Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. வருக வசந்தமே-பா.உதயன் 🌺 வானத்தில் வண்ணமாய் பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியுதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது அழகிய கதிரவன் கண்ணைத் திறக்கிறான் ஆயிரம் பூக்களின் அழகு சிரிக்குது காலைப் பறவைகள் பாடல் இசைக்குது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு மணி ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது கனவுகள் உயிர்த்தொரு காலம் பிறக்குது காலைப் பொழுதொன்று மெல…

    • 0 replies
    • 779 views
  2. இன்று நாம் பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் …

  3. அனந்தியே.... அன்புக்குரிய... அரசியே.... அகிலத்தையும்.... அண்டதையும்.... அதிரவைக்கும்.... அழகியே..... அன்னமே....... அன்பும்... அடக்கமும்.... அங்கங்களாய் .... அமைந்த....... அதீத.... அற்புதமான.... அபூர்வ..... அமுதே..... அன்னையின்..... அனுமதியோடும்... அயலவரின்.... அரவணைப்போடும்... அம்மனின்.... அலங்காரமாய்.... அவையில்.... அமர்ந்திருப்பவளே.... அன்னையானாய்.. அப்பனானேன்.... அருமையான.... அரவிந்தனை.... அவதரித்தாய்... அவனியில்.... அரண்மனை..... அரசரானோம்..... அன்பானவளின் அங்கம்.... அவதியாகி.... அசையாது.... அடங்கிட.... அல்லல்பட்டு... அமைதியானது.... அடிமடியில்.... அவ்வுயிர்..... …

  4. நீ சென்ற ஒரு நொடியில் பிறந்து விடுகிறது உனக்கு புது பெயர் ஒரு மணி நேரத்தில் தூக்கி எறியப்படுகிறது உடைமைகள் வாங்கியப் பதக்கங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது அலமாரியில் உயரிய சான்றிதழ்கள் எடைக்குப் போடப்படுகிறது எட்டு மணி நேரத்தில் ஆயுள் காப்பீடு ஆராயப்படுகிறது உட்பெட்டியில் அசையும் சொத்தின் அட்டவணை அமைதியாய் தயாரிக்கப்படுகிறது அசையா சொத்துக்கள் பிரிக்கப்படுகிறது அன்றிரவே அலைபேசியில் பங்குச்சந்தையில் பரிசீலக்கப்படுகிறது பங்கின் பரிவர்த்தனை நள்ளிரவில் நீ சென்ற அன்றே முடிந்து விடுகிறது உன் நினைவுகள் செல்லாகாசாய்....

  5. காலை புலர்ந்தது காலை புலர்ந்தது காலைச் சேவல் கூவிச் சொன்னது கனவுகள் உயிர்த்தது கதிரவன் எழுந்தான் பொழுது புலர்ந்தது பூக்கள் மலர்ந்தது உழவனுக்கு என்றே உலகம் செய்து உன்னையும் என்னையும் உயிரோடாக்கி மண்ணையும் தந்து மகிழ்வித்த ஈசனை எண்ணுக மனமே எண்ணுக காலை புலர்ந்தது காலை புலர்ந்தது எழுக தமிழா எழுக தமிழா இன்றைய காலை உனக்காய் விடிந்தது பொங்குக மனமே பொங்குக வயல் வெளி எங்கும் தீபங்கள் எரிய வானத்து தேவனை விருந்துக்கு அழைத்து வாசல்கள் எங்கும் பூக்கட்டும் வாழ்வு வண்ணமாய் வசந்தம் வீசட்டும் எங்கும் ஆலய மணிகள் கோவிலில் ஒலிக்க அழகிய குயில்கள் கூவி பாடின காலையில் மல்லிகை கோலம் போட்டாள் கதிரவன் வாசலை திறந்து இங்கு வந்தான் …

  6. கோடி வருசமாய் காத்த அவள் அழகை கோடிகளில் ஒருத்தியாய் கோலமிகு கோளமவளை விண்ணியல் கணக்கில் நேற்று முளைத்த இருகால் நடை மூளை பெருத்த கூட்டம் குத்திக் குடைந்து குதறி கொட்டி வெட்டி கொழுத்தி சீரழிச்சு அவள் சீர்குலைத்து - இன்று சீமான்களாய் சீமாட்டிகளாய் சீமையில் சபை அமைத்து சிந்திக்கிறார்களாம் சீரமைப்போம் மீண்டும் என்று. அவலம் தந்தவனுக்கு அவலத்தை கொடுக்கும் கொடியவள் அல்ல அவர்களாய் தேடிக் கொண்டதுக்கு அவளாய் என் செய்வாள்..?! பெருத்த மூளைக்குள் பொருமிய அறியாமைக்கு அவளாய் என் செய்வாள்..?! சிந்திக்க முடியாத சிறுமைகளை சீமான்களாய் சீமாட்டிகளாய் வரிந்து நிற்கும்…

  7. எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய் தினந்தோறும் பணந்தேடி எங்கே சென்றாய் திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய் உடலுக்குள் உயிர் காணாமல் எங்கே சென்றாய் உடலை தினம் பேணாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எதிலும் நான் தெரிகின்றேன் எங்கே சென்றாய் எல்லாம் நான் அறிகின்றேன் எங்கே சென்றாய் பேதமின்றி அள்ளித் தந்தேன் எங்கே சென்றாய் பேரிடரிலும் துணை வந்தேன் எங்கே சென்றாய் மும்மலம் நீ அறியாமல் எங்கே சென்றாய் முற்பிறவி நீ தெரியாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ …

  8. பேசிப்பார் மனம் மகிழும்..! ********************* இரத்தமும் தசையும் மரணமும் பார்த்துப் பார்த்து களைத்துப்போன கண்களும் நல்லது மறைந்து கெட்ட செய்திகளே.. கேட்டுக் கேட்டு கெட்டுப்போன காதுகளும் நல்ல வாசனைகளை நுகரமுடியாமல் நாற்றத்தால் மயங்கிக் கிடக்கும் மூக்குத் துவாரங்களும் அழகிய மொழிகள் மறந்து அருவருப்பு சொற்களால் நிரம்பி வழியும் வாய்களும் அவரவர் உணவை மறந்து யார்யாரோ உணவை உண்டு மரத்துப்போன நாவும் பற்களும் நல்ல பாதைகள் விடுத்து குறுக்குப்பாதைகள் தேடும் நம் கால்களும் கொடுத்து வாழும் தன்மை மறந்து குறுகிப்போன கைகளுமாய் மனம் இறுகி மகிழ்விழந்து மனிதனை மன…

  9. செஞ்சோலைத் தளிர்களே! ------------------------------ வெள்ளையுடைபூண்டு வென்மனம் சூடிய மாணவர்காள் உங்கள் நினைவுகள் என்றும் எம்மோடு உயிர் உள்ளவரை உள்ளத்துள் உலவிடும் உங்களை அகமேந்துகின்றோம்! தர்மம் வெல்லுமொரு நாளில் உங்கள் முகங்களை எம் தேசம் தரிசிக்கும் உலகெங்கும் அலைகின்ற தமிழினம் ஒருநாள் தலைநிமிரும் வேளைவரும் உங்கள் படுகொலைக்கு பதில்காணும் காலம்வரும்!

    • 3 replies
    • 760 views
  10. எப்போது போலவே நான் இருந்த ஊர் இது இப்போ இல்லை நான் நடந்து திரிந்த பாதை இல்லை இது இப்போ இப்போ மனிதரையும் காணவில்லை சாலையில் இருந்த போதும் நகர்கிறது நம்பிக்கை மட்டும் நதி ஒன்று ஊர்ந்தது போல் இன்னும் ஓர் இயற்கையின் சங்கீத மொழிக்காய் காத்திருக்கிறது மனிதம் உயிர்த்து எழும் காலம் ஒன்றிற்காய் உன் மொழியோடு பேச நினைக்கிறது என் ஆன்மா.

    • 3 replies
    • 747 views
  11. கரும்புலி மறவர்கள் கரும்புலி மறவரே கரும்புலி மறவரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே என் மொழி என்ன…

  12. பூச்சிய மாற்றம் --------------------------- வீட்டுக் கதவினூடு வெளியேறியதும் இன்னொரு நாடு வருகின்றது எத்தனை தடவைகள் கதவைத் திறந்து நான் போய் வந்தாலும் அது பழக்கமில்லாத இடமாகவே இருக்கின்றது அதனூடு என் நாட்டிற்கு போய் என்னவர்களுடன் நான் வட்டமாக இருக்கின்றேன் விளையாடுகின்றேன் சிரிக்கின்றேன் சில வேளைகளில் நாங்கள் சேர்ந்து அழுவதும் உண்டு மீண்டும் அதே பாதையில் அந்த நாட்டை கடந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே வந்ததும் இது தான் என் இடம் என்று மீண்டும் நிமிர்கின்றேன் வீட்டினுள் இருந்து மாற்றம் ஒன்றே மாறாதது மாறுங்கள் மாறுங்கள் என்று எழுதிக் குவிக்கின்றேன் …

      • Haha
      • Like
      • Thanks
    • 9 replies
    • 745 views
  13. அனுதாபிகள் --------------------- ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் அனுதாபம் என்றார் இன்னொரு மனிதனும் அதையே சொன்னார் இப்படியே இன்னொன்று இன்னொன்று என அனுதாபங்கள் இலையுதிர் கால பழுத்த இலைகள் போல இடைவெளி இல்லாமல் விழுந்து கொண்டிருந்தன சலித்துப் போன அந்த ஒரு மனிதன் ஒளித்துக் கொள்ள இடம் தேடினான் இன்னும் ஒளித்துக் கொள்ள தேவை வராதவர்கள் இன்னொரு இடம் தேடினர் அவர்களின் அனுதாபங்களை சொல்ல அனுதாபங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது அதைச் சொல்லும் மனிதர்களை.

  14. 2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்…

  15. அரசியல் ஆதிகாலம் தொட்டு எம்மை ஆட்டுவிக்கும் அரசியல் வேதனைக்குள் மக்கள்தன்னை விட்டுவிட்ட அரசியல். சாதியென்ற சகதியுள்ளே தாழ்ந்து விட்ட பேயரை மோதவிட்டி லாபம்காண முயலுகின்ற அரசியல் கட்சியென்ற பேரில்சேரும் கள்வர்தம்மை ஆட்சியில் எச்சரிக்கை ஏதுமின்றி ஏற்றிவைக்கும் மக்களை உச்சநிலை வறுமைக்கேற்றி ஒன்றுமற்ற கையராய் பிச்சையேற்க வைத்திடும் ப…

    • 0 replies
    • 735 views
  16. விசித்திரமான நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் வரலாறு முக்கியமானது. அது என்னை விட என்னை அதிகம் அறிந்தது. துயரங்களைக் கடக்க, கடினமான நாட்களில் காலத்தைக் கழிக்க, வலி நிறைந்த அத்தருணங்களை எதிர்கொள்ள, இன்னும் என்னென்னமோ கற்றுத் தந்தது. காலப் பெருவெளியில் சிக்கி நான், சுழலில் சிதைந்த பந்துபோல் பேரழிவுகளுக்கிடையில் அலைந்தேன். பெருங்கடலின் ஆழத்தில், தொலைந்து போன, ஒரு பேய்க் கப்பலானேன். சில சமயங்களில் நான், மென்மையான நித்திய ஒளியில், என் உயரிய நேரத்தை இழந்தேன். இன்னும் சில நேரம், கனவுகள் பிடிப்பவர்களின் …

    • 2 replies
    • 733 views
  17. “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி..” “பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி இளந்தாரி வயலைக் கிளற ஆடிப்பட்டம் தேடி விதைக்க காணி ஏங்கும் பயிர்கள் முளைக்க கூடிக் குலாவி மகிழ்வாக இருக்க பூத்து குலுங்கும் வாழ்வு தந்தானே!" "பத்தாது காணாது இனி இல்லையே மெய்யாச் சொல்லுகிறேன் கேளடா கதிரையில் காய்பவன் நாமல்ல கடுதாசியில் திட்டம்போடும் சோம்பேறி வேண்டாம் பெட்டை பெடியன் வெளிக்கிட்டு வெள்ளாமைசெய்ய கெதியாய் பூக்கும் வன்னி மண்ணே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. ஊனம் காண இரக்கமாக நாணம் தோன்ற ஏக்கமாக தானம் செய்ய விருப்பமாக சினம் புரிவது எதிர்ப்புமாக கவனம் சிதற திருப்பமாக நவீனம் தருவது தீமையாக (அ) நன்மையாக யாவும் அதை கையாலும் புலன்களின் அனுமானம் அதுவே வழிவாகுக்கும் வினைகளின் தொடக்கம் விதியையும் மதியால் வெல்லலாம் என்பது சிலரின் செயல் வழக்கம் என்பதுவமாக...

  19. அன்னைக்கு ஒரு தினம் தன்னை ஈய்ந்தவளுக்கு தரணியில் உயர்ந்தவளுக்கு ஈடு இணை இல்லா இல்லத்து அரசிக்கு அவளை வாழ்த்த ஒரு தினம்.அன்னையர் தினமாம் இல்லை அன்னையை மறந்தவருக்கான தினம் பரபரப்பான உலகில் அவளை வாழ்த்த ஒரு தினம். இரத்தத்தை பாலாக்கி , நோய் கண்டால் கண்விழித்து தன் பசி மறந்து என் பசி போக்கியவள் தாயாய் தாரமாய் சகோதாரியாய் அன்போடு அறுசுவையும் தந்திடுவாள். குடும்ப நிர்வாகி, அன்பால் அதிகாரம் செய்தவள் இன்பத்திலும் துன்பத்திலும் தோழி,அன்னையாய் நல் ஆசானாய் அகரம் கற்றுத் தந்தவள் ஈன்ற பொழுதிலும் தன் மகவைச் சான்றோன் எனக் கேட்டு மகிழ்ந்தவள். தந்தைக்கு தோளோடு துணை நின்றவள் ஈடு இணை இல்லாதவள் தெய்வமாய் நின்றவள். அழகானவள் ,அன…

  20. மண்ணில் விழுந்த மழையாய் உன்னில் கலந்தேன் ஜீவநதியாய்... சரவிபி ரோசிசந்திரா

  21. 14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.

  22. வாழ்வின் கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன் - LIFE'S POEM - BY JAYAPALAN - Translated by Chelva Kanaganayakam . (Wilting Laughter) . நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள். புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை. துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை. பசுமை இனிக்க மான் கிழை வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி. அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது இக்கணம். என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும் வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு. . The snake eyes in the river bank the frog entranced by the flying insect; a sniffing mongoose, scurrying; on the deer's green path a human trap spread out; that which is fearless lives; the PALI r…

  23. "மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !" "மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் ? மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ உன்பார்வை ?" "மகரிகை தொங்கும் வீட்டு முன்றலில் மகத்துவம் பொருந்திய அழகு உடல் மகிழ்ச்சி பொங்கி துள்ளி குதிக்குதே மலர் விழியால் ஜாடை காட்டுதே !" "மறைப்பு கொடுத்த தாவணி விலக மகிழ்வு தரும் வனப்பு மயக்க மவுனமாய் திகைத்து நானும் நிற்க மங்கையும் நோக்கினாள் கண்களும் பேசின !" "மருண்டு விழித்து நாணி குனிய மஞ்சள் பொட்டும் வெள்ளி சலங்கையும் மஞ்சர மாலையும் ஒல்லி இடையும…

  24. மன்னித்துவிடு முத்துக்குமரா..!: எண்களில் தொலைந்தது இன முழக்கம் ! ஏழுக்கும் ஐந்துக்கும் மூன்றுக்கும் ரெண்டுக்கும் விலைபோயின அக்னி மரணங்கள்.! உரத்து முழங்கியவன் சிறையிடப்பட்டான் ! அடக்கி வாசித்தவன் அணியில் சேர்க்கப்பட்டான் மேடைப்புலிகளின் வீரவாள் உறையிடப்பட்டது ! இனி மடிந்து வீழுங்கள் தேர்தல் முடிந்து பார்ப்போம்.! இன உணர்விற்கு குறுக்கே எலெக்ஷன் வந்தால் என்ன செய்வது.! வாருங்கள் முட்டாள்களே ! ஜனநாயக கடமையாற்றுவோம் இறையாண்மை காப்போம். போங்கடாங் ...! நன்றி :தாமிரா. Thamira Kathar Mohideen ................................................................................................................

    • 2 replies
    • 720 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.