Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 158 வித்தியாசமான நாடுகளிற்கிடையில் நடாத்தப்பட்ட புதிய அறிக்கை ஒன்றின் பிரகாரம் உலகத்தில் மிக மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் கனடா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் வலயத்தின் 2015-உலக மகிழ்ச்சி அறிக்கை இதனை அறிவித்துள்ளது. பொருளாதாரம், ஆரோக்கியம், உளவியல், தேசிய புள்ளி விபரங்கள் மற்றும் பொது கொள்கை ஆகிய துறைகளை இந்த ஆய்வு உள்ளடக்கி இருந்தது. இந்த கணிப்பின் பிரகாரம் தெரிவு செய்யப்ட்ட ஐந்து மிக மகிழ்ச்சியான நாடுகளாவன: 1-சுவிற்சலாந்து{ 7.587} 2- ஐஸ்லாந்து {7.561} 3-டென்மார்க {7.527} 4-நோர்வே {7.522} 5-கனடா {7.427} இந்த வருடம் யு.எஸ். 15-வது இடத்தை பெற்று அவுஸ்ரேலியாவிற்கு பின்னால் உள்ளது. யு.கே 21-வது இடத்தில் வந்துள்ளது. 2013-ல்…

    • 0 replies
    • 411 views
  2. யாழில்... வீடு புகுந்து, பெட்ரோல் திருட்டு! யாழில் வீடு புகுந்த திருட்டுக்கும்பல் ஒன்று பெட்ரோல் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டார் நேற்று காலை வீட்டில் இருந்த துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போதே , மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டு உள்ளமையையும் கண்டறிந்தனர். அதனை அடுத்து வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் நுழைந்த திருடன் துவிச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலையும் தி…

  3. திரைப்படங்களில் வில்லன்கள் ஐபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை நைப்ஸ் அவுட் ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரியான் ஜான்சன், திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான தகவல்களை வெளியிட்டார். மர்ம திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார். மேலும், செல்போனை மையப்படுத்தி தற்போது மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் தன்னை கடிந்துக்கொள்வார்கள் என நக…

    • 0 replies
    • 410 views
  4. யுஎஸ்- ரெக்சசில் ஜோன் மில்க்கோவிஷ் என்பவர் 1968-ல் தனது தோட்டத்தை மீளமைப்பு செய்ய ஆரம்பித்த போது தனது வீட்டை 50,000 பியர் குவளைகளை கொண்டு அமைத்தார். 10-வருடங்களிற்கு முன்னர் ஒரு இலாப நோக்கற்ற உள் ஊர் அமைப்பொன்று இதனை புனரமைத்தது. இந்த வீடு தற்சமயம் பொதுமக்களிற்காக திறந்து வைக்கப்பட்டு ஹியுஸ்ரனின் மிகவும் வழக்கத்திற்கு மாறான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக வந்துள்ளது. ஹியுஸ்ரனில் ஒரு சாதாரண வீதியில் அமைந்துள்ள இந்த வீடு ஒரு அசாதாரண வீடாக எழுந்து நிற்கின்றது. வீட்டின் சுவர்களிற்கு 18-மாதங்களிற்கும் மேலாக பியர் குவளைகளை வெட்டியதாக திரு.மில்க்கோவிஷ் தெரிவித்தார். தான் தன் மனைவி மேரி மற்றும் அவர்களது நண்பர்கள் குடித்த பியர் கான்களையே பாவித்ததாகவும் கூறினார். …

    • 1 reply
    • 410 views
  5. எந்தவொரு நாடும் சர்வதேசச் சட்டங்களை உள்வாங்கியே உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுகின்றன. சர்வதேச சட்ட விதிமுறைகளை புறம் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சட்டங்களைச் சர்வாதிகார நாடுகளே இயற்றுகின்றன. சீனா சர்வாதிகார நாடாக இருந்தாலும் பல சர்வதேசச் சட்ட வரைமுறைகளைப் பின்பற்றியே நடக்கிறது. சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேண வேண்டுமாயின் பெரும்பாலான சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்ட சர்வதேசச் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் சர்வதேசச் சட்ட விதிமுறைகளை மீறியே செயற்பட்டார்கள் சிறிலங்கா அரசுகள். சிறிலங்காவில் வாழும் பலருக்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய அறிவு இல்லை. சிறிலங்கா அரசு எதனை செய்கிறதோ அதுவே சட்டம் என்கிற மனநிலையிலேயே பெரும்பான்மையான சிங்கள மக்கள் இருக்க…

  6. சிறுவனின் வாயில் முளைத்திருந்த 526 பற்கள் ஒரு மனிதனுக்கு 'அதிகபட்சம் 32 பற்கள் வரை காணப்படலாம்' என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், இந்தியாவை சேர்ந்த 'ஏழு வயது சிறுவனுக்கு 500 பற்களுக்கும் அதிகமான பற்கள் காணப்பட்டதாக கூறி மலைக்க வைத்துள்ளார்கள் மருத்துவர்கள். இந்தியாவில் சிறுவன் ஒருவன் மூன்று வயதில் இருந்து வாயின் கீழ் தாடையில் வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது அருகில் இருக்கும் அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று அப்போது கண்டுபிடிக்க இயலவில்லை. தற்போது அவருக்கு வயது 7 ஆகும். வீக்கம் அதிகரித்து, வலியால் துடித்த அவரை சென்னையில் இருக்கும் பிரபல பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருடைய …

  7. பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளி ஒருவருக்கு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான சுறா மீன் ஒன்று யாழ்.குடாக்கடலில் அகப்பட்டுள்ளது. பாலசிங்கம் சதீஸ் என்பவரது வலையிலேயே இச் சுறா மீன் அகப்பட்டது. இவர்தலைமுனை கெந்தை கடற்பகுதியில் சிறகுவலை தொழில் செய்து வருபவர். நேற்றைய தினம் இவர் தனது தொழிலிடத்திற்குச் சென்று பார்த்த போது, இவரது வலையில் மிகப்பெரிய சுறாமீன் அகப்பட்டிருப்பதைக் கண்டு அதனைக் கரைக்கு கொண்டு வந்துள்ளார். இந்த சுறா மீன் சுமார் பத்து அடி நீளமுடையதென்றும் அது, ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அந்த சுறாவின் வயிற்றினுள்ளிருந்து 4 குட்டிகளும் தலா இரண்டாயிரம் ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கரைக்கு…

    • 0 replies
    • 410 views
  8. மரதன் ஓட்டம் ஓடிய பின் குழந்தையை பெற்றார் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரத்தில் இடம் பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 27 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப்பெண் அம்பிய மில்லர் என்ற பெண்மணி பங்கேற்றார். கர்ப்பிணியான இவர் மரதன் ஓட்டத்தை முழுமையாக ஓடுவது பொருத்தமல்ல என்று மருத்துவர்கள் கூறியிருந்தும் இவர் போட்டியில் பங்கேற்றார். மொத்தம் 42.16 கி.மீட்டர் தூரத்தை இவர் 6 மணி 25 நிமிட நேரத்தில் ஓடி முடித்தார். இவர் ஓடும்போது ரசிகர்கள் கர்ப்பிணிப் பெண்ணே ஓடு ஓடு என்று பெரும் ஆரவாரமும் ஆதரவும் தெரிவித்தார்கள். ஓட்டம் முடிவடைந்த பின்னர் பிரசவ வலி எடுத்து 3.5 கிலோ நிறையுள்ள பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தனது குழந்தையை உலகப் புகழ் பெற்ற சாதனையுடன் பெற்றெடுத்து புகழடைந்து…

    • 0 replies
    • 410 views
  9. பெண்கள் வாழ தகுதியற்ற நாடு இந்தியா: BBC இன் நெஞ்சை உருக்கும் காணொளி (Video) பி.பி.சி உலக செய்திச் சேவை நிறுவனம் எடுத்துள்ள இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள். சுமார் 51 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப் படத்தை நிச்சயம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டுதான் பார்க்க வேண்டும். முழு முகமும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, மூச்சுவிடுவதற்காக மூக்கின் இரண்டு துவாரங்களில் இரண்டு சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் செருகப் பட்டிருக்கும் அந்தப் பெண், ‘இந்தியா-பெண்களுக்கு மிகவும் அபாயகரமான இடம்’ என்ற தலைப்பை உறுதி செய்கிறார்கள். பெண்கள் வாழவே முடியாத நாடு இந்தியா என்பதற்கு இந்த ஆவணப் படத்தை விட வேறு சான்று தேவையில்லை… காந்தி தேசம் இந்தியா, கற்பின் தேசம் இந்தியா என்பது வெறும் உதட்டளவில் மட்டும் தான்….h…

    • 1 reply
    • 410 views
  10. தற்போது உலகம் முழுவதும் விந்து தானம் செய்பவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்தில் விந்தணுவுக்கு அதிக தேவை உள்ளது மற்றும் அது உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது. அப்படியானால் பிரிட்டிஷ் ஆண்களின் விந்தணுக்களுக்கான தேவை ஏன் உலகளவில் அதிகரித்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது. விளக்கமான பதில் இதோ. இங்கிலாந்தில் எந்த மருத்துவமனையிலும் ஒரு விந்தணு தானம் செய்பவரிடமிருந்து 10 குடும்பங்களுக்கு மட்டுமே விந்தணுவை வழங்க முடியும் என்ற விதி உள்ளது. ஆனால் இங்கிலாந்து விந்தணு தானம் செய்பவர்களிடமிருந்து விந்தணுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப எந்த தடையும் இல்லை. இங்கிலாந்தில் விந்தணுவின் தேவை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். பிரிட்டனில் இனப்பெருக்க உடல்நலப் பிரச்சனைகள் …

  11. ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் சுயமாக தயாரிக்கப்பட்டு உலகத்தை ஏமாற்ற வழங்கப்பட்ட Lessons Learnt and Reconciliation Commission.(LLRC) அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானம், மார்ச் 22, 2012 அன்று ஜெனீவா ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரின்போது வாக்கெடுப்புக்குவந்து. 24 நாடுகள் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தனது சுத்துமாத்து வசதிக்கேற்றவாறு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றும் மனப்பாங்குடன் தயாரிக்கவில்லை என்பது தீர்மானத்தின்போது இடம்பெற்ற முரண்பாடுகளிலிருந்து தெரிகிறது. ஒப்பந்தங்களையும் ஆணைக்கு…

  12. தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொள்ளை: நால்வர் கைது வாழைச்சேனை- புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த நான்கு நோயாளிகள், கொள்ளை சம்பவமொன்று தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் சிலவற்றை களவாடியுள்ளதாக வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரினால் இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த சந்தேகநபர்களின் தனிமைப்படுத்தல் செயற்பாடு கடந்த 12ஆம் திகதி நிறைவடைந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெ…

  13. வடக்கு மாகாணங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மத்தயில் இலங்கையின் ஆள ஊடுருவும் அதி சக்தி வாய்ந்த புலனாய்வுத் துறையினர் உள் நுளைந்து மக்களின் மன நிலையை திசை திருப்பும் வேலைகளில் தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஈடுபடுவது கடந்த புதன் (04.03.2015) அன்று யாழ்.மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன் அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர். இவற்றில் இவர்கள் மத்தியல் ஆபத்தான மனிதர்கள் ஊடுருவியமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள விசேட செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளதுடன் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது… கடந்த காலங்களில் இராணுவப் பு…

    • 1 reply
    • 410 views
  14. தரையை காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர். தலபுராணம்: பகவான் ராமன், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் வனவாசத்திற்காக வந்தபோது, இலங்கை அரசன் ராவணன், சீதையை சிறைபிடித்து கடத்தி சென்றான். அப்போது, இந்த பகுதியை கடக்கும்போது, பறவையினத்தைச் சேர்ந்த, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு காயமடைந்து கீழே விழுந்தது. சீதையை கடத்தி செல்லும் ராவணன் குறித்த தகவலை கூறிய ஜடாயு, ராமனுக்கு வழிகாட்டியது. பின்னர் இலங்கையில் சிறை வைக்…

  15. சுற்றுலாப் பயணிகளை கவர கண்ணாடி கழிவறை ; மற்றவர் கழிவறையை பயன்படுத்துவதையும் பார்வையிட முடியுமாம் (வீடியோ இணைப்பு) சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க, வெளிப்படையாக தெரியும் கண்ணாடி சுவர்களை கொண்ட கழிவறைகளை சீனா நிர்மாணித்துள்ளது. சீனாவின் தென் பகுதி மாகாணமான ஹூனான் மாகாணத்தில் ஷியான் என்ற குளத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இந்த கழிவறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கழிவறையில் இருந்தபடி காட்டின் இயற்கையை ரசிக்க முடியும் என்பதுடன் வேறு ஒருவர் கழிவறையை பயன்படுத்துவதையும் காணமுடியும். கண்ணாடி பெட்டிகள் போல் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கழிவறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு…

  16. மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFRICAN NEWS AGENCY (ANA) தென் ஆப்ரிக்காவில் கோசியாமி தமரா சித்தோல் என்ற பெண் ஒருவர் பத்து குழந்தைகளை பெற்றெடுத்தார் என்ற செய்தியில் உண்மை இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணையில் தெரிய வந்துள்ளது. குவாடெங் என்னும் அந்த மாகாணத்தில் எந்த மருத்துவமனையிலும் 10 குழந்தைகள் பிறக்கவில்லை என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிதோல் சமீபத்தில் கர்ப்பமாகவும் இல்லை என்றும் மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. சிதோலுக்கு 37 வயது. அவரின் மன நலம் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கதை எவ்வாறு …

  17. மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான தாய் மாமன் நேற்றைய தினம் திங்கட்கிழமை(24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில்,அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளர். கொலை செய்யப்பட்ட யுவதி, யுவதியின் சகோதரி , அவரது பெரிய தாயின் மகனின் ம…

  18. பாடசாலைக்கே செல்லமுடியாமல் வாழும் மலையக சிறுவர்கள் மலையக தமிழ் சிறுவர்களின் கல்வி செயற்பாடுகள் தொடர்ந்தும் நெருக்கடியான நிலையிலேயே உள்ளதுடன், 26 விகிதமான சிறுவர்கள் பாடசாலைக்கே சென்றதில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. அங்கு வாழும் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அயலவர்களை நம்பமுடியாத சூழல் இருப்பாதாக 80 விகிதமானவாகள் தெரிவுத்துள்ளதுடன், 73 விகிதமான சிறுவர்கள் ஆரம்ப கல்வியுடன் தமது கல்விற் செயற்பாடுகளை நிறுத்தியுள்ளனர் என அது மேலும் தெரிவித்துள்ளது. பதுளையில் 145 பாடசாலைகள் உள்ளபோதும், சில பாடசாலைகளிலேயே உயர்தர வகுப்புக்கள் உள்ளதாகவும், எனவே சிறுவர்கள் தமது கல்வியை ஆரம்ப கல்வியுடன் நிறுத்திவிடுவதாகவும் ஊவா சக்தி நிறுவனம் என்…

  19. நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மறுத்த கோஹ்லி மும்பை: நடிகை அனுஷ்கா சர்மாவை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மறுத்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தங்களின் காதலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த அவர்கள் அண்மையில் தான் அதை வெளிப்படையாக தெரிவித்தனர். அனுஷ்காவும், கோஹ்லியும் அவர்களின் காதலை ரகசியமாக வைத்திருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காதலிக்கத் துவங்கியதுமே அந்த விஷயம் பாலிவுட் முழுவதும் பரவிவிட்டது. பின்னர் மீடியாவுக்கும் அந்த செய்தி கசிந்துவிட்டது. அனுஷ்காவுக்கு இந்த ஆண்டே கோஹ்லியை திருமணம் செய்து செட்டிலாக ஆசை. ஆனால் கோஹ்லியோ திருமணத்த…

  20. உங்கள் வேலை பாதுகாப்பாக உள்ளதா? அறிய உதவும் 10 வழிகள்! உங்கள் நிறுவனம் மற்றும் உங்கள் நிறுவனம் சார்ந்துள்ள துறை இரண்டும் வளர்ச்சிப் பாதையில் உள்ளதா எனக் கவனியுங்கள்! இன்று இருக்கும் போட்டியில் வேலையைத் தக்கவைத்துக் கொள்வது பெரிய விஷயமாக உள்ளது. பிசினஸ் எப்போதெல்லாம் டல்லடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்புவது வழக்கமான விஷயமாக மாறிவிட்டது. இதுமாதிரியான சூழ்நிலையில் நீங்கள் செய்துவரும் வேலைக்குத் தேவைப்படும் திறமைகளைவிட உங்களிடம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் அந்த வேலையில் தொடர்ந்து இருக்க முடியும். உங்கள் வேலை உங்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமா, அதற்கேற்ற திறன் உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிய 10 வழிகள் இதோ... …

  21. கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வழிபடும் சிவன் கோவிலிலுக்குள் புகுந்து சிங்கள ராணுவ வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை அவர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வருகின்றனர். இலங்கை கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான தமிழர்கள் வருவார்கள். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் அந்த கோவிலுக்குள் அதிரடியாகப் புகுந்து கருவரை அருகே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த ஆண், பெண் பக்தர்களை அடித்து விரட்டினர். பிறகு அர்ச்சகரிடம் சென்று கோவிலுக்குள் பாரம்பரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது, அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கோவிலை இடித்து தர…

  22. யு.எஸ்.-மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் அல்லது மலிவானதாக இருந்தாலும் ஒருவருக்கு பேக்கிங் பொருட்கள் மிகுந்த குடிபோதையை ஏற்படுத்தும் என்பதை நியு யோர்க்கை சேர்ந்த பெண் ஒருவர் தெளிவாக நிரூபித்துள்ளார். இந்த வார இறுதிநாட்களில் வனிலா சாறின் தாக்கத்துடன் வண்டியோட்டியதால் பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டு இதனை நிரூபித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு நியுயோர்க் பொலிசார் வால்மார்ட் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஒழுங்கற்ற முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை நிறுத்தியுள்ளனர். பெண் வண்டியை சாலை ஒரத்தில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு போகும் பாதையை தவறவிட்டு விட்டதாக தெரிவித்தார். ஆனால் அதிகாரி மூச்சில் மதுவின் அளவை சோதிக்கும் கருவியை கொடுத்து பரிசோதித்த போது இரத்தத்தி…

  23. போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள…

  24. இப்படியும் ஒரு மகள்..! ; கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அசலக பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பெண், தனது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக கண்டியில் உள்ள அழகு நிலையமொன்று சென்றுள்ளார். அழகு நிலைய பெண்ணிடம், தனக்கு ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.