அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Getty Images முத்தலாக் மசோதா குறித்த விவாதம் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடந்து முடிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்த நிலையில் மசோதா நிறைவேறியது. இந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மசோதாவை வாக்கெடுப்புக்கு விடுவதாக முறைப்படி அறிவித்தார். இதையடுத்து அவைத் தலைவராக உள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு எதிர்தக் கட்சித் தலைவர் குலாம் நபி ஆச…
-
- 0 replies
- 470 views
-
-
முத்தலாக்: முஸ்லிம் பெண்களின் நிலை இந்த 5 ஆண்டுகளில் மாறியதா? நியாஸ் ஃபரூக்கி பிபிசி, புது டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முஸ்லிம் பெண்கள் - கோப்புப்படம் 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உடனடி முத்தலாக், அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான அஃப்ரீன் ரெஹ்மான்,இந்த தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது வாழ்க்கை நிலையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அவருக்கு முத்தலாக் கொடுத்திருந்த கணவர் அவருடன் சமாதானம் செய்ய மறுத்துவிட்டார். ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. எனி…
-
- 1 reply
- 471 views
- 1 follower
-
-
முத்தையா முரளீதரனின் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக நிலம் ; வெடித்தது புதிய சர்ச்சை 09 Mar, 2025 | 12:51 PM இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரனின் சிலோன் பெவெரேஜர்ஸ் நிறுவனத்திற்கு காஷ்மீரில் இலவசமாக 25 ஏக்கர் நிலத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் யூசுவ் தரிகாமி இந்த விடயம் குறித்து சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார் ஒரு பைசா கூட பெறாமல் இலங்கையின் முன்னாள் வீரர் ஒருவருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். தரிகாமியின் கரிசனையை பகிர்ந்துகொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம் அஹமட் இத…
-
- 0 replies
- 204 views
-
-
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் பிடிஐ குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி : கோப்புப்படம் முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிசிச்ைச பெற்று வந்தநிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி(வயது86) மூளையில் சிறிய கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது பிரணாப் முகர்ஜியின் மூளையில் இரு…
-
- 6 replies
- 1.2k views
-
-
முன்னாள் சிபிஐ தலைமை இயக்குனர் தற்கொலை! மின்னம்பலம் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் நாகாலாந்து ஆளுநருமான அஸ்வனி குமார் நேற்று (அக்டோபர்7) புதன் கிழமை சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது அதிகார மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. சிம்லா போலீஸ் கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா முன்னாள் ஆளுநரான அஸ்வனிகுமார் தூக்கில் தொங்கியிருப்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என்றார் இமாச்சல பிரதேச காவல்துறை வட்டாரங்களின்படி, அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்ப…
-
- 0 replies
- 902 views
-
-
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது…
-
- 0 replies
- 361 views
-
-
முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை! கடந்த ஆண்டு மாணவர் எழுச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்துள்ளது. ஹசீனா இல்லாத நிலையில் நடத்தப்பட்ட பல மாத கால விசாரணையைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024 ஆகஸ்ட் 5, அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்தபோது நாடுகடத்தப்பட்டு டெல்லியில் வசித்து வரும் 78 வயதான அவாமி லீக் கட்சித் தலைவர், வன்முறையைத் தூண்டுதல், போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவு பிறப்பித்தல் மற்றும் மாணவர்கள் தலைமையிலான கிளர்ச்சியின் போது அட்டூழியங்களைத் தடுக்கத் தவறுதல் ஆகிய மூன்று குற்றச்சா…
-
- 4 replies
- 247 views
- 1 follower
-
-
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார் .. டிஸ்கி : 2009 மே மாதம் நினைவுக்கு வருது ..
-
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ., கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்கள் பெற்றதில் முறைகேடு, அரசு ரகசியங்களை கசிய விட்டது உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த…
-
- 0 replies
- 108 views
-
-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமர் இருந்த மன்மோகன் சிங், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்தவர். அத்துடன் மத்திய நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 193 views
-
-
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார். பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்: மறைவுக்கு மோடி இரங்கல்..! இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி தனது, 82 வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சருமாக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்காலத்தில் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் நிதித்துறை பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. …
-
- 0 replies
- 379 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்! முன்னாள் மத்திய அமைச்சரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் 88 வயதில் காலமானார். அல்சைமர் என்ற மறதி நோயால் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை காலமானார். 1967 முதல் 9 முறை மக்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்ட ஜார்ஜ், 1977-ல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும், 1989-ல் வி.பி.சிங் அமைச்சரவையிலும், 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையிலும் முக்கிய இலாகாக்களை வகித்தவர். சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் பெர்னாண்டஸ். https://tamil.thesubeditor.com/india/10359-former-defence-minister-george-fernandes-passes-away-at-age-88.html டிஸ்கி : ஆழ்ந்த அஞ்சலிகள். . இவ…
-
- 13 replies
- 1.8k views
-
-
முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் போதையில் இருந்த மகனால் அடித்து கொலை கொல்லம், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் ஜெயமோகன் தம்பி. கேரளாவின் மணக்காடு பகுதியில் வசித்து வரும் இவர் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து துணை மேலாளராக ஓய்வு பெற்றவர். கடந்த 2 வருடங்களுக்கு முன் இவரது மனைவி அனிதா காலமானார். இதனால் அவர் தொடர்ந்து மனவருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் அஸ்வின், ஓட்டலில் ‘செஃப்’பாக இருந்து வருகிறார். எனினும், பண தேவைக்காக தனது தந்தையை சார்ந்தே இருந்துள்ளார். மனைவி மறைவு மற்றும் மகனின் நிலை ஆகியவற்றால் வருத்தத்தில் இருந்த ஜெயமோகன் தனது மகனுடன் சேர்ந்து மது குடிக்க ஆரம்பித்த…
-
- 0 replies
- 392 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் தாவார் சந்த் கேலாட் நாடாளுமன்றத்தின் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. …
-
- 1 reply
- 803 views
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும் தலைமைத் தளபதி செயற்படுவார் எனவும் அவர் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும் தெரியவந்துள்ளது. எனினும் முதலாவது தலைமைத் தளபதி யார் என அறிவிக்கப்படவில்லை. தற்போதைய இராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்…
-
- 0 replies
- 228 views
-
-
முப்படைகளும் தயார்...கர்ஜிக்கும் இந்தியா...! எத்தனை நாடுகள் வந்தாலும் பதிலடி உண்டு..! ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று இரவு கூடுகிறது , இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், அதில் தங்கள் நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் மிக ரகசியமாக விவாதிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், கூட்டம் தொடர்பான தகவல்கள் வெளியில் தெரியாத அளவிற்கு அதில் ரகசியம் காக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்துசெய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டத்தை தெரிவித்ததுடன், சினாவுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்…
-
- 0 replies
- 1.4k views
-
-
முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடியில் போர் தளவாடங்கள் - மத்திய அரசு ஒப்புதல் சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 05:30 AM புதுடெல்லி, லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் கடந்த மாதம் 15-ந்தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் அங்கு அம…
-
- 0 replies
- 336 views
-
-
முப்பதிற்கும் மேற்பட்ட... இந்திய மீனவர்களை, கைது செய்தது பாகிஸ்தான்! பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பாகிஸ்தான் சிறப்புப் பொருளாதார மண்டல கடற்பகுதிக்குள் கடந்த 18 ஆம் திகதி ரோந்து சென்ற போது ஊடுருவிய 5 இந்திய மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இருந்த 31 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தப் படகுகள் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1268200
-
- 0 replies
- 187 views
-
-
மும்பை – வெள்ளத்தில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் சிக்கியது – 500 பேர் மீட்கப்பட்டனர்… July 27, 2019 மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. கனமழையால் சாலைகள், தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. இதற்கிடையே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளத்தில் சிக்கியது. அதில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர். பயணிகளை மீட்க தேசிய பேரிடர் மீட்பு மற்றும் ஆர்.பி.எப்., படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், கடற்படை ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்துசென்றன. …
-
- 0 replies
- 396 views
-
-
31 JUL, 2023 | 10:46 AM மும்பை: ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் பயணித்த 4 பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ளார். ஓடும் ரயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளார் காவலர். மும்பையில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ரயில் நிலையம். உயிரிழந்த நால்வரில் ஆர்பிஎஃப் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் அடக்கம். மற்ற மூவரும் ரயிலில் பயணித்த பயணிகள். த…
-
- 4 replies
- 400 views
- 1 follower
-
-
மும்பை கப்பல் விபத்து : உயிரிழப்புகளின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு! மும்பையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. டாக்தே புயல் காரணமாக மும்பை கடலுக்குள் எண்ணெய் கிணற்றில் பணியாற்றிய தொழிலாளர்கள் மிதவை கப்பல் ஒன்றில் தங்கியிருந்தனர். குறித்த மிதவை கப்பலானது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில், அதில் பணியாற்றிய 261 பேரும் நீரிழ் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. குறித்த நபர்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 186 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1217260
-
- 0 replies
- 222 views
-
-
மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக.... நடிகை, நக்மா நியமனம்! மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரஸ் கட்சி துணை தலைவராக நடிகை நக்மா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மும்பை காங்கிரஸ் புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளாா். இதன்படி மும்பை காங்கிரசுக்கு 6 மூத்த துணை தலைவர்கள், 15 துணை தலைவர்கள், 42 பொது செயலாளர்கள், 76 செயலாளர்கள், 30 நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முன்னாள்அமைச்சர் பாபா சித்திக், முன்னாள் எம்.எல்.ஏ.மதுசவான், கணேஷ் யாதவ், வீரேந்திர பாக்சி, ஜெனட் டிசோசா…
-
- 5 replies
- 574 views
-
-
Published By: RAJEEBAN 18 DEC, 2023 | 02:46 PM இந்தியாவால் அதிகம் தேடப்படும் பாதள உலக தலைவர் தாவூத் இப்ராஹிம் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பாய் குண்டு வெடிப்பு சூத்திரதாரி தாவுத் இப்ராஹிம் நஞ்சூட்டப்பட்டதால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நஞ்சூட்டப்பட்டமை தெரியவந்ததும் அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார் என தகவல்கள் வெளியாகின்றன. பாக்கிஸ்தானின் கராச்சி மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார் என நம்பகத்தன்மை மிக்க தகவல்கள் தெரிவித்துள்ளன என இந்தியாவின் ஏபிபீ லைவ் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை இதனை உறுதிப்படுத்தும் தகவல்கள் எவைய…
-
- 1 reply
- 379 views
- 1 follower
-
-
ஆசியாவின் மிக பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தாராவியில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். மும்பை தமிழர்களின் தாயகமாக கருதப்படும் தாராவியில், சுகாதார பிரச்சனைகள், அதிக மக்கள்தொகை, போதுமான கழிப்பறைகள் இல்லாதது, என ஏராளமான பிரச்சனைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து மக்கள் இங்கு வாழ என்ன காரணம்? என்ன தான் சாதி இருந்தாலும் , ஒரு தமிழனுக்கு பிரச்சனை வந்தால் எல்லாரும் தமிழின மாக ஒற்றுமை இருப்பது... மகிழ்ச்சி ! ஆனால், ஒருவர் கூறியது தமிழர்கள் தாராவியை விட்டு போகிறார்கள் என, எங்கு என சொல்லவில்லை.
-
- 1 reply
- 636 views
-