நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் கீரைகள். கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, அவற்றில் ஒரு வகை தான் மணத்தக்காளி கீரை. இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது. * வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம். * மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னையிலிருந்து விடுபடலாம். * மேலும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைப…
-
- 0 replies
- 532 views
-
-
[size=4]இன்றைய அளவில்கூட கர்ப்பிணியின் மரணத்திற்கும், கருக் குழந்தையின் மரணத்திற்கும் முக்கியக் காரணமாக விளங்கும் நோய்களுள் மிகை இரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம். சாதாரணமாக இரத்த அழுத்தத்தில் சுருங்கு இரத்த அழுத்தம் 120 மி.மீ. ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 80 மி.மீ. ஆகவும்தான் இருக்கும். முதல் ஆறு மாத கர்ப்பக் காலத்தில் இரத்த அழுத்தம் சற்று குறைந்து காணப்படும். சுருங்கு இரத்த அழுத்தம் 100 ஆகவும், விரிவு இரத்த அழுத்தம் 70 ஆகவும் இருக்கக்கூடும். கடைசி மூன்று மாத காலத்தில்தான் இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும். 24 வாரத்திற்குப் பிறகுதான் இரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கிறது. விரிவு இரத்த அழுத்தம் 130 மி.மீட்டரைத் தாண்டினால் அதை இதயத்தால் தாங்க இயலாது. …
-
- 0 replies
- 532 views
-
-
எதைக் குறைத்தால் எடை குறையும்....? ஆ.....இவ்வளவு வழி(லி)களா...? [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 10:02.25 மு.ப GMT ] உடல் எடை ஒரே நாளில் அதிகரித்து விடுவதில்லை. அதேபோல்... ஒரே நாளில் குறைத்துவிடவும் முடியாது. இன்றைய அவசர யுகத்தில் துரித உணவுகளே தினப்படி உணவுகளாக மாறிவிட்டன. அளவுக்கு அதிகமான உணவு, உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எண்ணெய் - மசாலா பொருட்கள் இவற்றால் உடம்பில் அதிகப்படியான கொழுப்பு சேர்கிறது. போதிய உடற்பயிற்சி இல்லாமல் போகும்போது, உடல் பெருத்து, வயதுக்கு மீறிய தோற்றம் தெரிகிறது. இதய நோய், நீரிழிவு, கான்சர் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. ஒவ்வொருவரின் உயரத்துக்கும் ஏற்…
-
- 0 replies
- 532 views
-
-
ட்ரக்கியோஸ்டோமி ஏன்? எப்படி? யாருக்கு? ஓர் அலசல்! #Tracheostomy கடந்த சில நாட்களாக 'ட்ரக்கியோஸ்டோமி' என்ற சொல் பரவலாக அடிபடுகிறது. ஜெயலலிதாவுக்கு இந்த சிகிச்சை கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் கவனம் பெறத்தொடங்கியது இந்த சொல். தற்போது, கருணாநிதிக்கும் இதே சிகிச்சை செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். உண்மையில் எம்.ஜி.ஆரோடு சேர்த்து இதுவரை மூன்று முதல்வர்களுக்கும், பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ட்ரக்கியோஸ்டோமி என்றால் என்ன? எதற்காக இந்த சிகிச்சை செய்யப்படுகிறது? யாருக்கு இந்த சிகிச்சை தேவைப்படும் என்று பார்ப்போம். ட்ரக்கியோஸ்டோமி (Tracheostomy) என்பது ஒரு அறுவைசிகிச்சை முறையாகும். மூச்சுக்குழலில், நுரையீரலில் …
-
- 0 replies
- 531 views
-
-
தானிய வகைகள் என்பது நம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது. நவதானியங்கள் என்பது சமையிலில் ருசிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த தானிய வகையில் ஒன்று தான் கோதுமை. கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும். கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரு…
-
- 1 reply
- 531 views
-
-
மீன் தோலின் மூலம் பெண்ணுக்கு பிறப்புறுப்பு!: வைத்தியர்கள் சாதனை பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜூசிலென்ஸ் என்ற 23 வயது இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர். மேலும், ஜூசிலென்ஸ் தன்னுடைய 15 வயதில் இருந்து இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய பெற்றோரின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இவருக்கு மீனின் தோலை பயன்படுத்தி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் முடிவு எடுத்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்வதற்காக “திலப்பியா” என்ற …
-
- 0 replies
- 530 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சோஃபியா பெட்டிஸா பதவி, பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலை நிபுணர்கள், மாய சக்தியின் பிறப்பிடம் என்றும் கூறுகின்றனர். தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு அம்சங்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பலை, அதில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக சேமித்து வைத்து பயன்படுத்துகின்றனர். மூன்று குழந்தைகளுக்கு அப்பாவான ஜேம்சன் ரைடெனூர் அவருடைய 39 வயதில் முதன்முறையாக தாய்ப்பாலை அருந்தினார். அவருடைய துணைவி மெலிசா குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துவந்தார். அதிகமாக சுரக்கும் தாய்ப்ப…
-
-
- 4 replies
- 530 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ்: "செல்பேசி திரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும்" 12 அக்டோபர் 2020 பட மூலாதாரம், GETTY IMAGES கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருவுறா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) போன்றவற்றின் பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம், கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த ஆய்வானது இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 529 views
-
-
[size=4]பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கும் ஆண்களை கணிசமாக பாதிக்கும் புராஸ்டேட் புற்றுநோயின் தீவிரத்தன்மையை கண்டுபிடிக்கும் ரத்தபரிசோதனை முறை ஒன்றை லண்டனில் இருக்கும் புற்றுநோய் ஆய்வு மையம் ஒன்று வடிவமைத்துள்ளது.[/size] [size=4]ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயில் வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. இவற்றை தீவிரத்தன்மை கொண்டவை என்றும் தீவிரத்தன்மையற்றவை என்றும் இரண்டு பொதுவகைகளாக மருத்துவர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.[/size] [size=4]இதில் தீவிரத்தன்மையற்ற புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் உரிய சிகிச்சை மூலம் பல ஆண்டுகள் வாழமுடியும். அதேசமயம், தீவிரத்தன்மையற்ற புராஸ்டேட் புற்றுநோய் தாக்கியவர்கள் …
-
- 0 replies
- 529 views
-
-
மதுப் பழக்கம் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை ஆண்களை பெரும் குடிகாரர்கள் என்ற ரீதியில் கூறுவார்கள். அமெரிக்காவில். பிரபலமான தொலைக்காட்சி தொடரான ‘டான் டிரேப்பரின் மேட் மென் க்ரானிஸ்‘ - லும் இது சிறப்பாக சித்தரிக்கப்பட்டிருக்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில் பெண்க…
-
- 0 replies
- 529 views
-
-
ஆண்களைவிட பெண்களை துரத்தும் எலும்பியல் நோய் பற்றி தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இளவயதில் மாதவிடாய் நின்றுபோவதால், இந்தியாவில் இளம்பெண்கள் பலர் எலும்பு மெலிதல் என்று சொல்லப்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்படுவதாகவும், மாறிவரும் வாழ்க்கை சூழல் காரணமாக ஐந்தில் ஒரு பெண், இந்த நோய் பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும் சென்னையைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய் கூறுகிறார். மாறிவரும் உணவுப் பழக்கம், கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்து குறைபாடு, …
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
அமெரிக்கன் மா... இங்கிருந்து நம்மூருக்கு வந்தது. இப்போது அங்கிருந்து புரோசன் (Frozen) பரோட்டாவாக வருகின்றது. அது தரும் நோயை பாருங்கள்.
-
- 1 reply
- 529 views
-
-
இது மருத்துவ முறை அல்ல... வாழ்க்கைமுறை! 'வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும்' என்று ஆரோக்கியமான வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கும் 3,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மருத்துவ முறை ஆயுர்வேதம். வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது உடல்நலம், ஆரோக்கியம். இவை இரண்டுக்கும் அடிப்படை வாழ்க்கைமுறை. எனவே, ஆயுர்வேதம் என்பது மருத்துவம், சிகிச்சையோடு நின்றுவிடாமல், வாழ்க்கைமுறையும் கற்றுத் தந்தது. ஓர் ஆயுர்வேத வைத்தியர், இன்னொரு வைத்தியருக்கு கற்றுத்தரும் விஷயமாக அல்லாமல், மக்கள் மருத்துவமாக இருந்தது ஆயுர்வேதம். `பாட்டி வைத்தியம்’ என்ற பெயரில் நம்முடைய மூதாட்டிகள் சர்வசாதாரணமாகச் சொல்லும் மருத்துவக் குறிப்புகள்கூட ஆயுர்வேதத்தின் ஓர் அங்கமே. இயற்கைய…
-
- 0 replies
- 528 views
-
-
ஒரே ஊசியில் சாத்தியமாகும் குழந்தை பருவ தடுப்பூசிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வழங்கக்கூடிய தடுப்பு மருந்துகளை படிப்படியாக ஒரே ஊசியில் வழங்குகின்ற தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஒரே ஊசியில் வழங்கக்கூடிய இந்த தடுப்பு மருந்து நுண்ணிய உறைகளில் சேமிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவுடன் தொடக்க…
-
- 0 replies
- 528 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் உண்டானதன் காரணமாக பலநூறு கோடி டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டால்க்கையை அடிப்படையாக வைத்து தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்று அந்த நிறுவனம் இதுவரை தொடர்ந்து கூறி வந்தது. அந்த நிறுவனத்தின் டால்க் தயா…
-
- 0 replies
- 527 views
-
-
உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்' * எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். * ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம். * பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. *`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் …
-
- 0 replies
- 527 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான். இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டு…
-
- 0 replies
- 527 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,சஜித் ஹுசைன் பதவி,பிபிசி ஹிந்திக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் முன்பெல்லாம் உடல் பருமன் என்பது மேற்கத்திய நாடுகளில் மட்டும்தான் பிரச்னையாக பார்க்கப்பட்டது, ஆனால் சமீப ஆண்டுகளாக இந்தியா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் பிரச்னையாக மாறியுள்ளது. இதை எதிர்கொள்ளும் பொருட்டு, உடல் பருமனுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற 'மான் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில், தாங்கள் எடுத்துக்கொள்ளும் எண்ணெயின் அளவை 10 சதவிகிதமாக குறைக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். உடல் பருமனை குறைப்பதில் அது முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார். "ஆரோக்கியமான நாடாக மாறு…
-
- 2 replies
- 526 views
- 1 follower
-
-
[size=4]உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் ஆற்றல் மிளகாய் வற்றலுக்கு இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரசாரமாய் உணவில் மிளகாய் வற்றலை சேர்த்து சாப்பிடுபவர்கள் உடல் எடையைப் பற்றி இனி கவலைப்படத்தேவையில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.[/size] [size=4]இந்திய சமையலில் சுவைக்காகவும், வாசனைக்காகவும் பொருட்களை சேர்க்கின்றனர். சீரகம், வெந்தையம், மிளகு, பூண்டு, மிளகாய் என பல பொருட்களை கலந்துதான் சமையல் செய்யப்படுகிறது. இனிப்பு, காரம், புளிப்பு என அறுசுவைகளையும் சமையலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் பல பொருட்களை சமையலில் பயன்படுத்திவருகின்றனர் முன்னோர்கள்.[/size] [size=4]நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொரு…
-
- 0 replies
- 526 views
-
-
முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம். கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது. மதுப் பழக்கமுடையோர…
-
- 0 replies
- 526 views
-
-
அதிகம் பொரித்த உணவுகளை உட்கொள்பவரா நீங்கள்? : ஆபத்து கிழங்கு வகைகளை கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துண்ணல் மற்றும் அதிக வெப்பத்தில் நீண்ட நேரம் கருகவிடப்படும் உணவுகள் உண்ணுதல் என்பன புற்றுநோயை ஏற்படுத்துமென புதிய மருத்துவ ஆய்வியல் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதிகளவான மக்கள் வெப்பத்தில் நீண்ட நேரம் வறுத்த உணவு பொருட்களையே விரும்பி சாப்பிடுகின்றனர். அது குறித்து உணவு தர நிர்ணய நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆய்வில் பொன்னிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக…
-
- 0 replies
- 526 views
-
-
பூட்டிய அறையில் ஒரு கொசுவத்தியை கொளுத்துவது 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமமாகும். கொசுவத்தி, ஊதுவத்திகளில் இருந்து வரும் புகையை நுகர்வதால் நுரையீரல் பாதிப்பு மட்டும் ஏற்படுவதில்லை கேன்சர் நோய் வரக்கூட வாய்ப்பிருக்கிறது என கூறுகிறார் புனேவின் செஸ்ட் ரிசேர்ச் பவுண்டேஷன் இயக்குநர் சால்வி. தேசிய அளவிளான கருத்தரங்கு ஒன்றில் பேசிய சால்வி, "பூட்டிய அறையில் ஒரே ஒரு கொசுவத்தியை கொளுத்துவது 100 சிகெரட்டுகளை புகைப்பதற்கு சமமாகும்" என்றார். அவர் மேலும் கூறுகையில்: "பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் ஊதுவத்தியிலிருந்து வெளியேறும் புகையில் லெட், அயர்ன், மேன்கனீஸ் போன்ற நச்சுப் பொருட்கள் உள்ளன. இதேபோல், வீடுகளில் பயன்படுத்தப்படும் கொசுவத்தியில் பைரத்திரின் (pyrethrin) என்ற பூச்சிக்கொ…
-
- 0 replies
- 526 views
-
-
8 மணி நேரத் தூக்கம் என்பது ஆரோக்கியத்துக்கான ஓர் ஒழுக்கம். இதனுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டியோ அல்லது ஒரு மணி நேரத்தைக் குறைத்தோ தூங்குவது உங்கள் உடல்நிலையைப் பொறுத்தது. உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றைப்பற்றி விரிவாகச் சொல்கிறார் தூக்கவியல் மருத்துவர் ஜெயராமன். தூக்கமென்றாலே 8 மணி நேரம்தானா..? ஒரு நல்ல தூக்க ஒழுக்கம் என்பது இரவு 10 மணிக்குப் படுத்து காலை 6 மணிக்கு கண் விழிப்பது. இதுதான் 8 மணி நேரத் தூக்கம். பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி நேரம்வரை தூங்குவார்கள். 10 வயதில் 12 மணி நேரம், வளர்ந்தபிறகு 6 முதல் 8 மணி நேரம். இப்படி வயதுக்…
-
- 1 reply
- 526 views
-
-
கிழங்கு வகையைத் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாமா? மின்னம்பலம் உருளைக்கிழங்கு சிப்ஸுக்கும் ரோஸ்ட்டுக்கும் மயங்காதவர் உண்டா? சேனை சாப்ஸைத் தட்டில் வைத்தால் ஒதுக்கிவிடத்தான் முடியுமா? அத்துடன், வீட்டுக்குக் காய்கறிகள் வாங்கும்போது கண்ணில்படும் கிழங்கு வகையையும் சேர்த்தே வாங்கி வருவோம். ஆனால், ‘மண்ணுக்கு அடியில் விளையும் உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடானவை. எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும்’ என்று பலரும் ஆலோசனை சொல்வதைப் பார்க்கிறோம். இன்னொருபுறம் கேரட், பீட்ருட் போன்றவற்றில் சத்துகள் அதிகம் என்று சொல்வதையும் கேட்கிறோம். எது சரி... எது தவறு? ‘‘நம்முடைய அன்றாட உணவில் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றை நேரடியா…
-
- 0 replies
- 526 views
-
-
இரத்த ஓட்டத்தை சீராக்கும் வாழைப்பூ வெட்ட வெட்ட மீண்டும் துளிர்விடும் வாழை மரத்தின் பயன்பாடுகள் எண்ணிலடங்காதவை. இதில் வாழைப்பூவும் முக்கிய அங்கம் வகிக்கின்றது. வாழைப்பூவை உணவாக இருவாரம் உட்கொண்டால் இரத்தத்தில் கொழுப்புத்தன்மை, பசைத்தன்மைகள் குறைந்து இரத்த ஓட்டம் சீரடையும். இரத்த ஓட்டம் சீரடையும் பட்சத்தில் ஆக்ஸிஜன், இரும்புச்சத்து அதிகப்படியாக உட்கிரகிக்கப்படுவதால் இரத்தச் சோகை என்பது தலை தூக்காது. துவர்ப்பு தன்மையை தன்னகத்தே அடக்கியுள்ள வாழைப்பூ இரத்தத்தில் கலக்கும் அதிக அளவு சர்க்கரையை கூட மட்டுப்படுத்தும் இன்றைய மாறுபாடான உணவு முறை பழக்கம், மன உளைச்சலால் ஏற்படும் செரியாமை இவைகளால் வாயு சீற்றம் அதிகமாக…
-
- 0 replies
- 526 views
-