண்ணைத்தூவிய திருடன் http://youtu.be/SU3LMiVm0wU

    • 4 replies
    • 556 views
  3. தொட்டிலில் இருக்கும் குழந்தைக்கு விளையாட்டு காட்டி மகிழ்ச்சிப்படுத்தும் பூனை https://www.facebook.com/photo.php?v=557265591044591

    • 0 replies
    • 548 views
  4. இரண்டாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை..! ஒரு வயதுடைய குழந்தை ஒன்று ஜன்னல் வழியாக வெளியேற முயற்சிக்கிறது. அதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர் அதைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். நடந்தது என்ன? காண்பதற்கு காணொளியை அழுத்துங்கள். குறிப்பு: மன உறுதி குறைந்தவர்கள் தயவு செய்து காணொளியைப் பார்க்க வேண்டாம். Spoiler சுபம்

  5. தனது செக்ஸ் வீடியோ அம்பலப்படுத்தப்பட்டமை தனது வாழ்வின் மிக மோசமான தருணங்களில் ஒன்றாக இருந்தது என பிரிட்டனின் பிரபல பாடகிகளில் ஒருவரான துலீஷா கொன்டோஸ்டவ்லஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பாலியல் வலைப்பூ (புளொக்) ஒன்றின் எழுத்தாளரான சவ்வாஸ் மோர்கன் என்பவரை தாக்கியதாக குற்றம் சுமத்தி துலீஷா மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையின்போதே துலீஷா மேற்கண்டவாறு நீதிமன்றில் கூறினார். 25 வயதான துலீஷா, பாடகியாவும் பாடலாசிரியையாகவும் விளங்கியவர். பிரித்தானிய தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகும் எக்ஸ்பெக்டர் எனும் பாடல்போட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியவர். அவர், தனது முன்னாள் காதலர் ஜஸ்டின் எட்வர்ட்ஸ் என்பவருடன் தோன்றும் மேற்படி பாலியல் வீடியோ கடந்த வருடம் மார்ச் ம…

  6. உலகில் வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் உலகில் நான்காவது சிறந்த தரத்தை ரொறன்ரோ கொண்டிருக்கின்றது எனத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. ரொறன்ரோ குறிப்பாக மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரம், திடமான தேசிய அரசியல், எளிமை போன்ற முக்கியமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ரொறன்ரோ அதிகளவு பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என Toronto Star செய்தித் தாபனம் வெளியிட்டிருக்கின்றது. போக்குவரத்து நெருக்கடி, மற்றும் Gardiner Expressway வீதியில் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகள், மக்கள் நெரிசல் போன்ற காரணங்களினார் ரொறன்ரோ 3வது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்களின் வாழ்க்கைத்தரம், ஸ்திரமான அரசியில் நிலை என்பனவே ரொறன்ரோ 4வது இடமாகத் தெரிவு செய…

    • 0 replies
    • 651 views
  7. முற்பிறவியில் கோடாரியால் வெட்டிக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த 3 வயது 'சிரிய' குழந்தை Posted by: Jayachitra Updated: [iST] டமாஸ்கஸ்: சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை பிறக்கும் போதே தலையில் சிறிய கோடு போன்ற அடையாளத்துடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் தங்களது முற்பிறவியை நினைவில் கொண்டிருப்பார்கள் என்பது ட்ருஸ் தனி இனக்குழுவின் நம்பிக்கையாம். அதை உண்மையென்று நிரூபிக்கும் விதமாக அந்த சிறுவன் பேசும் வயதை எட்டியவுடன் தனது முற்பிறவி ரகசியங்களை கூறியுள்ளான். அதன்படி, முற்பிறவியில் தன்னுடைய…

  8. இந்திய வெளிவிவகார அமைச்சு யாருக்கு? சுஷ்மா ஸ்வராஜ் வெளிவிவகார அமைச்சு கேட்பதாக செய்தி உலாவருகிறது. ஆனால் அவருக்கு அத்துறையின் அமைச்சுப் பதவி கொடுக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. News: Moments after BJP's parliamentary meet was concluded, Narendra Modi urged Rajnath Singh to accompany him to Varanasi. The BJP President had other work lined up in the day. Nevertheless, he cancelled all plans and decided to go with Modi. More than a symbolic gesture - that of having his party's president by his side while he performs the widely-watched Ganga aarti - Modi and Rajnath decided to do the Varanasi trip together to discuss the look of the Cabinet, say sources…

  9. மர்மமான முறையில் காணாமல் போயுள்ள மலேஷியா எயார்லைன்ஸின் எம்.எச். 370 விமானம் குறித்த தகவல்களை சி.ஐ.ஏ மற்றும் போயிங் நிறுவனங்கள் போன்றன மறைத்து வைத்திருப்பதாக மலேஷியாவின் முன்னாள் பிரதமர் டொக்டர் மஹதிர் முஹம்மது சந்தேகம் வெளியிட்டுள்ளார். மலேஷியா எயார்லைன்ஸின் எம்.எச். 370 விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி 239 பேருடன் புறப்பட்ட வேளையில் இடைநடுவில் மாயமானது. இவ்விமானம் காணாமல்போனது குறித்து பல்வேறுப்பட்ட சர்ச்சையான தகவல்கள் வெளிவந்தபோதிலும் அவுஸ்திரேலியாவிற்கு அண்மையில் இந்து சமுத்திரத்தில் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாக மலேஷியப் பிரதமர் அறிவித்தார். தொடர்ந்து மேற்படி பிரதேசத்தில் அவுஸ்திரேல…

  10. பஸ்களில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம்மெடுத்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உதவி விரிவுரையாளர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரக்ஷா ரணசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரை தெஹிவளை பொலிஸாரே நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மொரட்டுவை-புறக்கோட்டை பஸ்களில் பயணிக்கும் பெண்களின், இடுப்பு, மார்பகங்கள், வயிறு, பிருட்டம் ஆகிய அங்கங்களையே குறித்த நபர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார். குறித்த நபர் அவ்வாறு படம்பிடிக்கும்போதே பயணிகள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவருடைய கையடக்கதொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது அவ்வாறான புகைப்படங்கள் 50 இ…

  11. ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் மீது காதல் வயப்பட்டிருக்கின்ற பெண்கள் குழுவினர் பாப்பரசர் பிரான்சிஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையின் மதபோதகர்களுக்கான பிரம்மச்சரிய சட்டக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று அவர்கள் பாப்பரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தாலி மற்றும் வேறுசில நாடுகளைச் சேர்ந்த 26 பெண்கள் தாம் பாதிரியார்களுடன் காதல் வயப்பட்டவர்கள் என்றும் இன்னும் காதலில் இருப்பவர்கள் என்றும் பாதிரியார்களுடன் உறவினைத் தொடங்க விரும்புபவர்கள் என்றும் கூறியுள்ளனர். இதேமாதிரியான நிலையில் இருக்கின்ற ஏனைய பல பெண்களின் சார்பாக தாம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமது வாழ்க்கையை முழுமையாக வாழ முடிய…

    • 4 replies
    • 646 views
  12. இறுதிப்போரின் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தினர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, இறுதிப்போரில் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில் நேற்று ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியா என்ற ப…

    • 0 replies
    • 1.2k views
  13. 2 வருடங்கள் தேனிலவு கொண்டாடிய ஜோடி : 6 கண்டங்களில் 33 நாடுகளுக்கு பயணம் 2014-05-15 11:21:47 தேனிலவு கொண்டாட்டம் ஒரு வாரம் ஒரு மாதம் நீடிக்கலாம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த திருமணமான ஜோடி ஒன்று சுமார் 2 வருடங்கள் தேனிலவைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மைக் மற்றும் ஏன் ஹொவார்ட் ஆகிய இந்த ஜோடி தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய 6 கண்டங்களில் 33 நாடுகளிலுள்ள 302 இடங்களுக்கு பயணித்துள்ளனர். திருமணமானவுடன் தமது தொழிலை இராஜினாமா செய்துவிட்டு வீட்டையும் வாடகைக்கு கொடுத்துவிட்டு தமது பொருட்களுடன் திட்டமிடப்படாத தேனிலவு பயணத்துக்கு தயாராகியுள்ளனர். 675 நாட்கள் நீடித்த இந்த தேனிலவு கொண்டாட்ட சுற்றுலா பல வாழ்நாள் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபங்களு…

    • 12 replies
    • 1.2k views
  14. ஜேர்மனியில் சாலைகளை சுத்தம் செய்பவர்களுக்கு பீர் வழங்க அறக்கட்டளை நிறுவனம் ஒன்று தீர்மானம் செய்துள்ளது. ஜேர்மனியில் எசன்(Essen) என்ற அறக்கட்டளை நிறுவனத்தால் (Pick up Initiative) என்ற பெயருடன் சாலைகளை சுத்தம் செய்யும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு பீர் மட்டுமின்றி, உணவுடன் மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட உள்ளது. இந்த பணியில் முன்று முதல் ஆறு மணி நேரம் வேலை செய்வதற்கு வேலை இல்லாதவர்களும், ஆதரவற்றவர்களும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது. மேலும் இதில் ஈடுபடுபவர்களுக்கு பீர் மட்டுமின்றி, கை செலவிற்காக ஒரு மணி நேரத்திற்கு 1.25 யூரோ கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனம் கூறுகையில், இவ்வாறு பீர் கொடுத்தால் இ…

  15. மனிதனின் முக அமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி Posted by தமிழன் at 6:28 pm on May 15, 2014 turkiதுருக்கியில் உள்ள ஒரு கிராமத்தில் மனிதனின் முகத்தை போன்ற அமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியின் இச்மிர் நகரத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கால்நடை மருத்துவரால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்றிற்கு தலை மட்டும் மனிதனின் முகத்தை போன்ற அமைப்புடனும், காது மற்றும் உடல் ஆடின் உடல் போலவும் இருந்தது. இந்த ஆட்டுக்குட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மனித முக அமைப்புடன் இருந்த ஆட்டுக்குட்டியின் முகம் எதனால் மாற்றத்துக்கு உள்ளானது என்பதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், …

  16. இது எக்ஸிட் போலா அல்லது புல்ஷிட் போலா? முடிவுகள் நாளை மாலை தெரிந்துவிடும். Source: Dinamalar.

  17. இசைக்கருவிகளுக்கு பதில் மரக்கறிகளால் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் இசைக்குழு மரக்கறிகளை சமைப்பதற்கு மட்டுமன்றி இசைப்பதற்கு பயன்படுத்தி பிரபல்யமாக முடியும் என அவுஸ்திரேலிய இசைக்குழுவொன்று நிரூபித்துள்ளது. மரக்கறி இசைக்ழுழு எனப் பிரபல்யம்பெற்றுள்ள த வெஜிடபிள் ஓர்செஸ்ட்ரா இசைக்குழு தமது தனித்துவமான நிகழ்ச்சியின் மூலம் உலகம் பூராகவும் ரசிகர்களைக்கொண்டுள்ளனர். இக்குழு இசை நிகழ்ச்சி நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய மரக்கறிகளை கொள்வனது செய்து அதனை இசைக்கருவிகளாக தயார் செய்கின்றனர். இதற்காக 125 அவுஸ்திரேலிய டொலர்கள் (சுமார் 15 ஆயிரம் ரூபா) வரையில் செலவிடுகின்றனர். பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் மரக்கறிகளை இவர்கள் தமக்கு ஏற்றவகையில் ;இசைக்கருவிகளாக மாற்றிக்கொள்கின்ற…

    • 3 replies
    • 554 views
  18. மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது : - டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு! [Tuesday, 2014-05-13 15:01:13] திருமணம் ஆன பிறகு மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கோச்சிங் சென்டர் ஒன்றில் பணியாற்றினார். அப்போது அங்கு பணி செய்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த இளைஞர் மீது காஜியாபாத் காவல் நிலையத்தில் மீரா பலாத்கார புகார் கூறினார். தனக்கு மயக்க மருந்து கொடுத்து மனம் தெளிவில்லாத நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து …

  19. மும்பை: மும்பையில் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் 27 வயது நடிகையை பலாத்காரம் செய்துவிட்டு பணத்துடன் தப்பி ஓடிய சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் வீடுகள் கட்டி குலுக்கல் முறையில் நபர்களை தேர்வு செய்து வழங்கி வருகிறது. இந்த குலுக்கலில் வீடு ஒன்றை வெல்ல மும்பை இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் 27 வயதுடைய நடிகை ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து, இஸ்மாயில் ஆசிம் கான் என்ற சாமியாரை அந்த நடிகை அணுகியுள்ளார். சாமியார் இஸ்மாயில், பூஜை செய்கிறேன் என்று நடிகையின் வீட்டுக்கு சென்று காணிக்கையாக லட்சக்கணக்கில் கேட்டுள்ளார். வீடு கிடைக்கும் என்ற ஆசையில் நடிகையும் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுகொண்ட அந்த சாமியார், நடி…

  20. ஐரோப்பாவின் யூரோவிஷன் பாடல் போட்டியில் முதலிடம் பெற்ற 'தாடி வைத்த லேடி' இவ்வருடத்துக்கான ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான யூரோவிஷன் பாடல் போட்டியில் ஆஸ்திரியா முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரியாவின் சார்பில் இப்போட்டியில் பங்குபற்றிய கொன்சிதா வேர்ஸ்ட் பாடிய பாடலுக்கு முதலிடம் கிடைத்தது. ஆனால், கொன்சிதா வேர்ஸ்ட் பற்றி அதிகம் அறியாதவர்களிடையே ஆனா பெண்ணா என்ற விவாதங்கள் மூண்டுள்ளன. 1956 ஆம் ஆண்;டு முதல் யூரோவிஷன் பாடல்போட்டி நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன. இப்போட்டிக்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் நேரடியாக மேடையில் பாடுவதற்கான பாடலொன்று சமர்ப்பிக்கப்படும். உலகில் மிக நீண்டகாலமாக ஒளிபரப்பாகும்…

  21. இலங்கையின் முதலாவது மெழுகுச் சிலைக கண்காட்சி கொழும்பு 7 இலுள்ள தேசிய கலாபவனத்தில் தற்போது நடைபெறுகிறது. இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்களான, மாலினி பொன்சேகா, டபிள்யூ.டி. அமரதேவ, ரவீந்திர ரந்தெனிய, விக்டர் ரத்நயாக்க, சுனில் எதிரிசிங்க, மஹேந்திர பெரேரா, மற்றும் புகழ்பெற்ற பேராசிரியர்களான கார்லோ பொன்சேகா, சுனில் ஆரியரத்ன ஆகியோருடன் இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீவிக்கிர மராஜசிங்கன், கெப்பித்திபொல நிலமே, எஹெலபொல குமாரிஹாமி, சே குவேரா, புரூஸ் லீ உட்பட பலரின் சிலைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் முதலாவது ஒரேயொரு மெழுகு சிலை நூதனசாலையான ஆத்மா மெழுகு சிலை நூதனசாலையின் (Atma Wax Museum) சிற்பக் கலைஞர்களான அத்துல ஹேரத், அவரின் புதல்வர் மஹிம ஹேரத் ஆகியோர் …

    • 0 replies
    • 545 views
  22. 62 வயது இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆனார்! 21 வயது காதல் மனைவி லண்டனுக்கு 'பேக்கப்"? இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக இம்ரான்கான் இருக்கிறார். இக்கட்சி கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. பாகிஸ்தானின் மிகவும் பணக்காரரும், நவாஸ் ஷெரிப்பின் நம்பிக்கைகுரியவரான மியான் மான்சாவின் உறவினர் மகளுடன் இம்ரான் கானுக்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 62 வயது இம்ரான்கான் மீண்டும் தந்தை ஆனார்! 21 வயது காதல் மனைவி லண்டனுக்கு 'பேக்கப் அந்த 21 வயது இளம்பெண் தற்போது கர்ப்பிணியாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் ந…

    • 3 replies
    • 915 views
  23. வாஷிங்டன்: மயாமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கலாம் என சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி, 239 பேருடன் மலேசியா நகர் கோலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் சிஎனென், ஓ.ஆர்.சி. நிறுவனங்கள் மலேசிய விமானம் குறித்து, பொதுமக்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. இந்த சர்வேயில் கலந்து கொண்ட பலர் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என கூறியுள்ளனர். விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என சிலரும், பைலட்டுகள் கடத்தியிருக்கலாம் என இன்னும் சிலரும் கூறியுள்ளார். மேலும், இந்த ச…

  24. (Hafeez) ஆண் புடையன் ஒன்றை அடித்துக் கொன்றவரை பெண் புடையன் ஒன்று விரட்டி விரட்டி தீண்டியதில்அந் நபர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று மாத்தளை - உக்குவலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உக்குவலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார். அவ்விடத்திற்கு விஜயம் செய்த மாத்தளை திடீர் மரண விசாரணை அதிகாரி எம். ஜி. ஜயதிலக மரண விசாரணைகளை மேற்கொண்டார். குறித்த மரண விசாரணையில்,மேற்படி நபர் மதுபோதையில்இருந்ததாகவும் பாதை ஓரமாக இருந்த ஒருசோடி புடையன் பாம்பை வேறு படுத்திப் பிரித்து தடி ஒன்றினால் ஆண் புடையன் பாம்பை அடித்துக் கொன்றதையடுத்து ஆத்திரமுற்ற பெண் புடையன் குறித்த நபரை விரட்டி விரட்டி தீண்டியதாகவும் அதனால் விசம் ஏறி அவர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் தெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.