Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. பொதுச்சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. 2-வது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச யோகா தினம் முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் யோகா சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், க…

  2. முஸ்லீம்கள் வடக்கில் மீளக் குடியேற தமிழ்த் தரப்பில் எந்தத் தடையும் இல்லை – தடை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு:-சீவீகே சிவஞானம் காணிகளை மட்டும் அல்ல சுடலைகளை கூட கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர் என அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அலை நிகழ்ச்சியில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நடராஜா குருபரனால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு காரசாரமான பதிலை அளித்த அவர் முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் குறித்து தெரிவித்த போது முஸ்லீம்கள் வடக்கில் மீளக் குடியேற தமிழ்த் தரப்பில் எந்தத் தடையும் இல்லை தடை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என சீவீகே சிவஞானம் தெரிவித்துள்ளார். மிகுதியை ஒலிவடிவில் கேளுங்கள…

  3. ஆண் அழகன் போட்டியில் பறிபோனது வெற்றி வாய்ப்பு ; நடுவரை தூக்கி வீசிய போட்டியாளர் (வீடியோ இணைப்பு) கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ண ஆண் அழகன் போட்டி நடைபெற்றது. இதில் கிரேக்கத்தின் பிரபல ஆண் அழகர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பர் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார். ஆனால் நடுவர்கள் வெற்றியாளராக…

  4. Earbuds ஆபத்து: செவித்திறன் குறைந்தவரின் காதுக்குள் ஐந்து ஆண்டுகளாக இருந்த 'இயர் பட்ஸ்' - என்ன நடந்தது? 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனது செவித்திறன் குறைந்து வருவதாக நினைத்துக்கொண்டிருந்த ஒருவரின் காதுக்குள் 5 ஆண்டுகளாக இயர்பட்ஸ் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அது அகற்றப்பட்டுள்ளது. பிரிட்டனின் டோர்செட் பகுதியின் வேமெளத்தைச் சேர்ந்தவர் வாலஸ் லீ. இதுநாள்வரை இரைச்சல் மிக்க விமானத் துறையில் பணியாற்றியது அல்லது ரக்பி போட்டியின் போது ஏற்பட்ட பழைய காயம் தன்னுடைய செவித்திறன் குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்று இவர் நினைத்துக் கொண்டிருந்தார். அண்மையில் அவர், உடலின் உட்பகுதியை …

  5. திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனை வீதியில் கட்டியிழுத்துச் சென்ற மணமகள் (வீடியோ) திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனின் கைகளைக் கட்டி, திருமண மண்டபத்தை நோக்கி மணமகள் வீதியில் இழுத்துச்சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றது. இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேற்படி மணமகள், இத் திருமணத்தை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் திருமணத் தினத்தில் மணமகனுக்கான ஆடை அலங்காரங்களைக்கூட செய்துகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மணமகள் அந்நபரை வீதியில் கட்டி இழுத்துச் சென்றாராம். தன்னை விட்டுவிடுமாறு அந் நபர் கோருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், 'நீர் என்னை திருமணம் செய்யப் போகிறீரா இல்லையா?' என கேட்டவாறு அவரை மணமக…

    • 3 replies
    • 346 views
  6. மதுரையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முக கவச வடிவில் பரோட்டா விற்பனை மதுரையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பதிவு: ஜூலை 09, 2020 14:39 PM மதுரை, மதுரையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் வருகிற 12ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ண…

  7. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலிருந்து விலக ரணில் தீர்மானமா? August 9, 2020 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிர மசி ங்க கட்சியின் தலைமையிலிருந்து நீக்க முடிவு செய் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் வலுவான தோல்வி மற்றும் கட்சியின் மூத்தவர்களால் மேற்கொள்ளும் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் கட்சி மூத்தவர்களுடனான சந்திப்பின் போது, ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர் பத வியை இராஜினாமா செய்யத் தயாராக இருப் பதாக்கத் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ரணில் தலைமைத்து வத்தில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பி…

  8. யாழில் 4,000 நாய்களுக்கு தடுப்பூசி! யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4,000 நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும் வீதியில் கட்டாக்காலி நாய்களாக திரிந்த நாய்கள் என 3, 983 நாய்களுக்கு ஏ.ஆர். வி தடுப்பூசி செலுத்துப்பட்டுள்ளது. அதேவேளை 290 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1358479

  9. ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: 6பேர் காயம் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம்- மெனிக்பாம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் சென்றிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பகுதிக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி வேட்பாளரான ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், மஸ்தானின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்…

  10. டிரக்கில வெங்காயம் வைத்திருந்தால் போதும்; 1300 கி.மீ. பயணம் சாத்தியம்: லாக் டவுனை வென்ற மும்பை நபரின் வினோத முயற்சி டிரக்கில் வெங்காயம் வைத்திருந்தால் போதும். தனது சொந்த கிராமத்திற்குச் செல்ல 1300 கி.மீ. பயணம் சாத்தியம் என்று மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் நிரூபித்துள்ளார். இந்தியாவில் முதல் கட்ட லாக் டவுனை அமல்படுத்தியபோதே நகரங்களிலிருந்து வாகனங்களிலும் நடைபயணமாகவும் சொந்த ஊர்போய்ச் சேர்ந்தவர்கள் ஏராளம். சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டவர்களும் உள்ளனர். மும்பை விமான நிலையத்தில் பணிபுரியும் பிரேம் மூர்த்தி பாண்டே, அலகாபாத்தின் புறநகரில் உள்ள தனது சொந்த கிராமத்தை அடைய ஒரு வினோத முயற்சியை மேற்கொண்டார். தனது 1,300 கி.மீ. டிரக் பயணம்…

  11. வீதிக் காவல் தடையைத் தாண்டி பாப்பரசரிடம் தனிப்பட்ட கடிதத்தைக் கையளித்த 5 வயதுச் சிறுமி அமெ­ரிக்­கா­வுக்கு விஜயம் செய்­துள்ள பாப்­ப­ரசர் பிரான்சிஸ் வாஷிங்டன் நக­ரி­லுள்ள வீதி­யொன்­றி­னு­டாக தனது விசேட வாக­னத்தில் புதன்­கி­ழமை பய­ணித்த போது, 5 வயது சிறு­மி­யொ­ருவர் ஒரு­வாறு பாது­காப்பு தடையைத் தாண்டி வந்து பாப்­ப­ர­ச­ரிடம் தனிப்­பட்ட கடி­த­மொன்றை கைய­ளித்து பாப்­ப­ர­ச­ரது மட்­டு­மல்­லாது அங்கு கூடி­யி­ருந்த அனை­வ­ரதும் கவ­னத்தையும் ஈர்த்­துள்ளார். கொன்ஸ்­ரி­ரி­யூஷன் வீதியின் இரு மருங்­கிலும் அமைக்­கப்­பட்­டி­ருந்த பாது­காப்புத் தடை­க­ளுக்கு அப்பால் பாப்­ப­ர­சரை காணும் முக­மாக கூடி­யி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களில் சோபி குரூஸ் என்ற மேற்­படி சிறு­மியும் ஒரு­வ…

  12. யேர்மனிய நீதிமன்றத்திற்கு அன்று விசாரணைக்கு வந்த வழக்கு அந்த இளம் நீதிபதிக்குப் புதிதாக இருந்தது. தனது மச்சாள் அவா(16) தன்னை திருமணம் செய்ய மறுக்கிறாள் என்பதற்காக அட்ணன்(26) என்ற இளைஞன் அவளை அடித்து, துன்புறுத்தி கொலைப் பயமுறுத்தலையும் செய்திருக்கிறான் என்பதுதான் வழக்கு. இருவருமே ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். 2020இல் அட்ணன் 13 வயதாக இருந்த அவாவை த் திருமணம் செய்வதற்காக, இஸ்லாமிய முறைப்படி 6500 யூரோக்களை மணப்பெண்ணுக்கான பணமாகக் கொடுத்திருக்கிறான். அந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாகத் தான் தங்கியிருந்த அகதிகள் முகாமில் கொண்டாடியும் இருக்கிறான். ஆப்கானிஸ்தானில் விவசாயம் செய்து கொண்டிருந்த அட்ணனுக்கு படிப்பறிவு கிடையாது. 2015இல் யேர்மனிக்கு அகதியாக வந்…

  13. து நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், தங்கைக்கு பதிலாக பரீட்சைக்குத் தோற்றிய பட்டதாரி சகோதரியொருவரை அடையாளம் கண்ட பரீட்சை மேற்பார்வையாளர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இரு சகோதரிகளும் எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவ்விருவரையும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உயர்தரப் பரீட்சையின் நடனம் பாடப் பரீட்சையின் போதே இவர்கள் ஆள்மாறாட்டம் செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும் கொலன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78099-20…

    • 1 reply
    • 345 views
  14. சம்பவம் நடந்த அடுத்த மூன்று, நான்கு நாள்களில் தனது குடும்ப நபர்கள் 7 பேரை ஷப்னம் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், கொலை செய்வதற்கு ஷப்னமின் காதலர் சலீம் உதவியதும் தெரியவந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகாவை சேர்ந்தவர் ஷப்னம். இவருக்கும் இவர் காதலர் சலீமுக்கும் தூக்குத் தண்டனை வழங்கி, 2008-ம் ஆண்டு அம்ரோகா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் இருவரும். இரண்டு நீதிமன்றங்களுமே தண்டனையைக் குறைக்க இயலாது என்று மறுக்க, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஷப்னம் மற்றும் சலீமை தூக்கிலிடுவதற்கான மரண தண்டனைக்கான ஆணை விரைவில் பிறப்…

  15. மதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின் பெரியமேட்டில் கைது சென்னை மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதுரவாயலில் மகன், மகளுடன் தனித்து வசித்த வழக்கறிஞர், கடந்த 2015-ம் ஆண்டு தனது மகன், மகளைக் கொன்று தலைமறைவான நிலையில், 5 ஆண்டுகள் போலீஸாரின் கடும் தேடலுக்குப் பின் சென்னையில் சிக்கினார். சென்னை மதுரவாயல் காவல் எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (56). இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி. இவரும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரியதர்ஷினி (13) என்ற மகளும், ஜெயகிருஷ்ணன் பிரபு (…

  16. புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்..! (காணொளி இணைப்பு) தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று மலேயா புலிக்குட்டிகளை, அவுஸ்திரேலிய வாசத்தை சேர்ந்த நாயொன்று பராமரித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புலிக்குட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் பிறந்துள்ளதோடு, குறித்த புலிக்குட்டிகளின் தாய், அவற்றை கைவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் மிருக்காட்சிசாலையில் பணியிலிருந்த பெண் பணியாளர் தனது வீட்டிற்கு எடுத்த…

  17. அமெரிக்கா- ஐந்து வருடங்களின் பின்னர் 5-வயது சிறுவன் பிட்சாவை விரும்பி சாப்பிட தனது மூத்தசகோதரர்களுடன் விளையாட கூடிய நிலைமைக்கு திரும்பியுள்ளான். கதைக்கும் போது அவனது சொற்கள் தடிப்பானதாகவும் இயந்திரமயமானதாகவும் தெரிகின்றது. ஒரு சிறிய துண்டு பிட்சா சாப்பிடுவதும் கூட ஒரு சவாலாக உள்ளது. அரிசோனாவைச் சேர்ந்து எமெற் றோச் என்ற இச்சிறுவன் 2010-ல் ஒரு பொத்தான் பட்டரியை—கனடிய 5சத நாணயம் அளவிலான டிவிடி ரிமோட் கொன்ட்ரோல்-விழுங்கியுள்ளான். இந்த சம்பவம் முதலில் கவனிக்கப்படவில்லை. இவனின் தாயாரும் அவதானிக்கவில்லை. சில நாட்களின் பின்னர் சிறுவன் இருமும் போது இரத்தவாந்தி எடுத்தான். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று எக்ஸ்-ரே எடுத்த போது பொத்தான் பட்டரி கண்டுபிடிக்கப்பட்டது. ஊடுகதிர்வீச்சிய…

  18. நாடுமுழுவதும் பதிவு செய்யப்படாத சுமார் 5,000 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை நாட்டில் பதிவு செய்யப்பட்ட 19,000 பாரம்பரிய வைத்தியர்களும், 4,500 பதிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்களும், 3,000 டிப்ளோமா ஆயுர்வேத வைத்தியர்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத வைத்திய சபைக்கு பதிவு செய்வதற்கு கிட்டத்தட்ட 1,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் பாரம்பரிய வைத்திய முறையை முறைப்படுத்தும் வகையில், உள்ளுர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத த…

  19. 'கோவில்' படத்தில் புல்லட் பாண்டியை ஞாபகம் வைத்து விலங்குகள் பழிவாங்குவது போல் உண்மையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் பெண் புலியைக் கொன்ற வேட்டைக்காரனைத் தேடிவந்து ஆண் புலி கொன்றதாகச் செய்திகள் வெளியாகின. பழிதீர்க்கவே இதை அந்தப் புலி செய்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். ஆனால், விலங்கு ஆர்வலர்கள் அப்படித் திட்டம் போட்டுக் கொல்லும் திறன் புலிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்றனர். பழிவாங்கும் குரங்குகள்! இதே போன்று இமாச்சல் பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசம் வரை பயணம் செய்த ஒரு பெண் சிறுத்தை பிடிபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையின் இந்த நீண்ட பயணத்தி…

  20. விகாரையில் ஏலம் விடப்பட்ட கசிப்பு போத்தல் ! அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ மற்றும் மடத்துகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற சந்தை மற்றும் பாடல் கச்சேரியில் இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் கசிப்பும் ஏலத்திற்கு விடப்பட்டன. . ஆலயம் அமைந்துள்ள நகரின் பிரதான பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் துறவி மற்றும் இளம் அமைப்பாளர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து இந்த ஏலத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு மதுப்போத்தல்களை ஏலத்தில் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது . இந்நிலையில் குறித்த மதுப்போத்தல்களை கைப்பற்ற பலரு…

  21. 98 வயதிலும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்! 8 வயதிலும் மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரான்ஸின் மேற்கு பகுதியை சேர்ந்த கிறிஸ்டியன் செனேய் ஒரு வைத்தியர். 1951ஆம் ஆண்டில் முதன்முதலாக மருத்துவம் பார்க்க தொடங்கிய அவர், பரிஸ் புறநகர் பகுதியில் மருத்துவமனை திறந்து வாரத்துக்கு 2 நாட்கள் காலையில் சிகிச்சை அளித்து வருகிறார். பரிஸ் புறநகர் மக்களும், அவரிடம் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 98 வயதிலும் மக்களுக்கு மருத்துவம் செய்து வரும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளது. http://athavannews.com/98-வயதிலும்-மக்களுக்கு-மரு/

  22. நியூஸிலாந்து றக்பி அணியின் அங்கியை தனது ஊழியர்களுக்கு இன்று அணிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஆஸியின் கான்டாஸ் நிறுவனம் உலகக் கிண்ண றக்பி சுற்­றுப்­போட்­டியில் நியூ­ஸி­லாந்து அணி சம்பி­ய­னா­கி­ய­தை­ய­டுத்து, அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிர­தான விமான சேவை நிறு­வ­ன­மான கான்டாஸ் நிறு­வனம், இன்று திங்­கட்­கி­ழமை தனது விமா­னங்­களின் ஊழி­யர்கள் அனை­வ­ருக்கும் நியூ­ஸி­லாந்து அணியின் சீரு­டை­யான கறுப்பு நிற அங்­கியை அணி­விக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. உலகக் கிண்ண றக்பி போட்டி தொடர்­பாக அவுஸ்­தி­ரே­லி­யாவின் கான்டாஸ் நிறு­வ­னத்­துகும் நியூ­ஸி­லாந்தின் எயார் நியூ­ஸிலண்ட் நிறு­வனத்­து­க்கும் இடையில் நடை­பெற்ற பந்­த­யமே இதற்குக் காரணம். அவுஸ்­தி­ரே­லி­யாவும் நிய…

  23. பேரினவாத சிங்கள அரசுக்கு மட்டுமல்ல, அதன் சகபாடிகளுக்கும் இரண்டு விடயங்களில் தமிழீழ மக்களது மௌனமும், அமைதியும் பெரும் எரிச்சலை மூட்டி வருகின்றது. ஒன்று, யுத்தக் குற்றச்சாட்டிலிருந்து சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் எந்தவித நகர்வுகளுக்கும் அவர்கள் அசைந்து கொடுப்பதில்லை. இன்னொன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தின் மூலம் பேரினவாதிகளது அரச எதிர்ப்புப் போராட்டத்தினுள் தமிழ் மக்களை உள்ளிளுக்கும் தந்திரத்திற்கும் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. கடந்த வருட இறுதியில் சிறிலங்கா அரசுமீது மேற்குலக நாடுகள் கொண்டுவந்த போர்க் குற்றச்சாட்டு முன்மொழிவுகளை முறியடிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசுக்குப் பேருதவி செய்தது. இடையில் தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையில் கல…

  24. கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் குடும்ப பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாயே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் காணப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிசாரால் கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.