Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. 2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழக்க நீண்ட வேலை நேரம் காரணமாக இருந்தது என்று இத்தகைய பாதிப்புகள் குறித்த முதல் சர்வதேச ஆய்வில் தெரியவந்தது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் மேற்கு பசிஃபிக் பிராந்தியம் ஆகியவற்றில் நீண்ட வேலை நேரம் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதலாக உள்ளதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த நிலை மேலும் மோசமடையக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. …

  2. சிகரெட் பிடிப்பதை விடுங்கள்,,, பாலகுமாரனின் அனுபவ பாடம்...! இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன். நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவ…

  3. நடைப்பயிற்சி: ஆர்வலர்களின் குழப்பமும் வல்லுநர்கள் விளக்கமும் மின்னம்பலம் அ.குமரேசன் கொரோனா முதல் அலை ஏற்படுத்திய காயங்களிலிருந்து வடிந்த குருதியின் ஈரம் உலர்வதற்குள்ளாக இரண்டாம் அலை குதறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை கூரிய பற்களோடு வர இருப்பதையும், சில நாடுகளில் நான்காம் அலை தன் நகங்களைக் கூர் தீட்டிக்கொண்டிருப்பதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தேவை உணரப்படுகிறது. விளையாட்டாகவோ வீம்பாகவோ பொதுமுடக்க விதிகளை மீறக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. வழிபாடு, கொண்டாட்டம் என எந்த வகையிலும் மீறுகிறவர்கள் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவேதான் அணுகுமுறைகளில் மாற்று…

    • 6 replies
    • 903 views
  4. தடுப்பூசியைத் தவிர்த்து, கொரோனாவிடம் வீழத் தயாராகிறோமா? மே 11, 2021 –ஆதி வள்ளியப்பன் மனித குல வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இயற்கைச் சீற்றங்கள், போர்கள் உள்ளிட்ட எத்தனையோ ஆபத்துகளை எதிர்கொண்டிருந்தாலும், தொடர்ந்து வாழ்வதற்கான யத்தனங்களை மனித குலம் மேற்கொண்டபடியே இருந்துவந்திருக்கிறது. நோயால் மனித குலம் எத்தனை கோடிப் பேரை இழந்தது என்பதை வரலாற்றின் ஓரிரு பக்கங்களைப் புரட்டினாலேயே தெரிந்துகொள்ளலாம். வட அமெரிக்கா-தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் ஐரோப்பியக் காலனியாதிக்கமும் குடியேற்றமும் நிகழ்ந்தபோது, புதிய தொற்றுநோய்களால் பல கோடி உள்ளூர் இனக்குழுக்கள்/பழங்குடிகள் பலியாகினர். அதற்குப் பிறகு அந்த இனக்குழுக்கள்/பழங்குடிகளின் மக்கள்தொகை ப…

  5. கொரோனா காலத்தில் அசைவ உணவு... நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மா.அருந்ததி Biriyani கொரோனா காலத்தில் அசைவ உணவு உண்பவர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்? இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எனப் பல சிக்கல்கள் மக்களையும் அரசையும் வதைக்கின்றன. பரவல் அதிகமாக இருப்பதால் தடுப்பூசியின் மூலம் கொரோனா வைரஸிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் தவிக்கின்றனர். இதுமட்டுமன்றி தங்களின் உணவுப் பழக்கத்தின் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும் பாதிப்பை குறைக்க முயல்கின்றனர். இந்நிலையில் அசைவ உணவு குறித்து மக்களிடையே சில சந்தேகங்க…

  6. இதயத்தின் ஆரோக்கியத்துக்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்யக்கூடாது என்று நாமே மருத்துவராகி அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வோம். அதே சமயம் கல்லீரல் நம் உடலில் என்ன வேலைகளைச் செய்கிறது என்பதுகூட நம்மில் பலருக்குத் தெரியாது. சமூகத்தில் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இருக்கும் அளவுக்குக்கூட கல்லீரல் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் கிடையாது. கல்லீரல் pixabay ``இதயத்தில் ஏதேனும் பாதிப்பு என்றால் அறிகுறிகள் வெளியே தெரிந்துவிடும். இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தில் 10 சதவிகிதம் தடைபட்டால்கூட நெஞ்சு வலி ஏற்பட்டுவிடும். ஆனால் கல்லீரலில் மிகுதியான பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்" என்கிறார் கல்லீரல் மாற…

    • 1 reply
    • 546 views
  7. பழைய கஞ்சி போதும்.! நோய்கள் புறமுதுகிட்டு ஓடும்!! நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பழைய சோறுதான் நம் நிலத்தின் பாரம்பரிய உணவுகளில் மிகச் சிறந்தது எனக் கண்டறிந்திருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறை பேராசிரியர் உஷா ஆண்டனி. தன்னுடைய ஆய்வுப்படிப்புக்காக இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘பழைய சாதம்’. இதுகுறித்து பல ஆண்டுகள் ஆய்வுசெய்து சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளார் இவர். சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறுநாள் காலையில் அது பழைய சோறு. கிராமங்களில் அந்தக் காலத்தில் எப்போதுமே மாலையில்தான் சோறு வடிப்பார்கள். மின்சாரம் இல்லாமல் கூரை வீடுகள் அதிகம் இருக்கும். எளிதில் தீப…

  8. உடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா? - ஊட்டச்சத்து நிபுணர் பதில் பட மூலாதாரம், GETTY IMAGES டயட் – சமகாலத்தில் பெரிதும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தை என்று சொல்லலாம். உடல் எடையை குறைக்க டயட்டை பின்பற்ற வேண்டும். டயட் என்றால் உணவு உட்கொள்வதை குறைத்து கொள்வது என்ற பரவலான எண்ணம் உள்ளது. இது முற்றிலும் தவறு என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மினாக்ஷி பஜாஜ். உடல் எடை குறைப்பது, சத்தான உணவை எடுத்துக் கொள்வது குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம். கேள்வி: ஒரு வாரத்தில் 10 கிலோ வரை எடை குறைக்கலாம். உடற்பயிற்சி தேவையில்லை. உணவு கட்டுப்பாடுகள் தேவையில்லை என பல விளம்பரங்களை சமூக ஊடகங்களிலும் தொலைக்காட…

  9. துரியன் பழத்தை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் தீரும் பலாப் பழம் போலவே தோற்றமளிக்கும் இது, துரியன் பழமாகும். மலேசியாவை பிறப்பிடமாக கொண்டது. பலாப் பழத்தை போலவே வெளியே கரடு முரடான முள் தோற்றம், உள்ளே இனிப்பு சுவை கொண்ட பழம் என துரியன் பழம் சுவைக்க தூண்டுகிறது. சுவை மட்டுமல்ல, சத்து பொருட்களும் துரியன் பழத்தை பிரபலமாக்கி உள்ளன. இதில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. துரியன் பழம், மஞ்சள் காமாலை மற்றும் நகங்களில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கு நல்ல மருந்தாகிற…

  10. பெண்களைக் குறி வைக்கும் 'பிரெயின் அட்டாக்' - டாக்டர் வி. சதீஷ் குமார் Sponsored content பிரெயின் அட்டாக் மூளைக்குச் செல்கின்ற ரத்த நாளங்களில் ஏற்படும் தடை மற்றும் மூளைக்குள் ஏற்படும் ரத்தக்கட்டுதான் ஸ்ட்ரோக் / பக்கவாதத்தை உண்டாக்குகிறது. இதனால் மூளைச் செல்கள் பிராண வாயுவின்றி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கின்றன. அந்தப் பெண்மணிக்கு வயது 34. கணவர், 2 குழந்தைகள், ஐ.டி.யில் வேலை என்று அமைதியான வாழ்வு. காலை 8 மணி, சமையல் வேலையில் மும்முரமாய் இருந்தவரின் வலது பக்க கை மற்றும் கால் திடீரென செயலிழந்துபோக, கிச்சனில் நிலைகுழைந்து விழுந்தார். இனி அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவ்வளவு முக்கியம், காரணம் அவருக்கு வந்திருப்பது 'பிரெயின் அட்டாக் (Brain At…

  11. Started by nunavilan,

    நல்ல vaccine எது?

  12. சிறுநீரகங்களை கவனியுங்கள் இந்தியாவில் 8 பேரில் ஒருவருக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதற்கு சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சீராக இருக்க வேண்டியது அவசியமானது. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்! ரத்த அழுத்தம் அதிகரிப்பது சிறுநீரகங்களுக்கு கேடு விளைவிக்கும். ரத்த அழுத்த அளவானது 140-க்கு அதிகமாகவும், 90-க்கு குறைவாகவும் இருப்பது சிறுநீரக செயலிழப்பதற்கு வழிவகுத்துவிடும். அதனால் ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது. மதுப்பழக்கமும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க…

  13. இன்று உலக தூக்க தினம்: நன்றாக தூங்கினால் நலமாக வாழலாம் இன்று உலக தூக்கம் தினம்.13.03.2021 ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த தூக்கம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிந்து கொள்வதற்காக உலக நாடுகளில் இன்று தூக்கம் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர், மற்றவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இரவில் குறட்டை விடுவதாக உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்களில் 4–ல் ஒருவரும், பெண்களில் 9–ல் ஒருவரும் குறட்டை மற்றும் தூக்கமின்மை பிரச்சினையில் அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது. குறட்டை விட்டு மற்றவர்களை நோகடிப்பவர்களில் 90 சதவீதம் பேர் அதற்குரிய சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்வதில்லை. நிறைய பேர் குறட்டையை ஒரு …

    • 6 replies
    • 821 views
  14. சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு எவ்வளவு உடற்பயிற்சி தேவை? நீங்கள் ஓர் ஆரோக்கியமான இதயத்தை பெற விரும்பினால், உடல் செயல்பாடு மற்றும் இருதய நோய்க்கு இடையிலான தொடர்புகள் பற்றிய ஊக்கமளிக்கும் புதிய ஆய்வின்படி, அதிக உடற்பயிற்சி மிகவும் சிறந்தது என ஆய்வு முடிவு குறிப்பிடுகிறது. அரிதாக நகரும் நபர்களைக் காட்டிலும் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் மற்றும் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று அது கண்டறிந்துள்ளது. இந்த உடற்பயிற்சியில் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஜாகிங் அல்லது வாரத்திற்கு பல மணிநேரங்கள் நடைபயிற்சி தேவைப்படுகிறதா என்பதைப் பார்ப்போம். 90,000-க்கும் அதிகமான பெரியவர்களிடமிருந்து உடற்பயிற்சி குறித்த ப…

    • 0 replies
    • 924 views
  15. ஆபத்தான உணவாக இடியப்பங்கள்.! இடியப்பம் இலங்கையில் பிரபலமாக விற்பனையாகும் அல்லது வீட்டில் செய்யப்படும், எம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்த ஆரோக்கியமான காலை, மாலை உணவாகும். சுமார் இருபது வருடங்கள் முன் பிரம்பு மற்றும் பனையோலை தட்டுகளில் அவிக்கப்படும் இடியப்பம் உண்மையிலேயே ஓர் பாதுகாப்பான உணவாக இருந்தது. ஆனால், தற்போது பிளாஸ்டிக் தட்டுகளின் வருகையுடன் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அண்மையில் கொழும்பில் உள்ள ஓர் சகோதர மொழி பொறியியலாளரான நண்பர் ஒருவர் இடியப்பம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையில் அதிர்ச்சி தரக்கூடியனவாக இருந்தன. தினசரி மூன்று வேளை கூட இடியப்பம் விரும்பி உண்ணக்கூடிய அவரின் உறவினர் ஒருவருக்கு வந்த புற்றுநோய்க்கு, ப…

    • 10 replies
    • 2.1k views
  16. நிறைய ஆய்வுகளில் தினமும் வாக்கிங் மேற்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுவதை படித்திருப்பீர்கள். அதில் சிலருக்கு உண்மையான காரணம் தெரிந்தாலும் பலருக்குத் தெரிந்திருக்காது. பொதுவாக வாக்கிங் மேற்கொள்வதாலும், இடுப்பளவு மற்றும் தொப்பை பெருமளவு குறைவதோடு, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, வாழ்நாளின் எண்ணிக்கையும் கூடும். தினமும் ஒருவர் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்துத் தெரிந்து கொண்டு, இனிமேல் வாக்கிங் செல்லுங்கள். * தினமும் வாக்கிங் செல்வதன் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தால் அபாயம் குறையும் ஆய்வுகளும் வயதான காலத்தில் வாக்கிங் செல்வதால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறுகின்றன. * நடைப்பயிற்சி இரத்த …

  17. (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் தொடராக பிபிசி தமிழ் வெளியிடுகிறது. இதன் 6 பாகங்கள் 2020இல் வெளியாகின. 9ஆம் பாகம் இது.) பாம்பு கடித்த பின்பு கடிபட்ட இடத்தில் இருக்கும் தசையை வெட்டி எடுக்க வேண்டும் அல்லது கடிபட்ட இடத்திற்கு மேல் இறுக்கமாக கைக்கொண்டு கட்ட வேண்டும் என்றெல்லாம் நீங்கள் இதுவரை எங்காவது படித்து யாராவது சொல்லிக் கேட்டு இருக்க வாய்ப்புண்டு. பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்தத்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்…

  18. உடல்நலனைக் கடத்த அனுமதிக்கலாமா? டாக்டர் சசித்ரா தாமோதரன் ஒரு கடத்தல்காரர் விமானியைக் கட்டுப்படுத்தி விமானத்தைக் கடத்தி, ஓரிடத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் விமானத்தை, மொத்தமாகத் திசைமாற்றி வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றுவிடுவது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதுபோல் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வேதிப்பொருள்கள் நம் அன்றாடப் பயன்பாட்டின் மூலம் உடலுக்குள் ஊடுருவி நம் உடலையே வேறொரு நிலைக்குக் கடத்திக்கொண்டு போனால்? கேட்கப் புதிதாக இருந்தாலும், இது நடந்துகொண்டுதான் இருக்கிறது. நமது உடலின் உறுப்புகளில் பிட்யூட்டரி, தைராய்டு, பாராதைராய்டு, பாலின சுரப்பிகள் அட்ரீனல், கணையம் போன்ற மிகச்சிறிய சுரப்பிகள், ஹார்மோன்கள் என்ற வேதிப்பொர…

  19. உடல் பருமனும் விஞ்ஞானமும்

  20. உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்பு - வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள் ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி 4 பிப்ரவரி 2020 பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, புற்றுநோய் அணுவை தாக்கும் டி-உயிரணு (சித்தரிக்கும் படம்) மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஓர் அங்கமாக இருக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு மூலம் எல்லா வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மார்பகம், நுரையீரல், புரோஸ்டேட் சுரப்பி மற்றும் உடலின் பிற பாகங்களில் உண்ட…

  21. டீரா காமத்: ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய் - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர் அம்ருதா துர்வே பிபிசி மராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TEERA KAMAT SOCIAL MEDIA படக்குறிப்பு, டீரா காமத் ``நோய் கண்டறியும் பரிசோதனைகளை முடித்த டாக்டர்கள், எங்கள் மகள் ஆறு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது என்றார்கள். மகளுக்கான சிகிச்சை இந்தியாவில் கிடையாது என்றார்கள்'' என்று டீராவின் தந்தை மிஹிர் காமத் என்னுடன் தொலைபேசியில் பேசிய போது தெரிவித்தார். ஐந்து மாதக் குழந்தையான டீரா இப்போது மும்பை எஸ்.ஆர்.சி.சி. மருத்துவமனையில் …

  22. வணக்கம் எல்லோருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். எதிர்பாராத சிகிச்சை. 1997 கார்த்திகை 27இல் 41 வயதாக இருக்கும் போது மெலிதாக நெஞ்சுவலி என்று போய் அன்ஜியோபிளாஸ்ரி செய்து இரண்டு ஸ்ரென்த் வைத்தார்கள். அதிலிருந்து சாப்பாடு உடற்பயிற்சி எல்லாவற்றிலுமே மிகவும் கவனமாக இருந்தேன்.நான் இருந்தேன் என்பதைவிட துணைவியார் மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார். இந்த நெஞ்சுவலிக்கு காரணம் புகைத்தல் தான் என்று டாக்ரர் சொன்னதும் பதின்ம வயதிலேயே பழகிக் கொண்ட புகைத்தலை அன்றிலிருந்தே இன்றுவரை தொட்டதில்லை.என்ன மனைவி மிகவும் அன்பாகவும் பக்குவமாகவும் கேட்டும் நிறுத்த முடியாததை டாக்ரர் சொல்லி நிறுத்தியதை எண்ண இப்போதும் மிகவும் கஸ்டமாகவே உள்ளது. கடந்த மாசி கடைசியில் இருந்து சன்பிரா…

  23. தற்போது உள்ள கொரோனா தடுப்பு மருந்து புதிய வைரசிடமிருந்து பாதுகாக்குமா? Digital News Team பிரித்தானியாவிலிருந்து குடும்பநல மருத்துவரும், தமிழர் நலவாழ்வு நிறுவனத்தின் தலைவருமான மருத்துவர் ஆ.புவிநாதன் நேர்காணல் கோவிட் 19 ன் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் கொரோனா வைரஸின் திரிபில் (strain) மாற்றம் ஏற்பட்டு ஒரு புதிய திரிபு உருவாகி இருப்பது இங்கிலாந்தில் அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான உலக நாடுகள் இங்கிலாந்து டனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்தன. மேலும், இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் பரிசோதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வ…

  24. வயதாவதால் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம் - தவிர்க்க முடியுமா? லாரா பிலிட் பிபிசி முண்டோ மொழி சேவை 5 ஜனவரி 2021, 08:09 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நமது எதிர்ப்பு மண்டலம் வைரஸ்களுக்கு எதிராக போராடுகிறது. கொரோனா தொற்றுநோய் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. செல்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளின் இந்த சிக்கலான வலையமைப்பு தான், நோய் தொற்று மற்றும் நோய்களில் இருந்து தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள நம் மனித இனத்திடம் இருக்கும் முக்கிய ஆயுதம். உடலின் மற்ற பகு…

  25. இலங்கையில் புற்று நோயாளர்கள் அதிகரிக்க காரணம் என்ன? – மருத்துவர் . சி.யமுனாநந்தா கருத்து 44 Views இலங்கையில் கடந்த சில தசாப்தங்களாக புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது குறித்து மருத்துவர் . சி.யமுனாநந்தா விளக்குகையில், பெரும்பாலான புற்று நோயாளர்கள் மிகவும் பிந்திய நிலையிலேயே இனம் காணப்பட்டு வருகின்றனர். பிந்திய நிலையில் இனம் காணப்படும் நோயாளர்கள் குணமடையும் வீதம் குறைவாகும். மேலும் இது பெரும் பொருளாதார சுமையினை ஏற்படுத்துகின்றது. ஆரம்ப நிலைகளில் புற்று நோயினைக் கண்டறிந்தால் சிகிச்சை வெற்றியளிக்கும் வீதம் அதிகமாகும், எனவே புற்று நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக மருத்துவ ஆலோசனை வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.