நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகள…
-
- 8 replies
- 2.3k views
-
-
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல்தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று. சரி, இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம். * நோயெதிர்…
-
- 4 replies
- 926 views
-
-
http://www.cbn.com/media/player/index.aspx?s=/mp4/LJO190v1_WS
-
- 4 replies
- 1.1k views
-
-
“திராட்சைக் கொடியில் பூ பிடிக்கும்போது விலை உயர்ந்த ஒரு பூச்சிக் கொல்லி மருந்தினைத் தெளிப்போம். அம்மருந்தில் ஒரு துளி கொடியின் ஓரிடத்தில் பட்டால் போதும், அம்மருந்தின் வீரியம் அக்கொடி முழுக்கப் பரவி விடும். அதன் பின்னர் பிஞ்சு பிடித்ததும், திராட்சைக் குலைகளை ஒருவகை பூச்சிக்கொல்லி மருந்தில் முக்கி நனைத்து விடுவோம். இப்படி வாரத்திற்கு ஒருமுறை என 14 வாரங்கள் செய்வதுண்டு. அப்போதுதான் எவ்விதப் பூச்சிகளும் தாக்காமல் நமக்கு அதிக விளைச்சல் கிடைக்கும். ஆனால் அதிகமாகப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் திராட்சைப் பழங்களில் இல்லாமலா போகும்? நிச்சயம் இருக்கும். கொஞ்சம் யோசித்தேன்.. இப்படி மக்களின் உடல் நலத்தைப் பாதிக்கும் விதத்தில் ஒரு விவசாயம் செய்து நாம் சம்பாதிக…
-
- 0 replies
- 659 views
-
-
தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் நீக்கமுடியும். தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகிறது. 1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும். 2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும். 3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும். 4. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும். 5. தேனையும், மாதுளம் பழரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.…
-
- 4 replies
- 2k views
-
-
தேனும் கறுவாத்தூளும் - கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சி 1.தேனும் கறுவாத்தூளும் வெவ்வேறு விகிதாசாரங்களில் கலந்து உண்பது பல நோய்களை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. 2. தேன் எந்த பக்க விளைவுகளையும் தரமாட்டாது. நீரிழிவு நோயாளர்களும் சரியான அளவிகளில் மருந்தாக உண்டால் கெடுதல் வராது. 3. கனடாவில் Weekly World News என்னும் சஞ்சிகை 15 ஜனவரி 1995 ந் திகதில் தேனும் கறுவாத்தூளும் கலந்து உண்பதால் குணமாகும் நோய்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 4. கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மேசைக்கரண்டி தேனையும் அரைக்தேக்கரண்டி கறுவாத்தூளையும் கலந்து நடமாட கஷ்டப்பட்ட மூட்டுவாத நோயாளர்களுக்கு கொடுத்து பரீட்சித்ததில் 200 ல் 73 பேர் நோவிலிருந்து விடுப…
-
- 9 replies
- 2.6k views
-
-
மலைகளிலும், மரங்களிலும் தேன் கூட்டை நாம் பார்த்திருப்போம். பூமியெங்கும் உள்ள மலர்க்கூட்டங்களைக் கண்டறிந்து தேனை சேகரிக்கிறது தேனீ. தேன் உடலுக்கு அருமருந்தாகும். தேன் எவ்வாறு உருவாகிறது? (How is honey produced?) நாம் நினைத்திருப்போம் மலர்களிலிருந்து நேரடியாக தேனை உறிஞ்சிக்கொண்டு வந்தது தேன்கூட்டில் அடைக்கிறது என்று. ஆனால் உண்மை அதுவல்ல.. மலர்களிலிருக்கும் குளுக்கோஸை உணவாக அருந்திய பிறகு , தேனீயின் வயிற்றிலிருந்து சுரக்கும் ஒரு வித திரவமே தேன். இது அறிவியல் பூர்வ உண்மை. தேனிலுள்ள சத்துக்கள்: (The nutrients in honey) 200 கிராம் தேனில் 1 1/4 லிட்டர் பால் மற்றும் 1 1/2 கிலோ மாமிசம் ஆகியவற்றில் எத்தனை சத்துப்பொருள்கள் உள்ளனவோ அ…
-
- 0 replies
- 5.4k views
-
-
தேன்: தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். தேனின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பின்வரும் தேன் கலவைகள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். கண் பார்வைக்கு தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். இருமலுக்கு சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் ஆஸ்துமா அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும் இரத்த கொதிப்பு ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமு…
-
- 7 replies
- 3.2k views
-
-
தேன்.. தேன். தித்திக்கும் தேன்.. தேன் மிகச் சிறந்த உணவுப் பொரு-ளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும். ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சி-யால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதி…
-
- 0 replies
- 2.9k views
-
-
தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக்கள் எமது உடலில் தேமல் வந்தால்இபார்ப்பதற்கு அழகில்லாமல் இருக்கும் ஆகவே தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும். தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள் நீங்களும் இவற்றைச் செய்து பார்த்தால் உங்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும். இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும். ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் இல்லாமல் போய்விடும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தா…
-
- 2 replies
- 9.8k views
-
-
குங்பூ பயிற்சி பெற்றுப் பாயும் தேரர்களுக்கும், தேரைக்கும் ஒற்றுமை உண்டா? எனத் தேடினேன். கிடைத்தது 'தேரை' மனிதர்கள்!! 'இவன் தேற மாட்டான்' என்று எப்போதாவது யார் மூலமாவது நமது வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்விப்பட்டிருப்போம். தேரை விழுந்த குழந்தைகளைப்பற்றி ஒரு உண்மை நிகழ்வைப்பார்ப்போம். தேரை விழுந்த தேங்காயைப்பற்றிக்கேள்விப்பட்டு இருப்பீர்கள். பாம்பு மேலே ஊர்ந்து சென்றபடியாகயால் கசக்கும் வெள்ளரிக்காயைப்ப்ற்றியும் கூட நமக்கு சிலர் சொல்லியிருப்பார்கள். தேரை விழுந்த குழந்தை சரியான நோஞ்சானாக இருக்கும். வாகான வளர்ச்சி இருக்காது. கிட்டத்தட்ட வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்த சோமாலியாக்குழந்தைகளைப்போல் பார்ப்பதற்கு இருப்பார்கள். சரியாக சாப்பிட மாட்டாதுகள். பால…
-
- 0 replies
- 9.3k views
-
-
தேர்வு காலம்: தவிர்க்க வேண்டியவையும் தவிர்க்கக்கூடாதவையும் .. பொதுவாக பள்ளி மாணவ மாணவியருக்கு பிப்ரவரி முதலான மாதங்கள் தேர்வு காலம். அரசு தேர்வாகட்டும், ஆண்டு தேர்வாகட்டும் பிள்ளைகளை விட பெற்றோரே அதிக மனஅழுத்தத்தில் இருக்கின்றனர். எதிர்கால பயம் என்று ஒன்றை அறியாத பிள்ளைகள் மனதில் எதை எதையோ போட்டு குழப்புவது பெரியவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி, கவனம் செலுத்தி படிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் என்பதுபோல மன அழுத்தத்தோடு அலைவது உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும். பெற்றோரின் புலம்பல்களும் உண்மை நிலையும் 'இதுதான் உன் வாழ்க்கையை தீர்மானிக்கிற விஷயம்' அரசு பொதுத் தேர்வில் மிக உயர்ந்த மதி…
-
- 0 replies
- 513 views
-
-
தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும். நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்களின் பணி என்ன? இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை…
-
- 0 replies
- 2.9k views
-
-
தைராய்டு குறைபாடு என்றால் என்ன? கருச்சிதைவு உள்பட பெண்கள் உடல் நலனில் இதனால் என்ன பிரச்சனை ஏற்படும்? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்? பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்டால், தைராய்டு சுரப்பி வேலை செய்வதில் கோளாறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என சென்னையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் மாதங்கி ராஜகோபால் கூறுகிறார். குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உள்ள பெண்கள், தங்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதை உணர்ந்தால் உடனே தை…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
தைராய்டு நோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? - உலக தைராய்டு தினம் ரவி குமார் பனங்கிப்பள்ளி பிபிசி தெலுங்கு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMMED HANEEFA NIZAMUDEEN / GETTY IMAGES தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவிலுள்ள பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள். தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்…
-
- 1 reply
- 486 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 10 பேரில் ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. 2021 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 4.2 கோடி தைராய்டு நோயாளிகள் உள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (5) மூலம் வெளியான புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் அதிகபட்சமாக, கேரளாவில் பத்து லட்சம் பெண்களில் 8,696 பேருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாகவும், நாகலாந்தில் பத்து லட்சம் …
-
- 1 reply
- 814 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 17 நவம்பர் 2025, 02:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன - மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்? தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்கு சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுவது இதன் வேலை. தைராய்டு சுரப்பியின் …
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
தைராய்ட் சுரப்பியை அகற்றலாமா..? இன்றைய திகதியில் திருமணமாகி ஒன்றோ இரண்டோ குழந்தைப் பெற்றத் தம்பதிகள் தங்களின் மாதவிடாய் சுழற்சி நிற்கவிருக்கும் கடைசி கட்டத்திலோ அல்லது மாதவிடாய் கோளாறின் காரணமாகவோ மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் தங்களின் கர்ப்பப் பையை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றிக் கொள்கிறார்கள். இதனால் ஒரு சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அவர்கள் தொடர்ந்து மருந்துகளையும், மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டியதிருக்கும். அதே போல் தற்போது தைரொய்ட் பிரச்சினை ஏற்பட்டால் அதனையும் அகற்றிவிடலாமா? என கேட்கிறார்கள். ஆனால் இத்தகைய நிலை, பத்தாண்டுகளுக்கு முன் இருந்த நிலை. தற்போது தைரொய்ட் பிரச்சினை எத்தகையதாக இருந்தா…
-
- 0 replies
- 387 views
-
-
தலையைப் பொத்திக் கொண்டு வருவார்கள். 'தலை விண் விண் என்று கிடக்கு' என்பார்கள். 'நிறைய வேலையள் கிடக்கு ஒண்டும் செய்ய முடியவில்லை. தலையிடியும் அம்மலும் பொறுக்க முடியாது' எனவும் சொல்வார்கள். அதைத் தடுக்க ஆலோசனை கூறினால், 'நாளை முதல் குடிக்க மாட்டேன். இது சத்தியமடி தங்கம்..' எனத் தலைமேல் கை வைக்காத குறையாகச் சொல்வார்கள். ஆனால் மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கதைத்தான். பிரச்சனை ஏற்படும் போது தலையில் கை வைத்து கம்மென்றிருப்பார்கள். போத்தலைக் கண்டுவிட்டால் ... "..குடித்து குடலழுகி ரெண்டு நாளில் செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன் நேற்றே இறந்து போனான் சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்" என்று ஒரு கவிஞர் இணையத்…
-
- 6 replies
- 999 views
-
-
படக்குறிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட டெங்கு வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன். கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அதோடு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபு…
-
- 12 replies
- 633 views
- 1 follower
-
-
தொடர்ந்து Paracetamol உட்கொள்பவர்கள் மரணிக்கும் ஆபத்து.! தொடர்ந்து அளவுக்கதிகமாக பரசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டு வரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை அமெரிக்காவின் எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை…
-
- 0 replies
- 1k views
-
-
முயலிறைச்சியை மட்டும் வேறு எதையும் உண்ணாமல் தொடர்ந்து தின்றால் மரணம் சம்பவிக்குமாம். இன்று பிபிசி 2 - கியூ ஐ புரோக்கிராமில் சொன்னார்கள். நமது பிள்ளைகள் காடுகளில் அலைகிறார்கள். அவர்களுக்கு இந்தச்செய்தி பிரயோசனமாயிருக்குமென்று கருத்துக்களத்துக்கு எழுதுகிறேன். உணவில்லாமல் காடுகளில் நெடுநாள் இறைச்சிகளையே உண்பவர்கள் முயலிறைச்சியைத் தனியே தொடர்ந்து உண்பதைத் தவிர்க்கவும். வேறு உணவுகளோடு உண்டால் பிரச்சனையில்லையாம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
எனது நண்பர் ஒருவர், வயது 44, தொண்டையில் (டொன்சில் அருகில் ) சின்ன கட்டி வளருகிறது என்று வைத்தியரை பார்க்க போனார். அவரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற பரிந்துரைத்தார். வெட்டி எடுத்த துண்டு வித்தியாசமாக இருக்கு என்று அதனை மேலதிக பரிசோதனைக்காக அனுபின்னர்கள் . இன்று நண்பரை கூப்பிட்டு, இது புற்று நோய் என்றும், ஆறு கிழமைகள் ரேடியோ theraphy சிகிச்சை தேவை எனவும், அது உடனடியாக ஆரம்பிக்க போகிறோம் என்றும் கூறி விட்டார்கள். இதைப்பற்றி யாராவது அறிந்திருந்தால் தயவு செய்து எழுதவும். இவ்வளவு நாளும் நல்ல உற்சாகமாக இருந்தவர் இன்று......... என்னவென்று எழுத முடியவில்லை. நாளை தனது 7 வயது மகளுக்கு சொல்ல போகிறார். அவர் சொல்லா விட்டாலும் சிகிச்சை காட்டி கொடுத்து வ…
-
- 4 replies
- 10.9k views
- 1 follower
-
-
தொண்டையில் மாத்திரை சிக்கியதால் உயிரிழந்த 4 வயது சிறுவன் - கவனமாக இருப்பது எப்படி? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2025, 02:41 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே உள்ள பி.ஆர். பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் நான்கு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை, காய்ச்சல் காரணமாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர் சிறுவனுக…
-
-
- 4 replies
- 485 views
- 1 follower
-
-
பதிவுலகில் உள்ள சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பிறருக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சமையல் கலை, கைவினை, இயற்கை மருத்துவம் போன்றவற்றை சொல்லலாம். சரி நானும் எனக்கு தெரிந்த கலைகளை பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு இடுகிறேன்.(வெளக்கம் போதுமா) சரி எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு உடற்பயிற்சி இயக்க வல்லுனர் நோய் தீர்க்கும் உடற்பயிற்சி முறைகளை செயல் ரீதியாக கற்று இருக்கிறேன் இங்கு சவூதியிலும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இரும்பு கருவிகளை பயன்படுத்தாமல் ஆனால் அதைவிட அதிக பலன்கள் தரக்கூடிய பக்க விளைவுகளை எற்ப்படுத்தாத மைதான விளையாட்டு முறையிலான(Athletics exercise)வற்றை சொல்லி கொடுக்கி…
-
- 0 replies
- 2k views
-