Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். அமெரிக்காவில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது. உறையும் குளிருக்கு நடுவில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் நகரம் வரையில் விமானத்தின் சக்கரம் உள்ள பெட்டியில் அமர்ந்து 16 வயது சிறுவன் பயணித்துள்ளான். குளிர், அதிகப்படியான காற்றழுத்தம் போன்றவற்றால் சுவாசிக்க ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் அச்சிறுவன் மயக்கமடைந்துள்ளான். ஆனால் விமானம் தரையிறங்கியபோது அதிருஷ்டவசமாக சிறுவனுக்கு நினைவு திரும்பியது. ஹவாய் விமான நிலையத்தில் அச்சிறுவனை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், மத்திய புலனாய்வு துறையான எப்…

  2. அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் அறுந்த காதை ஒட்டவைப்பதற்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அட்டைபூச்சிகளும் பங்கேற்றன. அமெரிக்காவில் ரோத்தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் காது நாய்கடித்ததால் முற்றிலும் அறுந்தது. எனவே, அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிளாஸ்டிக்சர்ஜரி முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவைசிகிச்சை செய்தபின்னர், தையல் போட்ட பகுதிக்கு ரத்தஓட்டம் செல்லவில்லை. எனவே, அங்கு மெல்லிய ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது. எனினும் ரத்தஓட்டத்தை சீர்செய்ய முடியவில்லை. அதை சீரமைக்க ஆலோசித்த மருத்துவர்கள் ரத்தம் உறிஞ்சும் அட்டைபூச்சிகளை கொண்டுவந்து அப்பகுதியில் உலவவிட்டனர். அவை ரத்தத்தை உறிஞ்சியபோது, தையல் போட…

  3. ஆல்கஹால் பவுடர்: இனி குடிக்க வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம் Suresh திங்கள், 21 ஏப்ரல் 2014 (17:18 IST) Share on facebookShare on twitter More Sharing Services திரவமாக மட்டுமன்றி, உணவிலும் கலந்து சாப்பிடக்கூடிய ஆல்கஹால் பவுடர் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட உள்ளது. மதுபானங்கள் தண்ணீரில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இதுவரை அவை திரவ நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இனி அது பவுடர் ஆகவும் கிடைக்கவுள்ளது. ‘பால்கஹால்‘ என்று பெயரிப்பட்டுள்ள இந்த ஆல்கஹாலை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டுமுதல் விற்பனையைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஆல்கஹால் பவுடர் ரூ.600, ரூ.900, ரூ.1500 என்ற விலைகளில் விற்பனை …

    • 2 replies
    • 638 views
  4. http://life.dailymirror.lk/article/8134/festival

  5. ரஷிய ஆண்களுடன் உறவு கிடையாது: உக்ரைன் பெண்கள் அதிரடி போராட்டம் [Friday, 2014-04-18 20:26:38] உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதிலிருந்து, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே கடுமையான பகை மூண்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் நாட்டு பெண்களில் ஒரு பகுதியினர், தங்கள் தேசபக்தியை வேறுவகையில் காண்பித்துள்ளனர். அதாவது, தங்கள் பகுதியை ஆக்கிரமித்த ரஷியாவைச் சேர்ந்த ஆண்களுடன் ‘உறவு’ வைத்துக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர். இந்த உறவு மறுப்பு போராட்டத்தை அவர்கள் வெற்றிகரமாக தொடங்கி உள்ளனர். ‘ரஷியாவுக்கு கொடுக்காதே’ என்று எழுதப்பட்ட டி–சர்ட்டுகளை அணிந்து கொண்டு இந்த போராட்டத்தை நடத்தி வருகிற…

    • 7 replies
    • 809 views
  6. Started by Athavan CH,

    -ரொமேஸ் மதுசங்க மனநிலை, வெப்பம், ஒளி, பாதுகாப்பு மற்றும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்ல விலங்கினமே பச்சோந்தியாகும். இது ஊர்வன வகையைச் சார்ந்ததாகும். பச்சோந்திகளுள் சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை. இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு காகம், கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். இந்த பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்…

    • 0 replies
    • 535 views
  7. தனது ஆசைக்கு இணங்க மறுத்த வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ரோமானிய அழகிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பாவின் ரோமானிய டுல்கியா நகரை சேர்ந்த பெண் லுமினியா பெரிஜோக்(வயது 31). ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் ஆண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இவரது பார்வையில் டாக்சி டிரைவரான நிக்கோலே ஸ்டான் என்பவர் அகப்பட்டார். நிக்கோலேவுடன் உல்லாசம் அனுபவிக்க நினைத்த லுமினியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஏமாற்றம் அடைந்த லுமினியா, டாக்சி டிரைவரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். உடலின் 6 இடங்களில் கத்திக் குத்து காயங்களுடன் உயிர் பிழைத்த நிக்கோலே, இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் …

    • 9 replies
    • 4.7k views
  8. இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அப்பியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இந்த நாய் 3 குட்டிகள் ஈன்றது. இதில் 2 குட்டிகள் பூனை போன்று இருந்தன. ஒரு குட்டி நாய் போன்று காணப்பட்டது. இவற்றில் 2 குட்டிகள் இறந்த விட்டன. பூனை போன்ற தோற்றத்தில் உள்ள ஆண் குட்டி மட்டுமே உயிருடன் இருந்தது. இதன் கால்கள் நாய் போலவும் உடம்பு மற்றும் வால் பகுதி பூனைக்குட்டி போன்றும் இருக்கிறது. இந்த பூனைக்குட்டி மியாவ், மியாவ் என்று கத்துகிறது. நாயும் குட்டியை கௌவிச் தூக்கி சென்று பால் கொடுக்கிறது. பொதுவாக நாய்கள் பூனையை பார்த்தால் துரத்தும் தன்மை கொண்டன. ஆனால் இந்த நாய், தான் ஈன்ற குட்டியானது பூனை போல் இருந்தாலும் பாசத்துடன் பால் கொடுக்கிறத…

    • 10 replies
    • 4.9k views
  9. “எட்டே கால் இலட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அது” - ஔவையார் – (எட்டு இலக்கத்தை ‘அ’ எனவும் கால் என்ற கணக்கை ‘வ’ என்றும் தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்படும். அதன் படி எட்டே கால் இலட்சணம் என்றால் எமனுடைய வாகனமான எருமைக்கடாவாகும். பெரியம்மை வாகனம் என்பது மிகவம் அவலட்சணமான யாழி வாகனமாகும். கூரையில்லா வீடு என்பது மூளையில்லாத மனிதனைக் குறிக்கிறது. குரலாமன் தூதுவன் என்றால் இராமாயணத்தில் இராம தூதனாக விளங்கிய அனுமான் என்ற குரங்கைச் சுட்டிக்காட்டுகிறது. இதைத் தமிழில் வசைக் கவி எனக் கூறுவர். இது காளமேகம் செய்தியின் அறிமுகம்) காளமேகம் செய்திகள்: தயாரித்து வழங்குபவர் ‘பொய்யா மொழி’ இனி தலைப்புச் செய்திகள்! …

  10. ஈரானில் தூக்குக் கயிறு மாட்டிய பிறகு தனது மகனைக் கொலை செய்த குற்றவாளியையே காப்பாற்றிய தாயின் செயல் பெரும் நெகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெருச்சண்டை ஒன்றில் 7 ஆண்டுகளுக்கு முன்னால் அப்துல்லா என்பவரை பலால் என்ற இந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று தண்டனை நிறைவேற்றும் நாள் வந்தது. அப்போது, தூக்குக் கயிறை பலால் கயிற்றில் சிறை அதிகாரிகள் மாட்டினர். சில நிமிடங்களில் தண்டனை நிறைவேற இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட அப்துல்லாவின் தாய் ஓடி வந்து, பலாலின் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விட்டு, அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார். இதனை பார்த்த பலாலின் தாயார், அப்துல்லாவின் தாயாரை கட்டி அணைத்த…

  11. சிங்கள தமிழ் புதுவருடகாலத்தில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட புதுவருட விளையாட்டு விழா, வென்னப்புவ வைக்கால் பிரதேசத்திலுள்ள உல்லாசப் பயண ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. முழு நாள் நிகழ்வாக இடம்பெற்ற இந்த விளையாட்டு விழாவில் கயிறு இழுத்தல், தலையணை அடித்தல், கிடுகு இழைத்தல் உட்பட பல்வேறு போட்டிகள் இந்த உல்லாசப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அனைத்துப் போட்டிகளிலும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரண்வெளி உல்லாசப் பயணிகள் ஹோட்டல் நிர்வாகத்தினரால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. http://metronews.lk/article.php?ca…

    • 0 replies
    • 514 views
  12. 12 வயது சிறுமியொருவர் சிசுவொன்றை பிரசவித்த சம்பவமொன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த சிசுவின் தந்தை, 13 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த பிரசவமானது, அந்நாட்டு மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த 12 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை 7 எல்.பீ அதாவது 3.175 கிலோ கிராமை கொண்டதாக இருக்கின்றதாம். இந்த குழந்தையின் பெற்றோரே பிரித்தானியாவின் இளம் பெற்றோர் என அந்நாடு அறிவித்துள்ளது. 12 வருடமும் 3 மாதமும் உடைய சிறுமியும், குறித்த சிறுமியின் வீட்டின் அயல் வீட்டில் இருக்கும் 13 வயதுடைய சிறுவனும் சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், குறித்த சிறுமி 11 வயதாக இருக்கும் போதே அவர் கர்ப்பம் தரி…

  13. இலங்கை கிளிநொச்சியில் ஈழத்தமிழனும், சிங்களவனும் சேர்ந்து சிங்கள புத்தாண்டு விழா கொண்டாடிட்டு இருக்காங்க மகிழ்ச்சியாக!! உண்மையாகவே இப்படி நடந்ததா?

  14. பிரித்தானியாவின் லண்டன் நகரில் மர்மப் பெண்ணொருவர் நாய் போன்று பட்டி அணிவித்து, ஆணொருவருடன் உலா வந்த சம்பவமொன்று கடந்த வாரம் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்த இணையத்தளங்களில் மாறுபட்ட தகவல்கள் உலாவந்தது. ஆனால் தற்போது அதன் உண்மை நிலைவரம் வெளியாகியுள்ளது. மக்களின் வெளிப்பாடுகளை அறியும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடிப்புத் திட்டம் இதுவென குறித்த மர்மப் பெண் தெரிவித்துள்ளார். இந்த மர்மப் பெண்ணின் பெயர் ஈடன் அவிடல் அலெக்ஸாண்டர். இவர் 20 வருடங்களாக மேடை நாடக நடிகையாக உள்ளார். இது தொடர்பில் அலெக்ஸாண்டர் கூறுகையில், மக்கள் வெளிப்பாடுகளை படமாக்கி அவற்றில் சிறந்தவற்றை 3 நிமிடங்களாக வெட்டப்பட்டுள்ளது. ஒருவர் எனது நாயை கெமராவுக்கு சிரிக்க சொல்லுமாறு கேட்டா…

  15. வயாகரா ஐஸ் கிரீம் தயாரிக்கும் இங்கிலாந்து நிறுவனம் - பணக்கார வாடிக்கையாளருக்கு மட்டுமே விற்குமாம்! [Thursday, 2014-04-17 10:50:06] ‘ஐஸ் கிரீம்’ என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நெஞ்சங்களில் ஒருவித ஆனந்த கிளுகிளுப்பு தோன்றுவது இயற்கையானது. அந்த ஐஸ் கிரீமில் ஆண்மை குறைப்பாட்டை சமன் செய்யும் ‘வயாகரா’வும் சேர்ந்தால்… இந்த நினைப்பே குடுகுடு கிழவரையும் கிளுகிளுப்புகுள்ளாக்கி விடுமல்லவா? இவ்வகையிலான இன்ப கிளுகிளுப்புக்கு ஆசைப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த ஒரு செல்வந்தர், அந்நாட்டின் பிரபல உணவு நிபுணரான சார்லி ஹார்ரி பிரான்சிஸ் என்பவரை தொடர்பு கொண்டார். ’லிக் மி- ஐ ஆம் டெலிஷியஸ்’ என்ற பெயரில் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான இருட்டில் கூட…

    • 5 replies
    • 433 views
  16. -எஸ்.ரவீந்திரன் தேங்காய்க்கு 3 கண்கள்தான். ஆனால் வழமைக்கு மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள தென்னை மரம் ஒன்றிலிருந்து இவ்வாறான தேங்காய்கள் பறிக்கப்பட்டன. இரு தேங்காய்களில் ஒன்றில் 2 கண்களும், மற்றையதில் 4 கண்களும் காணப்பட்டன. உரிமையாளர் இரு தேங்காய்களையும் கோயிலுக்கு காணிக்கையாக்கியுள்ளார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/106834-2014-04-15-05-01-57.html

    • 7 replies
    • 1.7k views
  17. 100க்கும் மேற்பட்ட பிணங்களைத் திருடி நர மாமிசத்தை சமைத்து சாப்பிட்ட பாகிஸ்தான் நபர். லாகூர்: இதுவரை நூறுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் சாப்பிட்டதாக பாகிஸ்தான் மனிதர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35). இவர் ஏற்கவவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப் பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச…

  18. வாட்டிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் சமாதானப் புறாக்களை பாதுகாக்க பயிற்சி பெற்ற பருந்தை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக தேவாலய நிர்வாகம் முடுவு செய்துள்ளது. வாடிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் புறாக்கள் உலக சமாதானத்திற்கு அறிகுறியாக, ஆண்டுதோறும் சிலமுறை பாரம்பரியமாக வெளியே பறக்கவிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் மேற்புறம் உள்ள ஜன்னலின் வழியே இரண்டு குழந்தைகள் இந்தப் புறாக்களைப் பறக்க விட்டனர். அப்போது அங்கு பறந்து வந்த காகமும், ஒரு கடல்பறவையும் இரண்டு புறாக்களை கொத்திச் சென்றுவிட்டன. இத்தகைய தாக்குதல்களை தவிர்க்கும் விதமாக, இந்தப் புறாக்களை காப்பாற்ற பயிற்சி பெற்ற பருந்து ஒன்றினை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப…

  19. இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த நபரொருவர் டுபாயில் நடைபெற்ற விரைவாக தோசை உண்ணும் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். இப்போட்டியில் பெண்ணொருவர் உட்பட 25 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் 1.25 மீற்றர் நீளமான தோசை ஏனையோரை விட விரைவாக உண்டு இந்தியாவைச் சேர்ந்த ஷாஜஹான் என்பவர் வெற்றிபெற்றார். இவர் இந்தியாவின் சமயல்காரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். போட்டியில் பங்குபற்றிவர்களில் ஷாஜஹான் உட்பட 5 பேர் மாத்திரமே விரைவாக உண்ணுவதில் போட்டியாக இருந்துள்ளனர். ஏனையோர் தோசையை ஆறுதலாக உண்டு மகிழந்தனர். தோசை பிளாஷாவில் நடைபெற்ற இப்போட்டியை சுப்பர் எப்.எம். என்ற மலையாள வானொலி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. போட்டியின் நடுவே நீர் அருந்த அனுமதிக்கப்பட்டமையினால் யாருக்கும…

  20. ஓவியர் ஒருவர் தனது உருவத்தை பிறரின் கண்ணுக்கு புலப்படாதவாறு தத்ரூபமாக வரைந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட சீன கலைஞ்சரான லூ பொலின் என்பவரே இவ்வாறு கண்ணுக்கு புலப்படாதவாறு தன்னை பல்வேறு தளங்களில் வரைந்துள்ளார். பல்பொருள் அங்காடி, புத்தகச்சாலை, புகையிரத நிலையம் போன்ற பல்வேறுபட்ட இடங்களில் இவர் புலக்காட்சிக்க தெரியாமல் நிற்கிறார். இவ் ஓவியங்களை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே நபர் ஒருவர் நிற்கும் காட்சி எமக்கு புலப்படும். ஒரு மனிதனால் எவ்வாறெல்லாம் தன்னை மறைத்து வைக்க முடியும் என்பதனை இவரது ஓவியங்கள் வலியுறுத்துகின்றன. http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/106498-2014-04-10-05-41-13.html

  21. இந்தப் படத்தை... இணையத்தில் பார்த்த போது, அதிர்ச்சி ஏற்பட்டது. இப் பெண்ணின் மார்பகம், மார்பில் வளராமல்... வயிற்றில் வளர்ந்துள்ளது. இதனால்... இவர் எத்தனை, சிரமத்துக்கு உள்ளாகி இருப்பார் என்று உணரக் கூடியதாக உள்ளது. எனது சந்தேகம், என்னவென்றால்... இப்படம் உண்மையானதா? அல்லது படத்துக்காக ஏதாவது "கோல்மால்" செய்துள்ளார்களா... என்பதனை, உங்கள் முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.

  22. 3மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது. லாபாஸ் நகரில் எல் அல்டோ பிரதேசத்தைச் சேர்ந்த அக்சியோ எஸ்ரேடா, (37வயது) என்ற தந்தையே தனது 3 மாத மகனான கார்லோவுக்கு பாலுடன் மதுபானத்தை கலந்து வழங்கி அவனது மரணத்துக்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சம்பவ தினம் அகாசியோ மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவேளை குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அவர் கடும் மன அழுத்தத்துக்குள்ளானார். இந்நிலையில் குழந்தையின் அழுகையை நிறுத்தும் முகமாக அவர் குழந்தையின் பால்புட்டியில் மதுபானத்தை கலந்து வழங்கியுள்ளார். சம்பவம் இடம்பெற்றபோது குழந்…

  23. பாரிஸ்: கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் செல்லமாக வளர்த்த டாங்கோ என்றழைக்கப்படும் லேப்ரடார் இன நாய், கொலையை பார்த்துள்ளது. இதனால், கொலை வழக்கில் டாங்கோவை சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து கொலையாளியை அடையாளம் காட்டுவதற்காக நாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சம்பவத்தன்று மர்ம ஆசாமி பேட்டால் அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அதனால் சந்தேகப்படும் நபரை பேட்டுடன் நாய்க்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினால், அது குரைத்து அடையாளம் க…

    • 1 reply
    • 633 views
  24. பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்- இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப்போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த போட்டியை கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபர்ட்டி பிளாஸா கட்டடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாரியளவான திரையில் பலரும் கண்டுகளித்துகொண்டிருந்துள்ளனர். அங்கு போதையிலிருந்த இளைஞன் ஒருவர், இலங்கை அணி வெற்றிப்பெற்றதையடுத்து ஆடைகளை களைந்து உடலில் ஒருதுண்டு துணியில்லாமல் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத…

  25. 15 வயது மாணவியை காதல் விவகாரத்தில் கொலை செய்த இளைஞரை மக்கள் அடித்தே கொலை செய்த விவகாரம் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் சங்கீதா (15). நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்௧ படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் இளையான் என்பவது மகன் சின்ராஜ் (19). கட்டிட கூலி தொழிலாளியாவார். கடந்த ஆண்டு நவம்பரில் சங்கீதாவின் செல்போனுக்கு 50ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துவிடுமாறு சின்ராஜிடம் செல் நம்பரை கொடுத்துள்ளார். இதன் மூலம் அதன்பிறகு சங்கீதாவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய அவர் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் தந்தை கந்தசா…

    • 3 replies
    • 832 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.