கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
பகலவன் பார்வையிலே பதுங்கி நிற்கும் நிழலே சிறு தட்பம் தந்தாய் பாதத்திலே அந்த நிமிடம் இளைப்பாறிய தேகத்திலே புத்துணர்வு தந்தாய் புன்னகை வெட்கத்திலே இந்த இரவு நேரத்திலே இதயத்தின் ஓரத்திலே உன் மீது தோன்றிய மோகத்தினாலே உன்னை எண்ணி வர்ணித்தேன் சில வரிகளாளே........
-
- 9 replies
- 2.1k views
-
-
நேற்று மழை பெய்தது நான் பெய்யச் சொல்லும் போது வந்த மழை அல்ல அது யாருக்காகவோ எவருக்காகவோ பெய்த மழை அது நான் துயர் ஊறிய கண்களும் வெப்பம் மிகுந்த மூச்சும் வெறுப்பேறிய பொழுதும் கொண்ட நேரத்தில் மழையை பெய்யக் கேட்டிருந்தேன் அது பெய்யவில்லை பொய்மையின் வீச்சில் மனம் பொசுங்கிய போது வெறுமையின் அடர் இருள் மனம் சூழ்ந்த போது எல்லாவற்றிலும் வெப்பம் படர்ந்த போது இந்த மழையை வா எனக் கேட்டேன் வரவில்லை நேற்று எவருக்காகவோ பெய்தது எவர் நிலத்தையோ நனைத்தது வீதி ஒன்றில் எவருமற்ற பூங்காவில் தனித்திருந்த ஒரு நிழற் குடையை சரித்துச் சென்றது யாருமற்ற இரவொன்றை நனைத்துச் சென்றது. பறவையின் கூடு புகுந்து சிறகுகளை…
-
- 9 replies
- 1.2k views
-
-
வன்னிக்கு போய் வாழப் போறேன். படடனத்து வாழ்கை பகடடான வாழ்க்கையென பள்ளியில் படிக்கையில் இங்கிலீசு பாடத்துக்கு இரண்டு டுஷன் விட்டு படிக்க வைத்தார் அப்பா ஓ எல்பரீடசையில பாசான சேதி கேட்டு மூன்று பெணகள் கொண்ட முறைமாமன் தந்திரமாய் அழைக்கையிலே நானும் கொழும்புக்கு மேற்படிப்புக்கு போனேனடி கிரிபாத்தும் பொல் சாம்பலும் தந்து ஊட்டி வளர்த்த தாய் மாமன் வங்கி வேலை கிடைத்தும் வளைத்துப்போடக் கதை விடடார். மூத்த மச்சாளும் மூலைக்குள் நின்று முழு நிலவாய் தெரிகையிலே பாவி மனம் பாசமாய் அலை பாய்ந்தது. காலம் குடியும் குடும்பமுமாக போகையிலே 2022 பிறந்தது . சமைக்க காஸ் இல்லை மோடடார் சைக்கிள் ஓட பெட்ரோல் இல்லை பிரபாகன் …
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்-பா.உதயன் அன்பின் தாத்தாவுக்கு உங்கள் பேரன் எழுதுவது தாத்தா சுகமா தாத்தா எங்கள் வீட்டல் முன்பு போல் யாரும் நத்தார் கொண்டாடுவது இல்லை எங்கள் வீட்டு பூ மரம் பூக்க மறந்து விட்டது தாத்தா அப்பா அம்மா யுத்தம் முடிவு இல்லாமல் தொடர்கிறது நானும் சமரசம் செய்து களைத்து விட்டேன் காலைச் சூரியன் எங்கள் கதவடியில் வந்து கன காலம் ஆகிவிட்டது தாத்தா நத்தார் இம்முறை உங்களோடு கொண்டாட முடியுமா தாத்தா உங்களுக்கு பிடித்தமான காந்தி சிலையை நத்தார் பரிசாக கொண்டு வருகிறேன் தேவன் வருகையை உங்களோடு பாடி மகிழ்வதில் எத்தனை சந்தோசம் தாத்தா எல்லாக் கடவுளுமே சொல்லும் …
-
- 8 replies
- 4.1k views
- 1 follower
-
-
குளிக்கும் வேலை ---------------------------- ஏதாவது புதிய யோசனைகள் உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர் அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார் மௌன அஞ்சலி செலுத்துவது போல மௌனமாக இருந்தோம் நாங்கள் இரண்டு நிமிடங்கள் முடிய இன்று மதியம் என்ன உணவு என்று முடிவெடுத்து இருந்தேன் பரவாயில்லை குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும் அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார் நாளை கூட சொல்லலாம் என்றார் சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது ஒரு இருபது வருடங்களின் முன் எனக்கும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தோன்றிக் கொண்டிருந்தன பின்னர் எப்பவோ அது நின்று போனது அன்று குளிக்கும் போ…
-
-
- 8 replies
- 492 views
-
-
விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும் பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப் பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும் இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும் விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும் விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும் சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும் சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும் சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும் வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும் குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும் கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். அறிவிழந்த மனிதரென்றே …
-
- 8 replies
- 1.2k views
-
-
ஊருக்கு போய் வந்த தம்பர்..! (பாகம்2) ***************************** பெரு மூச்சுவிட்ட தம்பர் பின் தொடர்ந்தார்.. வெளிநாடுகளில் ஒருத்தரும் இல்லாத குடும்பங்களும் வேலை,வீட்டுத்தோட்டம் படிப்பென்று பண்போடுதான் சிக்கனமாய் வாழுதுகள் பாருங்கோ இங்கிருந்து சிலர் ஊருலாப்பென்று ஊருக்கு போய் எதோ சந்திர மண்டலத்துக்கு போய் வந்த மாதிரி வெளிநாட்டைப்பற்றி விளாசித்தள்ளுவார்களாம். பாருங்கோ. வந்து நிற்கிற கொஞ்ச நாட்களுக்குள்ள கிடாய் அடிச்சு கோழி அடிச்சு மதுப்போத்தல்ல விழுந்தடிச்சு பக்கத்து வீடுகளுக்கு பகட்டுக் காட்டி காசையெடுத்து வீசி …
-
- 8 replies
- 1.1k views
-
-
யாரென்றால்! --------------- நேற்றும் வாழ்ந்தார்கள் இன்றும் வாழ்கிறார்கள் நாளையும் வாழ்வார்கள் யாரென்றால் இனத்துக்காக ஈகம் புரிந்த மாவீரர்கள்!
-
- 8 replies
- 1.6k views
-
-
வானத்தில் வண்ணமாக பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது ஆயிரம் மழை துளியாய் வானம் சிந்துது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் உதயன்
-
- 8 replies
- 1.1k views
-
-
வாழிய சென்னை - ஜெயபாலன் . மீண்டும் ஊரடங்கு. கொலம்பசுகள் கிராமங்களைத் தேடி கப்பற் பாய்களை விரித்தனர். ஏனையோர் கான்கிரீட் பொந்துகளுள். கொரோனாவையும் காவலரையும் தவிர வீதிகளில் யாருமில்லை என்கிறார்கள். மாலைக் கருக்கலில் நிழற்சாலைகளூடு பெசன்ற்நகரை சுற்றுகிற நான்கூட மொட்டைமாடியில் எட்டுப் போட்டபடி. ஜப்பான் குண்டுவீச்சுப் பீதியில் கூட சென்னை இப்படி முடங்கியதில்லையே. . கீழே தெருவில் வெண் பூஞ்சிரிப்பை இழக்கிற வேம்பு பிஞ்சுகளால் நிறைகிற அழகை பறவைகள் பார்த்துச் செல்கின்றன. சாலை ஓர மரங்களின்மீது குச்சியோடு காகங்கள் பறக்க கிளர்ச்சியடைகிற ஆண் குயில் ”கூடு கட்டி முடியப்போகுது…
-
- 8 replies
- 706 views
-
-
வந்து போகின்ற ஆண்டும்,வரப்போகும் ஆண்டும்…! ******************** 2019..! ஆண்டொன்றை முடித்து அனைவருக்கும் அகவையெனும். விருதை வழங்கி வெளிக்கிடும் ஆண்டே வேதனையும் சோதனையும் வெற்றிகளும் தந்தவனே உன் வாழ்வில் போன உயிர் உன் மடியில் பிறந்த உயிர் என்றும் மறவோம் நாம்-எனி எமையாள யார் வருவார். 2020..! உன்னுக்குள் எமை வைத்து ஓராண்டு உன்வாழ்வின் எண்ணற்ற நிமிடமெல்லாம் எமைக்காக்க வருவாயே! புதிய உன் வரவால் பூமித்தாய் மலரட்டும் புதுமைகள் பிறக்கட்டும் இயற்கை செழிக்கட்டும் இன்னல்கள் அழியட்டும் பொய்,களவு பொறாமை போலியான வாழ்க்கை போதைக்கு அடிமை சாதி,மத சண்டை சரும நிற வெறித்தனம் அரசியல் சாக்கடை ஆதிக்…
-
- 8 replies
- 1.9k views
-
-
காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் …
-
- 8 replies
- 1.5k views
-
-
சில அடிகளை கடக்க பல நதிகளை தாண்ட வேண்டி இருக்கு பல நதிகளை கடக்க சில அடிகளே போதுமாகவும் இருக்கின்றது சில நதிகளைக் கடக்க பல கடல்களை தாண்ட வேண்டி இருக்கு பல கடல்களைக் கடக்க ஒரு நதியே போதுமாகவும் இருக்கின்றது சில தருணங்களை கடக்க ஒரு வாழ்வே தேவையாக இருக்கு சில தருணங்களே பல வாழ்க்கை வாழ்ந்த நிறைவை தருகின்றது ஒரு விரல் தொடுகைக்காக பல உறவுகளை இழக்க நேரிடுகிறது பல உறவுகளை தக்க வைக்க சில விரல்களை நிராகரிக்க சொல்லுது வாழ்வு வாய்க்கும் என நினைக்கும் போது வரள்கின்றது வரண்டு சுடுகாடாகும் எனும் போது…
-
- 8 replies
- 792 views
-
-
14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 8 replies
- 728 views
-
-
நம்பி வாங்கிய நாய்..! ******************* பஞ்சாயத்து தலைவர் பதிவிலிருந்து.. சாந்தமில்லாத சப்பை முகம் கொண்ட வெளிநாட்டு நாயொன்றை விரும்பி வாங்கினேன். கடனாக.. அயல் வீட்டுத் தொந்தரவை அடக்கலாமென்று.. வாசலில் காவலுக்கு வைத்தால் வரும் எதிரி அனைத்தையும் வரவிடாமல் தடுக்குமென்று.. ஆனால் நாயிப்போ எனது நடு வீட்டுக்குள் கிடந்து.. நான் வளர்க்கும் பிராணிகளை நடு நடுங்க வைக்கிறது. நாளைக்கு என் வீட்டில் நான் இல்லை என்றாலும் நான் பட்ட கடன் சொல்லி நாய் மட்டும் …
-
- 8 replies
- 1.2k views
-
-
வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம் வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார் தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே! காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும் சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும் கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே! பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும் வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும் ஆய்ந்திடின் உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும். ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்! ஆட்பலம் பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால் வனைக…
-
- 8 replies
- 1.1k views
-
-
**************************************** அன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..! ************************** வெள்ளை நிறத்தவள் விரும்பினேன் அவளுடலை மெல்லிடை தனைப் பிடித்து மேனியில் தீயையேற்றி சொண்டிதழ் தன்னுள் வைத்து சுகம் கண்டேன் இழுத்திழுத்து என்.. வெந்தணல் நூந்தபின்பு வீசினேன் வீதிதன்னுள் அழிந்தவள் அவளினாவி ஆளுக்குள் உட்புகுந்து உறுப்புகள் கெட்டு நொந்து உயிருக்கே கொள்ளிவைத்தாள். பசுவூர்க்கோபி-
-
- 8 replies
- 1.6k views
-
-
கடமையிடமும் கண்ணியத்திடமும் இலட்சியத்திடமும் போராட்டத்திடமும் துணிச்சலிடமும் வெற்றியிடமும் நெருங்கி இரு! கடனிடமும் துரோகத்திடமும் ஏமாற்றத்திடமும் பலவீனத்திடமும் பயத்திடமும் குற்றத்திடமும் விலகி இரு! எளிமையிடமும் தூய்மையிடமும் பொறுமையிடமும் விடாமுயற்சியிடமும் அன்பிடமும் அறிவிடமும் நிஜத்திடமும் நல்லொழுக்கதிடமும் நெருங்கி இரு! பொறாமையிடமும் மூட நம்பிக்கையிடமும் அறியாமையிடமும் தீய ஒழுக்கத்திடமும் கோழைத்தனத்திடமும் கஞ்சத்தனத்திடமும் தற்பெருமையிடமும் பேராசையிடமும் விலகி இரு! உரிமையானவர்களிடமும் உரிமைகளை உணர்வுகளை மதிப்பவர்களிடமும் தேவையான உறவுகளிடமும் தேவையான உணர்வுகளிடமும் நெருங்கி இரு! உரிமை இல்லாதவர்களிடமும் உரிமைகள் உணர்வுகளை உதாசீனம் செய்பவர்களிட…
-
- 8 replies
- 1.4k views
-
-
. . ரூமிக்கு -வ.ஐ.ச.ஜெயபாலன் , நலமா ரூமி, கவிஞர்களின் கவிஞரே உலரும் நமது உடலும் உயிரும் செளிக்க மது வார்க்கிறவர்கள் எங்கே? சுவர்கத்து நூலேணிகளில் இறங்கி வருகிறதே வசந்தம். பாரசீக ரோஜாவோ, மதுரை மல்லியோ தேன் சிந்துமுன்னம் நம் இதயங்கள் திறக்க வேண்டுமே?. . ”இதயம் திறக்கும்வரை உடைத்துக்கொண்டிரு” என்கிறாயே. ரூமி. ஆம், மூடிய இதயம் சிறையிலும் கொடிதே. ஆனாலும் உடைந்த இதயம் நினைவின் ஆறாப் புண்ணல்லவா? என்போல் நீயு…
-
- 8 replies
- 1.7k views
-
-
நிகழ்வுகளானது சுழலும் போது நினைவுகளானது நீளும் காட்சிகளானது அலை மோதும் அவை உளமதில் ஆட்சி புரியும்! உணர்ந்ததும் உணராததுமாய் உள்ளங்கள் நடிப்பதும் உரைத்திட மறுப்பதும் உண்மைக்குப் புறம்பாகும்! தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன் ஆவான் தன்னைத் தானே வெல்லாதவன் தனக்குத் தானே பகைவன் ஆவான்! அறிந்தும் புரிந்தே அநீதிகள் புரிபவரும் துரோகங்கள் புரிபவரும் பாரிற்கு பாரமானவரே! இறந்தவர் பிறப்பதும் பிறந்தவர் இறப்பதும் வாழ்வியலின் நியதியும் உண்மையியலின் நியதியும் ஆகுமே! காலமதின் குரலாய் வையமதில் கேட்டிடும் துன்பமதன் ஓலங்கள் வாழ்வியலின் துயரங்கள்! வஞ்சமதை புதைத்து விட்டு விரோதமதை விரட்டி விட்டு மனிதமதை வளர்த்து விட்டால் மானிடமது செ…
-
- 8 replies
- 1.2k views
-
-
வெறுப்பு! *********** அரசமரக் கன்றுகளை அழித்துக்கொண்டிருந்தான் அந்தத்தேசத்து மனிதனொருவன் எத்தனையாண்டுகள் வாழும் மரத்தை ஏன்.. அழிக்கிறாய்யென்றான் வழிப்போக்கன். எனக்கும் கவலைதான் என்னசெய்வது வருங்காலப் பிள்ளைகளும் வாழவேண்டுமே என்று பெரு மூச்சுவிட்டான் அந்த மனிதன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 8 replies
- 1.1k views
-
-
தேவைகளுக்கு என்றும் இல்லை முற்றுப்புள்ளி தேடல்கள் அதிகமாகும் போது தேவைகள் அதிகமாகுகின்றன தேவைக்கதிகமாக தேடியதெல்லாம் தேவையில்லையெனத் தூக்கி எறியப்பட்ட பின்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது இந்தத் தேவைகள்...! நேற்று பணத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று பிணமாகக் கிடக்கின்றான் நேற்று சுகத்தின் தேவைக்காக அலைந்தவன் இன்று சுமையாகக் கிடக்கின்றான் நிம்மதிக்கான தேவையே இங்கு தேவைப்படுகின்றது ஆனால் நிம்மதி மட்டும் நிற்காமல் செல்கின்றது...! எதற்காக இந்தத் தேவை...? எவருக்காக இந்தத் தேவை...? புரியாத இந்தத் தேவை முடியாதோ இந்தத் தேவை...? முடிந்து விடும் ஒரு நாளில்... மனிதனைத் தேடும் அந்த மண்ணறையின் தேவை ஒரு நாள் தீர்ந்து விடும…
-
- 8 replies
- 1.1k views
-
-
மௌனம் எனும் அறைக்குள் விருப்பு வெறுப்பு எனும் இரண்டு பேரை அடைத்து கர்வம் எனும் பூட்டினால் பூட்டப்பட்டிருக்கின்றது விருப்பும் வெறுப்பும் யார் பெரியவர் எனும் விவாதத்தை தொடங்கி வாக்குவாதமாக்கிக் கொண்டிருந்தனர் மௌனம் எனும் அறைக்குள் பேரிரைச்சல் கேட்கத் தொடங்குகின்றது தனிமை என்னும் நெருப்பு கர்வம் எனும் பூட்டின் சாவியை உருக்கிக் கொண்டு இருக்கின்றது தனிமை எனும் நெருப்பினால் கர்வம் எனும் பூட்டின் சாவி உருகி காணாமல் போனால் ஓர்நாள் மௌனம் எனும் அறை திறக்கப்பட முடியாமல் விருப்பு வெறுப்பு எனும் இருவரின் வாக்குவாதத்தால் கர்வம் எனும் பூட்டு வெடித்துச் சிதறும் விருப்போ வெறுப்போ பெரியவர் வெளியேறுவார்!😆 -தமிழ்நிலா.
-
- 8 replies
- 1.3k views
-
-
எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து சட்டியை உருட்டும் பூனைகள் போலே எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி சமூகம் சேவை என்றும் கோவில் பள்ளி படிப்பு என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வா…
-
- 8 replies
- 668 views
-
-
ஈழத்துக் காவலனே ஈகத்துக்கே உதாரணமாய் ஆனவரே வீரம் நிறைந்தவரே விவேகத்தின் பேரொளியே உலகே அதிசயித்து பார்த்தவரே உலகையே வென்ற ஒப்பற்ற எம் தேசியத் தலைவனே காலப் பெருவெளியில் என்றும் கரைந்திடாத தமிழினத்தின் அடையாளமே ஞாலத்தின் சுழற்சியிலே எப்போதும் நிலைத்திருக்கும் உம் நாமம்!!!!! 66வது அகவைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா!!!!!
-
- 8 replies
- 1.6k views
-