Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எழுதியவர் : பழ. கருப்பையா மூலம் : http://tamil.oneindia.com/ "திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; "திராவிடன்" என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.'' ''ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு" என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய இந்த நூல்கள் கொளுத்தப்பட வேண்டும்!'' ''இங்கு, இந்து நாகரிகம் ஒன்றுதான் உண்டு; யூத கிருத்துவ நாகரிகத்துக்குப் பிந்தையது இந்து நாகரிகம்…

  2. மாவீரன் அலெக்ஸாண்டரை இரும்புப்பறவை என்று வருணிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அந்த இருப்புப்பறவையை மேலும் வருணிக்கிறார் இவ்வாறு: இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால் வீரமும் விவேகமும் இவன் ஆயுதம் கம்பீரமும் அழகும் இவன் சக்தி எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல்! உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில் உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்த ஓர் இரும்புப்பறவை! ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால் ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் (THE GREAT ) கி.மு 356-ஆம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந…

  3. பண்டையக் கிரேக்கத் தத்துவஞானியாகிய பிளேட்டோ, மேலைநாட்டு அரசியல் தத்துவமும், நமது அறிவியல் மற்றும் மெய்விளக்கியல் சிந்தனையும் எழுச்சி பெறுவதற்குத் தோற்றுவாயாக அமைந்தவர் ஆவார். இந்தத் துறைகளில் இவரது அனுமானங்கள் கடந்த 2300 ஆண்டுக்களுக்கு மேலாகப் படிக்கப்பட்டு வருகின்றன; ஆராயப்படுகின்றன. எனவே, மேலைநாட்டுச் சிந்தனையின் தந்தையர்களில் ஒருவராக இவர் போற்றப்படுகிறார். ஏதென்ஸ் நகரத்தின் புகழ்வாய்ந்த ஒரு குடும்பத்தில் கி.மு. 427 ஆம் ஆண்டுவாக்கில் பிளேட்டோ பிறந்தார். இவரது இளமைப்பருவத்தில் புகழ்பெற்ற தத்துவஞானியாக விளங்கிய சாக்ரட்டீசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. சாக்ரட்டீஸ் இவருடைய ஆருயிர் நண்பராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். கி.மு. 399 ஆம் ஆண்டில் சாக்ரட்டீஸ் 70 வயதை எட்டியிருந…

  4. சங்ககாலப் போர்முறைகளும் விதிகளும் அறிஞர் க.பூரணச்சந்திரன் போர்முறைகளும் விதிகளும் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே வருகின்றன. வாளையும் ஈட்டியையும் கொண்டு போரிட்ட காலத்துப் போர் முறைகள் ஒருவிதம். துப்பாக்கியையும் பீரங்கியையும் கொண்டு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு போரிட்ட முறைகள் இன்னொரு விதம். டைனமைட் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு போர்முறை வேறுவிதமாக மாறியது. டாங்கிகள், போர் விமானங்கள் வந்த பிறகு போர்முறை முற்றிலும் வேறுவிதமாக மாறியது. கடைசி யாக இப்போதோ அணுகுண்டு, ஹைடிரஜன் குண்டு போன்ற அணு ஆயுதங்கள், வேதியியல் நச்சுகள், உயிரியல் அழிப்புப் போர்முறைகள் போன்ற பலவிதமான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. போரின் வரலாற்றை நோக்கும்போது, தனி மனித அழிப்பிலிருந்து மாறி எவ்விதத் தொ…

  5. Source : http://subavee-blog.blogspot.com/ கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம், கரன் வதைப்படலம், மாரீசன் வதைப்படலம் ஆகிய மூன்று படலங்களையும் படித்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும். இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும்,தூங்காமலும் அரிதுயில் கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது தன் கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் இழந்து, கைம்பெண்ணாய்க் காட்டில் அலைந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கு வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள். தன்னுடைய அரக்க உருவத்தை, மந்திரத்தால் அழகிய உருவாக மாற்றிக் கொண்டு,இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக்…

  6. தமிழால் இணைவோம் தமிழால் ஒன்றுபடுவோம் தமிழர்களாய் வாழ்வோம் என்று தணியும் இந்தத் தமிழனின் பிரிவு. எல்லாமே அரசியல்தான் என்று விட மனமில்லை. அரசியல்வாதிகளினாலும் அடிப்படைவாதிகளினாலும் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்அவர்களின் மாயைக்குள் வீழ்ந்து சிக்கிச் சின்னாபினமாகிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இனத்தை அடையாளப்படுத்துவது தாய் மொழி. தாய் மொழியால் இணைந்தவர்கள் அனைவருமே மதங்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும் கலை கலாச்சாரம் என வேறு பல காரணிகளால் தாய்மொழியினால் இணைக்கப்பட்டு ஒரு இனமாக வாழ்கின்றனர். தமிழன் தமிழ் மொழியால் இணைந்து உலகெல்லாம் பரவி வாழ்ந்து வருகின்றான். ஆனால் அந்தத் தமிழர்களே தங்களுக்குள் தாங்கள் மலேசியத் தமிழர்கள், சிங்கப்பூர்த் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், …

  7. இந்த வருட மாவீரர் தினம் என்பது 4 இடத்தில் 4 அமைப்புக்கள் ஏட்டிப் போட்டியாக வைப்பார்களா என்பது தெரியாது. அவர்களுக்கு அஞ்சலி செய்தல், கௌரவம் செய்தல் என்பது கட்டாய தேவை. ஆனால் வழமை போல 4 பாட்டு, 3 நாடகங்கள், 2 நடனங்கள், என்று நடத்திக் கொண்டே இருக்கப் போகின்றார்களா? அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்க ஏதாவது செய்ய வேண்டாமா?? இதை மக்களிடமே விட்டுவிடலாம் எள நினைக்கின்றேன். மாவீரர் தினத்துக்கு வருகின்ற மக்களிடம் கருத்துக் கணிப்பாக என்ன எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் என்பது தொடர்பாக தகவல்களை திரட்டும் வண்ணம் எழுதவைத்துப் பெறலாம் என நினைக்கின்றேன். சில நாதாரிகள் கேவலமாக எழுதித் தரக்கூடும். அவற்றுக்கு குப்பைக்கூடு எதற்காக இர…

  8. வீரத்தாய் குயிலி நினைவு தினம் இன்று ! சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் இட்ட, வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு, எவரும் எதிர் பார்க்கா வண்ணம், வெள்ளையர்களின் ஆயுத கிட்டங்கிகளை அழிக்க தன் மீது எண்ணையை ஊற்றி, எவராலும் அழிக்க முடியாத ஆயுத கிடங்கை அழித்தும், தன்னையும் மாய்த்துக்கொண்ட வீரம் செறிந்த, விடுதலைக்கு வித்திட்ட வீரத்தாய் குயிலி நினைவு தினம் சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் இட்ட, வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு, எவரும் எதிர் பார்க்கா வண்ணம், வெள்ளையர்களின் ஆயுத கிட்டங்கிகளை அழிக்க தன் மீது எண்ணையை ஊற்றி, எவராலும் அழிக்க முடியாத ஆயுத கிடங்கை அழித்தும், தன்னையும் மாய்த்துக்கொண்ட வீரம் செறிந்த, விடுதலைக்கு வித்திட்ட அருந்ததிய வீரத்தாய் குயிலி -இன்று நினைவு தினம் இன்று . …

  9. தமிழ்மொழியில் அறிவியல் இல்லையாம்..?? அப்ப இதெல்லாம் என்னவாம்..!? தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் ! உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் த…

  10. தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் அறிஞர் க.பூரணச்சந்திரன் தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் பற்றிப் பலர் கவலையோடும் அக்கறையோடும் விவாதிக்கிறார்கள். பொதுவாக நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள். அவற்றைப் பகுத்துப்பார்த்தால், பெரும்பாலும் 1. உலக/ இந்திய நாகரிகத்திற்குத் தமிழகத்தின் பங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலை 2. இந்தியாவில் தேசிய நலனுக்கு உகந்த கூட்டாட்சிகள் அமையாத நிலை-தமிழ்த் தேசியம் உருவாகாத நிலை 3. ஆங்கிலத்தின் ஆதிக்கம்/ அதன் பின்னணியிலுள்ள உலகமயமாக்கல் 4. செம்மொழிப் பிரச்சினை 5. ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலும் அதனோடு இணைந்த தமிழ்மேம்பாடும் என்ற பொருள்களில் அடங்குகின்றன. சிலருக்கு தமிழனுக்கு இனவுணர்வில்லையே என்ற…

  11. உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய் ================================= ‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா? உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா? சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம். தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // …

  12. தொன்மச் சோழர்கள் சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர். தமிழ்மண்டலம் எனும் தென்னகத்தை மூன்று கூறாக்கி ஒன்றை சூரிய மரபினரும், மற்றொன்றை சந்திர மரபினரும், இன்னொன்றை அக்கினி மரபினரும் ஆண்டனர். சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு, வேள்மண்டலம், வேள்தேசம், நாகமண்டலம், பொன்னிமண்டலம், காவிரி நாடு, கிள்ளிமண்டலம், வளவன்மண்டலம் என பல பெயர்களுண்டு. சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு, பாண்டிமண்டலம், வையைநாடு என பெயர்களுண்டு. அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம், மலை நாடு…

    • 2 replies
    • 17.6k views
  13. செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? http://www.unmaionline.com/new/2123-.html You are here: Home செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? செத்த மொழிக்குச் சிங்காரம் - ஏன்? Print Email - கவிஞர் கலி.பூங்குன்றன் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. அது தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அதனை எதிர்த்து ஆகஸ்டு முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துவிட்டார். சமஸ்கிருதமும் ஒரு மொழிதானே _ குறிப்பிட்ட பள்ளிகளில்தானே கொண்டாடச் சொல்லியிருக்கிறார்கள் என்று சிலர் முட்டுக் கொடுக்கக் கிளம்பியுள்ளனர். அப்படிப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். _ இந்துத்துவா வகையறாக்களைச் சேர்ந்தவர்கள். சமஸ்கிரு…

  14. “நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” – இளம்பூரணர் 1967-69 யாண்டுகளில் 'சென்னை மாகாணம்' என்று அதற்குமுன் வழங்கிய பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றப் பெயர்சூட்ட முனைந்த பொழுது சான்றுகள் தேடியபொழுது சிலப்பதிகாரத்தில் காட்டினதாகச் சொல்லுவார்கள். சிலப்பதிகாரத்திலே “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்” (சிலப்பதிகாரம் : வஞ்சிக் காண்டம்) என்று சொல்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டுமேயன்றி மற்ற பழைய உரைகாரர்களில் ஒருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை வழங்குகின்றார். அது சிலப்பதிகாரத்தின் வழக்கை விட இன்னும் தேற்றமானது. அதைக் காண்போம். தொல்காப்பியத்தின் பழைய உரைகாரர்களுள் முந்தியவர் இளம்பூரணர் (கிபி 11-ஆம் நூற்றாண்டு). செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு “நு…

  15. “ஐபோன் புரட்சியில் தமிழுக்கும் இடம் உண்டு!” அ.முத்துலிங்கம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம், 'அனைத்துலக வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது’ விழாவை சமீபத்தில் ரொறொன்ரோவில் நடத்தியது. வருடாவருடம் வழங்கப்பட்ட இயல் விருதை இதுவரை சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், அம்பை, பத்மநாப ஐயர், ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன், டொமினிக் ஜீவா போன்ற ஆளுமையாளர்கள் பெற்றிருந்தார்கள். இயல் விருதுடன் இந்த முறை வழமைபோல புனைவு, அபுனைவு, கவிதை, மொழிபெயர்ப்பு, தமிழ்க் கணிமை விருதுகளும் வழங்கப்பட்டன. பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்ட கட்டுரைப் போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த எலினா ரோபோறஸ் என்கிற இளம்பெண…

  16. தமிழ் மொழியின் பெருமை பற்றியும் மீனாட்சி அம்மன் கோவில் பற்றியும் அழகு தமிழில் பேசும் சீனத்து பெண் https://www.facebook.com/photo.php?v=10154278257055637

  17. இராசேந்திரசோழனை நினைவுகூரல் தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை பொதிகை தொலைக்காட்சி மட்டுமே முழுவதும் ஒளிபரப்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் எவரையும் காணமுடியவில்லை. நியாயமாக தமிழக முதல்வரே நேரில் வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்க வேண்டும். தமிழகம் தழுவிய விழாவாக இதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். திராவிட அமைப்புகள், கட்சிகள் சோழர்களின் புகழ்பாட ஒருபோதும் முன்வர மாட்டார்கள் . அதேபோல் ஆரிய இந்துத்வா அமைப்புகளும் சோழர்களை சிறப்பிக்க முன்வர மாட்டார்கள். காரணம் சோழர்கள் தமிழ்த் தேசத்தின் பெருமைமிகு சின்னமாக விள…

    • 5 replies
    • 3.6k views
  18. எதைப் பேசித் தமிழன் கெட்டான்..?! “தமிழன் பேசிப் பேசியே கெட்டான்” “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” “தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்” "தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்” இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள். இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா? இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். எதைப் பேசி தமிழன் கெட்டான்? தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா? தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா? தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?…

    • 5 replies
    • 1.1k views
  19. பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (He…

  20. புதியதோர் உலகம் அப்பாத்துரை அபூபக்கர் அண்மையில் நோர்வேயில் இருந்து வந்திருந்த நண்பரொருவரை சந்தித்தேன். வடக்கில் நடந்த அரசியல் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்றில் அவரை சந்தித்தேன். யாரோ அறிமுகமான ஒருவருடன் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். அவரது நடையில் ஒருவிதமான மிதப்பை உணர்ந்தேன். ஒரு பழுத்த அரசியல் பிரமுகரைப்போல அல்லது மிகப்புகழ் வாய்ந்த போராளியையொத்த ஒரு தோரணை. கால்ப்பந்தென்றால், நான்றாக கால்ப்பந்து ஆடுபவர்களிற்கும், கிரிக்கெட் என்றால் நன்றாக கிரிக்கெட் ஆடுபவர்களிற்கும்தானே மரயாதை. அதுபோல, அரசியலரங்கிலும் முதல் மரியாதை பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும், மிகத் தீவிரமான அர்ப்பணிப்பினால் பகழடைந்த போராளிகளிற்கும் ஒரு மரியாதை இருக்கத்தானே செய்யும். அவர்களும் மற்ற…

  21. -முனைவர் இராம. இராமமூர்த்தி முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய மொழிகளாகக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், பாரசீகம், சமற்கிருதம், தமிழ், சீனம் என்பவனவற்றை மொழியியற் பேரறிஞர் ச. அகத்தியலிங்கம் சுட்டுவார். இதனை எண்ணுங்கால் தமிழர்கள் உலகின் மூத்த குடிகள் மட்டுமல்லர்; நாகரிகத்தால் மேம்பட்டவருமாவர். இதனைக், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி. (புறப். வெண்பா மாலை. கரந்: …

  22. என் இசையால் தலைவணங்கி தேடுகிறேன் ............

  23. சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும்! தமிழில் எத்தனையோ வட்டார வழக்குகள் இருக்கின்றன. ஆனால், இழிவாகக் கருதப்படுகிற ஒரே வட்டார வழக்கு ‘சென்னைத் தமிழ்’! கலைவாணர் என்.எசு.கே முதல் சந்தானம் வரை தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாக அனைவராலும் நையாண்டிப் பொருளாக்கப்படுவதும் சென்னைத் தமிழ்தான். தனிப்பட்ட முறையில், தமிழர்கள் அனைவருக்குமே அடுத்தவர்களின் வட்டார வழக்கை நக்கலடிக்கும் வழக்கம் இருந்தாலும், பொதுவெளியில் அனைவராலும் கிண்டலுக்குள்ளாக்கப்படுவது சென்னைத் தமிழ்தான். பொதுவாக, வட்டார வழக்கு என்பதே மொழியின் அழிவுக்கான காரணிதான். தாய் வாழையைச் சுற்றி வளரும் கன்றுகளைப் போன்றவை அவை. ஏனெனில், வட்டார வழக்கு (Colloquial) புழக்கத்…

  24. 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 29 ஜனவரி - 1 பிப்ரவரி 2015 மலாயாப் பல்கலைக்கழகம் கோலாலம்பூர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1964-ஆம் ஆண்டு புது டெல்லி மாநகரில் நடைப்பெற்ற 26-வது அனைத்துலக தெற்கிழக்காசியப் பிராந்திய அறிஞர் குழாம் சந்திப்பின்போது, தமிழ் மொழியின்பாலும் அதன் வளர்ச்சியின்பாலும் அதிபற்றுமிக்க தலைச்சார் கல்விமான்களின் சிந்தனையில் உதித்த விளைபயனாகும். இவர்களது முயற்சியின் விளைவாக முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடந்தேறியுள்ளது: பாரிஸ் (பிரான்சு)–1970, யாழ்ப்பாணம்(இலங்கை)–1974; மதுரை (தமிழ் நாடு, இந்த…

    • 0 replies
    • 789 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.