செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7086 topics in this forum
-
போலி போலீஸ் நிலையம்: 8 மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த நிஜ போலீஸ் – சிக்கியது எப்படி? christopherAug 19, 2022 19:59PM பீகாரில் இரு பெண்கள் உட்பட 6 ரவுடிகள் சேர்ந்து போலியான போலீஸ் நிலையத்தை கடந்த 8 மாதங்களாக நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஓட்டலில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்த இரு பெண்கள் உள்ளிட்ட 6 ரவுடிகள், அதனை போலீஸ் நிலையமாக மாற்றினர். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், காவலர் என்ற ரேங்க் வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர். அதற்கு ஏற்றவாறு நாட்டு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினர். நடை, உடை, பாவனையில் ய…
-
- 2 replies
- 292 views
- 1 follower
-
-
பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் கார் விபத்தில் பலியான தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அதே போஸ்களில் மகளுடன் புகைப்படம் எடுத்து அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார். பிரேசிலைச் சேர்ந்தவர் ரபேல் டெல் கோல். பிளாக்கரான(blogger) அவரின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார். அவர்களுக்கு ரைசின்ஹா(4) என்ற மகள் உள்ளார். 27 வயதில் பலியான தனது மனைவியை பிரிந்த ரபேல் தனது வாழ்வில் அனைத்தும் இருந்தும் இல்லாதது போன்று உணர்ந்தார்.அவருக்கு தனது மகளை பார்க்கையில் மனைவியின் ஞாபகம் வந்தது. திடீர் என்று ஒரு நாள் மகளை பார்த்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த தருணத்தை மீண்டும் வரவழைக்க விரும்பினார். இதையடுத்து அவர் புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து …
-
- 0 replies
- 292 views
-
-
கோகுலம் விருந்தினர் மாளிகையில் நன்கொடையைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கு அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும். திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், எல்லோரும் 40 அடி தள்ளி நின்றுதான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது 10,000 ரூபாய் பணம் கட்டினால் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை அருகில் நின்று தரிசிக்கலாம். தீபாவளி இனிப்பாக இனிக்கும் இந்தச் செய்தியை விரிவாகப் பார்ப்போம். Tirupati திருமலை திருப்பதி வேங்கடசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, சர்வ தரிசனம், நேர ஒதுக்கீட…
-
- 0 replies
- 292 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கான அழுத்தத்தைப் பிரயோகித்து, நேர்மையை நிலைநாட்டுவதிலும், உண்மை, நீதி, நிலையான மீளிணக்கப்பாடு போன்றவற்றுக்கு ஏங்கித் தவிப்பவர்களுக்காக – தலைமைத்துவ ஆளுமையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கேட்டுக்கொண்டுள்ளார், சிறிலங்காவின் அமைதிக்கும் நீதிக்குமான பரப்புரை அமைப்பின் தலைவர் எட்வேர்ட் மொரிமர். பிரித்தானியாவைத் தளமாக கொண்டியங்கும் huffingtonpost ஊடகத்தில் எழுதியுள்ள பகிரங்க மடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபை, நியூயோர்க், NY 10017 அன்பிற்குரிய செயலாளர் நாயகம் அவர்கட்கு, சிறிலங்காவில் பொறுப்புக் கூறல் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடு…
-
- 0 replies
- 292 views
-
-
அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை t அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய டாக்டர் தம்பதியர் ரூ.1,300 கோடி நன்கொடை செப்டம்பர் 27, 2017, 04:45 AM ஹூஸ்டன், அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரில், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருபவர் டாக்டர் கிரண் பட்டேல். இந்திய வம்சாவளியான இவர் இதய நோய் மருத்துவ நிபுணராகவும் தொழில் செய்துள்ளார். இவரது மனைவி, பல்லவி பட்டேல். இவர் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர். இவர்கள் தாங்கள் நடத்தி வருகிற பட்டேல் குடும்ப அறக்கட்டளையின் …
-
- 3 replies
- 291 views
-
-
அண்மையில் நிகழ்ந்த ஜி 20 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு வைக்கப்பட்ட நாடுகளை குறிப்பிடும் பலகையில்.. மோடிக்கு பாரத் (BHARAT) என்று குறிப்பிட்டு நாட்டுப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அப்ப மோடி ஹிந்தியாவின் சார்ப்பாக ஜி20 இல் கலந்து கொள்ளவில்லையா..??! அல்லது ஹிந்தியாவை மோடி பெயரளவில் ஒழித்துக்கட்டி விட்டாரா..??! https://www.bbc.co.uk/news/world-asia-india-66763836
-
- 1 reply
- 291 views
-
-
இணையத்தள ஆபாச படங்களால் கவரப்பட்ட 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. தனது கணினியில் இணையத்தள ஆபாசப் படங்களை பல மணி நேரமாக கண்டு களிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த இந்த சிறுவன் இரு வருடங்களாக அந்த சிறுமியை திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளான். மேற்படி சிறுவன் ஆபாச படங்களை பார்ப்பதை அவதானித்தும் அவனது தாயார் அவனை தடுக்காதிருந்துள்ளார். அத்துடன் தாய் பாலியலுறவில் ஈடுபடுவதையும் சிறுவன் பல தடவைகள் காண நேர்ந்துள்ளது. இந்நிலையில் சிறுவன் தான் குறிப்பிட்ட சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளான். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த வட வேல…
-
- 0 replies
- 291 views
-
-
அமெரிக்க நாட்டின் டெக்சாசை சேர்ந்தவர் மெல்பா மெபேன் (வயது 90). மெல்பா 16 வயதாக இருந்தபோது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் லிப்ட் ஒபரேட்டர் பணிக்கு சென்றார். அதே நிறுவனத்தில் ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் 74 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்தார். இந்த நிலையில் 90 வயதை கடந்த மெல்பா கடந்த 30ஆம் திகதி பணி நிறைவு பெற்றார். நான் வீட்டில் இருந்ததை விட எனது நிறுவனத்தில் தான் அதிக நேரம் செலவழித்தேன். தற்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது என்றார். மெல்பா தான் வேலை செய்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்ததாக தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article…
-
- 2 replies
- 291 views
- 1 follower
-
-
கொடிய விஷம் கொண்ட நாகத்துக்கு சத்திரசிகிச்சை செய்த சம்பவம் ஒன்று நாட்டில் பதிவாகியுள்ளது. நாக பாம்பின் வயிற்றுப் பகுதியில் காணப்பட்ட கட்டியால் ஏற்பட்ட வலி காரணமாக இந்த நாகப்பாம்பு இரண்டரை மாதங்களுக்கு மேல் சாப்பிட முடியாமல் தவித்துள்ளதாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை அளித்த கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை வைத்திய பீடத்திலுள்ள வனஜீவராசிகள் பிரிவு வைத்தியர்களுடன் இணைந்து இந்த நாக பாம்பிற்கு சத்திரசிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/256287
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (29ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 5.7% பேர் ஒரு முறையாவது புகைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவர்களில…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி! Vhg ஆகஸ்ட் 13, 2025 இலங்கை அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கஞ்சா பயிரிட அனுமதித்துள்ளது. இதன் முதன்மை நோக்கம் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் கஞ்சா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி இந்தத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 37 விண்ணப்பங்களில், தகுதிவாய்ந்த 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் திட்டங்கள…
-
-
- 4 replies
- 291 views
- 1 follower
-
-
சார்லஸ்- டயானா விவகாரத்திற்கு காரணமாக அமைந்த பேட்டி - விசாரணை நடத்த உத்தரவு லண்டன் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன், இளவரசர் சார்லஸ் (72). இவர், தன் முதல் மனைவி இளவரசி டயானாவிடம் இருந்து, 1996-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்த விவாகரத்திற்கு, அதே ஆண்டு, டயானா அளித்தபேட்டி ஒன்று தான் காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. பி.பி.சி., தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பனோரமா' என்ற நிகழ்ச்சிக்கு, டயானா அளித்த அந்த பேட்டி, அரச குடும்பத்தை அதிரவைத்தது. பத்திரிகையாளர் மார்ட்டின் பாஷிர் எடுத்த அந்த பேட்டியை, இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர், நேரலையில் பார்த்தனர்.அந்த பேட்டியில், இளவரசர் சார்லசுக்கும், அவரது தற்போதைய மனைவியான கமிலா பார்க்கருக்கும் இ…
-
- 0 replies
- 291 views
-
-
-
- 1 reply
- 291 views
-
-
காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது December 19, 2020 காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்றிரவு பொழிந்த கடும் மழையின் போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடை ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #காங்கேசன்துறை #சுனாமி #எச்சரிக்கைகோபுரம் #மண்சரிவு https://globaltamilnews.net/2020/154552/
-
- 0 replies
- 291 views
-
-
நபா சிறையில் இருந்தபடியே பேஸ்புக்கில் போட்டோ போட்டு 900 லைக் வாங்கிய பயங்கரவாதி சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் நபா சிறைச் சாலையை தகர்த்து காலிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் உட்பட 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பினர். இந்த சம்பவத்தில் சிறைச்சாலையில் பாதுகாப்புக் குறைபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த நபா மத்திய சிறைக்குள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிரடியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, சிறைக்குள் புகுந்து "காலிஸ்தான் விடுதலை முன்னணி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ உள்பட 6 குற்றவாளிகளை மீட்டுச் சென்றுள்ள சம்பவம் பெ…
-
- 0 replies
- 291 views
-
-
மோடி - ஒபாமா சந்திப்புக்கு "லைக்" போட்ட மார்க் டெல்லி: பேஸ்புக்கில் லைக் போடுவது என்பது நமக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது போல. ஆனால் அந்த பேஸ்புக்கை நிறுவிய மார்க் ஸுகர்பர்க் ஒரு புகைப்படத்துக்கு லைக் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி கட்டிப் பிடித்து வரவேற்கும் புகைப்படத்துக்குத்தான் லைக் கொடுத்துள்ளார் மார்க். மோடி - ஒபாமா சந்திப்புக்கு டெல்லி வந்த ஒபாமாவை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று கட்டிப் பிடித்து வரவேற்றார். இந்தப் புகைப்படம் உலக அளவில் தற்போது பிரபலமாகி விட்டது. கிட்டத்தட்ட வைரல் போல மாறியுள்ளது. உச்சமாக, பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் இந்தப் புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளார். மார்க்கே லைக் …
-
- 0 replies
- 291 views
-
-
நேற்று இரவு குருமெட்டிய, கித்துல்கல அருகே கொழும்பு- ஹற்றன் வீதியில் ஓடும் முச்சக்கர வண்டியில் இருந்து ஒரு மாத கைக்குழந்தை ஒன்று விழுந்துள்ளது. நீர்கொழும்பில் இருந்து ஏனையவர்களுடன் பயணித்த தாய், முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் உறங்கிக் கொண்டிருந்த போது, கைக்குழந்தை மடியிலிருந்து விழுந்துள்ளது. முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து வந்த காரில் வந்தவர்கள் வீதியில் குழந்தை இருப்பதை அவதானித்து கித்துல்கல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், குழந்தையை உடனடியாக கித்துல்கல வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அம்மாவும் ஏனையவர்களும் இந்தச் சம்பவத்தை அறியாமல் பயணத்தைத் தொடர்ந்தனர். குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர்கள் மீண்டும் தேடிச் சென்று பார்த்தபோது, குழந்தை மருத்…
-
- 0 replies
- 291 views
- 1 follower
-
-
யாழ்.போதனாவில்... சிகிச்சை பெற்று வந்த, கொரோனா நோயாளியை காணவில்லை! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த 16ஆம் திகதி சாவகச்சோரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தீவிரமடைந்ததால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். மறுநாள் 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவரது மனைவி சென்று பார்த்தபோது கணவனை அங்கு காணவில்லை. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத…
-
- 0 replies
- 291 views
-
-
உலகிலேயே மிகப் பெரிய வாயை கொண்ட. - 21 வயதானபெண் Vhg செப்டம்பர் 13, 2022 அமெரிக்காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் எனும் 21 வயதான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார். இந்த அங்கீகாரத்துடன் சமூக வலைத்தள பிரபலமாகவும் சமந்தா ரம்ஸ்டேல் விளங்குகிறார். 32 லட்சம் பேர் அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்கின்றனர். அண்மையில் அவர் பற்சிகிச்சைக்காக பற்சிகிச்சை நிலையமொன்றுக்கு சென்றார். மிகப் பெரிய வாயைக் கொண்ட சமந்தா தமது பற்சிகிச்சை நிலையத்துக்கு வருவதை அறிந்த ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், அவர…
-
- 0 replies
- 291 views
-
-
கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் சிறு குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் அல்லாத வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு விதிமுறைகள் காரண…
-
- 0 replies
- 290 views
-
-
ஐரோப்பாவில் மிகவும் குறைந்த வயதில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முதல் பெண்ணாக பிரான்சைச் சேர்ந்த பதினாறு வயதான Julie (16) அறியப்பட்டிருக்கிறாள். “உடல் ரீதியாக Julie எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தாள். முதலில் சாதாரண இருமல்தான் அவளிடம் இருந்தது. கடந்த வார இறுதியில் அவளின் நிலைமை மோசமடைந்ததால் திங்கட்கிழமை (23.03.2020) அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவரின் ஆலோசனையின்படி அவளை பாரிஸுக்கு அருகாமையில் உள்ள Longjumeau நகர மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது நிலை மோசமாக இருந்ததால் அவளை உடனடியாக Paris நகரத்தில் உள்ள Necker வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு வைத்தியர்கள் மேற்கொண்ட அதீத முயற்சி பலனளிக்காமல் Julie புதன்கிழமை இரவு மரணமடைந்து விட்டாள். …
-
- 0 replies
- 290 views
-
-
6 கோடி ரூபா அதிர்ஷ்டம் யாருக்கு – சாவகச்சேரியில் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு!! சாவகச்சேரியில் உள்ள தேசிய லொத்தர் சபையின் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட சீட்டுக்கு 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவரிடம் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது. http://newuthayan.com/story/16/6-கோடி-ரூபா-அதிர்ஷ்டம்-யா…
-
- 0 replies
- 290 views
-
-
-
- 0 replies
- 290 views
-
-
திரைப்படங்களில் குத்துப் பாடல் காட்சிகளுக்கு ஆபாசமாக உடை அணிந்து நடனமாடும் கவர்ச்சி நடிகைகளை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேசத்தின் இந்து அமைப்புத் தலைவர் ஒருவர் யோசனை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில இந்து மகாசபையில் பொது செயலாளரான நவீன் தியாகி, "திரைப்படங்களில் ஆபாச உடை அணிந்து குத்துப் பாடல் காட்சிகளுக்கு நடனமாடும் நடிகைகளை பாலியல் தொழிலாளர்களாக அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், பள்ளி மாணவிகள் குட்டைப் பாவடை, ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிய கூடாது என்றும், பள்ளிச் சிறுமிகள் செல்போன்கள் உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்ப…
-
- 0 replies
- 290 views
-
-
நீரில் நடப்பேன், நெருப்பில் குளிப்பேன், வானத்தை வில்லாக வளைப்பேன், மணலை கயிறாக்குவேன் என சில வாய்ஜாலப் பேர்வழிகள் சவடால் அடிப்பதுண்டு. இதில் முதல் சவடால் சாத்தியமானதே.., என்பதை நிரூபிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேக்கியாவை சேர்ந்த லெங்கா டான்னர் என்ற பெண் நீரின் மீது நடந்தும், ஓடியும் சாதனை படைத்து வருகிறார். 28 வயது நீச்சல் வீராங்கனையான இவர், சுமார் 20 ஆண்டுகால தீவிர பயிற்சியின் மூலம் நீரில் நடப்பது மற்றும் ஓடுவது போன்ற ஜால வித்தைகளை வெகு சாதாரணமாக நிகழ்த்தி அனைவரையும் பரவசத்துக்குள்ளாக்குகிறார். இதில் ஒரு தலைகீழ் மாற்றம் என்னவென்றால்.., நீருக்குள் தலைகீழாக பாயும் லெங்கா டான்னர், நீரின் ஆழத்தில் இருந்து உந்தி, மேல்பகுதிக்கு வரும்போது கை,க…
-
- 0 replies
- 290 views
-