Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த சிறுமி! உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலின் இவர் 11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர். அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Ba…

    • 2 replies
    • 982 views
  2. 25 JAN, 2024 | 11:03 AM இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திடவிரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் 22-1-2024 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும் இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இதில் ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டிய அ…

  3. திருப்பூர்: மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - அதிமுக நிர்வாகி உள்பட 8 பேர் கைது பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மனமுதிர்ச்சியற்ற 17 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், குழந்தைகளின் உடல்நலனைப் போல் மனநலனிலும் அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. காவல்துறை கூறுவது என்ன? மன முதிர்ச்சியற்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக, பிபிசி தமிழி…

  4. இராஜராஜ சோழன் சமாதி: அகழ்வாராய்ச்சி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு இராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் பின்னர் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர் திருமுருகனின் மனுவில், “சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் கி.பி.985 முதல் கி.பி.1014 வரையில் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்துத் …

  5. கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். கடந்த சில நாட்களாக விசைப்படகு மீனவர்களுக்கு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கி வந்தன. இதனால் குறைந்த அளவு விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல்மழை பெய்து வருகிறது. இந்த சாரல்மழையின் காரணமாக கடலில் மீன்கள் அதிக அளவு கிடைக்க தொடங்கி உள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 300-க்கும்…

  6. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர் பாதுகாப்பு அமைப்பு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதி…

  7. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்கள் பழுது.. பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி! சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டோக்கன் இயந்திரங்களில் ஏற்பட்டுள்ளதால் டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பல தடங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது.இதேபோல் வண்ணாரப்பேட்டை - மண்ணடி - சென்னை கோட்டை - சென்னை சென்ட்ரல் - அரசு வளாகம் - எல்.ஐ.சி - ஆயிரம் விளக்கு - அண்ணா மேம்பாலம் - தேனாம்பேட்டை - நந்தனம் - சைதாப்பேட்டை - கிண்டி - ஆலந்தூர் - மீனம்பாக்கம் - சென்னை விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்…

  8. 29 JAN, 2025 | 11:55 AM சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். அதேபோல், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.குணசுந்தரி (52) என்பவர் அதிகப்படியான வியர்வை, நினைவின்மை காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரின் மூளை தசையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் பாதிக்கப்ப…

  9. திமுகவில் இன்பநிதிக்காவும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதால் கட்சியிலிருந்து விலகினேன் என்று திமுக நிர்வாகி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகி விலகல் தமிழக மாவட்டமான சேலம், ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் எழில்அரசன் (35). திமுக நிர்வாகியான இவர், கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையில், "சேலம் மத்திய மாவட்ட திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய ஒன்றியப் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்த நான், கீழ்காணும் காரணங்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகிக் கொள்கிறேன். *திமுக ஆட்சியில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட…

  10. தமிழகத் தேர்தல்:திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீகும் இணைந்தது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது. திமுக தலைவருடன் முஸ்லிம் லீக் கட்சியினர் சந்தித்து தேர்தல் உறவு குறித்து பேசினர் அத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளன. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியில் தமது கட்சியும் இணைகிறது என்பதை முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் திங்கட்கிழமை செய்தியாளர்களிடன் உறுது செய்தார். திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபா…

  11. ஜெர்மன் மாணவர் வெளியேற்றப்பட்ட விவகாரம் - 'எனது போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதல்ல' குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய ஜெர்மன் மாணவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என எழுத்துபூர்வ உத்தரவு தனக்கு அளிக்கப்படவில்லை, மாறாக வாய்மொழி உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டது எனக் கூறியுள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவின் கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து படிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடிக்கு படிக்க வந்த மாணவர், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துக்கொண்டதற்காக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது. எனக்கு அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் சென்னையின் குடியேற்ற அதிகாரி…

  12. நான் யாரிடமும் விலைபோகவில்லை- விஜயகாந்த் பரபரப்பு பேச்சு பணத்தாசையில் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று சொன்றார்கள். நான் யாரு பக்கமும் விலைபோகவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது, விஜயகாந்த் பேசுகையில், அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த மிட்டிங்கில் நிறைய பேசுவேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு …

  13. வேப்பங்கொட்டையால் விபரீதம் : மின்னல் தாக்கி சகோதரிகள் பலி..! 24 AUG, 2025 | 09:19 AM தமிழகத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவரின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9), அஸ்பியா 9ம் வகுப்பும், சபிக்கா 5ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று சனிக்கிழமை (23) பாடசாலை விடுமுறை என்பதால், ஊருக்கு வெளியே உள்ள வேப்பமரத்தடியில் தாயாருடன் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்றுள்ளனர். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில், மதியம் திடீரென மழை மேக…

  14. சென்னையில் பாரிய தீ விபத்து – போராடி அணைத்த வீரர்கள்! சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு அருகில் அரசாங்கத்திற்கு சொந்தமான காலி இடத்தில் பற்றிய தீயை, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பேரில் நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டும், சிலர் செல்போன்களில் டோர்ச் அடித்தும் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். சில இடங்களில் பட்டாசுகளையும் வெடித்தனர். இந்நிலையில், சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்புக்கு அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான…

  15. தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் காரில் சென்றபோது சென்னை கிண்டியில் கார் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார் பழ.நெடுமாறன் சென்ற காரின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. கார் மோதியதில் லேசான காயங்களுடன் நெடுமாறன் தப்பினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=162638&category=IndianNews&language=tamil

    • 4 replies
    • 1.4k views
  16. ரயிலில் போராடிய உயிர்...காப்பாற்றிய பெண்... நெகிழ்ச்சித் தருணம்!! காமெடியில் இருந்து கார்ட்டூன் வரை அதிமான விஷயங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகுபவர்கள் மருத்துவர்கள்தான். இப்போதுகூட முதல்வர் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையைக் தாறுமாறாக கிண்டல் செய்யும் ஃபேஸ்புக் பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால் உடலுக்கு ஒன்று வந்து விட்டால் டாக்டர் கொஞ்சம் பாருங்க டாக்டர்னு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவோம். சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ராஜரத்தினம் பொன்மணி . அண்மையில் தூத்தூக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரசில் பயணித்த நேர்ந்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ''கடந்த ஞாயிறு( 09-10-2016) இரவு 8 மணி தூத்துக்கு…

    • 1 reply
    • 807 views
  17. எதிர்க்கட்சி தலைவர் பதவியே வேண்டாம்- விஜயகாந்த் ஆவேசம் FILE ''நாடு நன்றாக இருக்க வேண்டும் எ‌ன்பத‌ற்காகத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டு எம்.எல்.ஏ.க்களை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். நாடும், நம்நாட்டு மக்களும் நன்றாக இருந்தால் போதும். அதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வேண்டாம்'' எ‌ன்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌‌விஜயகா‌ந்‌த் ஆவேசமாக கூ‌றினா‌ர். தனது ரிஷிவந்தியம் தொகுதிகளில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கல‌ந்து கொ‌ண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்தா‌ர். அ‌ப்போது, தமிழக அரசின் சாதனைகளை விட வேதனைகள் தான் அதிகம் இருக்கிறது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை பார்த்து த…

  18. இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த கலைஞர் கருணாநிதி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி புதுக்கோட்டையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள அரசு மன்னார் கல்லூரி மாணவர்களை புதன்கிழமை சந்தித்து வாழ்த்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியது ; இந்த அறவழிப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. டெசோ அறிவித்த வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதா என்பது குறித்து பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும். அது படுதோல்வி அடைந்ததை வழக்கம் போல உண்மையைத் திரித்துப் பேசும் கருணாநிதி…

    • 0 replies
    • 668 views
  19. திய வரைபடத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து மணவர்கள் போராட்டம் தற்போது தமிழ் நாடு திருச்சியில் பல ஆயிரம் மாணவர்கள் அணிதிரண்டு நடத்திவரும் மாபெரும் போராட்டத்தின் போது இந்திய அரசின் அலுவலகங்கள் முற்றுகையிட்டு அங்கு உள்ள மத்திய அரசுக்கு உரித்தான பதாகைகள் அடித்து நொறுக்கப்பட்டு அங்கு ஒரு அலுவலகத்தில் இருந்த இந்தியாவின் வரைபடத்திலிருந்து தமிழ் நாட்டை பிரித்தெடுத்துவிட்டு இந்தியாவின் வரைபடத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர் மாணவர்கள். இதே போன்றே இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகளும் முற்றுகையிடப்பட்டுள்ளதோடு வங்கிகளின் கதவுகளுக்கு பூட்டு போடுவதற்கு மாணவர்கள் முயன்ற போது வங்கியின் காவலர்களே வங்கியின் கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே பதுங்கியுள்ளதாக அங்கிருந்து ஈழதேசம் நிருபர் தெ…

    • 0 replies
    • 550 views
  20. நாளை கடிதம்.... டிசம்பர் 29-ல் வானகரத்தில் பொதுக்குழு!- அ.தி.மு.க அப்டேட்ஸ் ஆட்சி மீது ஏற்பட்டுள்ள விமர்சனம், கட்சிக்குள் உருவாகும் பூசல் என அ.தி.மு.க-வின் முகாம் ஆட்டம் கண்டு வரும் நேரத்தில், பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற அ தி மு க பொதுக்குழுவை கூட்டும் முடிவுக்கு கார்டன் தரப்பு வந்து விட்டது. அ.தி.மு.க.வின் அதிகாரம்மிக்க பதவி பொதுச்செயலாளர் பதவிதான். இந்தப் பதவியைக் கைப்பற்ற சசிகலா தரப்பில் கடுமையாக முயற்சி எடுக்கப்பட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அதை வலியுறுத்தத் துவங்கி விட்டார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக அங்காங்கே பேனர்கள் வைப்பதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் என ஒருபுறம் களேபரங்கள் நடந்து வருகின்றன. சசி…

  21. மூன்று தமிழர் உயிர் காப்பு இயக்கதின் சார்பில் மரண தண்டனையை எதிர்த்து எதிர்வரும் இன்று நடக்கும் மாபெரும் பொதுகூட்டம் மாலை 6.30 மணியளவில் முத்துரங்கன் சாலை தியாகராயநகர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் நடை பெற உள்ளது. மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வில் தமிழகம் வாழ் அனைவரும் அரசியல் வேறுபாடுகளின்றி கலந்து கொண்டு மூன்று தமிழர்களின் உயிர்கள் தூக்குக் கயிற்குக்குச் செல்வதை தடுத்து நிறுத்த மாபெரும் பொதுகூட்டம் நடை பெறுகிறது. அதன் நேரலையை 6.30 மணியளவில் கீழ் வரும் இணைப்பில் பார்க்கலாம் . நேரலை http://www.dinaithal.com/live

    • 0 replies
    • 340 views
  22. வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் சசிகலா: பலத்த பாதுகாப்பு பணிகளில் பொலிஸார் பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.கவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைத்தியசாலையில் இருந்து வெளியேறவுள்ளார். பெங்களூர் சிறையில் கடந்த 4 ஆண்டுகளாக தடுப்பு காவலில் இருந்த சசிகலா, கடந்த 27ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அந்நேரம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தமையினால், சிறைத்துறை நிர்வாகத்தினர் நேரடியாக அங்குச் சென்று,விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர். இந்நிலையில் தற்போது சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார். எனவே இன்று (ஞாயி…

    • 2 replies
    • 1.1k views
  23. பன்னீர் செல்வம் அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் - என்.ராம் நம்பிக்கை சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஓ. பன்னீர் செல்வம் ஆட்சி அமைத்தால், திமுக அவருக்கு ஆதரவளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎன். ராம் முதலில், சசிகலா முதலமைச்சராகப் போவதில்லை என்று கூறினார்கள். அதற்கு அடுத்து, நேர்மாறாக முடிவெடுத்தார்கள். பிறகு, பன்னீர் செல்வம்தான் முதலமைச்சராக வேண்டும் என சசிகலா கூறினார் என்றார் ராம். முதலமைச்சரை ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தினால் தீவிரமான குற்றச்சாட்டு. சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. …

  24. பாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை March 20, 2021 தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்திற்கு ஆரம்பமாகி மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நீச்சலை நிறைவு செய்துள்ளாா். பல்வேறு நீச்சல்போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ர்ந்த சியாமளா கோலி (வயது-48), என்பவரே இவ்வாறு தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார். இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்…

  25.  பேரறிவாளன் வைத்தியசாலையில் அனுமதி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், வேலூர் அரச வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து இந்திய மத்திய மாநில அரசாங்கங்கள் இழுத்தடித்து வருகின்றன. இதனால் 25 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் உள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன், வேலூர் அரச வைத்தியசாலையில் திடீரென எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்த காரணம் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் வைத்தியசாலையைச் சுற்றி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.