Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இடமாற்றத்தால் உயிரை மாய்த்த பிரதேச செயலக உத்தியோகத்தர்! யாழில் சம்பவம். யாழ்ப்பாணம- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா என்ற 49 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனக்குக் கிடைத்த இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ள நிலையில் அது பலனளிக்காததால் மனவிரக்தியில் இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. https://athavannews.com/2024/1369498

  2. கறுப்பு பந்துகளாக காட்சியளித்த ஏரி: தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் கலிபோர்னியா (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 01:24.26 பி.ப GMT ] லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சில்மர் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி வருவதை தடுக்கும் பொருட்டு 9.6 கோடி கறுப்பு பிளாஸ்டிக் பந்துகள் நீர்த்தேக்கம் முழுவதும் போடப்பட்டுள்ளன.இதன் மூலம் தண்ணீரை அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, நீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 1135 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும். மேலும், சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் இந்த பந்துகள் தடுத்து விடுகின்றன. இந்த நீர்த்தேக்கத்தில் த…

    • 0 replies
    • 349 views
  3. Started by nunavilan,

    யானை மனிதன்

  4. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்கர்கள் மீது கோபம் கொண்டுள்ள நிலையில், சிங்கள கிரிக்கெட் அணி இந்தியாவில் விளை யாடக்கூடாது என்றும், இலங்கை அணி இந்தியாவில் விளையாடிதோற்கும் போது தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். அதை தடுக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடக்கூடாது என்றும், மதுரையைச்சேர்ந்த ஸ்டாலின்செல்வகுமார் தனது வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் மூலம் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பானுமதி, ராஜேந்திரகுமார் முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 16 நாட்களூக்குள் பதில் தரச்சொல்லி இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளூக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். …

  5. பலஸ்தீன் ஜனாதிபதியும், இலங்கை ஜனாதிபதியும் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களதும் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற இருபக்க பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன உயர்மட்ட ராஜதந்திரக் குழு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்து சேர்ந்தது. இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அரச பிரதிநிதிகளுடன் நேற்று இருபக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே மேற்படி இணக்கம் காணப்பட்டது. …

  6. அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமானோரை கொலைசெய்த முதியவர் – குற்றத்தை ஒப்புக் கொண்டார்! அமெரிக்காவின் ரெக்ஸாஸைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த நாட்டின் வரலாற்றில் அதிகளவான கொலைகளை செய்தவர் என்று அறியப்பட்டுள்ளார். 79 வயதான சாமுவெல் லிட்டில் (Samuel Little) என்ற குறித்த முதியவர் 93 பேரை கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். 1970 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே அவர் இந்த கொலைகளைச் செய்ததாக தெரியவந்துள்ளது. அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களாவர். அவர் கொலை செய்ததாகக் கூறப்பட்ட பெண்களின் உயிரிழப்புகள் போதைப்பொருள் காரணமாகவும் விபத்துகளால் நிகழ்ந்ததாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 2014 ஆம் ஆண்டில் அவர் மூன்று கொலைகளுடன் தொடர்புபட்டிருந்த நி…

    • 1 reply
    • 401 views
  7. பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு! அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்படு அளித்திருந்தார். இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்லை் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எ…

  8. உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு எந்த இடம்? உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம். ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்கு எத்தனாம் இடம்? உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம். ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்…

    • 2 replies
    • 744 views
  9. உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி பிரிட்டனிலுள்ள ஒட்டகச்சிவிங்கியொன்று உலகின் மிக உயரமான ஒட்டகச்சிவிங்கி எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒட்டகச் சிவிங்கியின் உயரம் 19 அடியாகும். பெம்புரோக் ஷயர் பிராந்தியத்திலுள்ள சோன்டர்ஸ்பூட் மிருகக் காட்சிச்சாலையில் வசிக்கும் இந்த ஒட்டகச்சிவிங்கிக்கு ஸுளு என பெயரிடப்பட்டுள்ளது. ஒட்டகச்சிவிங்கிகளின் பாதம் முதல் தலைவரையான சராசரி உயரம் 15 அடியாகும். ஆனால், ஸுளு அவற்றைவிட பல அடி உயரமானதாக காணப்படுகிறது. தனது தலையை நிமிர்த்தி நிற்பது ஒட்டகத்தைப் பொறுத்த விடயமாகையால் அதன் உயரத்தை மி…

  10. இம்முறையும் சில இடங்களில் இரண்டு மாவீரர் தினம் நடந்தது எல்லாருக்கும் நினைவு தானே அந்த மாவீரர் கனவுகளைச் சுமந்ததாக சொன்ன எத்தனை பேர் , மாவீரர் விழா நடாத்துவதற்கு அப்பால் , ஏதாவது செயல்பாட்டில் உங்கள் நாட்டில் , சென்றிருக்கின்றார்கள். செல்கின்றார்கள் என்பதை மக்களே உங்கள் வீட்டுச் சுவரில் எழுதி வையுங்கள். கண்டிப்பாக இது தேவைப்படவேண்டிய விடயம் . (உங்கள் மறதிக் குணத்தை அறிந்து அரசியல் வாதிகள் செயல்படுவதை தடுக்க இது தான் ஒரே வழி ..ஹி ஹி ) இப்பொழுது சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை என்ற விடயம் சர்வதேச அரசியலில் முக்கியமான விடயமாக உள்ளது . இதனை நாம் செய்தால் தான் இனப்படுகொலை நிரூபிக்கப் படும் . தமிழீழம் மலரும் . நாம் ஒவ்வொருவரும் முதலில் நாம் …

  11. இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டதென கூறப்படும் மது மரம் அல்லது ஆங்கிலத்தில் சைக்காடேல்ஸ் (Cycadales) என்று சொல்லப்படும் மரத்தின் பழச் சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த மது மரம் அல்லது சைக்காடேல்ஸ் என்பது விதை தாவர வரிசையாகும். இது குறிப்பாக உயரமாகவும், சிறிய மரமாகவும் வளரக்கூடியது. இதனுடைய பழத்தினை வெய்லில் காய வைத்து மாவாக்கி பிட்டு, முறுக்கு உள்ளிட்ட உணவு வகைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மாத்தளை – லக்கல கிராம மக்களிடையே ஒரு சத்தான உணவாக பிரபலமாக உள்ளது. https://newuthayan.com/மது-மரப்-பழ-சீசன்-ஆரம்பித/

  12. சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று.! உலகளாவிய ரீதியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 1950 டிசம்பர் 4ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317வது கூட்டத் தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423 (ஏ) பிரிவுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசம்பர் 10ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன. அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும். ஐக்கிய ந…

  13. நெல்லை: செல்போனில் மலர்ந்த காதலியை தேடி பரிசு பொருட்களுடன் ஆலங்குளம் வந்த சென்னை வாலிபருக்கு இளம் பெண் டிமிக்கி கொடுத்தார். இதனால் அந்த வாலிபர் பரிதாபத்துக்கு உள்ளானார். திருச்சி புதூர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் விஜய். இவர் சென்னையில் உள்ள ஐடி பார்க் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் விஜய் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசியவர் இளம்பெண் என்பது தெரிய வந்தது. அவரது வசீகர குரலில் மயங்கிய விஜய் அந்த பெண்ணுடன் பேசி காதலை வளர்த்தார். அவரை நேரில் பார்க்க துடித்த விஜய் தனது ஆசையை இளம் பெண்ணிடம் தெரிவித்தார். அதற்கு அந்த பெண் தான் ஆலங்குளத்தில் வசிப்பதாகவும், நீங்கள் அங…

  14. குப்பையில் வீசப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டுக்கு ஒன்றே கால் கோடி ரூபா பரிசு குப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ஒன்றே கால் கோடி ரூபா பரிசு விழுந்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. ஜோவேன் ஜொனிசன் (37) என்ற பெண் லொத்தர் சீட்டு வாங்கும் பழக்கம் உடையவர். சிறு சிறு பரிசுகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. கடந்த 28ஆம் திகதி அவர் வாங்கிய ஒரு சீட்டுக்கு பரிசு எதுவும் கிடைக்காததால் அதைக் குப்பையில் வீசிவிட்டார். ஆனால், மூன்று நாட்களின் பின் கடந்த 31ஆம் திகதி, புதிய சீட்டொன்றை வாங்கச் சென்றவருக்கு ஆச்சரியம் + அதிர்ச்சி காத்திருந்தது. ஆறுதல் பரிசுக்குரிய டிக்கெட்டுகள் குறைவாக இருந்தமையால் ஒட்டு மொத்த ஆறுத…

    • 1 reply
    • 214 views
  15. புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து கனடாவில் தமிழ்ச் சிறுவன் சாதனை! புற்றுநோய்க் கலங்களை திருத்தியமைத்து இக்கொடிய நோய்க்கு சாவுமணி அடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுஇளவயதிலேயே பல்கலைக்கழக மருத்துவக் கல்விக்கு அனுமதிக்கப்பட்ட மொன்றியலைச் சேர்ந்த உத்தமகுமாரன் அபிகுமாரனுக்கான தமிழர் தகவல் சிறப்பு விருது வழங்கும் வைபவம், 2013 ஆகஸ்ட் 4ம் திகதி பிற்பகல் ஸ்காபரோவிலுள்ள 'செந்தாமரை' மண்டபத்தில் நடைபெற்றது. -தமிழ் -கருத்துக்களம்-

  16. வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் எமது நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க - பதிலடி கொடுக்க - எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் - இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயாரத்நாயக்க தெரிவித்தார். இராணுவத் தளபதியாகப் பொறுப்பெடுத்த பின்னர் வட பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினருடனான சந்திப்புக்களை முடித்துக் கொண்டு வவுனியா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். வன்னிப்பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது; சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும…

  17. மெக்­டொனால்ட் உண­வ­கத்­துக்கு கூட்­டிச்­செல்ல மறுத்த காத­லனை அவ­ரது காதலி, ட்ரக் வண்­டி­யினால் தொடர்ச்­சி­யாக 3 முறை மோதிய சம்­ப­வ­மொன்று அண்­மையில் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. கிரிஸ்டல் கிரீர் புரூக்ஸ் என்ற 33 வய­தான பெண்ணே அவ­ரது காத­ல­ரான 41 வய­தான சன்­டி­யாகோ ஹெர்­னான்டெஸ் என்­ப­வ­ரையே இவ்­வாறு மோதி­யுள்ளார். இச்­சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது, சன்­டி­யா­கோவும் அவ­ரது நண்­ப­ர்­களும் இணைந்து இரவில் மது அருந்­தி­யுள்­ளனர். இதன்­போது ஏதா­வது சாப்­பிடத் தீர்­மா­னித்­துள்­ளனர். ஆனால் புரூக்ஸ் அடம்­பி­டித்­த­போ­திலும் சன்­டி­யாகோ மெக்­டொ­னால்டில் வாக­னத்தை நிறுத்­த­வில்லை. இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த புரூக்ஸ், வாகனம் நிறுத்­தப்­பட்­ட­போது முன்­னா­லி­…

    • 9 replies
    • 683 views
  18. இங்கிலாந்து நாட்டின் வணிக வளாகத்தில், தனது குழந்தைக்கு பால் கொடுக்க முயன்ற பெண்ணை அந்நிறுவன அதிகாரிகள் தடுத்து வெளியில் அனுப்பியதற்கு, எதிராக குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின், நாட்டிங்காம் பகுதியில், 25 வயதான வோய்லோட்டோ கெமோர் என்ற இளம்பெண்னின் தந்தை, துணி எடுப்பதற்காக வணிக வளாகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் கெமோரும் அங்கு சென்றுள்ளார். அப்போது பிறந்து மூன்றே மாதங்களான அவரது குழந்தை பசியால் அழத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் குழந்தையின் பசியை போக்க பால் கொடுத்தபோது, அங்கு வந்த நிறுவன ஊழியர், வெளியே செல்லுமாறும், இங்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடாது என்றும், இது நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது என…

  19. சீனாவில் உள்ள ஒரு இளைஞர் மலைப்பாதை ஒன்றில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இரண்டு பெண்களுடன் காரில் உல்லாசமாக இருந்தபோது, கார் திடீரென பாதையை விட்டு விலகி மலையில் இருந்து உருண்டதால், காரில் இருந்து மூன்று நபர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வென்ஜோ என்ற பகுதியைச் சேர்ந்த சுங் ஹே என்பவர் தனது இரண்டு பெண் தோழிகளான யீசூ,வயது 27, மற்றும் 23 வயதுடைய டாய் லெய் ஆகியோருடன் உல்லாசமாக இருப்பதற்காக அவர்களை காரில் ஏற்றி மலைப்பாதை ஒன்றுக்கு அழைத்து சென்றார். காரை ஓரமாக ஒரு மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, இருவருடனும் உல்லாசமாக இருந்தார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக அவருடன் வந்த தோழிகளின் ஒருவரின் கால், காரின் ஹேண்ட் பிரேக்கில் பட்டதால், கார் திடீரென பாதையை விட்டு வ…

  20. வல்லவனுக்கு வல்லவன் https://www.facebook.com/video/video.php?v=400556906768707

  21. பேயை காதலித்து திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்தை சேர்ந்த பெண் தற்போது விவாகரத்து வேண்டும் எனக் கூறிவருகிறார். ரொக்கர் ப்ரொகார்டி என்ற பெண் கடந்த ஆண்டு ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது எட்வர்டோ என்ற ஆவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஒரு பாழடைந்த சர்ச்சில் நடைப்பெற்றது. பாடகியான ப்ரொகார்டி, தனது கணவரை சந்தித்த 5 மாதங்களிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது அப்பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்துக்கு பிறகு தனது கணவர் தன் வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டார் எனவும், பிரிந்து சென்ற பிறகும் கூட தன்னையே பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும் கூறியுள்ளார். இதனால் பெரும் சங்கடத்தில் உள்ள ப்ரொகார்டி, பேய் ஓட்டுபவர்களின் உதவியை நாட…

  22. ஏமாற்றிய புறோக்கரால் தாலிகட்டியவுடன் வெளியேறிய யாழ் யுவதி ; தவிக்கும் லண்டன் மாப்பிள்ளை யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் 22 வயதான மாணவிக்கு 31 வயது லண்டன் மாப்பிளை என கலியாணப் புறோக்கர் ஒருவர் ஏமாற்றி திருமணம் செய்து வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் மாப்பிளையின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும் மாப்பிளை லண்டனில் பெரிய பணக்காரனாக உள்ளதாக கூறி மாப்பிளையின் ஜாதகம் பெற்றோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு யாழில் உள்ள பிரபல வைத்தியர் ஒருவரின் நெருங்கிய உறவினர் என தெரிவிக்க பெண்னின் பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள். மாணவியின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனராம். இந்நிலையில் மகள் வெளிநாடு போனால்…

  23. அரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு! அமெரிக்காவின் கென்டக்கியில் அரியவகை இரட்டைத்தலைப் பாம்பு மக்களின் பார்வைக்கு வைக்கப்படுள்ளது. இந்த அரியவகை பாம்பு வீட்டு தோட்டப் பகுதியில இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்பு வித்தியாசமாக இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த பாம்பு இனம் அரிய வகையைச் சேர்ந்த இரட்டைத் தலைப் பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இரு தலைகளும் தனித் தனியாக அசையக் கூடியதாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஒற்றை உடல் இரட்டைத் தலைகளுடன் பிறக்கும் பாம்புகள் நீண்ட நாள் வாழ்வது கடினம. இந்த நிலையில் கென்டக்கி வன உயிர் காப்பகத்தில் இந்த அரியவகை பாம்பு இனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கென்டக்கியில் வாழும் விஷத்தன்ம…

  24. கட்­டு­டலைப் பெற தசை­களில் எண்­ணெ­யையும் அற்­க­கோ­லையும் ஏற்றிக் கொண்­டதால் விப­ரீதம் கட்­டு­று­தி­யான உடல் தோற்­றத்தை பெற தனது தசை­களில் எண்ணெய் மற்றும் அற்­க­கோலை ஏற்றிக் கொண்ட நப­ரொ­ருவர் தனது உயி­ருக்கு அபா­யத்தை தேடிக் கொண்ட சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. கல்டஸ் நொவெஸ் நகரைச் சேர்ந்த ஒரு பிள்­ளைக்குத் தந்­தை­யான ரொமா­ரியோ டொஸ் சந்தோஸ் அல்வெஸ் (25 வயது) என்­ப­வரே இவ்­வாறு தனது கட்­டு­று­தி­யான தோற்­றத்­திற்­காக உடல் நலத்­துக்கு தீங்கு விளை­விக்கும் திர­வங்­களை தனது தசையில் ஏற்றிக் கொண்­டுள்ளார். இந்­நி­லையில் இரு கரங்­களும் துண்­டிக்­கப்­பட வேண்­டிய நிலைக்கு உள்­ளான அல்வெஸ், தற்­கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொள்­வ­தற் கும் முயற்சித் துள்ளார். …

  25. பணக்காரர் என்பதை நிரூபிக்க பணத்துடன் விளையாடும் நபர்கள் சீனாவில் உள்ள 70 பணக்காரர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவர்கள் தான் பெரிய பணக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காக பணத்தை எரித்து மற்றும் நாசம் செய்து அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு பெரும் தொகையான பணத்தினை நாசமாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீன அரசாங்கம் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இளைஞர் யுவதிகளை சமூக சேவையில் ஈடுபடுத்துவதற்கு சீன அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/10/பணக்காரர்-என்பதை-நிரூபிக்க-பணத்துடன்-விளையாடும்-நபர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.