தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்தும், சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை மூடக்கோரியும் நடிகர் விஜய் உள்பட தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு பந்தல் அமைத்து திரையுலகினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேஆர் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் உள்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110196/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 928 views
-
-
தமிழகத்தில்... "மீத்தேன் வாயு" எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு. தமிழகத்தில், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இதற்கு நடுவேயும், குத்தகை அடிப்படையில் நிலங்களை அரசு கையகப்படுத்தி வந்தது. ஆனால் போராட்டங்களால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் நில கையகப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில், டெல்லியில…
-
- 0 replies
- 928 views
-
-
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில்! – எந்த ஊரில் தெரியுமா? முன்னாள் தமிழக முதல்வரான கருணாநிதிக்கு தமிழக கிராமம் ஒன்றில் கோவில் கட்டப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி. உடல்நல குறைவால் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நாமக்கல் அருகே ஒரு ஊரில் கோவிலே கட்டப்பட்டு வருகிறது. நாமக்கல்…
-
- 11 replies
- 927 views
-
-
இதுவும்தாண்டா போலீஸ்! #கர்நாடக காருக்கு பல மைல் பாதுகாப்பு! கேரளாவைச் சேர்ந்த ஜோயல் பிந்து என்பவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஓணம் விடுமுறை கழிந்து, நேற்று மதுரை வழியாக பெங்களூர் செல்ல பயணித்துக் கொண்டிருந்தவர் மதுரை பைபாஸில் போலீஸால் நிறுத்தப்படுகிறார். அதன்பின் நடந்தவை அவரது மொழியிலேயே: ”இன்று நடந்ததை நான் என்றும் எப்போதும் மறக்க முடியாது. தமிழக காவல்துறை செய்த ஒரு செயல் அந்த அளவுக்கு என்னையும் என் குடும்பத்தாரையும் மனதைத் தொட்ட நிகழ்வாக அமைந்துவிட்டது. பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுப்பதில் தமிழக காவல்துறையின் தீரமும், அர்ப்பணிப்பும், நேர்மையும் எங்களை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஓணம் …
-
- 4 replies
- 927 views
-
-
`தமிழ்நாடு என்ன அடிமை தேசமா?' - - அஞ்சல்துறை தேர்வில் தமிழ் ரத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! தேர்தல் முடிந்து நாளை அஞ்சல்துறை தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இரண்டு நாள் முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சல்துறை இந்திய அஞ்சல்துறை தொடர்பாக போஸ்ட்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடியாது என்று நேற்று முன்தினம் மத்திய அரசு தபால்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அஞ்சல்துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான முதல்தாளுக்கான தேர்வு இனிமேல் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்த வேண்டும். இரண்டாம் தாளுக்கான தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் ந…
-
- 2 replies
- 927 views
-
-
இது டிஜிட்டல் இந்தியாவிற்கே கேவலம்..! முகிலன் எங்கே?
-
- 2 replies
- 926 views
-
-
திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்து தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சி ! திருச்சி மத்திய சிறை, சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேருக்கு மேல் தற்கொலை முயற்சிகளில் ஈடுபாட்டனர் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. தம்மை விடுதலை செய்யும்படி முன்வைத்த கோரிக்கைகள் பலனளிக்காமையால் இன்று அவர்களில் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனரெனத் தெரிகிறது. சிலர் அளவுக்கதிகமான துக்க மாத்திரைகளை விழுங்கியும், சிலர் தமது வயிறுகளைக் கிழித்துக்கொண்டும் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டதாக அறிவிக்கப்படுகிறது. இவர்களில் பலர் நீண்டகாலமாக இம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும், பலர் தம்மீது போய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனக் கூறுவதா…
-
- 13 replies
- 926 views
-
-
நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு - 'மிஷன் சௌத் இந்தியா'வின் ஒரு பகுதியா? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@NARENDRAMODI/TWITTER தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத…
-
- 10 replies
- 925 views
- 1 follower
-
-
தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம்: ரஜினிக்கு கமல் மறைமுக ஆதரவு தமிழ் உணர்வு கொண்ட யாரும் தமிழகத்தை ஆளலாம் என்று கமல் பேசியிருப்பது ரஜினிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது. கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது. தமிழக அரசியலை பொறுத்தவரையில் யாருமே தற்போது அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழ் உணர்வு கொண…
-
- 3 replies
- 925 views
-
-
சென்னை: இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், ''இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை தமிழர் அமைப்புகள் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களை ஆதிக்க சாதி வெறியோடு தரக்குறைவாக பேசுவது, விமர்சிப்பது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது அரசிய…
-
- 10 replies
- 925 views
-
-
தமிழகத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை காணொளியாக பதிவு! தமிழகத்தில் வாக்கு எண்ணும் நடவடிக்கை காணொளியாக பதிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து இன்று (புதன்கிழமை) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அத்துடன் வாக்கு எண்ணிக்கையை 88 பார்வையாளர்கள் கண்காணிக்கவுள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் சேர்த்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்…
-
- 2 replies
- 925 views
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் கையில் இரட்டை ரிமோட்! ‘‘அ.தி.மு.க-வின் சுப்ரீம் ஸ்டார் ஆகிவிட்டார் தினகரன். அவர் கையில் இப்போது இரண்டு ரிமோட்கள்’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘விளக்கம் ப்ளீஸ்’’ என்றோம். ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை உள்ளடக்கிய ஐவர் குழுதான் அ.தி.மு.க-வின் நிர்வாகத்தை இப்போது கவனிக்கிறது. இந்தக் குழுவுக்கு மேலே, தினகரன் சுப்ரீம் பவரில் இருக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார். சசிகலா சிறைக்குச் செல்லும்முன், அவரிடமிருந்து கட்சி நிர்வாக ரிமோட்டையும், ஆட்சி நிர்வாக ரிமோட்டையும் தன்வசம் வாங்கிக்கொண்டார் தினகரன், சசிகலா, ஒரு ரகசிய உத்தரவையு…
-
- 0 replies
- 925 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,மாயகிருஷ்ணன். க பதவி,பிபிசி தமிழுக்காக 7 ஜூன் 2023 விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- ஆம் ஆண்டு தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தர்மர் பட்டாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோவிலுக்கு சீல் வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரங்களை அறிய நேரடியாக மேல் பாதி கிராமத்திற்கு சென்றோம். என்…
-
- 2 replies
- 925 views
- 1 follower
-
-
கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளைக் கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் நிறுத்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார். படத்தின் காப்புரிமை Getty Images வேண்டுகோள் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழுக்காக அளித்த பேட்டியில், 'பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறாது என்றாலும் ஓரளவ…
-
- 0 replies
- 924 views
-
-
`துபாய் அரசு கற்றுக்கொடுத்த பாடம் இது!' - ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும் Chennai: நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மறைவு திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகியிருக்கின்றன. துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை நேற்று வெளியானது. அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்…
-
- 2 replies
- 924 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்கா…
-
- 1 reply
- 924 views
-
-
'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா 'முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'முதல்வர் ஆனாலும் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தீபா. நேற்று தி.நகர் வீட்டில் தன்னை சந்தித்தவர்களிடம் இதனைத் தெரிவித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. " ஜெயலலிதா அளவுக்கு மக்களை ஈர்த்த தலைவராக சசிகலா இல்லை என்ற குறையைப் போக்குவதற்காக, பதவியேற்பு விழாவில் விரிவாகப் பேச…
-
- 2 replies
- 924 views
-
-
பட மூலாதாரம்,E V VELU கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திமுகவின் மூத்த தலைவர்களில் பலம் பொருந்திய நபரான எ.வ.வேலு(72) தற்போது வருமான வரித்துறை சோதனையை சந்தித்து வருகிறார். அமைச்சர் வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது. திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே மூத்த அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியத…
-
- 2 replies
- 924 views
- 1 follower
-
-
இரட்டை இலை துளிர்த்த கதையும் துவண்ட கதையும்! திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளரின் செல்வாக்கு, சாதி பலம் என்பன உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார். அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தி…
-
- 0 replies
- 924 views
-
-
'வைகோவை இப்போதுதான் புரிந்து கொண்டேன்!' - வீரலட்சுமியின் ஆதங்கம் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்திருக்கிறார் தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி. ' வைகோவிடம் கொள்கை முரண்பாடு ஏற்பட்டதால் விலகுகிறோம். அவரைப் பற்றி இப்போதுதான் புரிந்து கொண்டோம்' என்கிறார் வீரலட்சுமி. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் முயற்சியால், தமிழர் முன்னேற்றப்படையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் அங்கம் வகித்தது. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியை ஒதுக்கினார் வைகோ. பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட வீரலட்சுமி, 20 ஆயிரம் ஓட்டுக்களைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இந்நிலையில், இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில், ' மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' எ…
-
- 1 reply
- 923 views
-
-
இலங்கைச் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும், பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தமிழக கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கின்ற அநுர குமார திஸாநாயக்கவிற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இலங்கை சிறைத்துறை நாளை முன்னிட்டு 350 சிறைக்கைதிகளை இலங்கை அரசு பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய போவதாக அறிவித்தது. புதிய ஜனாதிபதிக்கு நன்றி இதில் ஒரு வருடமாக இலங்கைச் சிறையில் இருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த ரொபர்ட் என்ற கடற்றொழிலாளரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த க…
-
- 0 replies
- 923 views
-
-
தனது திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பாக ரஜினிகாந்த் தொடர்ந்திருந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.5 லட்ச ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ரஜினிகாந்த் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், அந்தத் திருமண மண்டபத்திற்கு தான் தொடர்ந்து வரி செலுத்திவருவதாகவும் கடைசியாக பிப்ரவரி மாதம் வரி செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவலின் காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மார்…
-
- 3 replies
- 922 views
-
-
சாதா திருடர்கள் மாட்டும் போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு திருடனைப் பிடி என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களை விட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பாரத்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள். அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேசமாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி. நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் க…
-
- 1 reply
- 920 views
-
-
பரோலில் வெளியே வந்த நளினி மின்னம்பலம்2021-12-27 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி ஒரு மாத பரோலில் இன்று (டிசம்பர் 27) வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு ஒன்றைக் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்தது. இதனிடையே கடந்த 2021 மே 28ஆம் தேதி பர…
-
- 2 replies
- 920 views
-
-
‘இரண்டே வாரங்களில் ரஜினியின் புதுக்கட்சி வரும்’ இன்னும் இரண்டே வாரங்களில், நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய அரசியல் கட்சி, கொடி, கொள்கைகளை அறிவிப்பார் என்று, காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில செய்திச் அலைவரிசையில், “ரஜினிநேதா (தலைவர் ரஜினி) அரசியல் வருகை” என்ற தலைப்பில், ரஜினிக்கு நெருக்கமான நண்பர்கள், தமிழருவி மணியன் போன்ற தலைவர்களிடம் பேசி, ரஜினியின் அரசியல் வருகையை உறுதி செய்தது. இவர்களில், இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் கட்சி அறிவிக்கப்பட்டுவிடும் என்றும் ரஜினி கட்சியின் கொள்கைகள் என்னவென்பது குறித்தும் விரிவாக தமிழருவி மணியன் கூறியுள்ளார். “இன்னும் 2 வாரங்களில், ரஜினி தனத…
-
- 7 replies
- 920 views
-