சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
நீண்ட வரிசையில் “அதிகாலை , சேவல் கூவியது , காகங்கள் கரைந்தன, இரவு இரை தேடச் சென்ற பெற்றோரைக் காணாமல் குஞ்சுகள் கத்தின, தூரத்தில் எங்கேயோ கோயில் மணி ஓசை கேட்டது, கடகம் நிறைய புடுங்கிய கத்தரிபிஞ்சுகளையும் , வெண்டைக் காய்களையும் தலையில் சுமந்த படி சின்னத்தம்பி சந்தைக்கு ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டருந்தார் “ எண்டு தமிழ் பாடத்தை வாசிக்க மணி அடிச்சுது. பள்ளிக்கூடத்தில மிகச்சிறந்த சந்தோசம் எண்டால் , மணி அடிச்ச உடன பாய்ஞ்சு போய் முதலாவதா சைக்கிளை எடுத்துக் கொண்டு போறது தான். கொண்டு போய் விடேக்கயே டக்கெண்டு எடுக்கத் தக்கதாத்தான் விடிறது . மத்தியான வெய்யில், கடைசிப் பாடம் அதுகும் interval இல தண்ணி மட்டும் குடிச்சிட்டு இருக்கேக்க வகுப்பை விட சைக்கிள் park ஐத் தான் பாக்…
-
- 0 replies
- 570 views
-
-
பிளவு… “ மனோகரா தியட்டரடியில குண்டு வெடிச்சு பெரிய சண்டையாம் கனபேர் செத்திட்டாங்களாம் ,அதால நாங்கள் ஓடி வந்திட்டம் நாவலர் பள்ளிக்கூடத்தில இருந்து” , எண்டு கொஞ்சச் சனம் உள்ள பூந்திச்சிது. அவங்கள் சொன்ன list ல யாழ் இந்துக்கல்லூரியும் இருந்ததால நாங்கள் கொஞ்சம் வேளைக்கே போய் அங்க settle ஆகீட்டம் . பக்கத்து வீட்டு யோசப் மாஷ்டரின்டை புண்ணியத்தில மரவேலை வகுப்பை எங்கடை area ஆக்கள் ஆக்கிரமிச்சம் . வாங்குக்கு மேல வாங்கை கவிட்டு அடுக்கி shell பட்டாலும் பாதுகாப்பா பங்கர் போல மாத்தி , அதுக்கு மேல உடுப்பு bag எல்லாம் வைச்சிட்டு கீழ ரெண்டு வாங்கு இடைவெளியில ஒரு குடும்பம் எண்டு ஐக்கியமானம். வீட்டை இருந்து கொண்டு வந்த சாப்பாடு ஒரு இரவில முடிய யாழ் இந்து hostel சமையலறை தான் எல்ல…
-
- 0 replies
- 592 views
-
-
ட்வீட்டுகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ள ட்விட்டர் நிறுவனம் 51 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை போட்டதற்கு பிறகு அதை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு வேலை நடந்து வருவதாக ட்விட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினரான பிறகு, டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான ஒரு கருத்து கணிப்பை தனது ட்விட்டர் கணக்கில் நடத்தினார். ட்விட்டர் பயனர்கள் பல காலமாக ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை எதிர்பார்த்திருக்கக்கூடிய சூழலில், அதை நடைமுறைப்பட…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்து…
-
- 2 replies
- 745 views
-
-
மெல்பேர்னில் - 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி - இடம்பெற்ற அற்புதமான சம்பவம் ஒன்றுக்கான பதில் நிகழ்வை, சரியாக 13 வருடங்களில் இந்த ஆஸ்திரேலிய மண், இன்று என் கைகளில் தந்து கணக்குத் தீர்க்கும் என்று நான் நம்பியிருக்கவேயில்லை. ஆனாலும், காலம் எப்போதும் யாருக்கும் கடன் வைக்காது என்பதை, இன்று மாலை பெடரேஷன் சதுக்கத்திலுள்ள கோப்பிக்கடையிலிருந்து கப்பிச்சீனோவை உறிஞ்சும்போது உற்சாகமாக உணர்ந்துகொண்டேன். 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், முள்ளிவாய்க்காலை இராணுவ ஆட்லறிகள் கிட்டத்தட்ட முழுதாக விழுங்க ஆரம்பித்திருந்தன. தமிழ் நெற்றும் புதினம் இணையத்தளமும் சாவின் எண்ணிக்கைகளை சலாகை வரைவில் போட்டு, கணக்குச் சொல்லிக்கொண்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்த தமிழர்கள், யார் யாரோ கால்களிலெல்லாம் விழ…
-
- 11 replies
- 1.1k views
-
-
ஒரு நாயை காப்பாற்ற எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் பாருங்கள் 😂 https://m.facebook.com/story.php?story_fbid=10221436454841913&id=1266400413
-
- 1 reply
- 943 views
-
-
நாடு மீளமுடியாம இக்கட்டிலும் இருளிலும் மூழ்கி உள்ள இந்த நேரத்தில் சிங்களமக்களின் சமூகவலைத்தள பதிவுகள் சிலவற்றை வாசிக்கும்போது இன்ரெஸ்ற்றிங்காக இருக்கு.. நாட்டில் இதுவரை இருந்த இனவாதத்திற்கு எதிராக இருப்பது நல்ல ஒரு மாற்றம்.. ——//—- கோட்டாபய ராஜபக்ச "ஜனாதிபதி"யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, கோட்டாவுக்கு வாக்களிக்காத சிறுபான்மையினருக்கு எதிராக "துரோகிகள்" என்று முத்திரை குத்தி, அவரது வாக்காளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் "வெறுப்பு" பரப்பும் பதிவுகளால் எனது முகநூல் செய்தி நிரப்பப்பட்டது. அவர்களில் ஒருவர் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் படங்களில் நடித்த விருது பெற்ற நடிகர் ஆவார் (அவர் சிறுபான்மையினரை இழிவான வார்த்தைகளில் திட்டினார்). அ…
-
- 0 replies
- 524 views
-
-
பாலம் கல்யாணசுந்தரம். பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ? 35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா. உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெ…
-
- 0 replies
- 429 views
-
-
எந்தளவுக்கு உணவுப் பொருளை தேடிக் கொள்ள முடியுமோ... அந்தளவுக்கு தேடி வைத்துக்கொள்ளுங்கள், உயிர் பிழைக்கலாம். நான் ஏலவே சொன்னதுதான். இலங்கை எப்போதோ திவாலாகிவிட்ட நாடு. சில அரசியல் காரணங்களுக்காய் அதை அறிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர். அரச மற்றும் அரச சார்பற்ற வங்கிகளில் பணமில்லை, அரச வங்கிகளின் வங்குரோத்து நிலமையினை வெளியில் தெரியவிடாமல் செய்ய அரசாங்கம் பணத்தாள்களை அச்சிட்டு வங்கிகளுக்கு கொடுத்துவருகிறது. இது மோசமான நிலமை. நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் பெரும் தொகை பணம் இருப்பின், அல்லது வங்கிக்கணக்கிற்கு பெரும் தொகை பநம் வந்திருப்பின் அதனை நீங்கள் உடனே பெற்றுக்கொள்ள முடியாது வங்கியில் பல மணிநேரம் காத்திருந்தே அதனை பெற்றுக்கொள்ள முடியும…
-
- 0 replies
- 529 views
-
-
“ அரிசிப்பொதியோடும் வந்தீரோ ” தம்பியவை பாடிறது தான் பாடிறியள் பக்திப்பாடாப் பாடுங்கோவன் என்று ஒரு பழசு நேயர் விருப்பம் வேற கேட்டிச்சுது. வாழ்க்கையில் குண்டு போட்ட பிளேன் மட்டும் பார்தத எங்களிற்கு நிவாரணம் போட்ட பிளேன் ஒரு அதிசயம் தான். முன் வீட்ட நிண்ட வேப்பமரம் அம்மாளாச்சி தான் கோட்டையில இருந்து அடிக்கிற செல்லும் குண்டும் படாம காப்பாத்திறா எண்டு எங்களை அம்மா நம்ப வைச்சிருந்தா. ஆனாலும் அதையும் தாண்டி இந்த பொதிக்குண்டு ஒண்டு வீட்டு ஓட்டையும் உடைச்சிக்கொண்டு விழுந்தது. அக்கம் பக்கம் எல்லாம் குண்டு எண்டு பார்க்க bomb squad கிருபாவும் அன்பழகனும் முன்னுக்கு போய் அது வெடிக்கிற குண்டு இல்லை எண்டு உறுதிப்படுத்தினதும் விடுப்பு ladies படை வெடிக்காத குண்டுப் (நிவாரணப்) பொதி…
-
- 2 replies
- 601 views
- 1 follower
-
-
ராஜா ரசிகர்கள் கவனத்துக்கு..... விரைவில் How to Name it 2 : இளையராஜா அறிவிப்பு.! "How to Name it" இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது: திரைப்படங்களில் எல்லாம், பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என்று வருகிறது அல்லவா. சூப்பர் மேன் 1, சூப்பர் மேன் 2, சூப்பர்மேன் 3-னு போகுது, பேட்மேன் 1, 2,3, 4-னு வரிசையாக போகுது. இதுபோல மியூசிக்கில் ஏன் வரக்கூடாதுனு ஒரு யோசனை வந்தது. அதனால், How to Name it -2 சீக்கிரமே வரப்போகிறது" என்று அவர் கூறியுள்ளார். How to Name it: ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் தனி இசை …
-
- 1 reply
- 471 views
-
-
கறி... ~~~~~ எப்போதும் நான் வெளிப்படையாகவே சொல்லி வந்திருக்கிறேன்.. நான் ஒரு பார்ப்பன சாதியில் பிறந்தவன்.. மிக ஆச்சாரமாக வளர்க்கப்பட்டவன்.. சிறு வயதில் எம் தந்தை பெரியாரை வெறுக்க கற்பிக்கப்பட்டவன்.. ஆனாலும் மிக சிறு வயதிலேயே புத்தகங்கள் வாசிக்கத் துவங்கிவிட்டதால் ஒரு குழப்பமான தெளிவோடு நான் வளர்ந்தவன்.. ஏன் என்று தெரியாது. சாமி இல்லை என்பது மட்டும் அந்த வயதில் மனதுக்குள் பதிந்து போயிருந்தது.. அப்பா எனக்கு சிறந்த படிப்பைத் தருவதாக உறவினர்களிடம் பெருமை பீத்தியபடி என்னை எப்போதும் அத்தை வீட்டிலும் சித்தப்பா வீட்டிலும் பாட்டி வீட்டிலுமாக படிக்க வைத்தார். பாட்டி வீடு தவிர மற்றவை எல்லாம் யூத சித்திரவதை முகாம்களுக்கு சற்றும் குறையாதவை.. விளையாட அனுமதியற்ற.…
-
- 1 reply
- 1.2k views
-
-
"எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது" என்ற தலைப்பில் 27.9.2018 Yஅலெ (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vலடிமிர் Pஒழ்னெர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர். ரசியா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன். * 1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. கோர்பச்சேவ் (1985௧991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரசியா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Bஎலவெழ என்ற இடத்தில் ஒன்றுகூடி ச…
-
- 1 reply
- 909 views
-
-
CMR இல் இருந்து விடைபெற்றேன் சொந்தங்களே... CMR வானொலி கருக்கொண்ட நாள் முதல், என் இதயத்தில் உறைந்துபோன பெயர். கடந்த சுமார் 18 ஆண்டுகளாக, CMR உம் நானும் சேர்ந்தே வளர்ந்தோம். அது தவழ்ந்தபோது நானும் தவழ்ந்தேன், அது நடந்தபோது நானும் நடந்தேன், அது ஓடியபோது நானும் ஓடினேன். ஆனால், தனிப்பட்ட காரணங்களால், என்னோடு வளர்ந்த பிள்ளை, CMR ஐ விட்டு கனத்த மனதுடன் ஓடிவந்துவிட்டேன். இம்முடிவு, என் சாவுக்குச் சமானமானது என்ற போதிலும், காலம் அவ்வாறான ஒரு முடிவுக்கு என்னை இட்டுச்சென்றுள்ளது. இதற்காக, என்னை நேசித்த அத்தனை உள்ளங்களிடமும், என்னை வளர்த்த CMR நிர்வாகத்திடமும் மன்னிப்புக்கோருகிறேன். எனினும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை முடிந்தவரை, பயன்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். நேரம் 9.45 மணி, ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு இன்னும் 15 நிமிடங்கள். பேருந்துகள் கிடைக்குமா என்பது பெரிய கவலையாகி விட்டது. எனக்கு 20 அடி தொலைவில் ஒரு மனிதன் ஆட்டோக்களை நிறுத்த முயன்று கொண்டே இருந்தான். நின்ற ஆட்டோக்களும் அவனை ஏற்றிக் கொள்ளாமல் நகர்ந்தன, பேருந்து வருவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, சரி, ஆட்டோவில் போகலாம் என்று முடிவு செய்து ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். "கோயம்பேடு போக வேண்டும்", ஆட்டோக்காரர் ஒரு கணம் யோசித்து விட்டு "200 ரூபாய் குடுங்க சார்" என்றார். சாதாரண நாட்களிலேயே 300 ரூபாய் கேட்பார்கள், இந்த ஊரடங்கு இரவில் அவர் கேட்டது நிய…
-
- 0 replies
- 540 views
-
-
#யாழ்ப்பாண பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பிரயோகங்களே. மெய்யே! இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம். கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் இது பாவனையில் உள்ளது. …
-
- 1 reply
- 910 views
-
-
பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!! வெளியேறும் மக்களால் 🔴உக்ரைன் தலைநகரில் பெரும் வாகன நெரிசல்! அதிபர் மக்ரோன் இன்று நாட்டுக்கு விசேட உரை! 🔴உலக பங்குச் சந்தைகள் சரிவு எண்ணெய், எரிவாயு விலைகள் என்றுமில்லாதவாறு எகிறின!!! நேட்டோவின் பதில் நடவடிக்கை நாளைய கூட்டத்துக்குப் பின்பே! உக்ரைனின் முக்கிய இராணுவ இலக்கு களை மட்டும் நவீன ஏவுகணைகளால் தாக்கி அழித்தபடி ரஷ்யப் படைகள் மிக வேகமாக நாட்டின் தலைநகரம் அமைந் துள்ள வடக்குப் பகுதி நோக்கி முன்னேறி வருகின்றன. தாக்குதல் ஆரம்பித்து 24 மணிநேரத்துக் குள் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலை நகர் கீவ் அமைந்துள்ள பிராந்தியத்தின் எல்லைப்பகுதியை அண்மித்துவிட்டன என்ற…
-
- 4 replies
- 674 views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=4787670431319151&id=100002287252856
-
- 1 reply
- 1.2k views
-
-
எனது கரையிலிருந்து 500மீற்றர் அருகேயுள்ள கரையில் எனது சிறு தோணியை கரை நிறுத்த முடியாது. கரையோரப் பாதுகாப்புச் சட்டமாம். தென் இலங்கை ராட்சதப் படகுகள் எனக்குப் பக்கத்திலுள்ள காரைநகர் துறையில் தரித்து பெரும் தொழில்களைச் செய்வார்களாம். இதென்ன கண்டறியாத கரையோரப் பாதுகாப்புச் சட்டம்? இதைக் கேட்பார் கிடையாது. அவனவன் கொடுக்கை வரிந்துகட்டி "மீனவர் உரிமை" என பலவர்ண தோள்த்துண்டுகளைக் கட்டிக்கொண்டு சந்னதம் ஆடுகிறார்கள். யாரடா நீங்கெல்லாம்...?? https://www.facebook.com/thamayanthi.thamayanthi https://www.facebook.com/thamayanthi.thamayanthi
-
- 0 replies
- 447 views
-
-
உக்ரைனின் கிழக்கே டொன்பாஸில் தனி நாடுகளுக்கு புடின் அங்கீகாரம்!! பாதுகாக்க ரஷ்யப் படைகள் செல்லும்? பூகோள அரசியல் போட்டியால் பூமிப் பந்தில் புதிய தேசங்கள்.. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில்- டொன்பாஸ் பிராந்தியத்தில்-கிளர்ச்சியா ளர்களது கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு நிலப்பிரதேசங்களைத் தனி நாடுகளாக அங்கீகரித்திருக்கிறது ரஷ்யா. அதிபர் விளாடிமிர் புடின் நாட்டுக்கு ஆற்றிய தொ லைக்காட்சி உரையில் தனிநாட்டு அங்கீ காரணத்துக்கான பிரகடனத்தில் ஒப்பமிட வுள்ளார் என்பதை அறிவித்திருக்கிறார். ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிப் படைகளால் தன்னிச்சையாகவே குடியரசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த டொனெட் ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) ஆகிய இரண்ட…
-
- 0 replies
- 259 views
-
-
தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின், கனடாவிற்கான பெயர் பட்டியலின் # 24. இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயர் செந்தில்குமரன்(மின்னல்), இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் கடல் தொழில் செய்யும் ஒருவர், தான் களைப்பாறுவதற்காக தமிழ் நாட்டில் வைத்திருந்த, அந்தப்புர தேவதையின் மூத்த கணவனின் புத்திரன். காகம் கறுப்பென்றால், கறுப்பெல்லாம் காகமாக முடியுமா. தான் ஈழத்தில் பிறந்தவரென்று சொல்லி, எம்மவர்களிற்கு பெரிய நாமம் போட்டுக் கொண்டிருக்கின்றார். அவரின் நாமத்தில் மயங்கிய எம்மவர்களில் சிலர், தங்களோடு சேர்த்து இவரையும் பண சேகரிப்பில் பயன்படுத்தினார்கள். இலங்கையில் டிசம்பர் 26, 2004 சுனாமி வந்த போது, கனடியத் தமிழர்களிடமிருந்து வசூலிக்…
-
- 4 replies
- 577 views
-
-
"படம் பார் பாடம் படி" கரவெட்டியில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட மாநாடு! - தங்களுக்குள் மல்லுக் கட்டி வீணாய் போகும், தமிழ்த் தேசியம் பேசுபவர்களுக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இந்தப் படங்கள் பல நூறு செய்திகளை சொல்கின்றன. புரிந்துகொள்வார்களா? இந்த மாநாட்டில் அமைச்சர் தயாசிறி பாடிய "தமிழா தமிழா நாளை நம் நாளே" பாடல் Nadarajah Kuruparan
-
- 0 replies
- 797 views
-
-
டொன்பாஸ் மக்களை ரஷ்யாவுக்குள் 🔴இடம்பெயருமாறு கட்டாய உத்தரவு! உக்ரைனுக்குள்ளே தனி நாடுகளை அங்கீகரிக்கத் தயாராகிறது ரஷ்யா! ஆக்கிரமிப்பை வேறுவழிகளில் ஆரம்பிக்க புடின் புதிய வியூகம் கிழக்கு ஐரோப்பியப் போர் நெருக்கடி இப்போதைக்கு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீண்ட காலம் இழுபடக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதாக ரஷ்யா அறிவித்த பின்னர், உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர் களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தன்னா ட்சிப் பிராந்தியங்களில் ஷெல் தாக்குதல் கள் தொடங்கியிருக்கின்றன. உக்ரைன் படைகளே தாக்குதலைத் தொட க்கியிருப்பதாகக் கிளர்ச்சியாளர்களும் கிளர்ச்சிப் படைகளே ரஷ்யாவ…
-
- 0 replies
- 456 views
-
-
-
-
- 0 replies
- 883 views
-