சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
515 topics in this forum
-
பெருங்கடல்களின் சுவாசங்கள்: இதயத்துக்கு இதம் தரும் '2021' சிறந்த படங்கள் 19 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,AIMEE JAN / OCEAN PHOTOGRAPHY AWARDS மேற்கு ஆஸ்திரேலியாவின் நிங்கலூ கடலடி பவளப்பாறை பகுதியில் கண்ணாடி மீன்கள் புடை சூழ வலம் வந்த தோணி ஆமையின் படத்துக்கு 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த பெருங்கடல் புகைப்படத்துக்கான முதல் இடம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தை எடுத்தவர் எய்மீ ஜான் என்ற புகைப்பட கலைஞர். ஓஷியானிக் இதழ் நடத்திய இந்த போட்டி, பெருங்கடல்களின் அழகையும் அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் உலகம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாக இருந்தது. பட மூலாதாரம்,HE…
-
- 2 replies
- 481 views
- 1 follower
-
-
பென்குயின் பறவைகள் சில நேரங்களில் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் மிருகக்காட்சி சாலையில் உள்ள, ஒருபாலுறவில் வாழும் இரு ஆண் பென்குயின்கள் தாங்களும் ஒரு பென்குயின் குஞ்சை வளர்க்க வேண்டும் எனும் விருப்பத்தில் இருந்தன. பூங்காவைச் சுற்றி வரும் சமயங்களில் பிற பென்குயின்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் மீது அவை ஆர்வம் காட்டி வந்தன. சமீபத்தில் தந்தை பென்குயின் ஒன்று தன் அருகில் இருந்த தனது குஞ்சைக் கவனிக்காமல் இருந்ததைக் கண்டது இந்த ஒருபால் தம்பதி. அப்போது அந்தப் பென்குயின் குஞ்சின் தாய் நீரில் ஆசுவாசமாக குளித்துக்கொண்டிருந்தது. பெற்றோர் இருவருமே கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தனவோ என்னவோ தெரியவில்லை, இதுதான் வாய்ப்பு என்று நினைத்த இ…
-
- 6 replies
- 1k views
-
-
போட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி? SUPPLIED தெற்கு ஆஃப்ரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 350க்கும் மேலான யானைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த யானைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆய்வக சோதனை முடிவுகள் வெளியாக இன்னும் சில வார காலம் ஆகும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஒகவாங்கோ டெல்டா பகுதியில் மே மாதம் தொடக்கத்தில் இருந்து 350க்கும் அதிகமான யானைகளின் இறந்த உடல்களை தானும் தனது சகாக்களும் கண்டுள்ளதாக டாக்டர் நியால் மெக்கேன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பை சே…
-
- 4 replies
- 1.2k views
-
-
போர்த்துகலில்... கட்டுக்கடங்காத காட்டுத் தீ: தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் திணறல்! வடக்கு மற்றும் மத்திய போர்த்துகல் முழுவதும் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தீயைக் கட்டுப்படுத்த 3,000 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தீயினால் ஏற்பட்ட சிறு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க 12 தீயணைப்பு வீரர்களுக்கும் 17 பொதுமக்களுக்கும் மருத்துவ உதவி தேவைப்படுவதாக போர்த்துகீசிய அரசு தொலைக்காட்சி மற்றும் பிற உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை அதன் தீயணைப்பு விமானக் கடற்பட…
-
- 0 replies
- 189 views
-
-
2019-11-18@ 00:03:49 சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. பின்னர் இவை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது.சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதை குழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் வரை சென்னை மாநகராட்சியிடம் சுமார் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை …
-
- 0 replies
- 333 views
-
-
நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும் சாம்பிராணியும்[Frankincense ] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும…
-
- 7 replies
- 2.3k views
-
-
தேசிய மரநடுகை தினத்தில் மரத்தை நட்டி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடிவிட்டு, பின்னர் மறந்து விடுகின்ற இன்றைய காலகட்டத்தில், வரட்சியை குறைப்பதற்காக இப் பிரதேசத்தில் இவ்வாறான மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்வந்தமை வரவேற்கத்தக்கதாகும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவித்தார். மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத்திட்டம் நேற்று (01) மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில் இடம்பெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்பு மாவட்ட மேலதி…
-
- 1 reply
- 540 views
-
-
மண்பானை தொழில்நுட்பமும் குளிரூட்டலும் புது டெல்லியில் உள்ள ஒரு ஆரம்ப நிறுவனம் எமது முன்னோர்கள் அறிமுகப்படுத்திய மண்பானை தொழில்நுட்பம் ஊடாக குளிரூட்டலை அறிமுகப்படுத்தி வருகின்றனர். ஆண்ட ஸ்டூடியோ என்பது இந்த நிறுவனத்தின் பெயர். 14 பாகை செல்ஸியஸ் அளவிற்கு இதனால் வெப்பம் குறைவடையும் என இந்த நிறுவனம் கூறுகின்றது. பல, செலவு குறைவான முறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது. ஆனால், நீரையும் இதற்கு பயன்படுத்துகின்றது. ஆனால், நீரை பாவிக்காமல் காற்று உள்வாங்கப்பப்படுவதாலும் வெப்பம் குறைக்கப்படும். இது, வழமையான மின்சாரத்தை பாவித்து உருவாக்கப்படும் குளிரூட்டலை போன்று வினைத்திறன் கொண்டதாக இருக்காது. ஆனால், சூழலை பாதிக்கும் பல மூலப்பொருட்கள் தவிர்க்கப்படு…
-
- 0 replies
- 368 views
-
-
மத்திய சுற்றாடல் சபை என்றால் என்ன? | மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிபணிப்பாளர் M.சிவகுமார்
-
- 0 replies
- 314 views
-
-
மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி! மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான அவரது புத்தகத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்படி, சூழல் மாசுபடுதல் மற்றும் பிளாஸ்டிக்குகளை உற்பத்திசெய்யப் பயன்படுத்தப்படும் பித்தலேட்டுகள் எனப்படும் இரசாயனங்கள், மனித ஆண்குறி சுருங்குதல், பிறப்புறுப்புகள் சிதைந்து போதல் மற்றும் மனித குழந்தைகள் தவறான பிறப்புறுப்புகளுடன் பிறக்கக் காரண…
-
- 0 replies
- 261 views
-
-
மனித குலத்துக்கு பனிமலைகள் உருகுவதால் ஏற்படப்போகும் ஆபத்துகள் என்னென்ன? வில்லியம் பார்க் 22 அக்டோபர் 2021, 01:54 GMT பட மூலாதாரம், DENIS BALIBOUSE/AFP/GETTY IMAGES பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீரைப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மின்சாரத்துக்கும் உணவுக்கும் நம்பியுள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் அவை உருகி ஓடிக் கொண்டிருக்கின்றன? அவை மாயமானால் நமக்கு ஏற்படும் இழப்பு என்ன? பனிக்கட்டிகள் ஆறுகளாகி மலையடிவாரங்களை நோக்கிச் செல்லும் போது, கீழே உள்ள பாறைகளைக் கழுவிப் பண்படுத்திக்கொண்டு செல்வது, மனம் கவரும் காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நம் அனைவரின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்…
-
- 0 replies
- 296 views
-
-
மனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன? ஆனி மாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினமாகும். 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'உயிர்ப் பன்மையத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. நிலைபேறான இயற்கை பேணப்பட வேண்டும் என்பது தொடர்பில் சில விடயங்களை விளக்குகிறார் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா. http://www.nimirvu.org/search/label/பொருளாதாரம்
-
- 1 reply
- 483 views
-
-
மனிதர்களால் பேரழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள் ஹெலன் பிரிக்ஸ் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES வன உயிர்களின் எண்ணிக்கை 50 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் மூன்றில் இரண்டு பங்காக குறைந்துள்ளது என உலக வன உயிர் நிதியத்தின் முக்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவு குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் இதுவரை பார்த்திராத வகையில், மனிதர்களால் இயற்கை அழிக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. “நாம் காடுகளை எரி…
-
- 0 replies
- 357 views
-
-
மனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்? - ஒரு டைம் ட்ராவல் டுன்கன் க்ரே பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் மேகசின் Getty Images இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது. மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும் அல்லது விவசாயம் ஆகட்டும். ஆனால், ஹோமோ சேபியன்ஸின் தாக்கம் இப்போது ஒரு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மாசாகட்டும் அல்லது பெருங்கடலில் குவிந்துள்ள குப்பைகள் ஆகட்டும் எங்கும் எதிலும் மனித இனத்தின் தடயங்கள் பதிந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்த திசையில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த பூ…
-
- 0 replies
- 468 views
-
-
மன்னாரில் அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள்…. மன்னார் மாவட்டத்திலும் ‘சுயநலமான மனித நடவடிக்கைகளால்’ அழிக்கப்பட்டு வருகிறது. உலகில் மனிதனின் நடவடிக்கைகளினால் இயற்கை சூழல் பல்வேறு விதமான ஆபத்துக்களை எதிர் கொண்டு வருகின்றது. மனிதன் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கையின் காரணமாக பல உயிரிணங்கள் அழிவடைந்து செல்வதோடு, பல ஆயிரக்கணக்கான தாவரங்களும் அழிவடைந்து செல்கின்றன. அந்த வகையில் இலங்கையிலும் சில வகையான தாவரங்கள் அழிந்து செல்லக் கூடிய நிலையில் இருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். அதில் ‘கண்டல் தாவரங்கள்’ முக்கியமானதாகும். ‘கண்டல் தாவரங்கள்’ என்பது கடற்கரையோரங்களின் சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். மனித நடவடிக்கைகளால் உலகில…
-
- 0 replies
- 380 views
-
-
அழிந்து வரும் தேனீக்களை பாதுகாப்பதற்காக, அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் அவற்றை இயற்கை முறையில் வளர்த்து வருகிறார். அழிந்து வரும் வனப்பரப்புகள், பருவநிலை மாற்றம், அதிகளவிலான பூச்சி மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை தடுத்து தேனீக்களை பாதுகாக்கும் பொருட்டு கலிபோர்னியாவில் வசித்து வரும் தீயல் ((Thiele)) என்பவர், தனது வீட்டிலேயே கூடுகள் அமைத்து தேனீக்களை வளர்த்து வருகிறார். வர்த்தகப் பயன்பாட்டுக்காக தேனீக்கள் வளர்க்கப்படுவதை போல் அல்லாமல், வனப்பகுதியில் அவை வாழும் முறையிலேயே மரங்களில் கூடுகள் அமைத்து, தேனீக்களை பராமரித்து வருகிறார். https://www.polimernews.com/dnews/86341/மரங்களில்-…
-
- 0 replies
- 425 views
-
-
மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே பூமியைக் காப்பாற்றிவிட முடியுமா? - `இல்லை' என்கிறது இந்த ஆய்வு! க.சுபகுணம் Sapling ( Image by WikimediaImages from Pixabay ) உண்மையாகவே இப்படி லட்சக்கணக்கில் மரங்கள் நடுவது காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துமா? மக்கள் பல்லாண்டு காலமாகவே மரம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், கப்பல் கட்டுவதற்கான மரங்களை வளர்த்தார்கள். அதற்கும் முந்தைய 5-ம் நூற்றாண்டில், ஏட்ரியாடிக் கடலோரத்தில் வாழ்ந்த துறவிகள், தங்களின் உணவு மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக பைன் காடுகளை உருவாக்கினார்கள். மேலும், ஐரோப்பியர்களின் வருகைக்கும் முன்னமே…
-
- 0 replies
- 691 views
-
-
மரணத்திற்கு பிறகு இயற்கை நம் உடலுக்கு கொஞ்சமும் இரக்கம் காட்டப் போறதில்லை... ஷாக் ஆகாம படிங்க...! மனிதர்கள் வாழும்போது இயற்கையை படாதபாடு படுத்துகின்றனர், அதனால்தான் என்னவோ இயற்கை மரணத்திற்கு பிறகு மனித உடலுக்கு இரக்கம் காட்டுவதில்லை . அதிர்ஷ்டவசமாக, இயற்கையான சிதைவின் காலத்தை மரணத்தின் நவீன சடங்குகளால் மாற்றப்பட்டுள்ளன. எம்பால் செய்யப்படுவதன் மூலம் சிதைவு செயல்முறையை தாமதப்படுத்த நாம் தேர்வு செய்யலாம், அங்கு நமது உடல் திரவங்கள் பாதுகாப்புகளுடன் மாற்றப்படுகின்றன.தகனம் செய்யப்படும் போது நமது உடல் சாம்பலாக மாற 2,000 பாரன்ஹீட் வெப்பநிலையில் எரிக்கப்படுகிறது. இயற்கையானது நம்மை மீண்டும் பூமிக்கு உரமாக மாற்றும் செயல்முறை மிகவும் கடினமானது. தனக்கும் அழுகும் இற…
-
- 0 replies
- 504 views
-
-
மறு அளவீடு செய்யப்படுகின்றது இமயமலையின் உயரம்! உலகின் மிக உயரமான மலையான இமயமலையின் உயரத்தை மறு அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தீர்மானத்தை சீனாவும், நேபாளமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளன. நேபாளத்தில் அமைந்துள்ள சகர்மதா சிகரமும், சீனாவில் அமைந்துள்ள ஸூமுலங்மா சிகரமும் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை பறைசாற்றுகின்றன. இந்தநிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் இமயமலையை பாதுகாக்கும் விதமாக நேபாளம் மற்றும் சீனா ஆகியன இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதற்கமைய சகர்மதா மற்றும் ஸூமுலங்மா ஆகிய சிகரங்களில் அறிவியல் ரீதியிலான தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 572 views
-
-
மறைந்துவரும் ஊளைச் சத்தம் டி.ஆர்.ஏ.அருந்தவச்செல்வன் உவமைக்காகவும் கதைகளிலும் அடிக்கடி பேசப்படும் நரிகளைத் தமிழகத்தில் நேரில் காண்பது அரிதாகிவிட்டது. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சில இடங்களிலும் தர்மபுரியை ஒட்டிய வறண்ட பகுதிகளிலும் அரிதாக நரி கண்ணில் படுகிறது. நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தவை நரிகள். வட இந்தியாவில் கன்ஹா, பரத்பூர் ஆகிய சரணாலயங்களில் காணப்படும் நரிகளைவிடத் தமிழக நரி சற்றே சிறிதாகக் காணப்படுகின்றன. பள்ளத்தாக்குகள், ஆறுகள், ஏரிகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இவை வாழ்கின்றன. கிராமத்தின் வெளிப் பகுதிகள், வேளாண் பகுதிகள், மலைக் குன்றுகளை ஒட்டிய பகுதிகள், திறந்தவெளிக் காடுகள் போன்ற பகுதிகளில் நரி வாழ்கிறது. …
-
- 3 replies
- 1.2k views
-
-
மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல - திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள். மலேசியா விழித்ததை அடுத்து கடந்த மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13 முக்கியமான செல்வந்த நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. மலேசியா சுற்றுசூழல் அமைச்சர் தமது நாடு உலகின் குப்பைத் தொட்டியல்ல என தெரிவித்ததே இந் நிலைக்கு காரணமாகும் . பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 42 கொள்கலன்களை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் யியோ பீ யின் 2018 ஆம் ஆண்டில் சீனா பிளாஸ்ரிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்ததிலிருந்து தேவையற்ற குப்பைகளின் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்ற…
-
- 0 replies
- 380 views
-
-
மாசுபட்ட காற்றை சுவாசிப்பது மனிதர்களின் நுரையீரலையும், இதயத்தையும் பாதிக்கும் என்பது பொதுவான பிரச்சனை. காற்றில் உள்ள சிறிய தூசி துகள்களை நீண்ட காலமாக உள்ளிழுப்பதால் சுவாச பிரச்சினைகள், காற்றுப்பாதைகளின் எரிச்சல், ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சினைகள் போன்ற சுகாதார பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். சில நேரங்களில் அது புற்றுநோயையும் கூட ஏற்படுத்தும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது எடை அதிகரிப்பிற்கு கூட வழிவகுக்கும் என்று கூறுகிறது. உயிரியல் பரிசோதனைக்கான அமெரிக்க சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, காற்று மாசுபாடு நமது எடையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதற்காக ஆராய்ச்சியாளர்கள் எலிகளை வைத்து ஆய்வை…
-
- 0 replies
- 306 views
-
-
மாமத யானைகளை மீண்டும் உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி: இதில் சிக்கல் என்ன? 20 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சில விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மாமத யானைகளை (Woolly Mammoth) மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்கள் இவை. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து பனியில் உறைந்து கிடக்கும் மாமதங்களின் உடற்பகுதிகளிலிருந்து டி.என்.ஏ. வை எடுத்து மரபணு பொறியியல் தொழில்நுட்பம் மூலமாக அவற்றை மீண்டும் உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார். கொலாஸல் என்ற நிறுவனம், இதுவரை இந்தத…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
மிக வெப்பமான காலப்பகுதியாக ஜூலை மாதம் பதிவாகியுள்ளது! சர்வதேச ரீதியாக மிகவும் வெப்பம் நிலவிய மாதமாக இந்த வருடம் ஜூலை மாதம் பதிவாகியுள்ளதாக செய்மதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றச் சேவையின் ஆராய்ச்சியாளர்களால் இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது பூமி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பமயமாதலை அனுபவிக்கிறது என்பதற்கான சமீபத்திய அறிகுறி இதுவென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் ஆர்க்டிக் வட்டத்திற்குள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையுடன், வெப்பமான காற்றலைகள் கடந்து சென்றன. அதேவேளை கடந்த மாதம் ஐரோப்பா முழுவதும் உயர்வான வெப்பநிலை அளவுகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உலகளவில், 2019 ஜூலை மாதம் ஓரளவு வெப்பமா…
-
- 0 replies
- 542 views
-
-
மிகவும் வெப்பமான ஆண்டுகளின் பட்டியல் வெளியானது! 19ஆம் நூற்றாண்டிலிருந்து அதிக வெப்பத்தைப் பதிவு செய்திருக்கும் ஆண்டுகளின் பட்டியலில் கடந்த 2018ஆம் ஆண்டு நான்காம் இடத்தினை பிடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை மாற்றச் சேவைப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கரியமிலவாயு வெளியேற்றம் காரணமாகவே கடந்த 2018ஆம் ஆண்டு அதிக வெப்பத்தைப் பதிவு செய்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டு பூமியின் சராசரி வெப்பநிலை 14.7 டிகிரி செல்சியஸ் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிக வெப்பமான ஆண்டாகக் கருதப்படும் 2016ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடுகையில் இது 0.2 ட…
-
- 0 replies
- 305 views
-