Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. Started by karu,

    நத்தார் கவிதை -2021 வாருங்கள் தோழர்களே! இந்த மானிலம் மீதினில் அன்பு செழித்து நம் மானுட வர்க்கம் மகிழ்ந்த நன்னாளிது வாருங்கள் தோழர்களே! மாட்டுத் தொழுவத்திலே எங்கள் மன்னன் பிறந்தனன் அந்த நற்செய்தியைக் கேட்டுக் கிழக்கிருந்தே - வந்து கிறிஸ்துவென்றே குறித்தேற்றினர் ஞானிகள் வாருங்கள் தோழர்களே! – நாமும் வாழ்த்திக் கொண்டாடுவம் யேசு பிறப்பினை வாருங்கள் தோழர்களே. பாவிகளாகாதீர் - உங்கள் பாவங்கள் தன்னை நான்ஏற்றுப் பரிசுத்த ஆவிக்குள் சேர்த்திடுவேன் உயர் அன்பில் முகிழ்த்து நற்பண்பில் மலர்ந்திட தேவையென் ரத்தமெனில் எந்தன் தேகத் தசையும் அதற்குரித்தே நோவைப் பொருட்படுத்தேன் நான…

    • 2 replies
    • 579 views
  2. அம்மாவும் போராளிக் கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரையும். . எங்கள் வீடு எப்பவும் போராளிகளுக்கு நிழலாக இருந்தது. என் அம்மாவும் அப்பாவும் போராளிகளையும் தங்கள் பிள்ளைகளாகவே அரவணைத்தார்கள். கவிதை ஈடுபாடுள்ள என் பெற்றோர் புதுவை இரத்தினதுரை மீதும் அவரது கவிதைகள்மீதும் பெருமதிப்பு வைத்திருந்தனர். போர்க்காலத்தில் வன்னியில் அம்மா சுகயீனமுற்றிருந்தபோது போராளி நண்பர்கள் பலர் என் அம்மாவைப் போய்பார்த்து நலம் விசாரித்த சேதியை தம்பி பாரதிதாசன் மூலம் அறிந்து நிமதியடைந்தேன். எனினும் சக கவிஞன் தோழன் புதுவை இரத்தினதுரை இன்னும் அம்மாவைப் போய்ப் பார்க்கவில்லை என்கிற சேதி கவலை தந்தது. . அந்த நாட்க்களில் கொங்கு நாட்டு காட்டாறான கொடுங்கரை ஆற்றுக்கு ஓசை காழிதாசுடன் சென்றிருந்தேன். நி…

    • 0 replies
    • 978 views
  3. "நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை" [ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும், நீதிமானும், இறையியலாளருமான இவரின் புகழ் பெற்ற கவிதை "I choose to love you in silence" யின் தமிழாக்கம் இதுவாகும்.] "நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை மௌனத்தில் நிராகரிக்க முடியாது என்பதால் நான் தனிமையில் காதலிக்கிறேன் உன்னை தனிமையில் நான்மட்டுமே சொந்தம் என்பதால் நான் தூரஇருந்து மெச்சுகிறேன் உன்னை தூரம் அன்புவலிக்கு கவசம் என்பதால் நான் காற்றில் முத்தமிடுகிறேன் உன்னை காற்று உதடைவிட மென்மை எ…

  4. தன்முனைக் கவிதை / "நினைவுகள்” "நினைவுகள் பறக்குது அவள் பிரிந்தது வதைக்குது! நினைவுகள்அணைக்குது அவள் வாழ்ந்தது இனிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  5. "நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" "நெருங்கி அருகில் நீ வந்தால் நெடுநாள் கனவு நனவு ஆக நெஞ்சம் இரண்டும் ஒன்று சேர நெற்றியில் குங்குமம் நான் இட நெருப்பாய் காதல் பற்றி எரிய நெடும்பொழுதும் சிறு பொழுதாய் ஆகுமே!" "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதால் நெறியிலாதார் போல் வீணராய்ப் பிறக்காமல் நெய்த் துடுப்பால் அன்புத்தீ ஏற்றி நெருக்கம் கொண்டு அருகில் வராமல் நெடுநாள் கனவை சிதைப்பது எனோ? நெருஞ்சி முள்ளாய் நெஞ்சத்தைக் குத்தாதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] நெருநல் - நேற்று; சற்றுமுன் நெறியிலாதார் - அசடர், கீழோர் நெய்த்துடுப்பு - சுருவம் [Spatula, used especially in Vēdic sacrifices / ஸ்பூன் வடிவத்திலுள்ள ஒரு யாகம் செய்யும் பாத்திரம்]

  6. இதயத்தில்... குடிகொண்டிருக்கும்.. இதய தேவதையே.... !!! உன் தூக்கம்.... கலையக் கூடாது... என்பதற்காக.... மெதுவாக நடக்கிறேன்....!!! திடுக்கிட்டு... எழுந்துவிடக் கூடாது... என்பதற்காக.... மெதுவாக பேசுகிறேன்...!!! இரத்தச் சுற்றோட்டத்தில் ஓடி விளையாடும்... இதய தேவதையே.... விழுந்து விடாதே....!!! மூச்சுக்காற்று... உன்னை சுட்டு விடக்கூடாது.... என்பதற்காக.. கும்பக மூச்சு விடுகிறேன்......!!! @ எல்லாம் உனக்காகவே அன்புடன் கவிப்புயல் இனியவன்

  7. "சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி" "சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி கொழுகொழு கன்னத்தில் குழி விழுகுதே! குளுகுளு தென்றலில் பொன்மேனி சிலிர்க்க நொழுநொழு என்று குழைவதைப் பார்க்க தழுதழுக்குதே வார்த்தைகள் என் வாயிலே!! "தளதளவென்று ததும்பும் இளமைப் பருவமே சலசலக்கும் நீரோடையில் உன்னைக் கண்டனே! கலகலக்கும் புன்னகையில் என்னை அழைத்தாய் வளவள பிதற்றலில் நெஞ்சை இழுத்தாய் மலங்கமலங்க விழித்தேன் செய்வது அறியாது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  8. கொரோனா என்ற ஓர் கொலைக்காரி-பா.உதயன் கொரோனா என்ற ஓர் கொலைக்காரி எம்மை கொடுமை செய்யப் பிறந்தாளா அடி தடியோடு திரிகின்றாள் அனைவரும் வீட்டுக்குள் பதுங்கின்றார் மேட் இன் சீனா என்கின்றாள் கடை தெரு எல்லாம் கிடக்கின்றாள் காணும் இடம் எல்லாம் விற்கின்றாள் காசு இல்லாமலும் தருகின்றாள் குழந்தை குஞ்சு என்று தெரியாமல் கட்டை கிழடு என்று காணாமல் காலனைப் போலே தினம் வந்து கயிறு வீசித் திரிகின்றாள் கொரோனா என்று ஒரு கொலைக்காறி எம்மை கொல்லத் தான் பிறந்தாளோ யாருக்கும் அடங்கா சண்டியரும் அவளுக்கு பயந்து பதுங்கின்றனர் அடுத்த வீட்டு அமீர் அண்ணை குடும்பம் ஆறு புள்ளை பிஞ்சோட பள்ளிக்கூடம் இல்லாம படுத்தும் தொல்லை தாங்காதாம் கொரோனா …

    • 2 replies
    • 928 views
  9. கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன் @ கவிப்புயல் இனியவன் 1) ஹைக்கூ 2) சென்றியு 3) லிமரைக்கூ 4) ஹைபுன் 5) குறள்கூ 6) சீர்க்கூ 7) கஸல் என்பவை முதலில் வருகின்றன

  10. Started by தமிழ்நிலா,

    கனவெனப்படுவது நினைவும் நிஜமும் கூட்டி மகிழ்தலும் கொடுந்துயர் உழத்தலும் ஆழ் மனத்தாழ்ந்த உள்ளுணர்வெழுந்து மீள் நினைவாற்றலை உயிர்ப்பிக்கும் நிகழ்வது!!! ஆற்றிய நிகழ்ச்சியை முற்றும் மறந்துளம் சுற்றியதொன்றின் பான்மையை நிகழ்வுகளால் அழகுறக்காட்டி அணைக்கும் மகிழ்வைப் பழகுநற் கூட்டும் பான்மையுடையது எண்ணமே மலர்ந்தோட உயிர்ப்புற்று வருதலால் வண்ணமாக எழுந்துயிர் பெறும் நிகழ்வது!!! உணர்வினில் உயிரினில் உடலினில் நரம்பினில் புணர்ந்த நிகழ்வுகள் எண்ணரும் வகையால் ஒழுகு மெய்யுணர்வின் ஊற்றொடு கலந்து ஆழ்ந்த நினைவினை முகிழ்த்தும்... இற்றைக்கியலும்.... இயம்பும்..... நிகழ்வது!!! -…

  11. என் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்

  12. “முதுமையின் அரவணைப்பு” “முதுமையின் அரவணைப்பு தனிமையைப் போக்கும் பதுமையுடன் விளையாடும் மழலைப் போலவே! பெதுமை பருவத்தில் மகிழ்ச்சி காணும் புதுமை செய்யும் குழந்தை போன்றே!" "பாளையாம் செத்தும் பாலனாம் செத்தும் காளையாம் செத்தும் இளமை செத்தும் மூப்பும் ஆகியும் மூலையில் ஒதுக்கியும் தனித்து விட்ட கொடூரம் எனோ?" "பொன்னேர் மேனி அழகு இழந்து நன்னெடுங் கூந்தல் நரை விழுந்தாலும் மாறாத அன்பு நிலைத்து நிற்க வயதான மக்களைத் தழுவ வேண்டும்!" "இளமை நீங்கி உடலும் மெலிய தளர்ச்சி பெற்று கோலிற் சாய களைப்பு கொண்ட உள்ளம் ஆற பாசம் கொடுக்கும் கைகள் தேவை!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  13. மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா- ஊசி அடித்து உவத்திரவ கொரோனாவை துரத்தி விடுவம் என்றால் ஊசியார் கூட அவர் வாழும் காலம் வலுவிழக்க சண்டை போட முடியாமல் கொண்டு போன ஆயுதமும் முடிஞ்சு போக ஒளித்திருந்த கொரோனா ஓடி வந்து திரும்பக் குந்துது அட பாடுபட்டு ஒன்றுக்கு இரண்டு ஊசி போட்டும் தேடித் தேடி வருகுது திரும்பத் திரும்பத் கொரோனா மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா போன கதையைக் காணோம் இன்னும் இனி ஆளுக்கு ஒரு ஊசி என்று அடுத்தடுத்து போட்டு வாழும் வரை இது தானோ ஆருக்குத் தெரியும். பா.உதயன் ✍️

  14. "ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]" "அரை குடத்தின் நீர் அலைகள் தரை காண ததும்பி வடியும் அரைகுறைக் கல்வி கர்வம் கொண்டு கூரை ஏறாமல் வானம் ஏறும் !" "நிறை குடம் அமைதி கொண்டு முறையாக கசடு அறக் கற்று பாறை போல் தன்னைத் திடமாக்கி பறை அடிக்காமல் தெளிவாக உரைக்கும் !" "குடித்தால் பியரியன் ஊற்றை முழுக்கக்குடி பிடித்தால் புளியங் கொம்பைப் பிடி கூடி சுவைப்பதல்ல பியரியன் ஊற்று தேடி முடாக்குடியாக முழுக்கக் குடி !" "கொஞ்சம் சுவைத்தால் மூளை கிறங்கும் கஞ்சா வெறியனாகி திமிர் பிடிக்கும் …

  15. "முகநூல்" "முகநூல் படும்பாடு தலையை சுற்றுது முகர்ந்து பார்க்கினம் காமம் தேடி முகத்தை ரசிக்கினம் காதல் நாடி முழுதாய் அலசினம் நட்பு வேண்டி" "முத்து முத்தான அறிவும் அங்குண்டு முழக்கம் இடும் கவிதைகளும் உண்டு முடங்க வைக்கும் போலிகளும் அங்குண்டு முடிந்தவரை ஏமாற்றிக் கறப்பவரும் உண்டு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  16. கடைசி ஆயுதத்தையும் ஐயா கையில எடுத்துப் பார்த்தார் சமரச அரசியலோடு சமாதானம் வரும் என்று சிங்கக் கோ(கொ)டியை உயர்த்திப் பிடித்தார் ஐயா பாவம் இப்போ வெறும் கையோடு நிற்கிறார் அடுத்த தேர்தலைப் பார்த்தபடி அது சரி அவன் கொடுத்தா தானே ஐயாவும் வேண்டித் தருவார் சும்மா சொல்லுங்கோ ஐயா தீபாவழிக்குள் தீர்வு கிடைக்கும் என்று பாவம் சனம் நம்பி வந்து வாக்குப் போடும் ஏமாந்தே பழகப்பட்ட சனம் நாங்க ஐயா இந்தியா வரும் என்றே இருந்த சனங்க நாங்க ஐயா ஆன அவனும் இவனும் முழுசா தின்று முடிச்சான் முள்ளிவாய்க்காலை ஐயா இன்னும் ஒரு முறை ஏமாறுவதில் என்ன குறை ஐயா புலிகள் போனால் சமாதானம் வரும் என்ற சனத்தையும் சந்திச்சுப் ப…

    • 2 replies
    • 899 views
  17. காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் …

  18. ஒரு சோடி அணுக்கவிதை 💙💙💙 உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தால் இறந்திருக்கும்.... 💚💚💚 நீ பிரிந்து விட்டாய்... என்று பலமுறை.... சொல்லிவிட்டேன்.... சொறனை.... கெட்ட என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்கிறது......! 💙💙💙 இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இலங்கை யாழ்ப்பணம்

  19. உடைப்பு மழைக்காடு வறண்டதென்று வரி புனையும் வண்ணம் சக்கரவாகம் மழை தின்றதெவ்வாறு? எண்ண எரிவுகளில் பினீக்ஸ் பிறப்பு மட்டும் கன்னம் வருடி நின்று கனிவது எங்ஙனம்? பூமி காலடிக்குள் புதைந்து மறைவதாக வானுலகம் வியாபித்து விரிந்தது எக்கணம்? வல்லமையின் பொழுதொன்றை அல்லதென்றாக்கும் வனையப்படாத வினையூக்கி எது? நெருஞ்சின்முட்களை நொறுக்கி சிரிக்கின்ற பூக்களை அள்ளி வந்த காற்றின் முகவரி யாது?

  20. கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது. அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் அது கருணையற்ற நிலம் பிரிவின் யுகாந்த வெள்ளத்தில் அது மூழ்கடிக்கப்பட்டது காதலற்ற சொற்களின் முள்வேலியால் …

    • 3 replies
    • 623 views
  21. (உன் கணவன்) ”காட்டான்தான். என்றாலும் எம்முன்னே, நட்போடு அவனுதிர்த்த பூமுறுவல்கள் இன்றும் கமழும். ஜனநாயகமே கற்பென்றிருந்த அவன் காதலின் முன் இந்த ஞாலம் கடுகு” . . மூன்றாவது மனிதனின் கவிதை. - வ.ஐ.ச.ஜெயபாலன். . என்றோ ஆழ்மனதுள் தைத்து இன்ன்னும் சிப்பிச் சிறு மணலாய் நெருடும் காலமுகமான ஒரு கவிதையடி நீ. தொடுவான் எரிய மணல் ஊருகி அலை புரளும் பாலையிலே ஈடன் பூந்தோட்டத்து வழி தவற ஓயாமல் சபிக்குமொரு ஒட்டகத்தைப் புணர்ந்தவன் நான். . ஏவாள் நீ இன்றெங்கே. உந்தன் உடற் தணலின் முலைச் சுவாலை இதழ் பொசுங்கத் தின்று உயிர் எரிந்த காலத்தே நீ இச்சித்தும் நான் தவிர்த்த அந்த விலக்கப் பட்டகனி இன்னும் இருக்கிறதா. உன்னிடத்தே வளைய வளைய வந்து எனைக் கண்டால்…

    • 0 replies
    • 1.5k views
  22. கவலை தருகிறது! ********************** பெளவுத்தத்தை வணங்கும்-அன்பு பெரும்பான்மை மக்களே! புத்தர் போதித்ததெல்லாம் அறமும்,அகிம்சையும் தானே. அடாவடித்தனமும்,அரசியலுமா? புத்தரின் புனிதம் கெடுமளவில்-சில காவியுடையணிந்தவர்களை எப்படி அனுமதிக்கீறீர்கள். ஒற்றுமையான நாட்டில் தான் ஒவ்வொரு மனித இனமும் வாழநினைப்பது தப்பா? இலங்கையென்ற அழகிய நாடை கெடுப்பதற்கென்றே- சில அரசியல் வாதிகளும், அரசடி வாதிகளும் தங்களின் சுகபோக வாழ்வுக்காகவே இனங்களை பிரித்து பிணங்களை தின்ன நினைப்பது உங்களுக்கு புரியவில்லையா? மதங்களெல்லாம் மனிதத்துள்ளடங்கும். புத்தபெருமானே இன்று பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிப்பார். எந்த அரசாங்கம் வந்தாலும் இவர்களுக்கு அடங்குவதென்றால் ஜனாதிபதி,பிரதமர் என்ற அரசியலமைப்புத்தான் ஏனோ? அற…

  23. இருபது இருபது இளையவரே வருக வருக.. இன்பம் தந்து துன்பம் தொலைத்து இனிதாய் வருக வருக. இனி ஒரு காலை இவ்வவனியில் புதிதாய் உதிக்க வருக வருக இவ்வையகம் வெப்பம் தாழ்ந்து இனி குளிர் கண்டு இன்புற்றே நிற்க வருக வருக. இனிப் பல்லினமும் இன்பமாய்ப் பெருகி இச்சை கொள் பச்சை தந்து இவள் பூமகள் இனிதே வாழ வருக வருக. இழிசெயலாய் நெகிழிகள் பெருகி இனி இந்த தேசம் இருக்காது எனும் நிலை தொலைத்து இவ்வையகம் வாழ்வாங்கு வாழ இலைகுழை தான் போல் உக்கும் வகைகள் இனி பல்கிப் பெருகிப் புழங்க வருக வருக. இல்லை எனி நல்லார் இந்த நிலை இன்றி இங்கு இல்லை எங்கும் இருப்போர் நல்லோர…

    • 4 replies
    • 1.7k views
  24. 13 டிசம்பர் இடம்பெற்ற என் பிறந்த தினத்தில் ”பல்லாண்டு ஜெயபாலன்” எனக் கூறி என்னை வாழ்த்தியபடி யாழ் நேயர்களுக்கு. ”உங்க வயசென்ன அங்கிள்” ”எத்தனை தடவைதான் சொலித் தொலைப்பது என்வயசை. கேழ்” . நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். * ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றா…

    • 0 replies
    • 2.6k views
  25. யாத்து யாக்கை தந்தவள் யார் என அடையாளம் தந்தவள் யான் எனும் இருப்பை யனன வலி தான் சுமந்து யாத்த அன்னை.. யாதுமாய் விளங்கி யாவரும் காத்தவள்.. யாரும் அறியா உருவில் காற்றில் கலந்திட்டாள் யாக்கை அழியலாம்..எரியலாம் யாதும் நிறைவாய் அம்மா யாரும் அழிக்கா நினைவாய் நிலைப்பாய்...!! அன்னையின் ஈடினையற்ற நினைவுகள் என்றும் வாழும்.. யாதுமாய் விளங்கிய எங்கள் அம்மாவிற்காக.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.