நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக? மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான் வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போத…
-
- 7 replies
- 8.6k views
-
-
மூக்கு தோண்டுது ஒரு கேட்ட பழக்கமாகவும், அப்படி செய்பவரை அசிங்கமாக பார்ப்பதும் சமூக பழக்கம். மூக்கில் இருக்கும் சளி போன்ற பதார்த்தம் மூக்கை பாதுகாப்பதுடன், பக்ரீரியாக்கள், தூசு என்பவை உடலினுள் செல்லாமல் தடுத்து வருகிறது. மூக்கை தோண்டி அதை உண்ணும் பொது உடலினுள் செல்லாத பக்ரீரியாக்கள் உடலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு செயன் முறையை தூண்டி விடும் சாத்தியம் அதிகரிக்கிறது. இப்படி கனடாவின் சஸ்கச்சுவான் பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் சொல்கிறார். இது இன்னும் விஞ்ஞான ரீதியில் நிருபிக்கப்படவில்லை. அவர் இதை ஒரு கருதுகோளாகவே பிரேரித்து உள்ளார். http://www.ctvnews.ca/health/picking-your-nose-could-be-good-for-you-says-sask-scientist-1.1255167
-
- 1 reply
- 795 views
-
-
மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள். மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு உணவும் முக்கியமானது.அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணும்போது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஜலதோஷம் பிடித்தால் கூட சிடுசிடுப்பும் எரிச்சலும் வந்து விடுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள் மனதையும் மனதில் ஏற்படும் நலக்குறைவு உடலையும் பாதிக்கும்.இந்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட உணவு உணர்ச்சிகளில் மாறுபாட்டை உண்டாக்கும் என்று சொல்வதுண்டு. பெரும்பாலான வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வை கவனித்திருக்க முடியும்.நண்பர் ஒருவருக்கு அப்பாவுடன் சண்டை.காரசாரமான விவாதம் நடைபெற்று நண்பர் வெறுத்துப்போயிருந்…
-
- 12 replies
- 1.7k views
-
-
பொன்னான பொன்னாங்கண்ணி *தினமும் உணவில் கீரைகளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் எந்த நோய்களும் வராது.கீரை மிக குறைவான விலைகளிலே கிடைகிறது.கீரைகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை தேடி அலைந்த பலர் இன்று ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் என்று அவதி படுகின்றனர். *கீரைகளின் பயன்களை சித்தர்கள் பல நூல்களில் எழுதியுள்ளனர். உணவே மருந்து.. மருந்தே உணவு என்ற கோட்பாட்டின் கீழ் தினமும் உணவில் சேர்க்க வேண்டிய கீரைகளைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகின்றோம். இம்மாதம் மேனியைப் பொன்னாக்கும் சிவப்புப் பொன்னாங்கண்ணி பற்றி தெரிந்துகொள்வோம். *இதற்கு அகத்தியர் கீரை, பொன்னாங்காணி, சீமை பொன்னாங்கண்ணி என பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் காணப்படும் இது படர்பூண்டு வகையைச் சார்ந்தது.சீமை பொன்…
-
- 11 replies
- 1.8k views
-
-
ஏராளமான சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். இது ஆண்டு முழுவதும் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும், குளிர் காலத்தில் அதிகமாக விளையும் காய்கறி வகையாகும். முள்ளங்கி காய் மட்டுமல்லாமல், அதன் கீரையும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. சத்து மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம். 100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம். 17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம்…
-
- 4 replies
- 6.9k views
-
-
நார் சத்து (fiber) என்றால் என்ன அதன் முக்கியத்துவம் பற்றிய முன்னைய பதிவுகள் : 1. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22811 2. http://www.yarl.com/forum3/index.php?showtopic=22301 மேலே சொன்ன பதிவுகளில் சொன்னது போல் நார்ச்சத்து மல போக்கை, சீரக்குவதுடன், குடல், குதப்புற்று நோய் (colorectal cancer) ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், உணவில் நார் சத்தின் அளவை அதிகரித்தால், முதல் முறை பாரிசவாதம் (first-time stroke) ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. கனேடிய சுகாதார திணைக்களம் (Health Canada) 28 - 38 கிராம் நார் சத்தை நாளாந்தம் உண்ண வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஆனால் சராசரியாக கனேடிய மக்கள் 14 …
-
- 4 replies
- 13.2k views
-
-
குறட்டை வராமல் தடுக்க குறட்டை விடுவதால் பக்கத்தில் உறங்குபவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதுடன், அவர்கள் மீது கடும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. குறட்டையை குறைக்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன, இதனை தடுப்பதற்கு சில கருவிகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. மேலும் ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை. ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜ…
-
- 2 replies
- 7.6k views
-
-
முகச்சுருக்கத்தை தடுக்கும் வெங்காயம் முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகின்றதா முகம் வாட்டமா இருந்த மாதிரி இருக்குதா! கவலைய விடுங்க நம்ம கிட்ட இருக்குற பொருளை வைத்தே குணப்படுத்திடலாம். அது என்னனு கேக்குறீங்களா எல்லோர் வீட்டிலேயும் உபயோகபடுத்துறது தான். வெங்காயம் சிறந்த கிருமி நாசினியாகும்,முகத்தில் காணப்படும் வடுக்ககளையும், மேடு பள்ளங்களையும் நீக்குவதற்கு வெங்காயத்தை சாறு எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுக வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைவதை காணலாம். வெங்காயத்தை நன்கு மசித்து அதனுடன் தேன் விட்டு கலந்து பேக் போல் செய்து முகத்தில் போட்டுக் கொண்டு வந்தால் முகச்சுருக்கம் குறைந்து விடும். கண்கள் சோர்வாக இருந்த…
-
- 0 replies
- 651 views
-
-
இதயத்தை பாதுகாக்க தினமும் ஆப்பிள் சாப்பிடுங்கள் மனித உடலில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கியமானதொரு உறுப்பு என்றால் அது இதயம் தான். இந்த இதயத்தை பாதுகாக்க தவறியதன் விளைவாக உலகம் முழுவதும் இதய நோய்க்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். இதயத்தை காக்க மக்கள் அதிக அளவு மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதயத்துக்கு உகந்தது ஆப்பிள் என இப்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதய நோய்க்கு முக்கிய காரணமான எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்புச்சத்தை அழிக்கும் திறன் ஆப்பிள் பழத்துக்கு உள்ளது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதய குழாய்களில் (தமனிகளில்) ஏற்படும் அடைப்பை தடுக்கும் திறனும், மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ஆற்றலு…
-
- 0 replies
- 608 views
-
-
எடைக் குறைப்பும் தூக்கமும்: "மத்தியானத் தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும்." "தூங்கித் தூங்கியே குண்டாகி விட்டாள் அல்லது விட்டான்." "அதிகத் தூக்கம் நல்லதல்ல" பலமுறை இப்படி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தூக்கத்திற்கும் நம்முடைய உடல் எடைக்கும் கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது. தூக்கம் சரியானபடி இருந்தால் உடல் இளைக்கலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பத்திரிக்கைகளிலும், இணைய தளத்திலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைப்பது எப்படி என்பதில் இருந்து பல பல டிப்ஸ். பல பல வகையான டயட் குறிப்புக்கள். உடம்பு இளைக்கவேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்கிறார்கள் சிலர். சில மாதங்களுக்கு ஜிம், சில மாதங்களுக்கு யோகா என்று மாற்றி மாற்றி உடம்பை வருத்திக் கொண்டாலும் உடம்பு என்ன வோ இளைப்ப…
-
- 0 replies
- 914 views
-
-
பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில்…
-
- 0 replies
- 678 views
-
-
புற்று நோய்கள் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியவைதான் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியதுதான் புற்று நோய்கள். வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எந்ந நோய்க்குப் பயப்படாதவனும் புற்று நோயென்றால் கதிகலங்கவே செய்வான். அந்நோயால் பாதிக்கட்டவர்கள் படும் அவஸ்தையைக் கண்டும் கேட்டும் ஏற்படும் பயம் அவ்வளவு வலுவானது. புற்றுநோய் என ஒருமையில் சொன்னாலும் அது பல்வேறு வகைப்பட்டது. தோன்றக் கூடிய ஒவ்வொரு உறுப்பு மற்றும் திசுக்களுக்கு ஏற்ப அது பலநூறு வகைப்படும். ஆனால் இப்பொழுது புற்றுநோய்களுக்கு நல்ல சிகிச்சை வந்துள்ளன. ஓரளவு ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் பூரணமாகக் குணமாக்க முடியும். நோய் முற்றியவர்களும் வலி வேதனையின்றி வாழக் கூடியவகையில் சிகிச்சைகள் நல்ல முறையில் வழங்…
-
- 0 replies
- 900 views
-
-
மன அழுத்தத்தை குறைப்பது எப்படி இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவித மான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண் டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய் களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத் தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த் தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்த னைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்த கைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க் கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து க…
-
- 9 replies
- 3.3k views
-
-
நீரிழிவு நோய் பற்றிய மூட நம்பிக்கைகள்... [Wednesday, 2013-04-17 19:45:11] உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். உலகிலே அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண…
-
- 2 replies
- 760 views
-
-
நம்மில் பலர் உடம்பிற்குத் தேவைப்படும் வைட்டமின்களை தினமும் மாத்திரை வடிவிலோ அல்லது மருந்து வடிவிலோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி வருகிறோம். இவை நல்லதா , கெட்டதா என்பது ஒருபுறமிருக்க உணவின் வழியே இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இவற்றை ரசாயனக் கலப்பு உள்ள மாத்திரைகள் வழியாக எடுத்துக் கொள்கிறோமே. இது தேவைதானா என்பதே வாதம். எந்த வயது ஆண், பெண் என்றாலும் உடல் உழைப்புத் தேவை. துணி துவைத்தல், தோட்ட வேலை போன்றவற்றின் போதும் இரத்த ஓட்டம் தலை முதல் கால்வரை சீராக இருக்கிறது. குளிர்சாதன வசதியுள்ள வீடு, அலுவலகம், கார்களில் வசிப்பவர்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவை. இவர்கள் காலை பத்துமணி முதல் பகல் இரண்டு மணிக்குள் வெயிலில் நடப்பது, வேலை பார்ப்பது போன்றவற்றை வைத்துக் கொண்டால் வைட்ட…
-
- 0 replies
- 979 views
-
-
உலக ஹீமோபிலியா தினம் இன்று 17-04-2013 அனுசரிக்கப்படுகிறது. ‘50 ஆண்டுகளில் அனைவருக்கும் நவீன சிகிச்சை’ என்பதைமைய கருத்தாக கொண்டு இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக ஹீமோபிலியா அமைப்பானது சமூக இணைய தளத்தை துவங்கி, ரத்தம் உறையாமை நோயை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்ற 113 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. கனடாவின் மான்ட்ரீல் நகரில் உலக ஹீமோபிலியா அமைப்பை (டிபிள்யு ஹெச் எப்) கடந்த 1963&ல் பிராங்க் ஸ்னாபல் என்பவர் துவக்கினார். கடந்த 1989 முதல் அவரது பிறந்தநாளான ஏப்ரல் 17&ல் உலக ஹீமோபிலியா நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹீமோபிலியா என்பது ரத்தம் உறையாமல் போகும் பரம்பரை நோய். சாதாரணமாக மனித உடலில் ஏதாவது காயம் ஏற்படும்ப…
-
- 0 replies
- 984 views
-
-
ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும். சரித்திரம்: - வெப்பப்பிரதேச காய். தென்கிழக்கு ஆசியா இதன் பிறப்பிடம் என்கிறார்கள். அமேசான் காடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளும் பாகற்காய் வளர சிறந்த இடங்களாகும். ஆசியர்கள் மிக அதிகமாக சாப்பிடும் உணவு இது. சீனர்கள் பழங்காலத்திலிருந்தே பாகற்காய் சா…
-
- 0 replies
- 1.1k views
-
-
செயற்கையாக பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீகரம் வெற்றிகரமாக செயற்படுகின்றது - ஏனைய அங்கங்களும் விரைவில் உருவாக்கப்படலாம்! [Monday, 2013-04-15 20:51:49] பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது. இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு ப…
-
- 1 reply
- 396 views
-
-
பக்கவாதம்.. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குருதிக்குழாய்களில் வெடிப்பு அல்லது அடைப்பு ஏற்படுவதன் மூலம் ஏற்படுகிறது. பொதுவாக வயதானவர்களின் தோன்றும் இந்த நிலை இன்றைய கால வாழ்வியல் நடத்தை மாற்றங்களின் அடிப்படை உட்பட்ட பல காரணங்களால் இள வயதினரிடையேயும் நடுத்தர வயதினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது. முள்ளந்தண்டுப் பகுதியில் உள்ள மூளையின் நீட்டமான முண்ணானில் ஏற்படும் பாதக விளைவுகளாலும் இது ஏற்படக் கூடும். இந்த நிலைக்கு உயர் குருதி அழுத்தம்.. குருதியில் கொலஸ்ரோல் அளவு அதிகரித்துக் காணப்படுவது.. அதிக உடற்பருமன்.. மதுபானம்.. புகைத்தல்.. போன்ற அநாவசிய செயற்பாடுகள்.. குறைந்த உடற்பயிற்சி அதிதீவிர உடற்பயிற்சி போன்றவைகளோடு பிறப்புரிமை சார்ந்த சில நிலைகளும் காரணமாகின்றன. அத்…
-
- 21 replies
- 2.8k views
-
-
ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..! ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் அபாயங்கள்..! இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள். ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
முடி கொட்டுவதற்கான காரணங்கள் பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம். ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது. நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந…
-
- 1 reply
- 1.3k views
-
-
மூளையை பாதிக்கும் பத்து பழக்கங்கள் 1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது...! காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது...! இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல்...! மூளை சுருங்கவும், 'அல்ஸைமர்ஸ்' வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்...! நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதை தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. 5. மாசு ந…
-
- 3 replies
- 901 views
-
-
http://tamilworldtoday.com/home http://tamilworldtoday.com/archives/4426 பற்பசை இல்லாத ஒரு வாழ்க்கையைக் குறித்து நம்மால் சிந்திக்க கூட முடிவதில்லை. சுகந்தமான சுவாசத்திற்கும், வலுவான பற்களுக்கும் நம்மில் பெரும்பாலோர் பற்பசைகளையே நம்பியுள்ளனர். ப்ரஸ் மற்றும் டூத் பேஸ்டுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் செலவிடப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமான பற்பசைகளும், ப்ரஸ்ஸுகளும் நமது சந்தையை ஆக்கிரமித்துள்ளன. நமது ஒவ்வொரு நாளும் பற்பசையில்இருந்துதான் துவங்குகிறது. “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்ற பழமொழிக்கேற்ப முன்பெல்லாம் நமது முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேப்பங்குச்சியையும் பல்துலக்க பயன்படுத்…
-
- 3 replies
- 1.1k views
-
-
அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. சமீப காலமாக இயற்கை சார்ந்த மருத்துவங்களை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளை நாடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இயற்கை முறை மருத்துவத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் கூடுதல் தகுதியாக அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான படிப்பை மேற்கொள்கின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அக்குபஞ்சர் மருத்துவமனைகளும் மாவட்டங்கள் தோறும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடு…
-
- 0 replies
- 4k views
-
-
உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் FAT BURNING TIPS -உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள் அதிகமான உடல் பருமன் அல்லது பெருத்த உடல் மருத்துவ இயல், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு ஆங்கிலத்தில்Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது. அறுவை சிகிச்சை ம…
-
- 1 reply
- 971 views
-