வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
http://www.kuriyeedu.com/?p=58492
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநாவிலும் .ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலிலும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்...! 30.09.2013 திங்கள், 14:00- 16:00 மணி EU- Brussels, Rue de la Loi 175, 1048 Brussels, Belgium எமது அன்புக்குரிய மக்களே...! "போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எமது இலட்சியம் மாறாது.."- என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க அனைத்துலக வாழ் தமிழ் மக்களை இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். ஏனைய ஐரோப்பிய நாட்டு மக்கள் உங்கள் பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்...!
-
- 0 replies
- 466 views
-
-
யார் இவர்கள் ? வெளிநாட்டவரை கவனிக்க வைத்த நீதிக்கான ஒன்றுகூடல் வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்கு நீதிவேண்டி ஐ.நா மனித உரிமைச்சாசன முன்வரைவு எழுதப்பட்ட பரிஸ்-மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்றகவனயீர்ப்பு நிகழ்வு வெளிநாட்டவர்களது கவனத்தை பெற்றதாக அமைந்திருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வானது, ஓகஸ்ற்-30 வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் இடம்பெற்றிருந்தது. ‘தேசத்தின் வீரர்கள், தேசத்துக்காக மடிந்தவர்கள்’ என்ற வாசகம் பொதிக்கபட்ட பிரென்சு தேச விடுதலையினை மையப்படுத்தியிருந்த திடலில் முன்னே, காணமலாக்கப்பட்டவர்களின் ஒளிபடங்கள் தாங்கிய இருக்கைகள் இடப்பட்டிருந்தன. …
-
- 0 replies
- 688 views
-
-
பெண்கள் சந்திப்பு மீண்டும் லண்டனில் நடைபெற்றுள்ளது. 24வது புகலிடப் பெண்கள் சந்திப்பிலும் வழமை போலவே என்னால் கலந்து கொள்ள முடியாமற் போய் விட்டது. ஆனாலும் சந்திப்பில் என்ன கலந்துரையாடப் பட்டிருக்கும்... என்ன ஆக்க பூர்வமான கருத்துக்கள் முன் வைக்கப் பட்டிருக்கும்... என்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் இணையத்தில் தேடியபோது றஞ்சியின் விரிவான பார்வையொன்று கிடைத்தது. 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15இ16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கைஇ இந்தியாஇ கனடாஇ சுவிஸ்இ ஜேர்மன்இ பிரான்ஸஇ லண்டன்இ கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்…
-
- 36 replies
- 7.1k views
-
-
புலத்தின் தமிழர்கள் அனைவரும் இந்த வாரம் முழுவதும் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் கறுப்புப்பட்டி அணிய வேண்டும் அதன் மூலம் தாயகத்தில் நிகழும் கொடுமைகளை வெளி உலகுக்கு உணர்த்துவதோடு தமிழர்களின் ஒற்றுமையையும் பறைசாற்ற வேண்டும் என்று பலத்த பிரச்சாரங்களை சர்வதேச நாடுகள் சிலவற்றின் சில மாநகரங்களில் செவிமடுக்கக் கூடியதாக மட்டும் இருக்கிறது. ஆனால் தமிழர்களில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை..! தமிழர்கள் நிறைந்த பகுதிகளில் கூட, வெகு சிலரே ஒரு ஸ்ரிக்கரை ஒட்டித் திரியினம்...! இதன் மூலம்... சொல்லப்படுவது அல்லது காட்டப்படுவது என்ன..???????????????! :roll: :roll: :roll:
-
- 5 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானியா எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புை அமைப்பை வடிவமைத்திருந்தார். அதன…
-
- 25 replies
- 2.2k views
-
-
ஒக்ஸ்பேர்ட் நகரத்தில் மஹிந்தராஜபக்சவின் வருகையை எதிர்த்து டிசம்பர் 2ம் திகதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்: பிரான்ஸ்வாழ் தமிழர்களுக்கு அழைப்பு. [Tuesday, 2010-11-30 16:27:26] முள்ளிவாய்காலில். தமிழ் மக்களை பாதுகாக்க போர் தொடர்ந்து உள்ளேன் என்று உலகிற்கு சொல்லிக்கொண்டு இந்த நூற்றாண்டின் மனித நேயத்தையே குருடாக்கி 40 000 இற்;கு மேற்பட்ட குழந்தைகள் சிறார்கள் வயது மூத்தோர் ஆண் பெண் என்று பாராமல் கொன்று குவித்த ஒரு அரசின் ஜனாதிபதி அந்த ஜனாதிபதி என்ற அந்தஸ்தை வைத்துக்கொண்டு இந்த உலக அரசியல் தலைவர்கள் மனிதாபிமான அமைப்புகளுக்குச் சவால் விடுவதை போல் போர்க் குற்றங்களை இழைத்த ராணுவ அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு தேடும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையில் தூதுகரங்களில் அரசியல் பாதுகாப்பு கி…
-
- 1 reply
- 1.1k views
-
-
கவனயீர்ப்பு போராட்டம் கல்கெரி நகர மண்டப முன்றலில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக முஸ்லிம்களின் பொருளாதாரம், வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு இனவாதத்தாக்குதல்களைக் கண்டித்தும் அந்நடவடிக்கைகளுக்கெதிராக இலங்கை அரசும் கனேடிய அரசும் சர்வதேசமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கல்கரி டவுன்டவுனில் நேற்று ( 10 ) நண்பகல் நடைப்பெற்றது கல்கெரி சிறி லங்கன் முஸ்லிம் அசோசியேஷன் (Sri Lankan Muslim Association of Calgary) ஏற்பாட்டில் கல்கெரி நகர மண்டப முன்றலில் (City Hall) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 584 views
-
-
சிட்னியில் உள்ள ஈழதமிழர்களின் தமிழ் பாடசாலை மற்றும் கலை நிகழ்ச்சியில் சிறுவர்கள் மேடையில் பேசுவார்கள் அவர்களின் கரு பொருள் மாகாத்மா காந்தி பாரதியார் போன்றவர்கள் பற்றி யிருக்கும் அவர்கள் இந்திய சுகந்திரத்திற்கு காட்டிய பங்களிப்பு பற்றீய்தாகவும் இருக்கும் காந்தியை பற்றி கூறும் போது அவர் இங்கிலாந்து சென்று ஆங்கிலேயரோடு போரிட்டு (வாதிட்டு) இந்தியாவிற்கு சுகந்திரம் வாங்கி கொடுத்தார் என்று முழங்குவார்கள் இந்திய புல பெயர் சிறுவன் கூறியிருந்தால் அதை சரி என்று எடுக்கலாம். ஈழத்து புலம்பெயர் சிறுவனுக்கு இதனால் என்ன நன்மை கிடைக்க போகுது?இங்கு (ஆங்கில பிள்ளைகள்) வாழும் ஒருவர் அவனுடைய நிறத்தை தவிர மற்ற எல்லாம் ஆங்கில் வாழ்க்கை முறையை தான் பின்பற்றுகிறான்.பெரிசுகள் நாங்கள் அச…
-
- 3 replies
- 1.7k views
-
-
கனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்! கனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன? அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது? இலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வை…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புலம்பெயர் தமிழர்கள் வாய்ப்புக் கோரவில்லை. மாறாக தமிழீழ மக்கள் தங்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவதற்கான பொதுசன வாக்கெடுப்பினையே அனைத்துலகத்திடம் கோருகின்றனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியதாகவும் அதனை தாங்கள் முற்றாக நிராகரித்துள்ளதாகவும் சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் பொழுதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ் மேற்படி கூற்றினைத் தெரிவித்துள்ளார். தமிழீழத் தாயக மக்கள் மற்றும் தமிழீழத்தினை பூர்வீகமாக கொண்ட…
-
- 0 replies
- 347 views
-
-
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி, தென், தென்மேற்கு மாநிலங்கள்- கெம்பூர்க், யேர்மனி- 08.07.2023. Posted on July 11, 2023 by சமர்வீரன் 433 0 விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும்போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் தென்,தென்மேற்கு மாநிலங்களுக்கான மாவ…
-
- 0 replies
- 429 views
-
-
கலைத்தமிழோடு களமாடும் வளரிளம் கலைஞர்களின் கலைத்திறனாற்றுகை – கற்றிங்கன். Posted on February 5, 2025 by சமர்வீரன் 361 0 தமிழரது கலை வடிவங்களைத் தமிழினத்தின் இளைய தலைமுறை கற்றும் கண்டும் உணரவும், அதனுடாகப் படைப்பாக்கத் திறனைப் பெறவும், தமிழர் கலைகள் அழிந்துவிடாது காக்கவும் கலை அரங்காற்றுகை, செயலாக்கம் பெறுதல் வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மூன்றாந் தலைமுறைத் தமிழர்களும் தமிழர் கலைகளை அறிந்துகொள்ளவும், பயிலவும் களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவு கலைத்திறன் போட்டியை நடாத்தி வருகிறது. இக்கலைத்திறன் போட்டியில் மயிலாட்டம், புலியாட்டம், காவடியாட்டம், காவடி, கரகம், பொய்க்காற்குதிரை, வில்லுப்பாட்டு போன்ற கிராம…
-
- 0 replies
- 318 views
-
-
சொத்துப் பிரிக்கும் போது குடும்பங்களுக்குள் அடிதடி, வெட்டுக்குத்து என்று சண்டைகள் நடப்பதுண்டு. அதற்காக நீதிமன்றம் போய் அங்கே ஒரு தீர்ப்புக் கிடைத்தாலும் அதன் பிறகும் அவர்களது சண்டைகள் சில இடங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். வாதியும் பிரதிவாதியும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தால் கூட அது நீதிமன்ற வளாகமானாலும் வாய்த் தர்க்கமோ அல்லது கைகலப்போ அல்லது ஒருவருக்கு ஒருவர் முறைத்துக் கொள்ளும் நிலையோ கண்டிப்பாக இருக்கும். இதையெல்லாம் தமிழக சினிமாக்களில் காட்சிகளாகவும் அடிக்கடி நாங்கள் பார்ப்பதால் எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் பார்க்கும் யேர்மனியருக்கு இது புதிதாக இருக்கும். பொதுவாக அவர்கள் வெளிப்படையாக சட்டத்தை மதிப்பவர்கள் மட்டுமல்ல சட்டத்துக்க…
-
- 13 replies
- 2.2k views
-
-
65 இலங்கைத் தமிழர்களை நாளைய தினம் நாடு கடத்தவுள்ளது பிரித்தானியா! [Wednesday, 2013-02-27 18:26:21] பிரித்தானியாவிலிருந்து 65 இலங்கைத் தமிழர்கள் நாளை வியாழக்கிழமை நாடு கடத்தப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=76958&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 580 views
-
-
உடனடியாக ஹிலாரி கிளிங்டன் அம்மையாரை அழைத்து முறையிடுங்கள் இன்று நடந்தது Sri Lanka Air Force (SLAF) bombardment and Sri Lanka Army shelling that targeted Pachchaippulmoaddai, Valaignardam areas within the so-called safety zone announced by the Sri Lankan government on Tuesday killed 52, causing injuries to 182, according to initial reports by the Voice of Tigers (VoT) evening broadcast. Earlier, in the morning, 32 civilians were killed in the shelling in other areas of the 'safe zone', according to independent sources. Bombs were dropped more than 12 times by the SLAF. Heavy bombs, each with the weight of 1,000 kg was dropped in the areas under 'safe zone' and in…
-
- 2 replies
- 2.3k views
-
-
எனக்குக் கன நாளா மண் சட்டியில் கறி சமைக்க வேணும் எண்டு ஆசை. இந்தியா இலங்கை என்று போன நாட்களில வாங்கிக் கொண்டு வருவமெண்டு நினைச்சாலும், சட்டி வாங்கும் பலன் இருக்கேல்ல. உந்த யாழில மைதிரேயியின் சமையல் குறிப்பைப் பாத்திட்டு, கன நாளா அடங்கியிருந்த ஆசை திரும்பவும் மனதை நிரப்ப, போகும் கடைகளில எல்லாம் சட்டி இருக்கோ என்று கேட்டு சலிப்படைஞ்சு, சரி எனக்கு இன்னும் சட்டி யோகம் வரவில்லையாக்கும் என்று மனதைத் தேற்றியும் விட்டன். ஒரு கிழமைக்கு முதல் எனது அரையல் இயந்திரம் பழுதாப் போனதால், மீண்டும் அதைத் தேடி கடை கடையாய் ஏறி இறங்கினன். ஒரு கடையில பாத்தால் ஒரு தட்டு முழுக்க சட்டியள் அடுக்கி வச்சிருக்கு. எனக்கு முகமெல்லாம் சந்தோசத்தில பூரிச்சுப் போச்சு. ஒரு சட்டி £5.99. எனக்கு எப்பவு…
-
- 31 replies
- 6.3k views
-
-
பிரான்சில் தமிழ் ஒட்டுக் குழு காடையர்கள் அட்டகாசம் - வர்த்தகரிடம் பணம் பறிப்பு திகதி: 19.07.2009 // தமிழீழம் பிரான்ஸ் தலைநகர் பரிசின் லாச்சப்பல் பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை சிறீலங்கா துணை இராணுவக் குழுக்களைச் சேர்ந்த ஈ.பி.டி.பி, மற்றும் புளொட் மற்றும் சிங்கள இளைஞர்களையும் உள்ளடக்கிய காடையர்கள் குழுவொன்று தமிழ் வர்த்தகரை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது. சம்பவத்திற்கு முதல்நாள் லாச்சப்பல் பகுதியில் வழமைக்கு மாறாக புளொட் குழுவினரால் கொல்லப்பட்ட அக்குழுவின் தலைவர் நினைவாக இரவோடு இரவாக இரகசியமாக வந்து வர்த்தக நிலையங்களின் கதவுகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ன. இதனை மறுநாள் காலை அங்கு வந்த வர்த்தகர்கள் கிழித்தெறிந்திருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த குற…
-
- 5 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையர் வழக்கில் வெற்றி அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இலங்கையருக்கு சாதகமாக நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கும் பணியில் ஈடுபடுவதற்கும் அனுமதிக்குமாறு கோரி போராடி வந்த 60 வயதான எட்வின் அஸாரியாஸ் (Edwin Asariyas ) க்கு சாதகமாக நிலை உருவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வதிவதற்கு அனுமதிக்காக செய்திருந்த விண்ணப்பம் கடந்த மாதம் அந்நாட்டு அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவினால் கடந்த மே மாதம் 14ம் திகதி முதல் எட்வின்னினால் பணிகளில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. நிரந்தர வதிவிட அனுமத…
-
- 0 replies
- 606 views
-
-
இன்று அதிகாலை இலங்கையர் படுகொலை; சைபிரஸில் நடந்த கொடூரம்! 0:53volume_dow சைபிரஸ் நாட்டின் லிமாசோலில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவரைக் கொடூரமாக கொலை செய்த சந்தேக நபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். கொல்லப்பட்டவரது சடலம் மிக்கோரிஸ் அவெனியூவின் மைக்கல் மைக்கலிட்ஸ் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது ம…
-
- 0 replies
- 801 views
-
-
அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி மிகவும் சிறப்பாக 30/11/2013 இல் Rykkinnhall, Lerdueveien 73, 1349 Rykkinn மண்டபத்தில் நடைபெற்றது. மேலதிக புகைப்படங்கள்.. http://tamilnorsk.com/index.php/welcome/item/337-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%…
-
- 0 replies
- 594 views
-
-
இந்த தகவலை நண்பர் ஒருவரின் மின்னஞ்சல்ஐடிக்கு யெர்மனீயில் தேர்தலில் நின்ற பூபதிபாலடிவேற்கரன் அனுப்பியுள்ளார். அதனை இங்கு இணைக்கிறேன். ஏன் இந்த பொறாமை நாடுகடந்த அரசு தேர்தல் குழுமீது இந்த ஆளுக்கு ? இதை நீங்களும் பாருங்கொ.
-
- 1 reply
- 863 views
-
-
Published on September 7, 2014-10:47 am · No Comments ஐ. நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம், இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில், இலங்கைதீவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, விசேடமாக, ஐ.நா. விசாரணையை முன்னெடுப்பதற்காக, ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவந்த பிரேரணை எதிர்த்து மிகவும் மோசமாக வேலை செய்த கட்சி, தற்பொழுது ஓர் மாதிரி படிவத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது, மிக விசித்திரமானது. உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுது, உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும், சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றா…
-
- 0 replies
- 454 views
-
-
வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! வடக்கு உற்பத்திகளுக்கு கனடாவில் கிடைத்த மவுசு!! வடக்கு மாகாணத்தில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று திறனாளிகளால் சிரட்டை , ஐஸ் கிரீம் குச்சிகள் , கழிவுப் பலகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணி பொருட்களுக்கு கனடாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறித்த பொருள்களை கனடாவில் சந்தைபடுத்தி அவர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பை வழங்கும் முகமாக ஈழம் பரிசுகள் நிறுவனம்(EELAM GI…
-
- 7 replies
- 2k views
-
-
நேர்வே இன்று எமது போராட்டத்திற்கு பாதிப்பை தரக்கூடிய ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த முக்கிய பங்கானது எமக்கான இறுதித்தீவு கிடைக்கும் வரை ஏதோ ஒரு வழியில் தொடரப் போகிறது. நோர்வியின் நடத்தைகளை பற்றி விமர்சிக்க கேள்விகள் கேக்க நியாப்படுத்துமாறு நிர்ப்பந்திக்க கூடிய வழிகள் எதையும் நாம் கைய்யாழுவதாக தெரியவில்லை. நோர்வேயின் தற்போதைய பங்குபற்றல் நடத்தை என்பன எந்தவிதத்திலும் அவர்களுடைய உள்ளூர் அரசியல் மற்றும் குடிமக்கள்-வாக்காளர்கள், கல்விமான்கள் அவதானிகள், மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களிற்கும் அழுத்தங்களிற்கும் அப்பாற்பட்டதாக அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களிற்க்கு கைகட்டி சேவை செய்கிறது. நேர்வியின் பக்கச்சார்பான நடத்தையால் வழங்கப்படும் நிதியுதவிகளால் கொல்லப்பட்டுக் கொண…
-
- 0 replies
- 811 views
-