Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் பயங்கரம் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய என்ஜினீயர் தற்கொலை வாஷிங்டன், அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு இந்திய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்த 4 வயது மகள் பால்கனியில் அழுதுகொண்டிருந்த சம்பவம், நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. மராட்டிய மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகையை சேர்ந்தவர் பாலாஜி ருத்ரவார் (வயது 32). இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆரத்தி (வயது 30). குடும்பத்தலைவி. இந்த தம்பதியருக்கு 2014-ம் ஆண்டு டிசம்பரில் திருமணமானது. அதைத் தொடர்ந்து, 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு நியூஜெர்சி மாகாணத்தில் நார்த் ஆர்…

  2. 'எப்படி டார்லிங்' ("Kohomada Sudu") text - பலர் வைத்தியசாலையில். கொழும்பு பொரளை பகுதியில் 35 வயது சிங்கள பெண் பக்கத்து வீட்டு 24 இளைஞருக்கு அனுப்பிய 'எப்படி டார்லிங்' text இணை பார்த்தார் கணவர். யார் என்று கேட்க, அது உங்களுக்கு தான் அத்தான், மாறி எங்கேயோ போய் விட்டது என்று மனைவி கதை விட்டார். இறுதியில் தனது டார்லிங்கை நம்பாத கணவர், அடுத்த வீட்டுக்கு வேலி பாய்ந்து போய், 'எப்படி டார்லிங்' என்று கேள்வி கேட்கப்பட்ட இளைஞரிடம், அவருக்கும், தனது மனைவிக்கும் ஏதாவது 'தொடுப்பு' இருக்குதோ எண்டு விசாரிக்க போய், கத்திவெட்டு காயங்களுடன், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவரும், கள்ள காதலரும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் உள…

  3. யாழில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை உடைத்துவிட்டு வன்முறைக் கும்பல் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்குப் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், பெறுமிக்க பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. ஒன்பது பேர் கொண்ட கும்பலே இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆறு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குறித்த வீடுகளுக்குச் சென்றிருந்த கும்பல், பெறுமதியான தளபாடங்களை அடித்து உடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார் ம…

  4. செல்வபுரம்... வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாழில் கைது! முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி கள்ளப்பாட்டுப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்…

  5. மூளப் போகுது உலகப் போர்... சிவன் மலை ஆண்டவன் உத்தரவால் பரபரப்பு!! திருப்பூர் : திருப்பூரை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுவதால் உலகப் போர் மூளலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஆண்டவர் உத்தரவு பெட்டி இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் தோன்றி ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படும். உலகநிகழ்வை குறிப்பால் உணர்த்துவதற்காக ஆண்டவன் இடும் கட்டளையே இந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஐதீகம் பக்தரின் கனவில் தோன்றும…

  6. வட்டமாகச் சப்பாத்தி சுடாததால், கர்ப்பிணி மனைவியை... வயிற்றில் எட்டி உதைத்துக் கொன்ற கணவன்! வட்டமாகச் சப்பாத்தி சுடாத கர்ப்பிணி மனைவிfயை வயிற்றில் எட்டி உதைத்தும் கழுத்தை நெரித்தும் கணவன் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டில்லியின் ஜகன்கிர்புரி பகுதியைச் சேர்ந்தவர் சிம்ரன். 22 வயதான இவர் தனது கணவர் மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். இவர் தனது கணவருடன் 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளாமல் ஓராண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிம்ரன் தற்போது மீண்டும் இரண்டாவது குழந்தைக்காக 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.வட்டமாக வராத சப்பாத்தி: இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சிம்ரன் சப்பாத்தி செய்துள்ளார். வழக்கமாக சிம்ரனுக்கு …

  7. ஆலயத்தில் திருடிய பணத்தில் நகைகள் செய்து அணிந்து வலம் வந்தவர் கைது December 1, 2021 ஆலயங்களில் திருடிய பணத்தில் ஒரு பகுதியை தனக்கு நகை செய்து அணிந்துகொண்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடமையிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தங்க நகை மற்றும் ஆலயப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர். “கொடிகாமம் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 21ஆம் திகதி 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆலயத்திலிருந்த பொருள்களும் திருட்டுப் போயிருந்தன. அதுதொடர்பில் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. …

  8. சிறுப்பிட்டியில் கேக்வெட்ட கெலியில் வந்திறங்கிய பிறந்தநாள் பெண்..

  9. நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை உலகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது. அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் ரக்வொண்Nடா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார். நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமை செல்வன் ஜனகன் அவர்களுக்குண்டு. கடந்த மூன்று ஆண்டுகளாக (16 வயதுக்குட்பட்ட…

    • 9 replies
    • 770 views
  10. பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவனை – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்... அனாமதேய துண்டுப்பிரசுரம். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் சிலதவறுகள் தண்டிக்கப்படவேண்டியவை சில தவறுகள் எமது குழுவினால் கண்டறியப்பட்டுள்ளன. தவறுகள் யாதெனில்.. பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை உடைகள் இன்றி புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அவர்களை வெருட்டி படுக்கைக்கு அழைப்பதும், பணம் பறிப்பதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அறிவுறுத்தியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பதால் தற்போது PTK 001 …

  11. https://www.youtube.com/watch?v=jArJsC2l7d8#t=75 பிளாஸ்டிக் பைகளில் குழந்தைகள்! ஆற்றை கடந்து செல்லும் அவலம் வியட்நாமில் பள்ளி செல்லும் குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வெள்ளத்தில் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு வியட்நாமின் டியன்பியன் மாகாணத்தில் உள்ள சாம்லாங் கிராமம் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இங்குள்ள ஆற்றை கடந்து சென்றால் தான் வெளி உலகை தொடர்பு கொள்ள முடியும். ஆற்றில் கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் ஒன்று வெள்ளத்தால் சிதைந்து போனதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் நபர் ஒருவர், குழந்தைகளை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, ஆற்று வெள்ளத்தில் நீந்தி சென்று அக்கரையில் விடுகின்றனர். இதேபோல…

  12. வட்டுக்கோட்டையில்... வயோதிபப் பெண்ணை, வன்புணர முற்பட்ட... சிறுவன் கைது! யாழ. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். பொன்னாலை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றி சென்ற அப்பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் பொன்னாலை காட்டு பகுதிக்குள் குறித்த வயோதிப பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, வன்புணர முற்பட்டுள்ளான். அதனை அடுத்து குறித்த பெண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ச…

  13. செத்து செத்து விளையாடலாமா…! மரணம் எப்படி இருக்கும்…! அனுபவம் வழங்கும் புதிய தொழில்நுட்பம் மரணத்தின் அனுபவம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இப்போது, அவுஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் மக்களுக்கு மரணத்தின் போது ஏற்படும் அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது அவுதிரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மரணம் எப்படி இருக்கும் என்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது மேலும் மக்கள் மரணத்தின் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்பவர் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி அமைப்பை உருவாக்கியுள்ளார். இது…

  14. ரயில்வே கேண்டீன் பிரியாணியில் செத்த எலி!... ஐயப்ப பக்தர்கள் கிலி!! விஜயவாடா: ஒரு படத்தில் கார்த்திக்கும் கவுண்டமணியும் திருமணத்தை நிறுத்த விருந்து சாப்பாட்டில் செங்கல்லை வைத்துவிட்டு கலவரம் செய்ய நினைப்பார்கள். அப்போது பக்கத்தில் சாப்பிடும் ஒருவர் ஏய், சாப்பாட்ட செத்த எலி கிடந்துச்சு... அதையே தூக்கி தூரப்போட்டுட்டு தூர் வாறிட்டு இருக்கேன். நீ என்ன கல்லு கெடக்கிறேன்னு சொல்ற என்று கூலாக சொல்லிவிட்டு சாப்பிடுவார். அதுபோல ஒரு சம்பவம் நிஜமாகவே ரயிலில் சென்ற ஐயப்ப பக்தர்களுக்கு நடந்துள்ளது. சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டுவிட்டு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பி பக்தர்கள் காய்கறி பிரியாணி ஆர்டர் செய்தனர். . அவர்களுக்கு எலி பிரியாணியை கொடுத்து கிலியை ஏற்…

  15. துபாய் நகை வியாபாரிகள் தயாரித்த ஐந்தரை கிலோ மீட்டர் நீளமும், 256 கிலோ எடையும் கொண்ட தங்கச் சங்கிலி புதிய உலக சாதனை படைத்துள்ளது. துபாயில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை அந்நாட்டின் 20-வது ஷாப்பிங் திருவிழா நடைபெறுகின்றது. இந்த ஷாப்பிங் திருவிழாவில் நூற்றுக்கணக்கான தங்க நகை வியாபாரிகள் ஸ்டால்களை அமைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர். இந்த திருவிழாவோடு பெரும் விழாவாக மேலும் ஒரு சாதனையை படைக்க துபாய் தங்க நகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். 22 கேரட் தங்கத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தங்கச் சங்கிலி ஒன்றை கையினால் தயாரிக்கும் பணியில் ஏராளமான பொற்கொல்லர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வந்தனர். இதன் மூலம் 1999-ம் ஆண்டில் 4.382 கிலோ…

  16. கனடாவின் ஒன்ராறியோ லொட்டரி மற்றும் கேமிங் கோர்ப்பரேஷன் மூலம் கடந்த 6ஆம் திகதி நடத்தப்பட்ட சீட்டிழுப்பின் போது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் ஜெயசிங்க என்பவர் பெருந்தொகை பரிசை பெற்றுள்ளார். அவருக்கு 35 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. தமக்கு வாய்ப்பு வரும் என்று தாம் எப்போதும் நம்பியதாக பரிசு கிடைத்தன் பின்னர் டொராண்டோவில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத் தொழிலாளியான ஜெயசிங்க, தமது குடும்பத்திற்காக ஒரு புதிய வீட்டை கொள்வனவு செய்யவும், தனது மகளின் கல்விக்கு செலவிடவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/259728

  17. ஒரே நாளில் இத்தனை பேருக்குப் பிறந்தநாளா? கின்னஸ்ஸில் இடம்பிடித்த குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்புஅறிவித்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப…

  18. 20 JUL, 2023 | 03:45 PM ஜேர்மனி தலைநகரில் சிங்கமொன்று அலைந்து திரிவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். பேர்ளினின் தென்மேற்கு புறநகர் பகுதியில் பெண்சிங்கமொன்று காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து சிங்கமொன்று மக்கள் குடியிருப்பிற்குள் வந்துள்ளதை காண்பிக்கும் படம் இன்று டுவிட்டரில் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து அதனை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளனர். எனினும் உள்ளுர் மிருகக்காட்சி சாலைகளும் சரணாலயங்களும் சிங்கம் எதுவும் தப்பி வெளியேறவில்லை என குறிப்…

  19. 1969இல் நாகேஸ் நடித்த உலகம் இவ்வளவுதான் என்ற திரைப்படம் வெளி வந்திருந்தது. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலில், “ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே நான் இறங்கி நீச்சல் அடிப்பேன் நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே நான் இருந்து பார்த்து இரசிப்பேன்” என்ற வரிகள் இருக்கும் இந்த வரிகளை என் நினைவுக்கு கொண்டு வந்தது, போர்த்துக்கலில் நடந்த சம்பவம் ஒன்று. போர்த்துக்கலில் உள்ள ஒரு கிராமம்தான் (São Lourenço) செள லோரென்சோ. ஆங்கிலத்தில் சொல்வதானால் St. Lawrence. கடந்த வார இறுதியில் இந்தக் கிராமத்தில் சிவப்பு வைன் ஆறாக ஓடி இருக்கிறது. அந்தச் சிறிய கிராமத்தின் வீதிகளில் ஆறாக ஓடிய சிவப்பு வைன்களின் அளவு 2.2 மில்லியன் லீற்றர்கள். வைன் தயாரிக்கு…

  20. 2023ஆம் ஆண்டின் ’மறைவுக்குப் பின்னரும் வருமானம் குவிக்கும் பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில்’ பொப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். சர்வதேசப் பிரபலங்கள் பலரும் தங்கள் படைப்புகள் மூலம், மறைவுக்குப் பின்னரும் அதிக வருமானம் குவித்து வருகின்றனர். அப்படியானவர்களை ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டு வருகிறது. நடப்பாண்டின் பட்டியல் இந்த வாரம் வெளியானது. இந்தப் பட்டியலில் பொப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மைக்கேல் ஜாக்சன் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை என்றும் ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. 115 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் மைக்கேல் ஜாக்சன், இந்தப் பட்டியலில் முதலிடம் பி…

  21. தற்போதைய காலக்கட்டத்தில் 90ஸ் கிட்ஸ்க்கு கல்யாணம் ஆவது பெரும் பாடாக உள்ளது. இந்தநிலையில், இந்தியா-கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், “நாங்கள் விவசாயம் செய்வதால் எங்களுக்கு பெண் கொடுக்க சிலர் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், இதுவரை திருமணம் ஆகாமல் உள்ளோம். இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள 50இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து, சுமார் 160 கி.மீ தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று, எங்களுக்கு மணப்பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் வழிபட்டோம்” என தெரிவித்துள்ளனர் . மேலும் சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞர்கள், திருமணத்திற்கு மணப்பெண் கிடைக்க வேண…

  22. 30 ஜனவரி 2024 வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை. மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை... அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு. கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன. வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும். 2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச…

  23. மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர். நான்கு மாடி கட்டடத்தில், 101 பெரியவர்களும், 59 சிறுவர்களும் ஒரே குடும்பமாக வசிக்கின்றனர். கடந்த, 2000ம் ஆண்டு சையோனா, கடைச…

  24. காலம் மாறுகிறது.காதலும் மாறிக்கொண்டிருக்கிறது.காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கொண்டிருக்கிறது .காதலர்கள் தங்களுக்கு இடையிலான நெருக்கத்தை உணர்த்தும் விதமும் மாறியிருக்கிறது.எல்லாம் ஒரே பாஸ்வேர்டாக மாறியிருக்கிறது. ஆம் மனம் ஒத்த காதல் ஜோடிகளை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்தும் அளவுக்கு அவர்கள் நெருக்கமானவர்கள் என்று சொல்லும் நிலையில் ஏற்பட்டிருக்கிறது. வாருங்கள் இண்டெர்நெட் கால காதலுக்கு! இந்த டிஜிட்டல் யுகத்தில் காதலை பரிமாறிக்கொள்ள இமெயில் ,பேஸ்புக் ,சாட்டிங் என புதிய வழிகள் உருவாகியிருப்பது போல காதல் நெருக்கத்தை வெளிப்படுத்தி கொள்ளவும் புதிய வழி கிடைத்திருக்கிறது.அது தான் ஒரே பாஸ்வேர்டு.அதாவது காதலர்கள் பரஸ்பரம் பாஸ்வேர்டை பகிர்ந்து க…

  25. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு(Prabhakaran) பலமாக இருந்த கருணாவை உடைத்ததற்கு ரணில்(ranil) தான் காரணம் என்பதை அறிந்த பிரபாகரன் 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு முடிவு செய்தார் என தென்னிலங்கை கட்டுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளமை வருமாறு, 2002ஆம் ஆண்டு கருணாவை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பியது பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறு. கருணா தாய்லாந்துக்கு(thailand) சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற போது இரண்டு பேரை வைத்து அவரை சிக்க வைத்தார் ரணில். கருணாவை பிரித்த ரணில் ஒருவர் அப்போதைய கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிப்பாளராக இருந்த காமினி அபேரத்ன(Gamini Abeyratn…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.