Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதூஷ் உயிரிழப்பு By Sayan மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளார்.மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்…

  2. சாப்பாட்டு பொதியில் 'அவித்த நத்தை' இருந்தமையினால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எல்பிட்டிய நீதவான் 3000 ரூபா தண்டம் விதித்துள்ளார். எல்பிட்டிய வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் நீல் குமாரவிற்கே எல்பிட்டிய நீதவான் கேசர சமர தீவாகர மேற்கண்டவாறு தண்டம் விதித்துள்ளார். நீதிமன்றில் ஆஜராகிய எல்பிட்டிய சுகாதார பரிசோதகர் யு.கே.டி ரஞ்சித் வைத்தியசாலையிலுள்ள குறித்த சிற்றுண்டிச்சாலையில் தாதியொருவர் 40 ரூபாவிற்கு உணவு பொதியை கொள்வனவு செய்துள்ளார். அந்த உணவு பொதியில் சுமார் 30-35 கிராம் நிறையில் அவித்த நத்தையொன்று இருந்தது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/65900--3000-.html

  3. இது ஒரு உறுதிப்படுத்தப்படாத படம். இதனை இன்று பல முஸ்லிம் இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. அத்துடன் பல முஸ்லிம் நண்பர்களின் சமூக வலைத்தளங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. செய்தி திரட்டி, உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கான பகுதி என்பதால் இங்கு இணைக்கின்றேன்.

    • 5 replies
    • 601 views
  4. முல்லைத்தீவில்... தடத்தில் சிக்கிய, பெண் சிறுத்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது முல்லைத்தீவு- கொக்காவில் பகுதியில் தடத்தில் சிக்கிய பெண் சிறுத்தையை வனஜீவராசிகள் திணைக்களம் பாதுகாப்பாக மீட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட குறித்த பெண் சிறுத்தை, புலி வேட்டைக்காக கட்டப்பட்டிருந்த தடத்தில் சிக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், சிறுத்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேலும் சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர் வில்பத்து காட்டில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1240510

  5. மணமகன் தேவை விளம்பரம் ; 10 ஆண்களை திருமணம் செய்த பெண் ; திருமணக்கோலத்தில் கைது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது. கேரள பத்திரிகையொன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் 'கணவனை இழந்த இளம் விதவைக்கு மணமகன் தேவை' என பெண்ணின் படமும் கையடக்கத்தொலைபேசி இலக்கமும் தரப்பட்டிருந்தது. அதை பார்த்த இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியை தொடர்பு கொண்டுள்ளார். கணவனை இழந்த தான் பெங்களுருவில் மென்பொருள் பொறியியலாளர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும்,ஷாலினி குறித்த இளைஞனிடம் கூறியுள்ளார். ஷாலினியின் …

  6. "வாள் வெட்டுக்குழுவை" சேர்ந்தவரை... தப்ப விட்ட பொலிஸார்! வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த உடமைகளுக்கும் சேதம் விளைவைத்தனர். சத்தம் கேட்டு அயலவர்கள் கூடிய வேளை வன்முறை கும்பல் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளது. அதன் போது அயலவர்கள் கும்பலில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அதேவேளை சம்பவத்தில் காயமடைந்த நபரை தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதித்த அயலவர்க…

  7. 100க்கும் அதிகமான யானைக் கூட்டம் – வனவிலங்கு அதிகாரிகள் விரட்ட நடவடிக்கை February 25, 2022 அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை(24) மாலை திடீரென சம்மாந்துறை ஊடாக மஜீட் புரம் பகுதிகளை ஊடறுத்து ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாலை முதல் இரவு வரை குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் போது குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற…

  8. வேலி கடந்து சென்ற நபரை தாக்கிக் கொன்ற சிங்கம் By VISHNU 01 SEP, 2022 | 01:48 PM வேலி கடந்து சிங்கக் கூண்­டுக்குள் சென்ற நபர் ஒரு­வரை சிங்­க­மொன்று கடு­மை­யான தாக்கிக் கொன்ற சம்­பவம் கானா­வி­லுள்ள மிருகக் காட்­சி­சா­லையில் இடம்­பெற்­றுள்­ளது. ஆபி­ரிக்க நாடான கானாவின் அக்ரா மிருகக் காட்­சி­சா­லையில் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தில் 30 வயதைக் கடந்த ஆண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி நபரின் சட­லத்தை சிங்­கத்தின் கூண்டுப் பகு­தி­யி­லி­ருந்து ஊழி­யர்கள் கண்­டு­பி­டித்­தனர் என அதிஹ­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். உட்­புற வேலிக்கு உட்­பட்ட பகு­தி­யில சிங்­க­மொன்­றினால் தாக்­கப்­ப…

  9. மிருகக் காட்சிசாலையிலிருந்து 5 சிங்கங்கள் தப்பியோட்டம்: அவுஸ்திரேலியாவில் சம்பவம் By DIGITAL DESK 3 02 NOV, 2022 | 04:00 PM அவுஸ்திரேலியாவிலுள்ள மிருகக் காட்சிசாலை ஒன்றிலிருந்து 5 சிங்கங்கள் தப்பியோடிய சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. சிட்னியிலுள்ள தரோங்கா மிருகக் காட்சிசாலையிலிருந்து வளர்ந்த ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த வளர்ந்த சிங்கமொன்றும் 4 குட்டிகளும் இன்று காலை தப்பிச் சென்றன. இதையடுத்து மிருகக் காட்சிசாலை உடனடியாக முடக்கப்பட்டது. பொலிஸாரும், மிருகங்களைக் கையாளும் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். எனினும் பின்னர் மேற்படி சிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் கூண்டுக்கு கொண்டுவரப்பட்டன. சி…

  10. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினரின் குத்தாட்டம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் 'காபி சேலஞ்ச்" என்ற சவாலை செய்த நிலையில் தற்போது 'குத்து சேலஞ்ச்" என்னும் சவாலை செய்துள்ளது. அதாவது சாரம் மற்றும் வேஷ்டியை அணிந்து கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளனர். சென்னை நகரின் 375ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர். ஈஸ்வர் பாண்டே, பிரண்டன் மெக்கலம், அஷிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, பிராவோ மற்றும் டுபிளெஸிஸ் ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆட்டம் போட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/09/26/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%A…

  11. காணொளிக் குறிப்பு, 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 50 ஆண்டுகளில் முதன் முறையாக பரிசு, அதுவும் ரூ.2.5 கோடி - ரிக்ஷா தொழிலாளி குதூகலம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 89 வயதான குர்தேவ் சிங் தனது வாழ்நாள் முழுவதையும் மோசமான சூழ்நிலையில் கழித்துள்ளார். கூலி வேலை செய்து வந்த இவர் 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வருகிறார். குர்தேவ் சிங் இப்போது ஒரேநாளில் கோடீஸ்வராகியுள்ளார். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை அவர் வென்றுள்ளார். இது மாநில அரசின் பைசாகி திருநாள் பரிசு. 10, 20 அல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே அவர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். இறுதியாக, லாட்டரியில் ஒரு பரிசை அவர் வென்றுள்ளார். …

  12. தமிழ் இணைய ஊடகங்களின் ஆர்வக் கோளாறும்.. மொழி பெயர்ப்பும்.. பாவம்.. ஒபாமா வையும் விட்டு வைக்கவில்லை. ஒபாமா ஒசாமா வை கொன்றதும் கொன்றார் அவரைப் பற்றி பல கதைகள்..! இப்போ... தட்ஸ்தமிழ் என்ற தமிழக தமிழர்கள் நடத்தும் ஊடகம்.. சொந்த நாட்டு மக்களை அதன் தலைவரே குண்டு வைத்துக் கொல்ல திட்டமிட்டுள்ளார் என்று செய்திக்கு தலைப்பிடும் படி .. ஒசாமா.. வை கொன்ற ஒபாமா விற்கு கதியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோக.. இங்கிலாந்தில் பள்ளிகளிலோ... ஒசாமா கொலையோடு.. நிறவாத இனவாதம்.. தலைவிரித்தாடுகிறது.. கிளிங்டன்.. புஷ் கொல்லாத ஒசாமாவை ஒபாமா கொன்று விட்டார். எனவே ஒருவரை கொல்ல வேண்டும் எனில்.. கறுப்பரை புக் பண்ணு எங்கிறார்கள்.. பள்ளி மாணவர்கள் பகிடியாக. ஆனால் அதற்குள் புதைந்திருக்கும்.. நிறவா…

  13. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் தெரியுமா?- வைரலாகும் நித்தியின் வீடியோ அ+ அ- பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா சர்ச்சைகள் இல்லாமல் இருந்ததே இல்லை. ரஞ்சிதா வீடியோ சர்ச்சை, ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த சர்ச்சை, மதுரை ஆதீனத்துடனான சர்ச்சை என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் தற்போது நிதியின் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது. நித்தியின் வீடியோ என்றவுடன் நீங்கள் வேறுமாதிரி யோசிக்க வேண்டாம். இது அவரின் 'சொற்பொழிவு' வீடியோ. இன்னும் கொஞ்ச நாளில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான தமிழிலும் சமஸ்கி…

  14. விழுப்புரம் மாவட்டத்தில் மகளை சேர்த்து வைக்க மருமகன் வீட்டு முன்பு மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் கேசவராம் (28). மென்பொருள் பொறியாளரான இவருக்கும், சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அமுதராணி மகள் சிவரஞ்சனி (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவியை விழுப்புரத்தில் தனது வீட்டில் தங்கவைத்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது தாய் வீ…

  15. http://youtu.be/_eAGtAYW6mA பொதுவாக மிதிவெடிகளை மனிதர்களும், நாய்களும் தான் கண்டுபிடிக்கும் என்பார்கள். ஆனால் மிதிவெடிகளை கண்டுபிடிக்கும் எலிகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவ்வகையான எலிகளை மிக விரைவில் ஆப்பிரிக்க மற்றும் ஆசியாவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

  16. நி்யூயார்க் நகருக்கு வருகை தந்திருந்த அதிபர் ஒபாமா, திடீர் பயணமாக அங்குள்ள பிரபலமான சென்டிரல் பார்க்குக்குச் சென்றார். பாதுகாப்புப் படையினர் புடை சூழ அவரும், மகள்கள் மலியா, சாஷா இருவரும் பார்க்குக்கு வருகை தந்தது அங்கிருந்த பொதுமக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால் அதிபரின் பாதுகாப்புப் படையினர்தான் பெரிய அலப்பறையை செய்து விட்டனர். மோட்டார் வாகனங்களில் தபதபதவென வந்த அவர்கள் கூட்டம் சேர விடாமல் மக்களை ஆங்காங்கு ஒதுங்கிப் போகச் செய்து பரபரப்பைக் கிளப்பினர். ஆனால் ஒபாமாவும், அவரது மகள்களும் சராசரி அமெரிக்கர்கள் போல இயல்பாக நடந்து கொண்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒபாமா பார்க்கில் இருந்தபோது ஏகப்பட்ட ஹெலிகாப்டர்கள் சுற்றியபடி இருந்தன. போலீஸ் படையினர் உஷாராக இருந்தன…

    • 0 replies
    • 321 views
  17. யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத க…

  18. சர்வதேசத்தை ஏமாற்ற காலத்திற்கு காலம் பல்வேறு குழுக்களை அமைத்துவரும் சிறீலங்காவின் புதிய அவதாராகமாக பிறப்பெடுத்துள்ளது ‘இராணுவ நீதிமன்றம்’. போர் நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தபோது நல்லிணக்க மற்றும் கற்றுக்கொண்ட ஆணைக்குழு ஒன்றை மகிந்த அமைத்து காலத்தை ஓட்டிவந்தார். தங்களது நிபுணர் குழுவின் அறிக்கையைக்கூடக் கிடப்பில் போட்டுவிட்டு, மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து இலவுகாத்த கிளியாகக் காத்துக்கிடந்தது ஐ.நா. ஆனாலும் மகிந்த காலத்தை இழுத்தடிப்பதைப் புரிந்துகொண்ட, மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் உடனடியாக அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அழுத்தம் போட்டன. வேறுவழியின்றி மகிந்தவும் அறிக்கையை வெளியிட்டுவைத்தார். மகிந்தவி…

  19. பட மூலாதாரம்,NSW AMBULANCE படக்குறிப்பு, நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார். எழுதியவர், ஃப்ளோரா ட்ரூரி பதவி, பிபிசி நியூஸ் ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் நடைபயணம் சென்ற போது கீழே விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, இரு பாறைகளுக்கு நடுவே பல மணிநேரம் தலைகீழாக சிக்கிக்கொண்டார். மெட்டில்டா கேம்பெல் எனும் அப்பெண் இம்மாத தொடக்கத்தில் நியூ சௌத் வேல்ஸ் ஹண்டர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்து சென்ற போது, பாறை இடுக்கில் தவறி விழுந்தார். அவரை சுமார் ஏழு மணிநேரம் போராடி மீட்க வேண்டியிருந்தது. பாறைகளை நகர்த்துவது உட்பட “சவாலான” மீட்புப்பணிகளை அவசர சேவை பிரிவி…

  20. இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன், மாத்தளன், இரட்டை முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் எலும்புகளை உக்க வைப்பதற்கே இவை இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுகின்றது. யுத்தம் முடிவுற்று மூன்றாண்டுகள் முடிவுற்ற நிலையில் மேற்படி பகுதியில் இன்னமும் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில், அங்கிருக்கும் போர் எச்சங்களையும் குறிப்பாக போர்குற்றம் தொடர்பான எச்சங்களையும் அழிக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. http://eeladhesam.com/

  21. தாடி வைத்திருந்த காரணத்திற்காக வேலை கொடுக்க மறுத்த நிறுவனம் ஒன்று, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் லண்டனில் நிகழ்ந்துள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்த சீக்கியரான ராமன் சேத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனமான எலிமென்ட்ஸ் பெர்சனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேர்முக தேர்விற்கு சென்றார். லண்டனில் உள்ள சொகுசு கிளாரிட்ஜ் ஹோட்டலில் பணிபுரிய வாய்ப்பு கேட்டு சென்ற அவரை தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு எடுக்க குறிப்பிட்ட நிறுவனம் மறுத்து விட்டது. இதனை அடுத்து தொடர்ந்து ராமன் சேத்தி லண்டன் வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித…

    • 0 replies
    • 528 views
  22. அவுஸ்ரேலியாவில் காட்டு தீயால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிதி சேகரிக்க வித்தியாசமான முறையில் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் அமெரிக்க மொடல் அழகி கெய்லன் வாட் (Keylen Ward)என்ற 20 வயது மொடல் அழகி. ஐந்தே நாட்களுக்குள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பாதிக்கபட்ட மக்களுக்ககாக திரட்டி உள்ளார். உதவி நிறுவனத்திற்கு 10 டொலர்களுக்கு மேல் வழங்கும் நபருக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி வைப்பதாக உறுதியளித்து ஐந்து நாட்களுக்குள் ஒரு மில்லியன் டொலரை அந்த நிறுவனத்திற்கு திரட்டி கொடுத்துள்ளதோடு தான் உறுதியளித்தபடி உதவி செய்த நபர்களுக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி தனது உறுதி மொழியை காப்பாற்றியும் உள்ளார். https://www.20min.ch/people/international/story/Model-Ka…

  23. 05 Jun, 2025 | 06:41 PM வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள வீடொன்றின் வளவிலிருந்து 9 அடி நீளமான முதலையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் புதன்கிழமை (4) அவ்வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று இருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார். அவர் அதனை துரத்த முற்பட்டபோது, அக்காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது. இதனையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர், இன்றைய தினம் (5) அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து முதலையினை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் வீட்டு வளாகத்தில் 9 அடி நீளமான முதலை மீட்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.