Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆடுகளத்தில் ஓர் போர்க்களம் - புறக்கணிக்குமா இந்தியா ? 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று துபாயில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள நிலையில் இப் போட்டியை இந்திய அணி புறக்கணிக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான், கிரிக்கெட் உலகிலும் சரி இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளிலும் சரி எப்போதும் பனிப்போருடன் முறுகல் நிலை நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந் நிலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கடுமையான சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியர்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. …

  2. 1962-ஐ விட இந்திய ராணுவம் இப்போது நவீனமடைந்துள்ளது; சீனாவுக்கு எதிராக மத்திய அரசு கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியா கடினமான, கறாரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர், கேப்டன் அமரீந்தர் சிங் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அதாவது பேச்சுவார்த்தைகளுக்கு சீனா ஒத்துவரவில்லையென்றால் கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கிறார் அமரீந்தர் சிங். இது தொடர்பாக வீடியோ செய்தியாளர்கள் சந்திப்பில் அமரீந்தர் கூறியதாவது: இரண்டு இறையாண்மை பொருந்திய நாடுகளும் ராஜீய ரீதியாக இதற்கு தீர்வு காண வேண்டும். இந்தியா போரை விரும்பவில்லை, ஆனால் எல்…

  3. உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும், ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது. டெல்லியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அந்த மண்டபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட, 18 தொன் எடையிலான பிரமாண்ட நடராஜர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாரத் மண்டபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நடராஜர் சிலை, உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சோழர்களின் தலைநகரான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலை எனும் பகுதியில் தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. வெ…

  4. படத்தின் காப்புரிமை Isro பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் - 2 செயற்கைக்கோள் ஏவப்படுவது தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில், கவுன்ட் - டவுன் நிறுத்தப்பட்டது. நிலவில் ஊர்ந்துசெல்லும் வாகனத்தை இறக்கி, ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து ஏவப்படவிருந்தது. …

  5. காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவிற்கு சொந்தமானவை – இந்தியா திட்டவட்டம்! பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பகுதிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அனுரக் ஸ்ரீவாத்சவா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் கில்ஜித் -பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து கொடுக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனுராக் ஸ்ரீவாத்சவா, “ பாகிஸ்தானால் பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கில்ஜித் -பல்திஸ்தானை உள்ளடக்கிய லடாக் மற்றும் ஜம்மு – காஷ்மீர் முழு…

  6. எந்த நாட்டுப் படைகளுக்கும் மாலைதீவில் அனுமதி இல்லை – மாலைதீவு ஜனாதிபதி! மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்களுடன் மாலைதீவின் வெளியுறவுக் கொள்கையை ஈடுபடுத்த விருப்பம் இல்லை என்றும் புவிசார் அரசியல் போட்டிக்குள் சிக்கிக்கொள்ள மாலைதீவு மிகவும் சிறியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலைதீவு ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1359020

  7. சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோ…

  8. இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றுமொறு குழந்தை- மீட்கும் பணி தீவிரம் உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்கும் பணியினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2021/1222553

  9. பாகிஸ்தானில் இந்து சிறுமிகளுக்கு கட்டாய திருமணம் – விசாரணைக்கு இம்ரான் கான் உத்தரவு பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இந்து சிறுமிகளை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவ்விரு சிறுமிகளையும் உடனடியாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிந்து மாகாண அரசுக்கு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசு தீவிரம் காட்ட வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்குட்பட்ட கோட்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த…

    • 2 replies
    • 1.4k views
  10. இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே பற்றி அதிகம் அறியாத சில தகவல்கள் 30 ஏப்ரல் 2022 பட மூலாதாரம்,INDIAN ARMY படக்குறிப்பு, இந்திய ராணுவ தலைமைத் தளபதிக்குரிய பேட்டனை, பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து பெறும் ஜெனரல் மனோஜ் பாண்டே (இடது) இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சம்பிரதாய நடைமுறைப்படி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து மனோஜ் பாண்டே ராணுவ ஜெனரலுக்கான பேட்டனை பெற்றுக் கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார். முன்னதாக, பதவியில் இருந்து ஓய்வு …

  11. ரவி பிரகாஷ் பிபிசி ஹிந்தி படத்தின் காப்புரிமை EPA இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களைவையில் குடியுரிமை சட்…

  12. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை! கொரோனா சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (திங்கட்கிழமை) நிலைவரப்படி 1.9 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 16 பேர் கொண்ட மருத்துவர் நிபுணர் குழு அறிக்கையொன்றை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிட…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எல்லை வரையறை குறித்த சீனா-பூடான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கட்டுரை தகவல் எழுதியவர், ராகேவேந்திர ராவ் பதவி, பிபிசி நிருபர் 17 நிமிடங்களுக்கு முன்னர் பூடான் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயும் பல வருடங்களாக இருந்துவரும் எல்லைப் பிரச்னை முடிவுக்கு வரலாம் என ஊகங்கள் எழுந்து வருகின்றன. மேலும், சீனவுக்கும் பூடானிற்கும் இடையே விரைவில் தூதரக உறவுகள் (Diplomatic Relations) ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவிற்கு மேலும் தலைவலியைதான் தரப்போகின்றன. சீனாவிற்கும் பூடானிற்கும் …

  14. “அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” - இளையராஜா சென்னை: “இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப் பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது” என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் ‘சென்னையில் அயோத்தி’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இளையராஜா, “இன்றைய நாள் சரித்திரத்தில் முக்கியமான நாள். ராமர் கோயில் நிகழ்வு பிரதமர் மோடி…

    • 2 replies
    • 357 views
  15. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. "மிதமான அறிகுறிகள் தென்பட்டப்பின் எனக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்," என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி - ட்விட்டரில் அறிவிப்பு - BBC News தமிழ்

  16. பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக 19 வயது பெண் அளித்த போலி புகார்: கண்டுபிடிக்க அலை மோதிய 1000 போலீசார் 22 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சித்தரிக்கும் படம் தனது காதலரை மணக்கும் நோக்கத்தில், தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக நாக்பூரைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் போலியாக புகார் அளித்துள்ளார் என்கிறது பிடிஐ செய்தி முகமை. இந்தப் புகாரால் நாக்பூர் காவல் ஆணையர் அமிதேஷ் குமார் உட்பட காவலர்கள் 1000 பேர் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் போலி புகார் அளிப்பதன் மூலம் அப்பெண் தமது காதலரை மணக்க எப்படி திட்டமிட்டிருந்தார் என்ற தகவலை காவல்துறை முழுவதுமாக வெளிய…

  17. டெல்லியில் இந்திய குடியரசுத் தின கொண்டாட்டம்! January 26, 2023 இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். முன்னதாக, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜன…

  18. இந்தியா – பாகிஸ்தான் பதற்றமான நிலைமை: ஐ.நா கண்டிப்பு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடிக்கும் பதற்றமான நிலைமையை ஐ.நா கண்டித்துள்ளது. ஐ.நாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த ஐ.நா ஊடாக் பேச்சாளர் ஸ்டெப்பான் டுஜாரிக் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானே முழு காரணம் என இந்தியா தெரிவித்து வரும் நிலையில் அதனை பாகிஸ்தான் மறுத்து வருகின்றது. இந்த நிலையில், ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை தணிக்க ஐ.நாவின் தலையீடு அவசியம் என இரு நாடுகளும் கோரியிருந்தமை குறிப்பிடதக்கது. இதுகுறித்து ஐ.நா செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டரெஸ், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையி…

  19. புதுடில்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2,500 பேருக்கான தனிப்பிரிவுகளை ஏற்படுத்த முப்படைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனா உட்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வரும் உயிர் கொல்லியான 'கொரோனா வைரஸ்' தாக்குதலுக்கு பலியானவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை 2,943 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவிலும் 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது நேற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியில் ஒருவருக்கும், தெலுங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 18ம் தேதி விசாகபட்டினத்தில் நடைபெறவிருந்த சர்வதேச கடற்படை…

    • 2 replies
    • 323 views
  20. மனைவி கொலை: பத்து வருடங்களுக்கு பிறகு போலீஸிடம் பிடிபட்ட தலைமறைவான கணவர் பட மூலாதாரம்,BHARGHAV PARIKH 4 மணி நேரங்களுக்கு முன்னர் ’நான் வேறு ஏதேனும் வேலைக்கு சென்றிருந்தால், என்னை யாராவது அடையாளம் கண்டிருப்பார்கள். அதனால் காவல் துறையினரிடம் நான் பிடிபட்டிருக்கலாம். அதனால்தான் நான் வெளியுலகை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, ஒரு உணவு விடுதியின் கொல்லைப்புறத்திலேயே தங்கினேன். பத்து ஆண்டுகளாக இப்படிதான் நாட்களை கடத்தி வந்தேன். ஆனால் இப்போது காவல் துறையினர் என்னை பிடித்து விட்டார்கள்’ என்கிறார் பீம்சிங் பட்டேல். பீம்சிங் பட்டேல் தனது குற்றத்தை ஒத்துக்கொண்ட பிறகு, ஆமதாபாத் குற்றப்பிரிவில் ஆஜர்படுத்தப்ப…

  21. 22 APR, 2024 | 11:41 AM பெங்களூரு: கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நேஹா என்ற மாணவியை சக மாணவர் ஃபயாஸ் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கொலையாளி ஃபயஸின் தந்தை பாபா சாஹேப் சுபானி தனது மகனின் செயலுக்காக இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹுப்ளியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன் ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத், ஹுப்பள்ளியில் உள்ள கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃபயாஸ் (23) என்ற மாணவர் பல்கலைக்கழக வளா…

  22. குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தந்த அவர், சபர்மதி காந்தி ஆசிரமம், மொதோரா மைதானம், தாஜ்மகால் ஆகிய இடங்களுக்குச் சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டொனால்ட் டிரம்புக்கு இன்று இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலங்கானா முதல்வர் சந்திர…

    • 2 replies
    • 788 views
  23. இந்திய மாணவர்கள் எவரும்... வீட்டை விட்டு, வெளியே வர வேண்டாம்! இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. சுமி நகரில் சுமார் 700 மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில். வாகன வசதி கிடைக்காத அவர்கள் நடந்தே நாட்டின் எல்லை வரை செல்ல முடிவெடுத்து ஒரு குழுவாக சென்றுள்ளனர். இது தொடர்பாக படங்கள் வெளியான நிலையில் குண்டுகள் பொழியும் சூழலில் மாணவர்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் இந்திய தூதரகம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுடன் தூதரகங்கள் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர்களுக்கு அழ…

  24. தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார். தாய்லாந்துக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற சவாஸ்தி பிஎம் மோடி எனும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அவர் வெளியிட்டார். மேலும் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு குருநானக்கின் 550ஆவது பிறந்த தினத்தையொட்டி நினைவு நாணயத்தையும் மோடி வெளியிட்டார். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பேசிய மோடி வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். இந்தியா-தாய்லாந்து இடையே நிலவும் சிறந்த நட்புறவை க…

  25. பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி damithFebruary 12, 2024 பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (11) முடிவடைந்த நிலையில், சிறை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் பெரும்பான்மையாக 264 ஆசனங்களில் 101 இடங்களை வென்றிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்று 60 மணி நேரத்திற்குப் பின்னரே இறுதி முடிவு வெளியாகியுள்ளது. இந்தத் தாமதம் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இதில் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரீபின் கட்சி பாராளுமன்றத்தில் மிகப்பெரிய ஒற்றை கட்சியாக 75 இடங்களை வென்றுள்ளது. எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை வெல்லாத நிலையில் கூட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.