Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை…

  2. விமான நிலையத்தில் உள்ள கடையில் சட்டையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதர் பதவி விலகியுள்ளார். 77 வயதாகவும் பிக்கார்டோ வலெரோ உடல் நலப் பிரச்சனைகளுக்காக பதவி விலகியுள்ளதாக மெக்சிகோவின் வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பியூனஸ் ஏர்ஸ் விமான நிலையத்தில் உள்ள கடையில், செய்தித்தாளுக்கு நடுவே மறைத்து வைத்து புத்தகம் ஒன்றை அவர் திருடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது. தற்போது ஒரு விமான நிலைய கடை ஒன்றில் சட்டை ஒன்றை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெக்சிகோவுக்கு செல்ல விமானம் ஏறுவதற்கு முன்பு விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் கட்டணம் எதுவும் செலுத்தாமல் சட்டையை திருடி செல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்ப…

  3. தேள்களை கடத்த முயற்சித்த சீன நாட்டவர் கைது! உயிருடனான 200 தேள் பூச்சிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து அவர் சீனாவுக்கு அவற்றை கொண்டு செல்ல முயற்சித்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பயணப் பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 200 தேள் பூச்சிகளை மீட்டுள்ளனர். -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேள்களை-கடத்த-முயற்சித்த/

  4. Published By: VISHNU 21 AUG, 2025 | 03:35 AM மட்டக்களப்பில் இந்திய சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (19) காலையில் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இத பற்றி தெரியவருவதாவது; 27 வயது பெண் ஒருவர் 29 வயதுடைய ஆண் ஒருவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2023 பதிவு திருமணம் செய்துவிட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார் அவ்வாறே காதலன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில்…

  5. ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம் பாட்டி என்பவரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 2 வயதான ஆட்டுக்குட்டி ஒன்று உலகப் பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அதன் உடலில் அரேபிய மொழியில் அல்லாவின் நாமத்தைக் கொண்டிருப்பதே ஆகும். இதன் காரணமாக இவ் ஆட்டுக்குட்டியானது ஈத் அல் அட்ஹா விழாவை முன்னிட்டு 128,000 யூரோ பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/Ds2ijLnhwhY http://www.seithy.co...&language=tamil

  6. அவனுக்கு எந்த வேலையும் இல்லை. வீட்டில் சும்மா இருந்தான். ஆனால் அவன் தாய் இறந்ததும், அவனுக்கு “ஒரு வேலை” கிடைத்துவிட்டது. அது, தனது தாயைப் போல வேடமிட்டு வாழும் வேலை. வேசம் எவ்வளவு நீண்ட காலம் நீடிக்கும்? ஒருநாள் அது கலைந்து உண்மை வெளிவராமல் இருக்காது. 56 வயது மதிக்கத்தக்க அவன், தனது 82 வயதான தாய் இறந்தபின், அவரது உடலை மம்மி போல ஒரு sleeping bagஇல் சுற்றி வீட்டிலேயே மறைத்து வைத்தான். பின்னர் தாயைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, மாதந்தோறும் அவனது தாயின் ஓய்வூதியத்தையும் வருமானங்களையும் பெற்றுக் கொண்டிருந்தான். மூன்று வீடுகளின் உரிமையாளரான தாயின் பெயரில் வருடத்துக்கு சுமார் 60,000 யூரோ வருமானம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. தனது தாயின் அடையாள அட்டையை அரச அலுவலகத்தில் புதுப்பிக்கப…

  7. ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியை திருமணம் செய்து கொண்ட நபர் (வீடியோ இணைப்பு) அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் மீது கொண்ட அதீத காதலால் அந்த கையடக்கத்தொலைபேசியினை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்கர் ஒருவர் தனது ஸ்மார்ட்போனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். லாஸ் வேகஸ் நகரத்தை சேர்ந்தவர் கலைஞர் மற்றும் இயக்குனரான ஆரோன் சேர்வேனக், சமீபத்தில் லாஸ் வேகஸ் நகரத்தில் தனது ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியினை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். …

    • 4 replies
    • 783 views
  8. 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் Sex எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கையை பின்தள்ளிய எத்தியோப்பியா முதலாம் இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் ‘செக்ஸ்’ வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தில் இருந்தது. 2012ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம், இந்த வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகித்திருந்தன. எனினும், 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்தை பிட…

  9. துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதூஷ் உயிரிழப்பு By Sayan மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளார்.மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்…

  10. சாப்பாட்டு பொதியில் 'அவித்த நத்தை' இருந்தமையினால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எல்பிட்டிய நீதவான் 3000 ரூபா தண்டம் விதித்துள்ளார். எல்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் நீல் குமாரவிற்கே எல்பிட்டிய நீதவான் கேசர சமர தீவாகர மேற்கண்டவாறு தண்டம் விதித்துள்ளார். நீதிமன்றில் ஆஜராகிய எல்பிட்டிய சுகாதார பரிசோதகர் யு.கே.டி ரஞ்சித் வைத்தியசாலையிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் தாதியொருவர் 40 ரூபாவிற்கு உணவு பொதியை கொள்வனவு செய்துள்ளார். அந்த உணவு பொதியில் சுமார் 30-35 கிராம் நிறையில் அவித்த நத்தையொன்று இருந்தது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/65900--3000-.html

  11. இது ஒரு உறுதிப்படுத்தப்படாத படம். இதனை இன்று பல முஸ்லிம் இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. அத்துடன் பல முஸ்லிம் நண்பர்களின் சமூக வலைத்தளங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. செய்தி திரட்டி, உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கான பகுதி என்பதால் இங்கு இணைக்கின்றேன்.

    • 5 replies
    • 606 views
  12. முல்லைத்தீவில்... தடத்தில் சிக்கிய, பெண் சிறுத்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது முல்லைத்தீவு- கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வனஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட குறித்த பெண் சிறுத்தை, புலி வேட்டைக்காக கட்டப்பட்டிருந்த தடத்தில் சிக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேலும் சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் வில்பத்து காட்டில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1240510

  13. மணமகன் தேவை விளம்பரம் ; 10 ஆண்களை திருமணம் செய்த பெண் ; திருமணக்கோலத்தில் கைது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது. கேரள பத்திரிகையொன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் 'கணவனை இழந்த இளம் விதவைக்கு மணமகன் தேவை' என பெண்ணின் படமும் கையடக்கத்தொலைபேசி இலக்கமும் தரப்பட்டிருந்தது. அதை பார்த்த இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியை தொடர்பு கொண்டுள்ளார். கணவனை இழந்த தான் பெங்களுருவில் மென்பொருள் பொறியியலாளர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும்,ஷாலினி குறித்த இளைஞனிடம் கூறியுள்ளார். ஷாலினியின் …

  14. "வாள் வெட்டுக்குழுவை" சேர்ந்தவரை... தப்ப விட்ட பொலிஸார்! வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவைத்தனர். சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய வேளை வன்முறை கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளது. அதன் போது அயலவர்கள் கும்பலில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த நபரை தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்த அயலவர்க…

  15. 100க்கும் அதிகமான யானைக் கூட்டம் – வனவிலங்கு அதிகாரிகள் விரட்ட நடவடிக்கை February 25, 2022 அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை(24) மாலை திடீரென சம்மாந்துறை ஊடாக மஜீட் புரம் பகுதிகளை ஊடறுத்து ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாலை முதல் இரவு வரை குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் போது குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற…

  16. வேலி கடந்து சென்ற நபரை தாக்கிக் கொன்ற சிங்கம் By VISHNU 01 SEP, 2022 | 01:48 PM வேலி கடந்து சிங்கக் கூண்­டுக்குள் சென்ற நபர் ஒரு­வரை சிங்­க­மொன்று கடு­மை­யான தாக்கிக் கொன்ற சம்­பவம் கானா­வி­லுள்ள மிருகக் காட்­சி­சா­லையில் இடம்­பெற்­றுள்­ளது. ஆபி­ரிக்க நாடான கானாவின் அக்ரா மிருகக் காட்­சி­சா­லையில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் 30 வயதைக் கடந்த ஆண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி நபரின் சட­லத்தை சிங்­கத்தின் கூண்டுப் பகு­தி­யி­லி­ருந்து ஊழி­யர்கள் கண்­டு­பி­டித்­தனர் என அதிஹ­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். உட்­புற வேலிக்கு உட்­பட்ட பகு­தி­யில சிங்­க­மொன்­றினால் தாக்­கப்­ப…

  17. மிருகக் காட்சிசாலையிலிருந்து 5 சிங்கங்கள் தப்பியோட்டம்: அவுஸ்திரேலியாவில் சம்பவம் By DIGITAL DESK 3 02 NOV, 2022 | 04:00 PM அவுஸ்திரேலியாவிலுள்ள மிருகக் காட்சிசாலை ஒன்றிலிருந்து 5 சிங்கங்கள் தப்பியோடிய சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. சிட்னியிலுள்ள தரோங்கா மிருகக் காட்சிசாலையிலிருந்து வளர்ந்த ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த வளர்ந்த சிங்கமொன்றும் 4 குட்டிகளும் இன்று காலை தப்பிச் சென்றன. இதையடுத்து மிருகக் காட்சிசாலை உடனடியாக முடக்கப்பட்டது. பொலிஸாரும், மிருகங்களைக் கையாளும் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். எனினும் பின்னர் மேற்படி சிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் கூண்டுக்கு கொண்டுவரப்பட்டன. சி…

  18. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினரின் குத்தாட்டம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் 'காபி சேலஞ்ச்" என்ற சவாலை செய்த நிலையில் தற்போது 'குத்து சேலஞ்ச்" என்னும் சவாலை செய்துள்ளது. அதாவது சாரம் மற்றும் வேஷ்டியை அணிந்து கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளனர். சென்னை நகரின் 375ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர். ஈஸ்வர் பாண்டே, பிரண்டன் மெக்கலம், அஷிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, பிராவோ மற்றும் டுபிளெஸிஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/09/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%A…

  19. காணொளிக் குறிப்பு, 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 89 வயதான குர்தேவ் சிங் தனது வாழ்நாள் முழுவதையும் மோசமான சூழ்நிலையில் கழித்துள்ளார். கூலி வேலை செய்து வந்த இவர் 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வருகிறார். குர்தேவ் சிங் இப்போது ஒரேநாளில் கோடீஸ்வராகியுள்ளார். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை அவர் வென்றுள்ளார். இது மாநில அரசின் பைசாகி திருநாள் பரிசு. 10, 20 அல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே அவர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். இறுதியாக, லாட்டரியில் ஒரு பரிசை அவர் வென்றுள்ளார். …

  20. தமிழ் இணைய ஊடகங்களின் ஆர்வக் கோளாறும்.. மொழி பெயர்ப்பும்.. பாவம்.. ஒபாமா வையும் விட்டு வைக்கவில்லை. ஒபாமா ஒசாமா வை கொன்றதும் கொன்றார் அவரைப் பற்றி பல கதைகள்..! இப்போ... தட்ஸ்தமிழ் என்ற தமிழக தமிழர்கள் நடத்தும் ஊடகம்.. சொந்த நாட்டு மக்களை அதன் தலைவரே குண்டு வைத்துக் கொல்ல திட்டமிட்டுள்ளார் என்று செய்திக்கு தலைப்பிடும் படி .. ஒசாமா.. வை கொன்ற ஒபாமா விற்கு கதியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோக.. இங்கிலாந்தில் பள்ளிகளிலோ... ஒசாமா கொலையோடு.. நிறவாத இனவாதம்.. தலைவிரித்தாடுகிறது.. கிளிங்டன்.. புஷ் கொல்லாத ஒசாமாவை ஒபாமா கொன்று விட்டார். எனவே ஒருவரை கொல்ல வேண்டும் எனில்.. கறுப்பரை புக் பண்ணு எங்கிறார்கள்.. பள்ளி மாணவர்கள் பகிடியாக. ஆனால் அதற்குள் புதைந்திருக்கும்.. நிறவா…

  21. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?- வைரலாகும் நித்தியின் வீடியோ அ+ அ- பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா சர்ச்சைகள் இல்லாமல் இருந்ததே இல்லை. ரஞ்சிதா வீடியோ சர்ச்சை, ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த சர்ச்சை, மதுரை ஆதீனத்துடனான சர்ச்சை என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் தற்போது நிதியின் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. நித்தியின் வீடியோ என்றவுடன் நீங்கள் வேறுமாதிரி யோசிக்க வேண்டாம். இது அவரின் 'சொற்பொழிவு' வீடியோ. இன்னும் கொஞ்ச நாளில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான தமிழிலும் சமஸ்கி…

  22. விழுப்புரம் மாவட்டத்தில் மகளை சேர்த்து வைக்க மருமகன் வீட்டு முன்பு மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் கேசவராம் (28). மென்பொருள் பொறியாளரான இவருக்கும், சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அமுதராணி மகள் சிவரஞ்சனி (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவியை விழுப்புரத்தில் தனது வீட்டில் தங்கவைத்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது தாய் வீ…

  23. http://youtu.be/_eAGtAYW6mA பொதுவாக மிதிவெடிகளை மனிதர்களும், நாய்களும் தான் கண்டுபிடிக்கும் என்பார்கள். ஆனால் மிதிவெடிகளை கண்டுபிடிக்கும் எலிகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவ்வகையான எலிகளை மிக விரைவில் ஆப்பிரிக்க மற்றும் ஆசியாவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.