Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. டுபாயில் நடைபெறும் முப்பரிமாண ஓவியத் திருவிழா! August 11, 2020 டுபாயில் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் பிராண்ட் டுபாய் (Brand Dubai) (அரச ஊடகத்துறையிலுள்ள பிரிவு) சார்பில் முப்பரிமாண ஓவியத் திருவிழாவொன்று நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக டுபாயிலுள்ள முக்கிய வீதிகளில், முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மேலும் குறித்த ஓவியங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களால் வரையப்படுவதாகவும் தற்போது சிட்டி வாக் பகுதியில் ஓவியங்கள் வரைந்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவானது இம் மாத இறுதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/…

  2. மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ என்றழைக்கப்படும் அரியவகை மீன்! மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி ஆதாம் பாலத்திற்கு உற்பட்ட தேசிய வனப் பூங்கா கரையோரப்பகுதியில் ‘கடற்பன்றி’ என பெயருடைய பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியது. இதனை அவதானித்த கடற்கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த பகுதி வன ஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில் குறித்த மீனின் ஒரு பகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்…

  3. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலிருந்து விலக ரணில் தீர்மானமா? August 9, 2020 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிர மசி ங்க கட்சியின் தலைமையிலிருந்து நீக்க முடிவு செய் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் வலுவான தோல்வி மற்றும் கட்சியின் மூத்தவர்களால் மேற்கொள்ளும் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் கட்சி மூத்தவர்களுடனான சந்திப்பின் போது, ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர் பத வியை இராஜினாமா செய்யத் தயாராக இருப் பதாக்கத் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ரணில் தலைமைத்து வத்தில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பி…

  4. தெரு நாய்க்கு பணி அடையாள அட்டையுடன் கார் விற்பனையாளர் பணி பிரேஸிலில் எஸ்பிரிட்டோ சேண்டா மாநிலத்தில் உள்ள சொர்ரா எனும் பகுதியில் ‘ஹையுண்டாய் கார் காட்சியறை’ ஒன்று அமைந்துள்ளது. அந்த காட்சியறைக்கு அருகில் சுற்றித் திரிந்த தெருநாயோடு காட்சியறை ஊழியர்களுக்கு நெருங்கிய அன்பு உருவாகியுள்ளது. அவர்களின் செல்லப்பிராணியாக அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் அந்த நாயை தங்கள் குடும்பத்தில் ஒன்றாக நினைத்து, அதை சேர்த்துக் கொண்டு கௌரவ ஊழியர் பணியையும் வழங்கியுள்ளனர். அது மட்டுமன்றி ‘டக்சன் பிரைம்’ எனப் பெயருள்ள அந்த நாய்க்கு பணி அடையாள அட்டையும் வழஙகியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  5. யாழ் மாவட்டத்தில் 67.7% வாக்குகள் பதிவானது! யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்குப்பதிவுகள் அடங்கலாக 67.7% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதன்படி 4 இலட்சத்து 58,345 பேர் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களித்துள்ளனர். https://newuthayan.com/யாழ்-மாவட்டத்தில்-67-7-வாக்க/

  6. கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது! கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான சந்தை வர்த்தகர் ஒருவர் உட்பட நால்வர் நேற்றிரவு (04) பொலீஸ்,தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் பெரும் அட்டக்காசம் புரிந்துள்ளனர். சரமாரியான கற்கள் வீட்டிற்குள் வீசப்பட்டதனால் அச்சமடைந்த குழந்தைகள் பெண்கள் தலைக் கவசகம் அணிந்தபடி பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வீட்டுரிமையாளர் உடனடியாக பொலீஸ் மற்றும் தேர்தல் முறைப்பாட்டுப் பிரி…

  7. ‘தெருவை காணவில்லை’- வடிவேலு பாணியில் புகார் அளித்த மக்கள்

  8. மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் ஹெரோயினுடன் சிக்கிய பூனை கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். பூனையின் ஊடாக ஹெரோயின் கடத்தல் இடம்பெறுவதாக சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பூனை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம் அட்டைகள் மற்றும் நினைவக அட்டை (Memory card) ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கண்டுபிடிக்கும் பொருட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.…

  9. சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள்! ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக கூறும் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் உள்ள ஒளிப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் புகைப்படங்கள் கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின் சிவாக்ஷி ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் ஒரு இலட்சம் சிவ லிங்கங்கள் காணப்படுகிறது என வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது. வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படங்களில் உள்ள சிவலிங்கங்கள் சஹஸ்ரலிங்காவில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. சஹஸ்ரலிங்கா கர்நாடக மாநிலத்தின் ஷாமலா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரபல வழிபாட்டு தளம் ஆகும். இங்கு ஆயிர…

  10. சிறீதரனின் பரப்புரைக் கூட்டத்தில் நேற்று மாலை தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம் August 2, 2020 கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சிறீதரனின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்குகொண்ட மக்கள் மீது சுயேச்சைக் குழு ஒன்றின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற கூட்டம் நேற்று மாலை அக்கராயன் பொதுச் சந்தைப்பகுதியில் நடைபெற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிக்கொண்டிருந்த போது சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக்கொண்டிருந்தனர். பளையில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்துக்காக சிறிதரன் புறப்…

  11. இது தேர்தல்காலம். அரசியல்வாதிகளும், தொண்டர்களும் பரபரப்பாக இருப்பதற்கு ஈடாக- இன்னும் சொல்லப் போனால் அதைவிடவும் அதிகமாக- பரபரப்பாக பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மக்களை பரபரப்பாகவும், சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாமலும் வைத்திருக்க வேண்டியவர்கள் அவர்களல்லவா. ஆகவே செய்திகளை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். வழக்கத்திற்கு மாறாக, அவர்களின் காலடி தேடியே செய்திகள் வந்து கொண்டிருக்கும் காலம். இவர்கள் ஒரு வகை பத்திரிகையாளர்கள். இன்னொரு வகை பத்திரிகையாளர்களும் இருப்பார்கள். அவர்கள் கல்லாப் பெட்டியை நிறைப்பதில் குறியாக இருப்பார்கள். சாம,தான, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளிடமிருந்து பிடுங்குவதில் குறியாக இருப்பார்கள். எப்படியோ, ஒரு தேர்த…

  12. பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி? July 31, 2020 தேர்தலில் வெற்றிபெற்றால் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுதியளித்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள பிள்ளையான்; தேர்தலில் போட்டியிடுகின்றார். பிள்ளையான் தேர்தலில் வெற்றிபெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வாக்குறுதியளித்துள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானால் மாத்திரமே அமைச்சர் பதவியை வழங்கமுடியும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளதாக பிள்ளையா…

  13. 33 ஆண்டுகளாக 10ம் வகுப்பில் பெயில் - கொரோனாவால் 51 வயதில் பாசான அதிசயம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவித்தன. அதே நேரத்தில், 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (51). இவர் கடந்த 1987-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொது தேர்வை எழுத தொடங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக விண்ணப்பித்து தேர்வு எழுதி வந்தார். பாச…

  14. முக கவசத்தால் இப்படி ஒரு தொல்லையா? காது கேளாதோர் அனுபவிக்கும் வேதனை லண்டன், இங்கிலாந்தில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வங்கிகள், வீட்டுவசதி சங்கங்கள், தபால் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லாம் முக கவசம் அணிந்து செல்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறினால் 50 பவுண்ட் முதல் 100 பவுண்ட் வரை (சுமார் ரூ.4,900 முதல் 9,800 வரை) அபராதம் விதிக்கப்படும். ஆனால் காது கேளாதவர்களுக்கு முக கவசம் தொல்லையாக மாறி இருக்கிறது. ஏனென்றால் இவர்களது முகபாவனைகளும், உதடு அசைவும் முக கவசத்தால் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் அந்த நாட்டில் காது கேளாத 1 கோடியே 20 லட்சம் பேர் வெளியே தொடர்பு கொள்வது சிரமமாகி விட்டதால், வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கி…

  15. யாழ். பல்கலையின் விரிவுரையாளர் குருபரன் இராஜினாமா செய்தாரா? July 17, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அவர் இவ் இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் அனுப்பி வைத்துள்ளதாகப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக பேரவை அவரை சட்டத் தொழிலில் ஈடுபடுவதற்குத் தடை விதித்துள்ளமையை காரணமாகக் காட்டியே அவர் பதவி விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்தி…

  16. இந்தியாவிலேயே நேர்மை தவறாத மக்கள் கோயம்புத்தூர் காரர்களா? உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. அது என்ன?

    • 0 replies
    • 377 views
  17. விஜயலட்சுமியிடம் விசாரணை: சீமான், ஹரிநாடார் மீது வழக்கு? மின்னம்பலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி குற்றம் சாட்டி தற்கொலை முயன்றது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமியிடம் குற்றவியல் நடுவர் நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, திருவான்மியூரில் உள்ள தனது இல்லத்தில் உயர…

  18. சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தியவருக்கு 12 ஆண்டு கடூழிய சிறை: July 29, 2020 6 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடுழீயச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளில் 6 வயதுச் சிறுமியை அவரது சட்டபூர்வ பாதுகாவலரான தாயாரிடமிருந்து கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் எதிரியான உவைஸ் முகமெட் ரவீத் என்பவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றம்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடக்கும் போது எதிரிக்கு 19 வ…

  19. காளையார்கோவில் அருகே குருவி கட்டிய கூட்டை பாதுகாக்கும் கிராமத்தினர்ஒரு மாதமாக இருளில் நடமாடுகிறார்கள் காளையார்கோவில், காளையார்கோவில் அருகே சின்னஞ்சிறு குருவி கட்டிய கூடு கலைந்துவிடாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமத்தினர் அதற்கு உதவி உள்ளனர். இதனால் ஒரு மாதமாக அவர்கள் இருளில் நடக்க வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது. பறவைகள் என்றாலே மனம் புத்துணர்வு அடைந்து விடும். அதிலும் சிட்டுக்குருவி மனிதனை தேடி வந்து உறவாடும். வீடுகளுக்குள் புகுந்து தனக்கும் ஓர் கூடு கட்டி சொந்தம் கொண்டாடும். சிட்டுக்குருவி மட்டுமல்ல, தற்போது பல்வேறு பறவையினங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருவது வேதனை தருவதாகும். இந்த குருவிகளை பாதுகாக்க நடவடிக்கைகள் இருந்தாலும், அவற்றை முழுவது…

  20. ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: 6பேர் காயம் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம்- மெனிக்பாம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் சென்றிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பகுதிக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி வேட்பாளரான ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், மஸ்தானின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்…

  21. இந்திய தம்பதிகளிடையே மாறிவரும் பாலியல் ஆர்வங்கள் ; சலிப்பு காரணமாக ஒருவரை ஒருவர் ஏமாற்றுகின்றனர் சலிப்பு காரணமாக 77 சதவீத இந்திய பெண்கள் ஏமாற்றுகிறார்கள்; இதனால் திருமணமானவர்களிடையே ஒரே பாலின உறவு 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. பதிவு: ஜூலை 27, 2020 11:26 AM புதுடெல்லி பலருக்கு, திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கிடையேயான பிணைப்பாகும், அவர்கள் நல்ல நேரத்திலும் கெட்ட காலத்திலும் தங்கள் துணைகளுக்கு உண்மையாக இருப்பார்கள். ஆனால் பணியிடங்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் டேட்டிங் தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இந்தியர்களை இந்த அர்ப்பணிப்புக்கான பாரம்பரிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. திருமணமானவர்களுக்கான திருமணத்திற்கு புற…

    • 1 reply
    • 721 views
  22. செ.தேன்மொழி) பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை -25- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று மூன்று பத்திரிகைகளை அச்சிட்டு வெளிநாட்டுக்கு வழங்கி வந்த நபரொருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இவ்வாறு மூன்று பத்திரிகைகளை …

    • 0 replies
    • 488 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.