செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
வெசாக் கொண்டாட்டத்தின் போது தானம் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாட இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொலைச்செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவர் ஒருவரே சக மாணவனால் கத்தியால் குத்தி கொலைச்செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது. பானாகொட கொம்பெலா பிரதேசத்தில் தானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. இதன் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மாணவர்கள் சிலரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். குறித்த மாணவன் வலுக்கி விழுந்தே மரணமடைந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்மாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 452 views
-
-
லண்டன்: சமையலுக்கு பயன்படுத்த வாங்கி வந்த கத்திரிக்காயில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்ததால் அதை மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள லிசெஸ்டர் என்ற இடத்தை சேர்ந்த பிரபுல் விஸ்ராம் (61) என்ற தொழில் அதிபர், சமையல் தொழிலும் செய்து வருகிறார். இவர் சமையலுக்கு பயன்படுத்த வாங்கி வந்த கத்தரிக்காயில் ஒன்று யானை முக வடிவத்தில் விநாயகர் கடவுள் போன்று இருந்ததாம். அதை அவரது மனைவி ரேகா பார்த்து விஸ்ராமிடம் தெரிவித்துள்ளார். விஸ்ராம் குடும்பத்தினர் அந்த கத்தரிக்காயை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் அதை அருகில் இருந்த கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்துள்ளனர். இதற்கிடையே அதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தங்கியிருக்கும் …
-
- 21 replies
- 2.7k views
-
-
தேசப்பிதா மகாத்மா காந்தியின் ஒரு துளி ரத்தம் பத்து இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனில் உள்ள முல்லோக் மையத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய 50 நினைவு பொருட்கள், வரும் 21ம் திகதியன்று ஏலம் விடப்படவுள்ளது. இவற்றில் காந்தியின் தோல் செருப்புகள், மிகவும் விரும்பி அணியும் நீண்ட துண்டு, போர்வை, கோப்பை, கரண்டி, முள்கரண்டி மற்றும் கப் உள்ளிட்டவையும் அடங்கும். இவை தவிர காந்தியின் ரத்த துளியும் கூட ஏலம் விடப்படவுள்ளது. இந்த ரத்தத்துளி அவர் தானம் செய்வதற்கு முன்பு எடுத்து பரிசோதிக்கப்பட்டதாகும். கடந்த 1924ம் ஆண்டு சுமதி முகர்ஜி என்பவருக்கு காந்தி ரத்த தானம் செய்தார். அப்பொழுது அவரது ரத்தம் ஒரு கண்ணாடி சிலேடில் எடுத்து மைக்ராஸ் கோப்பில் வ…
-
- 0 replies
- 347 views
-
-
கோவை: குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களிடம் சென்றால் அவர்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சியளிக்கிறார் கோவை அருகே உள்ள சாமியார். திருமணமான தம்பதியர்களுக்கு ஒரு வருடத்திற்கு குழந்தை பிறந்து விட்டால்தான் போச்சு. இல்லை என்றார் உறவினர்கள், நண்பர்களின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக பலவித சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள் இருக்கின்றனர். ஒரு சிலர் கோவில் குளம் என்று சுற்றுவார்கள். இன்னும் சிலர் சாமியாரை நாடிச் செல்வார்கள். முதல் இரண்டு ரகத்தினரையாவது ஒரு வழியில் சேர்க்கலாம். ஆனால் பிள்ளை வரத்திற்காக சாமியாரிடம் செல்பவர்களை என்னவென்று சொல்வது.. லிப் டூ லிப் டிரான்ஸ்பர் கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியாரோ பிள்ளை வரம் தரும் சாமியாராக இரு…
-
- 30 replies
- 5.3k views
-
-
அமெரிக்காவின் கிராமப் பகுதியான கென்டக்கியில், 5 வயது சிறுவன், தனது 2 வயது சகோதரியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகளை வேட்டையாடுதல், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மக்கள் வசிக்கும் கென்டக்கியில், பிள்ளைகள் வளர்ந்து 5 வயது ஆவதற்குள், அவர்களுக்கு என்று குடும்ப உறுப்பினர்கள் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்து பயிற்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்டியன் என்ற சிறுவனுக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி எதிர்பாராத விதமாக அவனது கையில் கிடைத்தது. அவன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது சகோதரியை விளையாட்டாக சுட, அந்த துப்பாக்கியில் இருந்து வெளியே வந்த குண்டு, சிறுமியின் நெஞ்சை துளைத்துச் சென்றது. இந்த சம்பவத்தால், அவரது குடும்பத…
-
- 4 replies
- 416 views
-
-
ஐஸ்வர்யா - அபிஷேக் பச்சன் அபிஷேக் பச்சனுக்கு இப்போது 37 வயதாகிறது. இவர் தனது மனைவி ஐஸ்வர்யா ராயை விட இரண்டு வயது இளையவர். ஐஸ்வர்யா – தனுஷ் சூப்பர் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா தன்னை விட மூன்று வயது குறைவான தனுஷை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஃபாராகான் - சிரிஷ் பிரபல இயக்குநர் ஃபாராகான் தன்னைவிட 8 வயது குறைவான சிரீஷ் ஐ திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை விட மூன்று மாதங்கள் மூத்தவராம். ஆனால் இருவருக்கும் இடையே பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியாது. அஞ்சலி - சச்சின் டெண்டுல்கர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியை விட 5 வயது இளையவராம் ரோ…
-
- 5 replies
- 4.1k views
-
-
சாப்பாட்டு பொதியில் 'அவித்த நத்தை' இருந்தமையினால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எல்பிட்டிய நீதவான் 3000 ரூபா தண்டம் விதித்துள்ளார். எல்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் நீல் குமாரவிற்கே எல்பிட்டிய நீதவான் கேசர சமர தீவாகர மேற்கண்டவாறு தண்டம் விதித்துள்ளார். நீதிமன்றில் ஆஜராகிய எல்பிட்டிய சுகாதார பரிசோதகர் யு.கே.டி ரஞ்சித் வைத்தியசாலையிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் தாதியொருவர் 40 ரூபாவிற்கு உணவு பொதியை கொள்வனவு செய்துள்ளார். அந்த உணவு பொதியில் சுமார் 30-35 கிராம் நிறையில் அவித்த நத்தையொன்று இருந்தது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/65900--3000-.html
-
- 2 replies
- 457 views
-
-
ஜெய்ப்பூர்: இணையதளம் மூலமாக அறிமுகமாகி திருமணம் செய்த காதல் ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான அடுத்த நாளே, பிரிந்த, பரபரப்பான சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர், சங்கர் லால். அசாமில், வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த, சீமா என்ற இளம் பெண்ணுக்கும், ஒரு மாதத்துக்கு முன், திருமண ஏற்பாடுகளை செய்து தரும், இணையதளம் மூலமாக அறிமுகம் ஏற்பட்டது.இதையடுத்து, ஒருவரை ஒருவர், நேரில் பார்க்காமலேயே, சமூக வலைத் தளங்கள் மூலமாக, தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே, இருவருக்கும், காதல் மலர்ந்து விட்டது. இதையடுத்து, திருமணம் செய்ய, முடிவு செய்தனர்.இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில், சமீபத்தில், ஒரு கோவிலில், இருவரும் திருமண…
-
- 16 replies
- 3.3k views
-
-
பெல்ஜியம் நாட்டில், பணத்தை சாலைகளில் வாரி இறைத்து, திருடர்கள் தப்பிச் சென்றனர். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின், ஜெதல்ஜெம் நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட்டை முடித்துக் கொண்டு பணப் பைகளுடன் வெளியே வந்த திருடர்கள், போலீசார் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, தாங்கள் வைத்திருந்த பணப் பைகளை காரில் வைத்துவிட்டு, போலீசாரை திசை திருப்ப, தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் இருந்து, ஒரு பங்கை, சாலையில் வீசி எறிந்துவிட்டு ஓடினர். சாலையில் 50,100, 200 யூரோ நாணயத் தாள்கள் இறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள் வேகமாக எடுத்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டனர். மக்கள் அங்குமிங்கும் ஓடியதால், போலீசார் திருடர்களைப் பிடிக்காமல், கோட்டை விட்டனர். பொதுமக்கள், தாங்கள் எடுத்த பணத்தை, த…
-
- 3 replies
- 563 views
-
-
கட்டார் மற்றும் கிரீஸ் நாட்டினிடையே நற்புறவை வலுப்படுத்தும் பொருட்டு நடைபெற்ற கண்காட்சியில் நிர்வாண சிலைகளிரண்டால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, கட்டாரின் டோஹாவில் கடந்த 27 ஆம் திகதி குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நூதனசாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் “Olympics: Past and Present " என்ற தொனிப் பொருளில் இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. இதற்கென நல்லெண்ண அடிப்படையில் கீரீஸ் நாட்டிலிருந்து 600 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்கள் கட்டார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 நிர்வாண ஆண் சிலைகளும் அடங்குகின்றன. இச் சிலைகள் இரண்டினாலேயே சர்ச்சை எழுந்துள்ளது. நிர்வாண ஆண் சிலைகளால் கண்காட்சியை பார்வையிட வரும் பெண்கள் அசௌகரி…
-
- 0 replies
- 551 views
-
-
இரண்டாம் உலகப் போரின் போது அடால்ப் ஹிட்லரின் உணவு பரிசோதகராக இருந்த பெண், அரை நூற்றாண்டை கடந்த நிலையில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது 95வது பிறந்த நாளைக் கொண்டாடிய மார்கோட் வெல்க், இதுவரை தனது கணவரிடம் கூட பகிர்ந்து கொள்ளாத பல ரகசியங்களை தற்போது வெளி உலகுக்கு தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஜெர்மனின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லரின் உணவுப் பரிசோதகராக 15 இளம் பெண்கள் பணியாற்றினர். அதில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார் மார்கோட் வெல்க். எனக்கு அப்போது 20 வயது இருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது, தற்போது போலந்து என்று அழைக்கப்படும் பகுதியில் மிக அதிக பாதுகாவலர்களுக்கு மத்தியில்தான் ந…
-
- 0 replies
- 1.3k views
-
-
மது குடிக்கும் போட்டியில் வைரத்தை விழுங்கிய 80 வயது அமெரிக்க பெரிசு. வாஷிங்டன்:மதுகுடிக்கும் போட்டியில் தவறுதலாக பரிசுக்குரிய வைரத்தையும் சேர்த்து விழுங்கி பார்வையாளைகளை படபடக்க வைத்தார் 80 வயது அமெரிக்க பாட்டி. அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஷாம்பெயின்(திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது. அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒரு கோப்பையில் மட்டும் தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வைரத்தை வெல்ல போ…
-
- 1 reply
- 430 views
-
-
2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் Dates 2013 April 27th, 28th இடம் கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கை Venue Colombo Tamil Sangam, Sri Lanka மின்னஞ்சல் | Email noolahamfoundation@gmail.com தொலைபேசி | Phone 0094 112363261 http://noolahamfoundation.org/wiki/index.php?title=தமிழ்_ஆவண_மாநாடு_2013 இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 6 காலம் : 27, 28 ஏப்ரல் 2013 (சனி, ஞாயிறு) நேரம் : காலை 9:00 - மாலை 6:00 மாநாட்டு ஆரம்ப நிகழ்வு : (சனி 27-04-2013 : மு.ப 9:00 மு.ப 10:00) தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை மாநாட்டுத் தொடக்கவுரை சிறப்புரை : ஆவணப்படுத்தலும் சமூகமும் - சுந்தர் கணேசன் (இயக்குனர், …
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் நீச்சல் உடை படத்தை ப்ரான்ஸ் இதழ் ஒன்று அட்டைப்படமாக வெளியிட்டது. இது தொடர்பாக அந்த இதழின் கேமராமேன், எடிட்டர் என இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் இளவரசியும், வில்லியம்சின் மனைவியுமான கேட் மிடில்டன் நீச்சல் உடையில் இன்றி இருந்த புகைப்படம் கடந்த செப்டம்பரில் பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றில் வெளி வந்தது. குளோசர் என்ற அந்த செய்தி இதழின் தலைமை செயல் அதிகாரியான எர்னஸ்டோ மவுரி மற்றும் லா பிராவின்ஸ் என்ற பத்திரிகையின் பெண் புகைப்படக்காரருமான வலேரி சுவாவ் ஆகிய இருவர் மீது தனி நபர் தலையீடு தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. வலேரி சுவாவ் என்ற அந்த பெண் புகைப்படக்காரர் இளவரசியின் நீச்சல் உடை புகைப்படத்தை தனது பத்திர…
-
- 0 replies
- 560 views
-
-
-
- 1 reply
- 483 views
-
-
இந்த சம்பவம் 1970 ம் ஆண்டு கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் .. இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை அதிகாரம் அத்தனையயும் மூடி மறைத்துவிட்டது . அப்போது தான் முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.. தலைமுறைக்கும் நாம் தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்து கொண்டு இருந்த நேரம் அது . இந்த காலகட்டத்தில் "ஐவகரிஸ்ட்" என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் ஒரு காலத்தில் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டு இருந்த என்.கே.டி. சுப்பிரமணியம் அவர் நடத்திய ஐவகரிஸ்ட் பத்திரிகையில் , இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனியில் இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த…
-
- 0 replies
- 1k views
-
-
a தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து! தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ர...ினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம். நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்ட…
-
- 1 reply
- 539 views
-
-
கோட்டையம்: கேரளாவில் லாட்டரி சீட்டு மூலம் கோடி ரூபாய் பரிசு வென்ற அதிர்ஷ்ட இளைஞர் ஒருவர், அந்த பணத்தை கண்ணில் காணும் முன்பாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டம் அடித்தும் அதை அனுபவிக்க முடியாமல் உயிரிழந்த அந்த நபரின் பெயர் உண்ணி. அவர் திருவனந்தபுரம் அருகே பாலா என்ற ஊரில் பெற்றோருடன் வசித்து வந்தார். வந்த 24 வயதாகும் உண்ணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலித்தொழில் செய்து பிழைத்து வந்தார். ஏழ்மையான வாழ்க்கை தனது ஏழ்மையைப் போக்க அதிர்ஷ்டத்தை நம்பினார் உண்ணி. அதற்கு ஒரே வழி லாட்டரிச்சீட்டுதான் என்று நம்பி வருடக்கணக்கில் கட்டு கட்டாக வாங்கினார். ஆனால் பரிசுதான் விழுந்த பாடில்லை. அதிஷ்ட தேவதை கண் திறந்தாள் முயற்சியை கைவிடாத உண்ணி, த…
-
- 19 replies
- 2.3k views
-
-
எதிர்பாராமல் பெற்றோரால் கொலையான ஆருஷி: நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி விளக்கம்! டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சிறுமி ஆருஷியை அவரது பெற்றோரே கொலை செய்ய நேரிட்டது எதிர்பாராதது என்று நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி கெளல் விளக்கம் அளித்திருக்கிறார். 2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஆருஷியையும் வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜையும் ஆருஷியின் பெற்றோரே கொலை செய்தனர் என தெரியவந்துள்ளது. காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜரான சிபிஐ அதிகாரி கெளல், சம்பவம் நடந்த நாள் நள்ளிரவில் திடீரென சப்தம் கேட்டிருக்கிறது. அப்ப…
-
- 0 replies
- 674 views
-
-
போபால்: பெண்கள் பாலியல் தொந்தரவை எதிர்கொள்வதற்கு, ஆண்களை அவர்கள் தூண்டும் விதமாக பார்ப்பதே காரணம் என்று மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சத்யதேவ் கட்டாரே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,"ஆண்களை தூண்டும்விதமாக பெண்கள் பார்க்காதவரை எந்த ஒரு ஆணும் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதில்லை" என்று கூறினார். அவர் இவ்வாறு பேசும் போது அதே மேடையில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் காந்திலால் இதனை கேட்டுக்கொண்டு இருந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 10 வருடங்களுக்கு முன்பே மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. தற்போது…
-
- 1 reply
- 385 views
-
-
காதல் விவகாரத்தினால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் அவருக்கு விஷத்தை கொடுத்துவிட்டு காதலனும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிருக்காக போராடி கொண்டிருந்த காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்றே காதலன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். இரண்டு பல்கலைகழகங்களைச்சேர்ந்த மாணவர்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மொரட்டுவை பல்கலைகழக மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோதே வடகொழும்பு வைத்திய பீடத்தைச்சேர்ந்த இறுதியாண்டு மாணவன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதில், பேராதனை மாரஸ்ஸன்ன ஒ…
-
- 2 replies
- 413 views
-
-
இலங்கையில் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதுடன் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசிடம் கோரியுள்ளது பிரிட்டன். கருத்துச் சுதந்திரம் மற்றும் அண்மைக் காலத்தில் ஊடகவியலாளர் பலர் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் தொடர்ச்சியாக ஆழ்ந்த கவலைபடைத்துள்ளதாக என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் அலிஸ்ரயர் பேர்ட் தெரிவித்துள்ளார். 2012 நவம்பரில் ஜெனிவா பருவ கால மீளாய்வின் போது, இலங்கை மக்கள் அனைவரும் தம் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதை உறுதி செய்யும்மாறும் எதிர் தாக்குதல் நடத்தப்படும் என்ற பயமின்றி தமது கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் சுதந்திரமாக வெளியிட வசதி செய்யப்பட வேண்டும். என்றும் பிரிட்டன் இலங்கைக்கு யோசனை கூறியிருந்தது. அத்து…
-
- 0 replies
- 511 views
-
-
பில் கேட்ஸ் செய்தது சரியா? தவறா? பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம். தொழிநுட்ப உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான். இதுமட்டுமன்றி உலகப் பணக்காரர் வரிசையில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தவர் கேட்ஸ். தொழிநுட்ப உலகை ஆளும் மைக்ரோசொப்டின் ஸ்தாபகரும், முன்னாள் நிறைவேற்று அதிகாரியான பில் கேட்ஸ் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் -ஹேய்யை அண்மையில் சந்தித்த பில் கேட்ஸ் அவருடன் கை குலுக்கிய விதமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கியுனுடன் கைகுலுக்கும் போது பில் கேட்ஸ் தனது மற்றுமொரு கையை தனது காற்சட்டையின் பொக்கெற்றுக்குள் வைத்திருந்துள்ளார். இது தென்கொரிய ஜனாதிபதியை அவமதிப்பது போல் உள்…
-
- 1 reply
- 353 views
-
-
எறும்பின் கடின உழைப்பு http://youtu.be/DxblU8OYeVw
-
- 0 replies
- 1.1k views
-
-
விருதுநகர்: தனது கள்ளக் காதலியை அதிகாரிகளுக்கு விருந்து வைத்த விருதுநகர் டி.ஆர்.ஓ. அலுவலக டிரைவர் மனோகரன் அடித்துக் கொல்லப்படார். விருதுநகரில் உள்ள இந்திராநகர் ஏரியாவைச் சேர்ந்தவர் மனோகரன் (45) டி.ஆர்.ஓ. அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றியவர். கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி அலுவலகம் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை. கணவர் வீடு திரும்பாததால் கலங்கிப் போன மனோகரனின் மனைவி திருச்செல்வி, மறுநாள் போலீஸில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் மனோகரனுக்கு ஏகப்பட்ட பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. மனோகரனின் செல்போன் தொடர்புகளை துருவிய போலீஸாருக்கு, பாண்டிச்செல்வி என்ற பெண்மணி மீது சந்தேகம் வலுத்தது. தனது வீட்டருகே பெட்டிக்கடை நடத்தும் ஆறுமு…
-
- 0 replies
- 804 views
-