தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
7 அதிசயங்களை விடவும்... அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்! உலகின் 7அதிசயங்களை விடவும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில் என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு அனுமதி பெற்று அவர் நேற்று வராஹி அம்மன், பெருவுடையாரை தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெரிய கோவிலின் சிறப்புக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமையாகும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241449
-
- 0 replies
- 437 views
-
-
கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை தாக்கினாரா அதிமுக நிர்வாகி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ராஜசேகர், அதிமுக ஒன்றிய செயலாளர் கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலரை அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரித்ததாகக் கூறி அந்த தேர்தல் அதிகாரியை ராஜசேகர் கன்னத்தில் அறைந்ததாக கூறும் காணொளி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில்…
-
- 0 replies
- 287 views
- 1 follower
-
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக தமிழ்நாட்டின் வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் யார் என்று தெரியாத சிலர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மீனவருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்களின் மீன்பிடி தொழில் கடற் கொள்ளையர்களால் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின் மின்னம்பலம்2021-09-25 4 மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தனது தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. திமுக மக்களை ஏமாற்றுகிறது என எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் கூறி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில், “மக்களாகிய நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்த…
-
- 0 replies
- 442 views
-
-
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கண்ணகி முருகேசன். தமிழ்நாட்டை உலுக்கிய கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனி தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட கொடுமை நடைப…
-
- 1 reply
- 640 views
- 1 follower
-
-
கடலூர் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி கொடூர கொலை - 3 சிறார்கள் உள்பட நால்வர் கைது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வெட்டிக் கொல்லப்பட்ட காந்திமதி கடலூர் மாவட்டத்தில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஒருவரின் மனைவி வெட்டிக்கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று சிறார்கள் உள்பட நால்வரைக் கைது செய்துள்ளது காவல்துறை. என்ன நடந்தது? கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட குப்பன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி காந்திமதி. இவருக்கு வயது 29. காந்திமதியின் கணவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அன்று கூட்டாளிகள் ஒன்பது பேருடன் சேர்ந்து, தி…
-
- 2 replies
- 911 views
- 1 follower
-
-
பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற 17 வயது மகள் - வழக்குப் பதியாத விழுப்புரம் காவல்துறை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் தமது தந்தையே மது போதையில் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டபோது, தன்னை தற்காத்துக்கொள்ளத் தந்தையை கொலை செய்த 17 வயது சிறுமி. தற்காப்பிற்காக கொலை செய்ததால் இந்திய தண்டனைச் சட்ட விதிப்படி சிறுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்புறையூர் கிராமத்தைச் சார்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 40 வயதாகிறது. …
-
- 1 reply
- 658 views
- 1 follower
-
-
தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 100 இலங்கையர்கள் September 21, 2021 தூத்துக்குடி கடற்கரை வழியாக 100 க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் அண்மைய நாட்களில் இந்தியாவை வந்தடைந்துள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத குடியேற்ற மோசடியில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினரின் அறிக்கைகளை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையர்கள் தூத்துக்குடிக்கு ஐந்து குழுக்களாக உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படகுகளில் வருகை தந்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். தமிழ்நாட்டை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகாவில் உ…
-
- 3 replies
- 676 views
- 1 follower
-
-
நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட் 21 செப்டெம்பர் 2021, 09:13 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TNDIPR படக்குறிப்பு, ஜூலை மாதத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கையை அளித்த நீதிபதி ஏ.கே. ராஜன் மற்றும் குழுவினர். மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை நீட் தேர்வை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அது பற்றிய ஒரு விரிவான ரிப்போர்ட் இது. மருத்த…
-
- 0 replies
- 345 views
- 1 follower
-
-
தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 19 செப்டெம்பர் 2021, 03:03 GMT பட மூலாதாரம்,TN ARCHAEOLOGY படக்குறிப்பு, கொடுமணல் அகழ்வுப்பணி தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் முடிவுக…
-
- 1 reply
- 614 views
- 1 follower
-
-
உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்: போட்டியிட அனுமதி கிடைத்ததின் பின்னணி என்ன? ச.ஆனந்தப் பிரியா பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER@ACTORVIJAY காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 15-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி செப்டம்பர் 22 அன்று நிறைவடைகிறது. களத்தில் இறங்கு…
-
- 1 reply
- 467 views
- 1 follower
-
-
திமுகவின் இரட்டை நிலைபாடு: ஓபிஎஸ் விமர்சனம்! மின்னம்பலம்2021-09-19 பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உரை இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை விதிப்பது மாநில அரசுகளின் உரிமையாகும். அதே நேரம் ஒன்றிய அரசு பெட்ரோல் மீது 500 சதவீதம் மற்றும் டீசல் மீது 1000 சதவீதம் வரை 2014 முதல் வரியை உயர்த்தியுள்ளது. இந்த வரியி…
-
- 0 replies
- 270 views
-
-
உள்ளாட்சி தேர்தல்களில். தனித்து போட்டியிடவுள்ளதாக கமல் அறிவிப்பு! உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1239628
-
- 0 replies
- 343 views
-
-
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி : கார்ப்பரேட் சேவை ! காவியுடன் சமரசம் !! தி.மு.க-விற்கு விமர்சனமற்ற, நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதென்பது கார்ப்பரேட் கொள்ளைக்கும் காவி பாசிசத்துக்கும் உழைக்கும் மக்களை அடிமைப்படுத்துவதாகும்; புரட்சிகர ஜனநாயக சக்திகள் தங்களது முன்முயற்சியைக் கைவிடுவதாகும். By புதிய ஜனநாயகம் - September 16, 2021 0 தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பரவலாக ஒரு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. மற்ற கட்ச…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
சிவகாசியில் 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்ற சிறுவர்கள்: என்ன நடந்தது? பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகாசியில் விளையாட்டால் ஏற்பட்ட சண்டையில் 3 வயது குழந்தையை பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் கிணற்றில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சிறுவர்களையும் கைது செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் ஊராட்சி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் பட்டாசு ஆலையில் வேன் ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி கவியரசி. இவர்களுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. …
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
தி.மு.க vs அ.தி.மு.க: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள் என்ன? களம் யாருக்கு சாதகம்? - தமிழக அரசியல் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ``இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தி.மு.கவுக்கு சாதகமான முயற்சிகள் அரங்கேற உள்ளன,'' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். உண்மையில் என்ன நடக்கிறது? தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கடந்த 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அத…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
அதிமுக கூட்டணி முறிவு: மழுப்பும் பாமக மின்னம்பலம்2021-09-15 அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. இதுகுறித்து நேற்று (செப்டம்பர் 14) பாமக தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நம்மால் அதிமுகவும் பிறகட்சிகளும் பலன் அடைந்தார்களே தவிர, பாமகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மேலும் அதிமுகவில் தலைமைப் பிரச்சினை இருப்பதால் அவர்களால் சரியான முடிவுகளை மேற்கொள்ள முடிவதில்லை” என்று விமர்சனம் செய்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) காலை சென்னையில் செய்தியாளர்களிடம் ப…
-
- 0 replies
- 556 views
-
-
அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 12 மார்ச் 2021 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GNANAM படக்குறிப்பு, சட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், மு. கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்) காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. 1909 செப்டம்பர் 15ம் தேதி இந்தப் பெயருக்கு உரியவர் காஞ்சிபுரத்தில் ஓர் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தபோது அது அடுத்த தெருவுக்கு கூட செய்தி இல்லை. நடராஜன் - பங்காரு அம்மாள் இணையருக்கு ஒரு மகன். அவ்வளவுதான்…
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன? புகைப்படங்களும் விவரங்களும் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பாரதியார் மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன். பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூல…
-
- 8 replies
- 923 views
- 1 follower
-
-
ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ` இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபராகக் கருதப்பட்ட கனகராஜ் …
-
- 0 replies
- 533 views
-
-
பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி தரும் ஆய்வு ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 14 செப்டெம்பர் 2021, 10:46 GMT புதுப்பிக்கப்பட்டது 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@GAVASTK படக்குறிப்பு, அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்களை படுகொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரின் போராட்டம். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 'எவிடென்ஸ்' என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை! ஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐயின் விசாரணையில் உள்ளதாகவும், அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார். அதேநேரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை விரைந்து நடத்தி முடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். அதேவேளை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை அரசு நடத்தும் எனத் தெரிவித்த அவர், குற்…
-
- 0 replies
- 318 views
-
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் - உதயநிதிக்கு புதிய பதவி, நகைக்கடன் தள்ளுபடி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UDHAYANITHI STALIN தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 60 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி, இணையத்தள குற்றப் புலனாய்வுக்கு தனி மையம், மெரினா கடற்கரையில் உயிர் காப்புப் பிரிவு ஆகியவை அடங்கும். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்றது. மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு கூடிய இந்த கூட்டத்தில், முதலமைச்சரின் துறையான காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறையின் மானியக் கோ…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு மசோதா: மாணவர்களை குழப்புகிறதா மு.க. ஸ்டாலினின் திமுக அரசு? சட்டப்படி சாத்தியமா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 20 நிமிடங்களுக்கு முன்னர் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தாக்கல் செய்ய உள்ளது. ` சட்ட சிக்கல்களை களையும் வகையில் மசோதா அமையுமா என்பதைப் பொறுத்தே இது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவரும்' என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவால் என்ன நடக்கும்? தலைமுடிக்கும் சோதனை இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்கள…
-
- 1 reply
- 269 views
- 1 follower
-
-
எடப்பாடி பழனிசாமி vs மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் பேசியது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில்…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-