பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் 2015 நாள்: 21.01.2015 தமிழர்களுக்கு வரலாறு தேவை. வரலாற்றுக்குத் தொடர் ஆண்டுக் கணக்கு தேவை. ஊழியும் ஆண்டு எண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன - (நான் மணிக்கடிகை -72) சீரான ஆண்டு நாட்களைக் கொண்ட காலமே தமிழில் ஊழி என்று அழைக்கப்பட்டது. சீரான ஆண்டுமுறை தடுமாறும் போது ஊழி தடுமாறியதாகக் கருதி அது மீண்டும் தொகுக்கப்பட்டது. அதுவரை அந்த ஊழியின் தொடர் ஆண்டு நீளும் என்பது தவிர்க்க இயலாதது. தொல் ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால் ...................... நல்அற நெறி நிறீஇ உலகாண்ட அரசன் – (கலித்தொகை – 129 : 1-4) குத்து மதிப்பாக ஓர் ஊழி என்பது சில ஆயிரம் ஆண்டிகளாவது நீளும் என்று தெரிகிறது. ஊழி பிறழ்வதை ‘என்றூழ்’ என்று கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகின் மிக உயரமான கோபுரம் ! முருதேஸ்வர் கர்நாடகா உலகின் மிக உயரமான கோபுரம் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய சிவன் சிலை உள்ள இடம். நன்றி! அருண் குமார். (https://www.facebook.com/arun.mk.794)
-
- 3 replies
- 2.5k views
-
-
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! …
-
- 8 replies
- 3.4k views
-
-
சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப் புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக்கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை. அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தழிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்;டிற்கு சனவரி 15 என்று தெரிகிறது. பஞ்சாங்கம் சொல்கிறது என்பதைத் தவிர வேறெந்த அடிப்படையும் இல்லாத இந்த வரையறை உண்மையான தைத்திங்கள் முதல்நாளைத் தொட்டுக் காட்டுவதாகக் கொள்…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒரு சிலரின் உறக்கத்தை மட்டும் கலைத்திருக்கிறது. ஆங்கில ஆண்டு 2015க்கு இணையான தமிழ்ப்புத்தாண்டு என்பது 24.12.2014 அன்று வானவியல் அடிப்படையில் முறையாகப் பிறந்துவிட்டது. தமிழ்ப்புத்தாண்டின் முதல் பன்னிரண்டு நாட்களும் முறையாக முற்றி முதல் முழுநிலவு 04.1.2015 அன்று தோன்றியது. 2014 -ஆம் ஆங்கில ஆண்டுக்கு இணையான தமிழ் ஆண்டு என்பது வானவியல் அடிப்படையில் 05.01.2014 முதல் 23.12.2014 வரையில் சரியாக 353 நாட்களில் சுருண்டு விட்டது. ஓராண்டின் உட்கூடு என்பது கதிரவனின் தென் செலவுத் திருப்பத்தைப் பிறைநாளில் உறுதி செய்து அதன் மறுநாளில் தொடங்கி, சரியாகப் 12 ஆம் நாளில் முதல் முழு நிலவினையும், தொடர்ந்து 11 முழு நிலவுகளும் நாள் முறையில் எண்ணப்பட்டு அதன் பின்னும் அமையும் அமாவாசைக்காகப் பதினைந்…
-
- 0 replies
- 798 views
-
-
நான் நீண்ட நாட்களுக்கு முன்பு என்னுடைய வலைப்பதிவில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய இட்ட இடுக்கைகள். இன்னும் இந்தக் கேள்விகள் என்னுள்ளே அப்படியே இருக்கின்றன. யாழ் களத்தில் பல அறிஞர் பெருமக்கள் இருப்பதால் என் ஐயம் தீர இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணி இதை இடுகிறேன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்த பின்பு தமிழ் மீது பற்றுக் கொண்ட பலருள் நானும் ஒருவன். வாசித்தவர்களிடம் ஒரு வீரியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது இந்தப் புதினம். அதற்குப் பின்பு அகிலன், விக்கிரமன்,சாண்டில்யன் மற்றும் பாலகுமாரனின் உடையார் முதற்க் கொண்டு எல்லாம் வாசித்து விட்டேன். ஆனாலும் பொன்னியின் செல்வன் இன்னும் பசுமையாய் இருக்கிறது. இப்புதினத்தை வாசித்த பின்பு எல்லோர் மனதிலும்…
-
- 6 replies
- 19.9k views
-
-
யாழ் இணையபெருமக்களே கருத்துப் பிரம்மாக்களே உங்கள் எல்லோருடனும் இனிவருங்காலங்களில் மூளையைக் கசக்கவும் முயற்சிகளை பெருக்கவும் ஒரு விளையாட்டு புதிய ஆண்டில் புதிய பிரவேசமாக யாழிற்குள் வாரமொருமுறை இதோ உங்கள் எல்லோருக்காகவும் இன்றும் சிறிது நேரத்தில்......... எல்லாம் சொந்த முயற்சி பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுக. கட்டங்களைத் தந்துவிட்டேன் காத்திருங்கள் சிறிது நேரத்தில் கேள்விகளோடு...அதுவரை சில்லு எறிந்து கட்டங்களுக்குள் கெந்தி விளையாடுங்கள் ஒற்றைக்காலில் கெந்தி விளையாட முதலாம் ஆளாக இலையான் கில்லர் ............கி கிகி
-
- 21 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களுக்கும் தமிழ் தொலைக்காட்சியில், விவாத மேடைகளில் விமர்சனம் செய்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி எதிரியே தன்வாய் விட்டு கூறிய நிகழ்வு. A 9 பாதை திறப்பின் போது(08.04.2002) அரசியல் போராளிகளை யாழ்ப்பாணம் அழைத்து வர தன்னெளிச்சியாக கூடிய 30,000 ற்க்கும் மேற்பட்ட மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை சீக்கிரம் வாருங்கள் என்று பரவசப்பட்டு கூறிய காட்சி https://www.facebook.com/video/video.php?v=798125666923245
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாண மொழி தமிழின் வட்டார வழக்கா? தனி மொழியா? - 1 Monday, December 29, 2014 கி.மு 500 முதலே இலங்கையில் வட இந்தியர்கள், தென் இந்தியர்கள் ஆகிய இருசாராருமே குடியேறத் தொடங்கி இருப்பதை தொல்லியல் சான்றுகள், இலக்கியங்கள் ஆகியவை உறுதி செய்கின்றன. கி.மு. 500-களில் இந்தியாவில் பல மொழிகள் பேச்சு மொழியாக இருந்த போதும், பிராகிருதமும், தமிழுமே எழுத்து மொழியாகவும் வளர்ச்சியடைந்த மொழியாகவும் இருந்து வந்துள்ளது. ஆகவே இலங்கையில் கூட இந்த இரு மொழிகளைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் பலவும் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த கல்வெட்டுக்கள் யாவுமே பௌத்த துறவிகள், அரசர்கள், வணிகர்கள் ஆகியோரைப் பற்றிய தகவல்கள் தருகின்றன. இலங்கையின் அரசர்கள் தமது சமய மொழியாக பிராகிருதத்தையும், வணிக மொழியாக தமிழையும் ஏற்ற…
-
- 0 replies
- 3.4k views
-
-
"இலங்கை முஸ்ஸீம்கள் தமிழர்களாகவே ஒரு காலத்தில் இருந்தார்கள்" https://www.facebook.com/video/video.php?v=882726761771311
-
- 9 replies
- 1.8k views
-
-
தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்கள் ஆண்களுக்கான நடனம் ஒயிலாட்டம்
-
- 21 replies
- 2.3k views
-
-
தமிழில் அறிவியல் இல்லை, அறிவியலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை , தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி மொழி என்று தமிழையும் தமிழர்களையும் தமிழின எதிரிகள் இழித்தும் பழித்தும் பேசி வந்துள்ளனர். அப்படி பேசியவர்களை தலைவர்கள் என்று தமிழர்களே தலையில் தூக்கி சுமக்கவும் செய்த கொடுமை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தமிழின எதிரிகள் திட்டமிட்டு தமிழர்களுக்கு எந்த பண்பாடும் நாகரீகமும் அறிவும் இல்லை என்ற பொய்ப்பரப்புரை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்பதை நாம் அறிதல் வேண்டும். சரி, அப்படி எத்தகைய அறிவை பண்டைய தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை நாம் ஆய்வு செய்தல் அவசியமாகும். சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல்…
-
- 0 replies
- 8.4k views
-
-
-
வர்மம் & மர்மம் – எந்த இடத்தில் அடி பட்டால்-உயிர் சக்தி பாதிப்படையுமோ அந்த இடங்கள் மர்ம புள்ளிகள். வாசி தட்டும் இடமெல்லாம் -வர்மம் அதாவது வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். இதை சித்த மருத்துவத்திற்கும், வர்மக்கலைக்கும் பயன்படுத்தலாம். இடகலை, பிங்கலை, சுழு முனை நாடிகள், தச வாயுக்கள், சரங்களின் ஓட்டமே -வர்மம் அகத்தியர் வர்ம சூட்சமத்தை அளவு நூல் மூலம் அளந்து தெரியப்படுத்தியதுடன் வர்மப் புள்ளிகள் தான் மனித உடலை இயக்குகின்றன. இவைதான் மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறினார். காரணம் வர்மப் புள்ளிகள் அனைத்தும் ஒடுங்கியிருக்கும் இடங்களில்தான் உயிர்நிலை சுவாசமும் ஒடுங…
-
- 16 replies
- 13.7k views
-
-
ART ATTACK: Drawings as old as 5000 years face threat from vandals,who have defaced most of the works by adding their element of creativity Until a year ago,the rocks of Porivarai boasted of prehistoric paintings.Drawings of deer,bull,mongoose,elephant and figures of human beings,dating back to 5,000 years,decorated the hill,situated near Karikkiyoor,34km from Kotagiri in the Nilgiris.Today,the paintings face threat from vandals,who have defaced most of the works by adding their own bit of creativity.The graffiti by the vandals,using ordinary paints over the prehistoric works,indicates scant regard for heritage. K T Gandhirajan,a member of the team that excavated the …
-
- 1 reply
- 4.2k views
-
-
மேட்டூர் அணையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டங்களை தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை இரவு நேரங்களில் சிலர் சூறையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகவும் பழமையான வரலாறு கொண்டது. இம்மாவட்டங்களில் தான் வரலாற்று காலத்திற்கு முந்தைய கற்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் அதிகம் கிடைக்கின்றன. முக்கியமாக கற் திட்டைகள், குத்துக்கற்கள், கற்பதுக்கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரீகத்தின் நினைவுச் சின்னங்கள் அனைத்து ஒரே இடத்தில் கிடைக்கின்றது. தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர்கள் சுகவனமுருகன், ராஜன், அர்ஜுனன் ஆகியோர் மேட்டூர் அணையின் ந…
-
- 1 reply
- 3.5k views
-
-
பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. குடுவைகள் பண்ருட்டி அருகே உள்ள கணிசப்பாக்கத்தில் வைரக்கண்ணு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மீன்வளர்ப்புக்காக பண்ணைகுட்டைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நிலத்துக்குள் புதைந்திருந்த பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மக்கிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தாழிகளை ஆய்வு செய்த தொல்பொருள் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் முதுமக்கள் தாழிகள் பற்றி கூறிய சுவாரசியமான தகவல்கள் இதோ... கணிசப்பாக்கத்தில் கிடைத்துள்ள தாழிகளின் மேல் விளிம்புகளுடன் கூடிய மேல்மூடிகள் உள்ளன. மேலும…
-
- 0 replies
- 1.3k views
-
-
நாம் யார்? ஆதி தமிழன் யார்? வரலாற்றில் எது உண்மை? எது மிகைப்படுத்தல்? எதை நம்புவது? ஏன் இல்லை? - அறிவு சார்ந்து மட்டுமே சிந்தித்து ஆராய்வோம் வாருங்கள் ! தமிழ் வரலாற்றில் ஒரு குறைபாட்டைக் காணுகிறேன். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் எத்தனையோ மன்னர்கள் ஆண்டார்கள் என்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் குறித்த வரலாறு எழுதி வைக்கப் படவில்லை. இலக்கியங்களில் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் அவை முழு சித்திரத்தை வழங்கும் அளவில் இல்லை. அந்த இலக்கியங்கள் கூடப் பாதுக்காப்படவில்லை என்பது வேறு விடையம். அதே காலகட்டத்தில் உலகின் பல்வேறு திசைகளில் வாழ்ந்த மன்னர்கள் குறித்து தெளிவான வரலாறு எழுதப் பட்டிருக்கிறது, பாதுகாக்கப் பட்டுள்ளது. மாசிடோனியாவில் இருந்து ஆசியா நோக்கி படையெடுத…
-
- 20 replies
- 24k views
-
-
பிரபாகரன் என்ற பெயர் தமிழர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு, உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது. 1954 நவம்பர் 26-ல் வல்வெட்டியில் வேலுப்பிள்ளை-பார்வதிக்கு மகனாக பிறந்த பிரபா கரனுக்கு இந்த ஆண்டில் 60-வது பிறந்தநாள்... அதாவது, மணிவிழா. ஈழத்திலும் தமிழகத்திலும் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் நவம்பர் 26-ல் பிறந்தநாள் விழாவும், மறுநாள் (நவ.27) மாவீரர் நாளும் கடைப்பிடிக்கப்பட்டன. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நோர்வேயில், லண்டனில், ஐரோப்பிய ஒன்றியங்களில் வீர விளையாட்டு, ஆடல், பாடல் என களைகட்டியது திருவிழா. ஈழத்தைப் பொறுத்தவரை 2009 முள்ளிவாய்க்கால் கொடூரத்திற்குப் பிறகு இன்னும் முழுமையான அமைதி திரும்பவில்லை. உரிமைகளும் கிடைக்கவில்லை. பிரபாகரன் எங்கே இருக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
1. ஆதிகாலப் பாண்டியர்களின் வெள்ளி முத்திரை நாணயங்கள்: சங்க காலத்தில் தமிழகத்தை மூன்று அரச குடியினர் ஆண்டனர். சேர, சோழ, பாண்டியர்களில் மூத்தகுடி பாண்டியர்கள் தாம் என்ற வரலாற்றை அவர்கள் வெளியிட்ட கர்ஷபணம் (Punch Marked Coins) எனப்படும் வெள்ளி முத்திரைக் காசுகளால் அறிகிறோம். சேரர்களும் சோழர்களும் முத்திரைக் காசுகளை அச்சிட்டு வெளியிடவில்லை. இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அழகான ஒளிப்படங்கள், கோட்டோவியங்களுடன் புத்தகங்களாக வெளியிட்டு சங்ககால வரலாற்றை அறியச் செய்த முனைவர் ரா. கிருஷ்ணமூர்த்தியின் நாணய ஆய்வுச் சேவைக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் கொண்டுள்ளனர். தமிழக நாணயங்களில் மிகப் பழையவற்றை பல ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் தேடித் தெளிவான படங்களுடன் நூல்கள் எழுதிய தினமலர் ரா. கிருஷ்…
-
- 0 replies
- 4.5k views
-
-
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடித் தமிழ்’ எனப் புகழ் பெற்ற செம்மொழித் தமிழின் பெருமையினைச் சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், புராதனச் சின்னங்களும் வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும், கடலுக்கடியில் மூழ்கிக்கொண்டிருக்கும் தமிழ் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வது இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாகிறது. தற்போதைய, உலகளாவிய ஆய்வில் கண்டுபிடித்த செய்தியின் அடிப்படையில் மடகாசுகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் தெற்கு பரந்துபட்ட இந்துமகா சமுத்திரத்தில் மூழ்கிய லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என அழைக்கப்படுகிறது. பங்கியா-குமரி இருந்த நிலப்பரப்பில்தான் உயிரினம் மனிதனின் வழித் தோன்றல்கள் தோன்றியுள்ளன.அமெரிக்க, ஆஸ்திரேலியக் கண்டங்களில் ஆரம்பகால உயிரினமோ, மனிதவழித் தோன்ற…
-
- 0 replies
- 5.2k views
-
-
ப.திருமாவேலன் *தம்பி' எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டிய புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! *அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா! *வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் எ…
-
- 1 reply
- 1.7k views
-
-
புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000 - 20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம் ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள் அளவில் கற்காலம் தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு வேளாண் குமுகங்கள் அமைந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவில் 8,000 ஆண்டுகள் அளவில் பருத்தி வேளாண்மை இருந்ததாக அறியப்பட்டுள்ளது. 9,000 ஆண்டுகள் பழமை மிக்க சிந்துவெளி தளம் மெகர்காரில…
-
- 0 replies
- 1.3k views
-
-
மொஹஞ்சதாரோ (ஆவணப்படம்) சிந்துசமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் துவக்க காலசொற்குறியீடுகள் என்கிற முடிவுக்கு தாம் வந்திருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அறிவித்துள்ளார். இது தொடர்பான தமது சுமார் 50 ஆண்டுகால ஆய்வின் முடிவுகளைத் தொகுத்து அவர் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார். ரிக் வேத வழியிலான சிந்து சமவெளியின் திராவிட தொடர்புக்கான ஆதாரம் (Dravidian Proof of the Indus Script via Rig Veda) என்கிற தலைப்பிலான அவரது ஆய்வுக்கட்டுரையில் சிந்துசமவெளிக் குறியீடுகள் தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்பது உறுதியாகத் தெரியவந்திருப்பதாக அறிவித்திருக்கிறார். சிந்து சமவெளி முத்திரைகள் சொல்ல…
-
- 2 replies
- 973 views
-
-
இறப்புக்குப் பிறகும் வ.உ.சி. புறக்கணிக்கப்பட்டது பெரும் துயரத்தின் வரலாறு. தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவைத் தொடங்கிவைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதை ஒரு கலையாக வளர்த்து, பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. பல்வேறு வகுப்புகளைச் சார்ந்த தமிழர்களை ‘விடுதலை’ என்ற ஒரே புள்ளியில் இணைத்து, சிந்திக்கத் தூண்டியவர் வ.உ.சி. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தின் பிதாவாகத் திகழ்ந்தவரும் அவர்தான். ‘‘நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தார். அவரது மேடைப் பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போர…
-
- 2 replies
- 784 views
-