Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட் 21 செப்டெம்பர் 2021, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர். மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது. மருத்த…

  2. தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 19 செப்டெம்பர் 2021, 03:03 GMT பட மூலாதாரம்,TN ARCHAEOLOGY படக்குறிப்பு, கொடுமணல் அகழ்வுப்பணி தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுக…

  3. உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்: போட்டியிட அனுமதி கிடைத்ததின் பின்னணி என்ன? ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER@ACTORVIJAY காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 15-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி செப்டம்பர் 22 அன்று நிறைவடைகிறது. களத்தில் இறங்கு…

  4. திமுகவின் இரட்டை நிலைபாடு: ஓபிஎஸ் விமர்சனம்! மின்னம்பலம்2021-09-19 பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உரை இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை விதிப்பது மாநில அரசுகளின் உரிமையாகும். அதே நேரம் ஒன்றிய அரசு பெட்ரோல் மீது 500 சதவீதம் மற்றும் டீசல் மீது 1000 சதவீதம் வரை 2014 முதல் வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரியி…

  5. உள்ளாட்சி தேர்தல்களில். தனித்து போட்டியிடவுள்ளதாக கமல் அறிவிப்பு! உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239628

  6. ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !! தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும். By புதிய ஜனநாயகம் - September 16, 2021 0 தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மற்ற கட்ச…

  7. சிவகாசியில் 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற சிறுவர்கள்: என்ன நடந்தது? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகாசியில் விளையாட்டால் ஏற்பட்ட சண்டையில் 3 வயது குழந்தையை பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுவர்களையும் கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் ஊராட்சி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பட்டாசு ஆலையில் வேன் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி கவியரசி. இவர்களுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. …

  8. தி.மு.க vs அ.தி.மு.க: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள் என்ன? களம் யாருக்கு சாதகம்? - தமிழக அரசியல் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ``இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தி.மு.கவுக்கு சாதகமான முயற்சிகள் அரங்கேற உள்ளன,'' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். உண்மையில் என்ன நடக்கிறது? தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கடந்த 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அத…

  9. அதிமுக கூட்டணி முறிவு: மழுப்பும் பாமக மின்னம்பலம்2021-09-15 அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து நேற்று (செப்டம்பர் 14) பாமக தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நம்மால் அதிமுகவும் பிறகட்சிகளும் பலன் அடைந்தார்களே தவிர, பாமகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மேலும் அதிமுகவில் தலைமைப் பிரச்சினை இருப்பதால் அவர்களால் சரியான முடிவுகளை மேற்கொள்ள முடிவதில்லை” என்று விமர்சனம் செய்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) காலை சென்னையில் செய்தியாளர்களிடம் ப…

  10. அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 12 மார்ச் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GNANAM படக்குறிப்பு, சட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், மு. கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்) காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. 1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்…

  11. பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன? புகைப்படங்களும் விவரங்களும் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பாரதியார் மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன். பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூல…

  12. ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபராகக் கருதப்பட்ட கனகராஜ் …

  13. பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி தரும் ஆய்வு ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 14 செப்டெம்பர் 2021, 10:46 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@GAVASTK படக்குறிப்பு, அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்களை படுகொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரின் போராட்டம். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 'எவிடென்ஸ்' என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த…

  14. ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை! ஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐயின் விசாரணையில் உள்ளதாகவும், அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார். அதேநேரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை விரைந்து நடத்தி முடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். அதேவேளை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை அரசு நடத்தும் எனத் தெரிவித்த அவர், குற்…

  15. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் - உதயநிதிக்கு புதிய பதவி, நகைக்கடன் தள்ளுபடி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UDHAYANITHI STALIN தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 60 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி, இணையத்தள குற்றப் புலனாய்வுக்கு தனி மையம், மெரினா கடற்கரையில் உயிர் காப்புப் பிரிவு ஆகியவை அடங்கும். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்றது. மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு கூடிய இந்த கூட்டத்தில், முதலமைச்சரின் துறையான காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறையின் மானியக் கோ…

  16. தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு மசோதா: மாணவர்களை குழப்புகிறதா மு.க. ஸ்டாலினின் திமுக அரசு? சட்டப்படி சாத்தியமா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 20 நிமிடங்களுக்கு முன்னர் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தாக்கல் செய்ய உள்ளது. ` சட்ட சிக்கல்களை களையும் வகையில் மசோதா அமையுமா என்பதைப் பொறுத்தே இது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவரும்' என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவால் என்ன நடக்கும்? தலைமுடிக்கும் சோதனை இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்கள…

  17. எடப்பாடி பழனிசாமி vs மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் பேசியது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில்…

  18. தமிழகத்தின் புதிய ஆளுநராக... ஆர்.என்.ரவி நியமனம். தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாகலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாகலாந்து ஆளுநர் பதவி அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. …

  19. பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’: தமிழக முதல்வர் அறிவிப்பு September 11, 2021 மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு என புரட்சிகரமான பாடல்களை எழுதினார். அவர் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று பாரதியாரின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியின் பெருமையைப் போற்றும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்வர…

  20. வாகனங்களின் வெளிப்புரத்தில்... ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்ட புகைப்படங்களை அகற்ற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு பொலிஸார், போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். வாகனத்தை பொலிஸ் சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் புகைப்படம் ஒட்டுகிறார்கள். மேலும் அரசியல் கட்சியினர், தேர்தல் நேரத்தில் மாத்திரம் கட்சி கொடிகளையும் தலைவர்களின் புகைப்படங்களையும்…

  21. சீமான்: "திராவிடம் என்றால் ஏன் எரிகிறது? உங்கள் செயலை பெரியாரே விரும்ப மாட்டார்" 23 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர் - நாம் தமிழர் கட்சி திராவிடம் என்றால் தனக்கு ஏன் எரிகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்க இலக்கியங்களை சந்திப்பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் கூட்டு வெளியிடாக கொண்டு வர நட…

  22. இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் ; தமிழக முதல்வர் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் எனத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எவருக்கும் சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை மத்திய அரசு மறுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். குறித்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தமிழக சட்ட சபையில் நேற்றையதினம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டபேரவையில் தாக்கல் செய்து பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார். மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த க…

  23. கீழடி நாகரிகம்: "இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்" - மு.க. ஸ்டாலின் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEPT OF ARCHEOLOGY, TAMIL NADU. படக்குறிப்பு, அகழாய்வு. இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறி இனி தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வு முடிவுகளை சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதன் விவரங்களை பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வாசித்தார். "கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துள்ளது. அதே உணர்வைத் தாங்கி தமிழ்நாடு அரசின்…

  24. பாடலாசிரியர், புலமைப்பித்தன் காலமானார். சென்னை: சினிமா பாடலாசிரியரும், தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் வயது மூப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 86. சினிமா பாடலாசிரான கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னை, அடையாறில் உள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக உறுப்புகள் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டா் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், இன்று (செப்.,8) காலை 9.33 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்கு கொண்…

  25. பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன? #FactCheck முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DHILEEPAN RAMAKRISHNAN படக்குறிப்பு, பெரியார் திருச்சியில் பெரியாருக்கு 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு சிலை வைப்பது ஏன் என சில அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்களில் சிலரும் விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைக்கின்றனர். உண்மையில், பெரியாருக்கு சிலை வைப்பது யார்? கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், "பெரியார் சுயமரியாதை பிரச்சா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.