நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸ�டன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும். உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும். அவர் ஒரு குளோப் ஜாமூன் சா…
-
- 3 replies
- 3.8k views
-
-
. சுய இன்பம் ஆபத்தா? நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக…
-
- 38 replies
- 16.6k views
-
-
பஞ்சு உள்ளங்கைக்கு எலுமிச்சை பயிற்சி ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டிதான். ரேகைகள் தேய வைக்கும் இந்த வேலைகளால் 'பட்டுப் போன்ற கைகள்' ஒரு கட்டத்தில் பரிதாபமாக மாறலாம். சிலருக்கு வெடிப்பு, வறட்சி, அரிப்பு, கோடுகள், தோலுரிவது போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நகம் உடைந்து போவது, நிறம் மாறுவது, புள்ளிகள் தோன்றுவது என நகத்திலும் பாதிப்புகள் வரலாம். 'அதுக்காக வேலை பார்க்காம இருக்க முடியுமா..?' என்றால், முடியாதுதான். ஆனால், உங்கள் ஊட்டச்சத்திலும், கைகளின் பராமரிப்பிலும் கவனம் செலுத்தினால்... உங்கள் உள்ளங்கையில் தங…
-
- 0 replies
- 1k views
-
-
நல்ல கொலச்டோல்...HDL (இப்ப) சொல்லுகினம், கூடாத கொலச்டோல் LDL (100 குறைவாக) கட்டுபாட்டில இருக்கிறவர்களுக்கு, நல்ல கொலச்டோல் HDL குறைவாக (40 க்கு குறைவாக) இருந்தால் அது(தான்) கூடாது எண்டு. என்ன மாதிரி HDL நல்ல கொலஸ் கூட்டலாம் எண்டால். 3 வழிதான் (எனக்கு தெரியும்) 1 . உடற் பயிற்சி. 2 . ஒமேகா 3 fatty அசிட். நல்லா மீன் சாப்பிடட்டாம்..குறைந்தது ஒரு கிழமையில் 3 வேளை ( 1 துண்டு மீன் இல்லை, மீன்தான் சாப்பாடு) 3 . மருந்துகள். கடைசியில். மற்றது கடைகளில் விற்கும் ஒமேகா 3 (USA ) தரக்கட்டுப்பாட்டில் வருவதில்லையாம். பலவும் செயற்கை முறையாலும், தாவரங்களில் இருந்து தயாரிப்பதாலும் அவற்றினால் எதிர்பார்த்த விளைவுகள் இல்லையாம். ஒரே வழி மீனை மூக்கு முட்ட சாப்பிட்டு, வாயை…
-
- 3 replies
- 1.5k views
-
-
புகைப் பிடிக்கும் ஒருவருக்கு தலை முதல் கால் வரை என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை அறிவது அவசியம். இதன்மூலம் இந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபடக் கூடும். புகைப்பிடித்தலை பழக நினைப்பவர்களும் அதை மறக்க நினைப்பவர்களும் உலகத்தில் ஏராளம். புகைப் பிடிக்கும் ஒருவருக்கு எழக்கூடிய குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. முடி: நிற மாற்றம். மூளை: பாரிசவாதம், புகைத்தலுக்கு அடிமையான நிலை. கண்: பார்வைக் குறைபாடு, Cataracts. மூக்கு: மன நுகர்ச்சித் தன்மை குறைதல். தோல்: தோல் சுருக்கம், வயது முதிர்ந்த தோற்றம். பல்: நிற மாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (Gingivitis). வாய் மற்றும் தொண்டை: உதடு, உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர…
-
- 7 replies
- 1.9k views
-
-
பாலுறவு குறித்து பல்வேறு தகவல்களை இப்பகுதியில் அறிந்து வருகிறோம். சிலர் (ஆண்/பெண்) திருமணத்திற்கு முன்பே அறிந்தோ அல்லது அறியாமலோ சிலருடன் பாலுறவு தொடர்பு வைத்திருந்திருக்கலாம். அல்லது `அந்த உறவு' எப்படித்தான் இருக்கும்? அதையும் தெரிந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் கூட யாருடனாவது பாலுறவு புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். அப்படி உறவு வைத்துக் கொண்ட பலர் தங்களுக்குள் தேவையில்லாத பயம் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ பாலுறவு வைத்துக் கொள்வதற்குப் பயந்து, சுயஇன்பம் அனுபவித்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு சுயஇன்பம் அனுபவிப்பதால், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது ஏதாவது பாதிப்பு வருமோ என்ற அச்ச உணர்வு இருக்கக்கூடும். உதாரணத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்துக் கொள்வோம…
-
- 7 replies
- 1.4k views
-
-
குழந்தைக்கு வரும் காது வலி: காது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும்,பாட்டில் பால் தருவதும் ஆகும். வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும். காது மடலை தொட்டால் வலி அதிகாமாகும். மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும். எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும். காதுக்கு பட்ஸ் போடவே கூடாது. அப்படி செய்தால் வெளியே உள்ள அழுக்கு உள்ளே தள்ளப்படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல திரித்து துடைத்து எடுக்க வேண்டும். தாய்ப்பால் படுத்து கொண்டு தரக்கூடாது, குழந்தையின் தொண்டைக்கும் நடுக்காதிற்கும் உள்ள இணைப்பு வழியே பால் உள்ளே சென்று கீழ் பிடிக்கும். அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும். மூக்கு அடைப்…
-
- 0 replies
- 793 views
-
-
தண்ணீர் அதிகம் குடித்தால் சுருக்கம் மறையும்: ஆராய்ச்சி முடிவு செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010, 17:10[iST] Ads by Google Anti Wrinkle Treatment www.Qesthetics.com/laser-clinic Great results and great prices. Multi options. 3 locations.Call us லண்டன்: அழகான தோல் வேண்டும் என்று விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்தத் தோலை பாதுகாக்க என்னென்னவோ செய்கின்றனர். சிறிது சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அயயோ போச்சே என்று கவலை அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய, நிறைய தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல் சுருக்கம் மறைவதோடு, தோலுக்கு ஈரப்பதமும் கிடைக்கிறது. இதனால் இளமையாகத் …
-
- 0 replies
- 556 views
-
-
தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னைகளால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். குடும்ப சுமை, வேலைப்பளு போன்றவற்றால், பெரியவர்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த பிரச்னைகளால் தற்போது பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குழந்தைகள் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூ ஹெர்சி கூறியதாவது: தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர். பள்ளியில் நீண்ட நேரம் பாடங்களை கூர்ந்து கவனிக்கின்றனர். மேலும் வீடு திரும…
-
- 2 replies
- 695 views
-
-
நவநாகரிக உலகில் பெண்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் எடுத்துக் கொண்ட பணியினை செவ்வனே செய்ய மிகுந்த சிரமப்படுகிறார்கள். ஆனாலும் அதிலும் எதிர்நீச்சல் போட்டு பொருளாதார ரீதியில் அவர்கள் நல்ல நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்களுக்கே உரித்தான, அரிய பொக்கிஷமாக போற்றி அனுபவிக்க வேண்டிய இனிமையான சூழல்களை இழந்து விடுகின்றனர். “பருவத்தே பயிர் செய்” என்பது பயிர்களுக்கு மட்டுமல்ல. மகளிருக்கும் இது பொருந்தும். இளவயது பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்காக தன்னுடைய திருமண வயதை தள்ளிப்போடுகிறார்கள். அப்படியே 24-26 வயதிற்குள் திருமணம் முடிந்தாலும் பிள்ளை பேறை தள்ளிப் போட நினைக்கிறார்கள். நாம் நல்ல நிலைக்கு வந்த பின்தான் குழந்தை பெற்றுக…
-
- 3 replies
- 3.6k views
-
-
தசை தளர்வு ஏற்படாமல் இருக்க பெண்கள் தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. பால் குடிப்பது உடல் நலத்துக்கு சிறந்தது என அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் பால் குடித்தால் உடல் தசையில் தளர்வு ஏற்படாது என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தினசரி 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் அவர்களின் உடல் தசைகளில் தளர்வு ஏற்படாமல் இறுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டனர். பெண்கள் தினமும் குடிக்கும் 2 டம்ளர் பாலில் மிக அதிக அளவில் வைட்டமின் டி, மற்றும் கால்சியத்தின் அளவுகள் உள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாமல் சராசரி அளவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தூது வளை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காய கற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும். இந்த கற்பமானது உடம்பை கல்போல் ஆக்கும். கல்லினால் செதுக்கப்பட்ட சிலைஎப்படி பன்னெடுங் காலமாக அப்படியே உள்ளதோ அதுபோல் நரை, திரை, மூப்புபிணிகளை நீக்கினால் உடலும் கல்போல் ஆகும். சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர்.மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோஅல்லது உலோக உபரச உப்ப…
-
- 1 reply
- 2.7k views
-
-
நல்ல ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கு நோய் வருவதேக் குறைவுதான். வந்தாலும் எளிதில் குணமாகிவிடும். உணவு முறையில் ஒரு சீரற்றத் தன்மையை கடைபிடிப்பவர்களுக்குத்தான் பல்வேறு நோய்களும் வருகின்றன. நோய் வந்த பிறகும் அவர்களது உணவு முறையில் உள்ள குறைபாடுகள் பல்வேற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. ஏதேனும் உடல் உபாதைக்கு மருத்துவர் மாத்திரை எழுதிக் கொடுப்பின், சிலர் அதனை காலையில் எழுந்து டி, காபி அல்லது பால் குடித்துவிட்டு மாத்திரையைப் போட்டுக் கொள்கின்றனர். இதனால் உடலில் உள்ள நோய் தீர்வதற்கு பதிலாக, மற்றும் பல நோய்களை நாமே வரவழைத்துக் கொள்கிறோம் …
-
- 33 replies
- 2.9k views
-
-
சாப்பிடுவதற்கு முன்பும், பாத்ரூம் சென்று வந்த பின்னும் கைகளை நன்றாக கழுவினால் மட்டும் போதாது. கழுவிய பின், கைகளை ஈரமில்லாமல் நன்றாக துடைக்கவும் செய்ய வேண்டும். இல்லையெனில், நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது' என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராட்போர்ட் பல்கலைக் கழகம் சார்பில், நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் வேகமாக பரவுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது: கைகளை நன்றாக சுத்தம் செய்யாமல் உணவு சாப்பிடுவது, கழிவறைக்கு சென்று வந்தவுடன் கை, கால்களை சரியாக கழுவாமல் வருவது போன்ற சுகாதார குறைபாடுகள் காரணமாக, தொற்றுக் கிருமிகள் வேகமாக பரவி, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இதுகுறித்து முழுவீச்சில் விழிப்புணர்வு பி…
-
- 2 replies
- 517 views
-
-
கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையைக் கூட்டுவதற்கான உணவுப் பழக்கம் (குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப் பிடிக்க வேண்டும்). அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பாஸ்ட் ஃபுட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான்! உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம். மூன்று இட்லி, சர்க்கரை கலக்காத வாழைப்பழ மில்க்ஷேக். எண…
-
- 3 replies
- 1.5k views
-
-
This is a very good article. Not only about the warm water after your meal, but about Heart Attacks. The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt their drinking habit while eating. For those who like to drink cold water, this article is applicable to you. It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify any oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with stomach acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats …
-
- 1 reply
- 778 views
-
-
நவீன காலத்தின் உணவுப் பழக்கங்களால் பெண் குழந்தைகளின் உடல்பருமன் அதிகமாகிறது என்றும் அதனால் சில பெண்கள் 7 வயதிலேயே பூப்படைகின்றனர் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளிப்படையான பார்வைக்கு இது ஒன்றும் பெரிய தவறாக தோன்றாவிடினும் கூட மிகவும் சிறிய வயதில் பூப்படையும் பெண்கள் மருத்துவ ரீதியாக பார்த்தால் பல நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது என்பதால் பெண் குழந்தைகள் விடயத்தில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவில் பத்தில் ஒரு பெண் குழந்தை பூப்படைதலின் முதல் அறிகுறியான மார்புத் தசை வளர்ச்சியுடன் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மிகவும் சிறிய வயதில் பூப்படையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் சுரப்பும் வ…
-
- 13 replies
- 1.8k views
-
-
1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை. 2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும். 3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும். 4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள்…
-
- 0 replies
- 661 views
-
-
வேப்பம் பூ வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் இந்த வேப்பம் பூ மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதிலிருக்கும் மருத்துவ குணங்கள் தெரிந்தால் கசப்பை மறந்து இதனை விரும்பி சாப்பிடுவாங்க வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் சரியாகும் இதுபோல் சில குழந்தைகள் சாக்பீஸ், கல்குச்சி(பல்பம்) சாப்பிடும் குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். இதனை நிழலில் காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க. இதனை ரசத்தில் சிறிது போட்டு செய்யலாம். மிளகு,சீரகம், வேப்பம்பூ இதனை எண்ணெயில் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து சாதத்துடன் சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் குறையும், பித்த வாந்தி நிற்கும். வயிற்றில் உள்ள பூச்சிகள்…
-
- 7 replies
- 3.9k views
-
-
நமிபீயாவைச் சேர்ந்த மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் எய்ட்ஸை குணப்படுத்தும் அட்ரிப்லா, ஐசென்ட்ரசஸ் எனும் புதிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. நமீபியாவின் நம்பா நகரில் உலக அளவில் மருந்து தயாரிப்பு பொருட்களை சப்ளை செய்யும் மெர்டக் ஷார்ப் அன்ட் டூஹோம் நிறுவனம் எச்.ஐ.வி. பாதிப்பட்டவர்களின் தொடக்க நிலையில் உள்ள எச்.ஐ.வி.-1 எனும் கிருமியினை குணப்படுத்தக்கூடிய மாத்திரையினை கண்டுபிடித்துள்ளது. இது குறித்த அறிக்கையினை நமீபிய அரசின் சுகாரதாரத்துறையினரிடம் அளித்து ஒப்புதல் பெறவுள்ளதாக கூறியுள்ளது. விரைவில் மருந்து கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. http://www.z9tech.com/
-
- 1 reply
- 742 views
-
-
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்? வயதானவர்களைத் தாக்கும் நோய்களுள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன. * நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும். * `ஹைஹீல்ஸ்’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். * நட…
-
- 0 replies
- 725 views
-
-
ஆசைக்கோ, ஆஸ்திக்கோ.. ஒரு பெண், ஒரு பிள்ளை வேண்டும் என்பது பலருக்கு ஆசை. நினைப்பதெல்லாம் நடக்கிறதா. மாறிப் பிறந்து பல வீடுகளில் சண்டை மண்டை உடைகிறது. இந்த விஷயத்தில் சூப்பர் அட்வைஸ் சொல்லியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். கர்ப்பிணிகளின் உணவுப் பழக்கத்துக்கும் பிறக்கும் குழந்தையின் பாலினத்துக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி ஹாலந்தின் மாஸ்ட்ரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தினர். முதலில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தவர்கள், பெண் குழந்தைகளுக்கு விரும்பம் தெரிவித்தவர்கள் என பல்வேறு தரப்பினர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 23&42 வயதுக்கு உட்பட்ட 172 பெண்களிடம் விஞ்ஞானிகள் தொடர்ந்து 5 வருடங்கள் கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு பிரட், காய்கறிகள், பழவ…
-
- 0 replies
- 592 views
-
-
அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல்தான்! நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள். இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளைம் கூறுகிறது. இற…
-
- 0 replies
- 559 views
-
-
உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் எண்ணையின் அளவை குறைப்பதற்காக சமீப காலமாக “நோன்ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்கின்றனர். இதன் மூலம் சமைக்கும் போது மிக குறைந்த அளவே எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவு பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாது. எனவே அவற்றில் சமையல் செய்வது ஒரு பாஷனாக கருதப்படுகிறது. ஆனால், அதுவும் ஒருவகையில் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. “நோன்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்து தயாரிக்கப்படும் உணவை குழந்தைகளின் உடலில் கொழுப்புசத்து அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் “பேப்ரிக்குகளும் கொழுப…
-
- 2 replies
- 858 views
-
-
ஆண்மைக்குறைவு.... இது இப்போது எதிர்பார்த்த அளவைவிட கூடுதலாக இருப்பதாக அறிந்துள்ளார்கள். நான் இங்கே பாவித்த சொல் (ஆண்மைக்குறைவு) சரியோ என தெரியவில்லை, பொதுவாக நான் சொல்லவருவதை , sexual dysfunction என்னும் தலையங்கத்தில் வரும். இதிலே பிரதானமாக 3 பிரச்சனைகள்..1 . ED விறைப்புதன்மை குறைவு 2 . PE விந்து முதலில் வெளியேறுதல் 3 . Decreased libido விரும்பம் குறைவு. இதில் பிரதானமானது ED (Erectile dysfuction ) முன்பு இது கூடுதலாக மனம் (வியாதி) சம்பந்தபட்டது என கருதப்பட்டது ஆனால் அது தவறு எனவும், இது பல் காரனிகல்லால் ஆனது எனவும், முக்கியமாக, டியாபெடிக், கார்ட் வருத்தம், சில அகங்சுரக்கும் சுரப்பி குறைபாடு..கொழுப்பு வருத்தம், புகைபிடித்தல், நிறை கூடுதல்..50 வயதிர்ற்கு பிறகு…
-
- 10 replies
- 3k views
-