Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியக் கலாசாரம் குறித்து ஆராயக் குழு: தென் இந்தியர் இடம்பெறாதது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 18 செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், HINDUSTAN TIMES கடந்த 12 ஆயிரம் வருட இந்தியக் கலாசாரம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழுவில் தென்னிந்தியரோ, சிறுபான்மையினரோ, ஒடுக்கப்பட்டவர்களோ இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் அளிக்கப்பட்ட பதிலில், இந்தியக் கலாசாரத்தின் துவக்கம் மற்றும் பரிணாமம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு குழு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன. …

  2. சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்! SelvamMay 31, 2023 21:17PM ஷேர் செய்ய : நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்தநிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் ஐடி விங் பக்கம், இளைஞர் பாசறை மாநில செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், செய்திப்பிரிவு செயலாளர…

  3. முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் மகன் அன்பரசன்-ஐஸ்வர்யா திருமணம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மத்திய, மாநில முன்னாள் அமைச்சரும், என்னுடைய ஆருயிர் தம்பியுமான திருநாவுக்கரசருடைய மகன் அன்பரசனுக்கும், அம்பாசமுத்திரம் டாக்டர் கே.பி. அருணாசலத்தின் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவுக்கும் நடைபெற்றுள்ள மணவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டுமென்ற அழைப்பை, ஆணையாக ஏற்று உரிய நேரத்திலே திருமணத்திலே கலந்துகொள்ள வேண்டுமென்பதற்காக காலை உணவைக் கூடத் தியாகம் செய்துவிட்டு இந்த மணவிழாவிற்கு நான் வந்துள்ளேன். இந்த மணவிழாவிலே பல கருத்துகளை நம்முடைய அனைத்துக் கட…

    • 0 replies
    • 531 views
  4. இடைவெளி நிரப்பப்படுமா? தமிழக அரசியலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் இருபெரும் ஆளுமைகளாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்த ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கருணாநிதியின் முதுமை என்பன தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் 6 முறை ஆட்சிப் பீடம் ஏறிய ஜெயலலிதா தான் இறந்தாலும் கூட இன்னும் நூறாண்டுகள் அ.தி.மு.க. வாழும் என கூறினார். ஆனால் அவர் இறந்து ஓராண்டு நிறைவடைவதற்குள்ளேயே அக்கட்சி பல துண்டுகளாக சிதறி இன்று நிலையற்ற ஒரு ஆட்சியையே தமிழகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறது. வரட்சி, விவசாயிகள் தற்கொலை, நீட்தேர்வு, குடிநீர் தட்டுப்பாட்டு என்று பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்க…

  5. எடப்பாடியும், டிடிவி தினகரனும் இணைவது உறுதி : மதுரை ஆதீனம் பங்குனி உத்திரத்தையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திரும்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தால் நான் பிரசாரம் செய்வேன். நரேந்திரமோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். டி.டி.வி தினகரன் பொறுமைசாலி. அமைதியானவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கி இளைஞர் படையுடன் வலுவாக கட்சியை நடத்தி வருகிறார். அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கா…

    • 0 replies
    • 531 views
  6. மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது வழக்கு April 24, 2019 மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். . மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக தெரிவித்து நேற்றையதினம் சிறையில் உள்ள கைதிகள் சிறை கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தடுக்க சென்ற காவலர்கள் மீதும் கற்களை வீசி தாக்கி உள்ளனர். இதனையடுத்து, சிறைத்துறை அளித்த முறைப்பாட்டினையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது…

  7. விஜயகாந்த் மௌன பிரச்சாரம்! மின்னம்பலம் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று (மார்ச்25) மாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா சில நாட்களுக்கு முன் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நான் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதால் அங்கே நிறைய பணிகள் இருப்பதால் தமிழகம் முழுதும் என்னால் பிரச்சாரம் செய்ய இயலாது. அதனால் துணைச் செயலாளர் சுதீஷ் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வார். கேப்டன் விஜயகாந்த் இறுதிக்கட்டப் பிரச்சாரத்துக்காக வருவார்”என்று தெரிவித்திருந்தார். ஆனால் சுதீஷுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டு அவரது பிரச்சாரப் பயணத்தை முடக்கியது. கொரோனா…

  8. மர்ம படகில் வந்த மூவர் கைது இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வந்த படகிலிருந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. அவர்களிடமிருந்து, படகு மற்றும் அதிவேக படகுக்கான இன்ஜின் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மீனவர்கள் இல்லை என்ற சந்தேகம் வந்ததையடுத்து அவர்களிடம் பொலிஸார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/184511/மர-ம-படக-ல-வந-த-ம-வர-க-த-

  9. குமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தினால் பல மீனவ கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையோர மணல் கொள்ளை, வளர்ச்சித் திட்டங்களின் பெயரில் கடலைச் சூறையாடியதன் விளைவால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடலோர கிராமங்களில் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்புகளை இழுத்துச் செல்கின்றன. அலையின் வேகத்தினால் கடலரிப்பு தடுப்பு சுவரின் கற்கள் பெயர்ந்து கடலில் விழுந்து கிடக்கிறது. ஊருக்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடியப்பட்டணம், வாணியக்குடி, குறும்பனை, இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இரவிபுத்த…

  10. குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அதிகரித்து வரும் கருத்தரிப்பு பிரச்னைகள், குழந்தையின்மை - தாமதமான குழந்தை போன்றவற்றால் உருவாகும் சிக்கல்கள் வடிவமாற்றங்கள் அடைந்துகொண்டு இருக்கின்றன என்பதை கடந்த வாரம் வெளியான ஒரு குற்றச் செய்தி ஒன்றின் மூலம் கவனத்துக்கு வந்துள்ளது. சென்னை புழலுக்கு அருகேயுள்ள காவாங்கரையைச் சேர்ந்தவர் யாஸ்மின். திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ள யாஸ்மின் இரண்டாவதாக கர்ப்பமடைய, அவருடைய கணவர் யாஸ்மினை விட்டுப்பிரிந்துள்ளார். குழ…

  11. தமிழகத்தில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் திருவள்ளுவர் வேடத்தில் அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கு திருக்குறள் சொல்லிக் கொடுக்கிறார். தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ‘திருக்குறள்’ சுப்புராயன். இவர், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பிரிவு அலுவலக ஊழியராக 31 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருக்குறள் மீது அதிக ஆர்வம் கொண்ட சுப்புராயன், திண்டிவனத்தில் திருவள்ளுவர் இறையானார் கோயில் அமைத்து, அங்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்பித்து வருகிறார். அதேபோல், புட்லூர் பகுதியில் திருக்குறள் பயிற்சி மையம் அமைத்து உள்ளார். மேலும் அவர் திருவள்ளுவர் வேடம் அணிந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் ச…

    • 1 reply
    • 530 views
  12. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்கிறது நீதிமன்றம். தமிழ்நாடு முழுவதும் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ என்ற ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் இயங்கிவரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர…

  13. 'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை! சென்னை: திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி கதை ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், " அ.தி.மு.க. தலைவி வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் எத்தனை பேரின் மகிழ்ச்சியைக் கெடுத்து, மன வருத்தத்தைக் கொடுத்து, அதிலே இன்பம் கண்டார் என்பதை; வேல…

  14. சித்தூர்: ஆந்திராவை பிரித்து தெலுங்கானாவை உருவாக்கினால் சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரி, நாகலாபுரம், விஜயபுரம் பகுதிகளை தமிழ்நாட்டின் இணைக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். நகரி, நாகலா புரம், விஜயபுரம் போன்ற பகுதிகளில் 60% தமிழர்கள் உள்ளனர். ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஆந்திரா பிரிவது உறுதியானால் எங்கள் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்து நகரி தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆ…

    • 2 replies
    • 530 views
  15. சென்னை: சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் கேமராவுடன் இறங்கிய ட்ரோன் வகை குட்டி விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின் மேற்பரப்பில் இன்று மதியம், ட்ரோன் என்று அழைக்கப்படும் குட்டி விமானம் வந்து தட்டுத்தடுமாறியபடி தரையிறங்கியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், அச்சமடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அந்த ட்ரோன் விமானத்தில் கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அது ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட கூடிய வசதி கொண்டதாகும். ADVERTISEMENT கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் விமானங்க…

    • 0 replies
    • 530 views
  16. நீதி ஜெயா­வின் சொத்­துக்கள் அர­சு­ட­மை­யாக்­கப்­பட வேண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் இரத்து செய்­யப்­பட வேண்டும் உயில் இல்­லாத ஜெயா வின் சொத்­துக்­களை எவரும் அனு­ப­விக்க முடி­யாது. உல­கி­லேயே இந்­தியா மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடு. அங்கு நீதித்­துறை சுயா­தீ­ன­மாக இயங்­கு­கின்­றது. இதனை இந்­தியா மட்­டு­மல்ல முழு உல­கமே அறியும். மக்­க­ளுக்கு ஏதும் பிரச்­சினை வந்தால் அல்­லது அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னைகள் தலை­தூக்­கினால் அதற்கு தீர்­வு­காண நீதி­மன்­றத்­தையே நாடு­கின்­றனர். அண்­மையில் நெடுஞ்­சா­லைகள் அரு­கி­லுள்ள டாஸ்மார்க் சாராயக் கடை­களை அகற்ற நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. நீதி­மன்றம் அ…

  17. இடைத்தேர்தலில் களமிறக்கப்படுவாரா அழகிரி? தி.மு.கவில் புதிய திருப்பம் 'கொடியை தம்பியிடமே கொடுங்கள்' என்று அழகிரி சொன்னதே ஸ்டாலினின் தலைமையை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதற்கான சிக்னல்தான். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்குள் அழகிரியைக் கட்சிக்குள் கொண்டு வரும் முடிவை, தளபதி எப்போதோ எடுத்து விட்டார். இடைத் தேர்தல் வெற்றியையும், அழகிரியின் பங்களிப்பையும் அதுவே உறுதி செய்து விடும்" என்கிறார்கள் இந்தியாவுக்கான சுதந்திரதினம் ஆகஸ்ட் 15-ம் தேதி என்றால், தி.மு.க.வுக்கான சுதந்திர தினம் ஆகஸ்ட் 14-ம் தேதிதான் என்ற நம்பிக்கையோடு, உடன்பிறப்புகள் காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 14-ம் தேதியன்று கட்சியின் தலைவர் உள்ளிட்ட புதிய ந…

  18. கேள்விக்குறியான சசிகலா பதவியேற்பு: வெறிச்சோடிய போயஸ் கார்டன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் சென்னை திரும்பாததால், சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி குறித்துக் கேள்வி எழுந்துள்ள நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.…

    • 2 replies
    • 529 views
  19. இடம்: சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலம் 7.01.2014 செவ்வாய் காலை 10. மணி தலைமை: திரு. பழ.நெடுமாறன் அவர்கள், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு. இந்தியக் குடியரசுத் தலைவர் திரு பிரணாப் முகர்சி அவர்கள் 20.12.2013 அன்று சென்னை இலயோலாக் கல்லூரியில் உரையாற்ற வருகிறார் என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் சென்னை மாநகரக் காவல் துறை யினர் ஈழ ஆதரவுத் தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் வேலையில் இறங்கினர். 20.12.2013 நள்ளிரளிவு 2.00 மணிக்கு திரைப்பட இயக்குநர் வ. கவுதமன் அவர்களை அவரது இல்லத்தில் கைது செய்து, எங்கே கொண்டு போகிறோம் என்று அவருடைய குடும்பத்தினருக்குச் சொல்லாமல் அழைத்துச் சென்றுவிட்டனர். கைது செய்த உடனே திரு கவுதமன் அவர்களின் கைப்பேசியைக் கா…

  20. இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் திரு சோம் பிரகாஷ் சிங் சென்னை வந்து இங்கு உண்ணா நிலையில் உள்ள மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் . மாணவர்களை தொடர்ந்து போராட வேண்டும் , நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் . முதலில் சென்னை ஐ ஐ டி கல்லூரிக்கு சென்று மாணவர்களுடன் உரையாடினார் . பின்பு அடையார் சட்டப் பல்கலை மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் பின்பு அடையார் இசை கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்து அவர்களை ஊக்கப் படுத்தினார் . எல்லா ஊடகங்களுக்கும் இலங்கையை இனப் படுகொலை நாடாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் . ராஜா அண்ணாமலைபுரம் அரசு இசை கல்லூரி மாணவ மாணவிகள் எவ் வித அடிப்படை வசதியும் இன்றி 3 …

    • 2 replies
    • 529 views
  21. போயஸ்கார்டனின் நிலை... காஸ்மோ பாய்ஸ்... எங்கே செல்கிறார் கரன் சின்ஹா..? #NewsChat போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்க ஆளில்லை... போயஸ்கார்டனில் சம்பளம் கொடுக்கக்கூட யாருமில்லையாம்! இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது? ஜெயலலிதாவின் உதவியாளர்கள் விழிபிதுங்கி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்புவரை, போயஸ்கார்டன் ஜெகஜோதியாய் காட்சி அளித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அங்கு கட்சியின் வி.ஐ.பி-க்கள் வரவே பயப்படுகிறார்கள். குறிப்பாக, சசிகலா குடும்பத்தினர் வரத் தயங்குகிறார்கள். காரணம்..ஜெயலலிதாவின் ஆவி இங்கே நடமாடுகிறது என்ற வதந்தி பரவியது தான். மாடியில் உள்ள ஜெயலலிதா, அறை பூட்டப்பட்டு கிடக்கிறது. ஜெயலலிதா ஆசையாக …

  22. திருமுருகன் காந்தி, உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து... ஹைகோர்ட் அதிரடி. கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார். மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கடந்த மே 23-இல் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.எனினும் அந்த 4 பேர் மீதான குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில் ஜாமீன் கோரிய இவர்களது மனுக்கள் …

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் வரை குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 20 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு நெல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என அச்சத்தில் உள்ளனர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள். கர்நாடகாவில் இருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முறையாகக் கிடைக்காததால் குறுவை சாகுபடியைத் தொடங்கிவிட்டுப் போதிய நீர் இல்லாமல் தவிப்பதாகச் சொல்கின்றனர் காவிரி டெல்டா விவ…

  24. மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாஞ்சா நூல் (கோப்புப்படம்) சென்னை: தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கனவே தடை இருக்கிறது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 16-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.