நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
அளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பது மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை சிறிது அதிகரிப்பதாக அமெரிக்க ஆய்வொன்று கூறுகிறது. இளம் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கு சிவப்பு இறைச்சிக்கு பதிலாக பட்டாணிகள், அவரை வகைகள், முட்டைகள், கடலை, மீன் என்பவற்றை உண்பதன் மூலம் குறைக்க முடியும் என போஸ்டன் நகரிலுள்ள ஹவார்ட் பொது சுகாதார பாடசாலையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் அளவுக்கதிகமாக சிவப்பு இறைச்சியை உண்பது வயிற்று புற்றுநோயை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டது. இந்நிலையில் 24 வயதுக்கும் 43 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய 89,000 பெண்களில…
-
- 0 replies
- 526 views
-
-
இன்று விகடனில் வாசித்த ஒரு தொடரில் வந்த குறிப்பு ஒன்று: சுகர், பி.பி., போன்றவற்றை தவிர்க்க, தமிழர்கள் 'கை’க்கொள்ளும் ஒரே உத்தி... நடைப்பயிற்சி! ஆனால், நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி முறையானதா? இதுகுறித்த சில சரி, தப்பு விவரங்கள் இங்கே... நடைப்பயிற்சிக்கு மாற்றாக மருந்து கிடையாது. இந்தப் பயிற்சி இல்லாமல் எடை குறைக்கவோ, சர்க்கரை நோயை வெல்வதோ சாத்தியமே இல்லை. எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். காலையில்தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. இரவில் நடக்கையில் 5-10 சதவிகிதம் பயன் குறையலாமே தவிர, தப்பு கிடையாது. ஓடுவதற்கும் நடப்பதற்கும் கலோரி எரிப்பில் அதிக வித்தியாசங்கள் இல்லை. 30 நிமிடங்களில் 3 கி.மீ கடக்கும் வேகத்தில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் நடக்கலாம். ஆனா…
-
- 5 replies
- 2.8k views
-
-
நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது. பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது. நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்த வரை, ஒவ்வொரு பழமும் ரத்தச் சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது. முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். ஏனென் றால், ரத்தச் சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக்கூடிய பழங்களும் உள்ளன. சர்க்கரை அளவின்படி பழங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு பழத்தின் ஜி.ஐ, (GI - Glycemic Index) குறியீட்டு எண்ணை அறிந்துகொண்ட பின், உண்ண வேண்டும். ஜி.ஐ. என்பது கிளைசிமிக் குறியீடு. நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி.ஐ. குறியீ…
-
- 7 replies
- 9.9k views
-
-
“இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள். “இவவோடை டின்னர் சாப்பிடப் போனால் கடைக்காரன் பூட்டப் போறன் என்று அவசரப்படுத்தி எழுப்பினால் தான் எழும்புவாள்” என்று நக்கல் அடித்தவர் “வாய் நோகாமல் சாப்பிட்டு ஸ்டைல் காட்டுவா” என நீட்டி முடித்தார். மற்றவர்கள் தவறெனக் காரணம் காட்டிப் பேசினாலும் நக்கல் அடித்தாலும் சிலரால் தமது பழக்கத்தை மாற்ற முடியாது. இருந்தபோதும், சில பழக்கங்கள் நன்மையும் தரலாம். மெதுவாக உண்பவர்களில் பலர் மெல்லிய உடல் வாகினராக இருக்கிறார்கள். மாறாக இன்றைய உலகமானது அவசரமும் நேர…
-
- 0 replies
- 615 views
-
-
பிறந்ததிலிருந்தே உடம்பில் கவனம் எடுத்த பழக்கமில்லை. அதிலும் கடந்த சில வருடங்களாக சாப்பாட்டில் கவனமில்லை. உடலும் வயிறும் வீஙகத்தொடங்கின. மக்கள் சொல்வார்கள் அப்பா உடம்பைக்கவனியுங்கள் என. அதிலும் எவராவது என் வயதுக்காரர் மோசம் போய்விட்டால் தாங்கவே முடியாது ஆனாலும் 7 நாளும் வேலை அத்துடன் பொது வேலைகள்.................. வேலை அலுப்பு மற்றும் அதிக நேரவேலை இதனால் தூக்கம் குறைவு அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்.... எங்கு இருந்தாலும் தூக்கம் வரும் கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்.... அத்துடன் குறட்டை........ அப்பா உடற்பயிற்சி அல்லது நீச்சலுக்காவது செல்லுங்கள் அல்லது குளிசை வாங்கிப்போடுங்கள்.... இல்லை மாட்டேன் எனக்கு எதுவித வருத்…
-
- 44 replies
- 9.4k views
-
-
முயல் கறியில் உள்ள சத்துக்களையும், அதனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பார்ப்போம். இன்றைய மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், உடல் நோகாமல் வேலை செய்து வருவதாலும், உடலில் உள்ள கலோரிகளானது அதிகமாக செலவாவதில்லை. இருப்பினும் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் 60 வயதில் வரவேண்டிய இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய்கள் போன்றவை 25 வயதிலேயே தொற்றிக் கொள்கிறது. எனவே பலர் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள விரும்புகின்றனர். அதே சமயம் உடலுக்கு வேண்டிய சத்துக்களையும் பெறும் அளவிலான உணவுகளை நாடுகின்றனர். பொதுவாக அனைத்து சத்துக்களும் வளமாக இரு…
-
- 20 replies
- 34.1k views
-
-
ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையும் பொருளாதாரப் பேரழிவையும் நொறுக்குத்தீனிகள் ஏற்படுத்திவிடும் நொறுக்குத்தீனிகளை இடைவெளியின்றித் தின்று, மென்பானங்களை வரம்பின்றிக் குடிப்பதால் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் உடல்நலனைக் கெடுத்துக்கொள்கின்றனர். இது அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலி. இதுகுறித்து, நாடு முழுக்க இருந்த கவலையை அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 'நாம் செயல்படுவோம்' என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். அடுத்த தலைமுறைக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வளர வேண்டும் என்ற அக்கறைதான் இதற்கு அடிப்படைக் காரணம். நொறுக்குத்தீனி கடைகள் X நல்ல உணவுக்கான கடைகள் இந்த லட்சியத்தை எட்ட, எது சாத்தியமோ அதை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை எடுத்தோம். ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல்பூர…
-
- 0 replies
- 377 views
-
-
இப்போதுள்ள இளைஞர்களிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர விறைப்படையாமல் போகும். புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் போதும் இப்பிரச்சனை நாளடைவில் சரியாகும். மதுப்பழக்கத்தால் செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டு பாலுறவில் ஈடுபடும் இளைஞர்களுக்கு மூளைச் செயல்திறன் குறைவு, நரம்பு மண்டல பாதிப்புகள், தண்டுவடக் கோளாறு போன்றவை ஏற்பட்டு நாளடைவில் ஆண்மைக் குறைவு உண்டாகும். எனவே மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உடல் எடை அதிகரிக்கும் போது பாலுறவில் நாட்டம் இல்லாமை, விறைப்பு ஏற்படாத நிலை ஆகியவை தோன்றும். எடையைக் குறைப்பதற்கான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வருவது நல்லது. தேவையில்லாமல் தூக்க மாத்திரைகள் அல்ல…
-
- 1 reply
- 686 views
-
-
இசையை ரசிக்காத மனிதர்களே இல்லை, இசைக்கு இறைவனும் மயங்குவான் எனக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். மனிதன் பிறக்கும் பொது “ ஆ…. என்ற ஒலியை எழுப்பியவாறே பிறக்கிறான்.பிறந்த பின் தாலாட்டும், இறந்த பின் ஒப்பாரியும் இக்குழந்தைக்கு பிற மனிதர்களால் பாடப்படுகிறது. ஆக இசை என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்றாகவும், உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிப்போனது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை எனலாம், அவ்வாறு மன அழுத்தம் ஏற்படுகிறபோது அதிலிருந்து விடுபட சிலர் மது அருந்துகின்றனர். சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர், சிலர் புகை பிடிக்கின்றனர், சிலர் திரைப்படம் காணச் செல்கின்றனர், சிலர் தனக்குப் பிடித்தவரிடம் சென்று தனது சோகங்களை…
-
- 5 replies
- 7.7k views
-
-
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். அத்தகைய டயட்…
-
- 0 replies
- 3.9k views
-
-
தனிமையும் தனிமையுணர்வும் மீள வழியுண்டா? டொக்டர்.எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (SL) குடும்ப மருத்துவர் கூட்டுக் குடும்பமாக அம்மா அப்பா பாட்டன் பாட்டி என வாழ்ந்த காலங்கள் மலையேறிப் போய்விட்டன. இப்பொழுதோ பேசுவதற்கும் துயர்களைப் பகிர்வதற்கும், இன்பங்களைக் கூடிக் கொண்டாடுவதற்கும் முடியவில்லை. கோபிப்பதற்கும் திட்டுவதற்கும் கூட ஆளில்லாது துன்பப்படும் பலரை இப்பொழுது காணக் கூடியதாக உள்ளது. நவீன வாழ்வில் வசதிகளுக்குக் குறைவில்லை. எல்லாமே வீட்டிற்குள் கிட்டும். ஆனால் பேசுவதற்கு ஆள்தான் கிட்டாது. கணவன் மனைவி ஓரிரு பிள்ளைகள். ஓவ்வொருவருக்கும் அவரவரது பாடுகள். கணனி அல்லது தொலைகாட்சிப் பெட்டி முன் உட்காருவதுதான் நாள் முழவதும் வேலை. உலகையை உள்ளங்கையில் …
-
- 1 reply
- 804 views
-
-
அன்று முதல் இன்றுவரை புகை பிடிப்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாகவே இருக்கிறது. தான் பெரிய ஆள் என்பதை உணர்த்துவதற்காக சிகரெட்டை விரல் இடுக்கில் பிடித்தபடி ஸ்டைல் காட்டும் இளைஞர்கள் இன்று அதிகம். புகை பிடிக்கும் பெண்களும் இன்றைக்கு அதிகரித்து வருகிறார்கள். புகை பிடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை சார்ந்த பழக்கம் கொண்டவர்களுக்கும் மற்றவர்களைவிட புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது புதிய தகவல் இல்லை. ஆனால், ஒரு பக்கம் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்துவருவதும், மற்றொரு புறம் புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவருவதையும் ஒருசேரப் பா…
-
- 1 reply
- 514 views
-
-
ஆண்களை விடவும் இளம்பெண்கள் அதிகமான மன அழுத்ததிற்கு உள்ளாவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், ஆஸ்ட்ரோஜென் என்னும் பாலியல் ஹார்மோன் பெண்களின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தால், அதிகமான ரத்தம் செலுத்தபட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற பாலியல் மாற்றங்கள், இளம்பெண்கள் பருவத்தை எட்டும்போது, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், முரண்மூளை நோய் (schizophrenia), நரம்பியல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் போன்ற நோய்கள் ஏற்படுவதாக, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தியோடர் சட்டெர்த்வைத் தெரிவிக்கிறார். பொதுவாக, பெண்களுக்கு அதிக அளவில் மனக் கவலையும் மன அழுத்தமும் ஏற்படுக்கின்றன. அதே போல், ஆண்களுக்கு முரண்மூளை நோய் போன்ற மூ…
-
- 31 replies
- 3.8k views
-
-
கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழு வதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொய்யாக்கனியின் ச…
-
- 4 replies
- 906 views
-
-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட ‘சார்ஸ்’ கிருமிக்கு இணையான ”மெர்ஸ்” என்னும் கிருமியின் தாக்கம் வேகமாக பரவி வருவதுடன் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை இதுவரை காவுகொண்டுள்ளது. இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த நோய் கிருமி கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் ‘மெர்ஸ்’ மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமான் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின…
-
- 0 replies
- 587 views
-
-
உலக அளவில் இளம்பருவத்தினரை பாதிக்கும் நோய்களுள் மனஅழுத்த நோய் முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மனஅழுத்தம் காரணமாக மனநலம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். மனஅழுத்தம் அவர்களது 14ஆவது வயதில் தொடங்குகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புகையிலை, மதுபானம் மற்றும் போதை பொருள் பயன்பாடு, HIV, காயங்கள், மனநலம், ஊட்டச்சத்து, இனப்பெருக்கத்தில் சுகாதாரம் மற்றும் வன்முறை ஆகிய பல்வேறு விவகாரங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இளம்பெண்களை விட இளைஞர்கள் 3 மடங்கு அதிகமாக பலியாகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொது போக்குவரத்தை அதி…
-
- 2 replies
- 591 views
-
-
அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனம் அதிகம் உள்ள சிலவகை சோப்புகள், பற்பசைகள், முதலியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 சேர்மங்களை ஆய்வு செய்ததில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர்’ (4-Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான ‘டிரைகுளோசன்’ ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த ரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்பட…
-
- 5 replies
- 749 views
-
-
முதுமையில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றி முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆலோசனை வழங்குகிறார். முதுமையில் உணவு முறைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் மிதமான, சீரான உடற்பயிற்சிகள். முதுமையில் வயது மூப்பு காரணமாக 33% பிரச்சினையும், நோயினால் 33% பிரச்சினையும், உடல் உறுப்புகளை சரியாக பயன்படுத்தாததால் 33% பிரச்சினையும் ஏற்படுகின்றன என்கிறது மருத்துவம். முதுமையில் உடல் உறுப்புகளை சீராக உபயோகப்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம். உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்தால் உடல் பலவீனமாகி விடும். முதுமையில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியினால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு, உடல் பருமனை குறைக்கலாம். இதயத் தாக்குதல், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.…
-
- 0 replies
- 523 views
-
-
குங்பூ பயிற்சி பெற்றுப் பாயும் தேரர்களுக்கும், தேரைக்கும் ஒற்றுமை உண்டா? எனத் தேடினேன். கிடைத்தது 'தேரை' மனிதர்கள்!! 'இவன் தேற மாட்டான்' என்று எப்போதாவது யார் மூலமாவது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருப்போம். தேரை விழுந்த குழந்தைகளைப்பற்றி ஒரு உண்மை நிகழ்வைப்பார்ப்போம். தேரை விழுந்த தேங்காயைப்பற்றிக்கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு மேலே ஊர்ந்து சென்றபடியாகயால் கசக்கும் வெள்ளரிக்காயைப்ப்ற்றியும் கூட நமக்கு சிலர் சொல்லியிருப்பார்கள். தேரை விழுந்த குழந்தை சரியான நோஞ்சானாக இருக்கும். வாகான வளர்ச்சி இருக்காது. கிட்டத்தட்ட வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்த சோமாலியாக்குழந்தைகளைப்போல் பார்ப்பதற்கு இருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டாதுகள். பால…
-
- 0 replies
- 9.3k views
-
-
நோய்களை உணர்த்தும் நகங்கள்... ........................................................... நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். . ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நக…
-
- 0 replies
- 492 views
-
-
வீட்டில்.. கணவன்.. மனைவி.. பிள்ளைகளை.. உறவினர்கள்.. நண்பர்களிடையே கடுப்பாகி.. அடிக்கடி சண்டையும்.. வாதங்களும் நடந்தால் (யாழுக்கும் பொருந்தும் போல) அது ஆயுளின் பெரும்பகுதியை குறைக்கலாம் என்று சமீபத்தில் நடுத்தர வயதினரை வைத்து மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. இது ஆண்கள் பெண்கள் என்று இருபாலாருக்கும் பொருந்தும். அடிக்கடி கடுப்பாவதால்.. உயர் குருதி அழுத்தம்.. மன அழுத்தம்.. மன உளைச்சல்.. கவலை.. போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அது இதயம் மற்றும் மூளை சார்ந்த பாதிப்புக்களை உண்டு பண்ணி... மரணத்தையும் துரிதப்படுத்த வழிவகுப்பதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் உள்ள முக்கிய ஆபத்து என்னவென்றால்.. இது 50% - 100% வரை இறப்பை விரைவு படுத்துவதுதான். எனவே சண்ட…
-
- 13 replies
- 1k views
-
-
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இந்தக் கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும். பயன்கள்! 1. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும். 2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல…
-
- 0 replies
- 515 views
-
-
தக்காளிப் பழங்களின் பிரகாசமான சிவப்பு நிறத்திற்கு காரணமான முக்கிய இரசாயனக் கூறானது ஆண்களில் இனவிருத்தி ஆற்றலை ஊக்குவிப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லைகோபீன் என்ற மேற்படி இரசாயனப்பொருள் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை 70சதவீதத்தால் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஒஹியோ மாநிலத்திலுள்ள கிளேவலானட் மீள்விருத்தி மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வருட காலமாக உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட 12 ஆய்வுகளின் பிரகாரம் மேற்படி லைகோபீன் இரசாயனத்தை தினசரி அதிகளவில் வழங்குவதன் மூலம் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலைத் தூண்டி குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க முடியும் என கண்டறிந்துள்ளதாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் அசோக் அக…
-
- 2 replies
- 539 views
-
-
கோக்கோ கோலாவின் சில பானங்களிலிருந்து சர்ச்சைக்குரிய தாவர எண்ணெயை நீக்க முடிவு உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த பயன்படுத்தப்படும் ‘பிவிஒ- பிரோமினேடட் வெஜிடபிள் ஆயில்’ அதாவது புரோமீன் என்ற ரசாயனம் கலந்த தாவர எண்ணெயை மாற்றவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எண்ணெய் தீயணைப்பு பொருட்களிலும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது. இந்த மூலப்பொருள், கோகோ கோலா நிறுவனம் தயாரிக்கும், பேண்டா, பவரேட் போன்ற குளிர்பானங்களில் காணப்படுகிறது. ‘பிவிஒ’வை நீக்கும் இந்த முடிவு பாதுகாப்புக் காரணங்…
-
- 5 replies
- 667 views
-
-
ஆண்களின் தோலின் மூலம் விந்தணுக்களை உருவாக்கலாம்: மருத்துவர்கள் கண்டுபிடிப்பு [saturday, 2014-05-03 22:10:21] மலட்டுதன்மையுடன் வாழும் ஆண்களுக்கு மகிழ்ச்சியான நற்செய்தியாக, அவர்களது தோலைப் பயன்படுத்தியே, விந்தை உற்பத்தி செய்யலாம் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கை கூறியுள்ளது. 2012ம் ஆண்டில், அமெரிக்காவிலுள்ள PITTSBURGH பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக இந்த மருத்துவ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின்படி, மலட்டுத் தன்மையுடன் வாழும் ஆண்களின் தோலைப் பயன்படுத்தி, அவர்களுக்கு விந்து உற்பத்தி செய்து, அதன் மூலம் அவர்களுக்கு குழந்தைப் பிறப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பிரிட்டிஷ் மருத்துவத்துறை வல்லுநர்கள் இந்த ஆய்வினை மிகவும் பாராட்டியுள்ளனர். தோலின்…
-
- 2 replies
- 405 views
-