Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புல்டோசர்கள்: கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் வாகனம் அவற்றை இடிக்கும் ஓர் ஆயுதமாக மாறியது எப்படி? கீதா பாண்டே பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட புல்டோசர்கள், வீடுகள், அலுவலகங்கள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்க உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சமீப ஆண்டுகளில், புல்டோசர்கள் சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்தின் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் அழிக்க இந்தியாவின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் அரசு கைகளில் ஆயுதமாக மாறி விட்டதாக பலர் கூறுகின்றனர். இந்த …

  2. கடந்த சில நாள்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதத்திற்கு வந்த பொதுநல வழக்கு ஒன்றில் கருத்து கூறிய நீதிபதிகள், திருமணத்திற்குப் பின்பு கணவன், மனைவியின் அனுமதியின்றி கட்டாய உறவுகொள்வதை Marital rape ஆகக் கருதுவது பற்றி ஆலோசித்தனர். அதை சட்டப்படி குற்றமாக்குவது குறித்து சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது பற்றியும் கூறியிருந்தனர். இது ஆண்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், சமூக வலைதளங்களில் திருமணத்தை புறக்கணிக்கும் #MarriageStrike என்ற ஹேஷ்டேக் ஆண்களால் டிரெண்ட் செய்யப்பட்டது. Sexual Harassment (Representational Image) இதனைத் தொடர்ந்து, இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன் பதிலைச் சமர்ப்பித…

  3. பட மூலாதாரம்,X/CMPRACHANDA படக்குறிப்பு, சீனா - நேபாளம் இடையேயான ரயில்வே திட்டத்தை தனது பதவிக் காலத்தில் தொடங்க முடியும் என்று பிரசந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ஏழு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீனப் பிரதமர் லீ சியாங்கின் அழைப்பின் பேரில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், செப்டம்பர் 23 ஆம் தேதி, தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்தார். செப்டம்பர் 30 வரை பிரசந்தாவின் சீனப் பயணம் தொடரும். நேபாளத்தின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரசந்தா சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். முன்னதாக அவர் இந்த ஆண்டு மே 31 முதல் ஜூன் 3 வரை இ…

  4. பட மூலாதாரம்,MACARTHUR FOUNDATION & SHAILAJA PAIK படக்குறிப்பு, பேராசிரியர் ஷைலஜா பாயிக் கட்டுரை தகவல் எழுதியவர், விநாயக் ஹோகடே பதவி, பிபிசி செய்தியாளர் 6 அக்டோபர் 2024, 04:37 GMT "நாங்கள் வசித்த பகுதியில் தண்ணீர் வசதி இருக்காது. கழிவறைகள்கூட இல்லை. எங்கள் குடியிருப்புகளைச் சுற்றி குப்பை மேடுகள் சூழ்ந்திருக்கும். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய அந்தக் காலகட்டத்தைப் பற்றிய நினைவுகள் இன்னமும் என்னை நிலைகுலைய வைக்கிறது.” 'கழிவறை வசதிகூட இல்லாமல் இருந்த நகர்புற குடிசைப் பகுதியில் இருந்து அமெரிக்காவில் பேராசிரியராக' பணியில் அமர்ந்தார் ஷைலஜா பாயிக். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. தற்போது ம…

  5. 29 SEP, 2024 | 09:57 AM பெங்களூரு: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக இந்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ''மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றுள்ளனர். தேர்தல் …

  6. பட மூலாதாரம், SANSADTV படக்குறிப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, 130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார் 20 ஆகஸ்ட் 2025, 14:52 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார் மசோதாவின் வரைவின்படி, ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் …

  7. இலங்கைக்கு உதவிகள் தொடரும்.. அரசியல் நிகழ்வுகளை கவனிக்கிறோம்.. இந்தியா அதிரடி அறிக்கை டெல்லி: இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் தொடரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்த மாற்றம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. பேசவில்லை அண்டை நாடான இலங்கையில் இத்தனை பிரச்சனைகள் நடக்கும் நிலையில் இந்தியா அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இந்திய அரசியல் தலைவர்கள் தனி தனியாக நிறைய …

  8. 16 MAY, 2025 | 03:44 PM புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் ஒன்றான குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில்உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர்தான். முழு படம் பின்னர் வெளிப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போ…

  9. “ஓகஸ்ட் 23” இந்தியாவின் தேசிய விண்வெளி தினம் என பிரகடனம்! August 27, 2023 “ஓகஸ்ட் 23” இந்தியாவின் “தேசிய விண்வெளி தினம்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ அறிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகத்திற்கு சென்று உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார். BRICS மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கிரேக்கத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, இன்று இந்தியா திரும்பியுள்ளார். சந்திரயான்-3 வெற்றிக்கு காரணமான குழுவினரை சந்திப்பதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். இதேவேளை, நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு Shiv Shakti Point என பெயர் சூட்டப்படுவதா…

  10. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, அனில் அம்பானி குழுமத்தின் சில நிறுவனங்கள் திவால்நிலை செயல்முறையை எதிர்கொள்கின்றன கட்டுரை தகவல் தினேஷ் உப்ரேதி பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு காலத்தில் ஒரு டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான வணிக சாம்ராஜ்யத்தின் உரிமையாளராக இருந்த அனில் அம்பானி இன்று பல்வேறு கவலைகளை எதிர்கொண்டிருக்கிறார். அவரது குழும நிறுவனங்கள் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரிக்கப்படுகிறது. 35க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு, மிகப் பெரிய தொகை தொடர்பான விசாரணை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி செவ்வாய்க்கிழமையன்று (ஆகஸ்ட் 5) அன்று டெல்லியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் (ED) தலைமையகத்துக்க…

  11. உ.பி-யில் அதிர்ச்சி.. மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 32 பேர் பலி.. இழப்பீடு அறிவித்த மாநில அரசு. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு இழப்பீட்டு தொகை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவர்கள் தொடர்பாக அம்மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 18 மற்றும் 20 தேதிகளில் 2 பேர் பாம்பு கடியால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.அதே போல சனிக்கிழமையன்று மின்னல் தாக்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் மின்னல் தாக்கியதன் காரணம…

  12. காஷ்மீரில் இணையதள முடக்கத்தை மீறி தகவல் பரிமாற்றம் நடப்பது எப்படி? 8 ஆகஸ்ட் 2019 இ இணைய சேவை தடை செய்யப்படும் நேரத்திலும் தகவல் தொடர்பு செய்வதற்கு, சென்ட்ரல் சர்வர் இல்லாத செயலிகளை பயன்படுத்த வேண்டுமென காஷ்மீர் ஜிகாதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இணைய சேவை முற்றிலும் தடை செய்யப்படும்போது, அதிலிருந்து தப்பித்து தொடர்புகொள்வதற்கான முயற்சி இதுவாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், காஷ்மீர் முழுவதும் இணைய சேவைக்கு தடை…

  13. காஷ்மீரில் 10,000 வீரர்கள் திடீர் குவிப்பு- தீவிரவாதிகள் பயங்கர சதி குறித்து பகீர் தகவல்! காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின் வரிசையாக காஷ்மீரை நோக்கி இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் உடனடியாக அப்போதே காஷ்மீர் எல்லைக்கு செல்லவும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். அப்போதே மொத்தம் 40 ஆயிரம் வீரர்கள் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டார்கள். தற்போது அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர…

  14. வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி, மதரீதியாகப் பிரச்சினையாக்கப்படும் நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத்மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்களால்தான் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதாக செய்திகள் வெளியாயின. அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸை தப்லீக் உறுப்பினர்கள் பரப்பி வருகின்றனர் என்று இந்துக்கள் கூறுவதாக ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதால் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. இது தொடர்பான …

    • 1 reply
    • 304 views
  15. முத்தலாக்: முஸ்லிம் பெண்களின் நிலை இந்த 5 ஆண்டுகளில் மாறியதா? நியாஸ் ஃபரூக்கி பிபிசி, புது டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முஸ்லிம் பெண்கள் - கோப்புப்படம் 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உடனடி முத்தலாக், அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான அஃப்ரீன் ரெஹ்மான்,இந்த தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவரது வாழ்க்கை நிலையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. அவருக்கு முத்தலாக் கொடுத்திருந்த கணவர் அவருடன் சமாதானம் செய்ய மறுத்துவிட்டார். ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. எனி…

  16. இம்ரான் கானை கைது செய்ய வந்த போலீஸ், தொண்டர்கள் கல் வீசியதால் கண்ணீர் புகை குண்டு வீச்சு - பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? படக்குறிப்பு, இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கட்டுரை தகவல் எழுதியவர்,ஷுமைலா ஜாஃப்ரி பதவி,பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத் 26 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியின் தலைவர் இம்ரான் ஹானை கைது செய்ய போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் தொண்டர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்ந…

  17. பாகிஸ்தான் வான்வெளி வழியாக பறப்பதற்கு மோடிக்கு அனுமதி June 11, 2019 இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று இந்தியப் பிரதமர் மோடியை தன் நாட்டின் வான்வெளி வழியாகப் பறப்பதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிர்கிஸ்தானில் ஜூன் 13,14 திகதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ள நிலையிலே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பாலக்கோட் தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் தனது வான் வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் வான் வழியாக கிர்கிஸ்தான் சென்றால் பயணம் குறுகிய நேரத்தில் பயணம் முடிந்துவிடும் என்னும் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை , பா…

    • 1 reply
    • 909 views
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெள்ளத்தில் தத்தளிக்கும் விஜயவாடா நகரம் கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீநிவாஸ் பதவி, பிபிசிக்காக 2 செப்டெம்பர் 2024, 13:56 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆந்திராவில் தலைநகர் அமராவதி மற்றும் அருகிலுள்ள விஜயவாடா ஆகிய இரண்டு பகுதிகளும் நீரில் மூழ்கின. கிருஷ்ணா, குண்டூர், ஏலூர் மாவட்டங்களில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. விஜயவாடாவில் புடமேரு ஆறு நிரம்பியதால் சிங்நகர், வ…

  19. இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையின் பலம் என்ன? எங்கெல்லாம் தாக்க முடியும்? நேயாஸ் ஃபாருக்கி பி பி சி உருது செய்தியாளர் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS ஐயாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-5 என்ற ஏவுகணையை ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்தியா புதன்கிழமை மாலை வெற்றிகரமாகச் சோதனை செய்தது. 'நைட் ஆபரேஷன் மோட்' முறையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது செலுத்தப்பட்ட போது, ஏவுகணையின் திசை மற்றும் வேகம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருந்ததால் பதினைந்து நிமிடங்களில் இலக்கைத் தாக்கியது. குறைந்தது 55…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் 25 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேன் மீது தாக்குதல் தொடுத்ததற்கு தண்டனையாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU), கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொருளாதாரத் தடைக்கு முன் ஐரோப்பா தனது எண்ணெய் தேவையில் 30 சதவிகித்தை ரஷ்யாவிடமிருந்து வாங்கியது. ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மீதான தடை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஐரோப்பா முழுவதும் விநியோக பற்றாக்குறையை உருவாக்கும் என்று நம்பப்பட்டது. …

  21. சபரிமலையில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு.. November 3, 2018 சபரிமலையில் நாளை மறுநாளம் 5ம் திகதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஐப்பசி மாத நடை திறப்பின் போது சபரிமலைக்கு சென்ற இளம்பெண்களையும் தடுத்து நிறுத்தியமையினால் ஐயப்ப பக்தர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் மோதல் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாளையொட்டி சபரிமலை சுவாமி …

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், திலீப் குமார் ஷர்மா பதவி, கெளஹாத்தியில் இருந்து பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் சியாங் நதியின் ஓட்டத்தில் சமீப ஆண்டுகளாக வித்தியாசமான மாற்றங்கள் காணப்படுகின்றன. சியாங் ஆற்றின் விசித்திரமான நடத்தை காரணமாக சில சமயங்களில் அதில் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன. நதி முற்றிலும் வறண்டு கிடப்பதையும் பலமுறை பார்க்க முடிகிறது. கிழக்கு சியாங் மாவட்டத்தின் மெபோ தாலுகாவில் வசிக்கும் டாக்டர் டாங்கி பர்மா, சிறுவயதிலிருந்தே…

  23. இந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா? சீனாவைச் சுற்றியுள்ள மங்கோலியா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது இந்தியா. பிரீமியம் ஸ்டோரி இந்திய - நேபாள எல்லையில், இந்திய நிலப்பரப்புக்குள் 335 சதுர கிலோமீட்டர் பரப்புக்குச் சொந்தம் கோரும் வரைபடத்துக்கான சட்டத்திருத்தத்துக்கு ஜூன் 13-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது நேபாள நாடாளுமன்றம். அடுத்த இரு நாள்களில் இந்திய - சீன எல்லையில் இருதரப்பு ராணுவ வீரர்களுக்குள் கலவரம் வெடித்து, உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், `நேபாளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரிவரச் செய்…

  24. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்போது அவர் எய்மஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமுலில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள…

  25. இந்து பிரபாகரன் உருவானால் ரூ1 கோடி-மன்மோகன்சிங்கை கொலை செய்திருப்பேன்.. சாமியார்கள் பேச்சால் சர்ச்சை. ஹரித்வார்: இந்து மதத்தைக் காக்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் போல ஒரு இளைஞர் உருவானால் அவருக்கு ரூ1 கோடி பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார் இந்துத்துவ சாமியார் யதி நர்சிங் ஆனந்த். மேலும் பீகாரை சேர்ந்த சாமியார் தர்மதாஸ் மகாராஜ், நாடாளுமன்றத்திலேயே நாதுராம் கோட்சே போல முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பேன் என பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17-ந் தேதி முதல் டிசம்பர் 19-ந் தேதி வரை தர்ம சன்சத் என்ற் பெயரில் இந்து சாமியார்களின் மாநாடு நடைபெற்றது. த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.