செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
மன்னார் மாவட்டம் தபால்மூல தேர்தல் முடிவு இலங்கை தமிழரசுக் கட்சி 1300 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 408 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135 http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 386 views
-
-
கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சட்டீஸ்கரில் 47 வயது ஆண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா என்ற 47 வயது ஆண். இவர் கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் ரூ 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார்.கிடைக்கும் பணத்தில் சம்பந்…
-
- 0 replies
- 571 views
-
-
பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நி…
-
- 0 replies
- 762 views
-
-
நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என கூறியிருந்த, பிரபல கன்னட எழுத்தாளர், அனந்தமூர்த்திக்கு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அவர் மீண்டும் கொந்தளித்துள்ளார். எழுத்துலகின் உயரிய விருதாகக் கருதப்படும், "ஞானபீடம்' விருது பெற்றவர், கன்னட எழுத்தாளர், யு.ஆர்.அனந்தமூர்த்தி. பெங்களூரில், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது, "பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என்று கூறியிருந்தார். இதை அறிந்த, பா.ஜ.,வினர் கடும் கோபம் அடைந்தனர். "கர்நாடக சட்டசபைத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக…
-
- 0 replies
- 332 views
-
-
மிக்ஸியிலிருந்து மசாலாவை எடுத்தபோது கரண்ட் வந்ததால் துண்டான ஆசிரியை விரல்கள். சென்னை: மின்தடையால் எப்படியெல்லாம் இம்சையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். கரண்ட் போனதால் மிக்ஸியை ஆப் செய்யாமல் அதிலிருந்து மசாலாவை எடுத்தபோது திடீரென கரண்ட் வந்து விட்டதால், மிக்ஸி சுற்றியதில் அதில் கையை விட்டிருந்த ஆசிரியையின் விரல்கள் துண்டாகி அவர் துடித்துப் போய் விட்டார். சென்னையில் வேலை பார்த்து வருகிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த ராபர்ட். இவரது மனைவி பெர் பிளாரன்ஸ். அரக்கோணத்தில் இவர் தங்கியிருக்கிறார். ஆசிரியையாக இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம் போல அரக்கப் பறக்க வேலையில் ஈடுபட்டிருந்தார். தானும் பள்ளிக்கு ரெடியானதோடு, சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்குக…
-
- 5 replies
- 941 views
-
-
13 இலக்கத்தை துரதிஷ்டவசமாக கருதும் மேற்குலக மக்கள் அதிலும் வெள்ளிக்கிழமை 13 ம் திகதி என்றால் அது மிகவும் வேண்டப்படாத நாளாக நினைக்கிறார்கள். ஜேசு கிறீஸ்த்து தனது 12 சீடர்களுடன் 13 வது ஆளாக வியாழக்கிழமை இரவு உணவருந்திய பின்னர் வெள்ளிக்கிழமை சிலுவையிலறையபட்ட வரலாற்றிருந்து இந்த இந்த எண்ணம் மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டது 13ஆம் திகதி வெள்ளிக்கிழமையான நேற்றைய தினத்தை துரதிஷ்டமான நாளாகவே ஐரோப்பிய மக்கள் கருதுகின்றனர். பலர் வாகனங்களை ஓட்டுவதற்கு கூட தவிர்த்து கொள்கின்றனர். நேற்றைய தினம் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை…
-
- 2 replies
- 805 views
-
-
எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதியோப்பியாவில் இத்தாலி தலையீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாபகத்தில் உள்ளதாக ஓய்வுபெற்ற விவசாயியான எடகபோ எப்பா தெரிவித்தார். எனினும் அவரிடம் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை. அவர் ஒரோமியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, 19 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற சம்பவங்களை விபரித்துள்ளார். இத்தாலியால் எதியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்டபோது, தான் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாக அவர் கூறினார். அவர் கூறுவது உண்மையானால் உலக வரலாற்…
-
- 0 replies
- 322 views
-
-
முன்னாள் சிங்கள இனவாத ரவுடிகள் ஜெயவர்த்தனா ,பிரேமதாச,சேனநாயக்க புகைப் படம் Hon. Ranasinghe Premadasa, Hon. J.R Jayawardene and Hon. E. L. Senanayake during the 1st "Vap Magula" event in 1978 thankx FB
-
- 0 replies
- 3.6k views
-
-
அதிசயத் தகவல்கள்...! 1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.(எப்போதுமே உள்ளே என்ன நடக்கிறது என்று கணிப்பது கஷ்டம்தான்.) 2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?) 3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்(.நீல லென் மாட்டிக்கலாமா) 4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.(அது எப்படின்னு சொல்லீட்டிங்கன்னா சௌகரியமா இருக்கும்.) 5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.(மப்…
-
- 0 replies
- 727 views
-
-
பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், அரசாங்க ரகசியங்கள் அடங்கிய ரெட் பொக்ஸ் எனப்படும், சிகப்பு பெட்டியை, ரயிலில் தவறவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், கடந்த ஆண்டு, தன் எட்டு வயது மகளுடன், பப்புக்கு சென்றார். அங்கு நடந்த, விருந்துக்குப் பின், தன் மகளை, அங்கேயே விட்டு விட்டு வீடு திரும்பினார். இவரின் மறதியால், பப்பில் தவித்த மகளை, கேமரூனின் மனைவி, சமந்தா, அங்கு சென்று, வீட்டிற்கு அழைத்து வந்தார். சொந்த மகளை மறந்து விட்டு சென்ற, கேமரூன் அந்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றார். இந்நிலையில், பிரிட்டனின் அரசாங்க ரகசியங்கள் அடங்கிய, ரெட் பொக்சை ரயிலில் விட்டுச் சென்று மீண்டும் சர்ச்சையில் ச…
-
- 0 replies
- 371 views
-
-
பெரிய பிரித்தானியாவின் மெட்ரோபொலிடன் பொலிஸாரின் மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் தகவல் பெற்றுக் கொள்ளும் பகுதியில் தமிழீழக் கொடியை உள்ளடக்கியிருப்பது குறித்து அதற்கெதிராக பிரித்தானியாவிலுள்ள இலங்கைக் கலாமன்றத் தின் தலைவர் ஜனக அழகப்பெரும இலண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். அழகப்பெரும அவ்வாறு முறையிட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் அவ்விணை யத்தளப் பகுதியிலிருந்து ஈழக்கொடி நீக்கப்பட்டுள்ளது. அழகப்பெரும பொலிஸாருக்குத் தெளிவுறுத்தியதைத் தொடர்ந்தே அவ்விணையத் தளப் பக்கம் நீக்கப்பட்டுள்ளதாகவும், பிரித்தானிய இலங்கைக் கலாமன்றத்தின் மூலம் அழகப்பெருமவினால் செய்யப்பட்ட முறையீட்டுக்கு பதில் அனுப்பவுள் ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்…
-
- 3 replies
- 716 views
-
-
ஈரோடு: ஈரோட்டில் படுத்த படுக்கையாக இருந்த தனது அக்கா அவதிப்படுவதை பார்க்க சகிக்காத தம்பி அவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். ஈரோடு காசிபாளையம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் வீதியில் வசித்தவர் பர்வதம்(75). அவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பர்வதத்துக்கு தமிழ்செல்வன், அமுதன், ராஜு ஆகிய மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். புஷ்பாவை பர்வதத்தின் தம்பி மூர்த்தி(70) தான் திருமணம் செய்து கொண்டார். பர்வதம் தனது தம்பியின் ஆதரவில் இருந்து வந்தார். முதுமையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பர்வதம் படுத்த படுக்கையாகிவிட்டார். அவர் அவதிப்படுவதைப் பார்க்க சகிக்காத மூர்த்தி அக்காவை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவரின் உடலை அருகில் உள்ள தனது தோட்டத…
-
- 0 replies
- 535 views
-
-
கடவுளுடன் ஒரு #பேட்டி: ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது எனக்கு... “உள்ளே வா” – அழைத்த #கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சரியப்படுத்துவது எது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்! எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பத…
-
- 0 replies
- 521 views
-
-
செத்து மடிவோமே அன்றி இலங்கைக்கு திரும்பப் போக மாட்டோம். துபாயில் சிக்கியுள்ள ஈழ அகதிகளின் கண்ணீர். --------------------------------------------------------------------- சர்வதேச நாடுகளுக்கு துபாய் ஈழ அகதிகளின் வேண்டுகோள். எங்களுக்கு புகலிடக் கோரிக்கை தர மறுக்கும் சர்வதேச குடியேற்ற நாடுகளே.!! எங்களுக்கு வீடு வாசல், வசதி வாய்ப்புக்கள், சுகபோக வாழ்க்கை எதுவும் தர வேண்டாம். உங்கள் நாடுகளில் ஏதாவது ஒரு காட்டுப் பகுதியில் ஒரு சிறிய இடம் தந்தாலே போதும், நாம் உயிரோடும், பாதுகாப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு! ---------------------------------------------------------------------- இவ்வாறு துபாய் சிறையில் வாடும் ஈழத்து உறவுகள் கோரிக்கை வைத்திருப்பது தமிழ் சமூகத…
-
- 0 replies
- 430 views
-
-
உலகில் 6வது மகிழ்ச்சி மிக்க மக்கள் வாழும் நாடு கனடா என கணிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, தாராளமனப்பான்மை, வாழ்க்கை முறையினை தெரிவுசெய்வதற்கான ,பொருளாதாரம், ஊழல்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் போன்ற தொடர்காரணங்களே காரணமாகுமென கூறப்பட்டுள்ளது. மேற்படி கட்டளை விதிகளின் படி அவுஸ்ரேலியாவும், கனடாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விட மகிழ்ச்சியான நாடுகளாக கருதப்படுகின்றன. கிறீக்,இத்தாலி, ஜப்பான் நாட்டவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர். டென்மார்க் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும் கருதப்படுகின்றது. மேற்படி அறிக்கையை எழுதிய ஓய்வு பெற்ற பிரி…
-
- 1 reply
- 664 views
-
-
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி தீக்குளிப்பு! :>>மனித உயிர் பலியை தடுத்து நிறுத்தி, மூளையை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டிய நேரம் இது. அவர் குடும்பத்தை நினைத்து வருந்துவதை தவிர வேறு வழியில்லை. https://www.facebook.com/photo.php?fbid=432794533478233&set=a.430430003714686.1073741826.430428090381544&type=1&theater
-
- 0 replies
- 1.9k views
-
-
23 மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று தென் ஆப்ரிக்கருக்கு நியூசிலாந்து அரசு இறுதி கெடு விதித்துள்ளது. தென் ஆப்ரிக்கரான ஆல்பர்ட் புடேன்ஹஸ், அவர் மனைவி மார்த்தி, ஆறாண்டு முன்பு வேலை நிமித்தமாக நியூசிலாந்து வந்தனர். கிரிஸ்ட்சர்ச் பகுதியில் அவர்கள் குடியேறி னர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆல்பர்ட் உடல் எடை மிக அதிகமாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அவரின் வேலை நிமித்த விசா புதுப்பிக்கும் போது, குடியேற்ற துறை எச்சரித்து வந்தது. கடந்தாண்டு அவர் எடை 120 கிலோவை தாண்டியது. நீங்கள் உடல் எடையை குறைக்காவிட்டால் அடுத்த ஆண்டு விசா புதுப்பிக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். உடல் எடைய…
-
- 1 reply
- 709 views
-
-
சினிமாவில் வருவது போன்ற பரபரப்பான கொள்ளை சம்பவம் ஒன்றில், பிரான்சில் சுமார் 2.6 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள ஆபரணக் கற்களும், கைக்கடிகாரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த கொள்ளையர், கார் ஒன்றை, பாரிஸ் நகைக்கடை ஒன்றின் ஜன்னல் வழியாக மோதி, உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் அங்கு இருந்த விலைமதிப்புள்ள கற்களையும் , கைக்கடிகாரங்களையும் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதே போன்று பல கொள்ளைச்சம்பவங்கள் ஏற்கனவே பிரான்சில் நடந்துள்ளன. ஜூலையில்தான், 136 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள நகைகள் பிரென்சு நகரான கேனில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டன. 'ரோஜா சிறுத்தைகள்' ( பிங்க் பாந்தர்ஸ்) என்றழைக்கப்படும் ஒரு கிரிமினல் குழுதான் இதைச் செய்திருக்கவேண்டு…
-
- 0 replies
- 455 views
-
-
குதிரை வீரன் ! குதிரையின் மேல் வீரர்கள் அமர்ந்து இருக்கும் சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது. குதிரையின் நான்கு கால்களும் கீழே ஊன்றி இருந்தால், அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என்று பொருள். குதிரையின் ஒரு கால் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் காயம் அடைந்து, பிறகு இறந்தவன் என்று அர்த்தம். முன்னங்கால்கள் இரண்டும் தூக்கிய நிலையில் இருந்தால், அந்த வீரன் போரில் வீர மரணம் அடைந்தவன் என்று அர்த்தம். இனி குதிரை சிலைகளைப் பார்த்தால் இதையும் கவனியுங்க! ◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘ எங்களுடன் வலைத்தளத்தில் இணைய, இணையத்தள முகவரி:- www.thaayakam.com முகநூல் பக்கம்:- Thaayakam.Com ◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
-
- 1 reply
- 815 views
-
-
நித்தியானந்தாவின் சிஷ்யையை மணக்கிறார்.. அவரது அண்ணன்! பெங்களூர்: நித்தியானந்தாவின் சிஷ்யை என்று கூறப்படும் மலேசியாவைச் சேர்ந்த நித்திய கீதானந்தா என்பவருக்கும், நித்தியானந்தாவின் உடன் பிறந்த அண்ணன் செந்தில்குமாருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம். நித்தியானந்தாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி உண்டு. அண்ணன் பெயர் செந்தில்குமார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 40 வயதாகிறது. நித்தியானந்தாவின் தந்தை இறந்ததும், தனது தாயார் மற்றும் தம்பியை தன்னுடனேயே அழைத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அண்ணன் செந்தில்குமார் மட்டும் திருவண்ணாமலையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நித்தியானந்தாவின் சிஷ்யையானா மலேசியாவைச் சேர்ந்த சுபத்ரா எ…
-
- 8 replies
- 1.3k views
-
-
மம்மி, நா வந்துட்டேன்.... கதவைத் திறந்து பார்த்த அம்மா அதிர்ச்சி. லண்டன்: இங்கிலாந்தில் 2 வயது குட்டிப் பாப்பா ஒன்று தனது நர்சரிப் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலேயே அங்கிருந்து நைஸாக வெளியேறி வீட்டுக்குத் தனியாகவே போய் வி்ட்டது. பாவம் பிஞ்சுக் கால்கள் வலிக்க வலிக்க ரொம்ப தூரம் தைரியமாக நடந்தே போய் விட்டதாம் இந்த குட்டிப் பாப்பா. பள்ளிக்கூட வாட்ச்மேன் வாசலில் காவல் காக்காமல், எங்கேயோ போய் விட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு பாலம், ரவுண்டானா என ரொம்ப தூரம் இந்த குட்டி வாண்டு நடந்து போயிருக்கிறது. சிறுமி வீடு போய்ச் சேரும் வரை பள்ளிக்கூடத்தில் யாருக்குமே அவள் காணாமல் போனது தெரியவில்லையாம். நர்சரியில் சேர்க்கப் பட்ட பாப்பா.... அந்தக் குட்டியின் பெயர் ல…
-
- 4 replies
- 1.2k views
-
-
நாடு முழுவதும், நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை ஒட்டி, ஐதராபாத்தில் உள்ள, கைர்தாபாத் கணேஷ் விநாயகருக்கு, 4,000 கிலோ எடையில் "மெகா சைஸ்' லட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள கணேஷ் மண்டலியின் சார்பில், 56 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது, "கைர்தாபாத் கணேஷ்' என, அழைக்கப்படுகிறது. இந்த விநாயகருக்கு, ராஜமுந்திரியில் உள்ள இனிப்புகள் தயாரிக்கும் நிறுவனம், 4,000 கிலோ எடையில் மெகா சைஸ் லட்டு தயாரித்து உள்ளது. நாளை துவங்கி, 10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில், இந்த மெகா சைஸ் லட்டு, விநாயகருக்கு படைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதை தயாரிக்க, 1,600 கிலோ சர்க்கரை, 1,000 கிலோ கடலை பருப்பு, 900 …
-
- 0 replies
- 672 views
-
-
பிரிட்டிஷ் மகாராணியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்த திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் காவல் கட்டமைப்புக்களை மீறி, பாதுகாப்பு வேலியை ஏறிக் குதித்து கடந்த திங்கள்கிழமை இரவு ஒரு நபர் உட்புகுந்துள்ளார். அரண்மனையில் உள்ளே இருக்கும், அரசத் தலைவர் சமூகமளிக்கும் தர்பார் அறையில் இந்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். பொதுவாக பகல் நேரத்தில் இந்த அறை பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும். இந்த நபரோடு வந்த மற்றொருவர் அரண்மனைக்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் நடந்தபோது, அரச குடும்பத்தினர் யாரும் அரண்மனையில் இல்லை. கடந்த 1982 ஆம் ஆண்டு ம…
-
- 1 reply
- 458 views
-
-
தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய செய்தியை, தவறாக புரிந்து கொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர், ஜோர்ஜ் புஷ், இரங்கல் தெரிவித்தார். ஜூன் மாதம், உடல்நிலை பாதிக்கப்பட்ட மண்டேலா, சிகிச்சைக்காக, பிரிட்டோரியா நகர, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்தவாரம்,மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அமெரிக்காவின் முக்கிய பத்திரிக்கையான, "வாஷிங்டன் போஸ்ட்' மண்டேலா வீடு திரும்பியதை, தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. இச்செய்தியை அரைகுறையாக படித்த, அமெரிக்க முன்னாள் அதிபர், ஜார்ஜ் புஷ்சின் செய்தி தொடர்பாளர், ஜிம் மெக்கிராத், மண்டேலா இறந்து விட்டதாக, புஷ்சிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரி…
-
- 11 replies
- 885 views
-
-
டொரண்டோவில் உள்ள York Unviersity பகுதியில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு வலைவீச்சு. டொரண்டோவில் உள்ள York University’s Keele கேம்பஸ் பகுதியில் 18 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொரண்டோவில் உள்ள York University’s Keele கேம்பஸ் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒரு 18 வயது பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணின் முன்பு பாட்டு பாடி டான்ஸ் ஆடி அவரிடம் அவரை தொட்டு தொட்டு பேசி, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், சத்தம் போட்டு கத்தியதும் ஆட்கள் …
-
- 0 replies
- 436 views
-