Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உலக அளவில் இளம்பருவத்தினரை பாதிக்கும் நோய்களுள் மனஅழுத்த நோய் முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலக மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மனஅழுத்தம் காரணமாக மனநலம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். மனஅழுத்தம் அவர்களது 14ஆவது வயதில் தொடங்குகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புகையிலை, மதுபானம் மற்றும் போதை பொருள் பயன்பாடு, HIV, காயங்கள், மனநலம், ஊட்டச்சத்து, இனப்பெருக்கத்தில் சுகாதாரம் மற்றும் வன்முறை ஆகிய பல்வேறு விவகாரங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், இளம்பெண்களை விட இளைஞர்கள் 3 மடங்கு அதிகமாக பலியாகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொது போக்குவரத்தை அதி…

  2. அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனம் அதிகம் உள்ள சிலவகை சோப்புகள், பற்பசைகள், முதலியவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி மற்றும் டென்மார்க்கை சேர்ந்த விஞ்ஞானிகள் 96 சேர்மங்களை ஆய்வு செய்ததில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர்’ (4-Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான ‘டிரைகுளோசன்’ ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த ரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்பட…

  3. முதுமையில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் பற்றி முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் ஆலோசனை வழங்குகிறார். முதுமையில் உணவு முறைகள் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் மிதமான, சீரான உடற்பயிற்சிகள். முதுமையில் வயது மூப்பு காரணமாக 33% பிரச்சினையும், நோயினால் 33% பிரச்சினையும், உடல் உறுப்புகளை சரியாக பயன்படுத்தாததால் 33% பிரச்சினையும் ஏற்படுகின்றன என்கிறது மருத்துவம். முதுமையில் உடல் உறுப்புகளை சீராக உபயோகப்படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கலாம். உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்தால் உடல் பலவீனமாகி விடும். முதுமையில் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சியினால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்பு, உடல் பருமனை குறைக்கலாம். இதயத் தாக்குதல், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.…

    • 0 replies
    • 518 views
  4. குங்பூ பயிற்சி பெற்றுப் பாயும் தேரர்களுக்கும், தேரைக்கும் ஒற்றுமை உண்டா? எனத் தேடினேன். கிடைத்தது 'தேரை' மனிதர்கள்!! 'இவன் தேற மாட்டான்' என்று எப்போதாவது யார் மூலமாவது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருப்போம். தேரை விழுந்த குழந்தைகளைப்பற்றி ஒரு உண்மை நிகழ்வைப்பார்ப்போம். தேரை விழுந்த தேங்காயைப்பற்றிக்கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு மேலே ஊர்ந்து சென்றபடியாகயால் கசக்கும் வெள்ளரிக்காயைப்ப்ற்றியும் கூட நமக்கு சிலர் சொல்லியிருப்பார்கள். தேரை விழுந்த குழந்தை சரியான நோஞ்சானாக இருக்கும். வாகான வளர்ச்சி இருக்காது. கிட்டத்தட்ட வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்த சோமாலியாக்குழந்தைகளைப்போல் பார்ப்பதற்கு இருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டாதுகள். பால…

    • 0 replies
    • 9.1k views
  5. நோய்களை உணர்த்தும் நகங்கள்... ........................................................... நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். . ஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நக…

    • 0 replies
    • 486 views
  6. வீட்டில்.. கணவன்.. மனைவி.. பிள்ளைகளை.. உறவினர்கள்.. நண்பர்களிடையே கடுப்பாகி.. அடிக்கடி சண்டையும்.. வாதங்களும் நடந்தால் (யாழுக்கும் பொருந்தும் போல) அது ஆயுளின் பெரும்பகுதியை குறைக்கலாம் என்று சமீபத்தில் நடுத்தர வயதினரை வைத்து மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. இது ஆண்கள் பெண்கள் என்று இருபாலாருக்கும் பொருந்தும். அடிக்கடி கடுப்பாவதால்.. உயர் குருதி அழுத்தம்.. மன அழுத்தம்.. மன உளைச்சல்.. கவலை.. போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அது இதயம் மற்றும் மூளை சார்ந்த பாதிப்புக்களை உண்டு பண்ணி... மரணத்தையும் துரிதப்படுத்த வழிவகுப்பதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் உள்ள முக்கிய ஆபத்து என்னவென்றால்.. இது 50% - 100% வரை இறப்பை விரைவு படுத்துவதுதான். எனவே சண்ட…

  7. கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரையில், எண்ணற்ற மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான் பொன்னாங்கண்ணி. இதில் பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இ‌ந்த‌க் ‌கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும். பயன்கள்! 1. பொ‌ன்னா‌ங்க‌ண்‌ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும். 2. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல…

  8. தக்காளிப் பழங்களின் பிரகாசமான சிவப்பு நிறத்திற்கு காரணமான முக்கிய இரசாயனக் கூறானது ஆண்களில் இனவிருத்தி ஆற்றலை ஊக்குவிப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லைகோபீன் என்ற மேற்படி இரசாயனப்பொருள் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை 70சதவீதத்தால் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக ஒஹியோ மாநிலத்திலுள்ள கிளேவலானட் மீள்விருத்தி மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வருட காலமாக உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட 12 ஆய்வுகளின் பிரகாரம் மேற்படி லைகோபீன் இரசாயனத்தை தினசரி அதிகளவில் வழங்குவதன் மூலம் ஆண்களின் இனவிருத்தி ஆற்றலைத் தூண்டி குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க முடியும் என கண்டறிந்துள்ளதாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மேற்படி நிலையத்தின் பணிப்பாளர் அசோக் அக…

  9. கோக்கோ கோலாவின் சில பானங்களிலிருந்து சர்ச்சைக்குரிய தாவர எண்ணெயை நீக்க முடிவு உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த பயன்படுத்தப்படும் ‘பிவிஒ- பிரோமினேடட் வெஜிடபிள் ஆயில்’ அதாவது புரோமீன் என்ற ரசாயனம் கலந்த தாவர எண்ணெயை மாற்றவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எண்ணெய் தீயணைப்பு பொருட்களிலும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது. இந்த மூலப்பொருள், கோகோ கோலா நிறுவனம் தயாரிக்கும், பேண்டா, பவரேட் போன்ற குளிர்பானங்களில் காணப்படுகிறது. ‘பிவிஒ’வை நீக்கும் இந்த முடிவு பாதுகாப்புக் காரணங்…

  10. ஆண்களின் தோலின் மூலம் விந்தணுக்களை உருவாக்கலாம்: மருத்துவர்கள் கண்டுபிடிப்பு [saturday, 2014-05-03 22:10:21] மலட்டுதன்மையுடன் வாழும் ஆண்களுக்கு மகிழ்ச்சியான நற்செய்தியாக, அவர்களது தோலைப் பயன்படுத்தியே, விந்தை உற்பத்தி செய்யலாம் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வறிக்கை கூறியுள்ளது. 2012ம் ஆண்டில், அமெரிக்காவிலுள்ள PITTSBURGH பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக இந்த மருத்துவ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின்படி, மலட்டுத் தன்மையுடன் வாழும் ஆண்களின் தோலைப் பயன்படுத்தி, அவர்களுக்கு விந்து உற்பத்தி செய்து, அதன் மூலம் அவர்களுக்கு குழந்தைப் பிறப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பிரிட்டிஷ் மருத்துவத்துறை வல்லுநர்கள் இந்த ஆய்வினை மிகவும் பாராட்டியுள்ளனர். தோலின்…

    • 2 replies
    • 399 views
  11. நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா. கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. கொய்யா முக்­க­னி­யான மா, பலா, வாழை இவற்­றிற்கு இணை­யாக வர்­ணிக்­கப்­படும் பழ­மாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்­கா­லங்­களில் தான் அப­ரி­மி­த­மாக விளையும். தற்­போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழு­வதும் உற்­பத்தி செய்­யப்­பட்டு விற்­ப­னைக்கு வரு­கி­றது. கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் உள்­ளன. ஒரு சில வகை கொய்­யாவின் சதைப்­ப­குதி ரோஸ் நிறத்தில் காணப்­படும். இவை அனைத்தின் மருத்­துவப் பயனும் ஒன்­றுதான். கொ…

    • 18 replies
    • 13.4k views
  12. 'கால்சியம் கார்பைடு' கற்கள் மூலம், செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழத்தால், உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுவதோடு, புற்றுநோய் ஆபத்தும் உண்டு என, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் லட்சுமி நாராயணன் எச்சரித்து உள்ளார். தற்போது, மாம்பழ சீசன் துவங்கி விட்டது. தமிழகம் முழுவதும், பழங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. இயற்கையாக பழுக்க, இரண்டு வாரம் வரை ஆகும் என்பதால், அதுவரை காத்திராமல், 'கால்சியம் கார்பைடு' என்ற வேதிக்கல் உதவியுடன், செயற்கையாக பழுக்க வைத்து, பணம் பண்ணவே, பெரும்பாலான வியாபாரிகள் விரும்புகின்றனர். இதுகுறித்து, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர், டாக்டர் லட்சுமி நாராயணன் கூறியதாவது: மாம்பழம் இயற்கையாக பழுக்க, 12 முதல் 15 நாட்கள் ஆகும். செயற்கை…

    • 3 replies
    • 767 views
  13. ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் செயலற்றுப் போகும் நிலையை நோக்கி உலகம் -- உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகும் நிலை வரலாம் என்று அது கூறுகிறது. சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக்ஸ்களிடமிருந்துகூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும்,இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலகச் சுகாதா…

    • 0 replies
    • 473 views
  14. அதிக நார்ச்சத்து கொண்ட உணவு மாரடைப்பு மீண்டும் வருவதைத் தடுக்கும் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது. அதில் மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த உணவுப் பழக்கம் அந்த பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தில் வரக்கூடைய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்…

    • 0 replies
    • 504 views
  15. நம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்!!! இந்த அண்டவெளியில் எல்லாமே கால ஒழுங்கிலேயே இயங்குகின்றன. அவ்வாறே நம் உடலும் இயங்குகின்று. காலம் தவறினால் காலன் நெருங்கிடுவான் என்பார் நம் முன்னோர் (இயற்கையே கடவுள்). நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தைப் போன்று உடற்கடிகாரம் முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியைச் செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்…

    • 0 replies
    • 710 views
  16. காரட் என்ன இருக்கு : விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள். யாருக்கு நல்லது : அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு. யாருக்கு வேண்டாம்: குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: கண் பார்வைக்கு உகந்தது. உடல் பரும னாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும். யாருக்கு நல்லது: ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும். யாருக்கு வேண்டாம்: சர்க்கரை நோய…

  17. தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஹொஸ்பிட்டல் மருத்துவமனையில், பற்சிகிச்சை முதல் மிகுந்த சிக்கல் வாய்ந்த இருதய, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைகள் வரை அனைத்து சிகிச்சைகளும் உன்னத தரத்தில் வழங்கப்பட்டுவருகிறது. இங்கு, உயிராபத்து விளைவிக்கக் கூடிய புற்றுநோயை குணப்படுத்துவதற்கென்றே 800 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சைப் பிரிவு ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழகத்திலேயே முதன்முறையாக பெட் சிடி ஸ்கேன் (PET CT Scan) பரிசோதனையையும் அறிமுகப்படுத்தியுள்ளது கே.எம்.சி.எச். இம்மருத்துவமனையின் தரத்தை முன்வைத்து, தென்னிந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக கே.எம்.சி.எச். தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இம்மருத்து…

    • 0 replies
    • 914 views
  18. "மாரடைப்பு" வருவதற்கான, இயல்பில்லாத சில அறிகுறிகள்!!! பல பேருக்கு மாரடைப்பு/நெஞ்சு வலி ஏற்படுவதற்கு முன்பு நெஞ்சின் நடுப்பகுதியில் அல்லது மார்பெலும்பின் பின்புறத்தில் மிகுந்த வலியை உண்டாக்கும். பொதுவாகவே நெஞ்சு வலிக்கான அறிகுறிகளை விநோதமாக அனுப்பும் நம் உடல். அதனால் அது நெஞ்சு வலி தானா என்று சம்பந்தப்பட்டவரால் கண்டுப்பிடிப்பது கடினமானதாகிவிடும். டோபிவாலா நேஷனல் மருத்துவ கல்லூரி மற்றும் BYL நாயர் சாரிட்டபில் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை தலைவர் டாக்டர் அஜய் சௌரசியா கூறுகையில், "பொதுவாக நெஞ்சுவலி தொடர்பான வழியை ரெஸ்டோஸ்டேர்னல் என்று அழைப்போம். அதாவது மார்பெலும்புக்கு பின்னால் ஏற்படும் வலி. மேலும் அசிடிட்டியால் இதய எரிச்சலும் ஏற்படும்." நெஞ்சு வலிக்கான இயல்பில்ல…

    • 1 reply
    • 4.9k views
  19. சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தாய்ப்பாலை கொண்டு சோப் தயாரித்து விற்பனை செய்ய துவங்கியதுமே, அவரின் தாய்ப்பால் சோப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்போது, குழந்தை பால் குடிக்க மறுத்ததை அடுத்து, அவருக்கு சுரக்கும் பாலை வீணாக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த அவர், தாய்ப்பாலை பயன்படுத்தி சோப்களை தயாரிக்க முடிவு செய்தார். அவரது இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் தயாரிக்கும் தாய்ப்பால் சோப்கள், குழந்தைகளுக்கு ஈரத்தன்மையால் ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவித்துள்ள இப்பெண், சோப்களை ஆன்லைன் மூலம் பி…

  20. புற்றுநோயை தடுக்கும் சக்திகொண்ட பூண்டு.. [Tuesday, 2014-04-22 11:27:38] பூண்டு மருத்துவக் குணங்கள் மிக்க நிறைந்தது. இது இதயநோய், கான்சர் போன்ற வியாதிகள் வராமல் தடுக்க வல்லது. உயர் இரத்த அழுத்தம், தீயக்கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தை இளக்கி, இரத்தக்கட்டி ஏற்படுவதை தடுக்கும் சகதி வாய்ந்தது. இதனால், உடலின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருந்தால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது. இதில் மக்னீசியம், வைட்டமின் B6, வைட்டமின் C மற்றும் செலினியம் நிறைந்துக்காணப்படுகிறது. உடலில் ஏற்படும் புண், கட்டி போன்றவற்றை ஆற்றுப்படுத்த உதவுகிறது. ஆனால், மதக்கட்டுப்பாடு (உணர்வைத் தூண்டுவதால், சில மதங்களில், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உணவில்…

  21. இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க்ஃபுட் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொள்வதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இதன் மூலம் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். மேலும் வீட்டில் உள்ளோர் எவ்வளவுதான் காய்கறிகளை வாங்கி நன்கு சமைத்துக் கொடுத்தாலும், அதை சாப்பிடுவதில்லை. குறிப்பாக பீன்ஸ் பொரியல் என்றால் பலர் சாப்பிடாமலேயே இருப்பார்கள். புற்றுநோயை‌த் தடுக்கும்! பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோ‌ய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும்! இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவியாக இரு…

    • 0 replies
    • 880 views
  22. ஏழே நாட்களில் உடல் எடையை குறைக்க எளிய 10 டிப்ஸ் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள். ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும் உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண…

  23. பிரசவம் முடிந்த பின்னர் பெண்களுக்கு தூக்கம் என்பதே கிடைக்காமல் போகும். ஏனெனில் பிறந்த குழந்தையானது புது உலகத்தைப் பார்ப்பதால், அதற்கு தாயின் கருவறையில் கிடைத்த ஒரு சுகமானது, பிறந்த பின்னர் கிடைக்காததால் அழ ஆரம்பிக்கும். இதனால் குழந்தைக்கு போதிய தூக்கம் கிடைக்காமல், அவர்களின் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக குழந்தைகள் இரவில் தான் படுக்காமல் அழ ஆரம்பிப்பார்கள். அப்படி படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை இரவில் படுக்க வைக்க சில வழிகள் உள்ளன. அந்த வழிகளை கடைப்பிடித்தால், நிச்சயம் குழந்தைகளை இரவில் நிம்மதியாக தூங்க வைப்பதுடன், நீங்களும் இரவில் நன்கு ஓய்வு எடுக்க முடியும். சரி, இப்போது இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்…

  24. ரத்தம் உறையாமை நோய் நாள் - ஏப்ரல் 17: நெருங்கிய சொந்தத்தில் திருமணம் வேண்டாம் உடல் உள்ளே இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும்போதும் உறைதலும் ரத்தத்தின் இயல்பு. உயிர் காக்கும் இந்த நிலை இயற்கை தந்த பரிசு. சிலருக்கு ரத்தம் வெளியே வந்தாலும் உறையாது. இது உயிர் பறிக்கும் பிரச்சினை.அதுவே ஹீமோபீலியா என்ற ரத்தம் உறையாமை நோய். உடலுக்குள் ரத்தக் குழாய்க்குள் ஓடிக்கொண்டி ருக்கும் ரத்தம், எப்போதும் உறையக்கூடாது. அது முழு திரவ நிலையில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான ஓட்டத்துடன் இருக்கும். ஆனால் இதே ரத்தம் உடலைவிட்டு வெளியேறும் போது, வெளிக்காற்று பட்டவுடன் உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். இதன் மூலம் ரத்தம் வீணாகாமல் உயிர் காக்கப்படும். அப்படி இல்லாமல், …

  25. உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும். தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும். இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும்…

    • 0 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.