தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
தமிழகத்தில்... 14 லட்சம் பேருக்கு, நகைக்கடன் தள்ளுபடி! தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரன் வரை நகைக்கடன் பெற்று தற்போது வரை ஒரு லட்சம் பேர் நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். சென்னை அண்ணாநகர், திருமங்கலம், தியாகராயநகர் உள்ளிட்ட 10 ரேஷன் கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் …
-
- 0 replies
- 216 views
-
-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வராக முன்னாள் மத்திய நிதியமைச் சர் ப.சிதம்பரத்தை நியமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. தலைவர் பதவியை பிடிப்பதற்காக ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், திரு நாவுக்கரசர் ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: தலைவர் பதவிக்காக பலபேர் களத்தில் இறங்கியுள்ள நிலையில் ப.சிதம்பரம், வாசன், சுதர்சன நாச்சி யப்பன் இந்த மூவருக்கும் இடையில் தான் கடும்போட்டி நிலவுக…
-
- 1 reply
- 460 views
-
-
நோய்வாய்பட்ட தந்தையை மூன்று கிலோ மீட்டர் தோளில் சுமந்து சென்ற மகன்: காரணம் என்ன? 42 நிமிடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடிகளான காணி இன மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு செல்ல முறையான சாலை வசதி செய்யப்படாததால் மலை வாழ் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சாலை வசதி இல்லாததால் நோய்வாய்பட்ட தந்தையை காப்பாற்ற அவரது மகன் மூன்று கிலோமீட்டர் தூரம் தோளில் மருத்துவமனைக்கு சுமந்து சென்ற நிலையில் உரிய நேரத்திற்கு சென்று சேராததால் தந்தை உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடிய…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் இன்று நடை பெறுகிறது. அந்தவைகையில் இன்று (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு சென்னை செங்கொடி அரங்கதிற்கு மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் உண்ணா நோன்பு இருபதற்க சென்று இருந்தனர். மாணவர்கள் நினைவு வீரவணக்க நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை காலை 8.30 மணியளவில் அரங்கத்திற்குள் நுழைந்த தமிழக காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழுணர்வாளர்களையும் கைது செய்து அருகில் உள்ளவெங்கடேசுவரா திருமண மண்…
-
- 0 replies
- 722 views
-
-
``நடிகர் கமல்ஹாசன் காவிரி நடுவர் மன்றம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். தெரிந்த வேலையைச் செய்தால்தான் நல்லது. தெரியாத வேலையைச் செய்யக் கூடாது" என்று கடுமையாக விமர்சித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன். சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். இதில் மத்திய அரசு கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. ராகுல், சோனியா விடுதலை செய்யச் சொல்லியும் மனிதாபிமானம் அடிப்படையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருந்து…
-
- 0 replies
- 511 views
-
-
சென்னை, பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், கடந்த 2008ம் ஆண்டு ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக கூறி அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் புகார்தாரரான கியூ பிராஞ்ச் முன்னாள் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் ஏற்கனவே, கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரிடம் வைகோ தரப்பு வக்கீல் தேவதாஸ் குறுக்கு விசாரணை செய்தார்…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்தில் நேற்று 11 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அந்தச் சிறுமியின் ஊரைச் சேர்ந்த, 15 வயது சிறுவனைக் காவல்துறை கைதுசெய்துள்ளது. வேலூர் குடியாத்தத்திற்கு அருகில் உள்ள கல்யாண பெருங்குப்பத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவரது சடலம் நேற்று அந்தப் பகுதியில் உள்ள முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி படித்த மச்சனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர் ஒருவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த 15 வயதுச் சிறுவனை காவல்துறையினர் இன்று ஒசூரில் கைதுசெய்ததாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். பலாத்கார முயற்சியில் அந்த ம…
-
- 0 replies
- 543 views
-
-
திமுகவில் தன்னை மீண்டும் சேர்த்துக்கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்கத் தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் செப்.5-ல் அமைதிப் பேரணி நடக்கும் என அழகிரி அறிவித்துள்ளார். அதனையடுத்து அவர் தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ''கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றார். திமுக பொதுக்குழு கூடி ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொண்டது குறித்துக் கேட்டபோது, ''1,500 பேர் மட்டுமே கட்சியை உருவாக்கிவிட முடியாது. உண்ம…
-
- 1 reply
- 598 views
-
-
பட மூலாதாரம்,MAHA_MARIAMMAN_VALLI_KUMMI கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டத்தில் நடந்த வள்ளி கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களை, ‘கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே...’ எனக்கூறி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு உறுதிமொழி ஏற்க வைத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழகத்தின் கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தமிழ் கடவுள் முருகன் மற்றும் வள்ளியின் வாழ்க்கை குறித்தான வள்ளிக்கும்மி ஆடுவதற்கான பயிற்சி வழங்கப்படுவதுடன், விழாக்காலங்களில் வள்ளிக்கும்மி நிகழ்ச…
-
- 3 replies
- 360 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில், ஞாயிற்றுகிழமை மஸ்ஜிதே இலாஹி- பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது. அந்த கிராமத்தின் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசைகளுடன் சென்று, கலந்து கொண்டு திறப்பு விழாவை கொண்டாடினர். 'இறையில்ல இல்ல திறப்பு விழா' என பெயர் சூட்டிய கிராம மக்கள் கிராமம் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று மதத்தவரும் திறப்பு விழாவுக்கு அழைப்…
-
-
- 1 reply
- 549 views
- 1 follower
-
-
மூக்கில் ரியூப்... வீல்சேர்... வாக்குச்சாவடியில் கருணாநிதியை நினைவுபடுத்திய க.அன்பழகனுக்கு என்னவாயிற்று..? 96 வயதில் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்து கருணாநிதியை நினைவு படுத்தி சென்றிருக்கிறார் அவரது நண்பரான திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். ’என் 18 வயதில் துணைக்கு வந்த நண்பன்’ என்று கருணாநிதியால் சிலாகிக்கப்பட்டவர் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ரொம்பவே சோர்வடைந்து விட்ட அவரது உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. அடிக்கடி காய்ச்சல், சளித்தொல்லைகள் ஏற்பட்டன. அடுத்தடுத்த நாள்களில் அன்பழகனின் உடல்நிலை மோசமடைந்ததால், டிசம்பர் 28-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக்…
-
- 1 reply
- 707 views
-
-
Published : 30 Apr 2019 19:23 IST Updated : 30 Apr 2019 19:44 IST ரியாஸ் - கோப்புப் படம் இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியின் கூட்டாளி சென்னை வந்ததாகவும், சென்னையில் சிலரை சந்தித்ததாகவும் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ விசாரணையில் குதித்துள்ளது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிருத்துவ தேவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அங்குள்ள என்.டி.ஜே அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பையும் தடை செய்தது. குண்டு வெடிப்பு …
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,TWITTER @VERTIGOWARRIOR படக்குறிப்பு, ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயர்களை தோற்கடித்தவர் ராணி வேலுநாச்சியார் கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தஃபா பதவி, பத்திரிக்கையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் 22 செப்டெம்பர் 2024, 03:00 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் க…
-
- 1 reply
- 701 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PALAYAM/SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, நீல நிறத்தில் காட்சியளிக்கும் கடல் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை நீங்கள் கவனித்திருந்தால், பலரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் பச்சை, நீல வண்ணத்தில் பிரகாசமாக மின்னும் வீடியோக்களை வரிசையாகப் பகிர்ந்திருந்ததைப் பார்த்திருக்கலாம். வண்ணமயமான விளக்குகளுடன் ஏதோ கண்கவர் நிகழ்வு நடைபெறுவது போல இருந்தது அந்தக் காட்சி. கடலில் ஏற்படும் இந்த விளைவை ஆங்கிலத்தில் ‘பயோலூமினசென்ஸ்’ (Biolum…
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக முதல்வரிடம் முறையிட திரைப்பட சங்கங்கள் முடிவு! சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரணியாக சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாக தமிழ்த் திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ் திரையுலக சங்கங்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கூறுகையில், "பேரறிவாளன் உட்பட 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு …
-
- 0 replies
- 496 views
-
-
Published By: DIGITAL DESK 2 17 MAY, 2025 | 10:58 AM வீதி விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் நான்கு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, உறவினர் ஒருவருடன் கடந்த புதன்கிழமை (14) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, தனியார் பஸ் ஒன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை அரசு வைத்தியசாலையிலும், பின்னர் வேலம்மாள் மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன், வெள்ளிக்கிழமை (16) மூளைச்சாவு அடைந்ததாக வைத்தியர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில், சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். அதற்காக, சிறுவனின் …
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இரத்து- தமிழக அரசு அறிவிப்பு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் இரத்துச் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயற்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்பப் பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு …
-
- 0 replies
- 347 views
-
-
சென்னை, வேலூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் உக்கிரம்: தமிழகத்தில் பாலைவனத்துக்கு நிகராக உணரப்படும் வெப்பம் - பகலில் நடமாடவும், இரவில் தூங்க முடியாமலும் மக்கள் தவிப்பு சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க துணியால் முகத்தை மூடியபடி குடைபிடித்துச் செல்லும் கல்லூரி மாணவிகள், படம்: ம.பிரபு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாலைவனத்துக்கு நிகரான வெப்பம் தற்போது உணரப்படுகிறது. கோடையின் முக்கிய நாட்கள் வருவதற்கு முன்பே, வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதால் மதுரை, வேலூர், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்பத்தின் உக்கிரத்தால் சாலைகளில் மக்…
-
- 0 replies
- 370 views
-
-
தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் jayashankar வலசை வரும் பூநாரை என்று தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் பகுதிக்கு அதிக அளவில் ஆஸ்திரேலிய ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்தப் பறவைகள் மிகப் பெரிய அளவில் தனுஷ்கோடி வந்து குவிந்துள்ளன. கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற் பகுதியில் இவை ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன. ஃப்ளமிங்கோக்களில் அன்டீன் ஃப்ளமிங்கோ, அமெரிக்கன் ஃப்ளமிங்கோ, சைலியன் ஃப்ளமிங்கோ, ஜாம்ஸெஸ் ஃப்ளமிங்கோ போன்ற வகைகள…
-
- 3 replies
- 899 views
-
-
தவெக கரூர் நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க அமைச்சர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி எம்.பி நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் அமைச்சர் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்…
-
-
- 4 replies
- 313 views
-
-
`வேலூரில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்களால், பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் அவர். 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளியலறையில் குளிப்பதை அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். குளிக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டும், தனியே வருமாறு வலியுறுத்தியும் அவர்கள் தொந்தரவு செய்த நிலையில் சனிக்கிழமை இந்த விபரீத முடிவை சிறுமி எடுத்ததாக காவல் துறை கூறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், "எனக்குத் தெரியாமல் நான் குளிப்பதை வ…
-
- 1 reply
- 570 views
-
-
சென்னை: ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை வங்கிக்குள் புகுந்து மர்ம நபர்கள் இன்று தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. முகமூடி அணிந்துவந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று வங்கிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் வங்கியின் கண்ணாடிகள் உடைந்தன.மேலும் ஊழியர்கள் ஜனகன் மற்றும் ராஜேஷ் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் இதனிடையே ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உள்பட் தமிழகத்தின் பல்வேறு இடங்கள…
-
- 4 replies
- 1.1k views
-
-
வந்தவாசியில் ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து சரக்கு வாங்கி ஏமாற்றிய குடிமகன்!வந்தவாசி: மூன்று நாட்களாகவே புழக்கத்தில் உள்ள புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்து டாஸ்மாக்கில் 2 குவாட்டர் வாங்கிவிட்டு மீதி பணத்தையும் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார் குடிமகன் ஒருவர். இதனால் டாஸ்மாக் ஊழியரை போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி இந்தியன் வங்கி கிளையில்,மருதாடு டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஒருவர் நேற்று காலை வழக்கம் போல் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை செலுத்தினார். பணத்தை வாங்கிய வங்கி அலுவலர் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை ஆய்வு செய்துள்ளார். அப்போது, சந்தேகப்படும்படியாக இருந்த புதிய 2000 ரூபாய் நோட்டை தனியாக எடுத்து ஆய்வு செய்துள்ளார். …
-
- 0 replies
- 724 views
-
-
மதுரையை குலுக்கியது மாணவர்கள் பேரணி [படங்கள்] ஈழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கு எதிரான பன்னாட்டு விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று காலை பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார்கள் இதில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரமாண்ட பேரணி மதுரையை குலுக்கியது, சமிபகாலங்களில் மதுரையில் நடந்த மிக பெரிய தன் எழுச்சி பேரணி இது மட்டுமே. கோரிக்கைகள் : 1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே 2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை. 3. சர்வதேசவிசாரண…
-
- 0 replies
- 346 views
-
-
சுப்பிரமணியசாமி உருவ பொம்மை எரிப்பு சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிர மணியசாமி கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு தமிழ் திருநாடு நிலத்தரகர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சங்க மாநில தலைவர் வி.என்.கண்ணன் தலைமையில் விருகம்பாக்கத்தில் சுப்பிரமணியசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் சுப்பிரமணிய சாமியின் உருவ பொம்மை மற்றும் படங்களை தீவைத்து எரித்தனர். போராட்டத்தில் மாநில பொருளாளர் வேணுகோபால், பொதுச் செயலாளர் சரவணன், சையது அலி, ஜெகந்நாதன், சுந்தர்ராஜன், பழனி, ராஜபாண்டியன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனை வரும் கைது செய்யப்பட்டனர். http…
-
- 0 replies
- 617 views
-