Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 1,043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவின் இறுதியில், தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, செய்தியாளர்களுடன்‌ அமைச்சர் கடம்பூர் ராஜூ கேக் வெட்டி கொண்டாடினார். வரும் புத்தாண்டுக்குள், நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும். திரையரங்குகளில், படம் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல், திரையில் படத்தின் தலைப்பு போடுவதற்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்க…

    • 0 replies
    • 482 views
  2. Published By: VISHNU 18 MAY, 2025 | 07:55 PM உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று (மே 18) இல் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் குறித்த எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும் என தனது வணக்கத்தை பதிவில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/215098

  3. அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள்:தொகுதிகள் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடக்கம்! சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள 7 கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.விரைவில் தங்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள, பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுசெயலர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் , இந்திய குடியரசு கட்சி…

  4. வருமான வரி விவகாரம்: எங்க சசிகலாவுக்கு ஒரு நீதி? உங்க ரஜினிகாந்துக்கு ஒரு நீதியா?- சீமான் வருமான வரித்துறை விவகாரத்தில் சசிகலாவுக்கு ஒரு நீதி? ரஜினிகாந்துக்கு ஒரு நீதி ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நேற்று ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: குடியுரிமை சான்றிதழ்களை நாம் தமிழர் கட்சியினர் எவரும் தர மாட்டோம். எங்களை முகாம்களில் அடைத்தாலும் அதை ஏற்போம். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடுகின்றனர். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல; நாளை நம…

  5. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பலத்த மனித உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா தொற்றானது கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுவரை தமிழகத்தில் 10 ஆகக் காணப்பட்ட உயிரிழப்பு, தற்போது 11ஆக உயர்வடைந்துள்ளது. சென்னை, புளியந்தூரைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் ஓமந்தூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளமையினைத் தொடர்ந்து குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நிலையில், …

  6. தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் 11 மாடி அடுக்குமாடி கட்டடம் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடம் வெடி மருந்து மூலம் இன்று மாலை 6.52 மணிக்கு தகர்க்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி அடுக்குமாடி கட்டத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அருகில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அடுக்குமாடி கட்டடம் இன்று இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, தரைதளம், 5வது தளம் உள்ளிட்டவற்றில் உ…

  7. பிரச்­சி­னை­களை மறக்க வைத்த 500, 1000 ரூபா நாணயத் தாள்கள் இ ன்­றைய நிலையில் தமி­ழகம் மற்றும் இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில் மிகப் பிர­தா­ன­மாக பேசப்­ப­டு­வது 500 மற்றும் 1000 ரூபா நாண­யத்­தாள்கள் செல்­லு­ப­டி­யா­கா­தென்று பிர­தமர் மோடி அறி­வித்­த­தாகும். அடுத்­தது அமெ­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாக ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்ப்­பார்த்­தி­ருந்த நிலையில் அவர் தோற்­க­டிக்­கப்­பட்டு, அதி­ர­டி­யாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்­ற­தாகும். இந்த இரண்டு விட­யங்­களும் தான் தமி­ழ­கத்தின் நகரம், கிராமம் மற்றும் பட்­டித்­தொட்­டி­யெல்லாம் பேசப்­படும் விட­ய­மாக உள்­ளன. இந்த விட­யங்கள் தமி­ழ­கத்தின் உள்­ளக அர­சியல் மற்றும் பொதுப் பிரச்­சி­னை…

  8. சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், இலங்கை அதிபர் ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் மனுவில் கையெழுத்துப் பெறும் இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர். இலங்கைத் தமிழர்கள் தொடர்பான எட்டுக் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடங்கிய உண்ணாவிரதத்தை கடந்த 11ம் தேதியுடன் முடித்துக் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்கள், தற்போது அடுத்த கட்டப் போராட்டத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தைப் போல், தற்போது தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கமும் மாநிலம் முழுவதும் பரவும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நான்கு மாண…

  9. இலங்கையிடமிருந்து படகுகளை மீட்காவிட்டால் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்- அழகிரி எச்சரிக்கை 4 by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/11/alagiri-1.jpg இலங்கையிடமிருந்து படகுகளை மீட்காவிட்டால் மீனவர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் கே.எஸ்.அழகிரி மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான பல கோடி ர…

  10. அலங்காநல்லூர் வாடிவாசலில் தமிழ் மரபுவழித் திருமணம்! - ஆட்சியரிடம் அனுமதி கோரிய ஜோடி செ.சல்மான் பாரிஸ்ஈ.ஜெ.நந்தகுமார் கார்த்திகேயன்-வித்யாதரணி ``ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் வாடிவாசலில்வைத்து திருமண உறுதியேற்பை நடத்த விரும்பினோம். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்க வந்தோம்'’ - கார்த்திகேயன் - வித்யாதரணி மதுரையைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்களான கார்த்திகேயன்-வித்யாதரணி, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் வாடிவாசலில்வைத்து தமிழ் மரபுவழியில் திருமணம் செய்துகொள்ள மதுரை கலெக்டரிடம் அனுமதி கேட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. கார்த்திகேயன்-வித்யா…

  11. ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு மிகுந்த ஏற்றங்கள் கொண்ட ஒரு பயணம்தான். பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு 'பேச்சிமுத்து' என பெயரிட்டார். பின்னர் பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது. தமிழ் முதல்வர் (ஓ.பன்னீர்செல்வம்)'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கு பிறந்த நாள் என்றால் மாநிலத்தையே அல்லோலகல்லோ படுத்தி விடுவார்கள் திராவிட கட்சிகளின் தொண்டர்கள். ஆனால் முதன்முறையாக தமிழகத்…

  12. நாளை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அ.தி.மு.க., வட்டாரத்தில், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு, ஜன., 27ல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா நடத்தினார். அதில், 'அனை வரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்; மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என, அறிவுரை கூறினார். இக்கூட்டத்தில், முதல்வர் பதவியேற்கும்படி, தன்னை, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவர் என, சசிகலா எதிர்பார்த்தார். ஆனால், யாரும் கோரிக்கை வைக்கவில்…

  13. சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. சட்டத்துக்குப் புறம்பாக, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி. மைத்ரேயன் தலைமையில் சென்ற எம்.பி.க்கள் இந்தப் புகாரை அளித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக சசிகலாவுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, வருகின்ற 28-ம் தேதிக்குள், சசிகலா பதிலளிக்க தேர்தல் …

  14. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக கொரோனா தொற்று காரணமாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை அவருக்கு ரத்த அழுத்தம் குறைவதாக வெளியான தகவல்கள் பொதுவெளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. எப்படி இருக்கிறார் சகாயம்? தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்த சகாயம், விருப்ப ஓய்வு கோரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசுக்கு விண்ணப்பத்திருந்தார். இதை ஏற்று, கடந்த ஜனவரி மாதம் அவருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. இதன்பிறகு, தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். `சகாயம் அரசியல் பேரவை' என்ற பெயரில் தமிழக தேர்தலில் 2…

  15. அதிருப்தி சசிகலா குடும்பத்தினர் மீது முதல்வர் பழனிசாமி... ஆட்சி மன்ற குழுவில் இடம் அளிக்க மறுப்பு தினகரன் ஆதிக்கத்தால் மந்திரிகளும் விரக்தி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போல், முதல்வர் பழனிசாமி தனித்து செயல்பட விரும்புவதால், அவருக்கும், சசிகலா குடும்பத் தினருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஜெ., மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வ ரானார். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தானே முதல்வராக, சசிகலா முடிவு செய்தார். அதன்படி, பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்…

  16. டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 28-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். புதுடெல்லி: விவசாயிகள் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்த…

  17. கருப்பு பூஞ்சை: அதிகரிக்கும் பாதிப்பு - நீரிழிவு உள்ளவர்கள் செய்ய வேண்டியவை பட மூலாதாரம், Getty Images இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைய தொடங்கிய நிலையில் கருப்பு பூஞ்சை எனும் மியூகார்மைகோஸிஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை 28 மாநிலங்களில் 28,252 பேர் மியூகார்மைகோஸிஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 86 சதவீதம் அதாவது 24,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், 62.3 சதவீதம் பேர், அதாவது 17,601 பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது என இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இ…

  18. ``கர்நாடக மக்களை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்`` - சத்யராஜ் தன்னுடைய வார்த்தைகள் கர்நாடக மக்களை புண்படுத்தி இருந்தால், அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக தமிழ் நாட்டின் திரை நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமை facebook ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், காவிரி நதிநீர் பிரச்சனையின்போது, நடிகர் சத்யராஜ் பேசியபோது சில வார்த்தைகள் கர்நாடக மக்களின் மனங்களை புண்படுத்தின என்பதால், அவர் மன்னிப்பு கேட்கும்வரை சத்யராஜூம் நடித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று கர்நாடக …

  19. 'எங்கள் பக்கம் 87 எம்.எல்.ஏ.க்கள்...!' - பகீர் கிளப்பும் நாஞ்சில் சம்பத் டி.டி.வி தினகரன், இன்று காலை டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்தில் இருந்து, தினகரனை அவருடைய அடையார் இல்லத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்று, அங்கு விசாரணை நடத்தினர். இதையடுத்து, அடையாறில் இருக்கும் தினகரன் வீட்டுக்கு முன்னால் இருந்து தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'டி.டி.வி.தினகரன் மீதான வழக்கின் விசாரணை முடிந்தவுடன் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது அவர் மட்டுமே. தற்போது அவருக்கு எதிராக நடந்து வரும் விசாரணைக்கு நாங்கள் யாரும் இ…

  20. "கொங்குநாடு".. கொளுத்திப்போட்டது யாரு.. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் அரசு..! Velmurugan PUpdated: Sat, Jul 10, 2021, 17:54 [IST] "மத்திய அரசை" "ஒன்றிய அரசு" (Union of India என்பதன் தமிழ்ப் பதம் அது) என திமுகவினர் கூறி வருவதால் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் . தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை " கொங்கு நாடு " என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாகவும் இன்று காலை பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது (அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பிரபல நாளிதழ் 'மத்திய அரசை' 'ஒன்றிய அரசு' (Union of India என்பதன் தமிழ்ப் பதம் அது)…

    • 10 replies
    • 1.6k views
  21. சசிகலா தரப்பு அனுமதி பெற்று கோடநாடு பங்களாவில் அதிகாரிகள் சோதனை: அதிநவீன சென்ஸார் கதவுகள் அகற்றம்? கோப்புப் படம்: ரோஹன் பிரேம்குமார் கோடநாடு பங்களாவில் அமைக்கப்பட்டிருந்த அதிநவீன சென்ஸார் கதவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் நடந்த கொள்ளை குறித்து 4 மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்த பங்களாவில் கோவை சரக டிஐஜி தீபக் எம் தமோர் மற்றும் நீலகிரி எஸ்பி முரளிரம்பா தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா தரப்பினரிடம் அனுமதி பெற்ற பின் இந்த சோதனை நடைபெற்றத…

  22. `துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை சு.கவிதா துர்காவதி இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் அதிகம் பேசப்படாத ஒரு பெண், துர்காவதி தேவி. குறிப்பாக இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவரது அதிரடித் தாக்குதல்களால் ஆட்டம்கண்ட ஆங…

  23. கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படுமென சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 'முத்தமிழறிஞர்' கலைஞர் அவர்களுக்கு 39 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது... 'சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் இந்த அரசின் முதல் அறிவிப்பினை உங்கள் அனுமதியுடன் இந்த அவைக்கு அறிவிக்க விரும்புகிறேன். விதி எண் 110 கீழ் அறிவிக்கும் முதல் அறிவிப்பே 'தமிழினத் தலைவர்', 'முத்தமிழறிஞர்', 'எண்பது ஆண்டுகாலம் இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைத்த போராளி' கலைஞர் அவர…

  24. சென்னை: முன்னொரு காலத்தில் சென்னையின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த டிராம் ரயில் சேவையை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த முறை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இந்தத் திட்டத்தை மத்திய அரசே முழுமையாக செயல்படுத்தவுள்ளது. அதேசமயம், மாநில அரசின் ஒத்துழைப்பும் இதில் கோரப்படவுள்ளதாம். சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களின் முக்கிய அங்கமாக திகழ்ந்தது டிராம் சேவை. சென்னையில் இந்த டிராம் சேவை கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த டிராம் சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. சென்னையில் மெட்ராஸ் டிராம்வேஸ் என்ற பெயரில் டிராம் …

  25. ‘எடப்பாடி பழனிசாமிக்கும் பா.ஜ.கவுக்கும்தான் லாபம்!’ - குடும்ப உறவுகளிடம் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் தினகரனுக்கும் திவாகரனுக்கும் நீடித்து வந்த மோதல், தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. 'சசிகலாவை சந்திக்க தினகரன் முயற்சி செய்தபோதும், திவாகரன் அதற்கு இடையூறாக இருந்தார். 'குடும்பம் மற்றும் கட்சியைக் காப்பாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என சசிகலா வைத்த உருக்கமான வேண்டுகோளை இரண்டு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்' என்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள். இந்த சந்திப்பில், 'கட்சிப் பொறுப்பில் தினகரன் தொடர்வா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.