நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3037 topics in this forum
-
போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லது அங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம். இதைத் தடுப்பது மிகவும் இலகு. கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரையை வைத்தியரின் அனுமதி இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் குறைவு.…
-
- 0 replies
- 1.7k views
-
-
மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் [ multiple sclerosis (MS) ] என்று சொல்லப்படுகின்ற மூளைக் கோளாறினால் மூளையின் நரம்புகளில் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்தி சரிசெய்யக்கூடிய வழியொன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பிரிட்டனிலுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எம். எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நரம்பு நார்களுக்கான மூளை குறுத்தணுக்களை தூண்டிவிடுவதன் மூலம் புத்துயிர் தர முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர். மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் பற்றி பல விஷயங்களை நாம் அறிந்தாலும் அந்த நோய் எதனால் வருகிறது என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. எம்.எஸ். வந்தால் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்பு என்பது நரம்பு நார்களைப் சுற்றிப் படிந்துள்ள மைலீன் எ…
-
- 0 replies
- 559 views
-
-
ரசித்து… ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்? தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு மறப்பதில்லை. ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம். சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது. துபாயிலிருக்கும் ஒரு நண்பர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவார். கள்ளக்குறிச்சியில் இருக்கும் இன்னொரு நண்பர் ஒவ்வ…
-
- 0 replies
- 701 views
-
-
வணக்கம் நண்பர்களே, எனக்கு தெரிந்த ஒரு நண்பனுக்கு Histrionic personality disorder என்னும் உளவியல் பிரச்சனை உண்டு. அவருக்கு உதவுவதற்கு, அந்த நோயைப்பற்றி தமிழில் தகவழ் தேவைப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த மன நல மறுத்துவர்கள் இருந்ந்தால் தயவுசெய்து அறியத்தரவும். அல்லது அந்த நோய் பற்றி எதாவது தகவள் தெறிந்தால் சொல்லவும். நன்றி
-
- 0 replies
- 1.1k views
-
-
நோயின் அறிகுறியை நகங்களில் காணலாம்! நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. * நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது. * இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம். * சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை த…
-
- 0 replies
- 645 views
-
-
அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின…
-
- 2 replies
- 464 views
-
-
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள் அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள்தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்! ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும். சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலர…
-
- 25 replies
- 4.7k views
-
-
வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர். இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. இது…
-
- 0 replies
- 626 views
-
-
மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. முதுமையைத் தடுத்து மனிதனின் ஆயுளை நீடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர். ' செர்டுயின் ' என்ற ஜீனே முதுமையை கட்டுப்படுத்துகின்றது. இதனைத் தூண்டும் மருந்தினையே ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். ஒரு மாத்திரையை உட்கொள்ளும் போது, வயதானாலும் நினைவாற்றல் குறையாது, உடல் உறுப்புகள் தளராது, மாரடைப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது. வ…
-
- 0 replies
- 462 views
-
-
Drinking water at the correct time. Another little tidbit that's news to me. Always knew to drink a lot of water, but who knew the timing effected things. Drinking water at the correct time maximizes its effectiveness on the Human body: 2 glasses of water after waking up helps activate internal organs 1 glass of water 30 minutes before a meal - helps digestion 1 glass of water before taking a bath - helps lower blood pressure 1 glass of water before going to bed - avoids stroke or heart attack Please pass this to the people you care about......
-
- 11 replies
- 1.6k views
-
-
எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்?? வணக்கம். எல்லோருக்கும் தமது உடம்பை கவனமாக நோய் நொடி வராமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆசை இருக்கும் என்பதை மறுக்க மாட்டீர்கள். இன்னும் சிலர் உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பார்கள். ஆனால் இந்த இயந்திர உலகில் வாழும் நாம் எவ்வளவு தூரம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை எல்லோரிடமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.நன்றி. நான் கிழமை நாட்களில் வேலையின் பின்னர் 3 நாட்களாவது உடற்பயிற்சி நிலையத்தில் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செலவளிப்பேன்.சனி, ஞாயிறு அதிகாலையில் யோகா செய்வதுண்டு.
-
- 21 replies
- 4.8k views
-
-
தடிமன் (common cold) என்பது தீவிரமாகத் தொற்றக்கூடிய ஒரு தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். இது மேல் மூச்சுத் தொகுதியைத் தாக்குகிறது. தொண்டைக் கமறல், மூக்கு வடிதல், தும்மல், இருமல் என்பன இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். சில சமயங்களில் மேற்கண்ட அறிகுறிகள், கண் சிவத்தல், தசைநார் வலி, தலைவலி, பசியின்மை போன்றவற்றுடன் சேர்ந்து காணப்படும். பொதுவாக இதன் அறிகுறிகள் ஒரு கிழமையில் நீங்கிவிடுமாயினும் சில சமயங்களை இரண்டு கிழமைகள் வரை நீடிக்கவும் கூடும். இந் நோயின் அறிகுறிகள் குழந்தைகளிலும், சிறுவர்களிடத்தும் கூடுதலாகக் காணப்படும். வாழ்நாளில் ஒருவருக்கு சராசரியாக இருநூறு தடவை தடிமன் பிடிக்கிறது. அது சராசரியாக ஒன்பது நாட்கள் நீடிக்கிறது. இப்படிப்பார்க்கையில் ஒருவர் தனது வாழ்நாளி…
-
- 6 replies
- 4k views
-
-
எனக்கு கன நாட்களாக மூச்சு விடுதலில் சிரமம் அடிக்கடி வந்து போகுது. மூச்சு முழுமையாக விட முடியாமல் அவதிப் பட்டு (short Breath ) பின் சில தடவை முயன்ற பின் முழுமையான மூச்சு வரும். இது முக்கியமாக இரவு படுக்கும் போதே அடிக்கடி ஏற்படுகின்றது. இதனால் நித்திரை எவ்வளவு வந்தாலும் முதல் இரண்டு மணி நேரம் அவதிப் பட்டு மூச்சு சரியாக வந்த பின் தான் நித்திரை கொள்ள முடிகின்றது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றல், சிறிதளவு மது (முக்கியமாக விஸ்கி) அருந்தினால் உடனடியாக பிரச்னை சரியாகின்றது. மருத்துவரிடம் காட்டி எல்லா பரிசோதனை செய்தும் ஒன்றும் இல்லை என்று விட்டார். ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், அதுவும் இப்ப தான் எல்லையை தாண்டுவதும் இல்லை பொதுவாக…
-
- 20 replies
- 18.5k views
-
-
பதினைந்து வருட ஆராய்ச்சியின் பின்னர் ஒரு விதமான ( Retinitis pigmentosa ) விழிப்புலன் அற்றவர் அதை மீள் பெற்றார் ! உலகில் பத்து வீதமானோர் இது சம்பந்தமான கண் குறைபாடு உள்ளவர்கள் ஜெர்மனியில் நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின்னர் கண்ணுக்குள் வைக்கப்பட்ட ஒரு வித "மைக்ரோ சிப்பின்" உதவியுடன். (படங்கள் இணைக்கப்படுள்ளன) http://edition.cnn.com/2010/HEALTH/11/03/retina.implant.trial/?hpt=T2 http://www.bbc.co.uk/news/health-11670044
-
- 0 replies
- 541 views
-
-
வலிநிவாரணிகள் (Pain Killers) - நல்லதும் கெட்டதும் வலி நிவாரணிகள் பற்றி நிறையத் தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கடுமையான இடுப்புவலியால் துன்பப் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தனக்கு Pain Killer மருந்து வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார். மிகுதி இங்கு சென்று பாருங்கள் மிக்வும் பயன் உள்ளது...http://hainallama.blogspot.com/
-
- 0 replies
- 598 views
-
-
Oct 20, 2010 / பகுதி: மருத்துவம் / மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின…
-
- 0 replies
- 549 views
-
-
ஹெராயினை விட தீங்கு நிறைந்தது ஆல்கஹாலே - பேராசிரியர் டேவிட் நட் திங்கட்கிழமை, 01 நவம்பர் 2010 11:15 போதைப்பொருட்களில் உயர்ந்ததாக கருதப்படும் ஹெராயின், கஞ்சா போன்றவற்றை விட அதிகம் தீங்கு விளைவிப்பது ஆல்கஹாலே என அடித்துக் கூறியுள்ளார் இது தோடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் டேவிட் நட். இவர் தனது ஆராய்ச்சி அறிக்கையை பிரிட்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ இதழான " தி லான்செட்டில் " வெளியிட்டுள்ளார். மொத்தமுள்ள 20 போதைப் பொருட்களில் 16 தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கக் கூடியது என அடையாளப்படுத்தியுள்ளார். டொபாக்கோ, கோக்கெய்ன், ஆல்கஹால் ஆகியவை இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. பிரிட்டன் போதைப் பொருள் தலைமை ஆலோசகராக பணியாற்றி…
-
- 4 replies
- 714 views
-
-
இறந்தும் வாழும் உன்னதம்... தமிழ்நாட்டில் மூளைச்சாவுக்கு ஆளானவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் பெற்று, தேவையானவர்களுக்குப் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தமிழகம் இதில் முன்னோடியாகத் திகழ்கிறது என்பது பாராட்டுக்குரியது. மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் மட்டுமன்றி, இரண்டு அரசு மருத்துவமனைகளும்கூட சாதனைகள் நிகழ்த்தியுள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொது சுகாதாரத் துறைச் செயலர் வி. கே. சுப்புராஜ் கூறியுள்ள குறிப்புகளின்படி, தமிழக மருத்துவமனைகளில் மொத்தம் 716 பேருக்கு மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த அளவுக்கு சாதனை…
-
- 0 replies
- 561 views
-
-
நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன். முகத்தில் வாட்டம்!சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது. எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப் பூச்சிகள் சுருண்டு திரண்டு கிடப்பது போல கருநீலத்தில் வீக்கங்கள் படர்ந்திருந்தன. பார்க்க அருவருப்பாக இருந்தது. விளையாடப் போன நான் போன போக்கிலேயே திரும்பி ஓடி வந்துவிட்டேன். அப்பொழுது அவரது வயிற்றில் இருந்த குழந்தை பிறந்த சில காலத்தின் பின் அவரது கால்களில் வீக்கம் காணமல் மறைந்து விட்டிருந்தது. இன்ன…
-
- 2 replies
- 1.2k views
-
-
சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்? சைனஸ் என்பது நம் முகத்தில் மூக்கின் உட்புறத்தில் உள்ள காற்றறை ஆகும். நமது மூக்கிற்கு இரண்டு பக்கமும் ஒரு ஜோடி சைனஸ் அறைகளும், நடு நெற்றிக்கருகினில் ஒரு ஜோடி சைனஸ் காற்றறைகளும் இருக்கின்றன. நாசி துவாரத்தின் உள்ளே மேடு பள்ளங்களும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றினில் உள்ள கிருமிகளை இந்த பகுதியில் உள்ள செல்கள் தடுத்து விடுகிறது. இதன் உட்பகுதியில் உள்ள காற்றிடமே சைனஸ். இதில் அலர்ஜி அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டு நீர் கோர்த்துக் கொள்வதால் சைனஸ் என்கின்ற காற்றறைகளில் பாதிப்பு வருகின்றது. இந்த பாதிப்பிற்கு த்தான் சைனஸைடிஸ் என்று பெயராகும். காரணங்கள்: நச்சு காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் அலர்ஜி ஏற்ப…
-
- 2 replies
- 5.6k views
-
-
தூக்கமின்மையால் மனோநிலை பாதிக்கும்? பொதுவாக பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை. அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும். திரவ உணவு மாறி, இட்லி, பருப்பு சாதம், பிஸ்கட் போன்ற திட உணவுப் பொருட்களை குழந்தைகள் சாப்பிடத் தொடங்குகின்றன. ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளானால், மதியம் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். மேலும் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குற…
-
- 8 replies
- 1.3k views
-
-
சிறு நீரகக் கல்... ஒரு சிகிச்சை இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சை…
-
- 0 replies
- 720 views
-
-
தக்காளிப் பழமும் சருமப் பாதுகாப்பும் தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும். தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி க…
-
- 0 replies
- 740 views
-
-
சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸ�டன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும். உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும். அவர் ஒரு குளோப் ஜாமூன் சா…
-
- 3 replies
- 3.8k views
-
-
. சுய இன்பம் ஆபத்தா? நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக…
-
- 38 replies
- 17.9k views
-