தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
695 topics in this forum
-
முதலாம் பாகம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180 இரண்டாம் பாகம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=92335
-
- 29 replies
- 15.9k views
-
-
-
-
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்து வசாவிளானில் கந்தப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியருக்கு 1860ம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகிதி கல்லடி வேலுப்பிள்ளை பிறந்தார். அவரது இயற்பெயர் வேலுப்பிள்ளை. அவர் வீட்டருகே இருந்த ஒரு பெரிய கல் அவரது வீட்டைக் குறியீடு செய்ய வாய்ப்பாகியதோடு, அவர் பெயருடன் சேர்ந்து கல்லடி வேலுப்பிள்ளை என வழங்கச் செய்து விட்டது. இயல்பாக பாடக்கூடிய திறன்வாய்ந்தவராயிருந்ததால் ஆசுகவி எனும் அடைமொமியும் அவர் பெயருடனாயது. இவ்வாறாக இவர் பெயர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை என்று வழங்கலாயிற்று. சிறுவயதில் அகஸ்டின் என்பாரிடமும் பின்னர் பலாலி வேலுப்பிள்ளை உபாத்தியாயரிடமும் ஆரம்பக்கல்வியை பெற்ற பின்னர், ஆவரங்கால் நமசிவாயப் புலவரிடமும், புன்னாலைக்கட்டுவன் கதிர்காம…
-
- 3 replies
- 1.4k views
-
-
பொன்னியின் செல்வன் - முதலாவது பாகம், புது வெள்ளம் http://www.yarl.com/forum3/index.php?showtopic=91180&st=0
-
- 34 replies
- 21.4k views
-
-
தமிழ்ப் பழமொழிகள் என்றால் அது மிகையாகாது. ஆண்டாண்டு காலமாக எங்கள் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து வழங்கிவந்த பழமொழிகளை ஒன்றுதிரட்டி ஓரிடத்தில் சேர்ப்பதென்பது கஷ்டம், கீழே உள்ளவற்றில் இல்லாத ஏதவது பழ மொழிகள் உங்களுக்கு தெரிந்தால், இணைத்துவிடுங்கள், பல பழ மொழிகள் பேச்சு வழக்கில் இருக்கு ஆனா எழுத்துவடிவில்ல இல்லை ======================================== அ அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல இருந்தால் பகையும் உறவாம். அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். அக்காள…
-
- 19 replies
- 55.7k views
-
-
அதிசய அற்புத பாடல்கள் ஆங்கிலத்தில் palindrome என்றும், தமிழில் இருவழி ஒக்கும் சொல் என்றும் குறிப்பிடக் கூடியவைகளைக் காண்போம். MALAYALAM - இது ஆங்கிலத்தில் இடது புறத்திலிருந்து வலப்புறமாக படித்தாலும், வலது புறத்திலிருந்து இடது புறமாக படித்தாலும் ஒரே மாதிரியாக, அதே சொல்லாக அமையக்கூடியது. palindrome என்பது இவ்வகை.தமிழில் - விகடகவி - இடதிலிருந்து வலமாக, வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே சொல் அமையக் கூடியது. ஆங்கிலத்தில் பாலிண்டிரோம்கள் அதிகம். I PREFER PI MADAM I'M ADAM NEVER ODD OR EVEN என்பவை சில பிரபலமான பாலிண்டிரோம்கள். இவை போல ஆயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்ட பாலிண்டிரோம்கள் ஆங்கிலத்தில் உள்ளன. தமிழில் பாலிண்டிரோம்கள் மிகக் குறைவே. …
-
- 6 replies
- 12.7k views
-
-
காளமேகம் குறிப்பு: கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும். காளமேகப் புலவர் …
-
- 53 replies
- 83.6k views
-
-
இங்கு பொன்னியின் செல்வன் பகுதியை தொடர்ந்து இணைக்க போகிறேன், நல்ல எழுத்து நடையில் கல்கியால் எழுதப்பட்டது, நான் கன தரம் வாசித்துவிட்டேன், இன்னும் இதில் உள்ள மோகம் தீரவில்லை. என் கதாநாயகன் வந்தியதேவன் & கதாநாயகி பூங்குழலி. உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை பற்றி நீங்கள் விபரமாக எழுதாலம் அல்லது கீழே உள்ள வெப் இல் போய் சுட்டு இணைத்துவிட்டு அடுத்த அத்தியாத்தை வாசிக்கலாம் முதல் அத்தியாயம் வாசித்து முடித்துவிட்டால், சிலவேளைகளில் நான் இடையில் காணாமல் போய்யிடுவேன் பின் தங்கிய கிராமங்களுக்கு வேலை நிமித்தமாக. நீங்கள் உங்கள் தார்மீக ஆதரவை எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன் முதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள் By kalki - Posted on 29 October 1950 htt…
-
- 84 replies
- 24.1k views
- 1 follower
-
-
பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் பறை எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும். பறை = சொல் பறைதல் = சொல்லுதல் பறைஞ்சன் = சொன்னேன் பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்) பறையாதே = சொல்லாதே , பேசாதே பறையிறான் = சொல்கிறான் பொய் பறையாதே = பொய் சொல்லாதே அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்? அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பல சொல்லாடகள் உள்ளன. அவை இன்றும் யாழப்பாணத்தவர் பேச்…
-
- 1 reply
- 1.5k views
-
-
சங்க இலக்கியத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் இன்றைய கேரளா என்பவை சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது. சேர மன்னர்கள் மக்கள் நிலை அனைத்தையும் நாம் சங இலக்கியம் முழுமையிலும் காணலாம். அதிலும் பதிற்றுப்பத்து நூலில் முழுமையாகக் காண்கிறோம். http://ta.wikipedia.org/ பதிற்றுப்பத்து (பத்து + பத்து = பதிற்றுப்பத்து) எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. பதிற்றுப்பத்து 4:1 திருவனந்தபு…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஏதோ ஒரு திரியில் கிருபன் எழுதிய பின்னோட்டத்தில் “இரும்பைத் தின்று கசாசயம் குடிப்பவர்” என்ற சொற்றொடரைப் பார்த்தேன். இதற்கு முன்னர் இதனைக் கேள்விப்பட்டதில்லை. மிகவும் சுவாரசியமானதும் வினைத்திறன் மிக்கதும் ஆன இநதச் சொற்றொடர் வாசிக்க வாசிக்க அர்ததம் கிளம்பும் ஆழம் மிக்கதாய் மலைப்பேற்படுத்துகிறது. இது ஏதேனும் குறிப்பிட்ட ஒரு வட்டார வழக்கா, அல்லது இலக்கியத்தில் எழுந்ததா என்று தெரிய ஆவலாக உள்ளது. நிச்சயமாக இது ஈழத்தமிழரின் பாவனையில் உருவான சொற்றொடராயே இருக்கும் என்று எனக்குப் படுகிறது. யாரும் அறிந்தால் அறியத் தாருங்கள். அது போல், இவ்வாறான அரிதாகப் பாவனையில் இருக்கும் ஆழமான இனிமைனயான சொற்றொடர்கள் பேச்சு வழக்குகள் அறிந்தவர்கள் இத்திரியில் பின்னூட்டம் இடுங்கள். நாங்களும்…
-
- 33 replies
- 3.2k views
-
-
காலஞ்சென்றவை: சமஸ்கிருதமும் லத்தீனும் தொலைக்காட்சியில் காட்டப்படும் வேற்றுமொழிப் படங்களை ஆங்கிலத் துணைத் தலைப்புகளின் உதவியுடன் பார்ப்பது எனக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்று. அப்படி ஒரு முறை புகழ்பெற்ற யூகோஸ்லாவிய இயக்குனர் எமிர் கூஸ்தூரீட்சா இயக்கியதென பின்னர் தெரிந்துக்கொண்ட "Black Cat, White Cat" http://www.youtube.com/watch?v=3WbX9Q5SjZg http://www.youtube.com/watch?v=2ndbCnNaIss&feature=related என்ற நகைச்சுவைப் படத்தை மிகவும் ஒன்றிப்போய் பார்த்துக் கொண்டிருந்தேன். கிழக்கு ஐரோப்பாவில் பரவலாக உள்ள ஜிப்ஸி எனப்படும் நாடோடி இனக்குழுக்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உருவான ஒரு ஐயம் நேர…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
-
திரைப்பட பாடல்களில் இலக்கணம். திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம். தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக... அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. சினைப்பெயர்: பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல இடப்பெயர்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி! காலப்பெயர்: வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் …
-
- 0 replies
- 2.8k views
-
-
தமிழில், மனிதப் பெண்களின் பல்வேறு பருவங்களைக் குறிக்க வெவ்வேறான சொற்கள் இருந்தன எனினும் தற்போது இத்தகைய சொற்கள் பயன்பாட்டில் இல்லை. பேதை (07 வயதுக்குக் கீழ்) பெதும்பை(07 - 11 வயது) மங்கை(11 - 13 வயது) மடந்தை(13 - 19 வயது) அரிவை(19 - 25 வயது) தெரிவை(25 - 31 வயது) பேரிளம்பெண்(31 - 40வயது) இப் பிரிவுகள் உடலியல் மாற்றங்களையும், சமுதாய நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டவை
-
- 23 replies
- 12.4k views
- 1 follower
-
-
தமிழ் மாதங்கள் வழக்குச் சொல் தூயதமிழ் தை _ சுறவம் மாசி _ கும்பம் பங்குனி _ மீனம் சித்திரை _ மேழம் வைகாசி _ விடை ஆனி _ இரட்டை ஆடி _ கடகம் ஆவணி _ மடங்கல் புரட்டாசி _ கன்னி ஐப்பசி _ துலை கார்த்திகை _ நளி மாரகழி _ சிலை தமிழ் கிழமைகள் ஞாயிறு _ ஞாயிறு திங்கள் _ …
-
- 0 replies
- 2.4k views
-
-
முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. இவ்வழக்கமேபழங்காலத் தமிழகத்திலே போர்களுக்குக் குறைவு இருக்கவில்லை, முடியுடை மூவேந்தர்கள் எனக் குறிப்பிடப்படும் சேரர், சோழர், பாண்டியர் என்போரும், அவர்களுக்கு அடங்கிய குறுநில மன்னரும், ஒருவருடன் ஒருவர் போரில் ஈடுபட்டனர். வீரம் என்பது ஆண்களுக்கு இருக்க வேண்டிய சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. புகழ் பெற்ற மன்னர்கள் பெரும் வீரர்களாக இருந்தார்கள். இத்தகைய வீரர்கள் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடினர். போர் வரும்போது புறமுதுகிடாமல் (பயந்து ஓடாமல்) முன் நின்று போர் செய்வது வீரர்களுக்கும் …
-
- 0 replies
- 2.5k views
-
-
தமிழில் கணிதச் சொற்கள் அடிப்படை அலகு 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீசம் 1/80 - காணி 3/320 - அரைக்காணி முந்திரி 1/160 - அரைக்காணி 1/320 - முந்திரி 1/102400 - கீழ்முந்திரி 1/2150400 - இம்மி 1/23654400 - மும்மி 1/165580800 - அணு 1/1490227200 - குணம் 1/7451136000 - பந்தம் 1/44706816000 - பாகம் 1/312947712000 - விந்தம் 1/5320111104000 - நாகவிந்தம் 1/74481555456000 - சிந்தை 1/489631109120000 - கதிர்முன…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆங்கில அகராதி மற்றும் மரியம் வெப்ஸ்டர் போன்ற ஆங்கில மொழி அகராதிகளில் கீழ்க்கண்ட சொற்களின் மூலம் தமிழ் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள் •Anicut அனைக்கட்டு •Appam - ஆப்பம் / அப்பம் •Cash - காசு •Catamaran கட்டுமரம் •Cheroot சுருட்டு •Corundum 'ruby', குருந்தம் kuruntam or குருவிந்தம் kuruvintam (Source: OED) •Coir கயிறு •Curry கறி •Godown கிடங்கு •Idli இட்லி idli (Source: OED) •Illupi இலுப்பை •Kabadi/kabaddi கபடி கபடி •Maldivian மலை தீவு - மாலத்தீவு •Moringa முருங்கை •Mulligatawny மிளகுத்தண்ணீர் •Nadaswaram/nagaswaram நாகஸ்வரம் / நாதஸ்வரம் •Pariah பறையர் •Pandal பந்தல் •Pongal பொங்கல் •Poonga oil புங்க…
-
- 0 replies
- 1.7k views
-
-
திருக்குறளுக்குக் கிடைத்த பெருமை! ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தான், சென்னைக்கு முதன் முறையாக அச்சு எந்திரம் வந்தது. இந்த எந்திரத்தின் மூலம் முதலில் எதை அச்சிடுவது என்று ஆங்கிலேயர்களுக்குக் குழப்பம்! அப்போது தஞ்சை மன்னரின் அரசவைக் கவிஞராக இருந்தவர் புலவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். 'இவரிடம் கேட்டால், நல்ல நூலைத் தேர்வு செய்து தருவார்' என்று பலரும் ஆலோசனை வழங்கினர். உடனே, சிவக்கொழுந்து தேசிகரை வரவழைத்து அவரிடம் இதுகுறித்துக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள். சிவக்கொழுந்து தேசிகர் கொஞ்சமும் யோசிக்காமல், ''திருக்குறளை வெளியிடலாம்'' என்று சொன்னார். இதைக் கேட்ட ஆங்கிலேய துரைக்கு ஆச்சரியம்! ''திருக்குறளில் அப்படி என்ன உள்ளது?'' என்று கேட்டார். அதற்கு தேச…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழின் இலக்கண, ஒலிப்பியல், மரபு முறைகளுக்கு அமைய அமைந்த பெயர் தமிழ்ப் பெயர் ஆகும். ஒரு நபரின் பெயர் அவரின் பின்புலத்தை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஒரு அடிமைக்கு அவரின் ஆண்டையே பெயர் வைக்கும் உரிமையைப் பெறுகிறான். அதனால் அடிமைப் பெயர்களை (Slave names) பல கறுப்பின மக்களும், காலனித்துவ அரசால் வேற்று நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தென்னிந்திய மக்களும் தாங்க வேணியதாகிற்று. அதே போல் அண்மைக்காலம் வரை தமிழ்ச் சூழலில் பல பெயர்கள் சாதி href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF">சாதியையும்'>http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF">சாதியையும் சேர்த்துக் குறித்து நின்றன. பிள்ளை, ஐயர், படையாச்சி போன்ற பெயர் இணைப்புகள…
-
- 0 replies
- 2.1k views
-
-
"புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க வினங்காட்டு முழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர் காட்டுந் தடம் பணைகள்" - தேவாரம் புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் - பிடரியில் படர்ந்து அலைந்து திரியும் கூந்தல் புயல் உருவாகும் முன் அலைந்து திரியும் மேகங்களைக் காட்ட புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க - அவள் நடக்கும்போது அசையும் இடையானது நிலத்தில் இருக்கும் மயில்களின் சாயலை ஒத்து அசைய வினங்காட்டு உழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட - கூட்டமாக அங்கு இருக்கும் உழத்தியர்களின் முகம் நிலவு போன்றதாயினும் நிலவில் உள்ள கறை இவள் முகத்தில் இல்லாமையால் அம்மதியானது…
-
- 1 reply
- 1.4k views
-
-
"செக்கச் சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர் ஆருயிரும் ஒக்கச் செருகும் குழல்மடவீர் உன் பொற்கபாடம் திறமினோ" - கலிங்கத்துப் பரணி செக்கச் சிவந்த செங்கழுநீர் பூக்களையும் இளைஞர்களின் உயிரையும் ஒன்றாகப் பறித்து செருகக்கூடிய கூந்தலையுடைய பெண்களே.. பூவையும் உயிரையும் கூந்தலில் செருகும் பூவையர்....!! இதில் கூடல் கொண்டதின் விளைவாக கண்கள் சிவந்து நிற்பதை செக்க சிவந்த கழுநீரை செருகுவதாகவும், அன்பால் கலந்து தம் நினைவிழந்துவிடும் இளைஞர்களின் உயிர் அவள் வசமாகிவிடும் நிலையினை உயிரை செருகுவதாகவும் கூறுவர்
-
- 0 replies
- 870 views
-
-