Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. காலங்கள்..! *************** ஆசிரியர்கள் வீடுதேடி போனார்கள்-அது ஆதிகாலம். மாணவர்கள் பாடசாலை சென்றார்கள்-அது கொரோனாவுக்கு முன் காலம். பாடமே வீடு தேடி வருகிறது இது “சூம்” காலம். எத்தனை காலங்கள் வந்தாலும் எதனையும் பயன் படுத்த முடியாத ஏழைகள் காலந்தான் நாட்டின் நிரந்தரமாகி வருகிறதே! பட்டணியாகப் போகும் குழந்தைக்கு-இலவச பாடப் புத்தகம் கொடுத்தும் என்னபயன். அன்புடன் -பசுவூர்க்கோபி.

  2. படிக்க தவறிய புத்தகம் தந்தை படிக்க விரும்பும் புத்தகம் அன்னை படித்தும் பிடித்து போகும் புத்தகம் மழலை தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை மரணத்தை விட கொடியது போலி வார்த்தைகளுக்கு அடிமையாக இருந்தோம் என்பது . பணம் தான் உலகம் என்று நினைக்கும் சிலரிடம் சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம் செல்லுபடியாகாது என்று .... அன்று அடிப்படை வசதி கூட இல்லத்திருந்தோம். ஆனால் மகிழ்ச்சிஇருந்தது .இன்று எல்லாம் இருக்கிறது ஆனால் ... எதோ ஒரு மனக் கவலையுடன் தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். உதவி செய்வதில் தவறில்லை,உனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள் நாளை உனக்கொரு தேவையென்றால் உதவி பெற்ற்வர் எட்டிக் கூடப் பார்க்க மாடடார். இன்று இருக…

  3. ஈழம் - அகமும் புறமும் புதிய தொகுப்புக்கான10 கவிதைகள் 1. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலு…

    • 1 reply
    • 1.4k views
  4. "திருக்குறள்" [அந்தாதிக் கவிதை] & "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "திருக்குறள் சொல்லாதது ஒன்றும் இல்லை இல்லை என்போருக்குப் 'பொருள்' கூறி கூறிய தொடர்ச்சியாக 'அறம்' உரைத்து உரைக்கும் தொனியில் 'இன்பம்' சேர்த்து சேர்த்து கோர்த்து 'ஈரடி'யாய் சிறப்பித்து சிறப்பித்து தமிழுக்குத் தந்தான் திருக்குறள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... "ஊடல்" [அந்தாதிக் கவிதை] "ஊடல் இருந்தால் வரும் கூடல் கூடல் வந்தால் சுரக்கும் இன்பம் இன்பம் எல்லை மீறினால் துன்பம் துன்பம் உனக்கு புகட்டுவது அறிவு!" "அறிவு கொண்டு சிறப்பித்தல்…

  5. Started by Kaviarasu,

    என்னை சுமந்த உன்னை நான் சுமக்க ஆசை படுகிறேன் தாய்யாகவா ? அல்லது தாரமாகவா ? நீயே சொல் என் தமிழே...!

  6. நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஓடுகிறது காலம் கொடிய கொரோனா எனும் உயிர் பறிக்கும் அவலத்தால் முன்னேற் பாடாய் பரவாது , தனித்திருக்க வைக்க படட மனிதரை ஏக்கம் வாட்டுகிறது துள்ளித்திட்ட திரிந்த பள்ளிப்பிள்ளை அடக்கி வைக்க படுகிறது சற்று விளையாட விடடால் கணினியும் கை பேசியுமாய் அலைகின்றனர் தூக்க நேரம் குழம்புகிறது சோம்பலும் சோர்வும் கூடவே கொறிக்கும் தீனிகளும் உடலைக் கெடுக்கிறது கண்டதையும் வாயில் போட்டு மெல்ல வைக்கிறது அம்மாவுக்கு வீட்டிலிருந்து வேலை, அப்பாவுக்கு குழந்தையை பராமரிக்கும் வேலை பொறுமையீனம் எட்டிப் பார்க்க எப்போதடா வெளியில்போவோம் என மனம் ஏங்குகிறது கொண்டாட்டங்களி…

    • 3 replies
    • 1.4k views
  7. Started by தமிழ்நிலா,

    வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம் வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார் தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே! காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும் சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும் கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே! பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும் வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும் ஆய்ந்திடின் உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும். ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்! ஆட்பலம் பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால் வனைக…

  8. இந்து சமுத்திரத்தின் முத்து இருக்குதிப்போ பசியாய்-பா.உதயன் சகல இன மக்களும் சமத்துவ உரிமையோடு வாழ விடாமல் இனவாதமே முதலாகக் கொண்டு நாடு, மக்கள், சரியான பொருளாதார பாதை பற்றியோ சிந்திக்காத தனியவே பதவியை மட்டும் இலக்காக கொண்டு லஞ்சமும் ஊழலும் கொண்ட ஆட்சியாளர்களால் இந்த நாடு சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. எந்த வித தூர நோக்கும் இல்லாமல் அடிப்படை மாற்றங்கள் எதுவும் இன்றி சிந்திக்காமல் இனவாதிகளை பதவிக்கு அமர்த்தி இன்று இந்த நிலைமைக்கு வர இந்த நாட்டு மக்களும் பெளத்தமத பேரினவாத மத துறவிகளும் இந்த நாட்டை அழித்து இன்று பெரும் அரசியல் பொருளாதார பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் நிலைமைக்கு காரணமாக இருக்கிறார்கள். எல்லா இன மக்களுமே என்ன செய்வதென்று தெரியாமல் நாளும் பொழுதுமாக நடு …

    • 2 replies
    • 565 views
  9. ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் …

  10. **************************************** அன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..! ************************** வெள்ளை நிறத்தவள் விரும்பினேன் அவளுடலை மெல்லிடை தனைப் பிடித்து மேனியில் தீயையேற்றி சொண்டிதழ் தன்னுள் வைத்து சுகம் கண்டேன் இழுத்திழுத்து என்.. வெந்தணல் நூந்தபின்பு வீசினேன் வீதிதன்னுள் அழிந்தவள் அவளினாவி ஆளுக்குள் உட்புகுந்து உறுப்புகள் கெட்டு நொந்து உயிருக்கே கொள்ளிவைத்தாள். பசுவூர்க்கோபி-

  11. ஹைக்கூ கவிதைகள்: "துயிலுமில்லம்", "தமிழர் பாரம்பரியம்" & "காட்சிக்கேற்ற" "துயிலுமில்லம்" "கார்த்திகை திங்கள் தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் துயிலும் இல்லங்கள்" அல்லது "துயிலுமில்லம் ஆலயமே தீபங்கள் ஏற்றி வழிபடுவோம் இன்று கார்த்திகை " [எடுத்துக்காட்டு: மாவீரர்களின் நினைவுகள் கண்களைக் கலங்க வைக்கின்றன சிதைக்கப்பட்ட கல்லறைகள் - முல்லை நிரோயன்] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................... …

  12. "நிலவுக்குள் நீயடி..!" "நிலவுக்குள் நீயடி நினைவில் நிறைந்தவளே நிம்மதி தேடி உன்னைத் தேடுகிறேன் முழுமதியே வருவாயோ அருகில்?" "கண்ணுக்குள் புதைந்த சித்திரமே மண்ணில் வாழும் இவனுக்கு பண்பு சொல்லாயோ காதல் பொழியாயோ?" "திங்கள் முகத்தில் திலகம் பதிக்க வரவா நான் தித்திக்கும் இளமை காதல் தேடுது கண்ணே மார்பைத் தழுவவா?" "நெஞ்சம் மகிழுதடி மஞ்சம் அழைக்குதடி வஞ்சகம் வேண்டாம் பெண்ணே கொஞ்சம் கருணை என்னிடம் காட்டினால் என்னடி?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  13. முழித்துக் கொண்ட சீனாவும் முதலீட்டு இராஜதந்திரமும் 🇨🇳 -பா.உதயன் ———————————————————————————————————- அடங்கிப் கிடந்த டிராகன் ஒன்று முழித்துக் கொண்டது ஆயுதம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்கிறது அத்தனை உலக வேலியும் அறுத்து கடன் இராஜதந்திர வலையில் கழுகுப் பிடியில் கட்டி இழுக்கிறது கம்யூனிச சீனா கன நாடுகளை இன்று இலங்கை பாகிஸ்தான் பர்மா வங்கம் என்று வளைத்து விட்டது தனக்கு கீழே இப்போ இந்து கடலில் டிராகன் குந்தி இருந்து எறிகிற வலையில் இந்த சின்ன மீன்கள் அகப்பட்டுப் போயினர் வலையை கிழித்து இனி வருவது கடினம் இந்த பட்டிப் பாதை முத்து மாலை மூலாபாயத்தை இனி செத்தாலும் அவிழ்க்க முடியாது…

    • 11 replies
    • 1k views
  14. மனம் ஒரு குரங்கு-பா.உதயன் அன்பும் அழுக்கும் ஆசையும் பாசமும் கோபமும் கொண்ட என் மனக்குரங்கு ஏன் தான் எதுகும் புரியவில்லை எப்பவும் பாய மறுப்பதில்லை மனதுக்குள் கிடக்கும் பாம்பைக் கூட குரங்குக்கு கொல்லத் தெரியவில்லை எத்தனை அழுக்குகள் மனசுக்குள் கிடக்குது குரங்குக்கு இது ஒன்றும் புரியவில்லை சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் சும்மாய் இருக்கவும் முடியவில்லை எப்பவும் கத்துது எதிலும் பாயுது அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் தன்ன அறியாமல் எல்லாம் அறிந்தவன் தான் என்றே துள்ளுது குரங்கு தனக்கே எல்லாம் தெரிந்தது போல் தாவுது குரங்கு எப்பவுமே இன்னும் ஓர் குரங்கு போல் தன்னை நினைக்குது இருப்பதைக் கொண்டு வாழவும் தெரியாம…

  15. with Public ஏப்ரல் 2, உலக சிறுவர் புத்தக தினம் புத்தகங்கள் சிறார்களின் தனி உலகம் புத்தகங்கள் முடிவில்லா வசீகரம் எல்லையற்ற பேரானந்தம் புத்தகங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம் புத்தகங்கள் ஆர்வமுள்ள சிறாருக்கு அளவற்ற மகிழ்ச்சி தரும் புத்தகங்கள் …

    • 0 replies
    • 369 views
  16. மாறுமா? *********** தேர்தல் திருவிழாக் காலமிது-தன் தேவைக்கு வாக்குறுதி மழை கொட்டும் நேரமிது. வாசலுக்கு வந்துநிற்கும் வருங்கால.. தலைவர்களைப் பாருங்கள் வாக்குறுதிப் பொட்டலத்தை வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே தேன் இருக்கும் தினைமா இருகும் தித்திகும் பண்டங்கள் நிறைந்திருக்கும்-தமிழ் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்வதாய்-பல திட்டங்கள் எம்முன்னே கொட்டிக் கிடக்கும். வாக்குதனை வாங்கிப்போனபின்னோ? உங்களிடம்வெறும் வாய் மட்டுமேயிருக்கும். பசியிருக்கும் கியூவிருக்கும் பட்டினியே தொடர்திருக்கும் அரசமரத்தடியில் புத்தர் சிலையிருக்க…

  17. "நீயின்றி நானில்லை" "நீயின்றி நானில்லை எதோ புலம்புகிறான் நீலவானின் கீழ் உணர்ச்சியில் உளறுகிறான் நீங்காத காதலென்று அவளுக்கு உறுதிகொடுத்து நீதியாய் நடப்பேனென்று சபதமும் செய்கிறான்!" "நீரின்றி உலகில்லை அவளின்றி அன்பில்லை நீலக்கண்ணீர் வடிக்கிறான் நாடகம் ஆடுகிறான் நீலகண்டன் நானென்று நஞ்சு கக்குகிறான் நீச்சல் அடிக்கிறான் ஆசை முடியுமட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  18. கரும்புலி மறவர்கள் கரும்புலி மறவரே கரும்புலி மறவரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே என் மொழி என்ன…

  19. புஸ்பராசாவுடன் 1970ல் இருந்து 1980 வரை எனக்கு பழக்கம் இருந்தது. அப்ப அவர் தமிழரசு வாலிபர் முன்னணியிலும் பின்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் செயல்ப்பாட்டாளராக இருந்த காலத்தில் நான் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறையாளனாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு அற்றுப் போய்விட்டது. பின்னர் 20 வருடங்களின் பின்னர் 2000 ஆயிரங்களின் ஆரம்பத்தில் பிரான்சில் சந்தித்து பேசினேன். அதன்பிறகு மீண்டும் தொடர்பு அறுந்துபோனது. . தோழன் புஸ்ப்பராஜாவுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன். . 2006 ஆரம்பத்தில் நான் நோர்வேயில் இருந்தேன், திடீரென ஒருநாள் தொலைபேசியில் வந்த புஸ்பராசா தான் மரணித்துக்கொண்டிருக்கும் சேதியை சொல்லக் கேட்டு அதிர்ந்துப…

    • 1 reply
    • 798 views
  20. காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக் காடுகளில் திரிந்த காலத்தில் உருவானதாகும். . இக்கவிதையிலும் தமிழ் பாட்டாளிகளின் எழுச்சியின் முதல் குரல் வன்னியில் எழும் என்கிற நம்பிகையையே பாடினேன். * நம்பிக்கை.. வ.ஐ.ச.ஜெயபாலன். . காலச்சுவடு -2 KALACHUVDU - 2 * நம்பிக்கை கவிதையை 1968ம் ஆண்டில் எழுதி வெளியிட்டேன். இக்கவிதையும் பொதுவுடமை புரட்சிவரபோகிறது என நம்பிய என் இளமையில் எழுதியதாகும். நம்பிக்கை புரட்சிக்காக இராணுவப் புவியியலை அறிந்துகொள்ள வன்னிக்…

  21. "தாய்மொழி" [அந்தாதிக் கவிதை] "தாய்மொழி என்றும் எங்கள் அடையாளம் அடையாளம் தொலைந்தால் நமக்கு மாய்வே! மாய்வைத் தடுக்க தமிழால் பேசுவோம் பேசும் மொழியைக் கலக்காமல் கதைப்போம்! கதைப்பதில் பண்பாடு சொற்களில் நிலைக்கட்டும்!!" "நிலைத்த புகழை அது பரப்பட்டும் பரப்பிய கருத்துக்கள் பெருமை சேர்க்கட்டுமே! சேர்க்கும் புதிய சொற்கள் முழுவதும் முழுமையான முறைப் படி வளரட்டும்! வளரும் நாமும் பேசுவோம் தாய்மொழி!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. எப்படிச் சொல்வோம் எம் இழப்பை ஏதிலியாகி நாம் ஊரூராய் அலைகையில் எப்படிச் சொல்வோம் எம் இழப்பை பத்து ஆண்டுகள் பறந்தே போனது நடந்தவை அனைத்தும் மறந்தும் போனது நமக்கேன் நாடு என்றும் கேட்கிறார் நாடு காட்டிப் பிழைக்கும் எம்மவர் நன்றாய் இருக்குது நாடும் ஊரும் என்று சொல்லி எங்கும் திரிகிறார் எந்த இழப்பும் அற்ற எம்மவர் நாவாந்துறையில் பிடித்த மீனும் நண்டு கணவாயும் நல்லாய் தின்று நாடு நல்லாய் இருக்கென்று நாம் கூறலாமோ??? கோழைகள் போல் ஓடிவந்தவர் கோடிகளாய்க் கொட்டிக் கொடுத்து கொலிடே போக மட்டும் நாடாம் வெட்கம் கெட்ட தமிழர் நாங்கள் வேருடன் அழித்தவர் ஊர்கள் பார்க்க வெளிநாட்டில் இருந்து விருப்பாய் போகிறோம் வெடிகள் பட்டவர் முடமாய் இரு…

  23. பாலக்காடு 2006 ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் த‎‎ன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் ச‎ன்னதங்கள் எழுதுவாள்./ எதில் ‏‏இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./ . பெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன். . . பாலக்காடு 2006 வ.ஐ.ச.ஜெயபால‎‎ன் . வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரிய‎ன் அரபிக்…

    • 6 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.