Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. நாம் வாங்கும் உடைகளில் துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் தேங்கியிருக்கலாம் என சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. புதிய உடைகளில் 100 இற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் தங்கியிருப்பதாகவும், இந்த உடைகளின் சலவைக்கு முன்னும், பின்னும் அதிலிருக்கும் இரசாயனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முக்கியமாக கினோலோன்ஸ் மற்றும் அரோமேட்டிக் அமைன்ஸ் என்ற இரு இரசாயனங்கள் பொலியஸ்டர் உடைகளில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள் டெர்மடிடிஸ் என்கிற அலர்ஜி தொடங்கி இன்னும் மோசமான பாதிப்பை உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது. இவை புற்றுநோய் ஏற்படுவதற்கும் உட…

    • 10 replies
    • 606 views
  2. சுவையான இறைச்சியோடு சேர்ந்துவரும் கொடிய புற்றுநோய் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் புற்றுநோய் ஏற்படுகின்றது எனவும், சிவப்பு இறைச்சிகளால் கூட புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனவும், உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் முகவராண்மை வெளிப்படுத்திய ஆய்வறிக்கையின் காரணமாக, ஓரளவு பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் இது தொடர்பாக 'பதற்றம்' எனக்கூறக்கூடிய அளவுக்கு நிலைமை ஏற்படவில்லை என்ற போதிலும், மேலைத்தேய நாடுகளில் அதிகளவிலான கலந்துரையாடல்கள் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, கூகிளின் தேடுதல் வரலாற்றிலேயே, புற்றுநோய் அதிகளவில் தேடப்பட்ட 24 மணிநேரங்களாக, திங்கள் மாலை (இலங்கை நேரப்படி) …

  3. கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு சில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா? கால் களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு. நாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்ப…

  4. எட்டு மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்! இரவு வெள்ளையாக இருக்கும் எதையும் சாப்பிடக் கூடாது! வாழைப்பழம், உருளைக்கிழங்கைத் தவிருங்கள்! காபி, தேநீர் குடிப்பதை நிறுத்திவிடுங்கள்! இத்யாதி, இத்யாதி... உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று ஒருவர் ஆசைப்படும்போதெல்லாம், இந்த மாதிரி உணவுக் கட்டுப்பாடு ஆலோசனைகளைக் நண்பர்களும் உறவினர்களும் வாரி வழங்குவார்கள். ஆனால், இந்த மாதிரி ஆலோசனைகளைக் கட்டுப்பெட்டித்தனமாகப் பின்பற்றுவது, உடல் எடை குறைய முழு பலனளிக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் நம்மைச் சுற்றி இந்த மாதிரி நிறைய தவறான கருத்துகள் நிரம்பியிருக்கின்றன. அதனால்தான் தீவிரமாக ‘டயட்’டில் இருப்பவர்களால்கூட, நினைப்பதை முழுமையாகச் சாதிக்க முடிவதில்லை. ‘டயட்…

  5. மகள் இனியாவுடன் நான் கவிதா. வயது 37. சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் பேராசிரியை. நான், என் கணவர் சதீஷ், மூன்று வயது செல்ல மகள் இனியா... இதுதான் என் உலகம். சின்னச் சின்ன சண்டை, நிறைய மகிழ்ச்சி, எனக்குப் பிடித்த நாவல்கள், மனநிறைவான பேராசிரியை வேலை, தோள்கொடுக்கும் தோழிகள் என்று வண்ணங்களால் நிறைந்தது என் வாழ்க்கை. 2014, மே மாதம் 19-ம் தேதி மிக இயல்பாகத்தான் விடிந்தது எனக்கும். பறவைகள் கிறீச்சிடுகிற அதிகாலையில் விழிப்புவந்துவிட்டது. ஜன்னலைத் திறந்தேன். சில்லென்ற காற்று முகத்தில் அறைய, அந்த நொடியின் பரவசத்தை லயித்தபடியே என் தினசரி வேலைகளைத் தொடங்கினேன். ஈஷா யோகா மையத்துக்குச் செல்லத் தொடங்கியதிலிருந்து நான் காபி, டீ குடிப்பதில்லை. கணவரும் மகளும் உறங்கிக்கொண்டிர…

    • 1 reply
    • 1.1k views
  6. பஞ்சபூத குளியல்! நீர், மண், வாழை, நீராவி, சூரியன் போன்ற ஐந்து குளியல்கள்தான் பஞ்சபூத குளியல் எனப்படுகிறது. இக்குளியலின் நோக்கம், "உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதுதான். கழிவுகளால் உருவாகும் நோய்களும், அறிகுறிகளும் நம்மை பாடாய்படுத்துகின்றன. நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள், உணவு பொருட்கள், உணவு பொருட்களை விளைவிக்க பயன்படுத்தும் மருந்துகள், சூழலால் உடலில் கலக்கும் நச்சுக்கள் ஆகியவை உடலை கழிவாக்குகின்றன. இவற்றை வெளியேற்றி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எதிர்ப்பு சக்தியை கூட்டும் கழிவு வெளியேற்றமே நோய்களிலிருந்து விடுபட எளிய வழிகள்" என்கிறார் இயற்கை மருத்துவ ஆலோசகர் பூபதி வர்மன். நீர் குளியல் நீர் குளியல் என்பது கழுத்து வரையுள்ள நீரில் குளிப்பதுதான். இன்றைய நகரங்களில்…

  7. யாழ் திருநெல்வேலி விவசாய கண்காட்சி அழகான பூச்செடிகள் விவசாயக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக நேற்றையதினம் திருநெல்வேலி விவசாயப் பயிற்சி நிலையத்திற்குச் சென்றிருந்தோம். அருமையான ஏற்பாடுகள். விவசாயத்தின் மீது, வீட்டுத்தோட்டத்தின் பால் ஆர்வத்தை தூண்டக் கூடிய வகையில் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஏகப்பட்டோர் அந்தக் கண்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். உரைப்பைகளில் மண்ணையிட்டு, தக்காளி, கத் தரி, மிளகாய், உற்பத்தி செய்யப்பட்டிருந்ததை பார்த்த எவரும் மகிழாமல் இருக்க முடியாது. வீட்டுத் தோட்டம் செய்வதற்கு நிலம் போதாது என குறைபடுவோருக்கு இந்த உரைப்பை முறை அவர்களை ஆற்றுப்படுத்தியிருக்கும் என்ற நினைப்பு. கண்காட்சியின் நுழைவாயில் அதன் இரு மருங்கிலும் வற்றாளைக்கொடியின் இளம்…

    • 0 replies
    • 1.4k views
  8. முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனலாம். வெந்தயம் முகப்பரு தழும்பை நீக்குவதில் மிகச்சிறந்த மருந்தாகும். முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம். * வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் * ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும…

  9. நாம் அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் கூட, செக்ஸ் இன்பத்தி்ற்கு தேவையான சக்தி உள்ளது என்பதை பலரும் அறியாத தகவல். அதை அறிந்து நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், செக்ஸ் கலையில் நாம் வெற்றி பெறுவது உறுதி. ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றினால் தான், செக்ஸ்-ல் நாம் வெற்றி பெற்றதாதக அர்த்தம். கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு உள்ளது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும் கூட காரணமாக இருக்கலாம். திருமணமான அனைவரும் மனநிறைவுடன் உள்ளார்களா என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான செக்ஸ் ம…

  10. அசைவ உணவுகளில் ஒன்றான ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். ஆட்டிறைச்சியில் கொழுப்புச்சத்து நிறைந்திருந்தாலும், அதில் சில ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன. ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள்: விட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், பொட்டாசியம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மருத்துவ பயன்கள்: ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்ப…

  11. வாழையடி வழை என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். வாழைக்கு அழிவே கிடையாது, அதன் தண்டு, காய், பழம், பூ, இலை, நார், பட்டை என எல்லாவற்றையும் நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் வழையின் மருத்துவ குணங்கள் பல. இதில் வாழைப்பூ பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கின்றது, ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். * வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். * பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ள…

  12. பழங்களின் அரசனான மாம்பழத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளனர். மனிதனை மிரட்டும் முக்கியமான வியாதிகளில் புற்று நோய் முதன்மையானது. இதற்கு சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தெரியாது எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தம் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்தால் குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வந்தாலும் அவை முழுமையாக குணப்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியாது. இந்நிலையில் லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் மாம்பழத்திற்கு புற்று நோய் கட்டிகளை குறைக்கும் சக்தி இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு புற்று நோய் மற்றும் மாம்பழம் ஆராய்ச்சியாளர்கள…

  13. மத்தி மீனில் உள்ள சத்துக்கள் தெரியுமா? கண்டிப்பாக சாப்பிடுங்கள் சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள் புரதச்சத்து - 20.9 கிராம் கொழுப்பு சத்து - 10.5 கிராம் சாம்பல் சத்து - 1.9 கிராம் நீர்ச்சத்து - 66.70 கிராம் மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.…

  14. உணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான். ஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும். உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத…

  15. பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்டது பேரிச்சம்பழம். சிறந்த சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளில் அதிகமாக விளைகிறது. இந்த பேரிச்சம்பழம் மனிதனின் பல்வேறு உடல் சுகவீனங்களை சரி செய்கின்றன.தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். மூட்டு வலி, கர்ப்ப கால பிரச்சனை, குடல் பிரச்சனை, பார்வை பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு இது வரப்பிரசாதமே.மூட்டு வலி30 வயது தாண்டிவிட்டாலே இன்றைய காலத்தில் பலருக்கும் மூட்டு வலி தொடர்பான பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. இந்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள கால்சியம் குறைபாடே. இதை சரி செய்ய தினமும் கொ…

  16. புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் பெரும்பாலும் நுரையீரல் தான் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். மற்றும் நிகோடின் எனும் மூலப்பொருள் தான் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் முதல் கருவியாக இருக்கிறது. நீங்கள் மனம் திருந்தி புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும் கூட, அதன் பிறகு நுரையீரலில் புகையின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அந்த பாதிப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் சிறந்த உணவுகளை, நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய உடனே தினந்தோறும் உட்கொள்ள பழக்கிக் கொள்வது உங்கள் உடல் நலம் மேலோங்க வெகுவாக உதவும்…. வைட்டமின் சி சத்துள்ள உணவுகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க …

  17. நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். நவ நாகரீகம் என்கிற பெயரில் இதையெல்லாமல் மறந்ததன் விளைவால் தான், முடி உதிர்வதோடு, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. வாரமொரு முறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்…

  18. காபி குடித்தால் தூக்கம் பாதிக்கப்படும என்பது எல்லோருக்கும் தெரிந்து விஷயம் தான் என்றாலும் உடலின் ஒழுங்குணர்வையும் மாற்றிவிடுகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காபியில் உள்ள கெஃபெயின் என்ற ரசயாம் உடலில் தூக்கத்தை ஏற்படுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோன் தயாரிப்பதை தடுத்துகிறது என்று பிரிட்டனின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றனர். தூங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்னர் ஒரு இரட்டை எஸ்ப்ரஸ்ஸோ குடிப்பது உடல் இயற்கையாகவே மெலடோனின் என்ற இந்த ஹார்மோனை உற்பத்தி செய்வதை 40 நிமிடங்கள் வரை தாமதப்படுத்தி விடுவதாக இந்த ஆய்வு மூலம் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்ற…

  19. நம்மூர் வாசிகள் நியூஸ் பேப்பர் இல்லாமல் பஜ்ஜி சாப்பிடமாட்டார்கள். எண்ணெய்யுடன் கூடிய பஜ்ஜியை நியூஸ் பேப்பரில் அமுக்கி தேய்த்து அவர்கள் சாப்பிடும் அழகே தனி தான். பஜ்ஜி சாப்பிடுவதால் பல்வேறு கெடுதல் வரும்னு சொல்வாங்க ஆனால் அதை விட கெடுதல் பஜ்ஜி சாப்பிட நியூஸ் பேப்பரை பயன்படுத்துவது.செய்தி தாள்கள் செய்திகளை படிப்பதற்காக பயன்படுத்துவதை விட அதன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாப்பிட்டு விட்டு கைகளை துடைப்பதற்கு அதை அதிகமாக பயன்படுத்துகிறோம். சிறிய உணவகங்கள், தெருவோர கடைகளில் அதிகமாக செய்தி தாள்களையே கை துடைக்க பயன்படுத்துகின்றனர்.செய்தி தாள்களை இப்படி பயன் படுத்துவதால் பல்வேறு ஆபத்துகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். செய்தித்தாளில் கை துடைப்பது சிறிய ஓட்டல்கள், தெருவோ…

  20. தினமும் சாப்பிடும் உணவில் மீனை சேர்த்துக்கொண்டால் மன அழுத்தம் நீக்கி மகிழ்ச்சியாக வாழலாம் என சமீபத்தில் சீனாவில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் மீன் சாப்பிட்டா கண்ணுக்கு மட்டுமில்ல மனதுக்கும் ரொம்ப நல்லதுனு இந்த ஆய்வு சொல்லுது. சீனாவின் கிழக்கில் உள்ள ஷாண்டோன்ங் மாகாணத்தில் இருக்கும் க்விங்டாவ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் ஆய்வுக் குழு இந்த ஆய்வை நடத்தியது.அவர்கள் தினசரி உணவில் மீன் உண்ணும் சுமார் ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்டு இந்த ஆய்வை நடத்தினர். அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய 2001-2014-ம் ஆண்டுகளுக்குள் உள்ள பட்டியலை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்களின் மன அழுத்தம் குறைந்தி…

  21. யு.எஸ்.- நவீன அறிவியல் அறுவை சிகிச்சை மூலம் 87வயதுடைய முதியவர் ஒருவரின் படு மோசமாக எரிந்த கையை வைத்தியர்கள் சரிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் ஹியுஸ்ரனில் உள்ள ஹியுஸ்ரன் மெதடிஸ்ட் வைத்தியசாலையில் நடநதுள்ளது.இவரது பாதிக்கப்பட்ட கையை வயிற்றிற்குள் வைத்து இந்த சத்திரசிகிச்கை செய்யப்பட்டது. இவரது வயிற்றில் உள்ள திசு பைக்குள் மூன்று வாரங்களிற்கு வைக்கப்பட்டது. சுகமடையவும், ஒரு புதிய இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்பட்டது.விறாங் றேய்ஸ் என்ற இவரின் கை தற்காலிக வீடான வயிற்றிற்குள் இருந்து வெட்டி வெளியே எடுக்கப்பட்டது.கடந்த கோடைகாலத்தில் ரயர் ஒன்றை மாற்றிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கையின் முழு பாவனையையும் விறாங் இழந்து விட்டார்.ஒரு ஓய்வுபெற்ற கால்நடை பண்ணை தொழில…

    • 0 replies
    • 1.2k views
  22. நீங்கள் நாற்பது வயதை கடந்துவிட்டீர்களா?? அப்போது கண்டிப்பாக உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வாலிப வயது மட்டும் தான் கல்லையும் கரைக்கும். வயதாக வயதாக, பஞ்சை கரைக்க கூட சிரமப்படும் நமது உடலியக்கம். அந்தந்த வயதிற்கு ஏற்ப உணவில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது கட்டாயம். ஏனெனில், இளம் வயதில் உங்களுக்கு ஆரோக்கியத்தை அளித்த அதே உணவு உங்கள் ஆரோக்கியத்தை 40 வயதுக்கு மேல் கெடுக்கலாம். உதாரணமாக, வாழைத்தண்டு சிறுநீரகத்திற்கு நல்லது. ஆனால் 50 வயதிற்கு மேல் அதே வாழைத்தண்டு சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கு தடையாகி செரிமானத்தை கெடுக்கும். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு. எனவே, நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்…

  23. வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே தலைத்தெறித்து ஓடுவோர் பலர். ஆனால் அந்த பாகற்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதனால் தற்போதைய மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் போக்கலாம். அந்த அளவில் பாகற்காயில் சத்துக்களானது நிறைந்துள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், கட்டுப்பாட்டுடன் வைத்துக கொள்ளலாம். நீரிழிவு அதுமட்டுமின்றி, வேறு பல நன்மைகளும் பாகற்காயில் அடங்கியுள்ளது. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பாகற்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. 1. கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்: கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், அதில் உள…

  24. இயற்கை நமக்கு தந்த ஓர் வரப்பிரசாதம் தான் சீரகம். சமையலில் பயன்படுத்தும் சீரகம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதனால் உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்ய சீரகம் பயன்படுகிறது. அதில் செரிமான பிரச்சனை, நோயெதிர்ப்பு சக்தி குறைவு, ஆஸ்துமா, சளி, இரத்த சோகை, தூக்கமின்மை, பைல்ஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.அதுமட்டுமின்றி, சீரகம் தற்போது பலரும் அவஸ்தைப்படும் அசிடிட்டி பிரச்சனைக்கும் நல்ல தீர்வை வழங்கும். இதனை இயற்கை மருத்துவ வைத்தியர்களும் பரிந்துரைக்கின்றனர். மேலும் சீரகம் இரைப்பையில் அதிகப்படியான அமில உற்பத்தியினால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதையும் தடுக்கும். சீரகத்தில் உள்ள சத்துக்கள் :- சீரகத்தில் புரோட்டீன், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்ட…

    • 0 replies
    • 1.6k views
  25. வியர்வை.... ஏன் துர்நாற்றம், வீசுகிறது என்பதற்கான காரணங்கள்!!!வாயுப் பிரச்சனைக்கு பிறகு ஓர் மனிதன் பொது இடங்களில் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாவது இந்த வியர்வை துர்நாற்ற பிரச்சனையின் காரணத்தினால் தான். பொதுவாக வெயிலில் அலைந்து, திரிந்து வேலை செய்பவர்களுக்கு அதிகம் வியர்க்க வாய்ப்புகள் இருக்கின்றன. வியர்வை எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது? ஆனால், சிலருக்கு சாதாரண வேலைகள் செய்யும் போது கூட அளவிற்கு அதிகமாக வியர்வை வெளிப்படும். வியர்வை வெளிவருவது நல்லது தான், ஆனால் வியர்வையோடு சேர்ந்து அதிகமாக துர்நாற்றம் வெளிப்படுவது தான் இவர்களுக்கு ஏற்படும் சிக்கலே. அதிகமாக வியர்வை வெளிபடுதல் இந்த நோய்களுக்கான அறிகுறிகள் என்று உங்களுக்கு தெரியுமா? அனைவருக்கும் தான் வியக்கிறது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.