பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
பூநகரிக் கோட்டை . வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் பூநகரி என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். கரையோரத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேல் தொலைவில் உட்புறமாக அமைந்திருந்த இக் கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதுவும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பது இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளைப் பற்றி ஆராய்ந்து நூல் எழுதிய நெல்சன் என்பாரது கருத்து. 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் 1658 ஆம் ஆண்டுவரை ஆண்டனர். தமது ஆட்சியின் கடைசிக் காலத்தை அண்டி இக் கோட்டையை அவர்கள் நிறுவினர். மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதை நீரேரிக்குத் தெற்கே முடிவ…
-
- 0 replies
- 892 views
-
-
மாவீரர் நினைவுச் சின்னம் கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர். இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர். video link: http://www.ziddu.com/download/7387407/maaverer.flv.html எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம். இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
பொன்னியின் செல்வன் உரையாடல் இடம்பெறும் வேளையில் பொருத்தமாக இருப்பதோடு பலரும் அறியவேண்டிய விடயங்கள் சில உள்ளன. நன்றி நன்றி - யூரூப்
-
- 0 replies
- 498 views
-
-
https://app.box.com/s/pl5qk9f0jqv5iqlvzdgtnvcfhju9apbj தொழூஉப் புகுத்தல் – 16 மகிழ்ந்து திளைஇ விளையாடும் மடமொழி ஆயத்தவருள் இவள் யார்? உடம்பொடு உயிர் புக்கவள் இன்று ஓ ஓ! இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் திருமா மெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவன் (முல்லைக்கலி 102: 8-12) பொருள்:- வீரனுக்கு வாழ்க்கைப்பட விரும்பும் பெண்கள் தாமாகவே முன்வந்து தமது முடிவைத் தெரிவித்தனர் என்றும், அச்செய்தி பலமுறை பறையறிந்து தெரிவிக்கப்பெற்றது என்றும், அவர்களுள் ஒருத்தியே தனது மனதில் இடம் பிடித்தவள் என்றும் உறுதி செய்து கொள்கிறான் ஒரு வீரன். செம்மொழித் தகமையில் வகைப்படுத்தப்பட்டுள்ள பழந்தமிழ் 41லும் வீரர்களின் காதலி…
-
- 0 replies
- 1.4k views
-
-
தொழூஉப் புகுத்தல் - 44 https://app.box.com/s/whiuyavvkda7ciliey8majysk2qxn3sy வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி அண்ண அணிந்து ஊர் ஆயின் நண்பகல் போழ்து ஆயின் கண் நோக்கு ஒழிக்கும் கவின்பெறு பெண் நீர்மை மயில்எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன வெயிலோடு எவன் விரைந்து சேறி? உது காண்! பிடி துஞ்சு அன்ன அறைமேல தடிகண் புரையும் குறுஞ்சுனை ஆடிப் பனிப்பூம்தளவொடு முல்லை பறித்துத் தனிக் காயாம் தன் பொழில் எம்மொடு வைகிப் பனிபடச் செவ்வாய் நும் ஊர்க்கு! இனிச் செல்வெம் யாம் மா மருண்டன்ன சிற்று ஆய்த்தியர் நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை அவை ஆ முனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செவ்வாய் ஓர் கண்கொத்திக் கள்வனை நீ எவன் செய்தி பிறர்க்கு? …
-
- 0 replies
- 667 views
-
-
மனித சமுதாயத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்கும், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் பேச்சு மொழிக்கு உள்ள முக்கியத்துவம், எழுத்துக்கும் இருக்கிறது. உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. silசில மொழிகள் தங்களுக்கான சொந்த எழுத்து வடிவம் இல்லாததால் பிற மொழிகளின் எழுத்து வடிவத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் ஆரம்பம் முதல் தனக்கென ஒரு சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழியாகவும், மிக நீண்ட கால வரலாறு உடைய மொழியாகவும் தமிழ் மொழி இருக்கிறது. தமிழி: பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூலில் 18 வகை எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ‘தம்ளி’ என்ற எழுத்தும் …
-
- 0 replies
- 2.3k views
-
-
மாமனிதனின் வரலாறு - ஜீவானந்தம் எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது. இதை உணர்ந்திருந்த சிறுவன், தன் நண்பனை தீண்டாமை தாண்டவமாடிய உயர் சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அங்குள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றான். இதை அறிந்த ஆதிக்க சாதியினர் சிறுவனை அழைத்து…
-
- 0 replies
- 3.1k views
-
-
2500 ஆண்டுகளுக்கு முன்பே.... உலோகங்களை பிரித்தெடுக்கும், தொழிற்சாலை அமைத்த தமிழன்! காணொளியை, முழுமையாக பாருங்கள்......
-
- 0 replies
- 399 views
-
-
சிலம்பு அமைப்பின் ஏற்பாட்டில் பிரான்சில் 4வது ஆண்டாக இடம்பெறும் தமிழர் திருநாள் நிகழ்வின் தொகுப்பு.
-
- 0 replies
- 617 views
-
-
‘Establishing Tamil University is a shot against National Integration’ என்று சீறினார் இந்திரா காந்தி. ‘No Madam, I am telling you as a congressman it is not’ என்று மறுத்துப் பேச நேர்ந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் திரு. வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், தமிழ் பல்கலைக்கழகத்தின் அடிமனை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளைத் திட்டமிடும்போது பெருந்தச்சன் திருவாளர் கணபதியார் அவர்களிடம் கூறிய செய்தி இது. திருவாளர் கணபதியார் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும், அன்றைய தொழில் நுட்பக் கல்வித்துறையில் மிகவும் செல்வாக்குப்பெற்ற மரபு வழிப்பட்ட கட்டடக்கலை வல்லுநர் ஆகவும் இருந்த படியால், திட்டமிடுவோர் மனங்கொள்ள வேண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
இருப்பிடம் ஆஸ்திரேலியா ஒரு கண்டம். 29,67,909 சதுர மைல் பரப்புள்ள நாடு. இந்நாட்டின் தலைநகரம் கேன்பரோ. இங்கு ஆங்கிலமே ஆட்சிமொழி. இந்நாடு ஏழு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழர் குடியேறிய வரலாறு : ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : "முகையதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி" என்று காணப்படுகிறது. இதன் மூலம் தமிழக வணிகர்கள் எந்தளவிற்கு தூரக்கிழக்கு ந…
-
- 0 replies
- 1.8k views
-
-
யார் இந்தக் களப்பிரர் பாகம் 07 களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள்தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம்தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்ப…
-
- 0 replies
- 4k views
-
-
https://app.box.com/s/in7jiea5ncp73wkv2q32ro93eoket1tv தொழூஉப் புகுத்தல் – 17 தொழி ஈ ஈ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் குருஉக்கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் தருக்கு அன்றோ ஆயர் மகன் (முல்லைக்கலி 104: 69-72) பொருள்:- வெற்றி பெற்ற வீரன் ஒருவன் தம்மைக் கண்டிப்புடன் பார்க்கிறான் என்றும், தன்னை அது துன்புறுத்துவதாகவும் குறிப்பிடும் ஒரு பெண், அவனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் புலப்படுத்துகிறாள். நிலமகளாகிய திரு மகளுக்கு அரசனே கணவன் என்ற மரபின்படி, அரசனின் புத்தாண்டு உருவாக்க ஆண்மைச் செயலில் பங்கெடுத்த ஆயர்மகன் தனக்கு அரசன் ஆகிறான் என்று மகளிர் வகைப்படுத்தினர் எனலாம். வீரம் என்பது உயிர் அச்சம் சிறிதும் இ…
-
- 0 replies
- 793 views
-
-
https://app.box.com/s/7cdw4j8ggjef9rugxygvrwukax4uswce தொழூஉப் புகுத்தல் – 26 மருப்பில் கொண்டும் மார்பு உற(த்) தழீ இயும் எருத்து இடை அடங்கியும் இமில் இறப் புல்லியும் தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடிக் கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு (முல்லைக்கலி 105: 30-34) பொருள்:- கொம்புகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டும், மார்பு அழுந்தக் கட்டித் தழுவியும், கழுத்தின் இடையில் தொற்றிக்கொண்டும், திமில் இற்றுப் போகுமாறு இறுக்கியும், மேற்கால்களுக்கு இடையில் புகுந்தும், மோதி உதை வாங்கியும் பின் வாங்காமல் காளைகள் மீது பாய்ந்து குத்தித் தம்மைத் தொட இடம் தராமல் களம் காத்தன காளைகள். காளைகளுக்கும், வீரர்களுக்குமான போரில், காளை…
-
- 0 replies
- 876 views
-
-
1455ல் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது. 1554ல் போர்ச்சுகல் நாட்டில் இலத்தீன் எழுத்துகளில் தமிழ் வார்த்தைகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளிவந்தது. 1578ல் முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டது (தம்பிரான் வணக்கம்). 1860களில் ஆங்கில தட்டச்சு வந்தது. 1930களில் தமிழின் 247 எழுத்துகளை பல்வேறு ஆய்வுகள் செய்து சுருக்கி 72 விசைகளில் கொண்டுவந்தார் ஈழத்தமிழரான ஆர்.முத்தையா. ஜெர்மானிய நிறுவனத்தின் மூலம் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து விற்பனையும் செய்தார். 1970களில் கணினியின் காலம் தொடங்கிய போது கனடாவில் 1984ல் முதல் தமிழ் மென்பொருளை உருவாக்கினார் முனைவர் ஸ்ரீநிவாசன். 1985லேயே பெரும்பாடு பட்டு தமிழ் எழுதும் மென்பொருளை (முரசு அஞ்சல்) உருவாக்கினார் மலேசியத்…
-
- 0 replies
- 601 views
-
-
தமிழில்லாமல் ஆங்கிலமில்லை!- சில சொற்களும் விளக்கமும்.. http://youtu.be/Z9Ws-DG_HgA
-
- 0 replies
- 966 views
-
-
கிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்... கிறிஸ்துமஸ் என்றால் என்ன? " கிறிஸ்துமஸ் " என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. 1994ம் ண்டு பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன் கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாகவும் அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் …
-
- 0 replies
- 6.1k views
-
-
தமிழ்நாட்டில் 13ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க அம்மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில் (கிபி 1118 - 1136) கட்டப்பட்ட கோயிலொன்று உள்ளது. பாழடைந்த அந்த சிவன் கோயில் ஒன்றை புனரமைக்கும்போது கல்வெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த கல்வெட்டினை, முன்னாள் வங்கி அதிகாரியான வேலூரைச் சார்ந்த கல்யாணராமன் என்பவரும், ஊர்மக்களும் எடுத்து திருப்பணி செய்யப்பெற்ற அக்கோயிலின் மகாமண்டபத்தின் வடபுறம் தரையில் நட்டு காப்பாற்றி வந்துள்ளனர். அக்கல்வெட்டை அண்மையில் கல்வெட்டு ஆய்வாளரான முதுமுனைவர் குடவா…
-
- 0 replies
- 339 views
-
-
மூவாயிரம் (௩௲) ஆண்டுகள் பழமையான சங்ககால தமிழர்களின் ஓவியங்கள்.... https://www.facebook.com/photo.php?fbid=510430978998109&set=a.443456615695546.95906.443208569053684&type=1&relevant_count=1
-
- 0 replies
- 1k views
-
-
"கோண்ட்" இலங்கை, நாகர் அரசனின் மக்கள், நாகதுவீபம்=யாழ்பபாணம் ? ! க்கொண்ட்வாணா (gondwana) என்ற பெயரில்தான் எங்கள் குமரிக்கண்டத்தை உல்கம் அறியும், அத்தோடு இக்கண்டத்தில் வாழ்ந்து பரந்த எம்மூதாதையர்ரை (திராவிடர்ரை) கோண்ட் (gond) என்ற பெயரில்தான் உலகம்மறியும். கோண்டி (Gondi language) மொழி எழுதப்படாத மொழி, இம்மொழி போன்று இன்னும் பல திராவிட மொழிகள் எழுத்தில்லாமல் இருக்கிறன, இவற்றிற்கு தமிழை உருபெயர்கும் எழுத்துக்களாக அமைத்துக் கொடுத்திருக்கவெண்டும், . . . ? ? ?. திராவிட மொழிக் குடும்பம் பற்றிய விபரங்களை இங்கே காணலாம் மதமாற்ம் செய்பவர்களால் சேகரிக்கப்பட் பேச்சுதாரணங்ளை இங்கே கேட்கலாம். இந்தப்பூர்வீக திரவிடர் தங்கள் சரித்திரத்தை கதை…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகம் முழுவதும் இன்று பேசப்படுகின்ற 6'000 மொழிகளில் அரைவாசிக்கு மேல் அழிந்து போகும் தருவாயில் உள்ளது என்று சென்ற ஆண்டு தாய்மொழி தினத்தில் யுனேஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. இதில் 2'500 மொழிகளிற்கு மேல் வெறும் 10'000ற்கும் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். போர், இடப்பெயர்வு, வெளியேற்றப்படல் என்று பல தவிர்க்முடியாத காரணங்கள் இருந்தாலும் ஏனைய மொழிகளை, அழிப்பதில் முக்கியபங்கு வகிப்பது மொழிக்கலப்பு. மொழிகளின் அழிவில் முன்னிற்பது எந்த மொழியென்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆங்கிலமே முன்னிற்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை உள்ளூர் மொழிகளில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மாநாகன் இனமணி 118 https://app.box.com/s/ilyrir3m4zmtfu4xf6349x1hpmldvq6a அம்கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து ஓண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் எனக் கடுக்கும் கவின்பெறு தேரும் கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் அடிபடு மண்டிலத்து ஆதி போகிய கொடிபடு சுவல விடு மயிர்ப் புரவியும் (மதுரைக்காஞ்சி 384-391) ...வருக! இந்நிழல் என ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் அமிழ்து திகழ் கருவிய கண மழை தலை இக் கடுங்கால் கொட்கும்..... (பதிற்றுப்பத்து 17: 9-12) பொருள்:- அறத்தொடு ஆட்சி செய்யும் அரசனின் ஆட்டைத் திருத்த முயற்சியினால் மட்டுமே குதிரைகளால் நிழலைப் பின் பற்றி உலகைச் சுற்றி வர முடியும். த…
-
- 0 replies
- 709 views
-
-
https://www.facebook.com/Tamizh.Payilvom/posts/213237168800931 மேலதிக தகவல்களுக்கு http://dravida-nadu.blogspot.ch/p/blog-page_14.html?spref=fb
-
- 0 replies
- 983 views
-
-
மாநாகன் இனமணி 108 https://app.box.com/s/1eng4c9pqf7z2ytlnbepzn8w8iy2ka6f இலங்கு மணி மிடைந்த பொலங் கலத் திகிரித் கடல் அரசு வரைப்பின் இப் பொழில் முழு தாண்ட நின் முன் திணை முதல்வர் போல் நின்று நீ ................ (பதிற்றுப் பத்து 14: 18-20) விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்க் கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்துச் சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின் வயவர் வேந்தே (பதிற்றுப் பத்து 15: 18-21) பொருள்: தங்கச் சக்கரத்தில் வயிரமணிகளைப் பதித்துக் கொண்டு தனது கடற் படையால் உலகைச் சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பு முழுவதையும் அலசி வளி மண்டலம் வழக்கற்ற இடங்களில் இருந்து கதிரொளியைத் திருப்பி அனுப்பிய தென்பாண்டிய மன்னர்களைப் போல, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் தனது தலை…
-
- 0 replies
- 499 views
-
-
"தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 02 [In English & Tamil] சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு "புதியீடு" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். 'புதியீடு விழா' என்று ஒரு கல் வெட்டுக் குறிப்பதாக அறிந்து உள்ளேன். விவசாயிகள் 'அறுவடையில் ஒரு பங்கை' அரசனுக்கு / கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக இருக்கலாம்?. "புதியீடு" என்பது, புதுஇடு என்று பிரிபடும்? புதிய (அறுவடையில்) ஒரு பங்கு என்று கொள்ள முடியும்? உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். பொங்கல் …
-
- 0 replies
- 206 views
-