நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
புத்திசாலியாக இருப்பதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பு இல்லை என்பதற்கு, வால்ட் டிஸ்னி, வின்ஸ்டன் சர்ச்சில், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்... எனப் பல உதாரணங்கள் உண்டு. ஆனாலும், 'நேத்து படிச்சது இன்னைக்கு ஞாபகம் இல்லைன்னா எப்படி... மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடுது?’ எனும் கவலை நம்மில் பலருக்கும் உண்டு. ஒன்பது வகையான அறிவாற்றல்கள் இருப்பதாக நவீன அறிவியல் சொன்னாலும், படித்ததை ஞாபகம் வைத்து, அப்படியே வாந்தி எடுக்கும் ஸ்கூல் இயந்திரத்தை, 'பல தொழிலுக்கும் தகுதியானவர்’ என்று தேர்ந்தெடுப்பதுதான், அந்த ஒன்பது அறிவாற்றல்களில் ஞாபகசக்தியை மட்டும் சமூகம் உசத்திப் பிடிக்கக் காரணம்! எப்படியோ முக்கி முனகிப் படித்து, வேலை தேடி, உழைத்து, ஓடி, ஓயும் சமயத்தில் மீண்டும் அந்த 'ஸ்கூல் மனப்பாடப் பிரச்…
-
- 0 replies
- 935 views
-
-
புத்திசாலியான குழந்தைகள் வளர.... ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்பார்கள். குழந்தை வளர்ப்பு என்பது தனி கலை. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு என்று ஒரு உலகத்தை வைத்துக் கொள்கிறது. அதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உலகத்துக்குள் சென்று அவர்களின் எண்ணங்களை பாராட்டி, அதே நேரம் அவர்களை நமது நடைமுறை வாழ்க்கைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு பொற்றோர்களின் கடமை ஆகும். குழந்தைகளுக்கே உள்ள பயத்தை போக்குவது முதலில் நம் கடமை. அதற்கான வழிகளை கையாள வேண்டும். இருட்டான நேரத்தில் அவர்கள் பயப்படுவதை தவிர்க்க தேவையான தன்னம்பிக்கை கதைகளை கூற வேண்டும். அப்போது இருட்டு பயத்தில் இருந்து குழந்தை விடுபடும். அதன்பிறகு குழந்தைகள் அணி…
-
- 11 replies
- 4k views
-
-
திருமணத்துக்கு பிறகு மூன்று மாதத்தில் இருந்தே கணவனிடமும், மனைவியிடமும் கேட்கத் தொடங்கப்படும் கேள்விகள்தான்.. "விசேஷம் ஏதாவது உண்டா?", "இது வரையிலும் ஒன்றுமில்லையா?" போன்றவை. "அதெல்லாம் ஒரு வருஷம் பொறுத்துதான்," என்று நழுவுவதுக்கு ஒரு பதில் சொல்லி நாம் சமாளிப்பது வழக்கம். ஆனால், நாளடைவில் நம்முடைய மனதிலும் ஒரு குழந்தையைக் கொஞ்சிப் பார்க்க ஆசையும், அதற்கு தமதமாவதினால் வருத்தமும் உண்டாக தொடங்குகிறது. அதோடு, நம் மனதிலும் டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். கடைசியில், மருத்துவமனைகளில் ஏறி இறங்கத் தொடங்குவோம். இங்கேயும் ஆரம்பிக்கின்றது புதிய பிரச்னைகள்... ஆணுக்கும் பெண்ணுக்கும்... குழந்தைப் பேறுக்காக சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது, யாருக்கு முதல…
-
- 31 replies
- 8.1k views
-
-
மாதுளம் பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இருப்பு சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது. வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும், உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு. மாதுளம் பழத்தின் பூ, பழம், அதன் பட்டை என அனைத்திலுமே மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இது உடல் கடுப்பு மற்றும் சூட்டை தணிக்கும். மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம். இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிட…
-
- 3 replies
- 1.1k views
-
-
புனித் ராஜ்குமார் மரணமும் உடற்பயிற்சி சர்ச்சையும்: உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா? மருத்துவர் விளக்கம் எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்பத்து ஆறே வயதான, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யக் கூடியவரான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது. உடற்பயிற்சிக் கூடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டவர்கள், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே மரணமடைந்தவர்கள் என பல்வேறு நிகழ்வுகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். புனித் ராஜ்குமாரின…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
குறுந்தொடர்- 1: புரதச் சுரங்கம் நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள். குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி). அதேபோலத் …
-
- 7 replies
- 8k views
-
-
புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது. புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது. இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து எ…
-
- 10 replies
- 3k views
-
-
[size=4]பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கும் ஆண்களை கணிசமாக பாதிக்கும் புராஸ்டேட் புற்றுநோயின் தீவிரத்தன்மையை கண்டுபிடிக்கும் ரத்தபரிசோதனை முறை ஒன்றை லண்டனில் இருக்கும் புற்றுநோய் ஆய்வு மையம் ஒன்று வடிவமைத்துள்ளது.[/size] [size=4]ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் இருக்கும் புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் புற்றுநோயில் வெவ்வேறு வகைகள் இருக்கின்றன. இவற்றை தீவிரத்தன்மை கொண்டவை என்றும் தீவிரத்தன்மையற்றவை என்றும் இரண்டு பொதுவகைகளாக மருத்துவர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.[/size] [size=4]இதில் தீவிரத்தன்மையற்ற புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் உரிய சிகிச்சை மூலம் பல ஆண்டுகள் வாழமுடியும். அதேசமயம், தீவிரத்தன்மையற்ற புராஸ்டேட் புற்றுநோய் தாக்கியவர்கள் …
-
- 0 replies
- 534 views
-
-
புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினைக்கு தீர்வு.! வயதானவர்கள் சந்திக்கும் சிக்கலான சிறுநீரக பிரச்சனை புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினை. இதன்போது வயதான ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பது தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். பலரும் இந்த நோயை அலட்சியம் செய்துவிடுகிறார்கள். இந்த நோய்க்கும் சிறுநீரகத்தில் ஏற்படும் புற்றுநோய்க்கும் ஒரேவிதமான அறிகுறிகள்தான். வயதான ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்நோயை 80 சதவீதம் சாதாரண மருந்துகளால் குணப்படுத்திவிடலாம். சிறுநீர் கழிக்கவே முடியவில்லை என்ற நிலை தோன்றினால் மட்டும் எண்டாஸ்கோப்பி சிகிச்சையை மேற்கொள்ளலாம். சில ஆண்களுக்கு விதைப்பையில் வீக்கம் தோன்றலாம். …
-
- 0 replies
- 413 views
-
-
சாப்பிட்டு கொண்டிருக்கும்போது புரையேறினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள் என வேடிக்கையாக சொல்லி கொள்வோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் குறித்து தற்போது பார்ப்போம். பொதுவான கருத்து: சாப்பிட்டு கொண்டிருக்கும் போதோ, மடக்கு மடக்கென்று வேகமாக தண்ணீர் குடிக்கும் போதோ திடீரென்று புரை ஏறி அவஸ்தைபடுவோம். அவசரகதியில் சாப்பிட்டால் இப்படித்தான் நேரும் என பொதுவாக தெரியுமே தவிர்த்து, புரை ஏறுவதற்கு உரிய காரணம் குறித்து நிறைய பேருக்கு தெரியாது. அருகருகே இருக்கும் குழாய்கள்: மனிதனின் உடல் அமைப்பு மற்றும் உள்ளுக்குள் இருக்கும் உறுப்புகளின் அமைப்புகள் வியக்கத்தக்க அதிசயங்களாக உள்ளன. அந்த வகையில் நாம் சாப்பிடும் அனைத்தையும் உள்வாங்கி அனுப்பு…
-
- 0 replies
- 455 views
-
-
நமது செரிமானக் குழாயின் தொடக்கம், தொண்டை. தொண்டையில் உணவுப் பாதை, காற்றுப் பாதை என்று இரண்டு பாதைகள் உள்ளன. மூக்கு வழியாக வருகிறது காற்றுப் பாதை. வாய் வழியாக வருகிறது உணவுப் பாதை. தொண்டையின் மையப் பகுதியில் இந்த இரண்டு பாதைகளும் சேரும் இடத்தில் குரல்வளை (Larynx) உள்ளது. இது மூச்சுக் குழாயின் தொடக்கம். மூச்சுக் குழாய்க்குப் பின்புறம் உணவுக் குழாய் உள்ளது. குரல்வளையின் மேல் துவாரத்துக்கு ‘கிளாட்டிஸ்’ (Glottis) என்று பெயர். அதை மூடியிருக்கும் தசை ‘எபிகிளாட்டிஸ்’ (Epiglottis). நாம் உணவை விழுங்கும்போது, எபிகிளாட்டிஸ் என்ற மூடி கிளாட்டிஸை மூடிக்கொள்ள, மூச்சுக் குழாயும் மூடிக்கொள்கிறது. இதனால் உணவுக் கவளம் உணவுக் குழாய்க்குள் போகிறது. சுவாசிக்கும்போது எபிகிளாட்டிஸ்…
-
- 0 replies
- 514 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,கிளாடியா ஹம்மண்ட் பதவி,பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்களில் இன்று பல்வேறு வித பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட புரோட்டீன் பவுடர்கள் (Protein Powder) விற்பனைக்கு வந்துவிட்டதை நம்மால் காண முடிகிறது.. உடற்பயிற்சி கூடங்களுக்கு (Gym) வருவோர் இதன் விலை குறித்தும், இதனை எப்படி பருகுவது என்பது பற்றியும் தங்களுக்குள் சிலாகித்து பேசிக் கொள்வதையும் கேட்க முடிகிறது. சிலர் தங்களின் உணவு நேரத்துக்கு இடையே புரோட்டீன் பவுடர் கலந்த பாலை நொறுக்குத் தீனிக்கு பதிலாக பருகுகின்றனர். உணவு உட்கொள்ள நேரம் இல்லா…
-
- 0 replies
- 290 views
- 1 follower
-
-
புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை! எட்டு ஆண்களில் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மொத்தம் 58,218 ஆண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டகாக கண்டறியப்பட்டனர். இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த நோய் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் ஒரு நாளுக்குள் நோயறிதலை மேற்கொள்ள இங்கிலாந்தில் புதிய சோதனை முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, MRI ஸ்கேன்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சில நிமிடங்களில் உடலில் இருக்கும் …
-
- 1 reply
- 183 views
-
-
தாய்ப்பாலின் மகத்துவம் நாம் அறியாததில்லை. தாய்ப்பாலில் இருக்கும் குறிப்பிட்ட தாதுக்கள் புற்றுநோய் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை உடையவை என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் சத்துமிக்க ஆகாரம் என்பதோடு நோய் எதிர்ப்புத் தன்மை உடையது என்பதும் நாம் அறிந்ததே. தாய்ப்பாலில் இருக்கும் ஆல்பா லாக்டால்புமின் என்ற தாதுப்பொருள் புற்றுக்கட்டி களையும், புற்று செல்களையும் அழிக்கும் தன்மை கொண்டது. இதற்கு காம்லெட் என்று பெயரிட்டுள்ளனர். `ஹியூமன் ஆல்பாலேக்டால்புமின் மேடு லெத்தல் டூ டியூமர்’ என்பதன் சுருக்கம்தான் `காம்லெட்’. ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதன்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். தாய்ப்பாலில் உள்ள தாதுப்பொருளை புற்று நோயாளிகளுக்கு கொ…
-
- 0 replies
- 594 views
-
-
புற்று நோயாளியான 92 வயது மூதாட்டி மாரத்தான் ஓட்டத்தில் சாதனை June 1, 2015 செய்திகள்0 35 அமெரிக்காவின், சான் டீகோவில் 92 வயது மூதாட்டியும், புற்று நோயிலிருந்து மீண்டவருமான ஹாரியட் தாம்சன் என்ற 92 வயது மூதாட்டி அதிக வயதில் மாரத்தான் ஓடிய பெண்மணி என்ற வகையில் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக 2010 ஹோனாலூலு மாரத்தானில் கிளேடிஸ் புரில் என்ற மூதாட்டி தனது 92 வயது 19 நாட்களில் சாதனை நிகழ்த்தினார். ஆனால் தற்போது ஹாரியட் தாம்சன் 92 வயது 65 நாட்களில் மாரத்தான் ஓடி சாதனை புரிந்துள்ளார். இது இவரது 16-வது ராக் அன் ரோல் மாரத்தான் ஓட்டமாகும். ஆனால் இது “கடினமானது” என்கிறார் ஹாரியட் தாம்சன். “இந்த ஆண்டு எனக்கு கடினமாக அமைந்தது. கடந்த ஜனவரியில் கணவர் இறந்து போனார்.…
-
- 0 replies
- 457 views
-
-
புற்று நோயைக் குணப்படுத்த புதுவகை வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது புற்றுநோய் பரவுவதைத் தடுக்கிறது அதேவேளை அதை பூரணமாக குணப்படுத்தும் வீரியமும் கொண்டுள்ள புதிய வைரஸ்.. மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக இருப்பது புற்றுநோய் என்ற கருத்து இன்றுவரை உலக வெளியில் மறையவில்லை. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்றுவரை போதிய வெற்றியைத் தரவும் இல்லை. இந்த நிலையில் புதுவகை வைரஸ் ஒன்று புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதென்று விஞ்ஞானிகள் டென்மார்க் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். வி.எஸ்.வி என்ற குறியீட்டு பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வைரசிற்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வி.எஸ்.வி வைரசிற்கு இர…
-
- 0 replies
- 515 views
-
-
ரொம்ப நாளா அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குஸ்தான் (தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது. மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வல…
-
- 0 replies
- 437 views
-
-
புற்று நோய் பற்றி யாவரும் அறிந்திருப்பினும் அது தொடர்பில் பயம் எல்லோர் மனதிலும் காணப்படுகிறத. இதனால் புற்று நோய் தொற்று நோயாக இருக்குமோ என்று எண்ணுபவர்களும் உள்ளனர். இதனால் தமக்கும் வந்துவிடுமோ என்று எச்சரிக்கை உணர்வால் உந்தப்படுபவர்களும் உள்ளனர். புற்றுநோய் பற்றி எச்சரிக்கையுடன் காணப்படும் மக்கள் புற்றுநோயி;ன் அறிகுறி பற்றியே அதிகம் அறிய முற்படுகின்றனர். அத்துடன் புற்று நோய் பற்றிய மன உலைச்சலாலும் நோயில்லாமலே மருத்துவரை நாடும் மக்கள் கூட்டம் என்று ஒரு வகையினரும் உருவாகியுள்ளனர். இவர்கள் பொதுவாக நோயின் அறிகுறி பற்றியே அறிய முற்படுகின்றனரே தவிர நோயின் தோற்றுவாய் பற்றி அறிவதற்க்கு நோய் உருவாகும் விதம் பற்றி அறிவதற்கு ஏற்றவகையில் கருத்துக்களை அறிய முடியாதபடி…
-
- 0 replies
- 540 views
-
-
உலகில் மிக கொடிய நோயான புற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் சிறந்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் வரையறுக்கப்பட்ட நடத்தைகள் மூலமும், இயற்கை மூலிகைகளின் உதவியுடனும் இந்நோயை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது சோயா பீன்ஸில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை மருந்தானது பொதுவான புற்று நோய்களுக்கு(மார்புப் புற்றுநோய், குடல், சிறுநீர்ப்பை, ஈரல், நுரையீரல், லிம்போமா மற்றும் வாய் புற்றுநோய் போன்றனவற்றிற்கு) நிவாரணமளிக்கவல்லது என மிசூரி பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 754 views
-
-
புற்று நோய்கள் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியவைதான் கறும வியாதியல்ல தடுக்கக் கூடியதுதான் புற்று நோய்கள். வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? எந்ந நோய்க்குப் பயப்படாதவனும் புற்று நோயென்றால் கதிகலங்கவே செய்வான். அந்நோயால் பாதிக்கட்டவர்கள் படும் அவஸ்தையைக் கண்டும் கேட்டும் ஏற்படும் பயம் அவ்வளவு வலுவானது. புற்றுநோய் என ஒருமையில் சொன்னாலும் அது பல்வேறு வகைப்பட்டது. தோன்றக் கூடிய ஒவ்வொரு உறுப்பு மற்றும் திசுக்களுக்கு ஏற்ப அது பலநூறு வகைப்படும். ஆனால் இப்பொழுது புற்றுநோய்களுக்கு நல்ல சிகிச்சை வந்துள்ளன. ஓரளவு ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் பூரணமாகக் குணமாக்க முடியும். நோய் முற்றியவர்களும் வலி வேதனையின்றி வாழக் கூடியவகையில் சிகிச்சைகள் நல்ல முறையில் வழங்…
-
- 0 replies
- 903 views
-
-
இன்றைய வாழ்க்கை முறை மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை மாறி புதுமை அந்த இடத்தை பிடித்துவிட்டது கூடவே நோயும். பழமை நமது உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல் நோக்கில் இருந்தன அதை நாம் மறந்து விட்டோம் அதனால் நோய்கள் நம்மை பின்தொடர விட்டுவிட்டோம் . முன்பு குளிக்கும் முறைகூட அறிவியல் அடிப்படையில் இருந்து நோயில் இருந்து காத்தத்து இன்று குளியலே நோயை உண்டாக்குவதாக இருக்கிறது . இன்றைய வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா போட்டு குளிப்பதால் உடலில் இருந்து இயற்கையாக சுரக்கும் எண்ணத் தன்மை முழுவதும் நீங்கி எலும்புகள் கலகலத்து போய் நோயில் மரித்து போகிறனர் . இந்நிலை கூடாதென என எண்ணிய நமது பழம் பெரும் சித்த மருத்துவ அறிவர்…
-
- 1 reply
- 12.3k views
-
-
தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது. கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப் புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இரப்பை புற்று நோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது. இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அதாவது, மெதுவாக ஓடுதல், நீச்சல் பயிற்சி, படகு ஓட்டுதல் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் உடற்பயிற்சி அமைய வேண்டும். விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் அரை மணி நேரம் ஈடுபடலாம். எதுவாக இருந்தாலும் ஓரிரு நாட்கள் செய்துவிட்டு பின்னர் விட்டுவிடுவதில் பயனில்லை. தொடர…
-
- 0 replies
- 995 views
-
-
காபி ஒரு கோப்பை, புற்று நோய்க்கு குட்பை! மார்ச் 05, 2007 சென்னை: தினசரி காஃபி அருந்துவோருக்கு புற்று நோய், சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு காலத்தில் காபி குடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று கருதப்பட்டது. காபி அருந்தினால் புத்துணர்ச்சி ஏற்பட்டாலும் அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு புதிய ஆய்வின்படி காஃபி சாப்பிட்டால் பல்வேறு வகையான புற்று நோய், சர்க்கரை வியாதி ஆகியவை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. புற்று நோய்க் கட்டிகள், வயிற்று புற்றுநோய், ஈரல் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுவது குறையுமாம். மும்பை, பாபா அண…
-
- 10 replies
- 6.6k views
-
-
புற்றுநோயின் பத்து பகைவர்கள் புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இந்தக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ellagic acid மற்றும் polyphenol antioxidants ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்ப…
-
- 1 reply
- 720 views
-
-
புற்றுநோயிலிருந்து சிகிச்சை பெற்று தேறுவோரை அதிகம் பாதிக்கும் இதய நோய்! புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 10 சதவீதத்தினர் உயிரிழப்பதற்கு இதயம், இரத்தக் குழாய் தொடர்பான சிக்கல்களே காரணம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக 28 சதவீதமான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 30 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட குறித்த ஆய்வைப் பற்றி BBC உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 3 லட்சத்து 23 ஆயிரம் புற்றுநோயாளிகளில் 38 சதவீதமானவர்கள் நோய்த் தாக்கம் காரணமாகவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 சதவீதமானவர்கள் இதயம், இரத்தக் குழாய் தொடர்பான பாதிப்புகளால் உயிரிழந்தனர். சிறுநீரகம், குரல்வளை, …
-
- 0 replies
- 398 views
-