தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 43-வது புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆதரவு- எதிர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் இம்முறை சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிரான நூல்களுடன் அமைக்கப்பட்டிருந்த மக்கள் செய்தி மையம் ஸ்டாலை புத்தக கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்பினர் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை விவகாரமும் புத்தக கண்காட்சியை மையம்…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
தெலுங்கானாவின் சுற்றுலா, தொழில், நீர் நிலைகளை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன் – தமிழிசை தெலுங்கானாவின் சுற்றுலா, தொழில், நீர் நிலைகளை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழகம் மற்றும் தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய தொழில் வர்த்தகச் சங்கம் தூத்துக்குடி சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு 37 சிறந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர் விருதுகளை வழங்கி வைத்தார். …
-
- 0 replies
- 421 views
-
-
துணை முதல்வருக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு நீக்கம் – மத்திய அரசு! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், வை ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலை வர், பிரதமர், நீதிபதிகள், மத்திய அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், டெல்லி பொலிஸார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ்…
-
- 2 replies
- 624 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே காரசார விவாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வழிதவறி சென்றதால்தான் அவர் மீதான அ.தி.மு.க.வின் அனுதாபம் குறைந்ததாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக விமானத்தில் சென்னை வந்தபோது, அவரை அப்போதைய தி.மு.க. தலைமையிலான அரசு தடுத்து நிறுத்தியது என்றும் ஆனால் தற்போது இலங்கை தமிழர்கள் குடியுரிமைக்காக தி.மு.க. போராடுகிறது எனவும் விமர்ச…
-
- 5 replies
- 1k views
-
-
21 வயதுக்கு குறைவானவர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது – புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வயது 21 ஆக இருக்க வேண்டும் என்றும் அதற்கு குறைவான வயதுடையவர்கள் மாடுபிடிக்க அனுமதி இல்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார். மேலும் பாலமேடு, அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை 10ஆம் திகதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியிலும், பாலமேடு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு நாளை மற…
-
- 0 replies
- 444 views
-
-
-
- 82 replies
- 10.8k views
- 2 followers
-
-
கன்னியாகுமரியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக கூறினார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு பாதுகாப்புப் பணியில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வில்சன் எனும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார். நேற்று இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு …
-
- 0 replies
- 789 views
-
-
இன்று முதல் உங்கள் கையில் பொங்கல் பரிசு.. ரூ.1000 ரொக்கம்.. ரேஷன் கடைகளில் கிடைக்கும் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி அட்டை கார்டு வைத்துள்ளவர்களுக்கு இன்று முதல் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14,15,16,17 ஆகிய நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழா தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மக்கள் பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அறிவித்தபடி திட்டத்தை தலைமைச்செயலகத்தில் அவர் தொடங்கி வ…
-
- 0 replies
- 414 views
-
-
உலக வேஷ்டி தினம்: களை கட்டிய தலைமை செயலகம் !தமிழர்களின் பாரம்பரியம் மிக்க உடையான வேஷ்டி அணிவதை, ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. அதனால் இன்று உலகம் முழுவதும் வேஷ்டி தினம் கொண்டாடப்பட்டது. வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தோடு ஒன்றியது என்பதை பறைசாற்றும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவரர்கள் வேஷ்டி அணிந்து உற்சாகமாக அலுவலகம் வந்திருந்தனர்.சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்று வேஷ்டி அணிந்து வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். பெரும்பாலும், அவர்களில்…
-
- 9 replies
- 4.4k views
-
-
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் பேரவையில் தாக்கல்! மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த சட்டமூலம், சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்ட திருத்தம் அமுலுக்கு வந்த பின்னரே நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி தலைவர்களுக்கான பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று தாக்கல…
-
- 0 replies
- 466 views
-
-
மோடி பிரதமராகவில்லையென்றால் நாடு நாசமாய் போயிருக்கும்
-
- 0 replies
- 438 views
-
-
நளினியை விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றில் மத்திய அரசு தகவல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றில் இந்திய மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நளினி, சென்னை உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை. இதற்கிடையில், ராஜீவ…
-
- 3 replies
- 821 views
-
-
சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்கக்கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் திரு.ராஜா, திரு.புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதாரண விடுப்பு வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரவிச்சந்திரன் இதுவரை 4 முறை நீதிமன்றத்தை அணுகியே சாதாரண விடுப்பில் சென்றுள்ளதாகவும், அ…
-
- 0 replies
- 484 views
-
-
-
- 12 replies
- 1.9k views
-
-
நெல்லை கண்ணன் கைது கொடுமையானது - வைகோ
-
- 1 reply
- 1k views
-
-
அதிமுக-திமுக: சரிசமமான இடங்களில் வெற்றிபெற்றதா? மின்னம்பலம் அதிமுகவை விட திமுகதான் அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையை திமுக உருவாக்கி உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த படித்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இந்த நிலையில் கணினி பயிற்சி மையம் திறக்கும் நிகழ்வு சைதாப்பேட்டை பஜார் சாலையில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. அதேபோல சென்னை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு கணினி பயிற்சி மையம், கலைஞர் சிலை ஆகியவற்றை …
-
- 0 replies
- 564 views
-
-
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் கோலம் போட்ட பெண் பாக். உளவாளியா என மத்திய உளவு அமைப்பான ஐ.பி.யும் விசாரணையை துவக்கி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தினங்களுக்கு முன் சென்னை பெசன்ட் நகரில் இரண்டு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அனுமதியின்றி அடுத்தவர்கள் வீட்டின் முன் கோலம் போட்டனர். இதற்கு வீட்டு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் தகராறு செய்ததால் போலீசார் எட்டு பேரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். ஆனால் அவர்களோ 'கோலம் போட்டதால் போலீசார் கைது செய்து விட்டனர்' என விஷமத்தனமான பிரசாரத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். …
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
உள்ளாட்சித் தேர்தல்: கட்சிகள் கைப்பற்றிய இடங்கள்! மின்னம்பலம் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது மூன்றாவது நாளாக இன்னும் சில இடங்களில் நடைபெற்றுவருகிறது. தேர்தலில் ஆளும் அதிமுகவை விட எதிர்க்கட்சியான திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இன்னும் முழுமையான முடிவுகள் வெளிவராத நிலையில் இன்று (ஜனவரி 4) காலை 6.30 மணி நிலவரம் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களில் மொத்தமுள்ள 515 இடங்களில் 454 இடங்களுக்கு அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திமுக கூட்டணி 241 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 211 இடங்களில் வென்றுள்ளது. கட்சிகள் அடிப்படையில் திமுக 217 இட…
-
- 0 replies
- 631 views
-
-
தேர்தல் அரசியலில் முதல் வெற்றியைச் சுவைத்த நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11-ம் வார்டு உறுப்பினராக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் அரசியலில் நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றி இதுவாகும். தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கன்னியா…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிஆரம்பமாகியது. இன்று (வியாழக்கிழமை) காலை, தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. பின்னர் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்கட்டைகள் கொட்டப்பட்டு எண்ணப்படுகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3பேர் வாக்கட்டைகள் எண்ணும் பணியில் உள்ளனர். …
-
- 3 replies
- 960 views
-
-
ஈழத் தமிழர்கள், இந்திய குடியுரிமையையே விரும்புகின்றனர் ; கருத்து கணிப்பில் தகவல்! திருத்தபட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாமைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக்கோரி ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னொரு தரப்பினர் அவர்கள் இலங்கைக்கு மீள செல்வதே சிறந்த தீர்வு என கூறிவருகின்றனர். இந்த சூழலில் இலங்கை தமிழர்களின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்வதற்கு பிரபல ஊடகமொன்று அண்மையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தங்கியிருக்க விரும்புவதா…
-
- 0 replies
- 372 views
-
-
தமிழ் கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் அதிரடிப் பேச்சு குடியுரிமை சட்டதிருத்ததிற்க்கு எதிராக இடம்: மேலப்பாளையம் ஜின்னா திடல் நாள்: 29.12.2019
-
- 8 replies
- 2.2k views
-
-
வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்: சின்மயி எதிர்ப்பு! மின்னம்பலம் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் சார்பாக நடக்கும் சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத்சிங் வழங்குகிறார். இதற்கான விழா வரும் டிசம்பர் 28 ஆம் தேதி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் இருக்கும் எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. திமுகவின் உதயசூரியன் சின்னம் சார்பில் பெரம்பலூர் தொகுதியில் நின்று வெற்றிபெற்றிருக்கிற எஸ்.ஆர். எம். பல்கலை வேந்தரான பாரிவேந்தர், இந்த விழாவுக்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங்கை அழைத்திருப்பது அரசியல் ரீதியாக கவனிக்கப்படுகிறது. இதேநேரம…
-
- 21 replies
- 2.7k views
-
-
சிறப்புக் கட்டுரை: ரஜினிகாந்த்தின் அரசியல் என்னும் அபத்தம்! மின்னம்பலம் ராஜன் குறை கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளாகவே ரஜினிகாந்த்தின் அரசியல் நுழைவு, சாத்தியங்கள் குறித்து எழுதியும் பேசியும் வருவோருக்கு இந்தத் தலைப்பு சற்றே அலுப்பாகக்கூட இருக்கும். நானும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவருக்கு அரசியல் சரிபட்டு வராது எனப் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். கருத்துக் கேட்கும் தமிழ், ஆங்கில ஊடக நண்பர்களிடம் கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன். ஆனால், இந்த நேரத்தில் மீண்டும் ரஜினிகாந்த் அரசியல் குறித்து எழுத முக்கியக் காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் சாதாரணமாக அரசியலில் ஈடுபாடு காட்டாத மக்கள் தொகுதிகளும் மாணவர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் அரசியலில் ஈடுபடும் நேரம் …
-
- 2 replies
- 1.3k views
-
-
2019ல் புது ரூபம் எடுத்த போராட்டக் களம்.. கோலம் போட்டு அதிர வைத்த மக்கள்..! 2019 டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த இந்தியாவுமே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கோலம் கூட போராட்டக்காரர்களின் வியூகமாக மாறியதுதான் வரலாறு. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து துன்புறுத்தல்களுக்குள்ளாகி இந்தியாவுக்கு அகதிகளாக வரும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்ட திருத்தம். ஆனால் அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களுக்குள்ளாகும் முஸ்லிம்கள், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய …
-
- 2 replies
- 902 views
-