நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
கை நடுக்கம் உடல் நடுக்கம் நடுக்கம் என்றால் என்ன? பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில் shivering என்பார்கள்.. பயத்தினால் நடுங்குவது மற்றொன்று. இவற்றைத் தவிர மற்றொரு நடுக்கமும் உண்டு. விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி சொக்கையை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும். பொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு. மருத்துவத்த…
-
- 0 replies
- 9k views
-
-
பாலுணர்வைத் தூண்டக்கூடிய மருந்துகளைப் பற்றிப் பேசும் போது நிச்சயம் அதில் வயாகரா இடம் பெற்றிருக்கும். இந்த மருந்து ஆண்களில் ஆண்மைக் குறைவு மற்றும் உறுப்பு எழுச்சி குறைபாட்டிற்கு மருந்தாக பயன்படுகிறது. பொதுவாக ஆண்களிடம் காணப்படும் இந்தக் குறைபாடுகளுக்கு, இம்மருந்து பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டவும், உறுப்பு எழுச்சியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. வயாகராவைத் தவிர இதுப்போன்ற குறைபாடுகளைக் களையவும், உணர்வுகளை ஊக்குவிக்கவும் உதவும் பல உணவு வகைகள் உள்ளன. உங்கள் உணர்வுகளை ஆரோக்கியமான வகையில் ஊக்குவிப்பதை விட வேறு என்ன சிறந்த வழி இருக்க முடியும்? இந்தப் பகுதியில் பட்டியலிடப்பட்டுள்ள உணவுகள் உங்களின் பிறப்புறுப்புகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவல்லவை. இவை இரத்த அழ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்றைய தினம் ‘பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?’ என்று சிந்திக்காத பெண்களே கிடையாது. இந்த விஷயத்தில் இன்றைய வாலிபர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் என்ன செய்கிறார்கள்? பருக்களைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டிவிட்டு, ஊடகங்களில் சொல்லப்படும் செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இவர்களுக்குப் பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை. எது முகப்பரு? நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடிய…
-
- 7 replies
- 1.4k views
-
-
நீங்கள் உடலளவில் நல்ல ஆரோக்கியமாக இருகின்றீர்கள், ஆனால் மனதளவில் உள்ளிர்களா? பலர் இல்லை! நிச்சயம் இன்றைய இயந்திர வாழ்க்கையில் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவுதான். நமது செயல்களில் ஏற்படும் சின்னச் சின்ன மாற்றங்கள் போதும் உங்களைக் குஷி படுத்த இதோ சில ஆலோசனைகள்.. * நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் ட்ரீட் வைத்துக் கொள்ளுங்கள். ட்ரீட் என்றால், பெரிய ஹோட்டலுக்குச் சென்று காஸ்ட்லி உணவுகளைச் சாப்பிடுவது என்பதில்லை. ஐஸ்க்ரீம், வெங்காய பஜ்ஜி, பேல்பூரி, பானிபூரி, சாக்லெட் என்று சிக்கனமாகக்கூட ட்ரீட் வைத்துக் கொள்ளலாம். * இரவு படுக்கப்போவதற்கு முன்பாக, உங்களுக்குப் பிடித்த வார இதழ்களை, நியூஸ்பேப்பரை பரபரப்பின்றி படியுங்கள். மனசு ரிலாக்ஸாகி, சட்டென்று தூ…
-
- 4 replies
- 646 views
-
-
கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். கண்கள் காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் வெவ்வேறு விம்பங்களின் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை காண உதவுகின்றன. இந்த வகையில் மனிதனின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அவற்றுக்கான தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார் கண் வைத்திய நிபுணர் வாசுகி குரு சாமி. சிறுவயதிலேயே கண் பார்வை குறைவடைந்து போவதற்கான காரணம் என்ன? தாய் வயிற்றில் சிசு இருக்கையில் ஏதாவது நோய் வந்தால் அது சிசுவின் கண்ணை பாதிக்க வாய்ப்புள்ளது. அதில் (TORCH) என சொல்லப்படும் நோய்கள் சின்னம்மை, ருபெல்லா போன்றவை தாய் கருதரித்து ம…
-
- 0 replies
- 26.8k views
-
-
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு. *குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். *இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள். *மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். *பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. *அதேபோல மிளகுக்கும் அதீத மருத்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
“திராட்சைக் கொடியில் பூ பிடிக்கும்போது விலை உயர்ந்த ஒரு பூச்சிக் கொல்லி மருந்தினைத் தெளிப்போம். அம்மருந்தில் ஒரு துளி கொடியின் ஓரிடத்தில் பட்டால் போதும், அம்மருந்தின் வீரியம் அக்கொடி முழுக்கப் பரவி விடும். அதன் பின்னர் பிஞ்சு பிடித்ததும், திராட்சைக் குலைகளை ஒருவகை பூச்சிக்கொல்லி மருந்தில் முக்கி நனைத்து விடுவோம். இப்படி வாரத்திற்கு ஒருமுறை என 14 வாரங்கள் செய்வதுண்டு. அப்போதுதான் எவ்விதப் பூச்சிகளும் தாக்காமல் நமக்கு அதிக விளைச்சல் கிடைக்கும். ஆனால் அதிகமாகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் திராட்சைப் பழங்களில் இல்லாமலா போகும்? நிச்சயம் இருக்கும். கொஞ்சம் யோசித்தேன்.. இப்படி மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் விதத்தில் ஒரு விவசாயம் செய்து நாம் சம்பாதிக…
-
- 0 replies
- 653 views
-
-
உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே அவனோடு தொன்று தொட்டு உறவாடிக்கொண்டிருக்கும் மிகப்பழமையான எண்ணெய் வித்து எள் மட்டுமே. நம் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல், ஜனனம் முதல் மரணம் வரை அது பின்னிப்பிணைந்து உள்ளது. குணங்கள் : கருப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, காவி, சாம்பல் மற்றும் பொன்நிறம் என எள் பல வகைகளில் உள்ளது. உஷ்ணகுணமுடையது. தோல், முடி, உடலுக்கு நல்ல உறுதி, மென்மை கொடுக்கக் கூடியது. நினைவாற்றலை பெருக்கி, ஜீரண சக்தியை அதிகரிக்கக்கூடியது. உடல் மெலிய எள் கலந்த மருந்து தயாரித்து வழங்குகின்றனர். உடல் பருமன் அதிகரிக்கவும், எள் கலந்தே மருந்து தயாரித்து தருகின்றனர். எள் இளைக்கவும், பருக்கவும் வைக்கும் திறன் கொண்டது. என்னென்ன சத்துக்கள் : அதிகளவு தாமிரச்சத்து, மக்னீசியம்,…
-
- 0 replies
- 1.4k views
-
-
நீங்க பழைய சாதம் சாப்பிட்டிருக்கிங்களா? முந்தைய நாள் வடித்த சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு பாருங்கள்! தேவாமிர்தமாக இருக்கும். சாதாரண சோற்றை விட சக்தி மிகுந்தது பழைய சாதம். நம் முன்னோர்கள் இந்த பழைய சோற்றை சாப்பிட்டுத்தான் வலிமையானவர்களாக இருந்தார்கள். ‘இந்தப் பழய சாதத்தில் பி6, பி12 போன்ற ஏராளமான வைட்டமின்கள் இருக்கிறது’ என்கிறார்கள் அமெரிக்க டாக்டர்கள். பழைய சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். பன்றிக் காச்சல் மட்டுமல்ல, எந்தக் காச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணமாகும். சிறு குடலுக்கு நல்லது. அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாகும். இளமையாக இருப்பார்கள்- …
-
- 2 replies
- 1.1k views
-
-
கொய்யாப்பழம் நமது நாட்டின் பாரம்பரிய கனி வகைகளில் குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தி, நோன்பு என இந்துக்களின் பண்டிகைகளின் போது இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது. நமது நாட்டின் உணவு பழக்க வழக்கங்கள் என்பது ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் ஆனதுதான். அதை விட்டு விலகி நாம் மேல்நாட்டு உணவு வகைகளின் மீதும், ஆயத்த உணவுகளின் மீதும் கொண்ட நாட்டம்தான் இன்று உலகளவில் சர்க்கரை நோயாளிகளை அதிகளவில் கொண்ட தேசமாக நாம் விளங்குகிறோம். அந்த வகையில் கனி வகைகளில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் கொய்யாப்பழம், பழம் மட்டும் இன்றி அதன் இலைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவையே. இந்த மரத்தின் இளம் இலைகள் வெப்பமண்டல நாடுகளில் பராம்பரிய மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகி…
-
- 0 replies
- 1.4k views
-
-
தந்திரம் எண் 07:பகுதி எண் 37:பாடல் எண் 03: மொத்தப் பாடல்களின் வரிசை எண் 2104 ஒன்றே குலமும் ஒரு்வனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்க்கதி இல்லுநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்னினைந் து்ய்மினே. 07:37:03:2104 (திராவிடநாடு கோரிக்கையைக் கைகழுவியபின்,பகுத்தறிவுப் பகலவர்கள் தேர்தலில் ஓட்டுச் சேகரி்த்திட ஏற்றுக்கொண்ட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" திருமூலர் தந்ததுதான்.) திருமூலர் ஓர் சித்தர். தமிழகத்தில் வாழ்ந்தவர். திருமந்திரம் என்ற நூலை இயற்றியவர். திருமந்திரத்தில் 3000-ம் பாடல்கள் இருக்கின்றன. திரு்மந்திரம் கூறும் உடற்கூறு் வாழ்வியல் தத்துவங்கள் அறிவியல் அறி்ஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. திருமூலர், நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை-என்னும் திருத…
-
- 8 replies
- 1.8k views
-
-
உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) உயிர்மை மாத இதழில் வெளிவந்த என் கட்டுரை இது. நம்மில் பலருக்கு இந்த நோய் இருந்தும், அது இருக்கிறதென்று தெரியாமலே வாழ்த்து வருகின்றோம். என்னை மையமாக வைத்து, இந்த நோயைப் பற்றி எழுதியிருக்கிறேன். இதில் ‘நான்’ என்பது. நானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது என் நண்பராகவோ அல்லது வேறு ஒரு நபராகவோ கூட இருக்கலாம். இதைப் படித்த பலர் பர்சனலாக யோசித்து, எதிர்வினையாற்றுகிறார்கள். இங்கு யாருக்கு இந்த நோய் இருந்தது என்பதல்லப் பிரச்சனை. நோய் மட்டுமே பிரச்சனை. இனித் தொடர்ந்து படியுங்கள். -ராஜ்சிவா- உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) நீங்கள் ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் …
-
- 0 replies
- 909 views
-
-
மனித உயிரை காவுகொள்வதில் கண்ணுக்கு புலப்படாத கிருமிகள் பாரிய பங்காற்றுகின்றன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. பாம்பு, கரடி, புலி, சிங்கத்தை கண்டு பயந்த நாம் தற்போது கிருமிகளை கண்டும் அஞ்ச வேண்டியுள்ளது. நாம் உண்ணும் உணவு முதல் அனைத்து விடயங்களிலும் இவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன. இந்நிலையில் வீடுகளில் கிருமிகளை பரப்புவதில் தூவாய்கள் மிக மோசமான குற்றவாளியாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமலறை துவாய்கள் மட்டுமன்றி குளியலறை துவாய்களும் நோய்களை மிக வேகமாக பரப்புவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தள்ளனர். துவாய்கள் அதிக நேரம் ஈரத்தன்மையுடன் காணப்படுவதனாலும் வீட்டில் கிருமிகள் அதிகம் காணப்படும் இடங்களில் பயன்படுத்துவதாலும் வீடுகளில் கிருமிகள் பெருகவும் பரவ…
-
- 0 replies
- 597 views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு அலோபதி மருத்துவர் தன் மகனுக்கு இதய அடைப்பு இருக்கிறது அஞ்சியோகிராம் செய்யலாம் என்று சக மருத்துவர் பரிந்துரைத்தாலும் இயற்கை முறையில் இதை குணப்படுத்த மருந்து இருக்கிறதா என்று நம்பிக்கையுடன் இமெயில் அனுப்பி இருந்தார். மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம், மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார், மருந்தை தெரியப்படுத்திய குருநாதருக்கு நன்றி. மருந்து என்ன என்பதை தெரியப்படுத்தும் முன் ஒரு சில வ…
-
- 3 replies
- 3.8k views
-
-
மூக்கு அடைபட்டு, மூக்கின் அருகில் உள்ள காற்று அறைகளில் நீர் தேங்குவதால் சைனஸ் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கண்களைச் சுற்றி வலி, கன்ன எலும்புகளில் வலி, தலைவலி ஆகியன ஏற்படும். இயல்பாக சுவாசிக்க முடியாது; சரிவரப் பேசவும் முடியாது; தலை பாரமாக இருக்கும்; குனியும் போதும் நிமிரும் போதும் தலை வலிக்கும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்வதால் வாசனை தெரியாது. ருசியையும் உணர முடியாது. ‘என்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலம் மூடப்பட்ட சைனஸ் அறைகளைத் திறந்து உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றி சைனஸைக் குணப்படுத்தலாம். சிகிச்சைக்குப் பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் சைனஸ் நோய் வரலாம். எனவே நம் உடம்பை நன்கு கவனித்துக் கொள்வதுடன் நோய்கள் தாக்கும் முன் தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் அவசியம். …
-
- 0 replies
- 455 views
-
-
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லா…
-
- 1 reply
- 913 views
-
-
காலை உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வரும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள சிறுவர் பள்ளிகளில் 10 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக இரண்டாம் வகை நீரழிவு வருகிறதாம். குழந்தைகளை அதிகம் தாக்குவது முதல் வகை நீரிழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடுவதன் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது. சிறுவயதிலேயே இந்நோய் வருவதை தடுக்க காலையில் அவசியம் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் என இங்கிலாந்தின் நலவாழ்வியல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்துகிறது. காலையில் அ…
-
- 1 reply
- 1.4k views
-
-
மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஆரோக்கியமான உணவு பட்டியலில் அவகேடோவும் ஒன்று. 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காக்கின்றன. ஹெல்தி ஹார்ட் வைட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயத் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. குறையும் கொழுப்பின் அளவு பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அ…
-
- 0 replies
- 661 views
-
-
'என் உறவினர் மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த பாதிப்பு ஏன் வருகிறது; தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் என்ன?' என, ஆனைமலையைச் சேர்ந்த, வசந்தராஜ்; சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த ராஜசேகர் என, இரண்டு பேர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த கேள்வியை, சென்னை அரசு பொது மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவர் பானுவிடம் ஒப்படைத் தோம். 'ஆக்டிவ் ஆக இருங்கள்; போதும்' என்கிறார் அவர். என்னதான் சொல்றார்... அவர் சொல்றதை படிங்க... மறதி நோய் என்பது, பொதுவாக வயதான காலத்தில் ஏற்படும் நோய். 65 வயதுக்கு மேல் வரலாம்; 90 வயதுக்கு மேல், இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதை, 'அல்சீமர்' என்கிறோம். வயதாகிவிட்டது என, பலர் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். இது, மறதி நோயை அதிகரிக்கும். அதனால், வீட்டிற்குள் ம…
-
- 1 reply
- 1.3k views
-
-
கடந்த சில வருடங்களாக சூரியாசிஸ் என்கிற நோயினால் அதிக உபாதைகளை எதிர்கொண்டு வருகிறேன். நோர்வேயில் பல மருத்துவர்களிடமும், இந்த நோய் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுவிட்டேன். சகலரும் இது ஆயுட்காலமும் அனுபவிக்க வேண்டிய நோய் என்று கூறிவிட்டார்கள். இது ஒரு தொற்று நோயல்ல ஆனால் இது ஒரு பரம்பரை நோயென்று அனைவரும் கூறினார்கள். என் குடும்பப் பின்னணி குறித்த விளக்கங்களை ஆழமாக கேட்டுத்தெரிந்துகொண்டார்கள்... பெற்றோருக்கு இந்த நோய் இருந்தால் 50வீத வாயப்பிருப்பதாக சகல மருத்துவர்களும் தெரிவித்தர்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் என்கிறார்கள். நான் இது குறித்து வாசித்து அறிந்த ஆய்வுகளும் அதையே ஒப்புவிக்கின்றன. இந்த நோய் என் தகப்பனாருக்கு …
-
- 0 replies
- 457 views
-
-
சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் சர்க்கரை குறையும். 2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும். 3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அம…
-
- 0 replies
- 1.3k views
-
-
Be Helpful to Others, தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம். இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள். 1 கப் எலுமிச்சை சாறு 1 கப் இஞ்சிச் சாறு 1 கப் புண்டு சாறு 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர். எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன…
-
- 1 reply
- 6.8k views
-
-
"மாதுளை, சப்போட்டா, கொய்யா போன்ற இலங்கை இந்திய பழங்களுக்குப் பதிலாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெளிநாட்டில் மட்டுமே விளையக்கூடிய பழங்களை, பெரும்பாலானோர் வாங்குவது இல்லை. நம் ஊரில் விளையாமல் இறக்குமதியாகும் அவகேடோ, கிவி போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியம்தான்'' என்கிற தஞ்சையைச் சேர்ந்த உணவு நிபுணர் ஜெயந்தி தினகரன், வைட்டமின்கள், தாது உப்புகளின் 'பவர் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் கிவிப் பழத்தின் மருத்துவப் பலன்கள் பற்றிச் சொல்கிறார். 'வைட்டமின் ஏ, சி, கே, புரதம், கார்போஹைட்ரேட், நீர்ச் சத்து என மனிதனுக்குத் தேவையான ஒன்பது சத்துக்கள் நிறைந்த ஒரே பழம் 'கிவி’த…
-
- 5 replies
- 919 views
-
-
இரண்டு கிளாஸ்க்கு மேல் தினமும் பால் குடித்தால் சீக்கிரமே “பால்” – லண்டன் ஆய்வில் ”திடுக்” தகவல். லண்டன்: எங்குபார்த்தாலும் பால் உடம்புக்கு நல்லது என்ற கூற்று நிலவி வருகின்ற நிலையில் தினமும் இரண்டு கிளாஸ்க்கு அதிகமான பால் குடித்தால் உயிருக்கே ஆபத்து என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் முடிவினை கண்டறிந்தவர்கள் உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான குழுவினர் ஆவார்கள். இந்த ஆய்வின் முடிவில், அதிக அளவில் பால் குடிப்பதால் எலும்புகளுக்கு கிடைக்கும் நன்மை சிறிதளவுதான். ஆனால், பாதிப்புகளோ கடுமையானது என்று தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகளாக ஆய்வு: அவர்கள் இதுகுறித்து, "பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து…
-
- 23 replies
- 7.2k views
-